Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள தேசத்திற்கு சம்பந்தர் விதித்துள்ள காலக்கெடு - புதியதொரு வரலாற்றுத் திருப்பம்!--சி. பாலச்சந்திரன்

Featured Replies

''ஒரு வருட காலத்திற்குள் தமிழ் மக்களது அரசியல் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படாவிட்டால் நாங்கள் எங்கள் பதவிகளைத் துறந்து எமது மக்களது விடுதலைக்காக உலகத் தமிழர்களுடன் இணைந்து போராடங்களை முன்னெடுப்போம்'' எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா சம்பந்தன் அவர்கள் தெரிவித்துள்ளதாக இணையத் தளங்களில் வந்த செய்திகள் ஈழத் தமிழர்களை மட்டுமல்லாது, புலம்பெயர் தமிழர்களையும், உலகத் தமிழர்களையும் சற்றுத் தலை நிமிர்த்த வைத்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடத்தை மீது சந்தேகம் தெரிவித்தவர்கள் கூட, இந்தச் செய்தியால் உற்சாகம் கொண்டுள்ளார்கள். இறுதி யுத்தத்தின் பின்னர் நொருங்கிப்போய், பேச்சு - மூச்சிழந்து முகம் புதைத்தபடி எதிர்கால வெளிச்சம் ஒன்றிற்காகக் காத்திருக்கும் ஈழத் தமிழர்களின் எஞ்சிய பலமாக அங்கே இருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே. தமிழீழ மக்களின் விடுதலைக்கான ஆக்க பூர்வமான நகர்வுகளைத் துணிவோடு மேற்கொள்ள வேண்டிய வரலாற்றுக் கடமையும் அவர்களுக்கு உள்ளது. தமிழீழ விடுதலைக்காகத் தமது உயிரை அர்ப்பணித்த 50,000 இற்கும் மேற்பட்ட மாவீரர்களதும், இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களினதும் ஆன்ம தாகங்களை அலட்சியம் செய்துவிட முடியாத தார்மீகப் பொறுப்பும் அவர்களுக்கு உள்ளது.

ஈழத் தமிழர்களது அரசியல் தலைமை என்பது பட்டு விரிப்பு பஞ்சணையல்ல. அது முட்களும், கற்களும், விசச் செடிகளும் நிறைந்த சிலுவைப் பாதை போன்றது. அந்தப் பாதையில் பயணிப்பதற்கான மன உறுதியும், இலட்சிய வேட்கையும் இப்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உள்ளது என்பது ஈழத் தமிழர்களுக்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. இந்திய தேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் நின்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயல்படுகின்றது என்ற குற்றச்சாட்டும் சம்பந்தர் அவர்களது இந்த அறிவிப்பால் தகர்ந்து போயுள்ளது. அத்துடன், புலம்பெயர் தமிழர்களின் தமிழீழ விடுதலைக்கான நகர்வுகளையும் இது துரிதப்படுத்தியுள்ளது.

முன்னிவாய்க்கால் பெரவலங்களின் பின்னரான காலப் பகுதியில் உருவான புலம்பெயர் போர்க் களங்களும், அதில் இருந்து உருவான புலம்பெயர் அமைப்புக்களும் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு காத்திரமான பங்களிப்புக்களை வழங்கி வருகின்றன. அதே சம காலத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழீழ விடுதலைக்கான தங்களது பங்களிப்பைத் தீவிரப்படுத்தி வருவது உலகத் தமிழர் அனைவருக்கும் எதிர்கால நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. புலம்பெயர் அமைப்புக்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நெருக்கமான உறவுகளைப் பேணி, தமக்குள்ளான புரிந்துணர்வுகளைப் பகிர்ந்துகொள்வது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

சிங்கள தேசத்தால் நெருங்க முடியாத, சிதைக்க முடியாத பலமாக உருவாகியுள்ள நாடு கடந்த தமிழீழ அரசும், மக்கள் பேரவையும் சிங்கள தேசத்தில் தமிழீழ விடுதலைக்காகக் களமாடிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குப் பலம் சேர்க்கும் சக்திகளாக உள்ளன. இந்த சக்திகளுடன் நேரடியான தொடர்புகளையும், உறவுகளையும் இறுக்கமாக்கிக் கொள்வது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குப் பாதுகாப்பு வளையமாக அமையும். ஒரே இலட்சியத்துடன் பயணிக்கும் இந்த இரு களங்களும் இணைந்து செல்வதே தமிழீழ விடுதலையை விரைவு படுத்துவதாக அமையும்.

தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தைப் பயங்கரவாதமாகச் சித்தரித்து, அதனை அழிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய மேற்குலக நாடுகள், அதன் பின்னரான சிறிலங்காவின் தமிழ் மக்கள் மீதான இனவாதப் போக்கினால் மிகவும் எரிச்சலடைந்துள்ளன. தனது பிராந்திய வல்லாதிக்கக் கனவுக்காக ஈழத் தமிழர்களின் இனப் பிரச்சினையைக் கையாளும் இந்தியாவின் நகர்வுகளையும் மேற்குலகு ரசிக்கும் நிலையில் இல்லை. அத்துடன், புலம்பெயர் தேசங்கள் எல்லாம் பரந்து வாழும் ஈழத் தமிழர்கள் தாம் வாழும் நாடுகளின் அரசியலிலும் செல்வாக்கு செலுத்த ஆரம்பித்துள்ளனர். தமக்கான தளங்களில் இருந்து, தமது மக்களின் விடுதலை குறித்து உரக்கப் பேசியும் வருகின்றனர். இது மேற்குலகின் சிறிலங்கா குறித்த கண்ணோட்டத்தில் மாற்றங்களையும் உருவாக்கியுள்ளன. அண்மையில் நடைபெற்று முடிந்த பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முக்கியமான கட்சிகள் அனைத்தும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான தமது நிலைப்பாட்டினை தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டிருந்தன.

ஈழத் தமிழர்களுக்கான தீர்வு எதனையும் சிங்கள தேசத்தின் எந்த ஆட்சியாளர்களும் வழங்குவதற்கு முன்வரமாட்டார்கள் என்பது காலம் எமக்கு உணர்த்திய செய்தி. பேச்சுவார்த்தை, நாடாளுமன்றத் தெரிவுக் குழு என்று காலத்தை இழுத்தடிக்கும் தந்திரம் மகிந்த அரசினாலும் நீடிக்கப்படும் என்பதே உண்மை நிலை. அதை உணர்ந்து கொண்டு சிங்கள அரசுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலக்கெடு விதித்திருப்பதை ஈழத் தமிழர்கள் பாராட்டியே ஆகவேண்டும். எங்கள் மக்களது விடுதலைக்காக நீங்கள் திறந்துள்ள போர்க் களத்தில் நாங்களும் இணைந்து வருகின்றோம் எனப் புலம்பெயர் தமிழர்களும் உங்களை நோக்கிக் கரம் நீட்டுகின்றார்கள்.

காலம் எமக்கு வழங்கியுள்ள இந்தச் சந்தர்ப்பங்களைத் தவறவிட்டால், வரலாறு எம்மை ஒருபோதும் மன்னிக்காது. இதை உணர்ந்து கொண்டதாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பந்தர் அவர்களது அறிவிப்பு உணர்த்துகின்றது.

''ஒரு வருட காலத்திற்குள் தமிழ் மக்களது அரசியல் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படாவிட்டால் நாங்கள் எங்கள் பதவிகளைத் துறந்து எமது மக்களது விடுதலைக்காக உலகத் தமிழர்களுடன் இணைந்து போராடங்களை முன்னெடுப்போம்'' எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா சம்பந்தன் அவர்கள் தெரிவித்துள்ளதாக இணையத் தளங்களில் வந்த செய்திகள் ஈழத் தமிழர்களை மட்டுமல்லாது, புலம்பெயர் தமிழர்களையும், உலகத் தமிழர்களையும் சற்றுத் தலை நிமிர்த்த வைத்துள்ளது.

உப்பிடி சம்பந்தர் சொன்னாரோ தெரியாது... ஆனால் சொல்லி இருந்தால் பாராட்டலாம்... !

இதுக்கு பதிலை ஒரு மாதம் களித்து வந்து சொல்கிறன....

Edited by தயா

அது ஏன் ஒரு வருடம்?

எனக்கும் வயதாகிவிட்டது. கூட்டமைப்பு இளசுகளை அரசியல் செய்ய விடக்கூடாது, விட்டால் எனது இமேஜ் போய்விடும் என்று சம்பந்தர் நினைத்தாரோ?

  • கருத்துக்கள உறவுகள்

தீர்வு ஜனாதிபதித் தேர்தல் முடிய என்று சொன்னாங்கள் பிறகு பொதுத் தேர்தல் முடிய என்று சொன்னாங்கள்.இப்ப நாங்களே 1 வருடம் குடத்திருக்கிறம் அதுக்கிடையில் உலக நாடுகளைச் சரிக்கட்டி புலம் பெயர்ந்த மக்களின் போராட்டங்களையும் நீர்த்துப் போகச் செய்து தாயகத்தில் குடியேற்றங்களைச் செய்து சிறிலங்கா ஒரு வழி பண்ணிடும். நாங்களே அக்கறை இல்லாமல் பிரச்சனையை கிடப்பில் போட வெளிநாட்டுக்காரன் தன்னுடைய பழைப்பைப் பார்க்கப் போயிடுவான். (பிரித்தானியாவின் தேர்தலும் முடிந்து போயிட்டுது.) போர்க் குற்ற விசாரணை அது இதுவெல்லாம் கிடப்பிலே போய்விடும்.முள்ளி வாய்க்கால் சம்பவம் நடந்து ஒரு வருடத்திற்கிடையில் எத்தனையோ சம்பவங்கள் நடந்து போய் விட்டன.இன்னும் ஒரு வருடம் கழித்து எல்லாம் மறந்து அடிமை வாழ்வே பழக்கமாயிடும் யாரும் கேள்வி கேட்டு போராடும் மனநிலையில் இருக்க மாட்டினம்.

0

Edited by புலவர்

உது சம்பந்தர் விதிச்ச காலக்கெடு இல்ல. உந்த சுத்துமாத்து பாலச்சந்திரன் விதிச்ச காலக்கெடு.

  • கருத்துக்கள உறவுகள்

பிரிவினைக்கு நாம் எதிரானவர்கள் - சிங்கள மக்களுக்கும், மகிந்தவுக்கும் நேர்மையாக இருப்போம்

திகதி: 09.05.2010 // தமிழீழம்

சிறீலங்கா அரச தலைவர் விரைவாக செயற்பட்டால் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு அதிக காலம் எடுக்காது. அவருக்கு எமது ஒத்துழைப்புக்களும் உண்டு. நாம் எப்போதும் மகிந்தவுக்கு நேர்மையாக இருப்போம். அவரை நாம் ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம். நாம் சிங்கள மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு ஆர் சம்பந்தன் தெரிவித்துள்ளதாக த நேசன் வாரஏடு தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் சிறீலங்கா அரசு பேச்சுக்களை மறைமுகமாக ஆரம்பித்துள்ளது. அது தொடர்பில் தகவல்களை வெளியிட மறுத்து வந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு ஆர் சம்பந்தன் தற்போது சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அரசுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்கள் தற்போதும் ஆரம்பக்கட்டத்தில் தான் உள்ளது. அரச தரப்பில் இருந்து யார் எம்முடன் தொடர்பில் உள்ளனர் என்பதை நான் தெரிவிக்கப்போவதில்லை. எனினும் நாம் அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவுடன் நேரடியான தொடர்பை கொண்டிருக்கவில்லை என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நன்றி சங்கதி

அடிச்சார் சம்பந்தர் நெத்தியடி.

உதை விடுங்கள் ... நாம் ஐக்கிய இலங்கையை கட்டி எழுப்புவோம் வாருங்கள் ....வெட்கம் கெட்ட வாழ்க்கை!

  • கருத்துக்கள உறவுகள்

பம்மந்தர் வெடியை பாலச்சந்திரன் ஊதி வேடிக்கவைக்கிறார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐக்கிய இலங்கைக்குள் தீர்வெண்டார். இப்ப உப்படிச்சொல்லுறார்.கொஞ்சம் பொறுங்கோ சம்பந்தர் ஐயாவும் கடிதமெழுதத்தொடங்குவார் கலைஞர்பாணியில்.புலம்பெயர் தமிழர் நாங்களும் போனவருடம் இதேகாலப்பகுதியில் 10 000 15 000 மக்கள் தொகைதொகையாக வீதிமறியலும் தொடர் உண்ணாநோன்புகளும் செய்தனாங்கள்.இப்ப 20 மிஞ்சிப்போனால் 30 பேர்தான் ஊர்வலங்கள் செய்யிறம். முள்ளிவாய்க்கால் நினைவாக மே 18 அல்லது அடுத்த சனிக்கிழமை பாருங்கள் நாங்கள் மீண்டும் தொடங்கும் மிடுக்காக 100 150 பேராவது திரளுவோம். என்ன கருணா கொஞ்சம் கெதியாக அந்தப்பக்கம் போட்டான் எங்களுக்கு கொஞ்சம் காலமெடுக்கும். எல்லா நாய்களும் நக்கித்தான்..

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வருசம் என்ன பல வருசம் என்ன சிங்களவன் தமிழனுக்கு நாமம் தான் இடுவான். இன்னுமா சிங்களவன் தருவான் என்று நம்புகிறீர்கள்?.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வருசம் என்ன பல வருசம் என்ன சிங்களவன் தமிழனுக்கு நாமம் தான் இடுவான். இன்னுமா சிங்களவன் தருவான் என்று நம்புகிறீர்கள்?.

இது தெரிந்து கொண்டும், அரசியல் நடத்துவது தான் சம்பந்த சாணக்கியம் என்று நினைக்கிறார் போலும்.

சம்பந்தர் சொல்வதில் குறை கண்டால் எல்லாம் சரியாகிவிடுமோ? ஏதோ ஒரு வழியில் அவர்கள் முயற்சிக்கிறார்கள். புலத்துத் தமிழரும் ஏதும் அவர்களுடன் சேர்ந்து முயற்சிக்கலாமே. அல்லது தனியாகவாவது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.