Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறைவனை எட்டுதல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இறைவனை எட்டுதல்!

கடும் பசியுடன் இருந்த சிறுவன் ஒருவன் ஒரு வீட்டை தட்டினான். இளம் பெண் ஒருத்தி கதவைத் திறந்தாள். "குடிப்பதற்கு தண்ணீர் கொடுங்கள்" என்று கேட்டான். ஆனால் அவன் பசியுடன் இருப்பதை உணர்ந்து கொண்ட அந்த பெண் ஒரு கோப்பையில் சூடான பால் கொண்டு வந்து கொடுத்தாள். நன்றியுடன் பெற்றுக்கொண்ட அந்த சிறுவன், கட கட வென குடித்து முடித்தான். பிறகு, " இதற்கு நான் எவ்வளவு பணம் தர வேண்டும்?" என்று கேட்டான்.

"ஒன்றும் வேண்டாம், அன்புடன் கொடுக்கும் எந்த பொருளுக்கும் பணம் பெறக்கூடாது என்பது என் தாயின் அறிவுரை" என்றால் அந்த பெண். அவன் நன்றியுடன் விடை பெற்றான்.

காலம் பறந்தது. அந்த பெண் திடீரென்று நோய்வாய் பெற்றாள். அந்த ஊர் மருத்துவர்கள் எவ்வளவு முயன்றும் அவளது நோய் குணமடையவில்லை. நகரத்தில் உள்ள புகழ் பெற்ற மருத்துவரான 'ஹோவார்ட் கெல்லி' என்பவரை ஆலோசனைக்காக அழைத்தனர்.

அந்த பெண்ணின் ஊர்ப் பெயரை கேட்டதும், அவளது அறைக்கு விரைந்தார் டாக்டர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவளைக் கண்டதும் அவர் கண்கள் வியப்பில் விரிந்தன. உடனடியாக, அந்த பெண்ணின் சிகிச்சையை தாமே முன்னின்று கவனிக்க தொடங்கினார். தனது அனுபவத்தால், கடும் போராட்டத்திற்குப் பிறகு, அவளை படிப்படியாக குணப்படித்தினார் அவர்.

அன்று மருத்துவமனையில் இருந்து அவள் வெளிவரும் நாள். தான் குணமடைந்தது குறித்து மகிழ்ந்தாலும், மருத்துவ சிலவு எவ்வளவு ஆகியிருக்குமோ என்ற கவலை அவளுக்கு!

மருத்துவமனை நிர்வாகத்தினிடம் சென்று "நான் எவ்வளவு செலுத்த வேண்டும்?" என்று கேட்டாள். "எதுவுமில்லை" என்று கூறி ஒரு கவரை அவளிடம் கொடுத்தார் அந்த ஊழியர். அவளுக்கு ஆச்சரியம். ஆர்வத்துடன் அந்தக் கவரை பிரித்தாள்.

உள்ளே ஒரு காகிதத்தில்..............

அவளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், அதற்கான செலவுகள் ஆகியன பட்டியலிடபட்டிருந்தன. அவை எல்லாவற்றுக்கும் கீழே சிவப்பு மையினால், கொட்டை எழுத்தில் இவ்வாறு எழுதபட்டிருந்தது.

"மருத்துவ செலவுகள் அனைத்தும், சூடான ஒரு கோப்பை பாலின் மூலம், முழுவதுமாக செலுத்தப்பட்டு விட்டன!

இப்படிக்கு,

டாக்டர் ஹோவார்ட் கெல்லி"

திகைத்து போனால் அவள்.

அந்த ஏழை சிறுவனிடம் தான் காட்டிய கருணையும், அவனுக்கு அளித்த பாலும், இன்று ஓர் அரிய சிகிச்சையாக மாறி, தன்னை காப்பாற்றியயதை நினைத்து அவளுக்கு பேச்சே எழவில்லை.

அவள், இறைவனின் பெரும் கருணையை மனித வடிவில் கண்டாள்.

வீட்டிலும், வெளியிலும், அலுவலகத்திலும்,பிறர் மீது குற்றம் காண்பதை நிறுத்துங்கள். பிறரை தாழ்ந்தவராக எண்ணுவதை கைவிடுங்கள்.சக மனிதர்களை விட பொன்னையும் பொருளையுமே பெரிதாக கருதி, எவரையும் சொல்லாலோ, செயலாலோ புண்படுத்தீர்கள். தவறுகளை மன்னித்து, மறந்து விடுங்கள். இவை போன்ற எளிய செயல்களால் , உங்களது வாழ்க்கை அன்பு மயமாகும்.

அப்போது இறைவனையே எட்ட முடியும்!

- நண்பரின் அறிவுரையிலிருந்து.

.

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

பதிவிற்கு நன்றி அண்ணா...இப்ப எல்லாம் யார் இதைக் கடைப்பிடிக்கிறார்கள்

பதிவுக்கு நன்றி ராஜவன்னியன். 'Whats goes around comes around' என்பதில் எனக்கு நிறைய நம்பிக்கை உண்டு...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பயனுள்ள நல்லதொரு இணைப்பு ராஜவன்னியன்!உங்கள் பதிப்பை படித்து முடித்ததும்....என்னை பாதித்த இந்த சினிமாகாட்சிதான் நினைவில் வந்தது.நன்றி ராஜவன்னியன்..

*முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்*

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவற்றையே விதைத்துக்கொண்டு செல்லுங்கள்.நல்லவற்றையே அறுவடை செய்வீர்கள் என்று கண்ணதாசன் கூறியது இக்கதைக்கு சாலப்பொருந்தும்.இணைப்புக்கு நன்றி வன்னியன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இவ்வாறான பதிவுகளுக்கு வரவேற்பு இருக்குமாவென சந்தேகமிருந்தாலும், கற்றதை சொல்வது எம் கடனே! என்ற துணிவில் பதிந்தேன். அனைவரின் கருத்துக்களுக்கும், ஆதரவிற்கும் நன்றி.

முதலில் இவ்வாறான பதிவுகளுக்கு வரவேற்பு இருக்குமாவென சந்தேகமிருந்தாலும், கற்றதை சொல்வது எம் கடனே! என்ற துணிவில் பதிந்தேன். அனைவரின் கருத்துக்களுக்கும், ஆதரவிற்கும் நன்றி.

உங்க பதிவுக்கு எப்போதுமே வரவேற்பிருக்கும் ராஜவன்னியன் அண்ணா...!

இந்த பதிவு யாருக்கும் பிடிக்குதோ இல்லியோ........

நாகரிகமா எப்போதுமே கருத்து எழுதுற ராஜவன்னியனுக்குன்னு ஒரு மரியாதை யாழ்ல இருக்கு!

இந்த காவாலி அறிவிலியும் அவர் - ரசிகன்! :)

  • கருத்துக்கள உறவுகள்

எம்மால்.... செய்யக் கூடிய, உதவியை பிரதி பலன் எதிர்பார்க்காது செய்தால்.... என்றோ அது ஒரு நாள் திரும்பக் கிடைக்கும்.

இணைப்பிற்கு நன்றி ராஜவன்னியன்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இணைப்பிற்கு ராஜவண்ணியன், அன்பே சிவம், பலனை எதிர்பாராமல் உதவி செய்தால் கட்டாயம் பலன் கிடைக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.