Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கூட்டமைப்பின் எட்டு வேண்டுதல்களையும் சரத் ஏற்றுக்கொண்டுள்ளாராம்!

Featured Replies

சென்ற திங்களன்று சரத்பொன்சேகா மற்றும் ரணில் உடனான கலந்துரையாடலில்கூட்டமைப்பினர் எட்டு முக்கிய விடயங்களை முன்வைத்ததாகவும் அவற்றை சரத்பொன்சேகா ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் கொழும்பு இணையதளம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த எட்டு விடயங்களாவன:

1 12,000 புலி உறுப்பினர்களையும் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கவேண்டும்

2 உயர் பாதுகாப்பு வலையங்களை நீக்குதல்

3 வடக்கு கிழக்கில் இராணுவத்தினரின் பிரசன்னத்தை குறைத்தல்

4 இடம்பெயர்ந்த மக்களை முழுமையாக விடுவித்து துரித மீழ் குடியமர்வினை செய்தல்

5 மீழ் குடியமர்ந்த மக்களுக்கு நிரந்தர வீடமைப்பு

6 வடக்கு கிழக்கு மீழ் கட்டுமான பணிகளை விரைவாக ஆரம்பித்தல்

7 கிழக்கில் புதிய குடியேற்றங்களை நிறுத்துதல்

8 அரசியல் தீர்வு நோக்கிய பேச்சுவார்த்தை

இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு எழுத்து மூலமாக உறுதிப்பாடு தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் செய்திகள் கூறுகின்றன. எழுத்து மூலமாக தந்தால் அதனை பைரங்கபடுத்தினால் சிங்கள மக்களின் வாக்குகளில் சரிவு ஏற்படும் என பொன்சேகா தரப்பு கூறியுள்ளது. ஆனால் சம்பந்தன் தரப்பு தாம் இந்த எழுத்துமூலமான பத்திரத்தினை வெளியிட மாட்டோம் என்றும் ஆனால் சரத்பொன்சேகா வெற்றிபெற்று வாகுறுதி நிறைவேற்றாப்படாவிட்டால் தாம் சர்வதேசத்திற்கும் மக்களிற்கும் தெரியப்படுத்துவோம் என கூறியுள்ளார். ஆனால் அதுபற்றி தாம் விரைவில் யோசிப்பதாக கூறியுள்ளனர்.

ஜனவர் 4ம் திகதிக்கு முன்பாக அந்த எழுத்துமூலமான பத்திரம் தரப்படவேண்டும் என சம்பந்தன் தரப்பு கேட்டுள்ளது.

இதே போன்றுதான் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்காவிடம் விடுதலைப்புலிகளின் அரசியல்து|றைப்பொறுப்பாளர் ரணில் விக்கிரமசிங்காவிடம் எழுத்து மூலமான உறுதிப்பாட்ட்டினை கேட்டார். அதாவது ஜனாதிபதியாக வந்ததும் இடைக்கால அரசினை மையமாக வைத்து உடன் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவேண்டும் எனகேட்டார். ஆனால் ஆம் என கூறிய ரணில் இறுதிவரை அதனை வழங்கவில்லை இதனாலேயே ரணில் தோற்றார் என்பது வரலாறு.

இப்போதும் அதே போன்ற நிலைப்பாடு வந்துள்ளது ஜனவரி 4 வரை பொறுத்திருந்து பார்க்கவேண்டும். இதே வேளை புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து சில முக்கியஸ்தர்கள் (உலக தமிழர் பேரவை) தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வை தெளிவாக சொல்பவர்களிற்கே ஆதரவு வழங்கவேண்டுமென கூட்டமைப்பினருக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகின்றது. அதாவது வடக்கு கிழக்கு இணைப்பு , வட்டுகோட்டை தீர்மானம் என்பன இதனுள் அடங்கும்.

ஆனால் சம்பந்தன் அவர்கள் இதனை ஏற்கவில்லை எனவும் முதலில் நடைமுறை பிரச்சினைகளை தீர்த்து மக்களை சோர்வில் இருந்து பிழைக்க வைக்கவேண்டும் அதன் பின்னர் பாராளுமன்ற தேர்தலில் உலகதமிழர் பேரவை சொல்வதனை முன்வைக்கலாம் எனவும்பதிலளித்துள்ளார். சம்பந்தனின் இந்த கருத்திற்கு உலக தமிழர் பேரவையின் சில முக்கிய உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால் பேரவைக்குள் சில கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன என தகவல்கள் கூறுகின்றன.

இதே வேளை உலகத்தமிழர் பேரவையின் அடுத்த கூட்டம் பிரித்தானியாவில் பாராளுமன்றத்தில் 12, 13 ம் திகதிகளில் நடைபெறவுள்ளது என தெரிய வருகின்றது. அந்த கூட்டத்தில் உலக தமிழர் பேரவையினால் ஊடக அறிக்கை விடப்படலாம் என தெரிய வருகின்றது. கடந்த 05 மாதத்திற்கு முன் பிரான்சில் கூடிய உலகதமிழர் பேரவை 05 இற்கு மேற்பட்ட தீர்மானங்களை எடுத்தது என்றும் ஆனால் அவற்றில் எதனையும் நிறைவேற்றாமல் அடுத்த கூட்டம் பிரித்தானியாவில் கூட்டப்படுகின்றது. அவர்களால் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் விடுதலைப்புலிகளின் தடையினை நீக்குவது என்ற தீர்மானமும் முக்கியமானது.

http://www.eelanatham.net/news/important

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற திங்களன்று சரத்பொன்சேகா மற்றும் ரணில் உடனான கலந்துரையாடலில்கூட்டமைப்பினர் எட்டு முக்கிய விடயங்களை முன்வைத்ததாகவும் அவற்றை சரத்பொன்சேகா ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் கொழும்பு இணையதளம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த எட்டு விடயங்களாவன:

1 12,000 புலி உறுப்பினர்களையும் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கவேண்டும்

2 உயர் பாதுகாப்பு வலையங்களை நீக்குதல்

3 வடக்கு கிழக்கில் இராணுவத்தினரின் பிரசன்னத்தை குறைத்தல்

4 இடம்பெயர்ந்த மக்களை முழுமையாக விடுவித்து துரித மீழ் குடியமர்வினை செய்தல்

5 மீழ் குடியமர்ந்த மக்களுக்கு நிரந்தர வீடமைப்பு

6 வடக்கு கிழக்கு மீழ் கட்டுமான பணிகளை விரைவாக ஆரம்பித்தல்

7 கிழக்கில் புதிய குடியேற்றங்களை நிறுத்துதல்

8 அரசியல் தீர்வு நோக்கிய பேச்சுவார்த்தை

இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு எழுத்து மூலமாக உறுதிப்பாடு தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் செய்திகள் கூறுகின்றன. எழுத்து மூலமாக தந்தால் அதனை பைரங்கபடுத்தினால் சிங்கள மக்களின் வாக்குகளில் சரிவு ஏற்படும் என பொன்சேகா தரப்பு கூறியுள்ளது. ஆனால் சம்பந்தன் தரப்பு தாம் இந்த எழுத்துமூலமான பத்திரத்தினை வெளியிட மாட்டோம் என்றும் ஆனால் சரத்பொன்சேகா வெற்றிபெற்று வாகுறுதி நிறைவேற்றாப்படாவிட்டால் தாம் சர்வதேசத்திற்கும் மக்களிற்கும் தெரியப்படுத்துவோம் என கூறியுள்ளார். ஆனால் அதுபற்றி தாம் விரைவில் யோசிப்பதாக கூறியுள்ளனர்.

ஜனவர் 4ம் திகதிக்கு முன்பாக அந்த எழுத்துமூலமான பத்திரம் தரப்படவேண்டும் என சம்பந்தன் தரப்பு கேட்டுள்ளது.

-----

சிங்கள அரசியல்வாதிகளால் கடந்த அறுபது வருடங்களாக ஏமாற்றப்பட்ட இனம் என்று சம்பந்தன் ஐயா யோசிக்கிறதிலை நியாயம் இருக்குது.சரத் பொன்சேகாவுக்கு உண்மையிலே.... தமிழர் பிரச்சினைக்கு தீர்வு தரும் எண்ணமிருந்தால் .... கனக்க யோசிக்காமல் வாக்குறுதியை கொடுக்கலாம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பிரபா ரணில் ஒப்பந்தம் வெளிநாடொன்றின் மத்தியஸ்தத்துடன் எழுத்து மூலமாக ஏற்பட்டது அதை சிறிலங்கா அரசு தூக்கி எறிந்த பொழுது நோர்வே ஏன் என்று கூடக் கேட்கவில்லை. பகிரங்க ஒப்பந்தம் பகிரங்கமாக கிழிக்கப் பட்ட நிலையில் இரகசிய ஒப்பந்தத்தின் நிலை என்ன ஆகும்?

0

Edited by புலவர்

சம்பந்தன் அய்யாவும் ,ஏனைய மூத்தோரும் ஒன்றை மட்டும் விளங்கினால் சரி...எங்களது பிரச்சனயில அடிப்படை, இடைக்கால மற்றும் நடைமுறை என்று எல்லாம் இல்லை.

நாம் பட்டவை போதும்.தமிழர் அரசியல் என்றால் ஒன்றுதான்.

என்னவெனில் தீர்வை முன் வைக்கச் சொல்வதுதான். அதுவரையும் தமிழன் காத்திருப்பான் என்று கோரிவிடுங்களேன்,பகிரங்கமாகவே.அதை விடுத்து இன்று,நளை,ஜனவரி 4 ஏன் இந்த சுத்துமாத்தல்கள்.

அல்லது கவுண்டமணி பாணியில் அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...என்று சொல்லுங்கோ

சம்பந்தன் ஐயா சொல்வது சரிதான் என எனக்கு படுகிறது. பசித்திருப்பவனிடத்தில் தத்துவம் பேசினால் எடுபடாது. அதுபோல் மக்களுக்கு வேண்டிய உடனடித்தேவை சகஜநிலமை, சொந்தவீட்டில் அமைதியான வாழ்வு. பின்பு சில மாதங்களில் வரும் பொது தேர்த்தலோடு நிரந்தர தீர்வு என்ன என கேட்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நடைமுறைப் பிரச்சனைகள் மட்டில் அக்கறை கொள்வதில் எந்தத் தவறுமில்லை. ஆனால் நடைமுறைப் பிரச்சனைகளை தீர்ப்பதாகக் காரணம் காட்டியே இனச்சிக்கலின் அடிப்படைகளைச் சிங்களம் மறைக்க முற்படும்போது கூட்டமைப்பினர் வாழாவிருந்தால் பிறகு நிலமை கவலைக்கிடமாகிவிடும்.

பொன்சேக்காவை ஆதரிப்பதன் மூலம் அம்பை விட்டு விட்டு எய்தவனை பழிவாங்கலாம்தான், ஆனால் அம்பும் தானாகச் செய்யுமளவிற்கு இனவாதத்தில் ஊறியதுதான்.

என்னைக்கேட்டால் விக்கிரமபாகு விற்கே வாக்களிக்க வேண்டும் என்பேன், ஆனால் தமிழர்க்கு அவரைப்பற்றி எங்கே தெரியப்போக்கிறது ??

தமிழன் யார்? என்பதை பசி பட்டினி மறந்து போராடியவர்கள்,போராட துணிந்தவர்கள் என இரு வேட்பாளர்களுட்பட அனைத்து சிங்களர்களுக்கும் செவிப்பறை கிழிய கோரியாயிற்று தம்பி.

இப்போது எங்களுக்கு தேவையானது ஒரு தொடர்ச்சி மட்டுமே...நீஙகள் நினைப்பது விளங்கிது...ஆனால் அதுவல்ல.

மொத்த வாக்கு பதிவு 80 வீதம் தாண்டினால் மகிந்த..அல்லாவிட்டால் அடுத்தவன்..அதுவல்ல பிரச்சனை.

இதுதான் இலங்கை .அதை விடுவோமே.எங்கள் பிரச்சனை ..அதன் தார்ப்பரியம்...அதுக்குத்தானே தமிழர் அரசியல்.

சிந்தியுங்கள் என்று கூறவில்ல.இது சாதரண அரசியல் சுத்துமாத்து.இதை நாம் தாண்டவேண்டும் என கருதுகின்றேன்.

அம்புட்டுதே...(சிவாஜி முதல் மரியாதையில் சொல்வது போல)

  • கருத்துக்கள உறவுகள்

.

பூ.... மிதிக்கப் போய் , தீ.... மிதிக்காமல் வந்தால் சரி.

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதித் N;தர்தலில்தான் தமிழரின் வாக்குகள் சிங்கள வேட்பாளரின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும்.பேரம் பேசுவதாயின்(அரசியல் தீர்வு பற்றி) இப்பொழுது பேச வேண்டும். சர்வ வல்லமையுடைய ஜனாதிபதி எந்தத் தீpர்வையும் குழப்பியடிக்கலாம். முன்பு சந்திரிக்கா ரணில் அரசாங்கத்தை நடத்திய விதம் தெரியாதோ? யார் வந்தாலும் பிரயோசனம் இல்லை.சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவு வழங்கி தமிழரின் தனித்துவத்தைக் காட்டலாம்.2 வது வாக்கை சரத்திற்குப் போட்டு மகிந்தவை தற்காலிகமாகப் பழிவாங்கலாம்.அடுத்த ஜனாதிபதித்

தேர்தலில் சரத்தை வெளியேற்றுவதற்கு வழிதேட வேண்டியதுதான்.

சம்பந்தன் ஐயா சொல்வது சரிதான் என எனக்கு படுகிறது. பசித்திருப்பவனிடத்தில் தத்துவம் பேசினால் எடுபடாது. அதுபோல் மக்களுக்கு வேண்டிய உடனடித்தேவை சகஜநிலமை, சொந்தவீட்டில் அமைதியான வாழ்வு. பின்பு சில மாதங்களில் வரும் பொது தேர்த்தலோடு நிரந்தர தீர்வு என்ன என கேட்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு எழுத்து மூலமாக உறுதிப்பாடு தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் செய்திகள் கூறுகின்றன. எழுத்து மூலமாக தந்தால் அதனை பைரங்கபடுத்தினால் சிங்கள மக்களின் வாக்குகளில் சரிவு ஏற்படும் என பொன்சேகா தரப்பு கூறியுள்ளது. ஆனால் சம்பந்தன் தரப்பு தாம் இந்த எழுத்துமூலமான பத்திரத்தினை வெளியிட மாட்டோம் என்றும் ஆனால் சரத்பொன்சேகா வெற்றிபெற்று வாகுறுதி நிறைவேற்றாப்படாவிட்டால் தாம் சர்வதேசத்திற்கும் மக்களிற்கும் தெரியப்படுத்துவோம் என கூறியுள்ளார். ஆனால் அதுபற்றி தாம் விரைவில் யோசிப்பதாக கூறியுள்ளனர்.

ஜனவர் 4ம் திகதிக்கு முன்பாக அந்த எழுத்துமூலமான பத்திரம் தரப்படவேண்டும் என சம்பந்தன் தரப்பு கேட்டுள்ளது.

சிங்களவனுக்கு மேல்மாடி இல்லையெண்டு என்னத்த சொல்லுறது??? :):blink:

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்து மூலமோ, வாய்மொழி மூலமோ சிங்களவர்கள் பல காலமாக உறுதி மொழிகளை மட்டும் தான் தந்துள்ளார்கள். நடைமுறையில் தமிழரை கொன்றும், கற்பழித்தும் , சூறையாடியும் தான் சிங்கள அரசுகள் மாறி மாறி செய்துள்ளன.சம்பந்தனும் சரி, அவருக்கு பின்னால் நிற்பவர்களும் சரி ஏமாந்த சோணகிரிகள் என்பது மீண்டும் மீண்டும் நிருபிக்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்து மூலமோ, வாய்மொழி மூலமோ சிங்களவர்கள் பல காலமாக உறுதி மொழிகளை மட்டும் தான் தந்துள்ளார்கள். நடைமுறையில் தமிழரை கொன்றும், கற்பழித்தும் , சூறையாடியும் தான் சிங்கள அரசுகள் மாறி மாறி செய்துள்ளன.சம்பந்தனும் சரி, அவருக்கு பின்னால் நிற்பவர்களும் சரி ஏமாந்த சோணகிரிகள் என்பது மீண்டும் மீண்டும் நிருபிக்கப்படும்.

நீங்கள் சொல்லுவது சரிதான். ஆனால் அவன் அவன் அவனது தகுதிக்கு எற்றதைதானே செய்யலாம்?

இதைவிட அந்த ஐயா வேறு எதை செய்யலாம் என்று நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?

தமிழர் கூட்டமைப்பு கிடக்கடும்,இலங்கையிலிருக்கும் தமிழரையும் விடுவம்,இருவரும் ஏதோ ஒரு வகை அடக்குமுறைக்குள் உள்ளவர்கள்.புலம் பெயர்ந்த நாங்கள் எல்லோரும் ஒருமித்த குரலில் யாருக்கு வோட் பண்ணினால் நல்லது என ஒரு முடிவிற்கு வந்தோமா? கடைசி யாழ் இணையத்தில் உள்ளவர்களாவது ஏதாவது ஒரு நிலை பாட்டை எடுத்தோமா?

வானொலியை கேட்டலும், டீ வீ ஜை போட்டாலும், இணயங்களை திறந்தாலும் ஆளாள் ஒவ்வொன்றை சொல்லுகின்றார்கள்.பின் அதற்கு விளக்கம் வேறு கொடுக்கின்றார்கள்.மற்றவர்களை வேறு திட்டித் தீர்த்தபடி. இந்த இனம் எப்படி உருவானதென்று டாவினிடம் தான் கேட்க வேண்டும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.