Jump to content

பட்டிமன்றம் தொடர்வோமா???


Recommended Posts

சரி.. மனிதனாகத்தான் இருக்கட்டுமே.. இப்ப என்னாங்கிறேன்.. இணையம் மனிதனின் சிருஷ்டிதானே.. கண்ட கண்ட மனுசரை எல்லாம் வீட்டுக்கை கொண்டு வாறது இந்த இணையம்தானே.. :)

Link to comment
Share on other sites

  • Replies 1.5k
  • Created
  • Last Reply

சோழியன் இணயத்தில கண்ட கண்ட மனிசரை நீங்க கூப்பிட்டாத் தான் வருவினம், நீங்க கூப்பிடாட்டி அவை ஏன் வருகினம். நீங்கள் மவுசை அமத்தினாத் தான் அவை வருவினம்,

இங்கே பயன் பெறுவதும்,சீரழிவதும் உங்கள் கையில் என்பதுவே எமது வாதம்.தல மனிதன் இணயத்தை உருவாக்கியது அதனால் பயன் பெற ,இல்லை நான் சீரழியப் போறன் எண்டா அது உங்கட விருப்பம். நாம் இங்கே தீர்மானமாகச் சொல்லவது இணயம் என்ற தொழில் நுட்பமானது உயர்வடைய விரும்புவோரை உயர்வடயச் செய்யும், சக்தி வாய்ந்தது என்பதுவே. நன்மை அடய விரும்புவோரின் செயற்படும் திறனை அது பல்மடங்காக்கிறது என்பதுவே.

மேலும் தல நீங்கள் இணயப் பாவனை தடை செய்யப் பட்டுள்ளதாகக் கூறி உள்ள தகவல் பிழயானது என்பதயே சுட்டிக் காட்டி உள்ளேன்.மேலும் கண்காணிக்கும் செயலிகள் சிறுவர்களை வழி நடத்த அவர்கள் உபயோகிக்கும் கணணிகள் சேவர்களில் ஏற்றப் பட்டுள்ளன,இதுவே நடைமுறை இதனையே நான் எழுதி உள்ளேன்.எழுதியவற்றை மீண்டும் வாசிச்சுப் பாக்கவும்.சிறுவர்கள் வழி நடத்தப் பட வேண்டியவர்கள், அவர்களுக்கான பாதுகாப்பு நிஜ உலகிலும்,இணய உலகிலும் பெரியவர்களாலேயே கொடுக்கப் படுகிறது.இதனை நடை முறைப் படுத்த தொழில் நுட்ப ரீதியான ஏற்பாடுகள் இணயத்தில் உண்டு.

இணயத்தை மனிதர் சீரழித்தாலும் தவறாகப் பயன் படுத்தினாலும் அதனை வழி நடத்த கட்டுப் படுத்த முறமைகள் இணயத்தில் உண்டு.முற்று முழுதாக சிறுவர்களோ அன்றி இளயவர்களோ இணயப் பாவனைக்கு தடை செய்யப் படாததற்கான காரணம் அதன் கற்றலுக்கான, நமைக்கான பயன்பாடுகள் மறுதலிக்க முடியாதவை என்பதாலேயே.அதனாலெயே இங்கிலாந்தில் அரசாங்கம் இணயத்தை கற்றல் செயற்பாடுகளுக்கான ஒரு முக்கியமான தொழில் நுட்பமாக கருதி ஆரம்பப் பாடசாலைகள் தோறும் அதற்கான வசதிகளை வழங்கி வருகிறது.

Link to comment
Share on other sites

தல தந்த இணப்பிற்கு நன்றி,என்ன நீங்க தந்த இணைப்ப நீங்க வாசிச்சிருந்தா, அந்த இணைப்பைத் தந்திருக்க மாட்டியள் எண்டு நினக்கிறன்...இங்க அதன் அறிமுகப் பந்தியப் போடுறன் வாசிச்சுப் பாருங்க.

Whatever your age, the Internet is a great place to hang out. It’s not only fun, but it lets you keep in touch with friends and family and provides an enormous amount of information. There are lots of great educational sites as well as places to keep up with your favorite hobbies, music, sports, and much more. If you’re a teen, we probably don’t need to sell you on the benefits of the Internet. Many of you know far more than your parents or even teachers about the wonders of cyberspace. If you’re a parent, talk to your children about “the Net” and — if you need to learn more — see if they can help you. Either way, it’s important for teens and parents to share knowledge. You have something to learn from each other — if not about the Internet, then about life in general, how to make good decisions, and how to look at information critically.

Link to comment
Share on other sites

நாரதரே! தங்களுடைய கருத்தின்படி பார்த்தால் மனிதன் எந்த ஒரு காரணியாலுமேயே சீரழிய முடியாதே!

'நண்பர்களை நாடுவதால் கெடுகிறான்.. சினிமாவைப் பார்ப்பதால் கெடுகிறான்.. இவ்வாறு ஒரு மனிதன் கெடுவதோஇ சீரழிவதோ அவனது கையில்தானே இருக்கிறது... இது இவ்வாறு இருக்க.. பிறகேன் மனிதனுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும்.. உதாரணமாக திரைப்படங்களுக்கு வயதெல்லையைப் போடவேண்டும்.. அது திரைப்படம்தானே என்று மனிதனுக்கு தெரியாதா? அதனால் பாதிப்பு ஏற்படும் என்பதால்தானே சில கட்டுப்பாடுகளை போடுகிறார்கள்.. உங்கள் பார்வையில் புறக்காரணிகளால் மனிதன் சீரழியவில்லை.. தன்னால்தான் சீரழிகிறான் என்றால்இ இதை திருப்பிப்போட்டால் பெறும் நன்மைகளுக்கும் பொருந்தும்தானே.. ஆகஇ உங்கள் கருத்துப்படி இந்த விவாதமே அர்த்தமில்லாதது ஆகிறது அல்லவா?! :lol:

Link to comment
Share on other sites

நாரதரே! தங்களுடைய கருத்தின்படி பார்த்தால் மனிதன் எந்த ஒரு காரணியாலுமேயே சீரழிய முடியாதே!

'நண்பர்களை நாடுவதால் கெடுகிறான்.. சினிமாவைப் பார்ப்பதால் கெடுகிறான்.. இவ்வாறு ஒரு மனிதன் கெடுவதோஇ சீரழிவதோ அவனது கையில்தானே இருக்கிறது... இது இவ்வாறு இருக்க.. பிறகேன் மனிதனுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும்.. உதாரணமாக திரைப்படங்களுக்கு வயதெல்லையைப் போடவேண்டும்.. அது திரைப்படம்தானே என்று மனிதனுக்கு தெரியாதா? அதனால் பாதிப்பு ஏற்படும் என்பதால்தானே சில கட்டுப்பாடுகளை போடுகிறார்கள்.. உங்கள் பார்வையில் புறக்காரணிகளால் மனிதன் சீரழியவில்லை.. தன்னால்தான் சீரழிகிறான் என்றால்இ இதை திருப்பிப்போட்டால் பெறும் நன்மைகளுக்கும் பொருந்தும்தானே.. ஆகஇ உங்கள் கருத்துப்படி இந்த விவாதமே அர்த்தமில்லாதது ஆகிறது அல்லவா?! :lol:

உண்மைதான் அண்ணா...ஆனால் நன்மையையே இனங்காணத் தெரியாத சிந்தனை ஓட்டத்தில் மனிதர்கள் இருக்கும் போது எப்படி..."நன்மை" மனிதனைச் சென்றடையும்..! இப்போ ஒரு கொலைஞனுக்கு அவனின் பார்வையில் அது நன்மை...கொல்லப்பட்டவனின் சார்பில் தீமை...! இணையத்தை உருவாக்கினதும் மனிதன் தான்..ஆனால் அது கட்டுப்பாடுகளை மீறி சிலருக்கு "தவறான நன்மைகளை" அளிக்கும் போது அது சமூகத்தில் பெரும்பானவருக்கு தீமையாகி விடுகிறது. உதாரணத்துக்கு ஒரு பள்ளி மாணவன் தனக்குரிய மென்பொருள் உருவாக்கும் அறிவை வளர்க்க ஒரு கணணி சைரஸை உருவாக்கிறான் என்று வையுங்கள்..அவனைப் பொறுத்தவரை அது சாதனை..ஆனால் அதுவே வலையில் பயணித்து கணணிகளை தரவுகளை சேதப்படுத்தும் போது அது தீமை என்றுதான் கணிப்பிடப்படுகிறது..! எனவே பெறப்படும் விளைவின் தாக்கம் என்பதன் அடிப்படையிலேயே நன்மை தீமை உணரப்படுகிறது..! :wink: :P

Link to comment
Share on other sites

நாரதரே! தங்களுடைய கருத்தின்படி பார்த்தால் மனிதன் எந்த ஒரு காரணியாலுமேயே சீரழிய முடியாதே!

'நண்பர்களை நாடுவதால் கெடுகிறான்.. சினிமாவைப் பார்ப்பதால் கெடுகிறான்.. இவ்வாறு ஒரு மனிதன் கெடுவதோஇ சீரழிவதோ அவனது கையில்தானே இருக்கிறது... இது இவ்வாறு இருக்க.. பிறகேன் மனிதனுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும்.. உதாரணமாக திரைப்படங்களுக்கு வயதெல்லையைப் போடவேண்டும்.. அது திரைப்படம்தானே என்று மனிதனுக்கு தெரியாதா? அதனால் பாதிப்பு ஏற்படும் என்பதால்தானே சில கட்டுப்பாடுகளை போடுகிறார்கள்.. உங்கள் பார்வையில் புறக்காரணிகளால் மனிதன் சீரழியவில்லை.. தன்னால்தான் சீரழிகிறான் என்றால்இ இதை திருப்பிப்போட்டால் பெறும் நன்மைகளுக்கும் பொருந்தும்தானே.. ஆகஇ உங்கள் கருத்துப்படி இந்த விவாதமே அர்த்தமில்லாதது ஆகிறது அல்லவா?! :lol:

ஆ அதைத் தானே திருப்பத் திருப்பச் சொல்லிக் கொண்டிருகிறம்.

மனிதருக்கு கட்டுப் பாடுகளை விதிப்பது யார்?அதுவும் மனிதர் தானே?சட்டங்கள் இயற்றுவது யார்?கட்டு பாடுகளை சமூக நியதிகளை ,பாதுகாப்பை உருவாக்குவது யார்?மனிதர் தானே?

ஆகவே சிறுவர் ,இளயவர் சீரழிவோம் என்று அறியாது செயற்பட விழையும் மனிதரைக் கட்டுப் படுத்த கட்டுப் பாடுகளை உருவாக்குவதும் மனிதனே.ஆகவே எமது கேள்வி இவ்வாறான கட்டுப் பாடுகளை உருவாக்க இணயத் தொழில் நுட்பத்தில் வசதிகள் இருக்கும் இடத்து அவற்றைப் பயன் படுத்தி இணயப் பாவனையை பயன் உள்ளது ஆக்கலாமே? என்பதுவே.இங்கே அதனை நிராகரித்து ,இணயம் என்னும் ஒரு சடப் பொருள் எம்மைக் கட்டுப் படுத்துகிறது என்று அதனை காரணி ஆக்கி வாதிட வேண்டாம் என்பது தானே எமது வாதம்.

அவ்வாறு மனிதர்களால் ஏற்படும் சீரழிப்புக்கள் மனிதர்களால் அகற்றப் பட மிகுதியாய் இருப்பவை பயன்கள் மட்டுமே அன்றி வேறென்ன?இதற்கெல்லாம் ஒரு விவாதம் இனியும் தேவயா? :lol:

Link to comment
Share on other sites

எங்க பூனைக்குட்டியைக் காணல? பூனைக்குட்டி எப்ப உங்கட கருத்தை வைப்பீர்கள்?> இன்று வைத்தீர்கள் என்றால் உதவியாக இருக்கும். நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ வைக்கிறன் வைக்கிறன்................ இப்பதான் நீங்க எழுதினத வாசிச்சனான்........... இண்டைக்கு வைக்கிறன் அக்கா..... முக்கியமான வேலையொண்டு இருக்கு அத செய்திட்டு எழுதுறன் அக்கா

Link to comment
Share on other sites

ஓ வைக்கிறன் வைக்கிறன்................ இப்பதான் நீங்க எழுதினத வாசிச்சனான்........... இண்டைக்கு வைக்கிறன் அக்கா..... முக்கியமான வேலையொண்டு இருக்கு அத செய்திட்டு எழுதுறன் அக்கா

நன்றி பூனைக்குட்டி

Link to comment
Share on other sites

மேலும் தல நீங்கள் இணயப் பாவனை தடை செய்யப் பட்டுள்ளதாகக் கூறி உள்ள தகவல் பிழயானது என்பதயே சுட்டிக் காட்டி உள்ளேன்.மேலும் கண்காணிக்கும் செயலிகள் சிறுவர்களை வழி நடத்த அவர்கள் உபயோகிக்கும் கணணிகள் சேவர்களில் ஏற்றப் பட்டுள்ளன' date='இதுவே நடைமுறை இதனையே நான் எழுதி உள்ளேன்.எழுதியவற்றை மீண்டும் வாசிச்சுப் பாக்கவும்.சிறுவர்கள் வழி நடத்தப் பட வேண்டியவர்கள், அவர்களுக்கான பாதுகாப்பு நிஜ உலகிலும்,இணய உலகிலும் பெரியவர்களாலேயே கொடுக்கப் படுகிறது.இதனை நடை முறைப் படுத்த தொழில் நுட்ப ரீதியான ஏற்பாடுகள் இணயத்தில் உண்டு[/b']

நீங்கள் சொல்வதுதான் நான் சொன்னதும்... சிறுவர் இணையத்தால் சீரளிய மாட்டார்கள் இணையம் நன்மையானது எண்றால் எதற்க்காக கண்காணிப்பு செயலி, எதற்க்கு வளிநடத்தல்கள்...??????????????? மாணவர்களிடம் கணிதபாடப் புத்தகத்தை எப்படி கையில் கொடுத்து படிக்க விடுகிறார்களோ அப்படி விட வேண்டியதுதனே..! ஏன் செய்வதில்லை...??????? :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

நாரதரே! கட்டுப்பாடுகளை கேட்கும் நிலையிலா மனிதர் வாழ்கிறார்கள்.. கட்டுப்பாடுகளைக் கண்டதும் அதை தகர்த்து, அதனுள் என்ன இருப்பது என அறிய முயல்வதுதானே பெரும்பாலான மனிதர்களது இயல்பு.. அதுவும் தமிழ் இணையங்களைப் பொறுத்தளவில் கட்டுப்பாடுகள் எங்கே உள்ளன.. அதை உருவாக்க வேண்டும் என எந்த கணனி வித்தகர் நினைக்கிறார்.. அவருக்கு வருமானம் வந்தால் சிலவேளை நினைக்கலாம்..

சிகரட் விளம்பரத்தில் புகைத்தல் தீங்கு எனக் குறிப்பிட்டார்கள்.. தற்போது பெட்டிகளிலும் அதன் பாதிப்புகளைக் குறிப்பிடுகிறார்கள்.. குறிப்பிட்டுக்கொண்டே புதிய புதிய வகைச் சிகரட்டுகளை அறிமுகப்படுத்துகிறார்கள் அதற்காக..எவனாவது சிகரட் புகைக்காமலிருக்கிறானா என்றால்.. கேள்விக்குறியே..

இங்கேயும் நடைமுறையில் சிகரட்தான் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கிறது என்கிறோமே தவிர.. மனிதன் சிகரட்டால் கேட்டை அடைகிறான் என்று கூறுவதில்லையே.. இப்படி நுணுகஇகுக் காட்டியாக பிழை பிடிக்க முற்பட்டால் பலவற்றில் பிழை பிடிக்கலாம்.

இப்பட்டி மன்றத்தின் நோக்கம் எதை நோக்கியது என்பதை பகுத்தறிந்தால்.. இப்படியான கருத்துகளுக்கு இடமேற்படாது எனக் கருதுகிறேன்.:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ர கருத்த வச்சிட்டன் அக்கா..........கூட எழுதினாத்தான் அடுத்தமுறை பட்டிமன்றத்தில கடைசியா கதைக்கலாம் எண்டுறதால கொஞ்சம் கூட எழுதிட்டன்.......தப்பெண்டா மன்னிச்சுக்கொள்ளுங்கோ...........

..............

மற்றது நான் பள்ளியில இருந்தும் வேலையிடத்தில இருந்தும் தான் களத்துக்கு பவாறதால கிடைக்கிற நேரத்தில வாசிக்கிறதுகளுக்கு அவசர அவசரமா பதில எழுதிட்டு போயிடுவன்........ ரைப் பண்ணுற வேகத்துக்கு கீபோர்ட் ஒத்துவாறேல........... அதால வேணுமெண்டு பிழை விடுறேல.........டன் அண்ணா அண்டைக்கு என்னை உணர்வுள்ள களத்துக்கு போகச் சொல்லிட்டார்......அதான் ரோசம் வந்திட்டு நமக்கு இப்பிடியும் தமிழ் எழுதத் தெரியுமெண்டு காட்டத்தான் நம்மட அந்த கட்டுரையில முடிஞ்சளவு தூய எழுத்துத் தமிழில எழுதினான்.......அதுவும் தப்பெண்டா மன்னிச்சிருங்கோ.......எப்பிடிய

Link to comment
Share on other sites

முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்ளுகிறேன் புhனைக்குட்டி அவர்களே! ஏற்கெனவே தாங்கள் எழுதிய கருத்துகளை வைத்து தங்களை சாதாரணமாக எடைபோட்டதற்கு.

எடுத்துக் கொண்ட விடயம்.. அதை வரையறுத்த விதம்.. ஆரம்பித்த முறை.. அடுத்தடுத்து கருத்துகளை முன்வைத்த பாங்கு.. முடித்த பாங்கு.. எல்லாவற்றிலுமே பிரமிக்க வைத்துவிட்டீர்கள்.

உண்மையிலேயே ஒரு அணித்தலைவரது பணியை தாங்கள் மிக இலாவகமாக நிறைவேற்றியிருக்கிறீர்கள்.

தங்களுடைய எழுத்தாற்றல் பல்துறையிலும் வியாபித்து.. பலவற்றை தமிழுக்கு தரவேண்டும் என வாழ்த்துகிறேன். நன்றி. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"நீட்டி முழங்குவது" வாதம் என்றால் ....?????

எதிரணியின் சிலர் வாதங்களையும்,

தொகுப்புரை(?)யையும் பார்க்கும் போது,

பள்ளி நாள்களில் "புள்ளி" அதிகம் வாங்க

சிலர் "நீட்டி நீட்டி" எழுதி,

"சுத்தி சுத்தி ....கொல்லைக்குள்ள.."

என்ற "வங்குரோத்து" நிலை தான்

நினைப்புக்கு வருகிறது....

ஆனால் ஆசிரியர் என்ற பதவிநிலைகளால்

"பாரபட்சம்" காட்டிய அத் தகையானவர்களாக,

இங்கு கள நடுவர்கள் இருக்க மாட்டார்கள்

என்பது எதிர்பார்ப்பு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொறாமை ஐயா பொறாமை பூனைக்குட்டியின் கருத்தை பார்த்ததில் எல்லோருக்கும் பொறாமை. அதுதான் முன்னவர் ஒப்பாரி வைத்துள்ளார். ஐந்தறிவுள்ள பூனை இப்படி கருத்துக்களை வைக்கிறதெண்ட பொறாமை. மேகநாதன் அண்ணா நீங்கள் வைத்த கருத்துக்களை வெட்டிபேசவேண்டியது பட்டிமன்ற மரபு. அதைத்தான் நண்பர் பூனைக்குட்டியும் செய்தார். அதற்காக பள்ளி புள்ளி என்ற வார்த்தைகளை பாவித்தால் பெரிய அறிஞர்கள் ஆகிவிடமுடியாது. பு-னைக்குட்டியின் கருத்துக்களில் இருக்கின்ற தாற்பரியத்தை மட்டும் பாருங்கள்.வாழ்த்தாதுவிடினும

Link to comment
Share on other sites

ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது பூனைக்குட்டி...! எதிரணிக்கு நீட்டி முழங்கிச் சொல்லப்பட வேண்டிய கருத்துக்கள்தானே எல்லாமே... அப்படியும் விளங்காமல்ப்போகிறதால் விளக்கமாய் சொல்வதில் தப்பிலை....! :wink:

விமர்சனம் சொல்லணும்....! முழுவதும் படித்தபின் சொல்கிறன்..... :P :P :P

Link to comment
Share on other sites

நாரதரே! கட்டுப்பாடுகளை கேட்கும் நிலையிலா மனிதர் வாழ்கிறார்கள்.. கட்டுப்பாடுகளைக் கண்டதும் அதை தகர்த்து, அதனுள் என்ன இருப்பது என அறிய முயல்வதுதானே பெரும்பாலான மனிதர்களது இயல்பு.. அதுவும் தமிழ் இணையங்களைப் பொறுத்தளவில் கட்டுப்பாடுகள் எங்கே உள்ளன.. அதை உருவாக்க வேண்டும் என எந்த கணனி வித்தகர் நினைக்கிறார்.. அவருக்கு வருமானம் வந்தால் சிலவேளை நினைக்கலாம்..

சிகரட் விளம்பரத்தில் புகைத்தல் தீங்கு எனக் குறிப்பிட்டார்கள்.. தற்போது பெட்டிகளிலும் அதன் பாதிப்புகளைக் குறிப்பிடுகிறார்கள்.. குறிப்பிட்டுக்கொண்டே புதிய புதிய வகைச் சிகரட்டுகளை அறிமுகப்படுத்துகிறார்கள் அதற்காக..எவனாவது சிகரட் புகைக்காமலிருக்கிறானா என்றால்.. கேள்விக்குறியே..

இங்கேயும் நடைமுறையில் சிகரட்தான் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கிறது என்கிறோமே தவிர.. மனிதன் சிகரட்டால் கேட்டை அடைகிறான் என்று கூறுவதில்லையே.. இப்படி நுணுகஇகுக் காட்டியாக பிழை பிடிக்க முற்பட்டால் பலவற்றில் பிழை பிடிக்கலாம்.

இப்பட்டி மன்றத்தின் நோக்கம் எதை நோக்கியது என்பதை பகுத்தறிந்தால்.. இப்படியான கருத்துகளுக்கு இடமேற்படாது எனக் கருதுகிறேன்.:D

ஐய்யா சோழியன் நீங்கள் எமது எதிரணி பட்டிமன்றத்தில்,

நான் எமது அணிக்கு சார்பான வாதங்களையே முன் வைக்கிறேன்.அதற்கு எதிர் வாதங்களை முன் வையுங்கள்.பட்டி மன்றதின் நோக்கம் என்ன என்பதுவும் எனக்குத் தெரியும்.உங்கள் வாதங்களின் முடிவில் நடுவர் தீர்ப்பின் பின் எனது நிலைப்பாட்டைக் கூறுகிறேன்.அ நேகமா நடுவர்களின் நிலைப்பாடும் அதுவாகத் தான் இருக்கும்.பொறுந்திருந்து பார்ப்பம்.

பூனைக் குட்டிக்காக வாதாடியதில் பயன் இருக்கு.எனக்கு பூனைக்குட்டியில் நல்ல நம்பிக்கை முன்னம் இருந்தே இருக்கிறது.ஒருவரின் கருத்துககளின் ஆளத்தய்,உண்மயையே நான் அளவு கோலாகப் பார்ப்பது ,எண்ணிக்கையை அல்ல.

:wink: :(

Link to comment
Share on other sites

நன்றி பூஸ் குட்டி..! அழகாகவும் ஆணித்தரமாகவும் கட்டுரை வடிவில் உங்கள் கருத்தை வைத்து நமக்கெல்லாம் வாதாட வழியில்லாமல் செய்திட்டீங்கள்..! மிக்க நன்றிகளும் வாழ்த்துக்களும்..! :P

வசம்பு வாங்கோ..கட்டுரையை வாசிச்சு சுருக்கமா எழுதுங்கோ... பூனைக்குட்டிக்கு இது முதல்தரம் என்றபடியாலும் சோழியான் அண்ணா செய்த தந்திரத்தால ரோசம் வந்ததாலும்.. :( நல்ல கருத்துக்கள் வந்திருக்கு எழுதுங்கோ...உங்கள் வாதத்தை..பாப்பம்..! :wink: :D

Link to comment
Share on other sites

தல தந்த இணப்பிற்கு நன்றி,என்ன நீங்க தந்த இணைப்ப நீங்க வாசிச்சிருந்தா, அந்த இணைப்பைத் தந்திருக்க மாட்டியள் எண்டு நினக்கிறன்...இங்க அதன் அறிமுகப் பந்தியப் போடுறன் வாசிச்சுப் பாருங்க.

படிச்ச படியால்தான் போட்டனான்.. அதில் சொல்லப்பட்ட உள்ளர்த்தம் என்ன..?? அதுதான் கேள்வி, இளசுகள் கெட்டுப் போகக்கூடாது எண்ற நோக்கம்தான் என் கண்களுக்கு தெரிந்தது.! இதைத்தானே நாங்களும் பட்டி மண்றத்தில் சொல்கிறோம்...!

இணையத்தால் நன்மை செய்ய முடியாது. ஆனால் சீரளிக்க முடியும் எண்றுதானே சொல்கிறோம்.

மில்லியன் டொலர் எண்று இணையத்தளத்தை உண்டாக்கியவரைத்தவிர (அதுவும் ஏமாற்று வேலையால்த்தான்.) இணையத்தால் உயர்ந்தவர் எவரும் இல்லை சீரளிந்தவர்தான் இருக்கிறார்கள்..! என்பது எமது வாதம்..

Link to comment
Share on other sites

வசம்பு வாங்கோ..கட்டுரையை வாசிச்சு சுருக்கமா எழுதுங்கோ... பூனைக்குட்டிக்கு இது முதல்தரம் என்றபடியாலும் சோழியான் அண்ணா செய்த தந்திரத்தால ரோசம் வந்ததாலும்.. :( நல்ல கருத்துக்கள் வந்திருக்கு எழுதுங்கோ...உங்கள் வாதத்தை..பாப்பம்..! :wink: :D

வசம்பு அண்ணா பிசியாம்... சனி ஞாயிறு வாறன் எண்றவர்... வரமலே போயிடுவாரோ எண்டு கவலையாக் கிடக்கு...! அதுக்கு அடுத்த சனி,ஞாயிறுதான் வருவார் எண்டு நினைக்கிறன்..... :lol::lol::lol:

Link to comment
Share on other sites

பூனைக்குட்டி பிரமாதாம் அசத்தீட்டீங்கள். வாழ்த்துக்கள்.

அடுத்ததாக நடுவரின் தொகுப்புரையை தொடர்ந்து வசம்பண்ணா நீங்கள் கருத்து வைக்க வேண்டும் ஆகவே ஆயத்தம் செய்யவும்

Link to comment
Share on other sites

பூனைக்குட்டி பிரமாதாம் அசத்தீட்டீங்கள். வாழ்த்துக்கள்.

அடுத்ததாக நடுவரின் தொகுப்புரையை தொடர்ந்து வசம்பண்ணா நீங்கள் கருத்து வைக்க வேண்டும் ஆகவே ஆயத்தம் செய்யவும்

பாவம் நடுவர்..இம்பூட்டையும் வாசிக்கிறதுக்க மயங்கிடுவார்..குளுக்கோசும் கோலாவும் வாங்கிக் கொடுங்கோ..! :wink: :(

Link to comment
Share on other sites

பாவம் நடுவர்..இம்பூட்டையும் வாசிக்கிறதுக்க மயங்கிடுவார்..குளுக்கோசும் கோலாவும் வாங்கிக் கொடுங்கோ..! :wink: :(

சாச்சா நடுவர் நல்ல ஸ்ரோங் இதுக்கெல்லாம் மயங்க மாட்டார். சரி எதுக்கும் நான் முன் எச்சரிக்கையா வேண்டிக்கொடுக்கிறன் :P :P :wink:

Link to comment
Share on other sites

ரசி அக்கா...பார்த்தீங்களா..நீங்கள் கீழே போட்ட ரசிகை ரசிகை..ரசிகை எண்ட படத்தையும் காணல...இப்பிடித்தான் என்னோட அவாட்டரும் போட்டுது :roll: :(

சாறி இங்க இதை எழுதுவதற்கு.. :roll:

Link to comment
Share on other sites

நீளம் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் நன்றாகவே எழுதி சோழியன் அண்ணா சொன்னது போல் அணி தலைவரின் வேலையை சுலபமாக்கியிருக்கின்றீர்கள

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • The Top 25 Safest Airlines For 2024   Air New Zealand Qantas Virgin Australia Etihad Airways Qatar Airways Emirates All Nippon Airways Finnair Cathay Pacific Airways Alaska Airlines SAS Korean Air Singapore Airlines EVA Air British Airways Turkish Airlines TAP Air Portugal Lufthansa/Swiss Group KLM Japan Airlines Hawaiian Airlines American Airlines Air France Air Canada Group United Airlines   Jetstar has been named the world's safest low-cost carrier. GETTY The 20 Safest Low-Cost Airlines For 2024   Jetstar easyJet Ryanair Wizz Norwegian Frontier Vueling Vietjet Southwest Volaris flydubai AirAsia Group Cebu Pacific Sun Country Spirit Westjet JetBlue Air Arabia Indigo Eurowings   இனியும்  ஏர் லங்காவில் பயணித்து  உங்கள் இனிய உயிர்களை பாதுகாப்பற்று ஆக்க  வேண்டாம். https://www.forbes.com/sites/laurabegleybloom/2024/01/03/ranked-the-25-safest-airlines-in-the-world-according-to-airlineratingscom/?sh=fe651ac4c03c ஸ்டார்ட் மியூசிக் .........😀   
    • பேச்சுக்களுக்கெதிராகப் போராடிய யாழ்ப்பாண மக்களும், அவர்களின் உணர்வுகளை புறக்கணித்த இந்தியாவும்   போராளிகளின் தலைவர்கள் நிபந்தனைகளின்றி பேச்சுவார்த்தைகளுக்குச் செல்லப்போகிறார்கள் என்கிற செய்தி பர‌வியபோது யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள் வெடித்தன. குறிப்பாக, போராளிகளை அழுத்தம் கொடுத்து, திம்புவிற்கு இழுத்துச் சென்றமைக்காக இந்தியாவின் மீது மக்களின் கோபம் திரும்பியிருந்தது. ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், வீதி நாடகங்கள் என்பன இளைஞர்களால் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டன. யாழ்ப்பாணத்தின் சுவர்களிலும், வீதிகளுக்குக் குறுக்கே தொங்கவிடப்பட்ட பதாதைகளிலும் கூறப்பட்ட செய்தி ஒன்றுதான், "எங்களுக்குத் தமிழீழமே வேண்டும்". இந்த ஒருமித்த மக்களின் மனவெழுச்சி அப்பிரதேசமெங்கிலும் பரவிக் கிடந்தது.  ஜெயவர்த்தனவின் இராணுவத்தினர் புரிந்துவரும் படுகொலைகளுக்கெதிரான கண்டனங்கள், இந்தியா தனது நலன்களைக் காத்துக்கொள்ள ஈழத்தமிழர் மீது பலவந்தமாகத் திணித்துவரும் அழுத்தங்கள் என்பனவும் இப்போராட்டங்களில் தமிழ் இளைஞர்களால் வெளிப்படுத்தப்பட்டது. பொதுக்கூட்டங்களிலும், மேடை நாடகங்களிலும் இரு முக்கிய செய்திகளை பேச்சாளர்கள் முன்வைத்தனர். முதலாவது தமிழர்கள் ஜெயவர்த்தனவை ஒருபோதும் நம்பத் தயாரில்லை என்பது. இரண்டாவது, ஜெயவர்த்தனவுடன் சமரசம் செய்ய முன்வந்திருந்த தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியினரைத் தாம் முற்றாக நிராகரிக்கிறோம் என்பது.  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும், பாடசாலை மாணவர்களும் ஆர்ப்பாட்டப் பேரணிகளை ஒழுங்குசெய்வதில் முன்னின்றார்கள். போராளிகளின் தலைவர்கள் தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாளான ஆடி 3 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகியிருந்தன. அன்றுமட்டுமே யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல பேரணிகள் ஒழுங்குசெய்யப்பட்டன. தெல்லிப்பழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அமிர்தலிங்கத்தின் உருவ பொம்மை ஒன்றினை வீதிகளில் இழுத்துவந்தனர். ஒப்பாரி வைப்பதுபோல பாசாங்கு செய்த இன்னும் சில இளைஞர்கள் அமிர்தலிங்கத்தின் உருவப்பொம்மையினைப் பார்த்து, "ஜெயவர்த்தனவுடன் சமரசம் செய்துகொண்டதன் மூலம் அரசியல்த் தற்கொலையினை நீ செய்திருக்கிறாய், முட்டாளே, அது உனக்குத் தெரியாமல் போனதெப்படி?" என்று கேட்டார்கள்.   யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் "மாயமான்" எனும் பெயரில் மேடை நாடகம் ஒன்றினை அரங்கேற்றினார்கள். இராமாயணத்தில் வரும் காட்சியொன்றில், இராமனினதும், இலட்சுமணனினதும்  கவனத்தைத் திசைதிருப்பி, சீதையைக் கவர்ந்துசெல்ல இராவணன் மாய மானின் உருவத்தில் வந்ததற்கு ஒப்ப, தமிழர்களை தமக்குக் கீழ் நிரந்தரமாகவே அடிமைப்படுத்திவிட ஜெயார் போடும் மாயமான் வேடமே இந்தப் பேச்சுவார்த்தைகள் என்று அந்தநாடகம் கூறியது. ஜெயார் மறைத்துவைத்திருக்கும் வலையில் தமிழர்களை வீழ்த்துவதற்கு இந்தியாவே அழுத்தம் கொடுக்கிறது என்கிற குற்றச்சாட்டு இந்தியாவை நோக்கி முன்வைக்கப்பட்டது. ஜெயார் விரித்து வைத்திருக்கும் வலை நோக்கி இந்தியா முன்னாலே செல்ல, ஈழத்தேசிய முன்னணியின் நான்கு போராளித் தலைவர்களும், வெளியில் இருந்த புளொட் அமைப்பும் இந்தியாவின் சொல்கேட்டு ஜெயாரின் வலையில் தம்மையறியாமலேயே வீழ்வதற்காகப் பிந்தொடர்கின்றன என்று அவர்கள் கூறினார்கள். இந்தியா போராளிகளைப் பார்த்து  நடவுங்கள் என்று சொல்ல, நடப்பதும், நில்லுங்கள் என்று சொல்ல நிற்பதும், பாயுங்கள் என்று சொல்லப் பாய்வதும் நடக்கிறது  என்று அவர்கள் இந்தியாவை விமர்சித்தார்கள். இந்தியாவின் கட்டுப்பாட்டிலிருந்து போராளிகள் வெளியே வர எத்தனித்த ஒவ்வொரு கணமும் இந்தியா அவர்களை மிரட்டி பலவந்தமாக மீண்டும் தமது நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவந்தது. இந்தச் சாராம்சத்தினை முன்வைத்து யாழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய 35 நிமிட நகைச்சுவை கலந்த மேடை நாடகம் யாழ்க்குடாநாட்டில் ஒருவாரத்தில் மட்டுமே 125 தடவைகள் மேடையேற்றப்பட்டது.  பேச்சுவார்த்தையின் முதலாவது நாளான 1985, ஆடி 8 ஆம் திகதி முழு யாழ்க்குடாநாடுமே பொது வேலை நிறுத்தத்தினால் முற்றாக ஸ்த்தம்பித்துப் போனது. பலகலைக்கழக மாணவர்களும், பாடசாலை மாணவர்களும் வகுப்புக்களைப் பகிஸ்க்கரிப்புச் செய்தனர். கடைகள் இழுத்து மூடப்பட்டதோடு, வீதிகளும் வெறிச்சோடிப்போக, மக்கள் வீடுகளுக்குள் முடங்கிப் போனார்கள். வீதிகளெங்கும் பதாதைகள் தொங்கவிடப்பட்டன. "எமக்கு ஈழமே வேண்டும்", " யுத்தநிறுத்தத்தை எதிர்க்கிறோம்", "எமக்குப் பேச்சுவார்த்தை வேண்டாம்", "இந்தியாவே, புலிகளை திம்புவிற்கு ஏன் அழைத்துச் சென்றாய், அவர்களைப் புல்லை உண்ணவைக்கவா?" என்று அவை பேசின.  யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த மக்கள் எழுச்சிப் போராட்டங்களை தமது நிலைப்பாட்டினை இந்தியாவுக்குத் தெளிவாக உணரவைக்கும் சந்தர்ப்பமாகப் பாவிக்க நினைத்தனர் போராளிகள். "பாருங்கள், நீங்கள எங்களை ஜெயவர்த்தனவுடன் பேசவைக்க பலவந்தப்படுத்தி அழைத்து வந்திருக்கிறீர்கள். ஆனால், எமது மக்களோ அதற்கு முற்றான எதிர்ப்பினைக் காட்டி வருகிறார்கள்" என்று இந்திய அதிகாரிகளிடம் அவர்கள் கூறினார்கள். ஆனால், போராளிகளின் கருத்தினைக் கேட்கும் நிலையில் இந்திய அதிகாரிகள் இருக்கவில்லை. அவர்களைப்பொறுத்தவரை, தமிழ் மக்களின் உணர்வுகளைவிட பேச்சுக்களை எப்படியாவது நடத்திவிடவேண்டும் என்பது முக்கியமானதாகத் தெரிந்தது. இந்தியாவை இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் வல்லரசாகக் காட்டுவதற்கு இப்பேச்சுவார்த்தைகளை எப்படியாவது பாவித்துவிட கங்கணம் கட்டியிருந்த இந்திய அதிகாரிகள், தமிழர்களின் உணர்வுகளை முற்றாகப் புறக்கணித்திருந்தனர்.
    • நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் காய்ச்சல் ஒரு வைரஸ் என்பதால் மக்கள் குழுவாக கூடுவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குழுவாக இருக்கும் இடங்களில் முகக்கவசங்களை அணிந்து கொள்ளுமாறு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் பிரதம வைத்திய அதிகாரி ஹேமா வீரகோன் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வைரஸ் சுவாசக் குழாயால் ஏற்படுவதனால் இருமல், சளி, காய்ச்சல் மற்றும் உடல்வலி ஆகியவை முக்கிய அறிகுறிகள் என அவர் கூறினார். சுவாச நோய்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களில் வைரஸ் நிலைமை தணிந்தாலும், சில நோயாளிகளுக்கு ஓரிரு மாதங்களுக்கு இருமல் மற்றும் சளி சுவாச நோய்கள் இருப்பதாகவும் வைத்திய அதிகாரி சுட்டிக்காட்டினார்.   இந்த வைரஸும் இன்புளுவென்சாவின் மாறுபாடு என்பதால், நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து முடிந்தவரை விலகி இருப்பதன் மூலமும், குழுவாகவும் கூடும் இடங்களில் முகக் கவசம் அணிவதும் நோய் வராமல் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் மாத்திரமன்றி நாடு முழுவதிலும் இந்த காய்ச்சல் வைரஸ் என்பதால் வேகமாகப் பரவி வரும் நிலையில், சிகிச்சையின்றி குணமாகும் என்று நினைக்காமல் சிகிச்சை பெறுமாறும் கடுமையான சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மருத்துவ ஆலோசனை சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், சமூகத்தில் பரவல் அதிகரித்து வருகிறது என்று மருத்துவர் வலியுறுத்துகிறார்.   மேலும், குறிப்பாக மற்ற நோய்களுக்கு, காய்ச்சல், சளி போன்றவை ஏற்படும் என்பதால், மருத்துவ ஆலோசனைப்படி சிகிச்சை பெற வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/new-influenza-virus-in-sri-lanka-1714703659
    • ரஷ்ய - உக்ரைன் போருக்கு சென்ற இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் ரஷ்ய -  உக்ரைன்(Russia - Ukraine) போருக்கு சென்ற பல இலங்கைப் படையினர் தற்பொழுது உயிருடன் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வெலேபொட(Gamini Waleboda ) தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்(2) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ரஷ்ய வாடகை படையில் இணைந்து கொண்ட 40 இலங்கை படையினரின் அதிக எண்ணிக்கையிலானவர்கள் உயிரிழந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.   ரஷ்ய - உக்ரைன் போர் இராணுவம் மற்றும் பொலிஸ் என்பனவற்றிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டவர்கள் இவ்வாறு ரஷ்ய உக்ரைன் போரில் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இருபது லட்சம் ரூபா மாதச் சம்பளம் வழங்குவதாக கூறி குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்திற்கு லஞ்சம் வழங்கி இவ்வாறு இலங்கைப் படையினர் ரஷ்யா, உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.   இராணுவ பின்வரிசை சேவைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட படையினர் முன்னரங்கப் போரில் ஈடுபடுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் வெக்னர் கூலிப் படைக்கு விற்பனை செய்யப்பட்ட இலங்கையின் முன்னாள் படை அதிகாரி ஒருவரின் குரல் பதிவு கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அங்கிருந்து தப்பியவர்கள் ரஷ்யாவிற்கு செல்ல வேண்டாம் என கோருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவிற்கு வேலைக்காக அனுப்பி வைப்பதாக கூறினால் அந்த மோசடியில் சிக்க வேண்டாம் என மக்களிடம் கோருவதாக காமினி வெலேபொட தெரிவித்துள்ளார்.  https://tamilwin.com/article/sl-forces-who-joined-ukrain-war-many-died-1714640425?itm_source=parsely-api
    • கொரோனா ஊசி போட்டவர்கள் எல்லாம் வாழ்க்கை முழுக்க சாவை நிமிசத்துக்கு நிமிசம் நினைச்சு வாழவேண்டியது தான். கொரோனா ஊசி போடுங்கோ என வக்காளத்து வாங்கியவர்கள் இனி என்ன பதில் சொல்லப்போகின்றார்களோ என்பது கொரோனா ஊசியை விட பயங்கரமானதாய் இருக்கும் 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.