Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்குப் பிடிச்சிருக்கு! உங்களுக்கு.....?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்



முதற்கண் அனைவருக்கும் வணக்கம்.

கடந்த ஒருசில ஆண்டுகளாக பழைய தமிழ்ப் பாடல்களில் உள்ளம் ஒன்றிவிடுகின்றது. காரணம் அற்புதமான கவித்துவமான பாடல்வரிகளும், பாடல்வரிகளை மீறாத மென்மையான இனிய இசையும் ஆகும். இங்கே இணையத்தளங்களில் தேடியபோது என்னைக் கவர்ந்து இழுத்த பழைய பாடல்களையும், பாடல்வரிகளையும் இணைக்கலாம் என நினைக்கின்றேன். ஈற்றில் பாடலைக் குறித்த எனது உள உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ள விழைகின்றேன். நன்றி.



அலையே கடல் அலையே

ஏன் ஆடுகிறாய், என்ன தேடுகிறாய்

இன்ப நினைவினில் பாடுகிறாய்

என்னென்னவோ உன் ஆசைகள்

பொன்மணல் மேடை மீதினிலே

வெண்பனி வாடை காற்றினிலே

மயக்கும் மாலை பொழுதினிலே

காதலி…இந்த நாயகன்

பல நாள் வரை காத்திருக்க

என்னென்னவோ உன் ஆசைகள்

அலையே கடல் அலையே

நீ உருகாதே மனம் கலங்காதே

உன் அருகினில் நான் இருப்பேன்

என்னென்னவோ உன் ஆசைகள்

வசந்தத்தைத் தேடும் இளந்தளிரே

வாடையில் வாடும் பனி மலரே

நெஞ்சினில் என்றும் உன் நினைவே

கண்மணி உயிர் காதலி

என் கைகளில் தவழ்ந்திருக்க

என்னென்னவோ என் ஆசைகள்

கோவிலைத் தேடி தவமிருக்க

தேவியின் நாயகன் துணையிருக்க

ஆயிரம் பிறவிகள் இணைந்திருக்க

ஆயிரம் பிறவிகள் இணைந்திருக்க

தெய்வமே இளம் தென்றலே

எங்கள் காதலை வாழ வைப்பாய்

என்னென்னவோ நம் ஆசைகள்

அலையே கடல் அலையே

நீ உருகாதே மனம் கலங்காதே

உன் அருகினில் நான் இருப்பேன்

என்னென்னவோ நம் ஆசைகள்

என்னென்னவோ நம் ஆசைகள்

நிலை யொன்றி இசைகேட்டு உளமேங்கி

தலை சாய்க்க மடியொன்றைத் தேடும்

தாள் கண்டு இடையாடி - சங்கு

தோள் சேர இணையொன்றை நாடும்

Edited by காவாலி

  • கருத்துக்கள உறவுகள்

என்னென்னவோ நம் ஆசைகள்

என்னென்னவோ நம் ஆசைகள்

என்னென்னவோ நம் ஆசைகள்

வாத்தியார்

..................

சூப்பர் காவாலி.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஒருசில ஆண்டுகளாக பழைய தமிழ்ப் பாடல்களில் உள்ளம் ஒன்றிவிடுகின்றது.

வணக்கம் நண்பா! கட்டாக்காலியாய் திமிறித் திரிந்த காலம் போரடிச்சு இப்ப எனக்கு கால் கட்டு கட்டு என்று கொட்டில சுத்தி சுத்தி வாறிங்க புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சா சரி! அதுக்கு பழைய பாடல்கள்தான் சரியான சாய்ஸ்! :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

பல பாடல் வரிகளில் உள்ள சில விசயங்களை அதை அனுபவித்த பின் மீண்டும் அந்த வரிகளை கேக்கும் போது அந்த வரிகள் காதில் விழாது அந்த கணங்கள் தான் நெஞ்சில் விழும் :mellow:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைத் தந்த வாத்தியார், சிற்பி, சுவி மற்றும் சஜீவன் ஆகியேருக்கு நன்றி. <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்துக்களைத் தந்த வாத்தியார், சிற்பி, சுவி மற்றும் சஜீவன் ஆகியேருக்கு நன்றி. <_<

காவாலி.. என்ன காதலிக்கிறிங்களா? இல்லை கல்யாணமான புதிசா?

ரொம்ப கவிதை எல்லாம் எழுதுவின்க போல‌

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காவாலி.. என்ன காதலிக்கிறிங்களா? இல்லை கல்யாணமான புதிசா?

ரொம்ப கவிதை எல்லாம் எழுதுவின்க போல‌

ஜீவா, காதல் என்கிறது ஒரு தூய்மையான உணர்வு, விலங்குகள் மற்றும் பறவைகள் கூட தம் இணையைக் காதல் செய்கின்றன. காதல் இல்லை என்றால் இன்று நீங்களும் இல்லை நானும் இல்லை. இதில் நான் மட்டும் என்ன விதிவிலக்கா? :unsure:

எனக்கு கவிதை எல்லாம் எழுத வராதுங்கோ!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா, காதல் என்கிறது ஒரு தூய்மையான உணர்வு, விலங்குகள் மற்றும் பறவைகள் கூட தம் இணையைக் காதல் செய்கின்றன. காதல் இல்லை என்றால் இன்று நீங்களும் இல்லை நானும் இல்லை. இதில் நான் மட்டும் என்ன விதிவிலக்கா? :unsure:

எனக்கு கவிதை எல்லாம் எழுத வராதுங்கோ!

உந்த வசனம் எல்லாருக்கும் சரிப்படாது :unsure:

Edited by குமாரசாமி

நல்ல பாடல் Green_plus_icon.png

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வருகைக்கும் கருத்துத்துப் பகிர்வுகளுக்கும் குமாரசாமி அண்ணை மற்றும் குட்டி ஆகியேருக்கு நன்றி. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தானே தனக்குள் ரசிக்கின்றாய்

தலை முழுகாமல் இருக்கின்றாய்

தானே தனக்குள் ரசிக்கின்றாய்

தலை முழுகாமல் இருக்கின்றாய்

மானே எனக்குப் புரியாதா

மகன் வரப்போவது தெரியாதா

மானே எனக்குப் புரியாதா

மகன் வரப்போவது தெரியாதா

தானே தனக்குள் ரசிக்கின்றாய்

தலை முழுகாமல் இருக்கின்றாய்

காலம் வரும் வரை தாயின் வயிற்றிலே

கால்கள் உதைத்திடும் நாதம்

காலம் வரும் வரை தாயின் வயிற்றிலே

கால்கள் உதைத்திடும் நாதம்

ஆண்மை இடது புறம் பெண்மை வலது புறம்

உதைக்கும் என்பதே வேதம்

பச்சை மாவடுவைத் தேடி ஓடுவதன்

காரணம் நான்கு மாதம்

காதலோ ஆசை தாய்மையே பூஜை

தானே தனக்குள் ரசிக்கின்றாய்

தலை முழுகாமல் இருக்கின்றாய்

பருவ வாழ்வுதனில் தந்தை தந்தது

சிறிய பங்கு தான் கண்ணே

பருவ வாழ்வுதனில் தந்தை தந்தது

சிறிய பங்கு தான் கண்ணே

பத்தியத்திலும் சத்தியத்திலும்

தாய்மை காப்பவள் பெண்ணே

தெய்வம் பாதி உந்தன் திறமை பாதி

அவை காக்க வேண்டும் என் கண்ணை

தந்தை நான் வாசல் அன்னை நீ கோவில்

தானே தனக்குள் ரசிக்கின்றாய்

தலை முழுகாமல் இருக்கின்றாய்

மானே எனக்குப் புரியாதா

மகன் வரப்போவது தெரியாதா

தானே தனக்குள் ரசிக்கின்றாய்

தலை முழுகாமல் இருக்கின்றாய்

துடியிடை உடை களைந்து - இளமுலை

மடிமடை கசங்கி வரும் உயிர்சுமந்து

கொடியிடை நடை இழந்து - இளமாலை

பிடிநடை பயின்று வரும் பெண்ணழகே!

  • கருத்துக்கள உறவுகள்

.

எனக்கு மேலே உள்ள பாடல் அதன் குரலுக்காகவும், இசைக்காகவும் மிகவும் பிடிக்கும். :D

.

நல்லதொரு அழகான திரி

அலையே கடலையே பாடல் நான் மிகவும் ரசித்து கேட்கும் பாடல்களில் ஒன்று. மழை நாளில் வெளியே மழை கொட்டிக் கொண்டு இருக்கும் ஒரு வேளையில் காரில் போய்க்கொண்டு இருக்கும் போது இந்தப் பாடலைக் கேட்க மேலும் ரம்மியமாக இருக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.