Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விரைவில் இந்தியாவிற்கு தமிழ் இளைஞர்கள் வந்து சினிமா பார்க்கலாம் - யாழில் கிருஸ்ணா

Featured Replies

இன்று காலை யாழில் இந்திய துணை தூதரகத்தை திறந்து வைத்தார். இதன் பின்னர் பொதுமக்களுக்கு உழவு இயந்திரத்தை கிருஸ்ணா வழங்கினார். இதன் பின்னர் உரையாற்றுகையில் இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் ஆயிரக்கணக்கான ஆண்டு உறவுகள் உள்ளது. கலாச்சாரத்தினால், பண்பாட்டினால் மொழியால் இந்தியா யாழ்ப்பானத்துடன் தொடர்பை கொண்டுள்ளது. மணிமேகலையில் கூட அந்த தொடர்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. நான் சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்துள்ளேன் . இன்றைய வருகை எனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியினை தருகின்றது.

மிக விரைவில் தலைமன்னார் கப்பல் சேவையும் திருச்சி பலாலி விமான சேவையும் ஆரம்பிக்கப்படும். இது ஓர் புது விடையம் அல்ல பல தசாப்தங்களுக்கு முன்னர் இந்த போக்குவரத்து அமைந்திருந்தது என குறிப்பிட்டார் கிருஸ்ணா.

விரைவில் தமிழ் இளைஞர்கள் கப்பலிலும் விமானத்திலும் படகிலும் தமிழ் நாடு வந்து படம் பார்த்துவிட்டு திரும்பும் நா|ள் வரும் என்றார் கிருஸ்ணா. அதற்காகவே இந்த துணை தூதரகம் என்றார்.

எல்லாம் சர் அரசியல் தீர்வு பற்றி என்ன சொல்கின்றீர்கள் என பத்திரிகையாளர் ஒருவர் கேட்டதற்கு...

அதற்கு அரசாங்கத்தை நாம் வற்புறுத்துவோம் என் மட்டுமே கூறினார்.

Eelanatham

சோ இந்த தூதரகம் அமைக்க பட்டத்தின் காரணம் ஈழ தமிழர் கப்பல் மூலம் தமிழ் நாடு பொய் சினிமா பார்க்க....

50 வருஷம் உன்னை மாதிரி மொள்ளை மாரிகளிடம் இருந்து காப்பாதினதுக்கே நன்றி சொல்லணும்

  • தொடங்கியவர்

சோ இந்த தூதரகம் அமைக்க பட்டத்தின் காரணம் ஈழ தமிழர் கப்பல் மூலம் தமிழ் நாடு பொய் சினிமா பார்க்க....

50 வருஷம் உன்னை மாதிரி மொள்ளை மாரிகளிடம் இருந்து காப்பாதினதுக்கே நன்றி சொல்லணும்

13 வது என்ற சாமானே இப்போ இல்ல, போதையில் பேசுற மாதிரி இந்த ஆள் அதைத்தான் தமிழர்க்கான தீர்வாகவும் அதற்கு மேல போறது கஸ்டம் என்றும் சொல்லுறார்.

மேலும் யாழ்.பல்கலைக்கழகத்தின் விவசாயப் பீடத்தினை நவீனமயப்படுத்தவும் இந்தியா ஆதரவு வழங்கியுள்ளது. இதேவேளை, அரசியல் தீர்வு குறித்த விடயம் நீண்டகாலப் பிரச்சினையாக உள்ளது. ஆனால் தற்பொழுது மோதல்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் மக்களின் உடனடிப் பிரச்சினையைத் தீர்க்கவேண்டிய தேவை உள்ளது.

மக்களின் குடியேற்றம், விவசாயம், நீர் போன்ற அடிப்படை மனிதாபிமானப் பிரச்சினைகளை முதலில் தீர்க்கவேண்டியுள்ளது. ஆனாலும் அரசியல் தீர்வு விடயத்தை நாம் பின்தள்ளிவைக்கவில்லை. அரசியல் தீர்வு குறித்த பேச்சுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. என்றார் கிட்டினா

இதனைத்தானே 2002 இல் இருந்து புலிகளும் சொன்னார்கள் ஆனால் அப்போ மடிச்சுக்கட்டிக்கொண்டு இந்தியா இலங்கை ஏன் மேற்குலகம் எல்லாம் தீர்வைப்பற்றி பேசு , பேசு என்று புலிகளை விரட்டினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

:D அது சரி,

40,000 மாவீரர்களும் 2 லட்சம் சனங்களும் தங்கட உயிரைக் குடுத்தது தமிழ்நாட்டுக்கு வந்து படம் பாக்கத்தானே??!!!

நீயும் உன்ர படமும், தூ........

தமிழக தலைவர் கடிதத்தில் சினிமா பற்றியும் அதை ஈழ மக்கள் அதிகம் பார்க்க வேண்டும் என சொல்லியுள்ளார்.

அதையும் கப்பலில் வந்து, அநேகம் இந்த கப்பல் நிறுவனமும் இவர் குடும்ப சொத்தாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

:D அது சரி,

40,000 மாவீரர்களும் 2 லட்சம் சனங்களும் தங்கட உயிரைக் குடுத்தது தமிழ்நாட்டுக்கு வந்து படம் பாக்கத்தானே??!!!

நாம் எல்லோரும் உறவுகளை இழந்திருக்கிறோம். இழந்தவற்றை நினைக்கும் போது அதற்கு பெறுமதியான தீர்வு கிடைக்காதது மனவருத்தத்தை தருகிறது. ஆனால், எமது பிரச்சினைகளை நாம் தீர்த்துக்கொள்ளும் ஆற்றலற்றவர்களாக இருப்பதற்கு மற்றவர்கள் மீது வெறுப்பு கொண்டு என்ன பயன்?

இந்தியா தனக்கென சில தேவைகளையும் கொள்கைகளையும் கொண்டுள்ளது. அந்த கொள்கைளுக்கு தனியான தமிழர் நாடு ஏற்றுக்கொள்ள தக்கதாக இல்லை. ஆகவே இந்தியா அதற்கெதிராக செயற்பட்டது. இலங்கை அரசை கட்டுப்படுத்த தமிழ் இளைஞர்களை ஆயுதமயப்படுத்த வேண்டிய தேவை இந்தியாவுக்கு இருந்தது. ஆகவே ஆயுதமயப்படுத்தியது. வல்லரசுகள் இவ்வாறுதான் வல்லரசுகளாக செயற்படுகின்றன. இதனை புரிந்து கொண்டு இந்த நடைமுறை நெருக்குதல்களுக்கு ஊடாக எமது மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை எவ்வாறு பெற்றுக் கொடுக்கலாம் என்று சிந்திப்பது பயனுள்ளதாக அமையும். வெளிநாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகள் இந்திய அரசுடன் தொடர்பு கொண்டு வடக்கு கிழக்கு பொருளாதார அபிவிருத்தி பற்றி கலந்துரையாடுவது பயனுள்ளதாக அமையலாம்.

  • தொடங்கியவர்

இந்தியா தன்ர வேலையையே சிறிலங்காவில செய்ய மாட்டாமல் முக்குது, பாம்பு புத்திற்குள்ள கையை வைக்குமால் போலதான் அவையலின்ர கதை இருக்கு.. இது இப்படி இருக்க தமிழ் மக்களுக்கு எதைச்செய்ய முடியும்.. இந்தியா செய்கின்ற திட்டத்தை கூட மக்களுக்கு நேரடியாக செய்ய முடியாமல் இருக்குது.

விஜயின் சுறாவை பாக்கிறதுக்கு பதிலா யாழ்ப்பாணத்திலை சனம் தற்கொலை செய்து கொள்ளலாம்... படமாடா எடுக்கிறீங்கள் அதை பாக்கிறதுக்கு....?? ஏதோ வடிவேலு இருக்கிறதாலை ஓடுது... :D

Edited by தயா

இந்தியா தனக்கென சில தேவைகளையும் கொள்கைகளையும் கொண்டுள்ளது. அந்த கொள்கைளுக்கு தனியான தமிழர் நாடு ஏற்றுக்கொள்ள தக்கதாக இல்லை. ஆகவே இந்தியா அதற்கெதிராக செயற்பட்டது. இலங்கை அரசை கட்டுப்படுத்த தமிழ் இளைஞர்களை ஆயுதமயப்படுத்த வேண்டிய தேவை இந்தியாவுக்கு இருந்தது. ஆகவே ஆயுதமயப்படுத்தியது. வல்லரசுகள் இவ்வாறுதான் வல்லரசுகளாக செயற்படுகின்றன. இதனை புரிந்து கொண்டு இந்த நடைமுறை நெருக்குதல்களுக்கு ஊடாக எமது மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை எவ்வாறு பெற்றுக் கொடுக்கலாம் என்று சிந்திப்பது பயனுள்ளதாக அமையும். வெளிநாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகள் இந்திய அரசுடன் தொடர்பு கொண்டு வடக்கு கிழக்கு பொருளாதார அபிவிருத்தி பற்றி கலந்துரையாடுவது பயனுள்ளதாக அமையலாம்.

முள்ளிவாய்க்காலுக்கு முன் கடைப்பிடித்த இந்தியாவின் இலங்கை வெளிவிவகார அரசியல் என்ன?

அதன் இன்றைய வெளிவிவகார அரசியலில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளதா?

இந்தியாவின் வெளிவிவகார அரசியல் மாற்றங்களை எமக்கு ஆதரவாக நாம் எவ்வாறு உருவாக்கலாம்?

மீண்டும் இலங்கை அரசை கட்டுப்படுத்த வேண்டிய தேவை இந்தியாவுக்கு வந்துள்ளதா?

அப்படியானால் அதனிடம் தற்போதைய அணுகுமுறைகள் என்ன?

இவற்றையும் நாம் ஆராய்வதும் பயன்தரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் இந்தியாவிற்கு தமிழ் இளைஞர்கள் வந்து சினிமா பார்க்கலாம்

அதொன்று தான் தமிழ் இளைஞர்களுக்கு இல்லாத குறை.ஏற்கனவே தமிழ் நாட்டு மக்களை குட்டிசுவர் ஆக்கி விட்டார் கரு நா நிதி.போர் ஓய்ந்துள்ள நிலையில் எமது மக்களை நின்மதியாக வாழ விட்டாலே போதும்.

சீனாவுக்கு ஏட்டிக்கு போட்டியாக ஏதாவது செய்து இலங்கையை உங்களது கையில் வைத்திருக்க படாதபாடு பட்டாலும் சிங்களவர்களுக்கு உங்களை கருவேப்பிலையாக பாவிக்க நன்றாகவே தெரிந்துள்ளதை நீங்கள் இப்போதாவது உணர்ந்து இருப்பீர்கள்.

  • தொடங்கியவர்

அதொன்று தான் தமிழ் இளைஞர்களுக்கு இல்லாத குறை.ஏற்கனவே தமிழ் நாட்டு மக்களை குட்டிசுவர் ஆக்கி விட்டார் கரு நா நிதி.போர் ஓய்ந்துள்ள நிலையில் எமது மக்களை நின்மதியாக வாழ விட்டாலே போதும்.

சீனாவுக்கு ஏட்டிக்கு போட்டியாக ஏதாவது செய்து இலங்கையை உங்களது கையில் வைத்திருக்க படாதபாடு பட்டாலும் சிங்களவர்களுக்கு உங்களை கருவேப்பிலையாக பாவிக்க நன்றாகவே தெரிந்துள்ளதை நீங்கள் இப்போதாவது உணர்ந்து இருப்பீர்கள்.

சிங்கள ஊடகங்கள் பெரும் எடுப்பில் துணைத்தூதரகங்கள் திறப்பதனை பிரசுரிக்கவில்லை.... ஆகவே வேண்டாப் பெண்டாட்டி... என்று எங்கட சனம் சொல்லுமால் போலதான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.