Jump to content

"பாவம்" .... தயவு செய்து செய்யாதீர்கள்!


Recommended Posts

Germany

In the meaning above, Germany is a two party consent state. Telephone recording without two or more parties consents is a criminal act according to Sec. 201 to German Criminal Code [2] - violation of the confidentiality of the spoken word. Telephone tapping by authorities has to be approved by a judge. For the discussing about the lawful interception in Germany please see here de:Telefonüberwachung(German language).

Link to comment
Share on other sites

  • Replies 72
  • Created
  • Last Reply

சாந்தி உங்களிற்கான நாட்கள் எண்ணப்படுகின்றது தயாராகுங்கள்.

Link to comment
Share on other sites

தொலைபேசி தகவல்களை ரகசியமாக பதிவு செய்த நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிக்கை மூடப்பட்டது

பிரிட்டனில் உள்ள அரசியல் தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள், அரச குடும்பத்தினர் என பல தரப்பினரின் தொலைபேசிகளை ரகசியமாக பதிவு செய்து பரபரப்பு செய்திகளை நியூஸ் ஆப் தி வேர்ல்டு வெளியிட்டது.

இந்த பத்திரிக்கை அத்து மீறுவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பிரபலங்கள் கூறினர். பிரபலங்கள் குரல் சார்ந்த மின்னஞ்சல் தகவல்களை எடுத்ததற்கு இந்த பத்திரிக்கை நிறுவனம் மன்னிப்பு கோரியது.

நடிகை சியன்னா மில்லருக்கும் உரிய நஷ்ட ஈடு தொகை வழங்கியது. இந்த நிலையில் 168 ஆண்டுகள் பழமை வாய்ந்த நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிக்கை ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டது.

இந்த பத்திரிக்கை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 25 லட்சம் பிரதிகள் விற்பனை செய்யும். பத்திரிக்கை அத்து மீறுவதாக அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் ஆவேசப்பட்ட நிலையில் பத்திரிக்கை மூடப்பட்டு உள்ளது.

பத்திரிக்கை மூடப்படும் நிகழ்வுக்கு பெரும் வேதனை அடைந்து உள்ளதாக உரிமையாளர் முர்டோக் தெரிவித்தார். முர்டோக் 1969ம் ஆண்டு நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிக்கையை வாங்கி சர்வதேச மீடியா சக்தியாக உருவெடுத்தார்.

இவர் அவுஸ்திரேலியாவில் பத்திரிக்கை நடத்தி வருகிறார். இவரது நியூஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தில் சன், தி டைம்ஸ், சண்டே டைம்ஸ் ஆகிய பத்திரிக்கைகள் உள்ளன. முர்டோக்கின் நியூஸ் கொர்ப்பரேஷனில் பொக்ஸ் நியூஸ், வால் ஸ்ஷீட் ஜர்னல், நியூயோர்க் போஸ்ட் ஆகிய பத்திரிக்கைகளும் உள்ளன.

http://www.newsonews.com/view.php?20emAACQ0030eaXRlOm434eadBdBnZB4cbdcgE806ecddc4C608E4dbc425ZnBdcae430YmOldde022eoQMyOb02

தொலைபேசி உரையாடல்களை பதிந்து மறைமுக மிரட்டல்கள் விடுவோருக்கான எச்சரிக்கை செய்தி இது

Link to comment
Share on other sites

தொலைபேசி தகவல்களை ரகசியமாக பதிவு செய்த நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிக்கை மூடப்பட்டது

பிரிட்டனில் உள்ள அரசியல் தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள், அரச குடும்பத்தினர் என பல தரப்பினரின் தொலைபேசிகளை ரகசியமாக பதிவு செய்து பரபரப்பு செய்திகளை நியூஸ் ஆப் தி வேர்ல்டு வெளியிட்டது.

இந்த பத்திரிக்கை அத்து மீறுவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பிரபலங்கள் கூறினர். பிரபலங்கள் குரல் சார்ந்த மின்னஞ்சல் தகவல்களை எடுத்ததற்கு இந்த பத்திரிக்கை நிறுவனம் மன்னிப்பு கோரியது.

நடிகை சியன்னா மில்லருக்கும் உரிய நஷ்ட ஈடு தொகை வழங்கியது. இந்த நிலையில் 168 ஆண்டுகள் பழமை வாய்ந்த நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிக்கை ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டது.

இந்த பத்திரிக்கை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 25 லட்சம் பிரதிகள் விற்பனை செய்யும். பத்திரிக்கை அத்து மீறுவதாக அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் ஆவேசப்பட்ட நிலையில் பத்திரிக்கை மூடப்பட்டு உள்ளது.

பத்திரிக்கை மூடப்படும் நிகழ்வுக்கு பெரும் வேதனை அடைந்து உள்ளதாக உரிமையாளர் முர்டோக் தெரிவித்தார். முர்டோக் 1969ம் ஆண்டு நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிக்கையை வாங்கி சர்வதேச மீடியா சக்தியாக உருவெடுத்தார்.

இவர் அவுஸ்திரேலியாவில் பத்திரிக்கை நடத்தி வருகிறார். இவரது நியூஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தில் சன், தி டைம்ஸ், சண்டே டைம்ஸ் ஆகிய பத்திரிக்கைகள் உள்ளன. முர்டோக்கின் நியூஸ் கொர்ப்பரேஷனில் பொக்ஸ் நியூஸ், வால் ஸ்ஷீட் ஜர்னல், நியூயோர்க் போஸ்ட் ஆகிய பத்திரிக்கைகளும் உள்ளன.

http://www.newsonews.com/view.php?20emAACQ0030eaXRlOm434eadBdBnZB4cbdcgE806ecddc4C608E4dbc425ZnBdcae430YmOldde022eoQMyOb02

தொலைபேசி உரையாடல்களை பதிந்து மறைமுக மிரட்டல்கள் விடுவோருக்கான எச்சரிக்கை செய்தி இது

இச் செய்தி குழப்பமாக மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. பத்திரிகை நடத்துபவர்கள் மற்றவர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டே பதிவு செய்துள்ளனர். தங்களுடனான உரையாடலை அல்ல.

Link to comment
Share on other sites

இச் செய்தி குழப்பமாக மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. பத்திரிகை நடத்துபவர்கள் மற்றவர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டே பதிவு செய்துள்ளனர். தங்களுடனான உரையாடலை அல்ல.

இருக்கலாம் இணையவன். அப்படியாயின் நீங்கள், யாரும் தங்களுடன் கதைக்கும் உரையாடலை மற்றவருக்கு தெரியாமல் பதிவு செய்து அதைவைத்து மறைமுக மிரட்டல் செய்வதை ஆதரிக்கின்றீர்களா ..??

Link to comment
Share on other sites

இருக்கலாம் இணையவன். அப்படியாயின் நீங்கள், யாரும் தங்களுடன் கதைக்கும் உரையாடலை மற்றவருக்கு தெரியாமல் பதிவு செய்து அதைவைத்து மறைமுக மிரட்டல் செய்வதை ஆதரிக்கின்றீர்களா ..??

ஒருவர் தன்னை வெருட்டுகிறார் என்பதை பதிவு செய்து அதை பொலிஸில் ஆதரமாக கொடுக்கலாம் ஆனால் பதிவு செய்து கொண்டு அதை பொலிஸில் முறைப்பாடும் செய்யாது பிளைக்மெயில் செய்வது ஜரோப்பாவில் கடும் குற்றம்.................

ஆனால் மேல நடந்த்து வேற .. இது முறைகேடும் மற்றது அனுமதியில்லது மற்றவர்களின் தனிப்பட்ட வொய்ஸ்மையிலை கேப்பதும் அதை அழிப்பதும் குற்றமாக பார்க்க படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குள் வரவிரும்பவில்லை

ஆனால் எனக்கு தெரிந்ததை பதிகின்றேன்

சில அரசாங்க தனியார் நிறுவனங்களுக்கு தொலைபேசியை எடுக்கும்போது முதலிலேயே சொல்வார்கள்

இது சில பாதுகாப்பு காரணங்களுக்காக பதிவு செய்யப்படுகிறது. தங்களுக்கு உடன்பாடு இல்லையென்றால் முதலிலேயே நிறுத்துமாறு கூறலாம்.

இதன்படி பார்த்தால்

முன் அறிவித்தலின்றி எதிரில் பேசுபவரது அனுமதியற்று அவரது பேச்சு பதியப்படுவது குற்றமே.

Link to comment
Share on other sites

இதற்குள் வரவிரும்பவில்லை

ஆனால் எனக்கு தெரிந்ததை பதிகின்றேன்

சில அரசாங்க தனியார் நிறுவனங்களுக்கு தொலைபேசியை எடுக்கும்போது முதலிலேயே சொல்வார்கள்

இது சில பாதுகாப்பு காரணங்களுக்காக பதிவு செய்யப்படுகிறது. தங்களுக்கு உடன்பாடு இல்லையென்றால் முதலிலேயே நிறுத்துமாறு கூறலாம்.

இதன்படி பார்த்தால்

முன் அறிவித்தலின்றி எதிரில் பேசுபவரது அனுமதியற்று அவரது பேச்சு பதியப்படுவது குற்றமே.

ஒரு கொலையாளி தன் வாயால் தான் செய்த கொலையை சொல்லும் போது அதை பதிவு செய்து பிள்க்மெயில் செய்வது போன்றவையும் குற்றத்துக்குரியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு லண்டனின் முக்கிய அலுவலகங்களோடு[வேலை வாய்ப்பு நிறுவனம்,வங்கி,வரி நிறுவனம்] கதைக்கையில் அதை ரெக்கோட் பண்ணுவார்கள்[காரணம் சரியான விபரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக] ஆனால் அதை ரெக்கோட் பண்ண முதல் பதியப்பட்ட குரல் ஒன்று சொல்லும் உங்கள் குரல் ரெக்கோட் செய்யப்படும் என்பதை ஆனால் அப்படி பதியப்படும் குரலை வைத்து பிளாக் மெயில் பண்ண முடியாது.

Link to comment
Share on other sites

இங்கு லண்டனின் முக்கிய அலுவலகங்களோடு[வேலை வாய்ப்பு நிறுவனம்,வங்கி,வரி நிறுவனம்] கதைக்கையில் அதை ரெக்கோட் பண்ணுவார்கள்[காரணம் சரியான விபரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக] ஆனால் அதை ரெக்கோட் பண்ண முதல் பதியப்பட்ட குரல் ஒன்று சொல்லும் உங்கள் குரல் ரெக்கோட் செய்யப்படும் என்பதை ஆனால் அப்படி பதியப்படும் குரலை வைத்து பிளாக் மெயில் பண்ண முடியாது.

இது ஒரு சிறுபிரச்சனை. ஆனால் இதை பெரிய பிரச்சனையாக்கி பழிக்கு பழி ரதத்துக்கு ரத்தம் என்றது போல் நினைப்பில் எழுதபடும் கருத்துக்களே. இதனால் ஒன்றும் ஆக போவது இல்லை.

Link to comment
Share on other sites

தாராளமாக இன்று போய் நாளை வாருங்கள் மீண்டும் நாளை மறு தினமும் வாருங்கள் உங்ளிற்கான நாட்களை மனதில் வைத்தபடி. .... :lol: :lol:

Link to comment
Share on other sites

... இன்றைய தினம் இங்குள்ள ஓர் ஆலய நிர்வாகத்தில் உள்ள ஒருவருடன் கதைத்தேன். அவர் அவ்வாலயத்தின் மூலம் அங்கு நடைபெறும் மனிதாபிமான செயற்பாடுகளுக்கு பொறுப்பேற்று இருக்கிறார். தற்போது அவ்வாலய மூலம் நடைபெறும் அனைத்து மனிதாபிமான செயற்பாடுகளையும் மீளாய்வு செய்யும் பணியில் .. ஒரு சம்பவத்தை கூறினார் ...

... அந்த சிறுவர்களை பராமரிக்கும் இல்லம் வடமராட்சி பகுதில் உள்ளது. அதில் 59 சிறார்கள்: பராமரிப்பதாக இதுவரை கணக்கும் காட்டப்பட்டது. இங்கிருந்தும் தவணை தவறாமல் பணம் போய்ச் சேர்ந்தும் கொண்டிருந்தது. இப்போது அங்கு உள்ள சிறார்கள் 59 பேரின் பெயர், விபரங்கள், படங்களை அனுப்பும்படி கோரிக்கை விடப்பட்டபோது .... 25 சிறார்களின் விபரங்களே அங்கிருந்து வந்ததாம். எங்கே மீதமானவர்கள் என்றால்???? ... பல நொண்டிச்சாட்டுகள் மூதலில் கூறப்பட்டு ... இறுதியாக சிலரை பாதுகாப்பு கருதி அரசாங்கம் எங்கோ கொண்டு சென்று விட்டதோ? ஏதோ? கூறப்பட்டதாம்! ... அப்படியாயின் இதுவரை 59 சிறார்களுக்கு என்று அனுப்பிய பணங்கள் எங்கு போனது???? ... இறுதியாக அவ்வாலயம் சொல்லி விட்டதாம் "நீங்கள் விபரங்கள் தந்த 25 பேருக்குத்தான், இங்கிருந்து பணம் அனுப்ப முடியும் என்று"!!!!

... இப்படியான சில சம்பவங்களோடு ... ஆலயம் சில தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தேசித்திருக்கிறது!! உதாரணத்துக்கு ... இங்கிருந்து அங்கு பராமரிக்கப்படும் இல்லங்களுக்கு இன்ரநெற் இணைப்பு ஏற்படுத்தி கொடுத்து, ஸ்கைப் மூலம் எந்த நேரமும் எந்த பிள்ளைகளுடன் தொடர்பு கொள்ள முயற்சி எடுக்கிறது. ... நல்ல விடயம்!

.... தொடரும் ...

Link to comment
Share on other sites

... இன்றைய தினம் இங்குள்ள ஓர் ஆலய நிர்வாகத்தில் உள்ள ஒருவருடன் கதைத்தேன். அவர் அவ்வாலயத்தின் மூலம் அங்கு நடைபெறும் மனிதாபிமான செயற்பாடுகளுக்கு பொறுப்பேற்று இருக்கிறார். தற்போது அவ்வாலய மூலம் நடைபெறும் அனைத்து மனிதாபிமான செயற்பாடுகளையும் மீளாய்வு செய்யும் பணியில் .. ஒரு சம்பவத்தை கூறினார் ...

... அந்த சிறுவர்களை பராமரிக்கும் இல்லம் வடமராட்சி பகுதில் உள்ளது. அதில் 59 சிறார்கள்: பராமரிப்பதாக இதுவரை கணக்கும் காட்டப்பட்டது. இங்கிருந்தும் தவணை தவறாமல் பணம் போய்ச் சேர்ந்தும் கொண்டிருந்தது. இப்போது அங்கு உள்ள சிறார்கள் 59 பேரின் பெயர், விபரங்கள், படங்களை அனுப்பும்படி கோரிக்கை விடப்பட்டபோது .... 25 சிறார்களின் விபரங்களே அங்கிருந்து வந்ததாம். எங்கே மீதமானவர்கள் என்றால்???? ... பல நொண்டிச்சாட்டுகள் மூதலில் கூறப்பட்டு ... இறுதியாக சிலரை பாதுகாப்பு கருதி அரசாங்கம் எங்கோ கொண்டு சென்று விட்டதோ? ஏதோ? கூறப்பட்டதாம்! ... அப்படியாயின் இதுவரை 59 சிறார்களுக்கு என்று அனுப்பிய பணங்கள் எங்கு போனது???? ... இறுதியாக அவ்வாலயம் சொல்லி விட்டதாம் "நீங்கள் விபரங்கள் தந்த 25 பேருக்குத்தான், இங்கிருந்து பணம் அனுப்ப முடியும் என்று"!!!!

... இப்படியான சில சம்பவங்களோடு ... ஆலயம் சில தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தேசித்திருக்கிறது!! உதாரணத்துக்கு ... இங்கிருந்து அங்கு பராமரிக்கப்படும் இல்லங்களுக்கு இன்ரநெற் இணைப்பு ஏற்படுத்தி கொடுத்து, ஸ்கைப் மூலம் எந்த நேரமும் எந்த பிள்ளைகளுடன் தொடர்பு கொள்ள முயற்சி எடுக்கிறது. ... நல்ல விடயம்!

.... தொடரும் ...

ஜயோ நெல்லியான் நீங்கள் குருகுலம் பற்றிய விடயத்தில் ஆதாரங்களை இணைப்பீர்கள். அதை வைத்து சாந்தியை ஒரு போடு போடலாமென்று பார்த்தால். குருகுலம் பற்றி விட்டுவிட்டு வடமராட்சி சிறார்கள் என்றுகொண்டு நிக்கிறீர்கள். அதை விட்டிட்டு ஈலிங் கோயில் நிருவாகத்திடம் கேட்டு ஆதாரங்களை விரைவில் இணையுங்கள் . பால் பண்ணை பற்றிய விபரங்களும் அவர்களிடம் உள்ளது.

Link to comment
Share on other sites

... எவ்வளவு கஸ்டப்பட்டு உழைக்கிறோம் புலத்தில் ..... ஆனால் எம் மண் மீதும், மக்கள் மீதும் கொண்ட காதலால் ....கேட்டவைகளுக்கு அள்ளி எறிகிறோம்!!!!!!!!! ... தவறு!!! .... நாலு கேள்வி கேட்போம் ... பசப்பு வார்த்தைகளும், ஒப்பாரிகளும், ... தொடரத்தான் செய்யும் ... மீண்டும் இவைகளுக்கு வீழ்ந்து விடாமல் ... நாலு கேள்விகளை திரும்பவும் கேட்போம்!! ... பின் ....

Link to comment
Share on other sites

... "நேசக்கரமானது சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் இயக்கப்படுகிறதா"???????? .... ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில், என்ற கேள்வியை கேட்டிருந்தேன் ... இன்றுவரை சரியாக பதிலளிக்கப்படவில்லை ... நான் இந்த அமைப்பிற்கு உதவிகள் செய்தவன், மற்றும் இப்படியான சந்தேகங்கள் பலர் மட்டத்தில் எழுந்த காரணத்தினால், இக்கேள்வியை கேட்டு, அதற்கு பதிலளிக்க தவறின், இவ்வைமைப்பினூடு நான் செய்யும் உதவிகளை நிறுத்த உத்தேசித்திருந்தேன்!!! சட்ட நிபுணர்களின் கருத்துகளின்படி கேள்விகள் எப்பொது அமைப்புகளின் மீதும் கேட்டும் உரிமை அனைவருக்கும் உள்ளது!!!. ... என்னால் எழுப்பட்ட கேள்விகளும் சட்டவரையறைகளை மீறவில்லை!!!! .. இங்கு எனது சந்தேகங்களுக்கு பலர் ... யாழ்கள உறவுகள் உட்பட ... ஆதரவளித்துள்ளார்கள்!! ... இன்றுடன் நான் இவ்வமைப்பு மூலம் செய்யும் உதவிகள் அனைத்தையும் நிறுத்துகிறேன்!!!

மாறாக இவ்வமைப்பின் நிர்வாகிகள் ... இவ்வமைப்பை பயன்படுத்தி ... பலரது உரையாடல்களை அவர்களது அனுமதி அற்று ஒலிப்பதிவு செய்து, அதை மீண்டும் அவர்களது அனுமது அற்று இந்த யாழ்களத்திலேயே பிரசுரித்தும், மிரட்டியும் உள்ளார்கள்!!! இது இங்கிலாந்து, ஜேர்மனிய, பிரான்ஸ் உட்பட்ட ஐரோப்பிய யூனியன் அமைப்புகளின் சட்டவரை முறைகளின் பிரகாரம் கிறிமினல் குற்றமாகும்!!!! ... இது தொடர்பாக மேலதிக சட்ட நடவடிக்கைகள் ..................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு எட்டணா காசை கொண்டுபோய் ஒரு எட்டுபேருக்கு சோறுபோட்டுவிட்டு...............

கத்தியும் கோடாரியோடும் நின்று கருத்துகளத்தை களமாக்குகிறீர்கள்?

30 வருடங்கள் ஒரு இனத்தையே வழிநடத்தி எத்தனையோ இன்னல்களுக்கும் முகம்கொடுத்து இந்த போராட்டத்தை வழிநடத்திய மகான்கள் மீது எத்தனை சேறுகளை அடித்தீர்கள்?

அப்போதெல்லாம் நாம் பணிவாகத்தான் கருத்துகள் விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் எமது கருத்துகளை பதிந்துவந்தோம்.

கே.பி துரோகியாக இருக்கலாம் அதை மறுக்கவில்லை ஆனால் அதற்கான ஆதரங்கள் கையில் கிடைக்கும்வரை தயவு செய்து சேறடிக்காதீர்கள் அவர் ஒரு சூழ்நிலை கைதி அவர்களது நாடகத்திற்கு ஆடியே ஆகவேண்டும் என்று கூட எழுதினேன். எத்தனைகளையோ தீhத்துகொட்டினார்கள்.

வெளியில் இருந்து போரை நடத்துபவர்கள் எப்போதுமே சூழ்நிலை கைதிகளாகலாம் அதில் கவனம் எடுக்காதது எமது தவறும் கூட. அதற்கான வழிகளை தேடுவோம் என்ற போதெல்லாம்...................

"உண்மைகளை எழுதுகிறோம" என்று விண்ணாணம் பேசியபடி நீங்கள் அடித்த சேறுகள் ஏராளம்.

எந்த தன்னலமும் அற்று இந்த போராட்டத்தை சுமந்தவர்களுக்குதான் தெரியும் அதன் வலி. தயவு செய்து ஏன் அவர்களுடைய மனதுகளை புண்படுத்துகின்றீர்கள்? என்ற கேள்விகளுக்கு விடை இன்று வரை இல்லை?

பாதிரிகளாகவும்

பத்திரிகையாளராகவும்

காப்ளராகவும்

கடன்கொடுப்பாளராகவும்

இங்கே சுயவிளம்பரம் தேட தியாகிகளின் மீது சேறடிக்க திரிந்தவர்களிடம்.

நீதி நியாயம் இவைகளை எதிர்பார்பவர்கள்தான் ஏமாறபோகின்றவர்களே தவிர அவர்களுக்கு அவர்களுடைய எழுத்துக்களே சாடசியாக இருக்கின்றன.

இங்கே நான் இந்து மதத்தை விமர்சிக்கும்போது என்னை கேட்பார்கள் ஏன் கிறிஸ்தவ மதத்தை விமர்சிப்தில்லை என்று................ விமர்சிக்கவே கூடாது என்பது எனது நிலைபாடு இல்லை ஆனால் எனது வீட்டை கழுவ வேண்டிய நிலையில் இப்போது நான் ஏன் எனில் நான் ஒரு இந்து. ஆனால் லாவகமாக எனக்கு ஞானஸ்தானம் தந்து இந்து மத அழுக்குகளை பாதுகாப்பார்கள்.

இப்போது ஒரு சோமாலிய பெண்ணுக்கு மதம் இழைத்த கொடுமைகள் பற்றி ஒரு தலைப்பு இந்து மத கொடுமைகள் பற்றி ஏன் இந்து பெண்களால் எழுத முடியவில்லை? சாதியத்தின் பெயரால் இந்துமதம் இழைக்கும் கொடுமைகளை கூடவே இருந்து செய்தோமே என்ற குற்ற உணர்வா? ஆறியாமையில் இருக்கும்போது எல்லோரும்தான் தப்பு செய்தோம் இப்போது உலகை அறிகிறோம் ஒரு பரந்தபட்ச உரையாடலுக்கு வாருங்கள் எம்மை சுத்தம் செய்வோம்.

உங்களுடைய "உண்மைகள்" எத்தனையோ உழைப்புகளை நாசம் செய்கின்றன என்பதை இனியாவது கருத்தில் எடுங்கள். விடுதலை போராட்டம் என்பது ஏதோ விடுதி வாழ்க்கை போன்று இங்கே கருத்து பதிபவர்களை இனியாவது கண்டுகொள்ளுங்கள் அதன் விலைகளை இனியாவது புரிந்துகொள்ளுங்கள். புலிகளால் பாதிக்க படாத ஈழ தமிழனே இல்லை..................... ஏன் என்றால் போரை நடத்தியவர்கள் புலிகள்தான். இதை ஏன் போருக்குள்ளேயே இருந்துவந்த தமிழர்கள் திரும்ப திரும்ப வாந்தியெடுக்க வேண்டும்? உங்கள் வீட்டிலும் மரணம் எனது வீட்டிலும் மரணம் புலிகள் போராடியதால்தானே நடந்தது? இதை ஏன் கருத்து எழுதி கற்பிக்க வேண்டும்?

போராட்டம் எனக்கும் உங்களுக்கும் ஆக இருந்தபோது எனது பங்கும் உங்களது பங்கும் என்னவாக இருந்தது? அங்கயற்கன்னி வெடிமருந்து ஏற்றிய படகோடு இலக்கு நோக்கி நகர்ந்து சென்றுகொண்டிருந்த அதே கணம் நானும் நீங்களும் ஒரு வேளை கலவியின் உச்ச கட்டத்தில் இருந்திருக்கலாம். இன்று எல்லாம் முடிந்தாயிற்று என்று அங்கயற்கன்னிக்கு நீச்சல் பழக்க தொடங்கிவிட்டீர்கள்.

பிரபாகரன் என்ற தனிமனிதன் 17 வயதிலே வீட்டை விட்டு ஒடுகிறான் காரணம் அவனது மரணம் அவனை நோக்கி அவனது வீட்டு கதவை தட்ட சில மணி நேரங்களே இருந்தது. அந்த நொடியில் இருந்து அவன் மரணத்தோடுதான் உண்டு உறங்கி படுத்து பழகியே இந்த போரை சுமந்தான். 1985ம் ஆண்டே பிரபாகரனை சுடுவதற்கு றோ திட்டம் தீட்டுகிறது நான் சொல்லவில்லை முன்னாள் றோ வின் தலைவர் சொல்கிறார். அதே இந்தியவிடம் டெல்லி சென்று கிட்டதட்ட சிறை கைதிபோல் இருந்தார் மரணத்திலும் விட மாவீரர்களின் இலட்சியம் உயரியது என்ற ஒரே காரணம்தான். இந்திய காழ்வுபடை சுற்றி நிற்கவே ஆயுதங்களுடன் வந்து தீருவில் வெளியில் வந்து குமரப்பா புலேந்திரனின் சிதைகளுக்கு தீமூட்டி சென்றான். நானோ நீங்களோ நினைத்தோமா புலிகள் இருப்பார்கள் என்று? அவர்களுடைய இருப்பை எப்போதும் அவர்கள் உறுதிபடுத்தியதில்லை போராளிகளுக்கு அது தேவையுமில்லை அவர்களுடைய இலட்சிய இருப்பே அவர்களுக்கு தேவையானது. அது இருப்தும் இல்லாது போவதும் உங்களுடைய என்னுடைய கைகளில்தான் உண்டு போராட்டம் எனக்காகவும் உங்களுக்காவுமே நடத்தபட்டது.

புலிகள் மீது விரலை நீட்டு முன்பு புலிகளை புதைகுழிகழில் புதைத்த என்னையும் உங்களையும் பற்றிய உண்மைகளை எழுதுங்கள். அதுதான் அடுத்த சந்ததிக்கு தேவையானது. ஏனெனில் போராட்டம் என்பது நேற்றுபோல் நாளை ஒரு போதும் அமையபோவதில்லை.

நாளைய சூழலும் போராட்ட வடிவமுமே அதை தீர்மானிக்கும்.

Link to comment
Share on other sites

... யாராவது கோபத்தின் காரணத்தை உணர்ந்தால் ...

... யாழில் மே 18இற்கு பின்னம், தொடர்ச்சியான ஓப்பாரிகள் .... கேட்பவர்கள், வாசித்தவர்கள் மனம் உருகாமல் இருக்க முடியாது!! ... அதற்கு மேல் இது எங்கள் தொலைபேசி இலக்கம் எந்நேரமானாலும் எடுங்கள் .. தயவுசெய்து உதவுங்கள் ... யார்தான் விழ மாட்டார்கள்? ... அதில் நானும் ஒருவன்! ... தொலைபேசி எடுத்தோ, மடல்கள் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி உதவ வருகிறோம் என்றவுடன் ... உங்கள் பெயர், முகவரி, எல்லாவிபரங்களையும் தாருங்கள் ... கொடுத்தாயிற்று!! ... பின்பு தொலைபேசியில் அழைப்புகள் சிலதடவை!! ... எல்லாம் முடிந்து ... எங்கள் மனதில் சில சந்தேகங்கள்! கேட்டவுடன் ... நீ அவன்? நீ அப்படி செய்தனீ? உன் பெயர் முகவரிகள் இவைகள்? நீ கதைத்தவைகளை ஒலிப்பதிவு செய்து வைத்திருக்கிறோம்? அதனை வெளியிடுவோம்? உனக்கு 40 நாள் தவணை? .... என்ன உது??? ... உங்களுக்கு உதவ வந்து விபரங்கள் தர, ... கொட்டனை கொடுத்து, நாமே அடி வாங்கும் நிலைமை!!! ... யாருக்கய்யா கோபம் வராது???

... இங்கு பணம் இல்லை பிரட்சனை! ... பணமாயின் ... மே18 இற்கு முன்னம், தமிழ்த்தேசியம் என்று வந்ததொன்று இங்கு நான் உடபட என் நண்பர்கள் பலரிடம் 40000பவுண்ஸுகளை சுற்றிச் சென்றது! ... விட்டு விட்டோம் ... கொட்டன் கத்தி கொண்டா திரிந்தோம்??

இதற்குள் மருதங்கேணி வந்து சேறடிப்பது பற்றி ... உந்த சேறடிப்புகளுக்கு பல தடவை பதில் சொல்லியாயிற்று. உண்மையான சேறடிப்புகளை பார்க்க விரும்பின் ... பதிவு, ஈழமுரசு, சங்கதி, தாய்நிலம்... போன்றவற்றை முதலில் போய்ப் பாரும்! அதுவும் சர்வதேச பிரிவாம், தலைமைச் செயலகமாம், புனர்வாழ்வுக்களாம், நாடு கடந்த அரசாங்கமாம் என்று ஒன்றுக்கொன்று சேறடிப்புகள் இந்த நிமிடம் வரை! அதற்கு மேல் தெருவில் நின்று கொத்து வெட்டுக்கள், அடிபிடிகள் வேறு!! ... அங்கு நடப்பது எல்லாம் தலைவரின் பெயர் சொல்லி! முதலில் அங்கு சென்று பார்த்து விட்டு இங்கு வந்து எழுதும்!!! ...

... யாழுக்கு முழுக்கு முற்றாக போடும் காலம் வந்து விட்டது ... தனிப்பட்ட காரணங்களுக்காக அன்றி, பாதுகாப்பு காரணங்களுக்காக ... ஆனால் ... அதற்கு முன் சில விடயங்களை செய்து முடிக்க வேண்டும் ... அதுவரை யாழில் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சுயநலம்.

இதைவிட சுருக்கமாக உண்மையை எழுத முடியாது!

Link to comment
Share on other sites

இன்றுடன் நான் இவ்வமைப்பு மூலம் செய்யும் உதவிகள் அனைத்தையும் நிறுத்துகிறேன்!!!

நெல்லையன், இது உங்கள் தனிப்பட்ட விருப்பு. இதை பகிரங்கமாக களத்தில் எழுத வேண்டியது அவசியமில்லை என்பது என் தாழ்மையான கருத்து.

புலிகள் மீது விரலை நீட்டு முன்பு புலிகளை புதைகுழிகழில் புதைத்த என்னையும் உங்களையும் பற்றிய உண்மைகளை எழுதுங்கள். அதுதான் அடுத்த சந்ததிக்கு தேவையானது. ஏனெனில் போராட்டம் என்பது நேற்றுபோல் நாளை ஒரு போதும் அமையபோவதில்லை.

நாளைய சூழலும் போராட்ட வடிவமுமே அதை தீர்மானிக்கும்.

நன்றாக சொன்னீர்கள் மருதங்கேணி.

அவர்களுக்கு இருந்த தைரியம், உறுதிப்பாட்டில், இலட்சத்தில் ஒரு பங்கு பலருக்கு(நான் உட்பட) இருந்திருந்தால் கூட கதையே வேறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் எனக்கும் உங்களுக்கும் ஆக இருந்தபோது எனது பங்கும் உங்களது பங்கும் என்னவாக இருந்தது? அங்கயற்கன்னி வெடிமருந்து ஏற்றிய படகோடு இலக்கு நோக்கி நகர்ந்து சென்றுகொண்டிருந்த அதே கணம் நானும் நீங்களும் ஒரு வேளை கலவியின் உச்ச கட்டத்தில் இருந்திருக்கலாம்.

புலிகள் மீது விரலை நீட்டு முன்பு புலிகளை புதைகுழிகழில் புதைத்த என்னையும் உங்களையும் பற்றிய உண்மைகளை எழுதுங்கள். அதுதான் அடுத்த சந்ததிக்கு தேவையானது. ஏனெனில் போராட்டம் என்பது நேற்றுபோல் நாளை ஒரு போதும் அமையபோவதில்லை.

நாளைய சூழலும் போராட்ட வடிவமுமே அதை தீர்மானிக்கும்.

நன்றி ஐயா

நடந்தவை அனைத்தும் எனக்கும் உங்களுக்கும் எதிரிலேயே நடந்தன. அதை நாம் கண்ணால் பார்த்தோம். காதால் கேட்டோம். தீரவிசாரித்தும் புரிந்து கொண்டோம். அப்படியே அதனூடு பயணித்தோம். பயணிக்க வேண்டியதேவை இருந்தது. தேவையை சிங்களம் பெரிதாக்கிய படுத்தியபடியே இருந்தது.

தற்போது ஒன்றும் தெரியாது என்பதும் அப்படியா என்பதும் எம்மை தோல்வியிலிருந்து விடுவிப்பதற்கான முயற்சி மட்டுமே. அப்படி விடுவிப்பதால் சிங்களத்துக்கு சார்பான பாதையில் நாம் பயணிக்க தொடங்குகின்றோம் என்பதுடன் 35 வருட எமது பயணத்தையும் பங்களிப்பையும் விட்டு தூர விலகத்தொடங்குகின்றோம் என்பதையும்

மாவீரர் கல்லறைகள் போராளிகள் பொதுமக்கள் என விரியும் சிங்களத்தின் அழிப்புக்கள் தொடர்வதை கண்ணை மூடி அனுமதிப்பதும்

இதன் தொடர்ச்சி அது ஈழத்தில் தமிழர்களே இல்லாமல் செய்யும் (எம்மையும் சேர்த்து) இன அழிப்பின் உச்சத்திலேயே முடியப்போவதையும்மறந்து வருகின்றோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இங்கு பல்கலைக்கழகம் ஒன்றில் வேலை செய்யும் கோயம்புத்தூர்காரார் ஒருவரை சிலவருடங்களுக்கு முன்பு ஏன் தமிழகத்தில் ஊழல் செய்யும் திமுக அதிமுகவுக்கு வாக்களிக்கிறீர்கள் என்று கேட்டேன். திமுக, அதிமுக ஊழல் செய்தாலும் மக்களுக்கு ஓரளவு நலத்திட்டங்கள்செய்கிறார்கள். ஆனால் தேசிய கட்சிகள் தமிழகத்தை கண்டு கொள்வதில்லை என்றார். பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் சாதிக்கட்சிகள்.  தேதிமுகவுக்கு கொள்கையே இல்லை என்றார். இன்னுமொருவருடன்  கதைக்கும்போது திமுகவை வேண்டாதபோது அதிமுகவுக்கும் , அதிமுகவை வேண்டாதபோது திமுகவுக்கும் நடுநிலையானவர்கள் சிலர் வாக்களிக்கிறார்கள் என்றார்.  தமிழகத்தில் வறுமை கோட்டின் கீழ் இருப்பவர்கள் அதிகம். இவர்களுக்கு தேர்தல் நேரத்தில் பெரியகட்சிகள் பணம் குடுத்து கவருவார்கள் ( திருமங்கலம், R K நகர் தேர்தல் முடிவுகள்). ஒவ்வொரு தொகுதியிலும் , தொகுதியில் அதிக மக்கள் வாழும் சாதிக்காரரை வேட்பாளராக தேர்வு செய்வார்கள்.  தலித் சாதியினர் வன்னியருக்கு , வன்னியர் தலித்துக்கும் வாக்களிக்க மாட்டார்கள்.  சில தொகுதிகளில் சில வேட்பாளருக்கு தனிப்பட்ட செல்வாக்கு.  திமுக , அதிமுக்வுக்குள்ள நிரந்தரவாக்குகள், கட்சியில் தனக்கு போட்டியாளரை வேட்பாளராக தலைமை தெரிவு செய்ததினால் வேட்பாளரை விழுத்த சதி திட்டம் உட்பட பல காரணங்கள் ஒருவரின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது.   இப்பொழுது தமிழகத்தில் மோடி எதிர்ப்பலை அதிகம். இதனால் அவர்கள் மோடியை தோற்கடிக்க திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். எம் ஜீ ஆர், ஜெயலலிதா மாதிரி பிரபல்யமான தலைவராக ஏடப்பாடி இல்லாதது, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி என திமுக எதிர்ப்பு வாக்குகள் பிரிந்திருப்பது திமுகவுக்கு சாதகம். 
    • ஒவ்வொருவரும் எந்த மூலையில் இருந்து எழுதுகின்றார்களோ என்ற உங்கள் கூற்று உங்களுக்கும் சேர்த்தே  பொருந்தும்.   அரசியல் கட்டுரை அல்லது விமர்சனம்  சில விடயங்களை சுட்டிக்காட்டும் போது அதை எதிர் கொள்ள முடியாமல் சிங்கள இனவாத அரசை பற்றி கூறவில்லையே. அவர்கள் மட்டும் என்ன யோக்கியர்களா என்பது போன்ற கேள்வியை கேட்பது உங்கள் வாடிக்கை.  தமிழ் அரசியல்வாதிகளின் சுயநலத்தை தனது சிங்கள அரசு பாவித்தது என்று ஒரு கட்டுரையில் கூறியதை கவனிக்க மட்டீர்களா? அவ்வாறு அவர்கள்  கூறாவிட்டாலும் அது தானே உண்மை.   மேற்கண்ட  இணைப்புகளில் இருக்கும் உண்மைகளை  உங்களால் சகிக்கமுடியவில்லை என்பதை புரிந்து கொள்ளுகிறேன்.  ஆனால்,  தமிழரசுகட்சி தனது அரசியல் பாதையில் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண எடுத்த நடவடிக்கைகளை விட தனது பாராளுமன்ற பதவிக்கு போட்டியாக வந்த தனது அரசியல் எதிரிகளை  ஒழித்துகட்டுவதற்கே முதலிடம் கொடுத்தது என்பதை  அன்றைய வரலாற்றை தெரிந்த அனைவரும் அறிவர்.  நேர்மையாக இவை பற்றி எழுதிய அன்றைய ஈழநாடு பத்திரிகை மீது அவதூறை அள்ளி வீசி,  எச்சரிக்கும் தொனியில்,  “ஈழநாடே வாயை மூடு”  என்று,   அன்று சுதந்திரன்  பத்திரிகை எழுதியது. அதன் பின்னர் எதிர்தது விமர்சனம் செய்தவர்களை வாயை மூட வைத்து இன்றைய மீள முடியாத  அவலநிலைக்கு தமிழ் மக்களை  இட்டு சென்றது இவர்களின் அரசியல் தொடர்ச்சியே.   நான் தமிழர் அரசியல் வரலாறு பற்றி  பேசும் போது  அவற்றின் உண்மைகளை  மறைப்பதற்காக என் மீது அவதூறு பொழிவதிலே நீங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றீர்கள். நீ அந்த முகாம் அந்த இயக்கம் என்பது போன்ற இந்தப் பாணியை  நீங்கள்  பெற்றதும் அந்த  தமிழ் அரசியல் தொடர்ச்சி தான்.   உலக நாடுகளின் ஆதரவு இல்லாத வெறும் வார்த்தை ஜாலங்களூடான  வெற்று  அரசியல் தமிழ் மக்களை மேலும் பலவீனமாக்கவே உதவும் என்பதையும் அது பற்றி உங்களைக்கோ உங்களை போல  மாய உலகில் சஞ்சரிப்பவர்களுக்கோ  கவலை இல்லை என்பதும் தெரிந்ததே.   நீங்கள் கூறியவாறு எவரையும் சிறுமைப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. இவர்களை பற்றி உலகம் அறியும். போலி துவாரகா வரை இவர்களின் சுயநல அரசியல் நீண்டே  செல்கிறது. போலி துவாரகாவைக் கொண்டுவந்தவர்கள் எல்லோருமே தமிழ் தேசிய தூண்கள் என்ற பிம்பத்துடன் முன்னர் வலம் வந்து இன்று முகமூடி கிழிந்து நிற்பவர்களே.  தமிழ் தேசிய அரசியல்  உருவாக்கிய போலி பிம்பங்களை விற்று பணம் பண்ணும் அரசியலை செய்து அவர்கள் காசு பார்கிறார்கள்.  இலங்கை ஒற்றையாட்சியை  நான்  ஆதரிப்பவன் என்று என்னைக்க கூறுகின்றீர்கள்.   ஆனால்,  இன்று தேசியம் பேசும் அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றையாட்சிக்கு விசுவாசமாக உள்ளவர்களே. இன்றைய தாயக/ புலம்பெயர் மக்களில் மிக பெரும்பான்மையினரை அரசியல் கதைக்கவே  ஆர்வமற்றவர்களாக மாற்றி,  பிச்சை வேண்டாம் நாயை பிடி என்று விலகி வாழும்  நிலையை ஏற்படுத்தியவர்களும் இவர்களே.  உங்களை போல என்னை போல ஒரு சிறு பகுதியினர் மட்டுமே இன்று  இலங்கையில் தமிழரின் எதிர்காலம் எப்படி அமையும், அமைய வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு  அரசியல் விவாதங்களிலாவது ஈடுபட்டுள்ளோம்.  மிக பெரும்பான்மை தாயக/ புலம் பெயர் தமிழ் மக்கள் அரசியலில் இருந்து தம்மை விடுவித்து  இலங்கை ஒற்றையாட்சியை ஏற்று அதன் கீழ் வாழ்வதை ஏற்று கொண்டவர்களாகவே உள்ளனர் என்ற ஜதார்தத நிலையை உங்களால் விளங்கி கொள்ள முற்படமாட்டீர்கள். ஆனல் இந்த உண்மையை கூறிய என் மீது வசைமாரி பொரிவீர்கள் என்பது அறிந்ததே. அது பற்றி கவலை இல்லை.   இந்த எனது பதிவுக்கு  பதிலாகவும் என்மீது  வசை மாரி தான் வரும் என்பதும் நான் அறிந்ததே. 
    • ஆசிய பெருங்கடல் பாதுகாப்பில் இலங்கை : கண்காணிப்பு விமானத்தை வழங்கும் அவுஸ்திரேலியா! ஆசிய பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பணியாற்றுவதற்கு இலங்கைக்கு சிறப்பு கண்காணிப்பு விமானத்தை அன்பளிப்பாக வழங்குவதற்கு அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது. அவுஸ்திரேலிய வெளிநாட்டலுவல்கள் மற்றும் வர்த்தக திணைக்களத்தின் (தெற்கு மற்றும் தென்கிழக்காசிய பகுதி) பிரதி செயலாளர் மிச்சேல் சங் இதற்கான இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளார். மிச்சேல் சங்கின் அண்மைய இலங்கை விஜயத்தின்போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமையவே சிறப்பு கண்காணிப்பு விமானத்தை அவுஸ்திரேலியா இலங்கைக்கு வழங்குகிறது. சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் ஆள் கடத்தல் என்பவற்றை தடுப்பது உள்ளிட்ட இலங்கையின் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முதற்கட்டமாக இந்த விமானம் வழங்கப்படுவதாக மிச்சேல் சங் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1380118
    • ரஷ்ய எல்லை பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட 68 யுக்ரேனிய ஏவுகணைகள். யுக்ரேன் வான்பாதுகாப்பு ஒத்துழைப்பினை விரைவுபடுத்தவுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது யுக்ரேனுக்கான ராணுவ ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக வான் பாதுகாப்பு ஏவுகணைகள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொய்ட் ஒஸ்டின் தெரிவித்துள்ளார் ரஷ்ய படையினரின் வான் அச்சுறுத்தல் அதிகரித்துவருவதனால் அவசரமாக தமக்கு பாதுகாப்பு ஒத்துழைப்பு தேவைப்படுவதாக யுக்ரென் ஜனாதிபதி வொலேடிமிர் ஸெலன்ஸ்கி அமெரிக்காவிடம் கோரிக்னை முன்வைத்திருந்தார் இந்த நிலையில் யுக்ரேனுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட 60 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியிலான ராணுவ உதவியில் 6 பில்லியன் பெறுமதியான வான்பாதுகாப்பு உதவித்தொகை அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது இதேவேளை யுக்ரேனில் ரஷ்யா இன்று அதிகாலை பாரிய விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலில் கார்கிவ் நகரில் உள்ள வைத்தியசாலை சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ரஷ்ய எல்லை பகுதியில் சுமார் 68 யுக்ரேனிய ஏவுகணைகள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2024/1380087
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.