Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு கடந்த தமிழ் ஈழ அரசு தொடர்பாக உமது கேள்விகளை இங்கே பதியவும்

Featured Replies

நீங்களும் சொல்கின்றீர்கள்

உருத்திரகுமாரும் சொல்கின்றார்

எல்லாம் ஒன்றே என்று.

ஆனால் ஊடகங்களும் வரும் செய்திகளும் அறிக்கைகளும் மக்களை பீதிகொள்ள வைக்கின்றன.

எனவே கேள்விகளும் பிளவுகளும் தோன்றுகின்றன.

மக்கள் குழம்புகின்றனர் என்றோ மக்கள் தெளிவில்லாமல் இருக்கின்றனர் என்றோ சொல்லவேண்டாம்

ஏனெனில் தங்களது அழைப்புக்கு 99 வீதமான மக்கள் ஆம்என்று உறுதி கூறியுள்ளனர்.

எனவே பிரச்சினை தங்களுக்குள் மட்டுமே.

எனவே நீங்கள் அனைவரும் ஒன்று கூடி பேசுவதுடன் அனைவும் இணைந்த ஒரு அறிக்கை தங்களுடைய படங்களுடன் செய்தியாக வந்தால் மட்டுமே இவை ஒரு உறங்குநிலைக்கு வரும்

அதை முதலில் செய்யுங்கள்

இது போன்ற கூட்டங்களுக்கு முன் செய்யவேண்டியது இதுதான் என்று சொன்னேன்

சுட்டமண்ணும், பச்சைமண்ணும் ஒட்டாது.

வேறு வேறாக இருப்பதுதான் பயன்பாட்டுக்குரியதாக இருக்கும்.

ஒற்றுமை என்ற வெற்று வார்த்தை பேசி காலத்தைக் கரைப்பதை நிறுத்துவோம்.

அரசு, அமைப்பவர் அரசமைக்கட்டும்.

அவை அமைப்பவர்கள் மக்களவை அமைக்கட்டும்.

அவையும், அரசும் அமைப்பதாக கதைத்து காலத்தைக் கரைத்துக் கொண்டு இருப்பதற்கு முற்றுப்புள்ளி இடவேண்டும்.

Edited by kalaivani

நாடு கடத்த அரசு தொடர்பான செய்திகளை வெளியிட .... தமிழ்த்தேசிய ஊடகமான "தமிழ்நெற்" .... வெட்கப்படுகிறது! ஏன்??

இலங்கை அரசு ... புலத்திலும்/களத்திலும் தலைமை தொடக்கம் அடி வரை எல்லோரையும் முட்டாள்களாக்கிய ... கேபிக்கும், இத்த நாடு கடந்த அரசுக்கும் தொடர்பிருபதாக வதந்திகளை கிளப்பி விடுகிறது!! இதை புலத்திலுள்ள தமிழ்த்தேசியத்தின் தூண்களே ... வதந்தியை காவுகிறார்கள்!! ... இவ்வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படல் வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டமண்ணும், பச்சைமண்ணும் ஒட்டாது.

வேறு வேறாக இருப்பதுதான் பயன்பாட்டுக்குரியதாக இருக்கும்.

ஒற்றுமை என்ற வெற்று வார்த்தை பேசி காலத்தைக் கரைப்பதை நிறுத்துவோம்.

அரசு, அமைப்பவர் அரசமைக்கட்டும்.

அவை அமைப்பவர்கள் மக்களவை அமைக்கட்டும்.

இல்லை

இப்போதே பிழையான பாதைகளில் பயணம் செய்ய முடிவெடுத்தால்.

தண்டவாளத்தின் கதைதான்

ஒன்றுக்குள் வாருங்கள்

அல்லது

தூக்கி எறியப்படுவீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மக்களின் அபிலாசைகளை முற்றுமுழுதாக வென்றெடுக்கும் நெடிய பயணத்தில் கடைசிவரைக்கும் இணைந்திருந்து போராட முடியாத சூழ்நிலை தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்டுவிட்டது எமது துர்ரதிஸ்டமே. தேசிய தலைவர் எமக்குக் காட்டிய அந்த மிகுதி வழியையும் கடந்து சென்று எமது மண்ணை வென்றெடுக்க ஒருங்கிணைந்து செயற்படுவோம். எமது பாதையில் நாம் கொடுத்தவிலை மிகப் பெரியது. அதற்காக அழுது காலத்தைக்கடத்தவும் முடியாது. கண்ணை மூடிக்கொண்டு எவரையும் பின்தொடர்ந்து செல்லவும் முடியாது. இதுவரை நாம் சென்ற பாதையில் மோசடிகாரர்களையும் போலி வேடதாரிகளையும் நாம் சந்தித்தது உண்மை ஆனால் அவர்களால் எமது தொடர்ச்சியான பயணத்திற்கு முடிவுரை எழுதப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. புதிய மார்க்கமொன்றைத் தேர்ந்தெடுப்போம். அது சர்வதேச சமுகத்தால் அங்கீகரிக்கப்பட்டதாகவும் ஜனநாயக கோட்பாடுகளைப் பேணுவதாகவும் இருக்கட்டும். அது அனைத்து தமிழ்மக்களையும் அரவணைத்து இணைத்துக்கொண்டு அவர்களின் குரலுக்கு செவிசாய்ப்பதாகவும் இருக்கட்டும். தன் நிகழ்ச்சி நிரலை சாதாரண குடிமகனுடன் பகிர்ந்து வெளிச்சம்போட்டு காட்டட்டும். எல்லாவற்றிற்கும் மேலாக எமக்கும் பெரிய தார்மீகக் கடமை காத்திருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுவோம். உண்மையானது எது எமக்கு நன்மையானது எது என்பதை நாமாகவே தேடிக் கண்டறிய முயல்வோம். எவரும் அதை எம்மீது திணிப்பதற்கு அனுமதியோம். இது நாம் வழிப்புடனும் அவதானமுடனும் இருந்து செயற்படவேண்டிய காலம்.

tamileelam.jpg?rnd=0.2794758423464897&sizeM=3

Edited by vanangaamudi

புலத்திலும்ஃகளத்திலும் தலைமை தொடக்கம் அடி வரை எல்லோரையும் முட்டாள்களாக்கிய ... கேபிக்கும்இ இத்த நாடு கடந்த அரசுக்கும் தொடர்பிருபதாக வதந்திகளை கிளப்பி விடுகிறது!! இதை புலத்திலுள்ள தமிழ்த்தேசியத்தின் தூண்களே ... வதந்தியை காவுகிறார்கள்!! ... இவ்வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படல் வேண்டும்

நாடு கடந்த தமிழரின், தமிழீழ அரசை அறிவித்தவரே கேபி தானே!

இப்போது அரசு அமைக்க முயற்சிக்கும் குழுவைத் தெரிவு செய்தவரும் அவரே!

எனவே இப்பேது அரசு அமைக்க முயற்சிக்கும், அவரால் தெரிவு செய்யப்பெற்ற குழுவினருடன், கேபி தொடர்பில் இருக்கலாம் என்பது தான் கேள்வி?

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தீவில் தமிழர்களின் பாரம்பரிய பூமி சிங்கள மயப்படுத்தப்பட்டு இலங்கைத் தீவு முழுவதும் சிங்களவர்களுக்கே உரித்தானது என்று உரிமை கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில்.. இலங்கைத் தீவில் தமிழர்களுக்கும் ஒரு தாயக நிலம் இருந்தது.. இருக்கின்றது என்பதை தமிழர்களுக்கே நினைவுபடுத்தவாவது இந்த நாடு கடந்த தமிழீழ அரசு அமைவது அவசியம்..! நம்மவர்களுக்கே தமது நிலை என்னென்று இன்னும் புரியவில்லை. அப்படி இருக்கும் நிலையில் நாடு கடந்த தமிழீழ அரசின் தேவை அத்தியாவசியம் என்பதே எனது கருத்து. இதனை எக்காரணம் கொண்டும் எவரும் கைவிட முயலக் கூடாது.

Edited by nedukkalapoovan

இல்லை

இப்போதே பிழையான பாதைகளில் பயணம் செய்ய முடிவெடுத்தால்.

தண்டவாளத்தின் கதைதான்

ஒன்றுக்குள் வாருங்கள்

அல்லது

தூக்கி எறியப்படுவீர்கள்

காலப்போக்கில் தவறானது தூக்கி எறியப்படவேண்டும் என்பது தான் எனது நிலைப்பாடும்.

எனவே அமைப்பது எல்லாவற்றையும் அமைத்துவிட்டு செயற்பாட்டுக்கு வரவேண்டும்.

விளையாட்டுப்போட்டி அல்லது அணி பிரித்து விளையாடுவதற்கு.

சர்வதேச அரசியல் செய்போகின்றார்களா, அல்லது தமிழருக்குள் அரசியல் செய்யப்போகின்றார்களா?

காலம் காத்திருக்கின்றது, தீர்ப்புச் சொல்வதற்கு.

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை ஐயா

எல்லோரும் ஒரே குரலில் எடுத்துக்கூறி இவர்களை இப்பொழுதே ஒரு வழியில் பயணப்பட வைக்கவேண்டும்

இல்லையென்றால் எல்லாவற்றிற்குள்ளும் பொறிகள் வைக்கப்பட்டுவிடும்

அதற்குள் எது எது நல்லது கெட்டது தெரியாது போய்விடும்

நாமே காட்டிக்கொடுத்து அடிபட்டுக்கொள்வதாக முடியும்

Edited by விசுகு

நாடுகடந்த அரசுக்கான அரசியல் யாப்பை தற்போது நடைபெறும் தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளே உருவாக்கப் போகிறார்கள்.இந்த மக்கள் பிரதிநிதிகள் சபை உருவானதும் இப்போதுள்ள அமைப்புக்குழு ஆலோசனைக் குழுக்கள் எல்லாம் செயலிழந்து போகும்.புதிய அரசில் அமைப்புச் சட்டமே இந்த அரசின் அனைத்தச் செயற்பாடுகள் மற்றும் சர்வதேச உறவுகள் நிர்வாகக் கட்டமைப்புகள் என்பன உட்பட அனைத்துவிடயங்களையும் வரையறுக்கும். தவறிழைக்கும் எதிரியிடம் சோரம் போகும் உறுப்பினர்களை திருப்பி அழைக்கும் அதிகாரம் புதிய அரசியல் சட்டத்தில் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே அதற்கு முன்னர் இந்த அரசு இந்தியாவுடன் இணைந்து போகப்போகிறது இதை அவர் வழி நடத்தப் போகிறார் இந்த அரசின் கொள்கை இப்படித்தான் என்பதெல்லாம் இந்த அரசைப்பற்றி அவரவர்கள் புரிந்து வைத்திருக்கின்ற அளவைப் பொறுத்ததேயாகும்

  • கருத்துக்கள உறவுகள்

நவம்

கரின் பேக்கருடனான கருந்துரையாடலுக்கு வந்திருந்தீர்களா...?

இல்லை நண்பரே எனக்கு அதற்கு வருவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை..இப்போது நாடுகடந்த தமிழீழ அரசின் பிரான்சுக்கான ஏற்பாட்டுக் குழுவில் நானும் இருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வட்டுக்கோட்டைத்தீர்மானத்திற்கும் வாக்களித்தேன்.

நாடு கடந்த தமிழீழ அரசிற்கும் வாக்களிப்பேன்.

இரண்டும் ஈழமக்களின் இரண்டு கண்கள் போன்றது.

இது எனது தனிப்பட்ட கருத்து.

நான் யாருக்கும் அறிமுகமில்லாதவன்.

யார் பக்கமும் சாராதவன்.

வாத்தியார்

.............

  • கருத்துக்கள உறவுகள்

வருமுன் காப்பது எப்போதுமே சாலச்சிறந்தது.

ஆனாலும் இப்படியெல்லாம் வரும் அப்படியெல்லாம் வரும்

என்று நினத்துக்கொண்டிருந்தால் வீட்டுக்குள்ளேயே முடங்கித்தான்

இருக்க வேண்டும்.

வாத்தியார்

...............

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வாத்தியார்

தங்கள் கருத்துத்தான் எனது கருத்தும்

வேறு வழி.....?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினம் தற்போதுள்ள நிலையில் நாடு கடந்த அரசு அவசியமானதாகும்.அதே நேரம் வட்டுக் கோட்டைத் தீர்மானத்திற்கு மக்கள் அவை அறைகூவல் விடுத்த பொழுது மக்கள் ஒருமித்த கருத்தில் தங்கள் நிலைப்பாட்டினைத் தெரிவித்தார்கள்.நாடுகடந்த அரசிற்கான தேர்தலின் போதும் மக்கள் தம் கருத்தைத் தெளிவாகத் தெரிவிப்பார்கள் என்பது திண்ணம்.ஆக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.மக்கள் எந்தப் போராட்டத்திற்கும் தயாராக இருக்கிறார்கள்.அமைப்பாளர்கள்தான் தங்களுக்குள் முரண்படுகிறார்கள்.இது மிகவும் ஆபத்தானது. இரண்டு அமைப்புக்களுமே இயங்கட்டும்.ஆனால் எங்கள் போராட்ட இலட்சியங்கள் ஒன்றாக இருக்க வேண்டும்.இந்த நேரத்தில் நாம் ஒற்றுமைப்படத் தவறுவோமாயின் வரலாற்றில் நாங்கள் மிகப் பெரிய தவறிளைத்தவர்களாவோம்.ஒற்றுமையே பலம்.

நானும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு வாக்களித்தேன் நாடுகடந்த தமிழீழ அரசுக்கும் வாக்களிப்பேன்.தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றைக் குறிக்கும் கோட்பாட்டை நாம் அழிய விடாது பாதுகாக்க இவை மிகவும் அவசியமானது.தமிழீழக் கோட்பாட்டை அழிய விடாது பாதுகாக்க வேண்டும். தொடர்ந்து வரும் சந்ததிகளுக்கும் காவிச் செல்ல வேண்டும். காலம் கனியும் போது சர்வதேசத்தின் நலனுடன் தமிழீழத்தின் நலன் ஒன்று சேரும் காலம் ஒருநாள் வரும் அப்பொழுது எமது இலட்சியத்தை நிறைவேற்றுவோம்.

நாளை நண்பர் ஒருவர் நாடுகடந்த அரசியல் பிரிவுடன் பேட்டி எடுக்க உள்ளார் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு தொடர்பாக உமது கேள்விகளை இங்கே பதியவும்;அவற்றிற்கு பதில்களை பெற நாம் முயற்சிக்கிறோம்...

--நன்றி---

மன்னிக்கவும் எனக்கு சிந்திக்கிற திறன் கொஞ்சம் குறைவு, இதனால கேள்வி ஒண்டும் மண்டைகிலால வர இல்லை.

+++

உங்கட நண்பர் நாளை கேள்வி கேட்பதாய் மார்ச்23ம் திகதி எழுதி இருக்கிறீர். இண்டைக்கு இருவத்து நாலாம் திகதி. நாளைக்கு மார்ச்25 இஞ்ச கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடையை நீர் தரவேணும். இல்லாட்டிக்கு மவனே தராக்கி தெரியும்தானே என்ன நடக்கும் எண்டு.. வேற ஒண்டும் இல்லை.. நாங்கள் ஒண்டும் கேட்கமாட்டம். இண்டைக்கு என்ன எழுதினம் எண்டுறதே நினைவில இல்ல. பயப்பிடாதையும் தராக்கி.

Edited by மச்சான்

  • தொடங்கியவர்

மன்னிக்கவும் எனக்கு சிந்திக்கிற திறன் கொஞ்சம் குறைவு, இதனால கேள்வி ஒண்டும் மண்டைகிலால வர இல்லை.

+++

உங்கட நண்பர் நாளை கேள்வி கேட்பதாய் மார்ச்23ம் திகதி எழுதி இருக்கிறீர். இண்டைக்கு இருவத்து நாலாம் திகதி. நாளைக்கு மார்ச்25 இஞ்ச கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடையை நீர் தரவேணும். இல்லாட்டிக்கு மவனே தராக்கி தெரியும்தானே என்ன நடக்கும் எண்டு.. வேற ஒண்டும் இல்லை.. நாங்கள் ஒண்டும் கேட்கமாட்டம். இண்டைக்கு என்ன எழுதினம் எண்டுறதே நினைவில இல்ல. பயப்பிடாதையும் தராக்கி.

நிச்சயமாக ஞாயிற்றுக்கிழமைக்குள் பதிலகள் வரும்..

நல்லது, யாரிட்ட பேட்டி காணப்படுகிது எண்டு அவர் பெயர், பதவிகளையும் போடுங்கோ, அப்பத்தான் விளக்கமாய் இருக்கும். :(

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது, யாரிட்ட பேட்டி காணப்படுகிது எண்டு அவர் பெயர், பதவிகளையும் போடுங்கோ, அப்பத்தான் விளக்கமாய் இருக்கும். :D

தராக்கி ஐசூர்யாவைப் பேட்டி எடுப்பார்..! :D:(

எல்லாம் எப்பவோ முடிந்த காரியம்.

பத்து வருஷத்துக்கு முதல் தமிழ்நாட்டின் அடிமடியில் கைவைத்திருந்தால் இன்னேரம் ஈழம் சுதந்திரம் கிடைத்திருக்கும்.

நிச்சயமாக ஞாயிற்றுக்கிழமைக்குள் பதிலகள் வரும்..

இண்டைக்கு ஞாயிறு. இந்த ஞாயிறோ வாற ஞாயிறோ.. அடுக்கடுத்த ஞாயிறோ.. அடுக்குமடுத்த ஞாயிறோ.. :)

இண்டைக்கு ஞாயிறு. இந்த ஞாயிறோ வாற ஞாயிறோ.. அடுக்கடுத்த ஞாயிறோ.. அடுக்குமடுத்த ஞாயிறோ.. :)

:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.