Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுமந்திரனை நம்பி மூக்குடைபட்ட கஜேந்திரகுமாரும் கஜேந்திரனும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published on August 26, 2011-12:06 am No Comments

Sumanthiran-kajan-150x150.jpgஇந்தியாவில் நடைபெற்ற தமிழ்க் கட்சிகளின் கூட்டம் தோல்வியில் முடிந்தாலும் அதன் பின்னணியில் சில வெளிவராத சுவாரசியமான சம்பவங்களும் நிகழ்ந்தேறியிருக்கின்றமை தற்போதுஅம்பலமாகியிருக்கின்றது.

இந்தியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழ்க் கட்சிகளின் கூட்டத்திற்கான ஏற்பாட்டினை இந்தியக் காங்கிரஸ் எம்பியான சுதர்சன நாச்சியப்பன் மேற்கொண்டிருந்தார். இந்த அழைப்பு அனைத்துக் கட்சிகளுக்கும் அனுப்பட்ட போது இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கும் அனுப்பப்பட்டிருந்தது.

இந்த அழைப்பின் அடிப்படையில் கஜேந்திரகுமாரும் கஜேந்திரனும் இந்தியா செல்வதென முடிவெடுக்கப்பட்டிருந்தது. இந்த முடிவுக்கு அமைய லண்டனில் வாசம் செய்துவருகின்ற கஜேந்திரகுமார் கஜேந்திரனை அழைத்துச் செல்லவேண்டும் என்பதற்காக முதன் நாளே கொழும்பை வந்தடைந்தார்.

கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலத் தலைவராகச் சொல்லப்படுகின்ற தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உட்பட்டவர்களை சில மணிநேரமாகச் சந்தித்து இந்தியாவில் நடைபெறவுள்ள தமிழ்க்கட்சிகளின் கலந்துரையாடல் தொடர்பில் கலந்துரையாடியிருக்கின்றனர்.

சுமந்திரனுடனான சந்திப்பின் போது இந்தியாவில் தமிழ்க்கட்சிகள் இணைந்து ஒருமித்த நிலைப்பாட்டில் செயற்படுவது என்றும் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பிலும் கொள்கை அளவில் இரண்டு தரப்பினருக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டிருக்கின்றது.

சுமந்திரன் அளந்த கதையினை நம்பி இந்தியா சென்ற கஜேந்திரகுமாருக்கும் கஜேந்திரனுக்கும் இந்தியாவில் வைத்து பாடம் புகட்டியிருக்கின்றார் சுமந்திரன். தமிழர்களுக்கான தீர்வின் போது ‘சுயநிர்ணய உரிமைவழங்கப்பட வேண்டும் என்று கஜேந்திரகுமார் தரப்பு வாதிட்ட போது சுமந்திரன் உட்பட்டவர்கள் அந்த விடயத்தினை நீக்கிவிட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு கஜேந்திரகுமார் தரப்பினை வற்புறுத்தியிருக்கின்றனர்.

சுமந்திரன் தரப்பு திடீர் பல்டி அடிக்கும் என எதிர்பார்த்திராத கஜேந்திரகுமார் தரப்பு சற்றுநேரம் திகைத்துப் போய் இருந்ததாக தெரியவந்திருக்கின்றது. தமிழீழ விடுதலைப்புலிகளின் நேரடிப் பிரதிநிதிகளாகத் தம்மைச் சொல்லிக் கொள்கின்ற கஜேந்திரகுமாரும் கஜேந்திரனும் தமிழ்த் தேசியத் துரோகி ஈஎன்டிஎல்எப் பரந்தன் ராஜன் முன்னின்று நடத்திய கூட்டத்தில் பங்கெடுத்தது மட்டுமல்லாமல் சுமந்திரன் இலங்கையில் தெரிவித்த கருத்தில் இருந்து மாறுப்பட்ட நிலைப்பாடெடுத்ததால் சந்தித்த அவமானம் நாடாளுமன்றத் தேர்தலில் சந்தித்த படுதோல்வியிலும் மோசமானது என்றார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய பொறுப்பில் இருந்து கட்சி தொடர்பிலான அதிர்ப்தி நிலையில் இருக்கும் முக்கியஸ்தர் ஒருவர்.

http://www.saritham.com/?p=31915

தப்புச்செய்த்தது யார் என தெளிவில்லாமல் எழுதப்பட்டுள்ளது இந்த செய்திக்கட்டுரை.

கடைசி பந்திவரைக்கும் சுமந்திரன் ஏமாற்றி விட்டார் போல எழுதப்பட்டு பின்னர் சுமந்திரனை மற்றையவர்கள் ஏமாற்றி விட்டார்கள் போல முடிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தனைவிட 100 மடங்கு மோசமான பேர்வழியே இந்தச் சுமந்திரன்.

சுமந்திரன் என்ற பேர்வழி, தானே கூத்தமைப்பின் அடுத்த தலைவர் என்ற ரீதியில் பலருக்கு காசு கொடுத்து பிரச்சாரம் செய்ய முனைகிறான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் போராட்டம் நடந்த காலங்களில் இந்த சுமந்திரனை நான் அறிந்ததே கிடையாது இவரின் செயற்பாட்டில் எனக்கு நம்பிக்கையில்லை இவரோடு ஒப்பிடும்போது கஜேந்திரகுமாரும் கஜேந்திரனும் அவர்களின் கொள்கையில் உறுதியாக உள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் போராட்டம் நடந்த காலங்களில் இந்த சுமந்திரனை நான் அறிந்ததே கிடையாது இவரின் செயற்பாட்டில் எனக்கு நம்பிக்கையில்லை இவரோடு ஒப்பிடும்போது கஜேந்திரகுமாரும் கஜேந்திரனும் அவர்களின் கொள்கையில் உறுதியாக உள்ளனர்.

எனக்கும் அதே நிலை தான்....

சுமந்திரன் நேற்றுப் பெய்த மழையில், முளைத்த காளானோ தெரியாது. அவதானம் தேவை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுமத்திரன் மட்டுமில்ல தம்பிகளா சிறீதரனும்?

சுமந்திரன் சம்பந்தனின் நீண்டகால வளர்ப்பு. 2002 இல் இருந்து சுமந்திரனையும் பட்டியலில் இணைக்கும்படி இயக்கத்தை சம்பந்தர் கேட்டார். இயக்கம் வேண்டாம் என்று சொன்னது. இதே வேளை இந்த சுமந்திரந்தான் திர்வுப்பொதி ஒன்றையும் எழுதிக்கொடுத்து 2002 இல் இருந்தே அதை விற்க கொண்டு திரிஞ்சவர். அதனையும் பெரிதாக ஒருவரும் செவிமடுக்கவில்லை. சம்பந்தருக்கும் சுமந்திரனுக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை அவ்வளவு ஒட்டு.

Edited by உமை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் சம்பந்தனின் நீண்டகால வளர்ப்பு. 2002 இல் இருந்து சுமந்திரனையும் பட்டியலில் இணைக்கும்படி இயக்கத்தை சம்பந்தர் கேட்டார். இயக்கம் வேண்டாம் என்று சொன்னது. இதே வேளை இந்த சுமந்திரந்தான் திர்வுப்பொதி ஒன்றையும் எழுதிக்கொடுத்து 2002 இல் இருந்தே அதை விற்க கொண்டு திரிஞ்சவர். அதனையும் பெரிதாக ஒருவரும் செவிமடுக்கவில்லை. சம்பந்தருக்கும் சுமந்திரனுக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை அவ்வளவு ஒட்டு.

உமை பல புதிய தகவல்கள் தந்துள்ளீர்கள்,இப்படியெல்லாம் நடந்தனவா .....?

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டியள் சேர்ந்து மடம் கட்டுறதுக்குப் பிளான் போட்டமாதிரி உவங்கள் எல்லோரும் சேர்ந்தாலென்ன' சேராமல் விட்டாலென்ன? எதையாவது உருப்படியாத் தமிழருக்கு இலங்கையரசு கொடுக்கவோ போகுது?

எதில ஒற்றுமை எதில முரண்பாடு ஒன்டும் தெரியாது. சும்மா கதைக்கிறதும் ஆளையாள் தாக்கிறதும்தான் வேலையாப் போச்சுது. பிரயோசனமில்லாத வேலையளுக்காக கருத்துக்களத்தில ஆயரம் கருத்துக்கள் வேற.

என்னவாம் அவையின்ர உள்விகாரங்களில் நடந்த பிரச்சனையளாம். உது ஆருக்குத் தேவை?

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழ் மக்களின் உரிமைக்கான தேவை மற்றும் அதை சிங்களத்திடமிருந்து.. உலகிடமிருந்து.. பெற.. ஒருமித்த குரலும் ஒற்றுமையுமே அவசியம். அன்றி.. இப்படியான சீண்டு முடியும் கட்டுரைகளை வரைந்து போட்டி அரசியல் நடத்தும் நிலையில் தமிழ் மக்கள் இல்லை என்பதை இப்படியான கட்டுரை வரைபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். :o:unsure::rolleyes:

... இச்செய்தியின் உண்மை/பொய்மைகள்????????? ... எங்கேயோ தமிழ் தட்டழெத்து தெரிந்த ஒன்றால் நடத்தப்படும் ஓர் இணையத்தளம்??? அது தன் விளம்பரத்துக்காக???,,,

... இப்போதெல்லாம் ஒட்டுக்குழு மாகமாக்களினால் நடத்தப்படும் இணையங்களின் தகவல்கள், தாம் ததேயின் இணையங்கள் என்று கூப்பாடு போடுபவர்களளின் செய்திகளை விட உண்மைத்தன்மை கூடியவை!!?? ... இந்த ததேயின் இணையங்கள், அங்கு உதயன், வலம்புரி, வீரகேசரி, லங்கஈநியூஸ், லங்காகார்டியன், ... போன்றவற்றில் வருபவனவற்றுக்கு கை, மூக்கு, கால் வைத்து தமதாக்குகின்றன!!!!!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரை குழப்பமானதில் இருந்தே தெரிகிறது அதன் உண்மைத்தன்மை.

இன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழ் மக்களின் உரிமைக்கான தேவை மற்றும் அதை சிங்களத்திடமிருந்து.. உலகிடமிருந்து.. பெற.. ஒருமித்த குரலும் ஒற்றுமையுமே அவசியம். அன்றி.. இப்படியான சீண்டு முடியும் கட்டுரைகளை வரைந்து போட்டி அரசியல் நடத்தும் நிலையில் தமிழ் மக்கள் இல்லை என்பதை இப்படியான கட்டுரை வரைபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். :o:unsure::rolleyes:

இது ரெம்பச் சரி.

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டியள் சேர்ந்து மடம் கட்டுறதுக்குப் பிளான் போட்டமாதிரி உவங்கள் எல்லோரும் சேர்ந்தாலென்ன' சேராமல் விட்டாலென்ன? எதையாவது உருப்படியாத் தமிழருக்கு இலங்கையரசு கொடுக்கவோ போகுது?

எதில ஒற்றுமை எதில முரண்பாடு ஒன்டும் தெரியாது. சும்மா கதைக்கிறதும் ஆளையாள் தாக்கிறதும்தான் வேலையாப் போச்சுது. பிரயோசனமில்லாத வேலையளுக்காக கருத்துக்களத்தில ஆயரம் கருத்துக்கள் வேற.

என்னவாம் அவையின்ர உள்விகாரங்களில் நடந்த பிரச்சனையளாம். உது ஆருக்குத் தேவை?

கனகாலம் அடக்கி வைச்சிருந்ததை... ஒரேயடியாய் கொட்டிப் போட்டீங்கள், கரு.

நரி... இடம் போனாலென்ன, வலம் போனாலென்ன... மனிசற்றை மேல்லை விழுந்து, புடுங்கி, விறாண்டி, கடிச்சு, குதறாமல் போனால் நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.