Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரபரப்பு ரிஸியின் பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பரபரப்பு ரிஸியின் பேட்டி

பேட்டி கண்டவர் இளையபாரதி

http://www.youtube.com/watch?v=HhO6mm46-hw&NR=1

http://www.youtube.com/watch?v=bpuwmYHFF_Y&feature=related

உண்மைக்கு மரணம் கிடையாது! தலைவர் வருவார் என்று பொய்யிலே காலத்தை கடத்தும் பொய்யர்களிற்கு பரபரப்பு ரிஷியின் பதில்! இனி ரிஷியும் துரோகியாகலாம்! அனால் யதார்த்தத்தை புரிய மறுக்கும் பொய்யர்கள் என்றுமே தயாக மக்களிற்கு துரோகம் செய்பவர்களே!

ஓரிரு தினங்களுக்கு முன் இவ்வாறு எழுதப்பட்டு, கேபி ஒட்டுக்குழுவின் நீடோவிலிருந்து, இங்கும் பலருக்கு இந்த ரிசியின் ஒலிப்பதிவு அனுப்பப்பட்டது!!!!!! ... அதற்கு மேல் தற்போது "போர்க்குற்றம் தொடர்பாக புலம்பெயர் தமிழர்களின் விளிப்பை" எப்படியாவது, திசை திருப்பி மழுங்கடிக்கவென, இங்கும் பல குழுக்கள் சிங்களத்தினால் களமிறக்கி விடப்பட்டிருக்கிறது!!! ... ரிசியின் பத்திரிகை விபச்சாரத்துக்கு(இவ்வாறுதான் கேபியின் செயலாளர் ரிசியை இவ்வளவு காலமும் விளிப்பார்!! தற்போது???) துண்டு விழுந்து விட்டது போல கிடக்குர்து, கேபிக்கள் மூலம் இட்டுக்கட்டலாம் என பார்க்கிறார்!!!! ...

  • கருத்துக்கள உறவுகள்

ஓரிரு தினங்களுக்கு முன் இவ்வாறு எழுதப்பட்டு, கேபி ஒட்டுக்குழுவின் நீடோவிலிருந்து, இங்கும் பலருக்கு இந்த ரிசியின் ஒலிப்பதிவு அனுப்பப்பட்டது!!!!!! ... அதற்கு மேல் தற்போது "போர்க்குற்றம் தொடர்பாக புலம்பெயர் தமிழர்களின் விளிப்பை" எப்படியாவது, திசை திருப்பி மழுங்கடிக்கவென, இங்கும் பல குழுக்கள் சிங்களத்தினால் களமிறக்கி விடப்பட்டிருக்கிறது!!! ... ரிசியின் பத்திரிகை விபச்சாரத்துக்கு(இவ்வாறுதான் கேபியின் செயலாளர் ரிசியை இவ்வளவு காலமும் விளிப்பார்!! தற்போது???) துண்டு விழுந்து விட்டது போல கிடக்குர்து, கேபிக்கள் மூலம் இட்டுக்கட்டலாம் என பார்க்கிறார்!!!! ...

கேப்பியின்டை கதையை கேட்டாலே....

சும்மா, வயித்தாலை அடிக்குது.

புலிகளின் நடவடிக்கைகளை பரபரப்பாக்கி அரசியலற்ற திரைக்கதை போல் எழுதி பரபரப்பாக்கி விற்ற ஒரு வியாபாரி இப்போது புதிய தயாரிப்பாளர்களுக்காய் கதை எழுதி வியாபாரம் செய்கிறான்.இந்த வியாபாரிகளை மக்கள் நன்கு இனம் காணுவர்.விரைவில் இவனின் வியாபாரத்தை மக்கள் இனம் காணுவர் புறக்கணிப்பர்.இவ்வாறான வியாபரிகளை இன்றைய காலகட்டம் நன்கு இனம் காட்டி தேசிய விடுதலைப் போரை மேலும் தூய்மைப் படுத்தி உள்ளது.பலஸ்தீனத்திற்கு இசுலாமிய நாடுகள் அதிலும் உலகின் மிக முக்கியமான கனிம எண்ணையை உடைய நாடுகள் உதவி வழங்கியே இன்னும் விடுதலை கிடைக்கவில்லை.இந்த மேதாவிக்கு இன்னும் விளங்காத உண்மை, அடக்குமுறை இருக்கு மட்டும் அதற்க்கு எதிரான மக்கள் போராட்டம் இருக்கும் என்பது.காலனிதுவத்திற்க்கு எதிராக பல் ஆயிரம் மக்கள் பல நூறு ஆண்டுகள் போராடியே வெற் பெற்றனர்.அடக்குமுறையாளருடன் சேர்ந்து பணியாற்றியவர்கள் இருந்த இடம் தெரியாமல் போயினர்.உலகில் குறிப்பிட்ட காலகட்டத்தில் எவருமே அதாரிக்காத போராட்டங்கள் பல நடந்துள்ளன இன்றுமன நடக்கின்றன.ரிசி போன்ற வியாபாரிகளுக்கு வரலாறு தெரியாது ஆனால் சினிமாப் பாணியிலான திரைக்கதை தெரியும்.மக்களின் அவலத்தை விற்றுப் பிழைப்பவன் வாழ்க்கையில் உருப்பட மாட்டான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பலஸ்தீனத்திற்கு இசுலாமிய நாடுகள் அதிலும் உலகின் மிக முக்கியமான கனிம எண்ணையை உடைய நாடுகள் உதவி வழங்கியே இன்னும் விடுதலை கிடைக்கவில்லை.

பலஸ்தீனத்தை எத்தனை நாடுகள் (இந்தியா கூட) அங்கீகரித்தன.இன்றும் அவர்கள் போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.நாடு கிடைக்கவில்லை.இதற்குள் ரிஸியின் பம்மாத்து தாங்கமுடியவில்லை.

... அன்று இந்த ரிஷியின் பரப்பரப்பு கூத்துக்கு விசிலடித்துத் தள்ளினோம் !!!???

.... ஒரு தடவை தமிழன்பன் இந்த பரபரப்பான பத்திரிகைக் கூத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் ... இவரை ஏன் வளர்க்கிறார்கள்? எம்மவர்களால் இதனை விட ஒரு தரமான பத்திரிகை நடாத்த முடியாதா? ... என்றெல்லாம் கேட்டாராம்!

... உண்மையை கதைப்போமாயின், ரிஷியின் பரப்பரப்பான இக்கூத்துக்குக்கு முன்னின்று உதவியவர்கள் ... புலத்திலுள்ள பல பூசாரிகள்!!! .... வளர்த்த கடா மார்பில் ..... ????? ... யாரை நோவது????

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பேரும்

தமிழருக்கு நல்லது செய்வதாக சொல்லி

அதற்கு ஆப்பு அடிக்கிறார்கள்

வாழ்க வளர்க

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜீன் அண்ணா ரிசியின் இந்தப் பேட்டியைத் தானா கட்டாயம் கேட்க சொல்லி 2,3 தரம் வற்புறுத்தினீர்கள்.தெரியாமல் தான் கேட்கிறேன் அப்படி என்ன நல்லது தன்ட பேட்டியில் சொல்லி விட்டார்?...புலிகளையும்,புலம் பெயர் தமிழர்களையும் அவமானப்படுத்தினதைத் தவிர!...புலத்தில் இருந்த தமிழர் முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் போது குழம்பி போய் இருந்தார்கள் யுத்தத்தை நிறுத்துவதற்காக பாடு பட்டார்கள்...இன்று கொடியோடு போய் ஆர்ப்பாட்டம் செய்தால் ஒருதரும் கவனிக்கிறார்கள் இல்லை என்பதற்காக அடுத்த நாள் அது பற்றி விவாதித்தார்கள் அதை விமர்சித்து சிரித்துக் கதைக்கிறார்கள் கேடு கெட்டவகள்...அரசோடு சேர்ந்து நின்டு தகவல்கள் எடுத்து பேப்பரில் போட்டுட்டு தான் சொன்ன மாதிரித் தான் நடந்தது என்ட தம்பட்டம் வேற...இந்தியாவில் குமுதத்தோடு சேர்ந்து ஜர்னள் தொடங்கப் போறாராம்...இலங்கையில் பத்திரிகை நடத்தப் போறாராம் போட்டுத் தள்ள வேற ஒருதரும் தேவையில்லை டக்லஸ் போதும்... இவர்களை பார்க்க மாற்று இயக்கங்கள் பரவாயில்லை அவர்களுக்காகவது ஒரு காரணம் இருக்கும்.

அர்ஜீன் அண்ணா தான் நினைச்சனான் இவ்வளவு காலமும் நீங்கள் ஒரு சிறந்த புத்திசாலி,தமிழரின் நன்மைக்காகத் தான் எல்லாம் சொல்லுறனீங்கள் என்டு ஆனால் இன்டைக்கு தான் தெரியும் நீங்களும் ஓரே மாதிரித் தான்.

இன்றுதான் இந்த இணைப்பை பார்த்தேன்.

இரண்டு விடயங்கள் இதிலுள்ளன. முதலாவது ரிசி சொல்வது வேதவாக்கில்லை அன்றும் இன்றும்.ஆனால் வானொலியில் வானமே எல்லை தொடங்கிய காலத்திலிருந்து சுவாரஸ்யமான ஒரு மனிதன் என்பது உண்மை.பின்னர் இவரும் வானொலிகளுக்கிடையி வந்த பிரிவுகளால் தடம் புரண்டு இடையில் இல்லாமல் போய் பரபரப்பை ஆரம்பித்து மீண்டும் தேவை கருதி இளையபாரதியுடன் கை கோத்திருக்கின்றார்.

இந்த பரபரப்பு ஆரம்பித்த நேரம் அது கனடாவில் உடனேயே தனக்கென ஒரு இடத்தை பிடித்தது உண்மை.இலவசமாக இல்லாமல் காசுக்கு விற்றும் பல இலவசத்தைவிட மக்கள் விரும்பிப்பார்ப்பார்கள்.அனால் நாட்கள் செல்ல செல்ல அதன் தன்மையில் மாற்றம் வரத்தொடங்கியது.தேசியம் என்று வியாபரம் செய்யும் வழமையான தமிழன் புத்தியை காட்டத்தொடங்கியது.தொடர்ந்தும் தனது வித்தியாசமான எழுத்துபாணியால் பலரையும் கவர்ந்தாலும் எல்லாப் பக்கத்தவரும் வாசிக்கும் தன்மையை இழந்துவிட்டது என்பதுதான் உண்மை.ஆனால் அதே நேரம் பரபரப்பை உதாரணம் காட்டி ஆய்வுகள் வேறு செய்ய தொடங்கிவிட்டார்கள் வித்துவான்கள்.

எவன் என்றில்லை தங்களையும் தலைவரையும் தூக்கிப் பிடித்தால் காணும் அவரும் தேசியபட்டியலில் இடம் பெற்றுவிடுவார்கள்.அது தான் இவர்களின் பலவீனம் இன்றும்.

உண்மையாக விமர்சனம் வைப்பவனை புரிந்துகொள்ளும் பக்குவம் இவர்களுக்கில்லை.விமர்சனத்தை ஏற்காவிட்டாலும் பரவாயில்லை துரோகி,எடுபிடி,கைக்கூலி,அரசாங்கத்திடம் பணம் பெற்றால் இப்படித்தான் எழுத வேண்டும் என தொடங்கிவிடுவார்கள்.யாழிலும் இதுதான் தொடர்கின்றது.முள்ளிவாய்காலின் பின் ரிசி மாற்றம் கொண்டதில் எனக்கு ஒரு வியப்புமில்லை.

இரண்டாவது சார்பு நிலைகள் எடுத்தாலும் ஒரு ஊடக தர்மம் எப்போதும் பரபரப்பில் இருந்தது.அது ஒரு மூன்றாம் தர பத்திரிகையல்ல.இன்று அரசிஉ சார்பு எடுத்துவிட்டது போல் தான் தெரிகின்றது ஆனால் அதற்காக ரியின் பேட்டி ஊது குழல் போல் இல்லை.பெரும்பாலும் உண்மை நிலையை தான் சொல்லியிருக்கின்றார்.பல உண்மைகளையும் துணிந்து சொல்லித்தான் இருக்கின்றார் என்பதையும் ஒப்புக்கொள்ளவேண்டும்.

யதார்த்த அரசியலுக்குள் நாம் காலெடி எடுத்து வைக்கும் வரை எமக்கு தீர்வு இல்லை.வெட்டுவம் புடுங்குவம் என்பவர் சாகும் வரை உதை சொல்லிக்கொண்டேதான் இருப்பார்கள்.அவர்களால் தமிழினத்திற்கு ஒரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பேட்டியைக் கேட்டு நேரத்தை விரயம் செய்ததுதான் கண்டபலன். ரிஷி ஐந்து மாதம் நின்றதற்குரிய செலவை ஈடுகட்ட பரபரப்பில் பல தொடர்களை விரைவில் ஆரம்பிப்பார் என்பது மட்டும் புரிகின்றது.. :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் இந்த ரிஷி??? இவர் தான் பல விடயங்களை ஊகித்து எழுதி அது உண்மையாக நடந்தது என்கிறார்...அதில் ஒன்றை கவனியுங்கள் அவரது ஒரு

ஊகிப்பு ஒன்று கூட பிழைக்கவில்லை...?? அது எப்பிடி...? இவருக்கு பின்னால் இருப்பவர்கள் யார்???.....??இவரை இப்பிடி பேட்டிகாண வைத்து சனத்தை குழப்ப நினைப்பவர்கள் யார்...??

இவர்கள் சொல்ல வருவது என்ன...??

இனிவரும் காலத்தில் பரபரப்பு ரிஷி ஒன்றை ஊகித்தால் அது உண்மை என்பதையா?....அல்லது நாங்கள் சொல்வதுதான் உண்மை என்பதையா..?? அல்லது நான் தமிழ் தேசிய ஊடகம் என்ற போர்வையோடு மகிந்தவின் வேட்டியை பிடிப்பவர் என்பதையா....??

அதெப்படி இவரால் மட்டும் எல்லா இடத்துக்கும் போய் எல்லா புலியையும் சந்திக்க கூடியதாய் இருந்தது...??

என்ன நான் கேக்கிறது சரிதானே????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.