Jump to content

அவள் பெயர் வசந்தி


Recommended Posts

அவன் வெற்றிமனையை அடைந்த போது நேரம் பதினோரு மணியை தாண்டி இருந்தது. கொளுத்தும் வெய்யிலின் வெம்மையினால் வழிந்த வியர்வையினை துடைத்து கொண்டு அந்த கட்டட முனையை தாண்டும் போது தான் அவளைக் கண்டான்.

எங்கிருந்து வந்தாள் என்று தெரியவில்லை. அவன் எதிர் பார்க்கவும் இல்லை. அவனை கட்டி அணைத்து கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டாள். "சிவா நேற்று அல்லவா வாறதாக சொன்னீர்கள். ஏன் இவ்வளவு தாமதம். உங்களுக்காக நான் காத்திருப்பேன் என்ற எண்ணம் கூட இல்லாத அளவுக்கு என்ன வேலை செய்து கொண்டு இருந்தீர்கள்". இவனை அவள் பேசவே விடவில்லை. "நாளைக்கு கல்யாணம் என்றீர்கள் ..இப்படியா தாமதமாக வாறது. நான் பயந்தே போய்விட்டேன் தெரியுமா" அவள் பேசி கொண்டே இருந்தாள். என்ன செய்வது என்றே புரியாமல் விழித்தான் கார்த்திக்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

வசந்தி.....மல்லாவியில் நடுத்தர குடும்பத்தில் மூத்தவளாக பெற்றோரின் செல்ல பிள்ளையாக வாழ்ந்த பூஞ்சிட்டு....வாழ்வில் வசந்தத்தை எட்டி பார்க்கும் வயதில் சிவாவின் மேல் காதல் வசப்பட்டாள். அவனின் தன்னம்பிக்கை, இரக்க குணம் , உறுதியே , அவளை அவன் மேல் மையல் கொள்ள வைத்தது என்று எப்பவுமே சிவாவுக்கு சொல்லி கொள்வாள். சொந்தமாக சிறிய உந்துருளி திருத்துமிடம் வைத்திருந்த சிவாவும் , கணவனை இழந்த தன் அம்மா, வறுமையுடன் போராடி கொண்டு படிக்கும் தன் உயிர் தங்கை மேல் எவ்வளவு பாசம் வைத்திருந்தானோ, அவ்வளவு காதலை வசந்தி மேலும் வைத்திருந்தான். நட்டாங்கண்டல் வீதி ஓரம் , யோகபுரம் மைதானம் அருகில், துணுக்காய் சந்தியடி, பாலையடி பாடசாலை அருகில் என்று இவர்கள் சந்திக்கும் இடம் மாறினாலும் இவர்கள் ஒருவர் மேல் கொண்ட காதல் மாறவே இல்லை.

அன்றும் அப்படி தான் அவர்களின் இரகசிய சந்திப்பை முடித்துவிட்டு திரும்பும் போது தான் வசந்தியின் தந்தையை எதிர்பாராது முட்டுப்பட(சந்திக்க) வேண்டி வந்தது. பிறகு என்ன.. காதல் வீட்டிலேயே பூகம்பமாக வெடிக்க , சாதி என்ற அரணை உடைக்க முடியாத சமுதாயத்தில் வளர்ந்த சராசரி தந்தையால் , வசந்திக்கு காதல் மீது தடையை மட்டும் தான் போட முடிந்தது. அது மட்டும் அல்ல.. எல்லா சினிமாவிலும் வருவதை போலவே வசந்திக்கு உடனடியாக சொந்ததிலையே வரனையும் பார்த்து விட்டார்.

அவர்களுக்கு வேறு வழியே இருக்கவில்லை....வீட்டை விட்டு ஓடுவதை தவிர. வசந்தி சிவாவின் வீட்டிலேயே அடைக்கலமானாள். இரண்டொரு நாளில் காவல்துறையின் அனுமதியுடன் திருமண நாளும் நிச்சயிக்கபட்ட போது தான்.. அவனை தேடி அந்த முறையும் வந்தது.

ஆம்.. அது எல்லைப்படைக்கான பணி அழைப்பு முறை. ஆனையிறைவை வெற்றி கொண்ட புலிவேங்கைகள் யாழை சுற்றி வளைத்து நின்றகாலம். அரியாலை கிழக்கு, நாவற்குழி, சாவகச்சேரி எங்கும் புலிகளின் படையணிகள் நிலை கொண்டு இருந்தன. ஜெயசுக்குறு மறிப்பு, தொடர்ச்சியான ஓயாத அலைகள் என்று போர் அரங்குகளால் காயமடைந்த புலிகளுக்கு ஈடு கொடுக்கவும், தொடர்ச்சியான போர் முறைக்கான அடிதளமாகவுமே முழுக்க முழுக்க மக்களை கொண்ட கட்டுமானமாக எல்லைப்படை படையணி உருவாகி இருந்தது. ஆரம்பத்தில் பின்தள பணிகளில் புலிகளுக்கு உறுதுணையாக நின்ற அவர்கள், நாளாக நாளாக புலிகளுக்கு ஈடாக சண்டை களங்களிலும், முன்னணி காவல் நிலைகளிலும் பங்கெடுத்தார்கள். மூன்று மாதத்துக்கு ஒரு முறை இரண்டு வார கடமையாக எல்லாருக்கும் பகிர்ந்தளிக்க பட்டிருந்தது எல்லைப்படை பணி. சிவாவுக்கு பணிக்கான முறை வந்ததும் திருமண நாளை கருத்தில் கொண்டு அவனது தாய், துணை தடுத்த போதும்.."இல்லை அம்மா இரண்டு வாரம் தானே உடனே போய்விடும் ..உதவி என்பது கேட்கும்போது செய்யவேண்டும். காலம் தாழ்த்தி செய்வதும் செய்யாமல் இருப்பதும் ஒன்று தான்" என்று மறுத்துரைத்து பணிக்கு தயாரானான். அன்பு காதலியிடம் முத்தமிட்டு விடைபெற்றான்.

அது நாகர்கோவில் முன்னணி நிலை... வெட்டவெளி , சுடுமணல், பக்கவாட்டாக ஆழிக்கடல்..கண்கள் எதிரியின் நிலைகளை குறிவைத்து நின்றாலும் மனமோ வசந்தியையே தேடியது. நாட்கள் மெதுவாகவே நகர்ந்தன. ஓய்வு நேரத்தில் தன் துணைக்கு மடல் எழுதினான். மீதி இருக்கும் நாளை குறிப்பிட்டு அதற்கு பிறகு தங்கள் வாழ்கையில் இடம் பெற போகும் இன்பங்களை பற்றியே நிறைய எழுதினான். எதிரி கூட அவள் மாதிரியே தெரிவதாக எழுதினான். உன் நினைப்பால் தூக்கம் வருவதில்லை.... அதனால் நீண்ட நேரம் காவல் கடமையில் இலகுவாக நிற்கமுடிவதாக காதலையும் காலத்தையும் இணைத்து எழுதினான். அவள் கலக்கத்தை போக்கவே பக்கம் பக்கமாக கதை எழுதினான். வரும் நாளில் வாசலில் நிற்கும் படி வேண்டி எழுதினான்.

காலை ஆறு மணியை தாண்டி இருந்தது ..ஆழகடலின் மேலே சூரியன் வர தொடக்கி இருந்தான். இருந்தாலும் அவன் மனம் இன்னும் கழிய போகும் ஆறு மணித்தியாலத்தையே நினைத்து ஏங்கியது. ஆம்.. பகல் பன்னிரண்டு மணியுடன் அவன் பணி முடிகிறது. நண்பர்களின் கேலியும் நக்கலுமாக பொழுது கழிந்து கொண்டிருந்த போது தான் அந்த வெடிச்சத்தம் கேட்டது.

"மச்சான் தண்ணி அள்ள போன சுமனுக்கு வெடிபட்டுவிட்டுதடா.. ஓடி வாங்கடா தூக்குவம்.." குரல் கேட்டு சிவாவும் தனது சுடுகலனுடன் சுமன் விழுந்திருந்த இடத்தை நோக்கி ஓடினான். எதிரியின் குறி சூட்டாளனுக்கு தெரியுமா..இவனுக்காக ஒரு பெண் காத்திருக்கிறாள் என்று.. ஆம் ..அவனது அடுத்த குறி சிவா மேலே விழுந்தது. சிவாவுக்கு தலை விறைத்தது.. கண்கள் இருட்டின. வசந்தியின் காதல் முகம் பளிச்சென்று தெரிந்து மறைந்தது. அந்த சுடு மணலை முத்தமிட்டவாறே தன்னுயிரை இந்த நாட்டுக்காக கொடுத்தான்.

"அம்மா ...உங்கள் மகன் லெப்.சிவாவாக இந்த மண்ணுக்காக தன்னுயிரை கொடுத்துவிட்டார்." அந்த அரசியல் துறை போராளி தட்டு தடுமாறி சிவாவின் வீரச்சாவை தாய்க்கு சொல்லி கொண்டிருந்தான். வசந்தியால் நிற்க முடியவில்லை. தலையை சுற்றி கொண்டு கீழே சரிந்தாள். தாயின் தங்கையின் ஒப்பாரிகளுக்கு நடுவே லெப்.சிவாவின் புகழுடல் விதைக்கபட்ட போதும் ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாமல் பிரமை பிடித்தவள் போலவே இருந்தாள் வசந்தி.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"தம்பி குறை நினைகாதீங்கள்..மல்லாவி தெருக்களில் யாரை கண்டாலும் சிவா என்று கட்டி அணைத்து திரிந்த வசந்தியை இங்கு இணைத்திருந்தார்கள். அவளால் இன்னும் அவள் காதலனின் இழப்பை ஏற்று கொள்ள முடியவில்லை" என்ற படியே அந்த வெற்றிமனையின் பராமரிப்பாளர் கார்த்திக்கை நோக்கி வந்தார்.

திடீர் என்று கார்த்திக்கை விட்டு விலத்திய வசந்தி .. அப்போது தான் உள் நுழைந்த இன்னொரு வாலிபனை நோக்கி ஓடினாள்.

"சிவா நேற்று அல்லவா வாறதாக சொன்னீர்கள். ஏன் இவ்வளவு தாமதம். உங்களுக்காக நான் காத்திருப்பேன் என்ற எண்ணம் கூட இல்லாத அளவுக்கு என்ன வேலை செய்து கொண்டு இருந்தீர்கள்".

அதே வசனம் ...........

குறிப்பு : தமிழர் தாயகத்தில் மனநிலை பாதிக்கபட்ட பெண்களுக்கான பராமரிப்பு இடமான வெற்றிமனை 2009 மாசி மாதம் 18 ஆம் நாள் சிங்கள வான்படையின் F-07 விமான குண்டுவீச்ச்க்கு உள்ளாகி இருபதுக்கும் மேற்ப்பட்ட உளநலம் பாதிக்கபட்ட பெண்களையும் பராமரிப்பாளர்களையும் இழந்தது. வசந்தியும் அவர்களில் ஒருவராக இருக்கலாம். இல்லை எங்காவது தடுப்பு முகாமில் உங்களையும் கட்டி அணைக்கலாம். நீங்களாவது சொல்லி புரியவைப்பீங்களா..அவள் சிவா வீரச்சாவு என்று ...

யாவும் கற்பனை அல்ல.. இக் கதையை தாயக விடுதலைக்காக தங்களை ஆகுதி ஆக்கிய 279 எல்லைப்படை மாவீரர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பவத்தை கதையாக் பகிர்ந்த உங்களுக்கு நன்றி.......

Link to comment
Share on other sites

கதை நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள்.

இந்த கதையை எழுதும் போது எங்க இருந்து உங்களுக்கு இந்தியன் தமிழ் வந்து சேருது. (நெருடலா இருக்கு)

கொஞ்சம் விளக்கினா நல்லா இருக்கும்.

Link to comment
Share on other sites

கதை நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள்.

இந்த கதையை எழுதும் போது எங்க இருந்து உங்களுக்கு இந்தியன் தமிழ் வந்து சேருது. (நெருடலா இருக்கு)

கொஞ்சம் விளக்கினா நல்லா இருக்கும்.

உங்கள் கருத்துக்கு நன்றி அண்ணா. இந்திய தமிழ் என்று எதனை குறிபிடுகிறீர்கள். எனக்கும் அதற்கும் வாய்ப்புகள் குறைவு.

Link to comment
Share on other sites

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதையினை வாசிக்கும் போது சாந்தி ரமேஸ் நேசக்கரத்துக்காக பேட்டி எடுத்த போராளிக் கணவனைத் தேடும் அபலைப் பெண்ணின் உண்மைக் கதை நினைவுக்கு வந்து போகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாக நடந்த சம்பவத்தை கதையாக எழுதிய விதம் அழகு...தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண்ணின் அவலம் மனதை வாட்டுகின்றது

நன்றி அபிராம்

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

உண்மையாக நடந்த சம்பவத்தை கதையாக எழுதிய விதம் அழகு...தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றி ரதி உங்கள் கருத்துக்கு. எவ்வளவோ உண்மை சம்பவங்கள் இன்னும் வெளிவராமல் அழிந்துவிடுமோ என்ற கவலையும் எனக்கு உண்டு.

ஒரு பெண்ணின் அவலம் மனதை வாட்டுகின்றது

நன்றி அபிராம்

வாத்தியார்

*********

நன்றி வாத்தியார். எம்மினத்தின் அவலத்தில் ஒரு சிறு துளி தான் இந்த பெண்ணின் கதை. இவ்வளவு வலிக்கும் எங்களுக்கு விடிவு ஒன்று தான் தீர்வு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆக்கம் தோழர் அபிராம் :lol:

Link to comment
Share on other sites

  • 2 years later...

மூன்று வருடங்களுக்கு முன்னர் எல்லைப்படை மாவீர்களுக்காக எழுதிய கதையை யாழின் முகப்பில் இணைத்த நியானிக்கு நன்றிகள். இன்று இதை போல எத்தனையோ பெண்கள் தங்களின் வாழ்வை தொலைத்துவிட்டு தனி மரங்களாக எங்களின் தெருக்களில் தங்களின் நேசத்துக்குரியவர்களை தேடி அலைகிறார்கள்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கைதேர்ந்த எழுத்து நடையுடன் மனம் கனக்க வைக்கும் கதை. தொடர்ந்து எழுதுங்கள் அபிராம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பவத்தை கதையாக் பகிர்ந்த உங்களுக்கு நன்றி

மனம் கனக்கிறது

Link to comment
Share on other sites

கைதேர்ந்த எழுத்து நடையுடன் மனம் கனக்க வைக்கும் கதை. தொடர்ந்து எழுதுங்கள் அபிராம்.

 

நன்றிகள் மெசொபொத்தேமியா சுமேரியர். உங்கள் ஊக்கம் நிறைந்த வார்த்தைகளுக்கு.

சம்பவத்தை கதையாக் பகிர்ந்த உங்களுக்கு நன்றி

மனம் கனக்கிறது

 

நன்றி அகஸ்தியன் உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை சனாதிபதி தேர்தலுக்கும், இந்தியா தேர்தலுக்கும் வித்தியாசமிருக்கிறது. இந்தியா தேர்தலில் ஒருவருக்கே வாக்களிக்க முடியும். இலங்கை சனாதிபதி தேர்தலில் ஒருவருக்கு மட்டும் அல்லது 1,2,3 விருப்ப வாக்குகள் வாக்களிக்கலாம். 50% வித வாக்குக்கு மேல் ஒருவருக்கும் வாக்குகள் கிடைக்காத பட்சத்தில்  இறுதியாக வந்தவரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகள்  சேர்க்கப்படும். 50% இன்னும் வராவிட்டால் இரூப்பவர்களில் கடைசியாக இருப்பரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகளை சேர்த்து பார்ப்பார்கள். இப்படியே கடைசியாக மிஞ்சும் இருவரில் 50% க்கு மேல் வருபவர் தெரிவு செய்யப்படுவார். ஆனால் இதுவரை நடந்த தேர்தல்களில் முதலாவது வாக்குகலிலேயே வேட்பாளர் ஒருவர் 50%க்கு வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இலங்கையில்  பலர் இம்முறையை கண்டு கொள்வதில்லை. சிவாஜிலிங்கத்துக்கு முதல் வாக்குகளையும் இரண்டாவது மூன்றாவது வாக்குகளில் பொன்சேகாவுக்கும் வாக்களித்திருக்கலாம். அவுஸ்திரேலியா தேர்தல்களிலும் 1,2,3,4 என்று வாக்களிக்கலாம். ஆனால் இங்கு பல தமிழர்கள் தொழில்கட்சிஅல்லது லிபரல் கட்சிக்கே முதலாவது வாக்காகவாக்களிக்கிறார்கள்.  ஆனால் நான் 2009 இல் எமக்காக அதிகளவு குரல் குடுத்த பசுமைக்கட்சிக்கே முதலாவது வாக்கை வழங்கி 2 வதாக பெரிய கட்சியான லிபரல் அல்லது தொழில்கட்சிக்கு வாக்களிப்பதுண்டு.
    • இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்
    • பிற்சேர்க்கை III வெஸ்டேர்ன் மெடிசின் Vs வெதமாத்தையா  அடுத்த பாகத்தை கொடுக்க பிந்தியமைக்கு மன்னிக்கவும். படங்களை போட்டது திரியை எழுத்தில் இருந்து படங்கள் நோக்கி திருப்பி விட்டது. ————— இலங்கை போவதில் ஒரு வசதி - கொஞ்சம் காசை செலவழித்து ஒரு புல் மெடிக்கல் செக்கப் செய்துகொண்டு வரலாம். அதுவும் நவலோக்க, டேர்டன்ஸ், ஆசிரி, லங்கா ஹொஸ்பிட்டல் போன்ற முதல் தர வைத்தியசாலைகளிலேயே £230 க்குள் ஒரு டோட்டல் மெடிக்கல் செக்கப்பை செய்துகொள்ளலாம்.. முன்னர் ஒரு காலம் இருந்தது யூகே NHS என்றால் உலகிற்கே முன்மாதிரி, ஆனால் இப்போ அப்படி இல்லை. எல்லாம் 14 வருட வலதுசாரி மகாராசாக்களின் ஆட்சி தந்த “முன்னேற்றம்”. இப்போதெல்லாம் ஜீ பி யிடம் அப்பாயின்மெண்ட் வாங்குவதை விட நோயில் சாகலாம் என்ற நிலை. அப்படியே ஜி பி யை சந்திக்க முடிந்தாலும், அவர் refer பண்ணி ஒரு ஸ்கான் எடுப்பதற்குள் சித்திரகுப்தன் சீட்டை கிழிக்க ரெடியாகி விடுவார். அத்தோடு இலவசம் என்பதால் கண்ட மாதிரி speculative டெஸ்டுகளும் எடுக்க refer பண்ண மாட்டார்கள். முதலில் தண்ணீர் குடியுங்கள், ரெஸ்ட் எடுங்கள் என்றே சொல்லி அனுப்புவார்கள். ஆகவே உடனடி கவனிப்பு தேவை எனில், ஒன்றில் கணிசமான அளவு பணத்தை கட்டி யூகேயில் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைக்க வேண்டும்.  அல்லது….இலங்கை அல்லது இந்தியா (பல்லு கட்ட போலந்து, துருக்கி) போன்ற நாடுகளுக்கு போய் இப்படி ஒரு செக்கப்பை செய்து வரலாம். இந்த ரிப்போர்ட்டுகள் எல்லாம் எடுக்க ஒரு நாள் செலவாகும். பின்னர் இதை வைத்து ஒரு கன்சல்டண்டுடன் உங்களுக்கு அப்பாயின்மெண்ட்டும் தருவார்கள். இதில் நன்மை என்னவென்றால் - இந்த டெஸ்டுகளில் ஏதாவது கோளாறாக கட்டினால் - அதை நேரடியாக இங்கே ஜி பி யிடம் காட்டும் போது - நோயின் தார்பரியம் அறிந்து வேலை கட…. கட…. என நடக்கும். எனக்கு தெரிந்த சிலர் முன்பே இவ்வாறு செய்திருந்தாலும், இதுவரை நான் செய்ததில்லை. இந்த முறை வயதும் 45 இன் அடுத்த பக்கத்துக்கு போய் விட்டதாலும், கடந்த 3 வருடத்தில் ஜி பி க்கள் தந்த அனுபவத்தினாலும் - ஒரு டெஸ்டை செய்ய முடிவு செய்தேன். இந்தியா போல் அல்லாது, இலங்கையில் health tourism த்தின் பெறுமதி இன்னும் வடிவாக அறியப்படவில்லை. விலைகளும் உள்ளூர் ஆட்களை குறிவைத்தே உள்ளன (வடை, கொத்து, சிகிரியா டிரிக்ஸ் இன்னும் இங்கே வரவில்லை).  ஒவ்வொரு ஆஸ்பத்திரியும், பல வகை வகையான packages வைத்திருக்கிறார்கள்.  ஒன்றிற்கு மூன்றாக தெரிந்த வைத்தியர்களிடம் கதைத்து - ஒரு package ஐ நானும் ஒரு முண்ணனி வைத்தியசாலையில் தெரிந்து கொண்டேன். டெஸ்ட் எடுக்கும் நாள் அதிக நிகழ்வுகள் இன்றி கழிந்தது. ஒவ்வொரு உடல் பகுதிக்குமுரிய இடத்துக்கு அந்த டெஸ்டுக்காக போகும் போது, அவை உள்ளூர் வாசிகளால் நிரம்பியே இருந்தது. எந்த நாட்டிலும், எந்த நிலையிலும் உணவுக்கு அடுத்து நல்ல பிஸினஸ் மருத்துவம் என்பது புரிந்தது. எல்லாம் முடிந்து கன்சல்டேசன் போனால் -கன்சல்டன் - எடுத்த எடுப்பிலேயே எந்த நாடு என்று கேட்டார் - டாக்டரிடம் பொய் சொல்ல கூடாதாமே? ஆகவே எனது “யாழ்பாணம்/மாடகளப்பு/வன்னி/இந்தியா” உத்தியை கைவிட்டு யூகே என உண்மையை சொன்னேன். கண்ணாடிக்கு மேலால் ஒரு பார்வை பார்த்து விட்டு, நான் அங்கேதான் மேற்படிப்பு படித்தேன், “இப்படி ஒரு முழுமையான டெஸ்டை அங்கே உன்னால் செய்யவே முடியாது அல்லவா”, என அவருக்கு ஏலவே தெரிந்த விடயத்தை என்னிடம் உறுதி செய்தார். என்ன இருந்தாலும் என் குஞ்சல்லவா? விட்டு கொடுக்க முடியாதே? ஆம், ஆனால் இங்கும் அரச வைத்தியசாலையில் இப்படி ஒரு முழுமையான டெஸ்டை செய்யமாட்டீர்கள்தானே என்றேன். உனக்கு வாயில் கொலஸ்டிரோல் கூட என்பதை போல் ஒரு பார்வை பார்த்து விட்டு, ரிப்போர்ட்டுக்கான வியாக்கியானத்தை ஆரம்பித்த வைத்தியர். 40 நிமிட கன்சல்டேசனின் பின், ஏலவே தெரிந்த விடயங்களை தவிர வேறு ஏதும் கோளாறு இல்லை என்பது நிம்மதியாக இருந்தாலும்…. இவ்வளவு செலவழித்துள்ளேனே…ஒன்றும் இல்லையா என இன்னொரு மனம் மொக்குத்தனமாய் ஒரு கணம் சிந்திக்கவும் செய்தது🤣. கடைசியாக…எனி அதர் குவெஸ்சன்ஸ் க்கு வைத்தியர் வர, என் நெடுநாள் உபாதையான சயாடிக்கா கால் வலியை பற்றி சொன்னேன். அக்கம் பக்கம் பார்த்த வைத்தியர், மெல்லிய குரலில் “இதுக்கு இங்கே உள்ள வெதமாத்தையாதான் சரி” என கூற, யாரையாவது ரெக்கெமெண்ட் பண்ண முடியுமா என நான் அவரை விட மெல்லிய குரலில் கேட்டேன். கன்சல்டேசன் அறையை விட்டு கிளம்பும் போது எனது போனில் ஒரு பிரபல வெதமாத்தையாவின் தொடர்பிலக்கமும், விலாசமும் சேமிக்கப்பட்டிருந்தது. ———————- ஆவலோடு காத்திருங்கள்! பிற்சேர்க்கை IV வெதமாத்தையாவும் ஆவா குரூப்பும்
    • 1994 இல் மயிலாப்பூர் சட்டமன்றத்துக்கும் இன்னுமொரு சட்டமன்றத்துக்கும் இடைக்கால தேர்தல் நடைபெற்றது.  யாராவது MLA காலமானால் அல்லது வேறு சில காரணங்களுக்காக இடைக்கால தேர்தல் நடைபெறும். தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெறாமல் ஒன்று இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுவதினால் முக்கிய தலைவர்களை இத்தொகுதிகளில் அடிக்கடி காணலாம். நான் அடையார் , Besant நகர் பகுதியில் எனக்கு தெரிந்தவர்கள் வீடுகளுக்கு செல்வதுண்டு. அப்பொழுது பல தலைவர்களை பார்த்திருக்கிறேன். பாட்டாளி மக்கள் தலைவர் இராமதாஸ் சென்ற வாகனத்தில் மன்சூர் அலிகானை வந்திருந்தார். ‘ பிரபாகரன் கிரேட், இராவணன் கிரேட்’ என்று அவர் உரையாற்றினார்.  வைகோவுடன் எஸ் எஸ் சந்திரன் வந்திருந்தார்.  நடிகர் எஸ் எஸ் சந்திரன் மதிமுகவில் அப்பொழுது இருந்தார் கலைஞ்சர் கருணாநிதிஐக்கண்டதும் பல ஆதரவாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட சொன்னார்கள். ஒரு பிள்ளைக்கு ‘ கனிமொழி’ என்று பெயர் சூட்டினார். இன்னுமொரு பிள்ளைக்கு ‘இளவரசன்’ என்று பெயர் சூட்ட, ‘இவர் பெண் குழந்தை’ என்று குழந்தையின் தகப்பனார் சொல்ல ‘இளவரசி’,என்று கலைஞர் பெயர் சூட்டினார்.  ‘அவர்கள் லட்டினுள் மோதிரம் வைத்து குடுக்கிறார்கள் ( அதிமுக கட்சி) . வாங்குங்கள் . ஆனால் வாக்குகளை எமக்கு அளியுங்கள்’ என்றார். பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தருகில் துவிச்சக்கரவண்டியில் வரும்போது காவல்துறையினர் என்னையும் சேர்ந்து பலரை மறித்து நிறுத்தினார்கள். சில நிமிடங்களில் ‘அதோ அந்த பறவை போல’  பாடலை Band குழு ஒன்று இசை அமைக்க வாகனம் ஒன்று வந்தது. பின்னால் வந்த இன்னுமொரு வாகனத்தில் ஜெயலலிதா அவர்கள் துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாப்பு படைகளுடன் வந்து உரையாற்றினார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் வீட்டின் அருகே செல்லும் போது எப்போதும்கண்டும் காணாமல் மாதிரி செல்வார்.  ஆனால் தேர்தல் என்றதினால் கை குப்பி என்னை பார்த்து வணங்கினார். தமிழக பத்திரிகைகளில் தேர்தல் செய்திகள் வாசிப்பதுண்டு. இதனால் ஓரளவு ஆர்வம்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.