Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதலிக்க் போகிறீங்க்ளா ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இளம் வயதில் பதின்ம வயதுப் பருவம் காதலுக்கான முதல் பருவம். இந்த வயதில்தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதல் துவங்குகிறது. காதலிக்க விரும்புபவர்களுக்காக மட்டுமல்ல, காதலைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்காகவும் காதலைப் பற்றி சிலரின் கருத்துக்கள் இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

* காதல் - இருமல் - புகை - பணம் ஆகியவைகளை நீண்ட காலம் மறைக்க முடியாது. - பாரசீகப் பழமொழி

* சாதாரணப் பெண்களுக்குத்தான் காதலைப் பற்றித் தெரியும். அழகான பெண்களுக்குத் தங்கள் அழகைப் பற்றிய சிந்தனைதான் இருக்கும். - காத்தரின் ஹெப்பர்ன்

* காதலின் எதிர்ப்பதம் வெறுப்பு அல்ல அறியாமை. - பிரயன் வாங்

* காதலும், குருட்டுத்தனமும் இரட்டைச் சகோதரிகள் -ரஷ்யப் பழமொழி

* ஒருவனுக்குக் காதல் என்பது நிராகரிக்கப்பட்டு விட்டால் பணம் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்கிறது. - டி.ஹெச். லாரன்ஸ்

* பெண்ணின் காது வழியாகவும், ஆணின் கண் வழியாகவும் காதல் முதலில் நுழைகிறது. -போலந்து பழமொழி

* காதல் என்பது ஒருவித தற்காலிக மனநோய். திருமணம் செய்தால் குணமாகிவிடும். - ஆம்புரோஸ் பியர்ஸ்

* காதல் மணல் கடிகாரம் போல. நெஞ்சு நிரம்ப நிரம்ப மூளை காலியாகிறது. - ஜூல் ரெனா

* காதலிக்காமலே இருப்பதை விட காதலித்துத் தோல்வியடைவது மேல். - ஆல்ஃப்ரெட் டென்னிசன்

* காதலைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர்கள் காதலிக்க மாட்டார்கள். - டக்ளஸ் யேட்ஸ்

* காதல் காலத்தை மறக்கச் செய்யும். காலம் காதலை மறக்கச் செய்யும். - யாரோ

* காதல் நோய்க்கு மருத்துவன் இல்லை. -ஆப்பிரிக்கப் பழமொழி

* கடவுள் மனிதனுக்கு நெருப்பைக் கொடுத்தான் மனிதன் தீயணைப்புக் கருவிகளைக் கண்டுபிடித்தான். கடவுள் மனிதனுக்குக் காதலைக் கொடுத்தான் மனிதன் திருமணத்தைக் கண்டுபிடித்தான். - யாரோ

* விவேகம் மிக்கவர்களுக்கு அதிபதி காதல்: அதை மீறுபவர்கள் அறிவில்லாதவர்கள். -வில்லியம் தாக்கரே.

* இன்பத்தின் இனியதும் துன்பத்தின் கொடியதும் காதலே. -பெய்லி

* காதலிக்காமலே இருப்பதை விட, காதலித்து தோல்வி காண்பதே மேல். -டென்னிசன்

* சூரியன் மறையலாம்; ஆனால், நிலையான காதல் மறைவதில்லை. -ஊட்

* உண்மை காதல் அனைத்துக்கும் பரஸ்பர மதிப்பே அடிப்படை. -ஜார்ஜ்

* காதலே, காதலின் வெகுமதி. -ஜான் டிரைடன்.

* காதல் - தன்னைத் தானே அளிப்பது; விலை கொடுத்து அதை வாங்குவதில்லை. -லாங்பெல்லோ.

* காதல் பேச முற்பட்டு விட்டால், ஊமை கூட புரிந்து கொள்வான். -ஸ்லிப்ட்

* உண்மையான காதல், எண்ணத்திலே மலர்ந்து உள்ளத்திலே இடத்தை தேடிக்கொள்ளும். -கர்னிலியஸ் நீல்.

* காதலால் வீரனானோர் சிலர். மூடரானோர் பலர் -சுவீடன் பழமொழி

* உலகை வலம் வரவும், சுற்றி வரவும் செய்வது காதல். -மார்லோ

* ஆணின் காதல், வாழ்க்கையில் ஓர் அங்கம்; பெண்ணின் காதலோ அவளது முழு வாழ்வும். -பைரன்

* காதல் ஒரு கண்ணாடி குவளை; இறுக்கமாக பிடித்தால், உடைந்து விடும்; மெதுவாக பிடித்தால், கை நழுவி உடைந்து விடும். -ஜெரோம்.

* உண்மையான காதல் ஒரு தணியாத வேட்கை, இனிமையான தொடர்கதை, அணையா தீ. - ஆபின்டன்

* காதல் என்பது கருகிவிடும் சாதாரண மலர் அல்ல. அதன் விதைகள் சொர்க்கத்தில் இருந்து வருவது; எப்பொழுதுமே வாடாத மலர் அது. -லோவில்

* யுகமெல்லாமே உழைத்து சாதிக்க இயலாத்தை நொடிப்பொழுதில் அளிக்கிறது காதல். -கதே

* அசடனையும் அறிவுக் கூர்மை உள்ளவனாய் மாற்றி விடும் காதல். -சார்லஸ் டிப்டின்.

* தெய்வத்தின் தலைசிறந்த அன்பளிப்பே காதல். -கேபிள்

* போர் வாளின்றி தன் ராஜ்ஜியத்தை ஆள்வது காதல். -ஹெர்பர்ட்.

* காதலிக்கும் போது புத்திசாலிக்கும் முட்டாளுக்கும் இடையில் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது. - யாரோ

நன்றி தாமரைச்செல்வி

_________________

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணின் காது வழியாகவும், ஆணின் கண் வழியாகவும் காதல் முதலில் நுழைகிறது. -போலந்து பழமொழி

குழப்புதே

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணின் காது வழியாகவும், ஆணின் கண் வழியாகவும் காதல் முதலில் நுழைகிறது. -போலந்து பழமொழி

குழப்புதே

அவர்கள் சரியாத் சொல்லி இருக்கினம். ஆண்கள் பார்வைப் புலத் தூண்டல் உள்ளவர்கள். பெண்களுக்கு வைச்சு வேதம் ஓதினாலும் ஏறாது..! அதுகளா எதனையோ கற்பனை பண்ணிக்கிட்டு.. ஒரு டுபார்கூரோட காதலுன்னு வீட்டை விட்டு ஓடுங்கள்.. பாருங்க.. பார்க்க பரிதாபமா இருந்தாலும்.. அதுகளின் ரசனை அப்படி என்று நினைச்சுக்க வேண்டியதுதான். :lol::D

இளம் வயதில் பதின்ம வயதுப் பருவம் காதலுக்கான முதல் பருவம். இந்த வயதில்தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதல் துவங்குகிறது.

அதுக்கு முன்பே தொடங்கியவர்களும் இருக்கிறார்கள். :wub:

அவர்கள் சரியாத் சொல்லி இருக்கினம். ஆண்கள் பார்வைப் புலத் தூண்டல் உள்ளவர்கள். பெண்களுக்கு வைச்சு வேதம் ஓதினாலும் ஏறாது..! அதுகளா எதனையோ கற்பனை பண்ணிக்கிட்டு.. ஒரு டுபார்கூரோட காதலுன்னு வீட்டை விட்டு ஓடுங்கள்.. பாருங்க.. பார்க்க பரிதாபமா இருந்தாலும்.. அதுகளின் ரசனை அப்படி என்று நினைச்சுக்க வேண்டியதுதான். :lol::D

* காதலிக்காமலே இருப்பதை விட, காதலித்து தோல்வி காண்பதே மேல். -டென்னிசன்

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

* காதலிக்காமலே இருப்பதை விட, காதலித்து தோல்வி காண்பதே மேல். -டென்னிசன்

:lol:

* காதலைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர்கள் காதலிக்க மாட்டார்கள். - டக்ளஸ் யேட்ஸ்

:D:)

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் சரியாத் சொல்லி இருக்கினம். ஆண்கள் பார்வைப் புலத் தூண்டல் உள்ளவர்கள். பெண்களுக்கு வைச்சு வேதம் ஓதினாலும் ஏறாது..! அதுகளா எதனையோ கற்பனை பண்ணிக்கிட்டு.. ஒரு டுபார்கூரோட காதலுன்னு வீட்டை விட்டு ஓடுங்கள்.. பாருங்க.. பார்க்க பரிதாபமா இருந்தாலும்.. அதுகளின் ரசனை அப்படி என்று நினைச்சுக்க வேண்டியதுதான். :lol::D

:lol: :lol: :lol:

* காதலைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர்கள் காதலிக்க மாட்டார்கள். - டக்ளஸ் யேட்ஸ்

:D:)

காதலிக்க தெரியாதவர்களுக்கு காமமும் கைகூடாது,- யாழ் வடிவேலு :D

  • கருத்துக்கள உறவுகள்

காதலிக்க தெரியாதவர்களுக்கு காமமும் கைகூடாது,- யாழ் வடிவேலு :D

காதலிக்க தெரியாதவர்களால் இது கூட சாத்தியமில்லாமல் போய்விட்டதா. ஐயகோ

அவர்கள் சரியாத் சொல்லி இருக்கினம். ஆண்கள் பார்வைப் புலத் தூண்டல் உள்ளவர்கள். பெண்களுக்கு வைச்சு வேதம் ஓதினாலும் ஏறாது..! அதுகளா எதனையோ கற்பனை பண்ணிக்கிட்டு.. ஒரு டுபார்கூரோட காதலுன்னு வீட்டை விட்டு ஓடுங்கள்.. பாருங்க.. பார்க்க பரிதாபமா இருந்தாலும்.. அதுகளின் ரசனை அப்படி என்று நினைச்சுக்க வேண்டியதுதான். :lol::D

ஓ நீங்க அப்படி வாரிங்களோ

இதோ இன்னும் சில காதலைப்பற்றிய பொன்மொழிகள் ......

காதல் பொன் மொழிகள்

காதல் என்பது.. எப்போது இருவர் ஒருவரை ஒருவர் விட்டு பிரிந்து வாழ முடியாமல் போகிறதோ, தங்களது வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள நினைக்கின்றார்களோ அப்போது உருவாவதுதான்.

ஒருவருக்கொருவர் கருத்தொற்றுமை இல்லாவிட்டால் அது காதல் இல்லை.

இதயத்திற்கு ரத்தமாகும், உடலுக்கு தண்ணீராகவும் இருப்பது காதல்.

காதல் என்பது அழகான கனவு.

காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் விவரிக்க முடியாத அளவிற்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

காதல் என்பது போரைப் போன்றது. துவக்குவது எளிது. முடிப்பது கடினம்.

காதல் மகிழ்ச்சியை அளிக்குமேத் தவிர மகிழ்ச்சியாக இருக்க விடாது.

காதல் இதயத்தில் இருந்து வர வேண்டும். கண்களில் இருந்து அல்ல.

காதலிப்பதை விட ஏதாவது சிறந்த பொருள் ஒன்று இருந்தால் அது காதலிக்கப்படுவதாக இருக்கும்.

காதல் இதயத்தை கனக்கச் செய்துவிட்டு மூளையை காலியாக்கிவிடும்.

சில சமயம் கண்களால் பார்க்க முடியாத விஷயங்களை இதயம் பார்க்கும். அதுதான் காதல்.

காதலில் விழுவதற்கு புவியீர்ப்பு சக்தியின் பங்கு ஏதும் இல்லை.

காதல் காதல் தான். அது எப்போதும் சாயம் போவதில்லை.

காதலுக்காக உயிரிழப்பவர்களும் உண்டு, காதலை இழந்ததால் உயிரிழப்பவர்களும் உண்டு.

நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்க வைக்க முடியும்

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் சரியாத் சொல்லி இருக்கினம். ஆண்கள் பார்வைப் புலத் தூண்டல் உள்ளவர்கள். பெண்களுக்கு வைச்சு வேதம் ஓதினாலும் ஏறாது..! அதுகளா எதனையோ கற்பனை பண்ணிக்கிட்டு.. ஒரு டுபார்கூரோட காதலுன்னு வீட்டை விட்டு ஓடுங்கள்.. பாருங்க.. பார்க்க பரிதாபமா இருந்தாலும்.. அதுகளின் ரசனை அப்படி என்று நினைச்சுக்க வேண்டியதுதான். :lol::D

:lol::lol::lol:

அவர்கள் சரியாத் சொல்லி இருக்கினம். ஆண்கள் பார்வைப் புலத் தூண்டல் உள்ளவர்கள். பெண்களுக்கு வைச்சு வேதம் ஓதினாலும் ஏறாது..! அதுகளா எதனையோ கற்பனை பண்ணிக்கிட்டு.. ஒரு டுபார்கூரோட காதலுன்னு வீட்டை விட்டு ஓடுங்கள்.. பாருங்க.. பார்க்க பரிதாபமா இருந்தாலும்.. அதுகளின் ரசனை அப்படி என்று நினைச்சுக்க வேண்டியதுதான். :lol::D

:lol: :lol: :D :D

  • கருத்துக்கள உறவுகள்

காதல் என்பது எண்ணம் என்னும் ஏட்டிலே உணர்ச்சி எனும் மையினைக் கொண்டு உள்ளத்தால் எழுதப்படும் அழியா இலக்கியம் - சாண்டில்யன்

அடிக்கடி பாவித்தும் பயன் கிட்டியதில்லை :(

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் உலகம் முழுதும் காதலால் வாழ்ந்தவர்களைவிட நொந்து நூலானவர்கள்தான் ஏராளம். எப்படியோ காதல் மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கும்!! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் உலகம் முழுதும் காதலால் வாழ்ந்தவர்களைவிட நொந்து நூலானவர்கள்தான் ஏராளம். எப்படியோ காதல் மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கும்!! :rolleyes:

காதலின் பெயரால் மனிதர்களால் ஏமாற்றப்பட்டு நொந்து நூலானவர்கள் தான் அதிகம். மனிதர்கள் திட்டமிட்டு செய்யும் தவறுகளுக்காக காதலை இதில் முற்றுமுழுதாக குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது நியாயமற்றதாகவே தெரிகிறது. :D:)

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.