Jump to content

ஓடிப்போன ஒட்டகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓடிப்போன ஒட்டகம்

இந்தப்பனிக் குளிருக்கு எவன் வீட்டிற்குள்ளையே அடைபட்டுக்கிடப்பான்.

என்ரை நாட்டிலைதான் நான் சுதந்திரமாகச் சுத்தலாம் என்று ஒரு துண்டுக் காகிதத்திலை

எழுதி வைத்திட்டுச் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டைவிட்டுக் கிளம்பி டுபாய்க்குக் கப்பல் ஏறின ஒட்டகம்,

கோடைகாலம் தொடங்க...... போனதுபோலவே சொல்லாமல் கொள்ளாமலுக்கு இரண்டு நாளுக்குமுதல் வந்து தன்ரை அறையுக்கை படுத்துக்கிடந்தது.

சரி என்னதான் நடக்குது பார்ப்பம் என்று பேசாமலுக்கு இருந்தால்

அது பாட்டுக்குத் திரும்பவும் தன்ரை குணத்தைக் காட்டத் தொடங்கிவிட்டுது.

அதுதான் அந்தக் கதையளை உங்களுக்குச் சொல்லுவமென்று வந்து உட்கார்ந்தால் வைத்தியரிடம் மருந்தெடுக்கப்போறதுக்கு நேரமாச்சுது.

கோபியாதையுங்கோ போட்டுவந்து விசயத்தைச் சொல்லுறன்..........

நட்புடன் நாணல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் தொடர்க...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நிலாமதி,

ஒரு சிலராவது என்ரை எழுத்தையும் படிக்கிறதற்கு ஆவலாக இருக்ககிறியள் என்பதை அறிந்ததில் மகிழ்ச்சி.

இப்ப ஒரு சின்னக் கதையைச் சொல்லுகிறன் கேளுங்கோ.....

கொள்கைமாறாத ஒட்டகமும் நானும்........

காலையில எழுந்து சோம்பல்போகாதவனாக

சோபாவில் சாய்ந்தபடி ஜன்னலுக்கால தெருவில போறவாற சனங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தன்.

என்ன அது இன்றைக்கும் காலங்காத்தாலை சோபாவில உட்கார்ந்து காலை ஆட்டினபடி............

நக்கலாகச் சொல்லிக்கோண்டு ஒட்டகம் தன்ரை அறையிலிருந்து தலையை நீட்டியது.

நான் எப்படியும் இருப்பன் அதாலை உனக்கென்ன கேடுவந்தது என்றன் எரிச்சலோட

காலமை எழும்பினால் வீட்டு உடுப்புக்கூட மாத்தாமலுக்கு வேலைவெட்டி இல்லாமல்

உந்தச் சோபாவிலை காலைஆட்டிக்கொண்டு இருக்கிறதே தொழிலாப்போச்சுது.

சும்மா இருக்கிறநேரத்தில என்னோட சேர்ந்து உந்த மலசலகூடம், சமையலறைச் சுத்தம் செய்யலாமே?

எனக்கென்றால் சும்மா பத்திக்கொண்டு வந்தது அடக்கிக்கொண்டு..

நானொன்றும் சும்மா பொழுதுபோகாமலுக்கு இருக்கேல்லை ஒரு கொள்கையோடதான் உட்காந்திருக்கிறன் என்று கத்தவும்,

அது என்ன அப்படி ஒரு கொள்கையாக்கும் என்று ஒட்டகம் முடிக்கமுதலே

நான் இன்றைக்கு முழுநாளும் ஒரு வேலையும் செய்யாமல் சும்மா இருக்கிறதென்ற இலட்சியத்தோட இருக்கிறன்.

அட உதைத்தான் நேற்றும் சொன்னதுபோலகிடக்கு.........

ஒம்! ஒம்!

நேற்றுக்காலமையும் ஒரு அலுவலும் செய்யிறதில்லை என்ற குறிக்கோளோடதான் உட்கார்ந்தனான்.

பிறகென்னடா என்றால் தவிர்க்க இயலாமலுக்கு ஒரு சில வேலையளைச் செய்யவேண்டி வந்திட்டுது,

அதாலை சாயங்காலம் இலட்சியம் நிறைவேறாமல்போட்டுது என்ற கவலையோடதான் படுக்கப்போனனான்.

அதுதான் இன்றைக்கு என்னதான் நடந்தாலும் என்ரை கொள்கையைவிடுகிறதில்லை என்ற கொள்கையிலை ஒரேபிடியாக இருக்கிறன்.

அதை இதைச் சொல்லிப் பிறகு இன்றைக்கும் சாயங்காலம் என்னைக் கவலைப்பட வைத்திடாதை,

நீயும் என்ரை கொள்கையை ஒருநாளுக்கென்றாலும் கடைப்பிடிச்சுப்பார் அப்ப தெரியும் அருமை என்று நான் சொல்லவும்,

ஒட்டகம் சட்டென்று நான் கொம்யுனிசம் சமத்துவம் என்றதைவிட்டு ஒருநாளும் விலகமாட்டன் என்று வீரமாச் சொல்ல

நானும் விடாமலுக்கு

அப்ப இன்றைக்கும்

முதலாளியளை ஒழிக்கிறன்,

அளவுக்கு அதிகமாக வச்சிருக்கிறவனை ஒழிக்கிறன்,

சமத்துவத்தை உண்டாக்கிறன் என்று அடுத்தவனைத் தட்டிச்சுத்தி ஓசிச்சீவியம் நடத்தப்போறாயென்று சொல்லு என்றன் நக்கலாக

இப்படியே கதைச்சுக் கதைச்சு வீணாக நேரம்போகுது.

நானொரு புது ஜக்கிசான் பட DVD வாங்கிவந்தனான் பார்க்கப்போறன்.

super என்று internet இல எல்லாம் கனபேர் எழுதியிருக்கிறாங்கள் விருப்பமென்றால் சேர்ந்து பாருமன் என்று ஒட்டகம் கேட்கவும்.

நானும் என்னை மறந்து, ஜக்கிசான் படமென்றால் நல்ல சண்டையும் பகிடியுமாக சும்மா இருக்கிறதுக்கு நல்ல பொழுதுபோக்காக இருக்குமென்றன்.

கொள்கைகள்...................................?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதையை வாசித்தேன்...ஏன் நீங்கள் ஒட்டகத்தை வைத்தே கதை எழுதுகிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கதையை வாசித்தேன்...ஏன் நீங்கள் ஒட்டகத்தை வைத்தே கதை எழுதுகிறீர்கள்?

ரதி உங்களது சந்தேகத்தைத் தயக்கமின்றிக் கேட்டீர்களே நன்றிகள்.

தயக்கமின்றிக் கேட்டீர்கள் என்று எழுதியதிலும் ஒரு விடயம் இருக்கிறது பொதுவாகவே நம்மில் அநேகருக்கும் ஒரு அர்த்தமற்ற பயமிருக்கும். தனக்கொருவிடயம் தெரியாது என்று அடுத்தவரிடம் கேட்பதால் அவர் தன்னைப்பற்றித் தாழ்வாக நினைத்துவிடுவாரோ அல்லது பொது இடங்களில் தெரியாத ஒருவிடத்தைப்பற்றிச் சந்தேகம் கேட்டால் சமுதாயத்தில் தனது அந்தஸ்த்துக்குறைந்துவிடுமோ என்ற தயக்கத்தில் தெரியாத, புரியாத விடயங்களையெல்லாம் தெரிந்தமாதிரி நடித்துக்கொள்வோம்.

உண்மையிலே எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்கவேண்டுமென்ற தேவையுமில்லை சாத்தியமும் இல்லை. ஆனால் தெரியாத ஒருவிடயத்தைச் சந்தர்ப்பம் கிடைத்தும் தெரிந்து கொள்ள முயற்ச்சிக்காமல் இருப்பதுவோ அல்லது தெரிந்தமாதிரிக் காட்டிக் கொள்வதுவோதான் தவறு அப்படிச் செய்வதன்மூலம் தன்னையேதான் ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

இதனால்த்தான் ரதியிடம் இருந்த தேடுதல் ஆர்வத்தை பாராட்டியே அப்படி சந்தேகத்தைத் தயக்கமின்றிக் கேட்டீர்களே நன்றிகள் எனக் குறிப்பிட்டிருந்தேன்.

இனி விசயத்துக்வாறன் ரதி

நாடகங்களின் ஒரு மாற்று வடிவமாக தெருநாடகங்கள் குறியீட்டு நாடகங்கள் இருப்பதுபோல

தான் சொல்லவரும் கருத்தை இவ்வாறானதொரு மாற்று வடிவில் சொல்வதுவும் கதைகளை முக்கியமாக சமுகச் சீர்கேடுகளைச் சொல்வதில் ஒரு பாணியாகும் இந்தக் கதைவடிவம் தமிழிற்குத்தான் புதிதே அன்றிப் பல வேற்றுமொழிகளிலும் இவ்வாறாகத் தமது கருத்துக்களைச் சொல்லும்கதைகள் நிறையவே வந்துகொண்டிருக்கின்றன. இவ்வாறான கதைகளின் தொகுப்புக்கள் புத்தகங்களாகப் பல மொழிகளிலும் வந்திருக்கின்றன.

நம்மவர்மத்தியிலும் இவ்வகைப்படைப்புக்களை தோற்றுவிக்கலாமே என்னற எண்ணத்திலேயே

ஒட்டகத்தையும் கதை மாந்தருடன் இணைத்து எழுதுகிறேன். இங்கு ஒட்டகமென்பது வெறுமனே ஒரு குறியீடே அன்றி விசேடமா வேறெதுவும் இல்லை. நீங்களும் இதுபோல ஒரு எலி, புலி, நரியென எதையாவது இணைத்துக்கற்பனை செய்துபாருங்களேன்.

Link to comment
Share on other sites

ஓ ஒட்டகம் வெற்றுக்குறியீடு மாத்திரம்தானோ. நான் நினைச்சன் உங்கட வாழ்க்கைத்துணையை கடுப்பில ஒட்டகம் எண்டு கூப்படிறீங்களாக்கும் எண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி ஒட்டகத்தாருக்கு சிவப்பு சட்டை காரருடன் என்ன கோபம் என்று சொல்லுங்கோவன்...உங்கள் குறியீடு கதை வடிவங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ ஒட்டகம் வெற்றுக்குறியீடு மாத்திரம்தானோ. நான் நினைச்சன் உங்கட வாழ்க்கைத்துணையை கடுப்பில ஒட்டகம் எண்டு கூப்படிறீங்களாக்கும் எண்டு.

மச்சான், என்ரை பழைய கதையைக் கேட்டுப்போட்டு நீங்களே முடிவுபண்றுங்களேன். சிறுவயதுமுதல் கொழும்பில் வளர்ந்து இந்துக்கல்லூரி றோயல்கல்லூரி எனப் படித்ததில் ஓரறவிற்குச் சரளமாக மூன்று மொழிகளிலும் பேசமுடிந்தில் தமிழ் சிங்களம் என்றெவித்தியாசம் இல்லாமல நண்பர்களைவிட அதிகமான நண்பிகள் கூட்டத்துடன் ஜாலியாச் சுற்றித்திரிந்த எனது வாழ்க்கையை பதினெட்டாவது வயதில 1977 ஆண்டு இனக்கலவரம் முற்றாகப் புரட்டிப்போட்டது. அகதியாக வடமராட்சியில் கால்பதித்த எனது வாழ்வின் முக்கியமான மாற்றங்களில் ஒன்று போர்க்குணமுள்ளவனாக மாறியது. அடுத்தது நல்லதொரு நண்பனைப்போன்று ஆளுமையும் நிதானமும் மதிநுட்பமும்மிக்க அன்பான மனைவியைச் சந்தித்தது. நான் உச்சங்களைத்தொட்ட அகங்காரத்தில் திளைத்தவேளைகளில் நிதானந்தவறாமலும் குப்புறவிழுந்த சோகமான கணங்களில் தன்மடியில் தாங்கிய தாயாகவும் நிற்கும் என் மனைவியின் துணையில்லாது இருந்திருந்தால் எனது சமாதியில் என்றோ புல்முளைத்திருக்கும்.

அது சரி ஒட்டகத்தாருக்கு சிவப்பு சட்டை காரருடன் என்ன கோபம் என்று சொல்லுங்கோவன்...உங்கள் குறியீடு கதை வடிவங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

புத்தன், எனக்கொன்றும் சிவப்புச்சட்டைக்காரரிலை கோபங்கிடையாது.நான் முன்பு கூறியதுபோலத் திடீரென வடக்கிற்குத் தூக்கி வீசப்பட்டபின் அதற்கான காரணங்களைத் தேடமுற்பட்டபோது படித்த புரட்சி வரலாறுகள்தான் நாளடைவில் வீட்டிலிருந்து பாடாலைக்குச் செல்வதாகப் புறப்பட்டு நண்பரிடம் பாடப்புத்தகங்களைக் கொடுத்துவிட்டு யாழிலிருந்து வன்னிக்கு மினிபஸ் ஏறவும் இரவு அப்பாவிப் புhனைபோல வீட்டுக்குவரும் துணிச்சலைத்தந்து நாளடைவில் நிரந்தரமாக வீட்டிலிருந்து வெளியேற்றியது. நான் கதைகளில் தொட்டுச்செல்வது பல்வேறு மனித முரண்பாடுகளைத்தான் அவை எல்லாம் என் கொள்கைகளாக இருக்கவேண்டுமென்ற நியதி எதுவும் இல்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான், என்ரை பழைய கதையைக் கேட்டுப்போட்டு நீங்களே முடிவுபண்றுங்களேன். சிறுவயதுமுதல் கொழும்பில் வளர்ந்து இந்துக்கல்லூரி றோயல்கல்லூரி எனப் படித்ததில் ஓரறவிற்குச் சரளமாக மூன்று மொழிகளிலும் பேசமுடிந்தில் தமிழ் சிங்களம் என்றெவித்தியாசம் இல்லாமல நண்பர்களைவிட அதிகமான நண்பிகள் கூட்டத்துடன் ஜாலியாச் சுற்றித்திரிந்த எனது வாழ்க்கையை பதினெட்டாவது வயதில 1977 ஆண்டு இனக்கலவரம் முற்றாகப் புரட்டிப்போட்டது. அகதியாக வடமராட்சியில் கால்பதித்த எனது வாழ்வின் முக்கியமான மாற்றங்களில் ஒன்று போர்க்குணமுள்ளவனாக மாறியது. அடுத்தது நல்லதொரு நண்பனைப்போன்று ஆளுமையும் நிதானமும் மதிநுட்பமும்மிக்க அன்பான மனைவியைச் சந்தித்தது. நான் உச்சங்களைத்தொட்ட அகங்காரத்தில் திளைத்தவேளைகளில் நிதானந்தவறாமலும் குப்புறவிழுந்த சோகமான கணங்களில் தன்மடியில் தாங்கிய தாயாகவும் நிற்கும் என் மனைவியின் துணையில்லாது இருந்திருந்தால் எனது சமாதியில் என்றோ புல்முளைத்திருக்கும்.

தங்களது வாழ்க்கை என்னையும் உறையவைத்துவிட்டது

தாங்கள் 1977

நான் 1983

அதே இந்துக்கல்லூரி (பம்பலப்பிட்டிய)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையரசாங்கம் முன்வைத்த தீர்வுத்திட்டத்தினை முற்றாக நிராகரித்து, நான்கு அம்சக் கோரிக்கையின் அடிப்படையிலான தீர்வினை கோரிய தமிழ்த் தரப்பு   நான்காம் நாள் பேச்சுக்கள் பெரும் குழப்பத்திற்குள் நுழைந்தன. ஜெயவர்த்தன இன்னொரு சதியைத் திட்டமிட்டு அரங்கேற்றினார். பொலீஸாரைக் கொண்டு அரங்கேற்றப்பட்ட இச்சதியில் கொழும்பில் குண்டுத்தாக்குதலில் ஈடுபட வந்திருந்த ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்களைத் தாம் கைதுசெய்திருப்பதாக ஜெயார் தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையாக சுற்றித்திருந்த இரு இளைஞர்களைக் கைதுசெய்து விசாரித்தவேளை அவர்கள் ஜனாதிபதியைக் கொல்வதற்காக ஈரோஸ் தலைமைப் பீடத்தால் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதை ஒத்துக்கொண்டதாக பொலீஸார் அறிவித்தனர். ஜெயாரின் திட்டத்தின்படி, கொழும்பு ஊடகங்களும் இச்செய்தியை பெரும் எடுப்பில் வெளியிட்டிருந்தன. இதனைச் செய்தியாக்கும்போது டெயிலி நியுஸ் காரியாலயத்தில் இருந்த உற்சாககத்தினை நேரடியாக நாண் கண்டேன். மறுநாள் ஆசிரியர்த் தலையங்கம் "முறியடிக்கப்பட்ட ஜனாதிபதி மீதான படுகொலை முயற்சி" என்று வெளியாகியிருந்தது. தன்மீதான இந்தப் பழியை சோடிக்கப்பட்ட புரளி என்று ஈரோஸ் தலைமைப்பீடம் அறிவித்தது. பொதுத் தபாலகத்திற்குச் சென்றுகொண்டிருந்த இரு அப்பாவிகளைக் கைதுசெய்து, கடுமையான சித்திரவதைகளின் பின்னர் பொய்யான வாக்குமூலம் ஒன்றினை கொடுக்க வைத்தே பொலீஸார் இந்த நாடகத்தினை ஆடுகிறார்கள் என்று ஈரோஸ் அமைப்பு விளக்கியிருந்தது.  நான்காம் நாள் பேச்சுக்கள் ஆரம்பமாகிய வேளை, அரசாங்கத்தின் பொய்யான வதந்திகுறித்து ஈரோஸ் அமைப்பினரும் ஏனைய தமிழ்ப் பிரதிநிதிகளும் தமது ஆட்சேபணையைத் தெரிவித்தார்கள். "இது ஜெயாரின் புரளி" என்றும் அதனை அழைத்தார்கள். அன்றைய நாளின் பெரும்பகுதி யுத்தநிறுத்த மீறல்கள் குறித்து ஒருவரையொருவர் சாடுவதிலேயே கழிந்தது. யுத்தநிறுத்த மீறல்கள் குறித்த வாக்குவாதங்கள் முடிவடைந்த பின்னர் பேசிய ஹெக்டர் ஜெயவர்த்தன தான் முன்வைத்துள்ள யோசனைகளை அதிகாரப் பரவலாக்கத்திற்கான அடிப்படையாக வைத்து செயற்பட முடியும் என்று கூறினார். அதற்குப் பதிலளித்த தமிழ்த் தரப்பு, அதிகாரங்கள், அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகு, அரசாங்கத்தின் கட்டமைப்பு என்பன குறித்த சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றும், தமிழர்கள் எதிர்பார்க்கும் அதிகாரங்களுக்கும், அரசால் முன்வைக்கப்படும் அதிகாரங்களுக்கும் இடையே பாரியளவு இடைவெளி காணப்படுவதாகவும் விமர்சித்தனர்.  பேச்சுக்கள் முறிவடைவதைத் தவிர்ப்பதற்காக இந்திய அரசாங்கம் தனது வெளிநாட்டமைச்சர் ரொமேஷ் பண்டாரியை திம்புவிற்கு அனுப்பியது. இரு தரப்பினருடனும் ரொமேஷ் பண்டாரி ஒன்றன் பின் ஒன்றாக பல சந்திப்புக்களை நடத்தினார்.தமிழர் தரப்புடன் பேசிய பண்டாரி, அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வு ஆலோசனையினை நிராகரிப்பதாகவும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் அபிலாஷைகளை தீர்க்கக்கூடிய புதியதொரு தீர்வுத்திட்டத்துடன் அரசு வரவேண்டும் என்கிற கோரிக்கையினையும் முன்வைத்து அறிக்கையொன்றினை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார். இதன்மூலம் அன்று முறிவடைய‌ இருந்த பேச்சுக்களை அவரால் நீட்டிக்க முடிந்தது. பேச்சுவார்த்தையின் ஐந்தாம் நாளான ஆடி 12 ஆம் திகதி தமிழ்ப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து அரசு முன்வைத்திருக்கும் தீர்வுக்கான ஆலோசனைகளை நிராகரிப்பதாக அறிக்கையொன்றினை வெளியிட்டனர். அறிக்கை வெளியிடப்பட முன்னர் தமிழ் மக்களைஅவமானப்படுத்தும் விதமாக இலங்கைஅயரசாங்கம் தனது தீர்வு யோசனையினை முன்வைத்திருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். அமிர்தலிங்கம் ஒருபடி மேலே சென்று, அரசு முன்வைத்திருக்கும் யோசனைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினார்.  தமிழ்ப் பிரதிநிதிகள் சார்பாக டெலோ அமைப்பின் சார்ள்ஸ் அறிக்கையினை சமர்ப்பித்தார். தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்களுக்கு தமிழரின் அபிலாஷைகள் குறித்த எமது கோரிக்கைகளை ஜனநாயக வழியில் புரியப்படுத்த முடியாமையினாலேயே நாம் ஆயுதம் தூக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். மேலும், எமது தேசியம் மீதான சிங்கள அரசுகளின் ஒடுக்குமுறையும், எம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அரச பயங்கரவாதமும், எம் மக்கள் மீதான இனவழிப்பும் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் எம் மக்களுக்கான தர்க்கரீதியான ஒரே தீர்வு தனிநாடுதான் என்கிற நிலைமைக்கு எம்மைக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. இதன் தர்க்கரீதியான வெளிப்பாடே ஆயுதப்போராட்டம் என்றால் அது மிகையில்லை. ஆனாலும், இலங்கையரசாங்கம் நியாயமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை முன்வைக்கும் பட்சத்தில் அமைதியான அத்தீர்வினை பரிசீலிக்க தமிழ் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஏனென்றால், தமிழ் மக்கள் அமைதியினை விரும்பும் ஒரு மக்கள் கூட்டமாகும். சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வு ஆலோசனைகள் எந்தவிதத்திலும் நேர்மையானதாகவோ, அமைதியை ஏற்படுத்தும் முகாந்திரங்களையோ கொண்டிருக்கவில்லை என்பதை எம்மால் உணர்ந்துகொள்ளமுடிகிறது. முதலாவதாக, சிறிலங்கா அரச பிரதிநிதிகள் குழுவின் தலைவர் தனது உரையில், இந்தத் தீர்வு ஆலோசனைகள் கடந்த வருடம் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் இலங்கையரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட ஆலோசனைகள் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். ஆனால், பின்வரும் காரணங்களுக்காக சர்வகட்சி மாநாட்டினை நாம் முற்றாக நிராகரித்திருக்கிறோம், முதலாவதாக, சர்வகட்சி மாநாட்டில் பங்குகொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, சர்வகட்சி மாநாடு குழப்பகரமான நிலையில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டவுடன் வெளியிட்ட அறிக்கையில் அதிகாரம் மிக்க பிராந்தியம் எனும் அடிப்படையில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்விற்கு அருகில்க் கூட சர்வக‌ட்சி மாநாட்டில் அரசால் முன்வைக்கப்பட்ட தீர்வு வரவில்லை என்பதைத் தெளிவாகக் கூறியிருந்தது. இரண்டாவதாக, ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு என்கிற வகையில், நவ பாஸிஸ இலங்கையரசு, தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு இராணுவ ரீதியில் தீர்வினை வழங்கவே சர்வகட்சி மாநாட்டினை போர்வையாகப் பாவித்தது என்பதனை ஐயம் திரிபுற  நம்புகிறோம். மேலும், ஈழத்திற்கான தேசியப் பிரச்சினையினை இலங்கையரசாங்கம் இதுவரையில் புரிந்துகொள்ளவில்லை என்பதையே அது இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு சுட்டிக் காட்டுகிறது. அதற்கான காரணங்களை நாம் முன்வைக்கிறோம்,   1. அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், தமிழ் மக்களால் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத மாவட்ட ரீதியிலான அதிகாரப் பரவலாக்க அலகினை அரசு முன்வைத்திருக்கிறது. 2. அரசு முனைத்திருக்கும் தீர்வு, தமிழ் மக்களினதோ அல்லது சிங்கள மக்களினதோ சுயநிர்ணய உரிமையினை புறக்கணித்திருப்பதுடன், சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ அல்லது அதையொத்த இன்னொரு வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ தீர்வினை மக்கள் முன் கொண்டுசெல்லும் வழிவகையினைக் கொண்டிருக்கவில்லை. மக்களின் விருப்பினை நிராகரித்திருக்கும் அரசாங்கம், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் கொண்டு அரசியல் சட்டத்தில் திருத்தத்தினைச் செய்யலாம் என்று கூறுகிறது.இப்படிச் செய்வதனூடாக மக்கள் மீது அரசியல் யாப்பின் அடைப்படையில் உருவாக்கப்படவிருக்கும் சர்வாதிகாரத்தைத் திணிக்க முயல்கிறது.  ஆகவே, இந்த நிலையில் மேற்கொண்டு பேச்சுக்களில் ஈடுபடுவதில் பயனில்லை என்கிற நிலைப்பாட்டிற்கு நாம் வந்திருப்பதுடன், நாடு இன்றிருக்கும் இக்கட்டான நிலைக்குக் காரணமாகியிருக்கும் அரசாங்கமே தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நேர்மையானதும், அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதுமான தீர்வினை முன்வைக்க வேண்டும் என்றும் கோருகிறோம்.    நிரந்தர சமாதானத்தினைக் கருத்தில்க் கொண்டு, தமிழ் மக்களால் பரிசீலித்துப் பார்க்கக் கூடிய தீர்வொன்றுடன் மீண்டும் இலங்கையரச பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்பவேண்டும் என்கிற தீர்க்கமான கோரிக்கையினை நாம் முன்வைக்கிறோம். ஜனாதிபதி ஜெயாரைப் படுகொலை செய்ய எத்தனித்ததாக தம்மீது முன்வைக்கப்பட்ட அரசின் குற்றச்சட்டிற்கெதிரான தனது அதிருப்தியினை ஈரோஸ் அமைப்பு எழுத்துமூல அறிக்கையொன்றின் ஊடாக வெளியிட்டது. இந்தியாவின் ரொமேஷ் பண்டாரி பேச்சுவார்த்தைக்குழுக்களுக்கான விருந்துபசராம் ஒன்றினை வழங்கினார். பேச்சுவார்த்தையின் இறுதிநாளான ஆடி 13 ஆம் திகதி அரச தரப்புப் பிரதிநிதிகளுடன் பேசிய தமிழ்த் தரப்பு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய‌ தீர்வொன்றுடன் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததுடன் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வு அமையவேண்டிய அடிப்படைகள் குறித்து தனது நிலைப்பாட்டினையும் முன்வைத்தது.   பேச்சுவார்த்தைக் குழுக்கள் இணைந்து வெளியிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திம்புப் பிரகடணம் இவ்வாறு அமைந்திருந்தது, தமிழ்த் தரப்பு முன்வைத்த பிரகடணம்,   தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான அரத்தபுஷ்ட்டியான தீர்வு பின்வரும் நான்கு அடிப்படை விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்று நாம் கருதுகிறோம்,   1. இலங்கைத் தமிழர்களைத் தனியான தேசமாக அங்கீகரிப்பது 2. இலங்கையில் தமிழருக்கென்று தனியான தாயகம் இருப்பதை அடையாளம் காண்பதும் அதனை அங்கீகரிப்பதும் 3. தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிப்பது 4. இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழர்களினதும் குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை அங்கீகரிப்பது   பல்வேறு நாடுகள் தமக்கு உகந்த செயற்திட்டங்கள் ஊடாக இந்த அடிப்படைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதனை உறுதிப்படுத்தியிருக்கின்றன. தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் நிராகரிக்கப்பட்டமையினாலேயே அதற்குத் தீர்வாக தனிநாட்டினை முன்வைத்துப் போராடி வருகிறோம். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக இலங்கையரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வினை எம்மால் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை திட்டவட்டமாகக் கூறிக்கொள்கிறோம். ஆகவே, 1985 ஆம் ஆண்டு ஆடி மாதம் 12 ஆம் திகதி நாம் வெளியிட்ட அறிக்கையின்படி இலங்கையரசாங்கம் இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு யோசனைகளை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். ஆனாலும், அமைதிக்கான வழிகளைத் தேடும் மக்கள் கூட்டம் எனும் அடிப்படையில், நாம் மேலே குறிப்பிட்ட நான்கு அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய புதிய தீர்வு யோசனைகளை இலங்கையரசாங்கம் முன்வைக்கும் பட்சத்தில் அவற்றைப் பரிசீலிர்த்துப் பார்க்கத் தயாராக இருப்பதையும் இங்கு கூறிக்கொள்கிறோம்.  
    • இந்த விடயத்தை நான் பலமுறை அவதானித்துள்ளேன்.  வயிற்றில் சமிபாட்டுப்(?) பிரச்சனை இருப்பதால் அவை அவ்வாறு செய்கின்றன என நான் நம்புகிறேன். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.