Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருநிலம்:உன்னை தின்று போட்டிருக்கிறார்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெருநிலம் : உன்னைத் தின்று போட்டிருக்கிறார்கள்

o தீபச்செல்வன் ------------------------------------------------------------------

(இன்னுமின்னும் அறியாத சேதிகள்

அந்தப் பெருநிலத்தில் புதைக்கப்பட்டிருக்கின்றன)

நேற்று உனது புகைப்படம் புதர் ஒன்றிற்குளிலிருந்து

எடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

சகோதரியே! உன்னை உரித்து

சிதைத்தவர்களின் கைளிலிருந்து

எங்கள் காலம் நீண்டுகொண்டிருக்கிறது.

கண்டெடுக்கப்படாவர்களின் சடலங்களுக்கு

என்ன நேர்ந்திருக்குமென்று

தலைகளை இடித்தழும் தாய்மார்களுக்கு

இரத்தத்தால் முடிவுறுத்தப்பட்ட சகோதரிகளுக்கு

உன்னை சிதைத்திருக்கிற புகைப்படம்

எண்ணிக்கையற்ற முனைகளில்

நடந்த கதைகளை சொல்லிக்கொண்டேயிருக்கிறது.

உன்னை சிதைந்து எங்கு எறிந்திருக்கிறார்கள் என்பதையும்

யார் உன்னை தின்றார்கள் என்பதையும்

உனது தொலைக்காட்சியில்

நீயே செய்தியாக வாசித்துக்கொண்டிருக்கிறாய்.

நீ நடித்த பாடல்களும் படங்களும்

ஒளிபரப்பபட்டுக்கொண்டிருக்கிற அலைவரிசையில்

உனது பாதிப்படம் ஒரு மூலையில்

பார்க்கப் பொறுக்க முடியாத கோலமாக தொங்குகிறது.

அதே படைகளினால் கவலிடப்பட்ட

நிலத்தில் எங்கோ ஒரு மூலையில் உனது

தாயைப்போலவே ஒருத்தி

தன் மகளைத் தேடி துடித்துக்கொண்டிருக்கிறாள்.

ஆண்குறிகளை வளர்த்து

இரத்தத்தை படையலிட்டிருக்கிற

படைகளின் யுத்த முனைகளில்

உன் சீருடைகளை

கழற்றி எறிந்திருக்கிறார்கள்.

உன் வீரத்தை கரைத்துவிட்டார்கள்

தொலைந்துபோன உன் துப்பாக்கி படைகளின் கையிலிருக்கிறது

முன்னர் வெற்றியடைந்த களமொன்றிலேயே

நீ சரணடைந்திருக்கிறாய்.

துப்பாக்கிகளும் ஆண்குறிகளும்

ஒரே மாதிரியாய்

வாயைப் பிளந்து உன்னை தின்று போட்டிருக்கிறது.

முற்றத்தில் தெருவில் வயல்களில்

கண்ணிவெடிகளுக்கு கீழாகவும் மண் பிரளும் இடங்களிலெல்லாம்

சீருடைகள் முதலான உடைகளும்

இரத்தமும் சைனைட் குப்பிகளும் புகைப்படங்களும்

மற்றும் சில குறிப்புகளும் கிளம்பி வந்துகொண்டிருக்கின்றன.

என்னிடம் வாங்கிச் சென்ற

கவிதையை எங்கு போட்டிருப்பாய்?

__________________________________

(இசைப்பிரியாவுக்கு) 25.12.2009

யாழ் கள உறவு ஒருவர் நாங்கள் இசைப்பிரியாவிற்கு அஞ்சலி செலுத்தவில்லை என கவலைப்பட்டார் அதற்காக தீபச்செல்வன் இசைப்பிரியாவிற்கு படைத்த கவிதையை பதிவிடுகிறேன்....யாராவது அவரது படத்தை இனைத்து விடுங்கள் என்னால் இனைக்க முடியவில்லை.

Edited by இளைஞன்

இசைப்பிரியா எண்டுறது யார் ரதி? முன்பு தலைவரின் மகள் என்று தவறுதலாக சொல்லப்பட்ட கொலைசெய்யப்பட்டு படத்தில் காண்பிக்கப்பட்ட இருக்கும் சகோதரியா? தலைவரின் மகள் என்றுகூறி யாழில் முன்பு ஓர் புகைப்படம் இணைத்து இருந்தார்கள். பின்பு அந்த திரி நீக்கப்பட்டுவிட்டது. அவர் படைப்புக்களை இணைத்துவிடுங்கள் முடியுமானால்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆம் கலைஞன் அவர் தான்....அவர் புலிகளீன் தொலைக்காட்சியில் செய்தி வாசித்தவர் அத்தோடு ஈழ திரைப் படங்கள்,நாடகங்கள் போன்றவற்றீல் நடித்திருக்கிறார்.

Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்

ரதி .......பகிர்ந்து கொண்டமைக்கு உங்களுக்கு என் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இசைப் பிரியாவுக்கு எனது வீர வணக்கங்கள்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்தான் இசைப்பிரியா.

post-7111-12642455195425_thumb.jpg

தமீழ தேசியத் தொலைக்காட்சியில் பணிபுரிந்த காலத்தில் அவருடன் அறிமுகம் ஏற்பட்டது. 'வேலி' என்ற குறும்படத்தில் மிகத்திறம்பட நடித்திருந்தார். 'வேலி' படம் பற்றி நான் வீரகேசரியில் எழுதிய பொழுது மிகவும் மகிழ்ச்சியடைந்தார். 'ஈரத்தீ' படத்திலும் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்தவர். பாடல்களிலும் நடித்திருக்கிறார். தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளாராக இருந்திருக்கிறார். வீடியோ, எடிட்டிங், எழுத்து போன்ற எல்லாத் துறைகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இரக்கமும் அன்பும் கொண்ட மிகுந்த எளிமையான - கருத்தாழம் கொண்ட 'சிறந்த' போராளியாக வாழ்ந்தவர்.

அன்பிற்குரிய ரதி கவிதையைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி..

Edited by தீபம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசைப்பிரியா நடித்த வேலி குறும்படம் (யாழ் கருத்துக்களம் பகுதியில் ஏற்கனவே இடம்பெற்றிருக்கிறது)

http://www.tamilkathir.com/news/1784/57//d,video.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தீபச்செல்வன் இசைப்பிரியாவின் படத்தை இனைத்ததிற்கும் அவரைப் பற்றிய மேலதிக விபரங்கள் தந்தமைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி.

எந்த வார்த்தைகளுக்குள்ளும்

வராத வாழ்விலின் பெரு நெருப்பாய்

சுடர்விட்ட சூறாவழிக் காற்றை

நயவஞ்சகத்தோடுநெருங்கிய

நரமாமிசம் உண்போரால்

உருக்குலைக்கப்பட்ட சகோதரியே

எம் வீர வணக்கங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள் சகோதரி இசைபிரியா.

நேற்று உனது புகைப்படம் புதர் ஒன்றிற்குளிலிருந்து

எடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

சகோதரியே! உன்னை உரித்து

சிதைத்தவர்களின் கைளிலிருந்து

எங்கள் காலம் நீண்டுகொண்டிருக்கிறது.

கண்டெடுக்கப்படாவர்களின் சடலங்களுக்கு

என்ன நேர்ந்திருக்குமென்று

தலைகளை இடித்தழும் தாய்மார்களுக்கு

இரத்தத்தால் முடிவுறுத்தப்பட்ட சகோதரிகளுக்கு

உன்னை சிதைத்திருக்கிற புகைப்படம்

எண்ணிக்கையற்ற முனைகளில்

நடந்த கதைகளை சொல்லிக்கொண்டேயிருக்கிறது.

உன்னை சிதைந்து எங்கு எறிந்திருக்கிறார்கள் என்பதையும்

யார் உன்னை தின்றார்கள் என்பதையும்

உனது தொலைக்காட்சியில்

நீயே செய்தியாக வாசித்துக்கொண்டிருக்கிறாய்.

நீ நடித்த பாடல்களும் படங்களும்

ஒளிபரப்பபட்டுக்கொண்டிருக்கிற அலைவரிசையில்

உனது பாதிப்படம் ஒரு மூலையில்

பார்க்கப் பொறுக்க முடியாத கோலமாக தொங்குகிறது.

அதே படைகளினால் கவலிடப்பட்ட

நிலத்தில் எங்கோ ஒரு மூலையில் உனது

தாயைப்போலவே ஒருத்தி

தன் மகளைத் தேடி துடித்துக்கொண்டிருக்கிறாள்.

ஆண்குறிகளை வளர்த்து

இரத்தத்தை படையலிட்டிருக்கிற

படைகளின் யுத்த முனைகளில்

உன் சீருடைகளை

கழற்றி எறிந்திருக்கிறார்கள்.

உன் வீரத்தை கரைத்துவிட்டார்கள்

தொலைந்துபோன உன் துப்பாக்கி படைகளின் கையிலிருக்கிறது

முன்னர் வெற்றியடைந்த களமொன்றிலேயே

நீ சரணடைந்திருக்கிறாய்.

துப்பாக்கிகளும் ஆண்குறிகளும்

ஒரே மாதிரியாய்

வாயைப் பிளந்து உன்னை தின்று போட்டிருக்கிறது.

முற்றத்தில் தெருவில் வயல்களில்

கண்ணிவெடிகளுக்கு கீழாகவும் மண் பிரளும் இடங்களிலெல்லாம்

சீருடைகள் முதலான உடைகளும்

இரத்தமும் சைனைட் குப்பிகளும் புகைப்படங்களும்

மற்றும் சில குறிப்புகளும் கிளம்பி வந்துகொண்டிருக்கின்றன.

என்னிடம் வாங்கிச் சென்ற

கவிதையை எங்கு போட்டிருப்பாய்?

--------------------------------------

உங்களின் பெரும்பாலான எழுத்துக்கள் உணர்வுக்குள் கலந்து விடுகின்றது. கருத்தெழுத முடிவதில்லை. அவலங்களை நேரில் பார்க்கும் போது ஏற்படும் உணர்வாக உங்கள் பதிவுகள் இருக்கின்றது. ஒளிப்படக் காட்சிக்கு நிகரானதான படைப்புகள். அனைத்தையும் புத்தகமாக்கி விடுங்கள் காலத்தால் பேசப்படுவதற்காகவில்லை காலம்கடந்தும் இவைகள் அறியப்படவேண்டும். ஒரு நாள் நாம் அடிமைக்குணத்தில் இருந்து அதிசயமாக விடுபட்டால் இந்தக் கவிதைகள் அதன்பிறகான வாழ்வுக்கு துணைநிற்கும்.

எமக்கென்று பிறிதொரு இலக்கியம் இல்லை. இந்தக் காலத்தை வாழ்வை நாளைய கண்ணாடியில் பார்க்கவேண்டும். அதுதான் இலக்கியம். நாளை இந்தப் படைப்புகள் நேர்மையாக நிச்சயம் இருக்கும். எந்தக் கலப்படமும் இல்லை. உயிர்ப்புடன் இருக்கும். உயிர் துடிதுடிக்கும் கணங்களை அப்படியே வைத்திருக்கும்.

எம்மிடம் எத்தனை வசதி வாய்புகள் இருந்தாலும் எமது அவலங்களை ஒளிப்படமாக மீள்பதிவு செய்யுமளவு திறமையோ கூட்டுமுயற்சிக்கோ ஏதுவானளவுக்கு நாம் என்னும் வளரவில்லை. அதை உங்கள் படைப்புகள் முடிந்தளவு செய்கின்றது.

  • 3 years later...

இந்தக் கவிதை இன்று மீண்டும் நினைவுகூருகின்றேன். (இத் திரி இன்று recommend பகுதியிலும் வந்துள்ளது)

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் இலக்கிய வரலாற்றில் மிகவும் முக்கியமான கவிதை. தீபச்செல்வனின் அண்மைக்காலக் கவிதைகள் புதிய தளத்தை எட்டியிருக்கிறது.

 

குடியிருக்க துண்டு நிலமில்லாத நிலையிலும் நாளைய உணவு நிச்சயமில்லாத நிலையிலும். துப்பாக்கிகளுக்கு மத்தியில் தலைபணியாது வாழும் கவிஞா உன்னை போற்றுகிறேன். சங்ககாலம்தொட்டு இதுதான் நம் வரலாறு.                                                                                                          

 

எமது வரலாற்றின் நாயகியும் எனது உறவினருமான இசைப்பிரியாவுக்கு எனது அஞ்சலிகள். 

Edited by poet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.