Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் ஆரம்பித்துள்ள கலவரம் படிப்படியாக பல இடங்களுக்கு பரவ ஆரம்பித்துள்ளது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் ஆரம்பித்துள்ள கலவரம் படிப்படியாக பல இடங்களுக்கு பரவ ஆரம்பித்துள்ளது.

09 ஆகஸ்ட் 2011

கலவரங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 334 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தின் பல நகரங்களில் பாரியளவில் வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன.

லண்டன், பெர்மிங்ஹாம், லிவர்பூல், மான்செஸ்டர், பிரிஸ்டல் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.

நாட்டில் இடம்பெற்று வரும் கலவரம் காரணமாக விடுமுறைக்காக சென்றிரந்த பிரதமர் அவசரகமாக நாடு திரும்பியுள்ளார்.

கலவரங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 334 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வன்முறைச் சம்பவங்களினால் அப்பாவி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

காவல்துறையினர் மற்றும் அவர்களின் சொத்துக்கள் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வன்முறைகளைப் பயன்படுத்தி நகரின் பல இடங்களில் பாரியளவில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

டொட்டன்ஹாமில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதனைத் தொடர்ந்து இந்த வன்முறைகள் வெடித்துள்ளன.

இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

லண்டனில் ஆரம்பித்துள்ள கலவரம் படிப்படியாக பல இடங்களுக்கு பரவ ஆரம்பித்துள்ளது.

லண்டனில் ஆரம்பித்துள்ள கலவரம் படிப்படியாக பல இடங்களுக்கு பரவ ஆரம்பித்துள்ளது. லண்டன் ரெட்ணம்காம்; பகுதியில் வெடித்த கலவரம் குரொய்டன் பகுதிக்கும் பரவியுள்ளதாகவும் அதனை அண்மித்த பகுதிகளான டூட்டிங், மிச்சம் மற்றும் பேளி போன்ற பகுதிகளுக்கும் கலவரம் பரவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப்; பகுதியில் பெருமளவான ஆபிரிக்கர்கள் வாழ்கிறார்கள். இந்தப்பகுதிகளில் தமிழர்களும் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து வருவதால் அவர்களிடையே; பெரும் பதற்றம் தோன்றியுள்ளது.

அவர்கள் வீடுகளும் சூறையாடப்படலாம் என்ற அச்சம் காரணமாக பல தமிழர்கள் தமது உடமைகளுடன் வெளியேறி (இடம்பெயர்ந்து) உறவினர் வீடுகளில் தங்க ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

வெளிநாட்டுச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரித்தானியப் பிரதமர் அவற்றை உடனடியாக ரத்துச்செய்து நாடு திரும்பியுள்ளார் என பி.பி.சி செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

கலவரத்தில் ஈடுபட்டுள்ள ஆபிரிக்கர்கள் ஸ்போட்ஸ் கடைகளை, சென்ட் விற்கும் மற்றும் மெபைல் போன்கள் விற்கும் கடைகளை உடைப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ரோட்டில் உள்ள சில வாகனங்களை எரியூட்டும் இவர்கள் அதனைப் பயன்படுத்தி அருகில் உள்ள கடைகளை உடைத்து அக்கடைகளில் உள்ள பொருட்களைக் சூறையாடுகின்றனர்.

11 வயதுச் சிறுவன் ஒருவன் உடைக்கப்பட்ட கடைகளுக்குள் இருந்து பெருவாரியான சிகரெட்டுகளை எடுத்துசெல்லும் காட்சிகளை பி.பி.சி ஒளிபரப்பியுள்ளது.

ஆபிரிக்க இனத்தவர் ஒருவரைப் பொலிசார் கடந்த வியாழன் அன்று சுட்டுக்கொன்றதாகக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர் தொடக்கி வைத்த இந்தக் கலவரம் தற்போது லண்டனின் பல பாகங்களுக்கு பரவியுள்ளமை மிகவும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து சுயாதீனமான காவற்துறை முறைப்பாட்டு ஆணையம் ஒன்று விசாரணை நடத்திவருகின்றது.

லண்டனில் மிக ஏழ்மையான பகுதிகளில் ஒன்றான டோட்டன்ஹாம், அடிக்கடி இனரீதியான குழப்பங்கள் வெடிக்கக்கூடிய இடமாக இருந்து வந்துள்ளது.

அங்கு வாழ்கின்ற ஆபிரிக்க் சமூகத்தில் சிலரிடத்தில், தமது இளைஞர்களுக்கு போதுமான வாய்ப்புகள் இல்லையென்ற கவலையும் இருக்கின்றது.

08.09.2011

லண்டன் வீதிகளில் பாரிய வன்முறைகள்! கடைகள் சூறை! கார்கள் தீவைப்பு! கட்டிடங்கள் நொருக்கப்பட்டன

லண்டனின்; மிக அமைதியாகவும் சுறுசுறுப்பாகவும் காணப்படுகின்ற பல வீதிகளில் இரண்டாவது நாளாக, கடந்த சனிக்கிழமை இரவும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை பகலிலும் பாரிய வன்முறைச் சம்பவங்கள் அங்காங்கே இடம்பெற்றுள்ளன.

கார்கள் எரிக்கப்பட்டும், கடைகள் சூறையாடப்பட்டும் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டும் தெருக்களில் வன்முறையாளர்கள் கலகம்; புரிந்துள்ளனர்.

இதனால் 100க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதுடன், காவற்துறையினர் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சனிக்கிழமை இரவு, முதலில் மிக மோசமாக வன்முறை வெடித்த டோட்டன்ஹாம் பகுதியில் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்தப்பகுதி வழமைக்குத் திரும்ப இன்னும் சில காலம் எடுக்கும் என அங்குள்ள பிரதேசவாசிகளில் ஒருவர் பிபிசிக்கு தெரிவித்தார்.

கடந்தவாரத்தில், வடக்கு லண்டன், டோட்டன்ஹாம் பகுதியில் கறுப்பின இளைஞர் ஒருவர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன், இங்கு பிரச்சனை ஆரம்பித்தது.

அந்த சம்பவம் குறித்து சுயாதீனமான பொலிஸ் முறைப்பாட்டு ஆணையம் ஒன்று விசாரணை நடத்திவருகின்றது.

லண்டனில் மிக ஏழ்மையான பகுதிகளில் ஒன்றான டோட்டன்ஹாம், அடிக்கடி இனரீதியான குழப்பங்கள் வெடிக்கக்கூடிய இடமாக இருந்து வந்துள்ளது.

அங்கு வாழ்கின்ற கறுப்பினச் சமூகத்தில் சிலரிடத்தில், தமது இளைஞர்களுக்கு போதுமான வாய்ப்புகள் இல்லையென்ற கவலையும் இருக்கின்றது.

ஆனால் இப்படியான காரணங்களைச் சொல்லி இந்த வன்முறைகளை கணக்கில் எடுக்காமல் விட்டுவிட முடியாது என லண்டனில் சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பான துணை மேயர் கிட் மோல்ட் ஹவுஸ் கூறியுள்ளார்.

இந்த குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் அறிவித்துள்ளார்.

லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்கு சரியாக ஒரு வருடம் இருக்கிறது. நாட்கள் நகரநகர எல்லோரின் கண்களும் பிரிட்டன் தலைநகரில் குவிகின்றன.

ஒலிம்பிக் விவரணங்கள் லண்டனின் மதிப்பையும் பெருமையையும் மெருகுடன் விளம்பரப்படுத்திவரும் நிலையில், இவ்வாறான சம்பவங்கள் அதனை கெடுத்துவிடக்கூடாது என்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/65419/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் இப்படி நடந்தபோது பல லண்டன் வாசிகள் நக்கலும் நளினமும் செய்தது ஞாபகமிருக்கிறது. :(:(:(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் இப்படி நடந்தபோது பல லண்டன் வாசிகள் நக்கலும் நளினமும் செய்தது ஞாபகமிருக்கிறது. :(:(:(

அய்யா...... விசுகு இந்தப்பிரச்சனையை ஊதி பெரிய பிரச்சனை ஆக்கிவிடாதீர்கள் எமக்குள் ஏற்க்கனவே போதுமான மொறன்பாடுகள் உள்ளது அதுவே போதும்.

பிரான்சில் இப்படி நடந்தபோது பல லண்டன் வாசிகள் நக்கலும் நளினமும் செய்தது ஞாபகமிருக்கிறது. :(:(:(

ஆரென்டு சொல்லுங்க மடக்கிப் போட்டு முதுகில படக்கு படக்கென்று போடுறம். :huh:

நோர்வேயில் நடந்ததை நியாயப்படுத்தவே இவ்வாறான கலவரங்கள் இட்டுச்செல்லும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=89340

Edited by Subiththiran

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா...... விசுகு இந்தப்பிரச்சனையை ஊதி பெரிய பிரச்சனை ஆக்கிவிடாதீர்கள் எமக்குள் ஏற்க்கனவே போதுமான மொறன்பாடுகள் உள்ளது அதுவே போதும்.

கல்லையும் நாயையும் கண்டால் அடித்துப்போடணும். இது நம்ம கட்சிக்கொள்கை. :lol::lol::lol:

டிஸ்கி :- உபயம் திருவாளர் ARJUN அவர்கள். :D:D:D

புலம்பெயர் நாடுகளில் எமது அடுத்த எமது தலைமுறையை இப்படியான சமூக விரோத செயல்களுக்குள் அகப்படாமல் செய்ய இன்றைய சமுதாயம் ஆவன செய்யவேண்டும் :

- குடும்பங்களில் நல்ல பண்பாட்டுக்களை சொல்லி வளர்த்தல்

- நல்ல கல்வி வசதிகளை அமைத்துக்கொடுத்தல்

- பொருளாதார ரீதியில் நடுத்தர வர்க்கத்துக்கு மேலே கொண்டு செல்லல்

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் நாடுகளில் எமது அடுத்த எமது தலைமுறையை இப்படியான சமூக விரோத செயல்களுக்குள் அகப்படாமல் செய்ய இன்றைய சமுதாயம் ஆவன செய்யவேண்டும் :

- குடும்பங்களில் நல்ல பண்பாட்டுக்களை சொல்லி வளர்த்தல்

- நல்ல கல்வி வசதிகளை அமைத்துக்கொடுத்தல்

- பொருளாதார ரீதியில் நடுத்தர வர்க்கத்துக்கு மேலே கொண்டு செல்லல்

கடந்த சில வாரங்களாக பிரான்சில் நடைபெற்ற பல நிகழ்வுகளுக்கு போய்வந்தேன். (விளையாட்டுவிழா உதைபந்தாட்டபோட்டிகள் உட்பட). அவற்றின் பின் எனது முடிவு இனி தடியின்றி எவரும் வாழமுடியாது.

பொருளாதார ரீதியில் பின்தங்கிய சமூகமாக பல மேற்கு நாடுகளிலும் கருப்பு இனத்தவர்கள், இலத்தீன் மற்றும் இஸ்லாமியர்கள் என அதிகளவில் மாற்றப்பட்டு வருகின்றனர்.

பணம் இருந்தால் தான் படிக்கலாம், படித்தால் தான் வேலை எடுக்கலாம், வேலை இருந்தால் தான் பொருளாதாரம் இருக்கும், பொருளாதாரம் இருந்தால் தான் எல்லாமே இருக்கும்.

முன்னர் பாரிசில் தற்பொழுது இலண்டனில் நடக்கும் இந்த நிகழ்வுகளுக்கு அடிப்படையில் அந்த சமூகங்களில் உள்ள பொருளாதார தேக்கமே காரணம். இந்த வட்டத்துக்குள் எமது தலைமுறையும் மாட்டப்படக்கூடாது, மாட்டவிடக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

-------

முன்னர் பாரிசில் தற்பொழுது இலண்டனில் நடக்கும் இந்த நிகழ்வுகளுக்கு அடிப்படையில் அந்த சமூகங்களில் உள்ள பொருளாதார தேக்கமே காரணம். இந்த வட்டத்துக்குள் எமது தலைமுறையும் மாட்டப்படக்கூடாது, மாட்டவிடக்கூடாது.

நல்ல கருத்து அகூதா...

எந்த தமிழ் பிள்ளையையும், தாயோ... தகப்பனோ அருகில் இருந்து அவனு(ளு)க்கு, பாடங்களையும், புத்திமதிகளையும் நெடுக 18 வயது வரையும் சொல்லிக் கொண்டே... இருக்க வேண்டும். அத்துடன், சிறு கண்டிப்பும் தேவை.

பெற்றோர் சினிமா பார்த்து, ஆட்டம் போட்டு.... தவறு விட்டால்...

பிற்காலத்தில், பிள்ளைகளால் பெரும் தொல்லை தான்... ஏற்படும்.

எனக்கொரு சின்ன நீண்டநாள் ஆசை எமது புலபெயர் சமூகம் தமிழ்மொழி, சமயம், கலாச்சாரம் - இவற்றுடன் எமது முன்னோர் எமக்கு ஊட்டிக்கொடுத்த இன்னொரு அடிப்படை பாடத்தையும் வளரும் தலைமுறைக்கு சொல்லிக்கொடுக்கவேண்டும் என்பது.

சேமிப்பு

இதற்குள் பல பாடங்கள் படிப்பினைகள் அர்த்தங்கள் உண்டு.

அடிப்படையில் படி, உழை, சேமி; உனது வருமானத்துக்குள் வாழப்பழகு என்பனவையே.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

பல பெற்றோர் பிள்ளைகளுக்கு பொக்கற் மணி கொடுத்து பழுதாக்குறார்கள்.

பிள்ளைக்கு ஏன் பொக்கற் மணி. அந்த பொக்கற் மணியை எந்த விதத்தில் பயன்படுத்துகின்றது என்பதை, பெற்றோரால் கண்காணிக்க முடியுமா?

வீட்டிலிருந்து தேவையான சாப்பாட்டையும், சொக்லேட்டையும் கொடுத்து விட்டால்.. பொக்கற் மணி கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பின் எனது முடிவு இனி தடியின்றி எவரும் வாழமுடியாது.

ஆமாம். வயது போனால் தடியில்லாமல் இருக்கமுடியாது!

  • கருத்துக்கள உறவுகள்

பின் எனது முடிவு இனி தடியின்றி எவரும் வாழமுடியாது.

ஆமாம். வயது போனால் தடியில்லாமல் இருக்கமுடியாது!

விசுகு அம்மான் தடியைக் குடுத்து அடி வாங்கி விட்டார்.ஹிஹிஹி சும்மா பகிடிக்குத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி லண்டன் வாழ் தமிழர் எல்லாம் அடிச்சு பிடிச்சு அடுத்த பிளைட்ட எடுத்து அவுஸ் வாரதுக்;கு றெடியாகுங்க....................

சுண்டல் தண்ணீர் பந்தலோட தயாரா நிக்கிறன்................

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி லண்டன் வாழ் தமிழர் எல்லாம் அடிச்சு பிடிச்சு அடுத்த பிளைட்ட எடுத்து அவுஸ் வாரதுக்;கு றெடியாகுங்க....................

சுண்டல் தண்ணீர் பந்தலோட தயாரா நிக்கிறன்................

அக்கம் பக்கம் போற ஆக்களுக்கு உடனடி உதவி......

சுவிசுக்கு - சஜீவனும்

ஜேர்மனிக்கு - கு.சா, சாந்தி, தெலுங்குவும்,

பிரான்சுக்கு - விசுகு, சாத்திரி போன்றவர்கள் உதவி செய்வார்கள்.

லண்டன் வாழ் தமிழரை காப்பாற்ற எம்மால்... செய்யப் படும் சிறு உதவி. ஓடியாங்கோ.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.