Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூர் கொடியேற்ற தினத்தில் புதிய சங்கிலியனாம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கொடியேற்ற தினத்தில் புதிய சங்கிலியனாம்!

Published on July 18, 2011-9:52 am

நல்லூர் கந்தசுவாமி கோயில் கொடியேற்றத் தினத்தன்று புதிதாக அமைக்கப்பட்டு வரும் சங்கிலி மன்னனின் உருவச்சிலை திறந்து வைக்கப்படும் என்று யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார்.

அமையவிருக்கும் சங்கிலி மன்னனின் உருவச்சிலையின் மாதிரி வரைபடம் நேற்று ஞாயிற் றுக்கிழமை கிட்டு பூங்காவுக்கு முன்பாக ஏற்கனவே சிலை அமைந்திருந்த பகுதியில் பொது மக்கள் பார்வையிடக்கூடியதாக வைக்கப்பட்டது.

இதன்போது திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா மேற்கண்டவாறு கூறினார்.

சங்கிலியன் சிலையை அகற்றி பதிலாக அந்த இடத்தில் புத்தர் சிலையை வைக்க மாநகர சபை ஏற்பாடுகளை மேற்கொள்வதாக இணையத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகியிருந்தன.இதுதொடர்பாக யாழ். கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க என்னிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது தான் இப்படி ஒரு தவறான செய்தி வெளிவந்ததை அறியமுடிகிறது.

மாநகர சபை உறுப்பினர்களின் தீர்மானத்தின் படியே அந்த வீரபுருஷனின் உருவச் சிலையை சிறப்பாக வடிவமைத்து வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஆணையாளர் ஒருவரே இந்தத் தவறான செய்தியை இணையத்தளங்களுக்கும் பத்திரிகைகளுக்கும் வழங்கியதாகத் தெரிகின்றது.

நகரின் அபிவிருத்தியை நோக்கி எமது செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்போது அபிவிருத்திக்குத் தடையாக தவறான தகவல்களை வழங்குவது ஏற்புடையது அல்ல.சிலை விவகாரம் தொடர்பான உண்மை நிலையை என்னுடன் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக்கொள்ளலாம் என்று அவர் மேலும் கூறினார்.

http://www.saritham.com/?p=26549

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சங்கிலியன் சிலை புதிதாக திருத்தியமைக்கப்படுகிறது! - ஊடககங்கள் பொய்த் தகவல்

2011-07-17 10:02:27

யாழ் நல்லூர் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள சங்கிலியன் சிலை உடைக்கப்படுவதாகவும் விரும்பத்தகாத மாற்றங்கள் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகவும் பரப்பப்பட்டு வந்த பொய்யான வதந்திகள் குறித்து யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா

அவர்கள் ஊடகங்களை அழைத்து உண்மை நிலையை விளக்கியுள்ளார். இன்று யாழ் முத்திரைச் சந்திக்கு அருகில் உள்ள சங்கிலியன் சிலை அமைந்துள்ள இடத்திற்கு விஜயம் செய்துள்ள யாழ் முதல்வர் அவர்கள் அங்கு அழைக்கப்பட்டிருந்த ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில்

யாழ் மாநகர சபை சிறந்த முறையில் இயங்கி வருகிறது. பல்வேறு அபிவிருத்திப் பணிகளையும் புனருத்தாரணப் பணிகளையும் முன்னெடுத்து வருகிறது. இதைக் கண்டு சகிக்க முடியாத போட்டி அரசியல் வாதிகள் எம்மீது சேறு பூசுவதற்காகவே இதுபோன்ற கட்டுக் கதைகளை கட்டவிழ்த்திருக்கின்றனர்.

இது தேர்தல் காலம் என்பதால் இவ்வாறான பொய்யான வதந்திகளை பரப்புவதன் மூலம் யாழ் மாநகர சபையை நிர்வகித்து வரும்ஆளும் கட்சி மீது சேறுபூசி அதன் மூலம் வாக்குகளை அபகரிக்கலாம் எனத் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றனர்.

புனர்நிர்மாணப் பணிகளுக்காக மூடிக்கட்டப்பட்டுள்ள திரை மறைப்பை திறந்து ஊடகவியலாளர்கள் உள்ளே சென்று உண்மை நிலையை பார்வையிடவும் ஒழுங்கு செய்திருந்தார்.

இதேவேளை புனரமைப்பு செய்யப்பட்டு புதுத் தோற்றத்துடன் காட்சியளிக்கவிருக்கும் சங்கிலியன் சிலையின் மாதிரி வரைபடம் ஒன்றையும் அங்கு பொதுமக்களின் பார்வைக்கு தொங்க விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சங்கிலியன் சிலை புதிதாக திருத்தியமைக்கப்படுகிறது! - ஊடககங்கள் பொய்த் தகவல் Share5

[சங்கிலியன் சிலை புதிதாக திருத்தியமைக்கப்படுகிறது! - ஊடககங்கள் பொய்த் தகவல் ] 2011-07-17 10:02:27 [views = 1122]யாழ் நல்லூர் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள சங்கிலியன் சிலை உடைக்கப்படுவதாகவும் விரும்பத்தகாத மாற்றங்கள் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகவும் பரப்பப்பட்டு வந்த பொய்யான வதந்திகள் குறித்து யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா

அவர்கள் ஊடகங்களை அழைத்து உண்மை நிலையை விளக்கியுள்ளார். இன்று யாழ் முத்திரைச் சந்திக்கு அருகில் உள்ள சங்கிலியன் சிலை அமைந்துள்ள இடத்திற்கு விஜயம் செய்துள்ள யாழ் முதல்வர் அவர்கள் அங்கு அழைக்கப்பட்டிருந்த ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில்

யாழ் மாநகர சபை சிறந்த முறையில் இயங்கி வருகிறது. பல்வேறு அபிவிருத்திப் பணிகளையும் புனருத்தாரணப் பணிகளையும் முன்னெடுத்து வருகிறது. இதைக் கண்டு சகிக்க முடியாத போட்டி அரசியல் வாதிகள் எம்மீது சேறு பூசுவதற்காகவே இதுபோன்ற கட்டுக் கதைகளை கட்டவிழ்த்திருக்கின்றனர்.

இது தேர்தல் காலம் என்பதால் இவ்வாறான பொய்யான வதந்திகளை பரப்புவதன் மூலம் யாழ் மாநகர சபையை நிர்வகித்து வரும்ஆளும் கட்சி மீது சேறுபூசி அதன் மூலம் வாக்குகளை அபகரிக்கலாம் எனத் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றனர்.

புனர்நிர்மாணப் பணிகளுக்காக மூடிக்கட்டப்பட்டுள்ள திரை மறைப்பை திறந்து ஊடகவியலாளர்கள் உள்ளே சென்று உண்மை நிலையை பார்வையிடவும் ஒழுங்கு செய்திருந்தார்.

இதேவேளை புனரமைப்பு செய்யப்பட்டு புதுத் தோற்றத்துடன் காட்சியளிக்கவிருக்கும் சங்கிலியன் சிலையின் மாதிரி வரைபடம் ஒன்றையும் அங்கு பொதுமக்களின் பார்வைக்கு தொங்க விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

  • கருத்துக்கள உறவுகள்

புதிய சங்கிலியன் அநேகமாகக் கோவணத்துடன் தான் நிற்பார்! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜாவின் உடம்பிலே சிங்கள உதிரமா ஓடுகிறது. சங்கிலிய மன்னன் யாழ்பாணத் தமிழரசை ஆண்ட கடைசி மன்னன். எப்படி அவனது கம்பீரமான சிலையை நீக்கிவிட்டு ஒரு தலைகுனிந்த சிலையை நிறுவ முடியும். நீ ஒரு தமிழிச்சியா? எப்படி உனது முன்னோரை அவமதிக்க முடிகிறது. பதவிக்காக இப்படியா? இதைவிட வேறு ஏதாவது செய்து சீவிக்கலாமே அம்மணி. இதைவிடச் சிங்களத்துக்கு விசுவாசமாக இருக்க முடியாதுதான்.

sangili1.jpg

முன்னைய சிலை

sankiliyan2.jpg

திட்டமிட்டிருக்கும்சிலை

புதிய சிலை தலை குனிந்த மாதிரி இல்லையே?

  • கருத்துக்கள உறவுகள்

புதிய சிலை தலை குனிந்த மாதிரி இல்லையே?

சங்கிலியனின் குதிரை தலை குனிந்திருக்குது. :D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சங்கிலியனின் குதிரை தலை குனிந்திருக்குது. :D:lol:

உது குதிரையா? கோவறு கழுதையா? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சங்கிலியனின் குதிரை தலை குனிந்திருக்குது. :D:lol:

சங்கிலியனின் வாழும் நன்றாக மெலிந்து விட்டது!

அடுத்த முறை, சிலை மாறும் போது, சங்கிலியன் சத்தகம் தான் வைத்திருப்பார்!!!

  • கருத்துக்கள உறவுகள்

உது குதிரையா? கோவறு கழுதையா? :lol:

அதானே.... வாலையும் சுருட்டி, பெட்டை நாய் மாதிரி உள்ளுக்கு வைச்சிருக்குது. :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

சங்கிலியனின் வாழும் நன்றாக மெலிந்து விட்டது!

அடுத்த முறை, சிலை மாறும் போது, சங்கிலியன் சத்தகம் தான் வைத்திருப்பார்!!!

வாளை பெரிதாக செய்வதற்கு, யாழ் மாநகர சபையிடம் பணம் போதவில்லையோ.... ஹித்துரு சிங்கா விட வில்லையோ..... தெரியவில்லை. :D

  • கருத்துக்கள உறவுகள்

முன்னைய கம்பீரம் மிஸ்ஸிங்..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ தேசத்தின் கட்டமைப்போடு வாழ்ந்த.. எங்களை.. சங்கிலியன் சிலையைக் காட்டி.. கெஞ்ச வைக்கிற நிலைக்கு சிங்களமும்.. இந்தியமும்.. சர்வதேசமும்.. தமிழ் தேச விரோத ஆயுதக் கும்பல்களும் கொண்டு வந்து நிறுத்தியுள்ளன.

இது உலகத் தமிழினத்தை திட்டமிட்டு அவமானப்படுத்தும் செயலாகும். இது குறித்து தமிழக மற்றும் உலகத் தமிழினம் விளிப்புணர்வூட்டப்படவும்.. போராட்டங்களை செய்யவும் வேண்டும்.

ஜெயலலிதா - கிலாரி கிளிக்டன் ஈழப்பிரச்சனை குறித்து பேசும் போது இவ்வாறான அவமானப்படுத்தல்கள் இலங்கைத் தீவில் இனத் துருவ மயமகாக்கலையே செய்யும் என்பதை சுட்டிக்காட்டி.. தமிழர்கள் தாம் விரும்பும் வடிவில் வாழ அமெரிக்காவை உதவக் கோர வேண்டும். சங்கிலியனின் குதிரை குனியுதோ நிமிருதோ.. தமிழன் தலை நிமிர்ந்து வாழ வேண்டும். அது தான் இன்றைய தேவை. சிங்களப் படைகள் தமிழர் தேசத்தில் இருக்கும் வரை தமிழன் தலை நிமிரவே முடியாது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ சிற்றப கலையிலும் பல முன்னேற்றம் வந்துவிட்டது....................... ஏதாவது வளைவு நெளிவு குனிவு நிர்வு இருந்தால்தானே தற்போதைய சிலை என்பது தெரியும்

ஹத்துருசிங்க ஐயாட்டை சபாஷ் வாங்குவதற்காக அசரப்பட்டு, பயணத்தின் போது பெரியய்யா பார்க்க விரும்பார் என்று நினைத்து, சங்கிலியன் சிலையை மூடிக்கட்ட உத்தரவு இட்டுவிட்டான். அது பெரியய்யாவின் பயணத்தின் (தேர்தல்) நோக்கத்தையே கெடுத்துவிட்டது.

என்ரை "அட்வைஸ்"- எலக்சன் பாருங்க சற்று கஸ்டமாய்த்தான் முடியும். சான்ஸ் எடுக்காமல் ஹத்துருசிங்கவும், யோகேஸ்வரியும் இப்பதொடக்கமே முதுகுக்கு எண்ணையை போடதொடங்குங்கோ.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் டக்கிளசையும் அல்லக்கை யோகேஸ்வரி பற்குணராஜாவை ஒடோட விரட்டினால்தான் இவைஎல்லா வற்றுக்கும் ஒரு முடிவு வரும்கண்டியளோ

கடத்தல், கப்பம், கொலை, கொள்ளை மன்னன் டக்ளசின் உந்தக் கூட்டத்துக்கு வாளாலே சொருகவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்னைய கம்பீரம் மிஸ்ஸிங்..! :rolleyes:

பார்ப்பவரின் கண்களைப் பொறுத்தது.

சங்கிலியனுக்கு சிலை வைத்து கடந்த முப்பது வருடங்களில் எத்தனையோ சாதனை படைத்தவர்களை மறக்கடிக்கப் பண்ண முயற்சிப்பதாகத்தான் தெரிகின்றது.

தமிழீழ தேசத்தின் கட்டமைப்போடு வாழ்ந்த.. எங்களை.. சங்கிலியன் சிலையைக் காட்டி.. கெஞ்ச வைக்கிற நிலைக்கு சிங்களமும்.. இந்தியமும்.. சர்வதேசமும்.. தமிழ் தேச விரோத ஆயுதக் கும்பல்களும் கொண்டு வந்து நிறுத்தியுள்ளன.

இது உலகத் தமிழினத்தை திட்டமிட்டு அவமானப்படுத்தும் செயலாகும். இது குறித்து தமிழக மற்றும் உலகத் தமிழினம் விளிப்புணர்வூட்டப்படவும்.. போராட்டங்களை செய்யவும் வேண்டும்

.

நண்பர் நெடுக்க்ஷ் சங்கிலியமன்னர் சிலை அகற்றும் விவகாரத்தில் சிந்திக்கத்தூண்டும் உண்மை நிலைப்பதிவொன்றை கூறியிருக்கிறீர்கள். உண்மைதான் தமிழினத்தை எவ்வளவுக்கெவ்வளவு அவமதிக்க முடியுமோ, அத்துடன் கபட நாடகமாடி தான் எவ்வளவு நல்லவன் என்பதையும் எதிரி காட்ட முயலுகின்றான். என்ன செய்வது துரும்பு இப்போ அவன் கையில் துரும்பு மீண்டும் எம் கைக்கு வர நாம் அயராது உழைப்போம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நூதனபொருட்களையும்,புராதன சிற்பங்களையும் பாதுகாக்கும் நவீன உலகில்?????????

நாமோ????? இன்னும் குடும்பபகைகளை அலசிக்கொண்டு..........இருக்கும் சந்தர்ப்பங்களையும் வீணடிப்போம்.

சங்கிலியன் சிலைக்கு பதிலாக மகிந்தவின்சிலை வாளுடன் காட்சியளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை?

கதைகதையாய் கேட்டு .......ஒண்டுக்கைஒண்டு குத்துப்பட்டு சாகப்போகுது ஈழத்தமிழினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.