Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளீவாய்க்காலை மறக்க கூடாது; தற்கொலை செய்துள்ள மாணவனின் வேண்டுதல்

Featured Replies

சென்னை: சென்னை [^] நுண் கலைக் கல்லூரியில் நேற்று தற்கொலை [^]செய்து கொண்ட மாணவர் சசிக்குமார் எழுதியுள்ள கடிதத்தில், முள்ளிவாய்க்கால் சம்பவத்தை உலகம் மறந்தாலும், தமிழர்கள் [^] மறக்கக் கூடாது என்று எழுதியுள்ளதால் இந்தத் தற்கொலைக்கான காரணம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

சென்னை எழும்பூரில் உள்ள நுண்கலைக் கல்லூரியில் படித்து வந்த மதுரை விளாங்குடியைச் சேர்ந்த மாணவர் சசிக்குமார், கல்லூரி வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

அவர் எழுதி வைத்திருந்த கடிதம் போலீஸ் கையில் சிக்கியுள்ளது. அதில் அவர் எழுதியிருப்பதாவது...

உலக இனத்தில் தமிழ் இனம் தலை சிறந்த இனமாகும் உழைப்பதற்காக வாழ்ந்த உயர் தமிழன் அடிமைப்பட்டு கிடப்பதா? பாலைவனத்தை சோலைவனமாக மாற்றும் மந்திரவாதிகள் தமிழர்கள்.

முள்ளிவாய்க்கால் சம்பவத்தை உலகம் மறந்தாலும் நாம் மறக்க கூடாது. வீடு தோறும் மரம் வளர்ப்போம். இல்லையென்றால் குடிநீர் விற்பனையாவது போல, காற்றும் வியாபாரமாகி விடும்.

மரம் எழுப்பும் கொள்கைக்காக என்னையே சமர்ப்பிக்கிறேன். எனக்காக கண்ணீர் சிந்தாதீர்கள். வாழ்த்தி வழியனுப்புங்கள்.

தயவு செய்து எனது உடல் உறுப்புகளை தானம் கொடுத்துவிடுங்கள். பிறந்த பூமியில் என்னை தவழ விடுங்கள். அசையாத புகைப்படமாக இருப்பதைவிட அசைந்தாடும் மரமாக நான் எழுவேன்.

நிகழ்காலமே எதிர்காலத்திற்கு நீ நிழல் கொடு. தமிழே உனக்கு தெரியாமல் உன்னை நான் நேசிக்கிறேன் என்று எழுதியுள்ளார் சசிக்குமார்.

thatstamil

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: சென்னை [^] நுண் கலைக் கல்லூரியில் நேற்று தற்கொலை [^]செய்து கொண்ட மாணவர் சசிக்குமார் எழுதியுள்ள கடிதத்தில், முள்ளிவாய்க்கால் சம்பவத்தை உலகம் மறந்தாலும், தமிழர்கள் [^] மறக்கக் கூடாது என்று எழுதியுள்ளதால் இந்தத் தற்கொலைக்கான காரணம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

சென்னை எழும்பூரில் உள்ள நுண்கலைக் கல்லூரியில் படித்து வந்த மதுரை விளாங்குடியைச் சேர்ந்த மாணவர் சசிக்குமார், கல்லூரி வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

அவர் எழுதி வைத்திருந்த கடிதம் போலீஸ் கையில் சிக்கியுள்ளது. அதில் அவர் எழுதியிருப்பதாவது...

உலக இனத்தில் தமிழ் இனம் தலை சிறந்த இனமாகும் உழைப்பதற்காக வாழ்ந்த உயர் தமிழன் அடிமைப்பட்டு கிடப்பதா? பாலைவனத்தை சோலைவனமாக மாற்றும் மந்திரவாதிகள் தமிழர்கள்.

முள்ளிவாய்க்கால் சம்பவத்தை உலகம் மறந்தாலும் நாம் மறக்க கூடாது. வீடு தோறும் மரம் வளர்ப்போம். இல்லையென்றால் குடிநீர் விற்பனையாவது போல, காற்றும் வியாபாரமாகி விடும்.

மரம் எழுப்பும் கொள்கைக்காக என்னையே சமர்ப்பிக்கிறேன். எனக்காக கண்ணீர் சிந்தாதீர்கள். வாழ்த்தி வழியனுப்புங்கள்.

தயவு செய்து எனது உடல் உறுப்புகளை தானம் கொடுத்துவிடுங்கள். பிறந்த பூமியில் என்னை தவழ விடுங்கள். அசையாத புகைப்படமாக இருப்பதைவிட அசைந்தாடும் மரமாக நான் எழுவேன்.

நிகழ்காலமே எதிர்காலத்திற்கு நீ நிழல் கொடு. தமிழே உனக்கு தெரியாமல் உன்னை நான் நேசிக்கிறேன் என்று எழுதியுள்ளார் சசிக்குமார்.

thatstamil

போனது மற்றுமொரு தமிழக உயிர் ...தற்கொலையை விடுத்து ஆளும் வர்க்கத்தை எதிர்க்க போராடி இருந்தால் நல்லது... இப்படியே எல்லோரும் தொடர்கதையாக இருந்தால் .....? முடிவு என்ன?

aniCandle.gif

கண்ணீர் அஞ்சலிகள்...

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணீர் அஞ்சலிகள்

பாசமிகு தமிழக உறவுகளே.

உங்கள் உயிராவது மிஞ்சட்டும். தற்கொலை உங்களை மட்டுமல்ல, உங்கள் தாய் தந்தையர், உங்கள் உறவுகள், அதிலும் முகம் தெரியாத எங்களைப் போன்றவர்களையும் மிக வருத்தும். தன்மானமும் துடிப்பும் மிக்க தமிழக உணர்வாளர்களே. உங்களால் இயலக்கூடிய வழிமுறைகளில் எல்லாம் ஒன்றிணைந்து பிரச்சனைகளின் பரிமாணங்களை வெளிக்கொண்டுவாருங்கள். தற்கொலை அந்த வழிமுறைகளில் ஒன்றல்ல.

அன்புடன்

- ஈழத்திருமகன் -

  • கருத்துக்கள உறவுகள்

பாசமிகு தமிழக உறவுகளே.

உங்கள் உயிராவது மிஞ்சட்டும். தற்கொலை உங்களை மட்டுமல்ல, உங்கள் தாய் தந்தையர், உங்கள் உறவுகள், அதிலும் முகம் தெரியாத எங்களைப் போன்றவர்களையும் மிக வருத்தும். தன்மானமும் துடிப்பும் மிக்க தமிழக உணர்வாளர்களே. உங்களால் இயலக்கூடிய வழிமுறைகளில் எல்லாம் ஒன்றிணைந்து பிரச்சனைகளின் பரிமாணங்களை வெளிக்கொண்டுவாருங்கள். தற்கொலை அந்த வழிமுறைகளில் ஒன்றல்ல.

அன்புடன்

- ஈழத்திருமகன் -

ஆமென்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

தோழன் சசிக்குமாருக்கு கண்ணீர் வணக்கங்கள்!

இவர் போன்ற தமிழ் உணர்வாளர்கள் இளமையிலேயே தம்மை மாய்த்துக்கொள்வது துயரம் நிறைந்தது. இவர்கள் உயிருடன் இருந்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் எவ்வளவோ பணிகளைத் தூய்மையோடு ஆற்றலாம். <_<

சசிக்குமாருக்கு கண்ணீர் அஞ்சலிகள் <_<

thcandle.gif

கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

sasi1.jpg

தம்பி சசிகுமார்

உன் கழுத்துக்கு சுருக்கிட்டது

உன் கைகள் அல்ல .......

எம் இனத்தை கொன்றொழித்த

சிங்கள வெறியர்களின் கைகள் ...

சிங்களனுக்கு ஆயுதம் கொடுத்த

வல்லரசுகளின் கைகள் .....

முள்ளி வாய்கால் பேரவலத்துக்கு பின்னும்

கைகட்டி மெளனமாக நின்றவர்களின் கைகள் ....

எஞ்சி நிற்கும் போராளிகளை காட்டி கொடுக்கும்

இன துரோகிகளின் கைகள் ....

உதடுகள் மனிதநேயம் பேச உள்ளத்தால்

அது இல்லாதவர்களின் கைகள் .....

தமிழ் தமிழ் என்று பிழைப்பு நடத்தி

தமிழனுக்கு பாதகம் செய்பவர்களின் கைகள் ....

ஆண்ட பரம்பரையை அடிமைகளாக்கி

பசிக்கு ஏந்த வைத்த கைகள் ....

வீடின்றி நிலமின்றி சொந்த மண்ணில்

பராரிகளாய் நிற்க வைத்த கைகள் .....

கவலை படாமல் செல்லடா வீர வித்தே

நாளைய ஈழம் எங்கள் கைகளில் ..........

சிபிசந்தர்

திரைப்பட இயக்குனர்

நன்றி : தமிழீழ புரட்சிகர மாணவர்கள்

Edited by விடலை

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாசம் நிறைந்த எம் இரத்த உறவுகளே இனியாவது தற்கொலைகளை நிறுத்துங்கள். நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.