Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீருடையுடன் சீரழியும் சிறுவர் சிறுமியர் ( நேரடி வீடியோ)‏

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரீவி பெட்டியைப் பார்த்து அட்டை விழுந்ததும் தெரியாமல் அதையும் செத்தல் மிளாகாய் என்று சேர்தது அரைத்தாளாம் மம்மி ஒருத்தி

புருசன் வீட்டுக்கு வந்தானா, சாப்பிட்டானா என்று எதையும் பாராமல் சீரியல்ல கள்ளத் தொடர்பு வைச்சிருக்கிற கதாநாயகி பற்றி கவலைப்படுகிறிகளேயடி.

நீங்கள் இப்பிடி தொடர்ந்து இருந்தால் உங்கட புருசன்மாரும் மாறுவாங்களடி சீரியல் கணவன் போல.

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவன் நல்லவன் அவதும் கெட்டவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே என்று பாடினது சும்மாவாடி?

மாலை ஆறு மணிவரையும் அருமருந்தன்ன பிள்ளைகளை இப்படி இன்ரநெற் சென்ரரில ஏனடி சீரழிய விட்டிருக்கிறீர்கள்?

பிள்ளைகள் பார்த்து விட்டுப் போன இணையத்தளத்தை கூப்பிட்டு காட்ட வேணுமடி உங்களுக்கு.

என்ர கடவுளே முப்பது வயதில உங்கட புருசன்மார் பார்த்திருக்காத எல்லாத்தையும் பத்து வயதில உன்ர பிள்ளைகள் பார்க்குதுகளடி.

பதினைந்து வயதில ஒரு மருமகளை கூட்டிவந்து உன்ர மகன் முற்றத்தில நிப்பாட்டேக்க அப்போ தொடங்கும் மாமி மருமகள் சீரியல் உன்ர வீட்டில

14 வயதில உன்ர பெட்டைப்பிள்ளை வயிறு நிறைந்து வரத்தான் தெரியும் 'மாதவி' சீரியல் பார்த்த அருமை.

நல்ல பள்ளிக்கூடத்திலையும் நல்ல ரியூசனிலையும் சேர்த்துவிட்டால் சரி என்டு இருந்தியோ பிறகு உனர கொண்டையில இடி விழும் போதுதான் தெரியும் என்ன பிரச்சனை என்று

படிப்பிக்கிற வாத்திமாருக்கு எத்தனையோ கவலைகள். ரான்சர் கிடைத்த கவலை, ரான்சர் கிடைக்காத கவலை, அதிபர் ஏசின கவலை, மனிசி ஏசின கவலை இப்படி ஆயிரம் கவலைகளோட இருக்கிறவங்கள் உன்ர பிள்ளையை பின்னால வந்து பார்ப்பாங்கள் என்று நினைக்கிறியா?

எங்கட ரீச்சர்மாருக்கு அதை விட ஆயிரம் கவலைகள்.

ரியூட்டறி வைச்சு நடத்துறவங்களுக்கு ரீயூசன்ல காசு எப்ப கூட்டி வாங்கலாம், எத்தனை 'ரீயூட்' அடிச்சு விற்கலாம் என்று ஏராளமான நினைப்பு. அவங்கள் உங்கட பிள்ளைகளை பார்ப்பாங்களோ பின்னால வந்து?

கொஞ்ச நேரம் உன்ர பிள்ளைகளில கவனத்தை செலுத்த உனக்கு என்ன கோதாரி?

புருசன்மாருக்கு எத்தனையோ துளைவாரங்கள் இருக்கும். பெத்த தாய் நீ. இதுகள் சீரழிய விட்டுவிட்டு முத்தி வெடிக்க கத்திப் பலனில்லை மம்மிமாரே

உங்களைப் போல ஒரு பெண்தானே ( இமல்டா சுகுமார்) கலாச்சார சீரழிவை கட்டுப்படுத்துவேன் என்று கங்கணம் கட்டி நிற்கின்றாள்.

அதை நீங்கள் உங்கட வீடுகளில இருந்து ஆரம்பிக்க மாட்டிங்களோ மம்மிமாரே?

நீங்கள் தான்டி கண்ணுக்குள்ள விளக்கெண்ணெய் வைத்துக் கொண்டு திரிய வேணும் இதுகளை கவனிக்கிறதுக்கு?

http://www.newjaffna.com/fullview.php?id=NjI0

!

மரியாதையா கருத்தெழுதப்பழகுங்கள்..

கருத்துநடை மிகவும் கீழ்த்தரமாக இருக்கிறது..

உலகமயமாக்கலை ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது தற்கொலை செய்துகொள்ளுங்கள்..

கெட்ட கேட்டுக்கு விண்ணானத்துக்கு மட்டும் குறைவில்லை. :o

  • கருத்துக்கள உறவுகள்

இணைய வசதி இல்லாத படியால் பாடசாலை சம்மந்தமாகவும் நெற் கபேக்கு வருகிறார்கள் அதில் என்ன தப்பு?

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் எப்பவும் மாட்டு வண்டில் தான் ஓட வேண்டும்.அதேபோல் வன்னியில சனம் கோவணத்தோடதான் திரிய வேனும்.நாங்கள் மட்டும் என்னவும் செய்யலாம். :rolleyes:

இணைய வசதி என்பதை நல்லதுக்கும் பாவிக்கலாம் கெட்டதுக்கும் பாவிக்கலாம்.புலத்தில் பாடசாலைகளில் இணைய வசதி செய்து கொடுக்கிறார்கள்.ஆனால் அவர்களைக் கண்காணிப்புகுள் வைதிருப்பார்கள், வயது வந்தோருக்கான இணையத் தளங்களை தடை செய்து இருப்பார்கள்.ஆனால் யாழ்ப்பாணத்தில் பணம் உழைப்பதற்காகவும் இளைய சமூகத்தைச் சீரழிப்பதற்காகவும் எந்த கட்டுப்பாடுகளும் கண்கானிப்புக்களும் இன்றி இவ்வாறான இடங்கள் அரச உதவியுடன் அமைக்கப்பட்டு வருகின்றன.முன்னரும் சிறிலங்கா அரசு சட்டவிரோதமான சினிமாக் கொட்டகைகளை இவ்வாறு தான் ஊக்குவித்தது.இதனை எதிர்கொள்ள பெற்றோர்,சமூக ஆர்வலர், பாடசாலை அதிபர்கள் அரச அலுவலர் என்போர் ஒன்றிணைத்து ஒரு அமைப்பின் கீழ் போராட வேண்டும்.அதை விட்டு விட்டு இவவாறு கீழ்த்தரமான மொழியில் அம்மாக்களை மட்டும் திட்டுவது மிகவும் ஒரு கீழத்தரமான பார்வை.அப்பாக்கள்,பாடசாலை அதிபர்கள் ஆசிரியர் என எலோருக்கும் பொறுப்பு இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அவரது கருத்தையும் நாம் பார்க்கவேணும்

அம்மாமாரும் இப்ப சீரியலில்தான் முடங்கிப்போய்க்கிடக்கினம்

அதேநேரம் இது ஒரு கூட்டுப்பொறுப்பு

எல்லோரும் சிந்துத்து செயற்படணும்

இது போல ஒரு தொழில் செய்பவன் என்கின்ற ரீதியில்..

எனது பிள்ளைகளைப்போல் பார்ப்பேன் என்று பல பெற்றோர் என்னிடம் கொண்டு வந்து விட்டுவிட்டு போவார்கள்

அவர்களை எனக்கு முன்னுக்கு வைத்து பார்ப்பேன்

தேவையானவற்றை கேட்டும் தெரிந்து கொள்வார்கள்.

ஊரில் எல்லா வீடுகளிலும் கணனிகள் இல்லை, அப்படி இருக்கும் எல்லார் வீடுகளில் இணைய வசதிகள் இருப்பதும் இல்லை. அதனால் மாணவர்கள், சிறுவர்கள் படிப்பு சம்பந்தமாகவோ, பொழுது போக்கு சம்பந்தமாகவோ, வெளிநாட்டில் இருக்கும் உறவினர், நண்பர்களுடன் கதைப்பதற்கோ நேரத்தை செலவிடலாம். ஒரு சிலர் தமக்கு தேவைக்கு அதிகமான பகுதிகளுக்கு சென்று பார்வையிடலாம் உண்மைதான்! அங்குள்ள சில உரிமையாளர்கள் பொதுவாக ஒரு கண் வைத்திருப்பார்கள் (மேட்பார்வையிடுவார்கள்), அந்த நேரம் பார்த்து வெறும் 'டெஸ்க் டப்'பை பார்த்தவண்ணம் இருப்பார்கள். இது நான் நேரில் கண்டது.

கருத்துப் பிழை என்பதை விட எழுத்து நடை முறை பிழை என்பதையே இங்கே கூறப் பட்டு இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் போட்ட படத்தில் என்ன தப்பாகத் தெரிகிறது?எல்லா வீpட்டிலும் பாடசாலைகளிலும் இணைய வசதிகள் இல்லாத பொழுது அவர்கள் அங்கே போவதில் எந்தப் பிழையும் இருக்க முடியாது. நெற் கபே நடத்துபவர்கள் இதனை பயன் படுத்துவது நமது சமுகத்தைச் சேர்ந்த இளைய சமுதாயமே என்பதை மனதில் வைத்து அவர்களுக்கென தனியான கண்காணிப்புக்களுடன் கூடிய கணனிகளைப் பயன் பயன்படுத்தலாம்.அதை விட மாற்றம் என்பது மாறாதது.எமது இளமைக் காலத்திற்கும்; எமது பெற்றோர்களது இளமைக் காலத்திற்கும் தலைமுறை இடைவெளி இருந்தது போல எமக்கும் எமது பிள்ளைகளுக்கும் தலைமுறை இடைவெளி இருக்கும். பூட்டிப் பூட்டி வைத்து ஒன்றும் தெரியாதவர்களாக வளர்ப்பதை விட எல்லாம் வெளிப்படையாக இருக்கும் பொழுது அவர்களே நல்லது எது கெட்டது எது என்பதைப் பகுத்தறியும் ஆற்றலைப் பெற்றுக் கொள்வார்கள்.கெட்டுப் போக நினைப்பவர்களை யார் தடுத்தாலும் நிறுத்த முடியாது.இறுக்கமான கட்டுப்பாடுகள் நிறைந்த யாழ்ப்பாணத்தில் பழைய காலங்களில் தவறு செய்தவர்கள் இருக்கிறார்கள் தானே.ஏன் அதைத் தடுக்க முடியாமல் போனது.ஆக அவர்கள் அறியா வண்ணம் ஒரு கண்காணிப்பு இருந்தால் போதுமானது.மற்றது எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று பிள்ளைகள் நினைக்கும் விதத்தில் பெற்றோர்கள் நடந்து கொள்ளக் கூடாது.அதை விட்டு இவ்வளவு கீழ்த்தரமாக எழுதுபவர் அந்தக்காலத்தில் எப்படி இருந்திருப்பார் என்பதை கற்பனை செய்து பார்க்க முடிகிறது.

சும்மா.. அம்மா, அப்பா, பாடசால அதிபர் , ஆசிரியர், ஐஸ்கிரீம் விக்கிறவன் மீது பொறுப்பை போடாமல்.. வலையுலம் என்பது பன்டோராவின் பெட்டி என்பதை சின்னங்களுக்கு விளங்கப்படுத்த்வேண்டும்..

மற்றும்படி கணனியின் ''பெற்றோர் கட்டுபாடு ஆதிக்கத்தை'' உச்சத்தில் வைத்திருப்பது மட்டும் போதுமானது...

---------------------------------------

புலவரே..

என் கேள்விக்கு பதில் என்னா..?

சும்மா மனதுக்கு வந்ததை எழுதி விட்டு ஒடிப்போய் ஒளிச்சா விட்டுடுவன் எண்டு நினைப்பா?..

http://www.yarl.com/forum3/index.php?showtopic=75722&st=20&p=613102&#entry613102

பதில் சொல்லும்..

Edited by Panangkai

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.