Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீயினில் குளித்த தொப்புள் கொடி கதறும் குரல் கேட்கலையோ..?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

19-self-immolation200.jpg

இதயமில்லா மனிதர் கூட

கலங்கி நிற்கும்

கொடூரங்கள்..

ஈழ மண்ணில்..!

முன்வினைச் சொந்தமோ.. பந்தமோ..

ஈழ மண்ணின் மீது

பிறவிக் காதல்

கிருஷ்ணமூர்த்திக்கு..!

ஈழ தமிழர்கள்

ஈனத் தமிழர்களாய்..

தங்கள் குழந்தைகளை

இஞ்சினியராக்கி

கொழுத்த சீதனத்தில்

வெளிநாட்டில்

வாழ வைச்சு

மகிழும் வேளையில்..

இஞ்சினியராகி

வெளியூர் போயும்

ஈழத்து நினைவாகி

இள வயதை மறந்து

துயர் கொண்டனன் இந்தக் கிருஷ்ணன்.

தேரோட்டியாய் அன்றி

தன் தேகம்

தீயினில் வேக..

மீண்டும் ஓர் முத்துக்குமாரனாய்

பிறப்பெடுத்திருக்கிறான் இவன்.

ஐநா அறிக்கை முழுசா பிரசவிக்கவில்லை..

கவலை மட்டும்

முழுதாய் பிறப்பெடுக்க..

தாங்க முடியா வேதனையில்..

தன் சுற்றம் மறந்து

சுகம் மறந்து

இன வாழ்வு மட்டும் எண்ணி

மாய்ந்து போனான்..

கொடூரன் ராஜபக்சவை

தூக்கில் போட முழக்கமிட்டே.

கிருஷ்ணமூர்த்தி..

அவன் எம்

தொப்புள் கொடி சொந்தம்.

வெந்தது எம் சொந்த இரத்தம்..!

தொப்புள் கொடி ஒன்று

தீயில் கருகிய போது

எழுந்த அந்தக் கதறல்..

எம்மை அடையவில்லை.

எங்கள் இரத்தம் உறையவில்லை.

அவனை நினைக்கக் கூட..

நாமில்லை...

அவனுக்காய்

கண்ணீர் சிந்தக் கூட

எமக்கு நேரமில்லை..

நாமும் தான்...

என்ன பிறவிகளோ..??!!!

எமக்காயும் உயிர் விடும்

அந்த அப்பாவிகளை

மாவீரர்கள் என்பதா..

தியாகிகள் என்பதா

கோழைகள் என்பதா..??!

கிருஷ்ண மூர்த்தியே..

பிறவிப் பலனே

இனத்துக்காய்

உயிர்விடுவது

என்று எழுதிவிட்டுச் சென்றுள்ளாய்..

ஈழ மண்ணில்

சுதந்திர தாயகம்

அதுவே உன் தாகமும் கூட..!

அது தீரவாவது

உழைக்க சத்தியம் செய்கிறோம்

உன் ஆன்ம சாந்திக்காய்

உரையாய் எழுத்தில் அல்ல..

உண்மையாய்

மனதில் உன்னை இருத்தி..!

அன்பின் தொப்புள் கொடி தமிழக சொந்தங்களே.. ஈழத்தமிழருக்காய் வருந்துங்கள்.. நீதி கேட்டு போராடுங்கள்.. இந்திய அரசை உலுப்பி நில்லுங்கள்.. மாநில அரசை தட்டிக் கேளுங்கள்.. உலகை உலுப்பி நில்லுங்கள். ஆனால் எனியும் உங்கள் உயிர்களை மாய்க்காதீர்கள். விலைமதிக்க முடியாத உங்கள் இன உணர்வு ஒன்றும் போதும்.. வீணாக அருமருந்தான உங்கள் உயிர்களை அழித்து உங்கள் இன உணர்வையும் உங்கள் வாழ்வையும் உங்களைச் சார்ந்த குடும்பங்களையும் வேதனைக்குள் ஆழ்த்தி அவர்களை சீரழிக்காதீர்கள். உங்கள் தியாகம் அளப்பரியது. இன உணர்வு மிகப் பெரியது. அதை பயனுள்ள வழியில் நீடித்து நிலைக்கக் கூடிய வழியில் தமிழ் இனத்துக்கு என்று உழைக்க பயன்படுத்துங்கள். உங்கள் உணர்வுகளை ஈழத்தமிழர்களாகிய நாம் தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறோம். உங்களை அழித்து எங்களை மேலும் மேலும் வேதனைக்குள்ளும் தனிமைக்குள்ளும் தள்ளாதீர்கள். உங்கள் உயிர் இருப்பே எங்களுக்கு பெரும் பலம். உணர்ந்து கொள்ளுங்கள் சொந்தங்களே.

இப்படிக்கு கண்ணீருடன் வேதனை பொங்க.. உன் தொப்புள் கொடி சகோதர ஈழ உறவு. :(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சுற்றம் என்று நாங்கள்

சொந்தம் கொண்டாடிய

சொந்தப் பிணைப்புக்கள்

சுற்றி வளைக்கப்பட்டுக்

கொத்துக் கொத்தாகக்

கொன்று குவிக்கப் பட்ட

கோரத்தின் சோகம்,

இதயத்தின் அடித்தளத்தின்

எங்கோ ஒரு மூலையில்

இன்னும் வலிக்கின்றது!

கிருஷ்ணனின் தியாகம்

கருக்கட்டும் தாயகத்தின்

பிரசவ வேதனையின்

வரலாற்று வடிவம்!

எங்கள் பயணத்தின்

உந்து சக்தி!

இந்த மரணங்கள்,

எங்கள் இதயங்களை

இன்னும் நெருக்கட்டும்!

உங்கள் ஏக்கத்தையும், உங்கள் கவலைகளையும் உங்கள் கவிதை, சொல்லி நிற்கின்றது நெடுக்ஸ்.இந்த மரணங்கள் இனியும் வேண்டாம்!!!

  • கருத்துக்கள உறவுகள்

தீப்பூவே உன் உணர்வுகளுக்குத் தலை சாய்க்கிறேன் ஆனால் உயிரை தணலிட்டு ஏது செய்ய நினைத்தாய்? எது நடக்கப்போகிறது? நீதியற்ற உலகம், நேர்த்தியற்ற இனம்.... மோதித் திருத்தும் பாதை செய்யாமல் தீயின் போர்வையை ஏன் போர்த்திக் கொண்டனை? தீய்ந்து விடுமா அத்தனை துன்பமும்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

19-krishnamoorthi200.jpg

ஈழத்தமிழரின் விடுதலை வேண்டி தன்னுயிரை மாய்த்துக் கொண்ட தொப்புள் கொடி உறவு.

கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

தேவையற்ற நேரத்தில் தேவையற்ற மரணம்

  • கருத்துக்கள உறவுகள்

1272007569Thiruvalluvar_Statue.jpg

பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்

மக்கட் பதடி யெனல். <_<

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

வாய்ச் சொல்லில் வீரரடி

அடுத்தவர் சாவைக் கண்டு மகிழ்வாரடி

  • கருத்துக்கள உறவுகள்

மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்

கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்

செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்

கருமமே கண்ணாயினார் :lol: :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலி..இனத்துக்காக உயிர் தியாகம் செய்வதை இனிமேலாவது எதிர்ப்போம்....போதும் நாம் இழந்த தமிழின உயிர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.