Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொடூர முகங்கள்....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொடூர முகங்கள்

கவிதை - இளங்கவி

புலியாய் பாய்ந்தவள்

பிணமாகிய பின்னும்

அவளின் அம்மணத்தை ரசிக்கும்

கொடூர முகங்கள்.....

தமிழ் மானம் காக்க

தன்னுயிர் தர நினைத்தவள்

என்றோ நினைத்திருப்பாள்

தன் உயிர்தான் முதலில் போகுமென்று....

உயிர் போனபின்னும்

பிணம் தின்னிக் கழுகுகள்

சுற்றி நின்று

தன் பிணத்திலும்

பெண்மையை ரசிக்கும்

கூட்டத்தின் நடுவே

தன் குருதி ஈழமண்ணை நனைக்க

கருகிய பூக்களாய் கிடப்பாளென்று

கனவிலும் நினைத்திருக்காள்......!

மாவீரர் கல்லறையில்

மரியாதையாய்

துயில்கொள்ள நினைத்தவளுக்கு

மானமில்லா கொடூர முகங்களின்

கையடக்க தொலைபேசியில்

புகைப்படமாய் கிடப்பாளென்று

நினைத்திருக்கவே மாட்டாள் தான்.......

பூப்படைந்த நாள் முதல்

பொத்திவைத்த பெண்ணழகை

காக்கை கூட

பார்க்காமல் காத்தவளுக்கு

வீர வேங்கையாய் வீழ்ந்த பின்

ஏமாற்றம் தான்....!

என்ன செய்வது எமது மண்

மாற்றான் கையில்...!

நிலம் கைமாறும் வரை

எம் இனத்துக்கு சோதனை தான்......

இன விடுதலைக்காக ஏங்கும்

தமிழனாய் இருந்து

என்னால் முடிந்ததெல்லாம்

வேங்கைகளாய் வீழ்ந்த உமக்கு

எனது வீர வணக்கங்களும்....

கோர முகங்களின்

கொடூரக் காமப்பசிக்கு

விருந்தாகிய உன்

வீழ்ந்த உடலுக்காய்

ஒருதுளிக் கண்ணீரும்......

உன் உடன் பிறவாச் சகோதரனாய்

உங்களின் லட்சியப் பாதையால்

தினமும் நடந்து செல்லும்

தமிழீழத் தமிழனாய்

இருக்கமட்டும் தான் முடியும்.....

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இளங்கவி எம்முள வேதனைகளையும் பிரதிபலித்ததற்கு! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இளங்கவி அண்ணா

சிங்களக் காடைகளின் கொடூர முகம் எந்த வடிவத்திலும் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும்

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்காய் அர்ப்பணித்தவீரர்களை நினைவு கூரும் உங்கள் கவிதைக்கு நன்றி.

நீண்டநாட்களின் பின் உங்கள் வரவு. மகிழ்ச்சி

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை..

  • கருத்துக்கள உறவுகள்

வலிகளே வார்த்தைகளாய்.........நன்றி இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஒன்றை மட்டும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அது எதுவெனில், எமது மாவீரர்கள் தமது உடல், உயிர், தமிழீழ விடுதலை எனும் உணர்வுதவிர்ந்த ஏனைய உணர்வுகளையும் அதற்கு மேலாக தமது மானத்ததைக்கூட தமிழீழ தேசத்திற்காய் மரிக்கப்பண்ணியவர்கள் என்பதை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி இளங்கவி எம்முள வேதனைகளையும் பிரதிபலித்ததற்கு! :lol:

suvy

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு.....

எங்கள் மண்ணை நேசிக்கும் அனைவரினதும் கவலைகள் இத்தனை தியாகங்களும் வீணாகி விடக்கூடாதென்பதே....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி இளங்கவி அண்ணா

சிங்களக் காடைகளின் கொடூர முகம் எந்த வடிவத்திலும் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும்

வாத்தியார்

*********

வாத்தியாருக்கு

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொடூர முகங்கள்

கவிதை - இளங்கவி

இன விடுதலைக்காக ஏங்கும்

தமிழனாய் இருந்து

என்னால் முடிந்ததெல்லாம்

வேங்கைகளாய் வீழ்ந்த உமக்கு

எனது வீர வணக்கங்களும்....

கோர முகங்களின்

கொடூரக் காமப்பசிக்கு

விருந்தாகிய உன்

வீழ்ந்த உடலுக்காய்

ஒருதுளிக் கண்ணீரும்......

இளங்கவி

என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எல்லோரதும் எண்ண ஓட்டங்களின் வரிகள்.

இணையத்தில் கண்ணீரஞ்சலி செலுத்தும் நிலையில் நாம்.

விளலுக்கு இறைத்த நீராய் அவர்களின் தியாகங்கள். :rolleyes::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாட்டுக்காய் அர்ப்பணித்தவீரர்களை நினைவு கூரும் உங்கள் கவிதைக்கு நன்றி.

நீண்டநாட்களின் பின் உங்கள் வரவு. மகிழ்ச்சி

நிலாமதி அக்காவுக்கு

அளப்பரிய தியாகங்கள் மண்ணில் நிகழ்ந்து விட்டன, நிகழ்ந்து கொண்டிருக்கின்றன, இன்னும் எவ்வளவு நிகழப்போவதுவோ தெரியவில்லை அக்கா....

அந்தத் தியாகங்களையெல்லாம் வீணடிக்கும் அளவுக்கு துரோகங்களுமல்லவா நிகழ்வது தான் மிகவும் வேதனை ...

கருத்துக்கு மிக்க நன்றி அக்கா...

முன்பு போல நேரம் கிடைப்பது இல்லை அதுதான் அடிக்கடி வர முடிவதில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கவிதை..

புரட்கர தமிழ்தேசியன்....

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வலிகளே வார்த்தைகளாய்.........நன்றி இளங்கவி

காவலூர் கண்மணியக்கா

வலிகளில் ஒரு துளிதான் இந்தக் கவிதை.... இலங்கைத் தமிழினத்துக்கு வலிகள் கடலிலும் பெரிதாக் தற்போது இருக்கிறது.... அதைத்தாண்டி மீண்டுவருவது என்பது எங்கள் கைகளில் தான்....

கருத்துக்கு மிக்க நன்றி அக்கா.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் ஒன்றை மட்டும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அது எதுவெனில், எமது மாவீரர்கள் தமது உடல், உயிர், தமிழீழ விடுதலை எனும் உணர்வுதவிர்ந்த ஏனைய உணர்வுகளையும் அதற்கு மேலாக தமது மானத்ததைக்கூட தமிழீழ தேசத்திற்காய் மரிக்கப்பண்ணியவர்கள் என்பதை.

Elugnajiru

நீங்கள் சொன்னதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை...

தங்களை முழுமையாகவே விடுதலைக்காய் அர்ப்பணித்தவர்கள்..... அவர்களின் தியாகங்கள் விழலுக்கிறைத்த நீராகிவிடக்கூடாது என்பது எங்கள் கைகளில் மட்டும் தான் இருக்கிறது....

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எல்லோரதும் எண்ண ஓட்டங்களின் வரிகள்.

இணையத்தில் கண்ணீரஞ்சலி செலுத்தும் நிலையில் நாம்.

விளலுக்கு இறைத்த நீராய் அவர்களின் தியாகங்கள். :( :(

ஜீவா

அவர்களின் தியாகங்கள் என்றுமே வீணாகாது..... அது வீணாகிப் போகவும் விடக்கூடாது என்பது எம் செயிலில் தான்....

கருத்துக்கு மிக்க நன்றி ஜீவா....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.