Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் பார்த்து இரசித்த பட்டி மன்றத்தை நீங்களும் ...

Featured Replies

  • தொடங்கியவர்

.... இந்த பட்டிமன்றில், என்னையும் பாதித்த/சுட்ட சில வரிகள், இவ்விளைஞனின் பேச்சில் இறுதியில் ....

.... வயோதிப இல்லத்தில் இருந்து ஓர் வயோதிப அம்மா தன் மகனுக்கு எழுதிய கடிதத்தில் இறுதி வரிகளில் ..... "அன்பு மகனே, உன் வீட்டு உணவு தான் எனக்கு இல்லை என்று ஆகி விட்டது!!! ஒருவேளை நீ இந்த கடிதத்துக்கு பதில் போட்டால், தபால் தலையை எச்சிலால் அல்ல, ஒரு சோற்றுப்பருக்கையால் ஒட்டி அனுப்பு" .....

... பல தடவை கேட்டு/பார்த்து விட்டேன்! ... நெஞ்சு நோகின்றது ... புலத்து வாழ்க்கை நினைத்து .....

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான இணைப்பு நெல்லையன்! :rolleyes:

இளைஞர் நன்றாக பேசுகின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

புலம் பெயர் வாழ்க்கையை நினைக்கும் பொழுது சில சமயம் இதுவும் ஒரு வாழ்க்கையா என்று எண்ணத்தோன்றும். அடுத்துச் சிந்திக்க முன்னம் அடுத்த வேலைக்கு நேரம் வந்திடும்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலிலேயே வருத்தம் சொல்லிக்கொள்கின்றேன்

யாரையும் தாக்குவதற்காக எழுதவில்லை இதை.

சில விடயங்கள் வெளிநாடுகளில் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பது எதற்காக...?

அவை சில அனுபவங்களின் அடையாளங்கள்.

எனது அம்மா என்னுடன் இருக்கின்றார். வயது 85.

அவர் தற்போதும் தனது வேலைகளை தானே செய்வார்

அவரால் முடியாது போனால் என்ன செய்வது என்று நான் முன்பே யோசித்தேன். ஒன்று நானே பராமரிப்பது. இரண்டு வேலையாளை வைத்து பராமரிப்பது. மூன்று ஒரு நல்ல பராமரிப்பு நிலையத்தில் சேர்த்துபார்ப்பது.

இதில் நான் தெரிவு செய்தது இரண்டாவதை. அதற்கான வசதியை என்னாலும் என்னால் முடியாதபோது எனது உடன்பிறப்புக்களினாலும் செய்யமுடியும்.

ஆனால் அதற்கு வழி இல்லாதவர்கள் அல்லது இருவருமே உழைத்தே ஆகவேண்டும் என்றநிலையிலிருப்பவர்கள் நல்ல இடங்களில் வைத்து பராமரிப்பது பிழையாக எனக்கு படவில்லை. அவர்களை நாம் கவனமாக பராமரிக்க முடியாதபோது இது போன்ற மாற்றீடுகளை தெரிவு செய்வது தப்பாக தெரியவில்லை. எனக்கும் இந்த நிலை வந்தால் நிச்சயம் எனது பிள்ளைகளை புரிந்து கொள்வேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேச்சுவல்லமை,எழுத்துவல்லமை என்பவற்றில் மயங்கி அழிந்த இனம் தமிழினம்

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுவல்லமை,எழுத்துவல்லமை என்பவற்றில் மயங்கி அழிந்த இனம் தமிழினம்

அந்த இளைஞன் சொல்வது அத்தனையும் உண்மை.. ஆனால் அவர் நினைச்சால் கூட அவரால் அந்தச் சூழலில் இருந்து வெளிவர முடியாத அளவுக்கு சமூக இறுக்கம்.. தேவை.. இன்றைய உலக அமைப்பில் அமைந்து விட்டுள்ளது.

அந்த வகையில் கு.சாண்ணா சொல்வது சாலப் பொருந்தும்..! :unsure:

Edited by nedukkalapoovan

முதலிலேயே வருத்தம் சொல்லிக்கொள்கின்றேன்

யாரையும் தாக்குவதற்காக எழுதவில்லை இதை.

சில விடயங்கள் வெளிநாடுகளில் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பது எதற்காக...?

அவை சில அனுபவங்களின் அடையாளங்கள்.

எனது அம்மா என்னுடன் இருக்கின்றார். வயது 85.

அவர் தற்போதும் தனது வேலைகளை தானே செய்வார்

அவரால் முடியாது போனால் என்ன செய்வது என்று நான் முன்பே யோசித்தேன். ஒன்று நானே பராமரிப்பது. இரண்டு வேலையாளை வைத்து பராமரிப்பது. மூன்று ஒரு நல்ல பராமரிப்பு நிலையத்தில் சேர்த்துபார்ப்பது.

இதில் நான் தெரிவு செய்தது இரண்டாவதை. அதற்கான வசதியை என்னாலும் என்னால் முடியாதபோது எனது உடன்பிறப்புக்களினாலும் செய்யமுடியும்.

ஆனால் அதற்கு வழி இல்லாதவர்கள் அல்லது இருவருமே உழைத்தே ஆகவேண்டும் என்றநிலையிலிருப்பவர்கள் நல்ல இடங்களில் வைத்து பராமரிப்பது பிழையாக எனக்கு படவில்லை. அவர்களை நாம் கவனமாக பராமரிக்க முடியாதபோது இது போன்ற மாற்றீடுகளை தெரிவு செய்வது தப்பாக தெரியவில்லை. எனக்கும் இந்த நிலை வந்தால் நிச்சயம் எனது பிள்ளைகளை புரிந்து கொள்வேன்.

இவ்வளவு பிரச்சினைகளுக்கும் மத்தியிலும் அவர்களை நீங்கள் பராமரிக்க வேண்டும் வயோதிபவ பருவத்தில் அவர்களுக்கு இருக்கிற சந்தோசம் என்ன இருக்குறது

தனியே அவர்களை தவிக்க விட்டு நீங்கள் என்ன நிம்மதியாகவா இருக்க போகிறீர்கள் உங்களை வளர்க்க எவ்வளவு கஸ்ரப்பட்டிருப்பார்கள் நீங்கள் உங்கள் பிள்ளைகளை

எவ்வளவு ஆசையோடு வளர்க்குரீர்களோ அதைவிட உங்களை பாசத்தோடு எந்நேரமும் வீட்டிலிருந்து கவனித்திருப்பார்கள் எங்களுக்கு வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள்

இருக்குறது என்பது உண்மைதான் ஆனால் அதையும் தாண்டி அவர்களை பராமரிக்க வேண்டியது அவசியம். வயோதிப பருவம் ஒரு சிறு குழந்தையை போன்றது அவர்களுக்கு தேவை அன்பும் அரவணைப்புமே தவிர

வேறொன்றுமில்லை நிம்மதி நாடி கோயில் குளம் என்று நாடுவதை தவிர இதை செய்தாலே கடவுள் உங்கள் வீடுதேடி வருவார். பணம் இன்று இருக்கும் நாளை போய்விடும்

வெளிநாட்டை பொறுத்தவரையில் விசுகு அண்ணன் சொல்வதில் உண்மையிருந்தாலும் அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை இங்கு எதிர்கால சந்ததிக்கு என்று ஒன்றும் சேர்த்து வைக்க வேண்டிய அவசியம் கிடையாது அவரவர் வாழ்க்கையை பார்த்துக்கொள்ள கூடிய வசதிகள் இங்குள்ளது . வெளிநாட்டவர்களே வியந்து பார்க்கும் எங்களது பண்பாடே இதில்தானே உள்ளது

Edited by சூர்யா

  • கருத்துக்கள உறவுகள்

அந்த இளைஞனின் பேச்சு திறமை அருமை.தெரிந்தோ தெரியாமலோ நாம் அந்த சூழ்நிலையில் தான் வாழ்கிறோம்.நெல்லையன் இணைப்புக்கு நன்றி.

"செல்போன்னுக்கு கொடுக்கும் முத்தம் தான் அதிகம்" நவீன உலகில் நாம் எப்படி வாழ்கிறோம் என்பதை சிந்திக்க வைத்தது.

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.