Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களை வேவுபார்த்த சிறீரங்கா: கொழும்பு இணையத்தளம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களை வேவுபார்த்த சிறீரங்கா: கொழும்பு இணையத்தளம்

திகதி: 20.02.2010 // தமிழீழம்

சக்தி தொலைக்காட்சியில் மின்னல் எனப்படும் தமிழ் நிகழ்ச்சியை வழங்கிவரும் சிறீரங்கா என்பவர் சிறீலங்கா அரசின் இரட்டை முகவராக தொழில்பட்டு வருவதாக கொழும்பு இணையத்தளம் ஒன்று ஆதாரத்துடன் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிரச தொலைக்காட்சியின் துணை நிறுவனமாக இயங்கும் தமிழ் தொலைக்காட்சியான சக்தி தொலைக்காட்சியின் தயாரிப்பாளரான சிறீரங்கா துணிச்சலாக அரசை விமர்சித்து வருவதாக தமிழ் மக்கள் நம்பிவருகின்றனர்

அவரால் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும் மின்னல் எனப்படும் நிகழ்ச்சி தமிழ் மக்கள் மத்தியில் அதிக கவர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அரசுக்கு அச்சமின்றி அவர் உண்மையை கூறுவதாக பலர் கருதினார்கள்.

ஆனால் உண்மை மறுதலையானது, மகிந்த ராஜபக்சாவின் மூத்த புதல்வர் நமால் ராஜபக்சாவின் அமைப்பான தருன்யட்ட ஹெடக் என்ற அமைப்பின் நிறைவேற்று அதிகாரமுள்ள உறுப்பினராக சிறீரங்கா செயற்பட்டு வருகின்றார். அவர் நமால் ராஜபக்சாவுடன் நெருக்கமாக இணைந்து செயற்பட்டு வருகிறார். தமிழ் மக்களை இரண்டாம் தர பிரஜைகளாக சித்தரித்து நாமலை அடுத்த தலைவராக்கும் முயற்சியில் சிறீரங்கா ஈடுபட்டு வருகின்றார்.

சிறீலங்கா மகிந்தாவையோ அல்லது நாமாலையோ ஆதரிப்பது அவரின் தனிப்பட்ட உரிமை, ஆனால் தமிழ் மக்களால் நல்லவர் என நம்பப்படும் ஒருவர் அவர்களை ஏமாற்றுவது துன்பமானது.

இங்கு சில புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அவை உண்மையான கதையை உங்களுக்கு எடுத்துச் சொல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படங்களுக்கும் மூலத்துக்கும்: சங்கதி

Edited by நிழலி
செய்தியை முழுமையாக இணைக்க

  • கருத்துக்கள உறவுகள்

உவர் மாறி இப்ப எவ்வளவோ காலமாயிட்டுது, தலைநகர் வாழ் தமிழர்களுகு இது ஒரு புதிய செய்தியல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவரும் துரோகியே! நடக்கட்டும்............. :)

2005 ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சவுக்கு தமிழ் அரசியல் ஆலோசகராக இருக்க ஆரம்பித்தவர் ஸ்ரீ ரங்கா. இன்றுவரை அவர் அதை தொடர்வதாக கேள்வி.

அப்போது தமிழ் மக்கள் தேர்தலை பகிஸ்கரிக்க, ரணில் தோற்றதாக கதை உலாவுவது எல்லாருக்கும் தெரிந்த விடயம் தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2005 ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சவுக்கு தமிழ் அரசியல் ஆலோசகராக இருக்க ஆரம்பித்தவர் ஸ்ரீ ரங்கா. இன்றுவரை அவர் அதை தொடர்வதாக கேள்வி.

அப்போது தமிழ் மக்கள் தேர்தலை பகிஸ்கரிக்க, ரணில் தோற்றதாக கதை உலாவுவது எல்லாருக்கும் தெரிந்த விடயம் தான்.

ஸ்ரீ ரங்கா றீ யூசபிள் கருவேப்பிலை :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீ ரங்கா றீ யூசபிள் கருவேப்பிலை :):lol:

எனக்கு தெரியாது உங்களின் வீட்டில் குப்பையில் போட்ட கருவேப்பிலையை திருப்பி கறிக்கு போடுவார்கள் என. :D:D வேறு உதாரணம் தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

உவர் இப்போ என்ன சொல்ல முற்படுகிறாரோ?

SriRangawithNamal1.jpg

SriRangawithNamal21.jpg

Edited by சுனாமி

  • கருத்துக்கள உறவுகள்

சில உண்மைகளை சொல்ல வேண்டிய தருணம் இது ....இந்த ரங்கா எனது ஆசிரிய நண்பனின் மாணவன் ...இந்த ரஙகா வகுப்பில் கடை நிலை மாணவன் . இவருக்காக குதிரை ஓடி பல்கலைககழகம் புக வைத்தவர் இன்னுமொரு ஆசிரியர் ( இது 20 வருடங்களுக்கு முதல் நடந்தவை)அந்த ஆசிரியரும் ஒரு அரசியல்வாதி , ஆனாலும் அவர் இப்பொது அடிக்கடி இதை தனது நண்பர்களிடம் கூறி வருத்தப் படுகிராம். அந்த ஆசிரியர் ஆசிரிய தொழிலையும் இழந்து , அரசியலிலும் ஒதுகக்ப்பட்டு( இவர் ஆனந்த சன்கரியுடன் இணைந்து தேர்தலுலுல்ம் போட்டியிட்டவர்) , ஏயென்சி வேலையும் இழ்ந்து ,இறுதியாக இன்கிலாந்துக்கு அகதியாக புலம் பெயர்ந்து , திருப்பியனுப்பப் பட்டு தற்போது எல்லாம் இழந்து தெருவுக்கு வந்த நிலையில் .....இந்த ரங்கா திரும்பியும் பார்க்கவில்லையாம் (இது கடந்த வருடம்). முதல் குற்றவாளி தண்டிக்கப்பட்டு விட்டார் , அடுத்த குற்றவாளியும் இதே நிலைக்கு வருவார் என்று ஆசிரிய நண்பர் அறுதியாக நம்புகிறார்.( பெயர்கள் எதனையும் குறிப்பிடவில்லை ஆனால் அனத்தும் உண்மை)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கட்சி கூட்டமைப்பின் இன்றைய நிலைப்பாடும் தமிழ் மக்களும் என்ற தலைப்பில் நீண்ட கட்டுரை ஒன்று எழுதிக்கொண்டு இருக்கிரேன் மிக விரைவில் அது ஊடகங்களில் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஊரவன்,

நீங்கள் சொல்லும் அந்த ஆசிரியக் கொழுந்தை எனக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். அதே காலத்தில் நானும் அந்த கல்வி நிலையத்தில் பயின்று வந்தேன். ரங்கா அடிக்கடி மொரட்டுவைப் பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்த தனது பொறியியல்த்துறை நண்பர்களைச்(சி.ஐ.எம்.ஏ ஒன்றாகப் படித்ததில் பழக்கம்) சந்திக்க வருவதுண்டு. உண்மையான நோக்கம் நண்பர்கள் அல்ல, மாறாக இலவசத் தண்ணியும் சாப்பாடும்தான். தண்ணி போட்டால் என்ன செய்கிறோம் என்ன பேசுகிறோம் என்று கூடத் தெரியாமலிருக்கும் இவர் இன்று அரசியல் வியாக்கியானமும், ஆலோசகரும்!!!!!!!!

இவரைப்பற்றி நாம் முன்னரே தெரிந்து வைத்திருந்தோம். அதனால் மகிந்தவின் தமிழ் ஆலோசகர் பதவி கிடைத்தபோது நாம் வியப்படையவில்லை.

சரியான கோடரிக் கம்பு !!!!!

:) சம்பந்தர் இயங்குவது இந்தியாவின் இயக்கத்தில். அதைத்தவிர அவரால் வேறு எதையுமே செய்ய முடியாது. அப்படிச் செய்ய முனைந்தால் ஆளே இருக்க மாட்டார். அவரை விடுங்கள், பாவம் எத்தனை பேர்தான் அவரை ஆட்டுவிப்பது.

உவரும் துரோகியே! நடக்கட்டும்............. :lol:

கவலை வேண்டாம் உங்கட இடத்துக்கு அவர் வர நீண்ட நாள் ஆகும். :)

ஆனால் தமிழ் மக்களால் நல்லவர் என நம்பப்படும் ஒருவர் அவர்களை ஏமாற்றுவது துன்பமானது
.

சிங்களவனுக்கு எதிராக ஆயுதம் தூக்கின,

சிங்களவனுக்கு எதிராக வீரவசனம் பேசின,

சிங்களவனுக்கு எதிராக கட்டுரை எழுதின

எல்லா புறம்போக்குகளையும் கண்ணை மூடிக்கொண்டு அம்மாண்,தளபதி,ராஜதந்திரி,அரசியல் தீர்க்கதரிசி,அரசியல் ஆய்வாளர் என்று புலம்பிக்கொன்டிருந்த எங்களுக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும்

கொழும்பு இணையத் தளமும், சங்கதியும் இதை கண்டுபிடிச்சு சொல்லும் வரைக்கும் தமிழ் மக்களுக்கு ஒன்றும் தெரியாதோ? சாத்திரி அண்ணை எழுதின அன்பான சிலோன் தமிழ் மக்க(ர்க)ளே என்று எழுதின கதையின் தலைப்புத்தான் இதை வாசிக்க நினைவு வருகிது.

சுனாமி, பிரபல தமிழ் ஊடகம் ஒன்றில பணியாற்றுபவரை தமிழ் மக்களை வேவு பார்க்கிறார் என்று சொல்லப்பட்டு இருக்கிது. வேவு பார்க்கிறது - Spying என்றால் அர்த்தம் என்ன? தமிழ் மக்களை வேவு பார்க்கிறதுக்கு தமிழ் மக்கள் எல்லாரும் என்ன எவ்.பி.ஐ இலையா வேலை பார்க்கறீனம்? நடுநிலமையாக அல்லாது ஒரு குறிப்பிட்ட தரப்புக்கு ஆதரவாக இயங்கினார் என்கின்ற பதத்தை பயன்படுத்தி இருக்கலாம்.

சுனாமி, பிரபல தமிழ் ஊடகம் ஒன்றில பணியாற்றுபவரை தமிழ் மக்களை வேவு பார்க்கிறார் என்று சொல்லப்பட்டு இருக்கிது. வேவு பார்க்கிறது - Spying என்றால் அர்த்தம் என்ன? தமிழ் மக்களை வேவு பார்க்கிறதுக்கு தமிழ் மக்கள் எல்லாரும் என்ன எவ்.பி.ஐ இலையா வேலை பார்க்கறீனம்? நடுநிலமையாக அல்லாது ஒரு குறிப்பிட்ட தரப்புக்கு ஆதரவாக இயங்கினார் என்கின்ற பதத்தை பயன்படுத்தி இருக்கலாம்.

உவரும் துரோகியே! நடக்கட்டும்............. :lol:

....ஜி, நானும் உதைத்தான் திரும்பத்திரும்ப சொல்கிறேன், உந்தப் பட்டமளிப்புகளால் உங்கடை/எங்கடை அத்தியடியத்தான் கூட்டல்லாம் எஸ்கேப்பாக இவர்கள் சந்தர்ப்பம் ஏற்படுத்துகிறார்கள். இல்லையா????? :)

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு இணையத் தளமும், சங்கதியும் இதை கண்டுபிடிச்சு சொல்லும் வரைக்கும் தமிழ் மக்களுக்கு ஒன்றும் தெரியாதோ? சாத்திரி அண்ணை எழுதின அன்பான சிலோன் தமிழ் மக்க(ர்க)ளே என்று எழுதின கதையின் தலைப்புத்தான் இதை வாசிக்க நினைவு வருகிது.

சங்கதி இணையத்தளம்தான் இப்பொழுது புலம்பெயர் தேசத்து தமிழ் மக்களின் பெரிய புலனாய்வு நிறுவனமாக இயங்குகிறது..இப்படி புதிது புதிதாக கண்டு பிடிக்கிறார்கள்..மச்சான் நீங்கள் சொன்னது போல குறிப்பிட்ட நபர் இலங்கை ஆழும் கட்சியுடன் நெருங்கியதொடர்பு கொண்டுள்ளார் என்பது செய்தியாக இருக்கலாம்..பொது மக்களை உளவு பார்ப்பதற்கு என்ன இருக்கிறதோ தெரியவில்லை..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போது மிகமலிவான பட்டம் என்னவென்றால் ஏதாவதுஒரு வெளிநாட்டு(சிறீலங்கா உட்பட) புலனாய்வுக்கு வேலைசெய்பவராக ஒருவரை எழுதுவது அல்லது சொல்வதுதான்.

இதனால் உண்மையான புலனாய்வு ஆட்கள் தப்பிவிட சாத்தியம் உள்ளது.

அதுசரி,சிறீரங்காவுக்கு தமிழ்ஆட்களை உளவுபார்க்க தேவைஏதும் இல்லாதுவிட்டால்

ஏன் சங்கதிக்கு அந்த தேவை வருகிறது.

யார் யார் புலனாய்வு சான்றுகொடுக்கவும் யாருக்கு சாத்தியம் உள்ளது.

எல்லாம் ஒரு காழ்ப்புத்தான்

....ஜி, நானும் உதைத்தான் திரும்பத்திரும்ப சொல்கிறேன், உந்தப் பட்டமளிப்புகளால் உங்கடை/எங்கடை அத்தியடியத்தான் கூட்டல்லாம் எஸ்கேப்பாக இவர்கள் சந்தர்ப்பம் ஏற்படுத்துகிறார்கள். இல்லையா????? :D

"....ஜி" இதன் அர்த்தம் யாருக்காவது புரிகின்றதா. பழக்கதோசம் இங்கையும் வந்துவிட்டதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.