Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலாலி விமான நிலையம், சர்வதேச விமானநிலையமாக மாற்றப்படும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

.

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டு பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படும்,காணாமற்போனோர் குறித்தும் நடவடிக்கை

*எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நான் வெற்றிபெற்றவுடன் அவசரகாலச்சட்டம் உடன் நீக்கப்படும்.

*யாழ்ப்பாணத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்கள் அனைத்தும் முற்றாக அகற்றப்படும்.

* காணாமற்போனோர் மற்றும் கைது செய்யப்பட்டோர் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

* பலாலி விமான நிலையம் விஸ்தரிக்கப்பட்டு சர்வதேச விமானநிலையமாக மாற்றப்படும்.

ஜனாதிபதி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா இவற்றை நேற்று யாழ்ப்பாணத்தில் வைத்துத் தெரிவித்தார்.

நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட சரத் பொன்சேகா பல்வேறு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் நேற்று மாலை 7 மணியளவில் யாழ்.பாடி ஹோட்டலில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தினார்.

அந்த மாநாட்டில் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜே.வி.பி. தலை வர் சோமவன்ச அமரசிங்க, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்ஹக்கீம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன், எம்.பி.க்களான ஜயலத் ஜயவர்த்தன, ரவிகருணா நாயக்க,அனுரகு மார திஸநாயக்க, அர்ஜீண ரணதுங்க, அகிலவிராஜ் காரியவாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அந்த ஊடகவியலாளர் மாநாட்டில் சரத் பொன்சேகா மேலும் விவரித்தவை வருமாறு:

இன்று எமது நாட்டுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை. யுத்தம் முடிவடைந்து விட்டது. எனவே உயர்பாதுகாப்பு வலயங் கள் தேவையில்லை. யுத்தம் முடிவடைந் தவுடனேயே அவை அகற்றப்பட்டிருக்க வேண்டும். எனினும் இதுவரை அது நடைபெறவில்லை. அது ஏன் என்பது தான் எனக்கு விளங்க வில்லை. நான் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப் பட்டதும் முதலில் முகமாலை, தனங்கிளப்பு, அரியாலை, யாழ்.நகர், பலாலி, நாகர் கோயில் பகுதிகளில் அமைந்துள்ள இரா ணுவத்தினரின் பாதுகாப்பு வலயங்கள் அனைத்தும் உடனடியாக அகற்றப்படும். பலாலி விமான நிலையம் விஸ்தரிக்கப் பட்டு சர்வதேச விமானநிலையமாக மாற் றப்படும்.

தற்போது நடைமுறையில் இருக்கும் அவசரகாலச்சட்டம் இனிமேல் தேவையற் றது. அது உடனடியாக நீக்கப்படும்

அத்துடன் காணாமற்போனோர் மற்றும் கைது செய்யப்பட்டோர் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இவர்களில் சிறையில் உள்ளவர்களின் விவரங்கள் உடனடியாகப் பகிரங்கப்படுத்தப்படும். முன்னர் யுத்தகாலத்தில் கைது செய்யப் பட்டோரினதும் இப்போது முகாமில் வைக்கப்பட்டுள்ள 10 ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்களினதும் விவரங் கள் இதில் அடங்கும். சிறையில் அடைக் கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடு விப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படும். அத்துடன் காணாமற்போனோ ரில் உயிருடன் இல்லாதவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மீளக்குடியமர்த்தல் தேர்தல் நாடகம்

இப்போது இடம்பெயர்ந்த மக்களுக் கான அடிப்படைக் கட்டமைப்புகள் எதுவும் ஏற்படுத்தப்படாமல் மக்கள் மீளக்குடியேற்றப்பட்டுள்ளார்கள். இது ஒரு தேர்தல் நாடகம். மீளக்குடியேற்றப்பட்ட இடங்களில் கள்ள வாக்குகளைப் போடுவதற்கும் அங்கு ஏற்பாடுகள் நடைபெறுவதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. மீளக்குடி யேற்றத்துக்கு வழங்கப்பட்ட சர்வதேச நிவாரண நிதியை "ராஜபக்ஷ கம்பனி'' களவாடிவிட்டது. உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பாக இராணுவ ரீதியிலும் அரசியல் ரீதியிலும் நான் நன்கு அறிந்தவன். இங்கு நான் இராணுவ தளபதியாக பணியாற்றியவன். எனவே இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான தகுதி என்னிடம் உள்ளது. ஆனால் பாதுகாப்புச் செயலருக்கு இது தொடர்பாக போதிய அறிவு இல்லை. அவர் 20 வருடங்களின் பின்னர் ஒரு வெளிநாட்டுத்தூதுவர் போல இங்கு வந்துள்ளார்.

நான் ஆட்சிக்கு வந்தால் இங்கு இராணுவ ஆட்சி நடைபெறும் என்று கூறப் படுகிறது. நான் இராணுவ ஆட்சியை விரும் பியிருந்தால் இப்போதுள்ள அரச தலை மையை எப்போதோ சிறையில் அடைத்து ஆட்சிக்கு வந்திருப்பேன். ஆனால் நான் அதை விரும்பவில்லை. இந்த நாடு அனைத்துப் பிரஜைகளுக்கும் சொந்தம். இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்களை இரண்டாம் தரப் பிரஜைகள் என நான் கூறி யதாக முன்னர் ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகியிருந்தது. அந்தச் செய்தி முற்றி லும் தவறானது. நான் அதனை முற்றாக மறுக்கின்றேன். சிங்கள மக்கள் அனைத்து இனங்களுடனும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்பதையே நான் கூறினேன். அது திரிவு படுத்தப்பட்டு வெளியிடப்பட்டு விட்டது. இந்த நாடு தனியே சிங்களவருக்கோ, தமிழருக்கோ சொந்தமான தல்ல. அது இந்த நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் உரியது என்றார்.

2010-01-03 06:22:23

உதயன் அலுவலகச் செய்தியாளர்கள்

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொல்லுற விடயங்களும் சொல்லுற விதமும் நல்லா இருக்கு. ஆனால்....

இதெல்லாம் செய்தால் தமிழ் மக்கள் விரும்புவார்கள் என்று இரண்டு வேட்பாளர்களுக்கும் தெரியும்... இதுக்கும் முன்னமும் சந்திரிக்கா அக்காவும் சொன்னவ.... தேர்தல் முடிந்ததொட எல்லாம் சரி.

இதெல்லாம் நடக்கிற காரியமா படேல்ல... என்ற மனதுக்கு ஏதொ ராசபக்ச தான் வருவான் போல தெரியுது....

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மக்களின் சாபக்கேடு தமிழ்மக்களின் தலைவர்கள். இவர்களுக்கு பெருமளவு நன்மைகளை பெறத்தக்க விதமாக ஒப்பந்தம் செய்ய தெரியாது. பொன்சேகா சொன்னவற்றை செய்யாவிட்டால் அவருக்கு என்ன இழப்பு? ஒன்றுமில்லை. ஆகவே, அவருக்கு வாக்கு போட்டுவிட்டு ஏமாந்து போகக்கூடிய நிலை உள்ளது. அதே வேளை பொனசேகாவின் அரசாங்கம் ஜே.வி.பி ஒரு புறமும், யூ.என்.பி மறுபுறமும் இழுக்கும் பலமற்ற அரசாங்கமாக இருக்கும். இதை காரணம் காட்டி பொன்சேகா சொன்னவற்றை செய்ய பலமுடைய அரசாங்கத்தை அமைக்க மாட்டார் என்று காரணம் காட்டி தமிழ் மக்கள் தலைவர்கள் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும். இவர் சொன்னதை செய்யாவிட்டால், யூ.என்.பி. தமிழ்மக்களுக்கு என வெளிநாட்டில் அமைக்கப்படும் நிதிக்கு பொன்சேகாவின் உறுதிமொழிகளை நிiறுவேற்றும் வரை நட்டஈடு செலுத்தவேண்டும் என்று ஒப்பந்தம் செய்யவேண்டும்.

உதாரணமாக, அடைத்துவைக்கப்பட்ட மக்களின் விடுதலை பின்தள்ளப்படும் ஒவ்வொரு நாளுக்கும், ஆளொருவருக்கு 10,000 ரூபா வீதம் நட்டஈடு ஒரு வெளிநாட்டு பொதுநல நிறுவனத்துக்கு செலுத்தப்பட வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யலாம். அந்த நிறுவனம் இந்த நிதியை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யலாம். நட்டஈடு செலுத்தாவிட்டால் என்ன செய்வது? இப்படியாக சிறிலங்கா ஒப்பந்தப்படி கடன் திருப்பி செலுத்த வழியில்லாத நிலையில், இன்று உலகவங்கி அந்த கடனை செலுத்திவிட்டு சிறிலங்காவை தனக்கு கடனாளியாக்குகிறது. இந்த மாதிரியாக ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

GeneralSFinJaffna-3.jpg

GeneralFonsekaInJafna4.jpg

Edited by Jude

செம்மணி போன்று பிளான் ஒன்றும் அய்யாவிடம் இல்லாமல் இருந்தால் சரி..

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுபற்றி வாயே திறக்கவில்லையே????அதைச் சொல்லத் துணிவுவரவில்லையே இந்த அற்ப சலுகைகளுக்காக தமிழர்கள் போராடவில்லையே.அடிக்கடி நான் அப்படிச்சொல்லவில்லை பத்திரிகைகள்தான் திரித்து எழுதியுள்ளன என்று சொல்வது மாதிரி மேற் சொன்ன விடயங்களை நான் அவ்வாறு எந்த வாக்குறுதிகளையும் வழங்கவில்லை. பத்திரிகைகள்தான் தவறுதலாக எழுதியுள்ளன என்று தேர்தல் முடிந்ததும் சொல்வாரென்று நினைக்கிறேன்.உங்கள் வார்ததையை நம்பி அல்லாது சூழ்ச்சிகளை சூழ்ச்சிகளால் வெல்வதற்காக மக்கள் உங்களுக்குத்தான் வாக்களிக்கப் போகிறார்கள்.

சரத்தின் கொள்கைபரப்புச்செயலாளாராக நம்மட தமிழ்சிறியை நியமிச்சிருக்கிறார் போல ஹிஹிஹி சும்மா ஜோக்தான் தப்பா நினைச்சுடாதீங்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மக்களின் சாபக்கேடு தமிழ்மக்களின் தலைவர்கள். இவர்களுக்கு பெருமளவு நன்மைகளை பெறத்தக்க விதமாக ஒப்பந்தம் செய்ய தெரியாது. பொன்சேகா சொன்னவற்றை செய்யாவிட்டால் அவருக்கு என்ன இழப்பு? ஒன்றுமில்லை. ஆகவே, அவருக்கு வாக்கு போட்டுவிட்டு ஏமாந்து போகக்கூடிய நிலை உள்ளது.

------

உண்மை ஜூட்,

தமிழ் கூட்ட்மைப்பு யாருக்கு ஆதரவு வழங்குவதென்று இன்னும் முடிவெடுக்கவில்லை. ( நாளை 4ம் திகதி என்று பத்திரிகை குறிப்புகள் கூறுகின்றன). இன்னும் தேர்தலுக்கு 22 நாட்களே உள்ள நிலையில் இந்தத் தடுமாற்றத்தை பயன்படுத்தி டக்ளஸ், கருணா, பிள்ளையான் போன்றோர் சரத்துடன் இணைந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. அதன் பின் கூட்டமைப்பு சரத்துக்கு ஆதரவு வழங்கும் என்று எதிர்பார்க்க முடியாது. வேண்டுமென்றால் தோல்வியை தழுவப் போகும் மகிந்தவுக்கு ஆதரவு வழங்கி ..... அடுத்த ஐந்து வருடத்தை தமிழ் கூட்டமைப்பு எதிர்கட்சியில் இருந்து அறிக்கை விட்டு சமாளிக்கலாம்.

தமிழ் மக்கள் தான் எவ்வளவு துன்பத்தையும் தாங்கக் கூடிய மனபலம் படைத்தவர்களாயிற்றே.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

------

சரத்தின் கொள்கைபரப்புச்செயலாளாராக நம்மட தமிழ்சிறியை நியமிச்சிருக்கிறார் போல ஹிஹிஹி சும்மா ஜோக்தான் தப்பா நினைச்சுடாதீங்க

புலவர் , இருக்கிற இரண்டு கொள்ளிக்கட்டையில்......

எந்தக் கொள்ளிக்கட்டை நல்லது என்றே பார்க்கவேண்டும்.

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மக்களின் சாபக்கேடு தமிழ்மக்களின் தலைவர்கள். இவர்களுக்கு பெருமளவு நன்மைகளை பெறத்தக்க விதமாக ஒப்பந்தம் செய்ய தெரியாது. பொன்சேகா சொன்னவற்றை செய்யாவிட்டால் அவருக்கு என்ன இழப்பு? ஒன்றுமில்லை. ஆகவே, அவருக்கு வாக்கு போட்டுவிட்டு ஏமாந்து போகக்கூடிய நிலை உள்ளது. அதே வேளை பொனசேகாவின் அரசாங்கம் ஜே.வி.பி ஒரு புறமும், யூ.என்.பி மறுபுறமும் இழுக்கும் பலமற்ற அரசாங்கமாக இருக்கும். இதை காரணம் காட்டி பொன்சேகா சொன்னவற்றை செய்ய பலமுடைய அரசாங்கத்தை அமைக்க மாட்டார் என்று காரணம் காட்டி தமிழ் மக்கள் தலைவர்கள் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும். இவர் சொன்னதை செய்யாவிட்டால், யூ.என்.பி. தமிழ்மக்களுக்கு என வெளிநாட்டில் அமைக்கப்படும் நிதிக்கு பொன்சேகாவின் உறுதிமொழிகளை நிiறுவேற்றும் வரை நட்டஈடு செலுத்தவேண்டும் என்று ஒப்பந்தம் செய்யவேண்டும்.

உதாரணமாக, அடைத்துவைக்கப்பட்ட மக்களின் விடுதலை பின்தள்ளப்படும் ஒவ்வொரு நாளுக்கும், ஆளொருவருக்கு 10,000 ரூபா வீதம் நட்டஈடு ஒரு வெளிநாட்டு பொதுநல நிறுவனத்துக்கு செலுத்தப்பட வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யலாம். அந்த நிறுவனம் இந்த நிதியை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யலாம். நட்டஈடு செலுத்தாவிட்டால் என்ன செய்வது? இப்படியாக சிறிலங்கா ஒப்பந்தப்படி கடன் திருப்பி செலுத்த வழியில்லாத நிலையில், இன்று உலகவங்கி அந்த கடனை செலுத்திவிட்டு சிறிலங்காவை தனக்கு கடனாளியாக்குகிறது. இந்த மாதிரியாக ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

ஜூட்,

நீங்கள் சொல்வதுபோல் செய்யமுடிந்தால் நல்லதுதான். ஆனால் ஜே.ஆர். ஜெயவர்த்தன நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையைக் கொண்டுவந்ததன் நோக்கமே சிங்கள இனத்துக்கு இப்படியான சிக்கல்கள் எழாமல் தவிர்ப்பதற்குத்தான்.

பாராளுமன்றத்துக்கு யார் வந்தாலும் ஜனாதிபதி என்பவர் பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யப்படுபவராகவே இருக்க முடியும். அதையும் மீறி, சிங்களவர்கள் ஒரு தமிழர்களை விரும்பி ஜனாதிபதியாக்கினாலும், புத்த சாசனத்தைப் பேணும் ஒருவரே ஜனாதிபதியாக வரமுடியும் என்று அரசியலமைப்புச் சட்டத்தில் போட்டுவைத்து விட்டார்கள்.

இவ்வாறான ஒரு நிலையில், தமிழ்க்கட்சிகள் பேரம்பேசுவது என்பதும் அதன்மூலம் நன்மைகளைப் பெற்றுக்கொள்வது என்பதும் குருடன் கம்பு சுற்றிய கதைதான். இந்த அரசியலமைப்புச் சட்டம் மாறாதவரைக்கும், இலங்கையில் தமிழர்களுக்கென்று ஒரு ஜனநாயக அரசியல் கிடையாது.

கைது செய்ய பட்ட விடுதலை புலிகளின் உறுப்பினர்கள் விடுவிக்க படுவர் என்பதை விட மகிந்த சொல்லாத ஒண்டையும் சொல்ல வில்லை... உயர் பாதுகாப்பு வலயம் நீக்க படும் எண்று மகிந்தவும் இதுக்கும் முன்னர் பல காலம் முன்னர் சொல்லி இருக்கிறார்...

பலாலி உயர் பாதுகாப்பு வலயம் நீக்க படாது என்பதுக்கு ஒரு காரணம் மட்டுமே சர்வதேச விமான நிலைய கதை... அதுவும் சிங்களவர் அதிர்ப்தி அடைய கூடாது என்பதுக்காக விடப்பட்ட அறிக்கை...

  • கருத்துக்கள உறவுகள்

என்னமோ செய்யுது படத்தை பார்க்க....

வேறு எதுவும் தோணல..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

------ (தணிக்கை)

யாழில் பிரதான திரிக்கு சம்பந்தமில்லாமல் தொடர்ந்து எழுதப்படுமாயின், யாழ் கள நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். கள விதிகளை பின்பற்றவும்

:நிழலி

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

இதை கொஞ்சம் யாராவது கட்டிப்போடுங்களேன்

புண்ணியம் கிடைக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

------ (தணிக்கை)

யாழில் பிரதான திரிக்கு சம்பந்தமில்லாமல் தொடர்ந்து எழுதப்படுமாயின், யாழ் கள நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். கள விதிகளை பின்பற்றவும்

:நிழலி

அண்ணை செய்தி வங்குரோத்து, முள்ளிவாய்க்கால்தான் கண்முன்னால நிக்கிது, முள்ளிவாய்க்கால் சரியெண்டா செம்மணியும் சரி. மாலைபோட்டு வரவேக்கிறது யதார்த்தமானது, ஏற்கெனவே குறிப்பிடப்பட்டதுதான். இதுக்கெல்லாம் போய் நடவடிக்கையெண்டா.... ஸ்ரீலங்காவ விட மோசம்..... :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"மகாவலிகங்கையை வடக்கே திருப்புவோம்"

காமினிபொன்சேகா

  • கருத்துக்கள உறவுகள்

இதை கொஞ்சம் யாராவது கட்டிப்போடுங்களேன்

புண்ணியம் கிடைக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

ஜூட்,

நீங்கள் சொல்வதுபோல் செய்யமுடிந்தால் நல்லதுதான்.

ஆனால் ஜே.ஆர். ஜெயவர்த்தன நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையைக் கொண்டுவந்ததன் நோக்கமே சிங்கள இனத்துக்கு இப்படியான சிக்கல்கள் எழாமல் தவிர்ப்பதற்குத்தான்.

.....

இவ்வாறான ஒரு நிலையில், தமிழ்க்கட்சிகள் பேரம்பேசுவது என்பதும் அதன்மூலம் நன்மைகளைப் பெற்றுக்கொள்வது என்பதும் குருடன் கம்பு சுற்றிய கதைதான். இந்த அரசியலமைப்புச் சட்டம் மாறாதவரைக்கும், இலங்கையில் தமிழர்களுக்கென்று ஒரு ஜனநாயக அரசியல் கிடையாது.

இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி வெளிநாட்டில், வெளிநாட்டு சட்டப்படி உருவாக்கப்பட்ட நம்பிக்கை நிதியையோ, அல்லது உடன்பாட்டையோ செல்லுபடியற்றதாக்க முடியாது. வெளிநாட்டில் அந்த நாட்டு சட்டப்படி செய்யப்பட்ட உடன்பாட்டை பொன்சேகா மீறினால், அந்த நாட்டு சட்டத்துக்கமைய தனிநபர் பொன்சேகா மீது நடவடிக்கை எடுத்து சொத்து பறிமுதல் செய்யக்கூடிய வாய்ப்பிருக்கிறது. உதாரணமாக, பொன்சேகாவுக்கு அமெரிக்காவில் சொத்தும் வீடும் இருக்கிறது. இந்த ஒப்பந்தம் அமெரிக்காவில் செய்யப்பட்டு அதை அவன் மீறினால், அமெரிக்க சட்டப்படி சொத்துக்களை பறிக்க கூடிய வாய்ப்பிருக்கிறது. சொத்துக்களை பிணயைhக வைத்து ஒப்பந்தம் செய்ய வைத்தால் அது மிகவும் இலகுவானது.

பொன்சேகா இந்த தேர்தலில் தோற்றால், போர்க்குற்றவாளியாகவும், தேசத்துரோகியாகவும் ராஜபக்சவே பிடித்து அடைக்கும் சாத்தியம் உள்ளது. ஆகவே அவனுக்கு இது வாழ்வா, சாவா என்ற தேர்தல், தோற்றுப் போகும் சாத்தியம் மிகவும் அதிகம். குறிப்பாக தமிழ் பகுதியில் போடப்படாத ஒவ்வொரு வாக்கும் கள்ள வாக்காக ராஜபக்சவுக்கு பதியப்படும் சாத்தியம் மிகவும் அதிகம். இதனால் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்து போடும் நிலையில் இருப்பான். அமைச்சர் பதவிகளுக்கு அங்கலாய்க்கும் யு+.என்.பி. காரரில் வெளிநாட்டில் சொத்துள்ளவர்களை கூட்டுக்கு சேர்த்து கையெழுத்து போட வைக்க வேண்டும். ஒப்பந்தத்தை மீறினால் வெளிநாட்டில் உள்ள அனைத்தையும் பறித்துவிடக் கூடிய நிலையை உருவாக்க வேண்டும்.

மேலும் வழங்கிய வாக்குறுதியை கையெழுத்துடன் காட்டி வெளிநாட்டுக்கடனை வற்புறுத்தி வெளிநாட்டு சட்டப்படி பறித்து கொள்ளக்கூடிய சாத்தியமும் உள்ளது. நிறைவேற்று அதிகாரம் வெளிநாடுகளில் செல்லாது.

பொன்சேகாவுக்கும், யு+.என்.பிக்கும் வாக்குகள் வேண்டுமென்றால் அவர்கள் இவ்வாறு ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் தேர்தல் கருணாரத்தினவுக்கு ஆதரவு வழங்கப்படும் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கடுமையான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.