Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களினால் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் நிதியை கைப்பற்றுவாராம்: பி.பி.ஸியிடம் கே.பி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[saturday, 2011-06-25 21:51:50]

வெளிநாடுகளில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களினால் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் நிதியை கைப்பற்றி இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், முன்னாள் போராளிகளுக்கும் புனர்வாழ்வு வழங்க முயற்சி எடுப்பேன் என்று விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் தற்போது இலங்கை அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருப்பவருமான கேபி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முல்லைத்தீவில் அன்பு இல்லம் என்ற அனாதைகள் இல்லம் ஒன்றை இன்று ஆரம்பித்து வைத்த அவர் அங்கிருந்து பிபிசி தமிழோசையிடம் பேசினார்.

'வெளிநாடுகளில் விடுதலைப்புலிகளின் நிதியை போரின் பின்னர் பலர் தம்வசம் பதுக்கி வைத்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலனவர்களை எனக்கு தெரியும். அவர்களிடம் இருந்து அந்தப் பணத்தைப் பெறுவது கடினமான காரியம். ஆனால் அதனைப் பெற்று போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன்படுத்த நான் முயற்சி எடுப்பேன்'' என்று அவர் கூறினார்.

இலங்கை அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தான் தற்போது அங்கு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும், ஆனாலும், புனர்வாழ்வு நடவடிக்கைகள் போன்ற சில மனிதாபிமானப் பணிகளைச் செய்வதற்கு தனக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் ஏனைய முன்னாள் உறுப்பினர்களை விரைவில் விடுதலை செய்வது தொடர்பில், இலங்கை அரசாங்க இயந்திர செயற்பாடுகளில் ஒரு தாமதம் காணப்படுவதாகவும் கூறிய கேபி அவர்கள், தமிழ் மற்றும் சிங்கள தீவிர போக்குடையவர்களின் அழுத்தமும் இந்த தாமதத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்'' என்ற சித்தாந்தத்தை ஆரம்பித்தவர்களில் தானும் ஒருவர் என்று கூறிய அவர், ஆனால், தற்போது காலம் மாறி விட்டது என்றும், தற்போதைக்கு முதலில் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கே புலம்பெயர் தமிழர் ஆதரவு வழங்க வேண்டும் என்றும், அரசியல் விவகாரங்கள் அதற்கு அடுத்ததாகவே பேசப்பட வேண்டும் என்றும் கூறினார்.

என்னுடைய சக பெண் போராளி தனது வயிற்றுக்காக, தன்னையே விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் போது, அவளுக்கு சாப்பாடு கொடுக்க முடியாத எனக்கு, அவளது உரிமைகளைப் பற்றிப் பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது'' என்றார் கேபி.

http://www.seithy.com/breifNews.php?newsID=45473&category=TamilNews&language=tamil

என்னுடைய சக பெண் போராளி தனது வயிற்றுக்காக, தன்னையே விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் போது, அவளுக்கு சாப்பாடு கொடுக்க முடியாத எனக்கு, அவளது உரிமைகளைப் பற்றிப் பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது'' என்றார் கேபி.

க்ட்ட்ப்://ந்ந்ந்.செஇத்ய்.cஒ...&லஙுஅகெ=டமில்

உரிமையையும்,உணர்வையும்பற்றிப்பேசக்கூட ஒரு தகுதி வேண்டும்.கே பீ ஆகிய நீர் ஒரு தமிழ்மகனுக்கும்சரி, தமிழ்மகளுக்கும் சரி உன் தாய் தந்தையை விற்று உணவு கொடுத்தாலும் அது அவர்கள் உடம்பில் ஒட்டாது. துரோகம்தான் ஒட்டும். தர்மத்தைப்பற்றியெல்லாம் எமக்கு நீர் ஒன்றும் கூறவேண்டிய அவசியம் இல்லை எம் தேசியத்திடம் நாம் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டுள்ளோம்.உமக்கு ஓர் பொறுப்பு உள்ளது உனது இறுதிக்கணத்தை நீ எண்ணிக்கொண்டிருப்பது............................

நீ எண்ண மறுத்தால் தமிழ்த்தர்மவீரர்களால் அது எண்ணப்படும். இது எச்சரிக்கையல்ல........கட்டளை................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்'' என்ற சித்தாந்தத்தை ஆரம்பித்தவர்களில் தானும் ஒருவர் என்று கூறிய அவர், ஆனால், தற்போது காலம் மாறி விட்டது என்றும், தற்போதைக்கு முதலில் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கே புலம்பெயர் தமிழர் ஆதரவு வழங்க வேண்டும் என்றும், அரசியல் விவகாரங்கள் அதற்கு அடுத்ததாகவே பேசப்பட வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், என்னுடைய சக பெண் போராளி தனது வயிற்றுக்காக, தன்னையே விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் போது, அவளுக்கு சாப்பாடு கொடுக்க முடியாத எனக்கு, அவளது உரிமைகளைப் பற்றிப் பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது'' என்றார் கேபி

http://youtu.be/SCriBBnJed8

நீயெல்லாம் ...ஒரு .....மனிதப்பிறவியா ?

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

இது எச்சரிக்கையல்ல........கட்டளை................................

இந்த வசனத்தை சிலோன் மருமகன் விஜய் அவர்கள் ஒரு படத்தில சொல்லிக் கேட்டமாதிரியிருக்கு....

இந்த வசனத்தை சிலோன் மருமகன் விஜய் அவர்கள் ஒரு படத்தில சொல்லிக் கேட்டமாதிரியிருக்கு....

சிலர் கருத்துக்கள் ஏதாவது எழுத வேண்டும் என்று எழுதுவார்கள்.

சிலர் தங்கள் உண்மையான உருவத்தைக்காட்ட ஏதாவது உவமானம் உவமேயங்களை உபயோகிப்பார்கள்.

ஒட்டுமொத்தத்தில் ஒருவர் எழுதும் கருத்திலிருந்தே அவர் யார் அவரின் நோக்கமென்ன என்பதை அறிந்துகொள்ளலாம் என்று எனக்கு ஓர் தேசியப்பற்றுள்ள உளவியலாளர் கூறியதுதான் இப்போ ஞாபகம் வருகிறது

  • கருத்துக்கள உறவுகள்

இது எச்சரிக்கையல்ல........கட்டளை................................

:unsure:

சிலர் கருத்துக்கள் ஏதாவது எழுத வேண்டும் என்று எழுதுவார்கள்.

சிலர் தங்கள் உண்மையான உருவத்தைக்காட்ட ஏதாவது உவமானம் உவமேயங்களை உபயோகிப்பார்கள்.

ஒட்டுமொத்தத்தில் ஒருவர் எழுதும் கருத்திலிருந்தே அவர் யார் அவரின் நோக்கமென்ன என்பதை அறிந்துகொள்ளலாம் என்று எனக்கு ஓர் தேசியப்பற்றுள்ள உளவியலாளர் கூறியதுதான் இப்போ ஞாபகம் வருகிறது

நீங்க சொன்னா கட்டாயம் சரியாத்தான் இருக்கும்.

பச்சை குத்தேலாமல் போச்சு. இன்றைய எண்ணிக்கை முடிஞ்சு போச்சு. நாளைக்கு முதலாவது பச்சை உங்கள் எச்சரிக்கையில்லை.....இல்லை கட்டளைக்குத்தான்.

நீங்க சொன்னா கட்டாயம் சரியாத்தான் இருக்கும்.

பச்சை குத்தேலாமல் போச்சு. இன்றைய எண்ணிக்கை முடிஞ்சு போச்சு. நாளைக்கு முதலாவது பச்சை உங்கள் எச்சரிக்கையில்லை.....இல்லை கட்டளைக்குத்தான்.

மிக்க நன்றி வணக்கம் சகோதரி.................................................................................

  • கருத்துக்கள உறவுகள்

எம் தேசியத்திடம் நாம் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டுள்ளோம்.

எம் தேசியம் என்று சொல்லுவது தேசிய உணர்வு கொண்ட தமிழ் மக்களினால் கடந்த தேர்தல்களில் தெரிவு செய்யப்பட்ட தேசியக் கூட்டமைப்பைப்தானே. அவர்கள் வன்முறையாளர்களாக தங்களைக் காட்டிக்கொள்வதில்லையே.

உரிமையையும்,உணர்வையும்பற்றிப்பேசக்கூட ஒரு தகுதி வேண்டும்.கே பீ ஆகிய நீர் ஒரு தமிழ்மகனுக்கும்சரி, தமிழ்மகளுக்கும் சரி உன் தாய் தந்தையை விற்று உணவு கொடுத்தாலும் அது அவர்கள் உடம்பில் ஒட்டாது. துரோகம்தான் ஒட்டும். தர்மத்தைப்பற்றியெல்லாம் எமக்கு நீர் ஒன்றும் கூறவேண்டிய அவசியம் இல்லை எம் தேசியத்திடம் நாம் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டுள்ளோம்.உமக்கு ஓர் பொறுப்பு உள்ளது உனது இறுதிக்கணத்தை நீ எண்ணிக்கொண்டிருப்பது............................

நீ எண்ண மறுத்தால் தமிழ்த்தர்மவீரர்களால் அது எண்ணப்படும். இது எச்சரிக்கையல்ல........கட்டளை................................

எனக்கு புல்லரிச்சுட்டுது...... இப்படி எழுதுபவற்றை அடிக்கடி வாசித்தால் வரும் சிரிப்பில் என் இரத்த அழுத்த நோய் முற்றாகவே மாறக் கூடிய வாய்ப்பு இருக்கு. தொடர்ந்து எழுதவும்

எனக்கு புல்லரிச்சுட்டுது...... இப்படி எழுதுபவற்றை அடிக்கடி வாசித்தால் வரும் சிரிப்பில் என் இரத்த அழுத்த நோய் முற்றாகவே மாறக் கூடிய வாய்ப்பு இருக்கு. தொடர்ந்து எழுதவும்

என்னைப் போன்ற ஒருசிலர் உங்கள் இரத்த அழுத்தத்தைக் கூட்ட (நான் இதை நிச்சயம் வேண்டும் என்று அல்லது விரும்பிச் செய்வதில்லை), வேறு சிலர் அதைக் குறைக்க உதவுவது நல்லது தானே.

எப்படியோ, யாரோ ஒருவர் மூலமாகவோ உங்கள் இரத்த அழுத்தம் குறைவது மகிழ்ச்சியே.

Edited by ஆராவமுதன்

என்னைப் போன்ற ஒருசிலர் உங்கள் இரத்த அழுத்தத்தைக் கூட்ட (நான் இதை நிச்சயம் வேண்டும் என்று அல்லது விரும்பிச் செய்வதில்லை),

அட, அது எப்ப நடந்தது?

தேடப்படும் ஒரு வணிகரை தலைவனாக்கி, தேசிய இன விடுதலையை வென்றெடுக்க திரை மறைவில் இருந்து காய் நகர்த்திய, புலத்து மூத்த செயற்பாட்டாளர் (சிறு வணிகர்கள்) தமது பெரும் வணிகத் தலைவன் தொடர்பாக வாய் திறப்பதாகத் தெரியவில்லை. தம் வணிகத் தலைவன் மீதும், வணிகத் தலைவனின் விடுதலைக் கொள்கை மீதும் இந்தச் சிறு வணிகர்களுக்கு உள்ள தீராப்பற்றை வெளிகாட்டுகின்றது. எது வரை இந்த வணிகத்தலைவனுக்கு, இந்த சிறு வணிகர்கள் நம்பிக்கையாக செயற்படப்போகின்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலர் கருத்துக்கள் ஏதாவது எழுத வேண்டும் என்று எழுதுவார்கள்.

சிலர் தங்கள் உண்மையான உருவத்தைக்காட்ட ஏதாவது உவமானம் உவமேயங்களை உபயோகிப்பார்கள்.

ஒட்டுமொத்தத்தில் ஒருவர் எழுதும் கருத்திலிருந்தே அவர் யார் அவரின் நோக்கமென்ன என்பதை அறிந்துகொள்ளலாம் என்று எனக்கு ஓர் தேசியப்பற்றுள்ள உளவியலாளர் கூறியதுதான் இப்போ ஞாபகம் வருகிறது

எழுதப்படும் கருத்தில் இருந்து ஒருவரையும், அவரின் நோக்கத்தையும் தெரிந்து கொள்வது என்றால் ஓரளவு உளவியல் தெரிந்து இருக்க வேண்டும். அவரது நோகத்தை எல்லாராலும் எளிதில் அறிந்து கொள்ள முடியாது, எல்லாராலும் ஒருவரை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவரது ஆரம்ப கருத்துகளில் இருந்து, இன்றைய கருத்து வரை மேலோட்டமாக் படித்து பார்த்தால் அவரது உண்மையான சுய ரூபம் தெரியும், இந்த முறையில் எந்த புலித்தோல் போர்த்த பூனையும் நிச்சயம் மாட்டு படும், என்ன கொஞ்சம் பொறுமை வேண்டும். :)

  • கருத்துக்கள உறவுகள்

தேடப்படும் ஒரு வணிகரை தலைவனாக்கி, தேசிய இன விடுதலையை வென்றெடுக்க திரை மறைவில் இருந்து காய் நகர்த்திய, புலத்து மூத்த செயற்பாட்டாளர் (சிறு வணிகர்கள்) தமது பெரும் வணிகத் தலைவன் தொடர்பாக வாய் திறப்பதாகத் தெரியவில்லை. தம் வணிகத் தலைவன் மீதும், வணிகத் தலைவனின் விடுதலைக் கொள்கை மீதும் இந்தச் சிறு வணிகர்களுக்கு உள்ள தீராப்பற்றை வெளிகாட்டுகின்றது. எது வரை இந்த வணிகத்தலைவனுக்கு, இந்த சிறு வணிகர்கள் நம்பிக்கையாக செயற்படப்போகின்றார்கள்.

எல்லாம் வெறும் வியாபாரம் என்று எப்போதே புரிந்திருக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு புல்லரிச்சுட்டுது...... இப்படி எழுதுபவற்றை அடிக்கடி வாசித்தால் வரும் சிரிப்பில் என் இரத்த அழுத்த நோய் முற்றாகவே மாறக் கூடிய வாய்ப்பு இருக்கு. தொடர்ந்து எழுதவும்

நிழலி ,

ஒரு காலாவதியான சயனைட்டைச் சாப்பிட்டீங்களெண்டா இரத்த அழுத்தம் மாறும் ....உணவருந்தும் நேரங்களில் வாந்தி வருமாம்.....ஆனால் தொடர்ந்து உயிர்வாழலாமாம்.... :huh:

வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களினால் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் நிதியை கைப்பற்றுவாராம்: பி.பி.ஸியிடம் கே.பி

... மே18இற்கு பின் கேபிக்கள் ஓடிய ஓட்டம் ... மூர்த்தியரை சந்திக்க வேண்டுமாம்!!!!.... ரெஜியரை சந்திக்க வேண்டுமாம்!!!.... தனம் அன்ட் கோவை சந்திக்க வேண்டுமாம்!!! .... என்ன ... நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ... அமைக்கப் போகிறோம் எனும் பெயரில் ..... மகிந்தவிடம் கேபி உறுதியழித்த ... நிதிகளை/சொத்துக்களை கொண்டு போயெ சேர்க்க ... அதற்கு மறுபெயர்தானாம் "போராளிகளின் புனர்வாழ்வு" .... எத்தனை பேர் கிளம்பியிருக்கிறீங்க .... இன்றும் ஓட்டம் நிற்கவில்லை ... தொடர்ந்து ... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களினால் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் நிதியை கைப்பற்றி இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், முன்னாள் போராளிகளுக்கும் புனர்வாழ்வு வழங்க முயற்சி எடுப்பேன் என்று விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் தற்போது இலங்கை அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருப்பவருமான கேபி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

தொலைந்தது போக, மிச்சம் எவ்வளவு இருக்கும் என்று, ஒரு குத்து மதிப்பாச் சொல்லுங்கோவன்!

அதுக்காவது, வருங்காலத்தில் கணக்கு வைத்திருப்போம்!

இல்லாவிட்டால், இடைத்தரகு கூலி போக, முன்னாள் போராளிகளுக்குக் கோவணம் வாங்கக் கூடக் காசு இருக்காது!

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சும்மா மகிந்தவுக்கு ரீல் விட்டுக்கொண்டிருக்கின்றார்...?

அவருக்கு தெரியும்

இருக்கிற கடனை அடைக்க இலங்கையை வித்தாலும் போதாது என்று...?

வேண்டுமென்றால் சுவிசில் வந்து இறங்கி ஆரம்பிக்கச்சொல்லுங்கோ...

பல தேசியத்துக்கு உழைத்த குடும்பங்களாவது ஒன்று சேரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.