Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆடி அமாவாசை அன்று கீரிமலையில் மாமிசப்பாவனை தாராளம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

.

ஆடி அமாவசை என்பது இந்துக்களின் முக்கிய தினம்.

அது ஆடம்பரமானதல்ல,

எவர் பெற்றோரை இழந்தரோ அவர் தான் பிடிக்க முடியும்.

அதிலும் கெடு பிடியா?

நேற்று ஆடி அமாவாசை. காத்தோட்டிக்காய் பொரிக்காமல் நான் விரதம் இருந்தேன்.

.

.

ஆடி அமாவசை என்பது இந்துக்களின் முக்கிய தினம்.

அது ஆடம்பரமானதல்ல,

எவர் பெற்றோரை இழந்தரோ அவர் தான் பிடிக்க முடியும்.

அதிலும் கெடு பிடியா?

நேற்று ஆடி அமாவாசை. காத்தோட்டிக்காய் பொரிக்காமல் நான் விரதம் இருந்தேன்.

.

அது என்ன காய்?

  • கருத்துக்கள உறவுகள்

அது என்ன காய்?

காத்தோட்டிக்காய்.

கிட்டத்தட்ட சின்ன வட்டுக் கத்தரிக்காய் போலிருக்கும்.

ஆனால் அது நெடுகலும் சந்தையில் வாங்க முடியாது.

ஒரே... ஒரு நாள் தான் சந்தைக்கு வரும். அன்றுதான் ஆடி அமாவாசை.

மற்றைய நாட்களில் வீட்டில் சமைக்கமாட்டார்கள். சரியான கைப்பு.

அதற்கான பயொலஜி பெயர் தெரியவில்லை. சிவா.

சுண்டங் கத்தரிக்காயா?

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டங் கத்தரிக்காயா?

manathakkkali%20002.jpg

இல்லை அர்ஜுன். சுண்டங்கத்தரிக்காய் சின்னன். இப்படி இருக்கும்.

என்ன..... காத்தோட்டிக்காயை ஒருத்தருக்குமே தெரியாதா? :wub:

நீங்க உண்மையாய் யாழ்ப்பாணத்தில் இருந்தனீங்களா? :o:huh:

  • கருத்துக்கள உறவுகள்

தூதுவிளங்காயா?

  • கருத்துக்கள உறவுகள்

தூதுவிளங்காயா?

sidha_thuthu_spl.jpgThuthuvalai+kai.jpg

புலவர் நீங்கள் தூதுவளையை சொல்கிறீர்கள் என்று நினைக்கின்றேன். அது இல்லை.

காத்தோட்டி காயை இணையத்தில் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

காத்தோட்டிக்காய்

இப்படி ஒரு பெயரை கேள்விப்பட்டதே இல்லை

  • தொடங்கியவர்

ஆடி அமாவாசை அன்று கீரிமலையில் மாமிசப்பாவனை தாராளம். என்ற தலையங்கத்தில் காத்தோட்டிக்காய் பற்றிய தேடலைப் பார்த்தேன். நேரடியாக கருத்தெழுத நான் யாழ்கள உறுப்பினன் அல்ல, வாசகன். ஆகவே உங்கள்மூலம் தருகிறேன். அர்ஜுன். புலவர் அவர்களுக்கு உதவலாம்.

சைவசமய முறையைத் தழுவிவாழும் தமிழர்கள் ஈழத்தில் அதிகமுண்டு. உயிர்களைக் கொல்லுவது பாவம் என்னும் கோட்பாடு இச்சமயத்தில் முதன்மையானதால், சைவர்கள் தாவரங்களை மட்டுமே உணவாக உண்டு வாழ்கின்றனர். ஆனாலும் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என அந்தக் காலங்களிலேயே உணர்ந்தவர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர். அதன்வழியே ஆடி அமாவாசை நாளில் விரதம் இருந்து, பயங்கர பாம்புப் புற்றுள்ள பற்றைகளிடையே வளர்ந்து ஆடிமாதத்திலே அதிகம் காய்க்கும் காத்தோட்டிச் செடியின் மிக மிகக் கசப்பான காய்களைப் பொரித்து உண்டு, தாவரங்களைக் கொல்லும் பாவத்தைப் போக்குவதற்கு, தங்களை வருத்திக் கொள்வதாக என் தாயார் கூறுவார்.

காத்தோட்டிச் செடிக்கும் உயிர் உண்டு அதனைக் கொல்வது பாவமில்லையா என்ற கேள்வியும் எம்மிடம் எழலாம். அப்படிப்பார்த்தால் உலகில் எந்த உயிருமே வாழமுடியாது. பாவங்கள் உலக இயல்பு, பாவங்களுக்காக வருந்துவது அது எல்லைமீறிச் செல்லாது பாதுகாப்பதற்கு உதவும்.

இப்படிக்கு

மகேந்திரா.

மேற்படி விடயம் வாசகர் ஒருவரால் அனுப்பி வைக்கப்பட்டது.

வட்டுக் கத்தரி என்று ஒரு கத்தரி தெரியும். இலைகளில் முள்ளு இருக்கும். தட்ட உருண்டையாய் இருக்கும். தரிசு நிலங்களில் வளரும்.

எனக்குத்தெரியும் காத்தோட்டியங்காய். ஆடிஅமவாசைக்குத்தான் பொரிக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்டால் இண்டைக்கு தான் கேள்விப்படுறன்...இங்கு தமிழ் கடையில் இருக்குதா வேண்டுவதற்கு இல்லை பார்ப்பதற்கு :)

  • கருத்துக்கள உறவுகள்

கிராமப்புறங்களில் வளருகிற காயாக இருக்கும் காத்தோட்டிக் காய்..! :)

காத்தோட்டிக்காய்.

கிட்டத்தட்ட சின்ன வட்டுக் கத்தரிக்காய் போலிருக்கும்.

ஆனால் அது நெடுகலும் சந்தையில் வாங்க முடியாது.

ஒரே... ஒரு நாள் தான் சந்தைக்கு வரும். அன்றுதான் ஆடி அமாவாசை.

மற்றைய நாட்களில் வீட்டில் சமைக்கமாட்டார்கள். சரியான கைப்பு.

அதற்கான பயொலஜி பெயர் தெரியவில்லை. சிவா.

கண்டங் கத்தரிக்காய் என்றுதான் நினைக்கிறன் சிறி

ஊருக்கு ஊர் சிலவேளைகளில் பெயர் வித்தியாசப்படலாம் என நினைக்கிறன்

  • கருத்துக்கள உறவுகள்

எங்க நிலமையை பாத்திங்களா :D அப்ப எதிர் கால சநததி :)

  • கருத்துக்கள உறவுகள்

காத்தோட்டிக்காய்: சுண்டந்காயை விட கொஞ்சம் பெரிதாக இருக்கும். ஆடி அம்மாவாசை யன்று மட்டும் கீரிமலையிலும் சுற்றியுள்ள ஊர்களின் சந்தைகளிலும் விற்கப்படும் . மற்றைய நாட்களில் அதை யாரும் வாங்கி சமைப்பதில்லை. விரதம் பிடிப்பவர்கள் சாப்பிடும் முன் இலையில் பொரித்து வைத்திருக்கும் காத்தோட்டிக் காயை முதலில் எடுத்துக் கடிக்க வேண்டும். அது மிகவும் கசப்பாக இருக்கும். அத்துடன் தந்தையாரின் நினைவையும் ஆத்மார்த்தமாக நினைந்து மறக்க வேண்டும் என்று சொல்வார்கள்.

புலம் பெயர்ந்த நாடுகளில் காத்தோட்டிக் காய்க்குப் பதிலாக பாகற்காயை சிறு துண்டுகளாக வெட்டிப் பொரித்து சாப்பிடுவது வழக்கம்! :):D

பேட்டியில் கதிரவேற்பிள்ளை மடம் பற்றி பரமேசுவரன் அவர்கள் கூறினார். நகுலேசுவரக் குருக்கள் தனது குறுகிய வியாபார நோக்கங்களிற்காக குறிப்பிட்ட மடத்தை கோயில் வளாகத்தில் இருந்து அகற்றிவிடுவதற்கு முயற்சி செய்வதாக கூறினார். கேட்கப்பட்ட ஓர் கேள்வியில் நீங்கள் இங்கு மாமிசம் புசிக்கக்கூடாது என சிங்கள மொழியில் அறிவுறுத்தல் பலகையை இடவில்லையா என்கின்ற கேள்விக்கு மழுப்பலாக பதில்கூறி உள்ளார். உண்மையைக் கூறப்போனால் தரப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது கோயில் நிருவாகம் கோயில் வளாகத்தில் மாமிசம் புசித்தல் கூடாது என கண்டிப்பாக எதுவித அறிவித்தலையோ சுற்றுலா பயணிகளிற்கு விடுவிக்கவில்லை. இது யார் தவறு?

தலைப்பை வேண்டுமானால் நகுலேசுவரர் கோயில் நிருவாகத்து முறைகேடுகள் என மாற்றலாம். அதுவே பொருத்தமாக அமையும்.

நிற்க..

கீரிமலை ஓர் கடற்கரைதானே..? நம் ஆட்கள் வெளிநாட்டு கடற்கரைகளில செய்கிற கூத்துக்களை பற்றியும் சற்று சிந்தித்து பார்க்கலாமோ?

Edited by கரும்பு

  • கருத்துக்கள உறவுகள்

வட்டுக் கத்தரி என்று ஒரு கத்தரி தெரியும். இலைகளில் முள்ளு இருக்கும். தட்ட உருண்டையாய் இருக்கும். தரிசு நிலங்களில் வளரும்.

கண்டங் கத்தரிக்காய் என்றுதான் நினைக்கிறன் சிறி

ஊருக்கு ஊர் சிலவேளைகளில் பெயர் வித்தியாசப்படலாம் என நினைக்கிறன்

Thai_eggplant.jpgmakeur-thai-auberginen.jpg

தப்பிலி, இந்தப் படத்தில் இடது பக்கம் உள்ளது தானே... வட்டுக்கத்தரிக்காய்.

காரணிகன், வட்டுக்கத்தரியும், கண்டங்கத்தரியும் (சுண்டங்கத்தரி அல்ல) ஒன்று என நினைக்கின்றேன்.

ஆனால்..... காத்தோட்டிக் காய் கத்தரி இனத்தை சேர்ந்ததா என்று தெரியவில்லை. அதன் உள் அமைப்பு வேறு...

அதன் விதைகளும் முந்திரிகைப் பழத்தின் விதைகள் போன்றிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

மேற்படி விடயம் வாசகர் ஒருவரால் அனுப்பி வைக்கப்பட்டது.

எனக்குத்தெரியும் காத்தோட்டியங்காய். ஆடிஅமவாசைக்குத்தான் பொரிக்கிறது

காத்தோட்டிக்காய்: சுண்டந்காயை விட கொஞ்சம் பெரிதாக இருக்கும். ஆடி அம்மாவாசை யன்று மட்டும் கீரிமலையிலும் சுற்றியுள்ள ஊர்களின் சந்தைகளிலும் விற்கப்படும் . மற்றைய நாட்களில் அதை யாரும் வாங்கி சமைப்பதில்லை. விரதம் பிடிப்பவர்கள் சாப்பிடும் முன் இலையில் பொரித்து வைத்திருக்கும் காத்தோட்டிக் காயை முதலில் எடுத்துக் கடிக்க வேண்டும். அது மிகவும் கசப்பாக இருக்கும். அத்துடன் தந்தையாரின் நினைவையும் ஆத்மார்த்தமாக நினைந்து மறக்க வேண்டும் என்று சொல்வார்கள்.

புலம் பெயர்ந்த நாடுகளில் காத்தோட்டிக் காய்க்குப் பதிலாக பாகற்காயை சிறு துண்டுகளாக வெட்டிப் பொரித்து சாப்பிடுவது வழக்கம்! :D:lol:

நன்றி மகேந்திரா, செவ்வந்தி, சுவி. :)

உங்களுக்காவது காத்தோட்டிக்காயைப் பற்றி தெரிந்ததே.... :lol:

இல்லாவிட்டால் என்னை தனியே... வைத்து , கும்மியிருப்பார்கள். :)

.

Edited by தமிழ் சிறி

காத்தோட்டிக் காயின் உள் அமைப்பு கொவ்வைக் காய் போன்று இருக்கும். கொவ்வைக் காயும் பழுக்காவிட்டால் கைப்பாக இருக்கும். காத்தோட்டிக் காயைக் குறுக்கக மெல்லிய வட்டத் துண்டுகளாக வெட்டிப் பொரிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு பெயரை கேள்விப்பட்டதே இல்லை

நான் என்டால் இண்டைக்கு தான் கேள்விப்படுறன்...இங்கு தமிழ் கடையில் இருக்குதா வேண்டுவதற்கு இல்லை பார்ப்பதற்கு :)

கறுப்பி, ரதி நீங்கள் எதற்கும் தமிழ் கடைக்காரரிடம், இந்தக் காய் இருக்குதா? என்று கேட்டுப் பாருங்கள். இருந்தால் நிச்சயம் காட்டுவார். :)

எங்க நிலமையை பாத்திங்களா :lol: அப்ப எதிர் கால சநததி :)

சஜீவன் நீங்க வேறை..... எதிர்கால சந்ததி விரதம் பிடிப்பார்களோ... தெரியாது. இதற்குள் காத்தோட்டிக்காயை ஏன் தேடப் போகிறார்கள். :D

கிராமப்புறங்களில் வளருகிற காயாக இருக்கும் காத்தோட்டிக் காய்..! :)

ஓமோம்.... மற்றக்காய்கள் எல்லாம் ரொறன்ரோ, லண்டன், பரிஸ், பிராங்பேட் போன்ற நகரத்திலை தானே..... விளையுது. :)

இசைக்கு, ஆரிட்டையும் வாங்கிக் கட்டாட்டி, பத்தியப் படாது போலை. :lol:

.

காத்தோட்டிக் காயின் உள் அமைப்பு கொவ்வைக் காய் போன்று இருக்கும். கொவ்வைக் காயும் பழுக்காவிட்டால் கைப்பாக இருக்கும். காத்தோட்டிக் காயைக் குறுக்கக மெல்லிய வட்டத் துண்டுகளாக வெட்டிப் பொரிப்பார்கள்.

இணையவன், காத்தோட்டிக்காய் கத்தரி இனத்தை சேர்ந்தது என்று நினைக்கின்றீர்களா?

நான் அப்படி இராது என்று நினைக்கின்றேன்.

இணையவன், காத்தோட்டிக்காய் கத்தரி இனத்தை சேர்ந்தது என்று நினைக்கின்றீர்களா?

நான் அப்படி இராது என்று நினைக்கின்றேன்.

வெள்ளரி வகையைச் சேர்ந்தது என்று நினைக்கிறேன்.

kaaththooddi.png

[தப்பிலி, இந்தப் படத்தில் இடது பக்கம் உள்ளது தானே... வட்டுக்கத்தரிக்காய்.

ஓம் ஸ்ரீ. அதுதான். நான் பிழையாக நினைத்து விட்டேன்.

ஆனா ஒன்று, இந்த திரிக்கு சம்பந்தமில்லாமல் 2 பக்கத்திற்கு பலரை எழுதவச்ச இந்த காத்தோட்டிக் காயை அடையாமல் விடமாட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா...... காத்தோட்டிகாய் வத்தல் எடுத்தாச்சுது. :)

இந்த வத்தல் யாழ் காங்கேசன் துறை வீதியில் உள்ள கடையில் முன்பு வாங்கியது.

உங்களுக்காக அந்தப் படத்தை இணைக்கின்றேன். :D

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.