Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

"பொண்ணுகளே ..." .... இரசித்த கவிதை ஒன்று

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு,

முதலில் உங்களோடு பேச வரும் பெண்கள் இதயசுத்தியின்றி பேச வருவார்களா என்ற கேள்வி உங்களுக்கு ஏன் உதயமாகிறது? உங்கள் அவதானிப்பின் அடிப்படையிலேயே கோளாறு இருப்பதாய் தோன்றுகிறது. கடந்து வந்த பாதைகள்???.... (நீங்கள் யாராவது ஒரு சில பெண்களால் ஏமாற்றப்பட்டீர்களா?) காதல் என்பதில் பெண்கள் சுயநலமாக இருக்கிறார்கள் என்று நீங்கள் குறிப்பாக சொல்ல எத்தனிக்கும் விடயம் என்ன என்பதை வெளிப்படையாகச் சொல்லுங்கள். பெண்களை இதயசுத்தியோடு பேச தயாராக்கச் சொல்கிறீர்கள் அந்த இதய சுத்தி மேலைத்தேய நாகரீகம் சார்ந்தா? அல்லது கீழைத்தேய பண்பாடு சார்ந்தா?

நான் கடந்து வந்த பாதை என்பது என் சொந்த வாழ்க்கைப் பாதையில் என்ற அர்த்தத்தில் அல்ல. என் வாழ்க்கையில் நான் பயணித்த இடங்களில் வாழ்ந்த இடங்களில் சேவையாற்றிய இடங்களில் என்று பல வகைப்படும்.

நான்... பெண்கள் என்னை ஏமாற்ற இன்னும் இடமளிக்கவில்லை. அளித்திருந்தால் நானும் ஏமாற்றப்பட்டிருப்பேன்.

இதயசுத்தி என்பது மனித நாகரிக்கத்திற்கானது. அதில் மேலையென்ன.. கீழையென்ன..! அன்பைப் போதித்த ஜேசுவும்.. கருணையைப் போதித்த நபியும் ஜீவகாருணியம் பேசிய புத்தனும்.. தர்மத்தைப் பேசிய கிருஷ்ணனும்.. மனிதத்தை தான் முன்னிறுத்தினார்களே அன்றி மேலை கீழை என்றா பேசினார்கள்.

இதய சுத்தி என்பதும் அப்படித்தான். அது ஒரு மனித நாகரிகப் பண்பு. பல பெண்கள் அதை இழந்து போலித்தனமாக பிறரை ஏமாற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நடிப்பின் நாயகிகள்..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நான் கடந்து வந்த பாதை என்பது என் சொந்த வாழ்க்கைப் பாதையில் என்ற அர்த்தத்தில் அல்ல. என் வாழ்க்கையில் நான் பயணித்த இடங்களில் வாழ்ந்த இடங்களில் சேவையாற்றிய இடங்களில் என்று பல வகைப்படும்.

நான்... பெண்கள் என்னை ஏமாற்ற இன்னும் இடமளிக்கவில்லை. அளித்திருந்தால் நானும் ஏமாற்றப்பட்டிருப்பேன்.

இதயசுத்தி என்பது மனித நாகரிக்கத்திற்கானது. அதில் மேலையென்ன.. கீழையென்ன..! அன்பைப் போதித்த ஜேசுவும்.. கருணையைப் போதித்த நபியும் ஜீவகாருணியம் பேசிய புத்தனும்.. தர்மத்தைப் பேசிய கிருஷ்ணனும்.. மனிதத்தை தான் முன்னிறுத்தினார்களே அன்றி மேலை கீழை என்றா பேசினார்கள்.

இதய சுத்தி என்பதும் அப்படித்தான். அது ஒரு மனித நாகரிகப் பண்பு. பல பெண்கள் அதை இழந்து போலித்தனமாக பிறரை ஏமாற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நடிப்பின் நாயகிகள்..! :lol:

நெடுக்கு நீங்கள் பணியாற்றிய இடங்களில், வாழ்ந்த இடங்களில் பெண்களைக் கொச்சைப்படுத்தும் ஆண்கள் இல்லையா? அல்லது பெண்களைத் தங்கள் வலைக்குள் வீழ்த்திவிட்டு கை கழுவி விட்டவர்கள் இல்லையா? ஏதோ ஜேசுவும்,புத்தனும். நபியும், கிருஸ்ணனுக்கும் மட்டுந்தான் ஜீவகாருண்யம் பேசத் தெரிந்ததாய் சொல்கிறீர்கள். அங்கு கூட உதாரணத்திற்கு ஆண்களையே முதன்மையாக்கிப் பேசும் ஆதிக்கப் போக்கே உங்களிடம் புலப்படுகிறது. ஏன் உங்கள் தந்தையைக் காட்டிலும் உங்கள் தாயாரிடம் நீங்கள் மனித காருண்யத்தை அறிந்ததில்லையா? சரி இவை நம் கருத்துரையாடலுக்கு அப்பாற்பட்டவை.

மனித நாகரீகப்பண்பைப் பல பெண்கள் இழந்து போலித்தனமாகப் பிறரை ஏமாற்றுகிறார்கள் என்று நீங்கள் குறிப்பிடும் அந்தப் புள்ளிக்கே வருகிறேன்.பெண்களின் மனித நாகரீகமாக நீங்கள் கருதும் விடயம் யாது? அதில் போலித்தனம் என்பது ஏற்படுவது எதனால்?

நகைச்சுவையாக எழுதப்போய் நண்பர் நெடுக்காலபோவனை மாட்டி விட்டுட்டனோ, மன்னித்துக் கொள்ளவும்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் நேரடியாக தான் ஏமாற்றப்பட வில்லை என்கிறார்.மற்றவங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பார்த்து தெளிவுபெற்றேன் என்கிறார்.இந்த உலகத்தில் எத்தனைவீதம் பேர் பிரமச்சாரிகளாக வாழுகிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள நெடுக்கருக்கு

ஆழ்ந்த அனுபவசாலி என்கின்றரீதியில் ஒரு அறிவுரை...

பெண் இல்லாத வாழ்க்கை வெறுமைக்கு சமன்.

வாழ்க்கையில் 99வீத சந்தோசத்தை இழந்து கொண்டிருக்கின்றீர்கள்

செயல்முறை விளக்கம் தர உள்ளே செல்லுங்கள்

தேனை கேட்டறிந்து எழுதினால் எப்படி இருக்கும்

அதைத்தான் உணர்த்துகிறது தங்களது எழுத்து.

இல்லையென்றால் பிழை பெண்களிடமில்லை

தங்களிடமே

ஏதாவது ஒரு வைத்தியரை உடன் பார்க்கவும்

நல்ல வைத்தியரோ.... விசேசபடிப்பு படித்த வைத்தியரோ தேவையற்றது இதற்கு....

நன்றி

ஆமால்ல பிகரு நல்லா இருக்கில்ல..! எதுக்கும் உங்க ஆத்துக்காரியை கூட்டிக்கொண்டு வந்து வைச்சுக் கொண்டு சொல்லுங்கோ..! இன்னும் நல்லா இருக்கும்..! :D :D

மணமானால் அழகை ரசிக்கக்கூடாது என்று ஏன் நினைக்கின்றீர்கள்

ருசிக்கக்கூடாது என்பதை ஒத்துக்கொள்கின்றேன்

எனது மனைவியின் கருத்தும் இதுதான்

FRANCE வரும்போது சொல்லுங்கள் நேரிலேயே கேட்டுக்கொள்ளுங்கள்

ஒரு திறந்த புத்தகம் யான்....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் நாலு பேருக்குள் தேர்தல் நடத்தி அதில் 3பேர் நல்லவர்கள் என்பதற்காக 75% நல்லவர்கள் என்று முடிவு கட்டுகீறீர்கள். நான் பரந்து பட்டு சமூகத்தின் பல இடங்களிலும் அவதானித்ததன் அடைப்படையில் 400 பேரை மாதிரி ஆக்கி தேர்தல் நடத்துகிறேன். அதில் 320 பேர் கெட்டவங்க. இதில் எது கூடிய திருத்தமானது தீர்மானித்துக் கொள்ளுங்கள்..!

ஐயோ...அண்ணா... 320 கெட்டவரா? நீங்கள் எங்கேனும் ஜெயிலுக்க இருக்கறீங்களே? எனக்கு அந்த 3 நல்ல ஆக்களுமே போதும் சாமி. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாருக்கும் ஆப்பு குடுக்கிற நெல்லையனுக்கே ஆப்பா அச்சச்சோ

உங்களை எந்த பெண்ணும் ஏமாற்றவில்லை எனும் போது நீங்கள் சந்தித்த எல்லா பெண்களும் நல்லவர்கள் தானே .

எல்லா பெண்ணும் அடிப்படையில் நல்லவள்தான் .சிலஆண்கள் தான் அவளை தவறான பாதைக்கு மாற்றி விடுகின்றனர் .

பின் ஆண்களே பெண்ணின் மீது பழியை போட்டுவிட்டு தப்பித்து கொள்கின்றனர் .காதல் என்ற பேரில் பல பெண்களின் வாழ்க்கை

கேள்விக்குறியாகியிருக்கிறது .காதலுக்காக உயிர் விட்ட பெண்கள் எத்தனையோ .......இங்கெல்லாம் ஏமாற்றியது யார் ?ஆண்கள் நல்லவர்களாக

வாழும் வரை பெண்களும் நல்லவர்களே .............என்னதான் விமர்சனம் செய்தாலும் கடைசியில் உங்களின் வாழ்க்கையில் புது வசந்தத்தை கொண்டு வரப்போவது ஒரு பெண்தான் பெண் மட்டும்தான் ..............

நான் கடந்து வந்த பாதை என்பது என் சொந்த வாழ்க்கைப் பாதையில் என்ற அர்த்தத்தில் அல்ல. என் வாழ்க்கையில் நான் பயணித்த இடங்களில் வாழ்ந்த இடங்களில் சேவையாற்றிய இடங்களில் என்று பல வகைப்படும்.

நான்... பெண்கள் என்னை ஏமாற்ற இன்னும் இடமளிக்கவில்லை. அளித்திருந்தால் நானும் ஏமாற்றப்பட்டிருப்பேன்.

உங்களை எந்த பெண்ணும் ஏமாற்றவில்லை எனும் போது நீங்கள் சந்தித்த எல்லா பெண்களும் நல்லவர்கள் தானே

எல்லா பெண்ணும் அடிப்படையில் நல்லவள்தான் .சிலஆண்கள் தான் அவளை தவறான பாதைக்கு மாற்றி விடுகின்றனர் .

பின் ஆண்களே பெண்ணின் மீது பழியை போட்டுவிட்டு தப்பித்து கொள்கின்றனர் .காதல் என்ற பேரில் பல பெண்களின் வாழ்க்கை

கேள்விக்குறியாகியிருக்கிறது .காதலுக்காக உயிர் விட்ட பெண்கள் எத்தனையோ .......இங்கெல்லாம் ஏமாற்றியது யார் ?ஆண்கள் நல்லவர்களாக

வாழும் வரை பெண்களும் நல்லவர்களே .............என்னதான் விமர்சனம் செய்தாலும் கடைசியில் உங்களின் வாழ்க்கையில் புது வசந்தத்தை கொண்டு வரப்போவது ஒரு பெண்தான் பெண் மட்டும்தான் ..............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.