Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தோற்றுப் போனவள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காமாட்சி .......கனகசுந்தரம் தம்பதிகளுக்கு இரு பெண பிள்ளைகள். மூத்தவள் படிப்பு முடிந்ததும் , கனகர் வேலைக்கு விட மறுத்து விடார். இளையவள் தந்தையுடன் போராடி மேற்படிப்புக்காக் யுனிவேர்சிட்டியில் படித்து கொண்டு இருந்தாள். கனகர் அந்த ஊரிலே பெரும் அரிசி ஆலைக்கு சொந்தக் காரர். முப்பது மேற்பட்ட் பணியாளர்களை கொண்டு தொழிலை நடத்தி வந்தார். மாலையில் நிர்வாகத்தின் கணக்கு வழக்குகளை கவனிக்க தங்கை மகன் , வாகீசனை துணைக்கு அழைத்தார் . அவனும் மாமன் மீதுள்ள் மரியதையால் ஏற்றுக்கொண்டான். .

முன்பு அவன் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வேலை பார்த்தவன். அவனது கம்பனி , ஒப்பந்தம் முடிந்ததால் , ஊருக்கு வந்து வேறு நிறுவனத்தில் இணைய காத்திருப்பவன். கனகரின் தங்கை விசாலம் , கணவனை இழந்த பின் ஒரே மகனைக் கண்போல் காத்து படிப்பித்து ...மாமன் கனகர் சொல்லவும் கேளாமல் மத்திய கிழக்கிற்கு பணிக்கு ஆட்களை எடுபதாக் மகன் கேட்ட போது அனுப்பி வைத்தாள்.

தற்போது , ஓய்வாக் இருப்பதால் அவனும் சம்மதித்து , கணக்கு வழக்குகளை பார்ப்பான் . சில சமயம் மாமன் வீடில் அந்த , விபரங்களைக் கொண்டுபோய் கொடுக்க வேண்டியிருக்கும். அங்கே அழகு தேவைதை யான மைத்துனியை சந்தித்ததும் காதல் வயபட்டான். மூத்தவள் வைதேகி முதலில் மறுத்தாலும், காலபோக்கில் சம்மதம் தெரிவித்தாள். . கனகருக்கு இது தெரியவந்ததும் , மனைவி காமாட்சியுடன் , இது நடக்காது , அவளை கணடித்து வை என்றார்.

சில நாட்களில் ஒரு அரச உத்தியோகம் பார்க்கும் வசதியான் பையனுக்கு திருமணம் முற் றாகியது . பெண பார்க்கும் நாள் வரவே ...பையன் உறவினருடன் வந்து பெண பார்த்து , சம்மதம் சொல்லி . கலியாணத்துக்கான நாளும் பார்க்க் பட்டது . வாகீசன் தாயை போய் பெண்கேட்கும்படி சொல்லி பார்த்தான் . விசாலம் சகோதரனுக்கு பயந்து , தயங்கி நின்றாள். திருமணம் வைதேகி சம்மதமில்லாமலே நிறைவேறியது.

வாகீசன் மனம் சோகத்தில் ஆழ்ந்தது . முதல் நாள் இரவே, அன்றே ,எல்லாக் கதைகளையும் கணவனிடம் ஒப்புவித்தாள்.தந்தையின் கெடுபிடிக்கு பயந்து தான் எதிர்புத் தெரிவிக்க் வில்லை என்றாள் . மாப்பிள்ளை ஒரு நல்ல புரிந்துணர்வு உள்ளவனாய் , அவன் ஒரு நல்ல இதயம் உள்ளவனாய் இருந்தான். கணவனையும் அழைத்துக்கொண்டு போய் வாகீசனிடம் பேசி னாள் தான் எவ்வ்ளவோ போரடியும் தந்தை மறுத்து விட்டார் என்றும் தன்னை மறந்து வேறு திருமணம் செய்யும் படியும் கேட்டாள். அவன் சம்மதிக்க வில்லை .

நீ சந்தோஷமாய் வாழு . எனக்குத்தான் கொடுத்து வைக்க வில்லை என்றான் .

சில நாட்கள் செல்ல வாகீசன் மீண்டும் மத்திய கிழக்கு நாட்டுக்கு சென்றான் . வருடங்கள் உருண்டோடியது ....வைதேகிக்கும் இரண்டு பெண குழந்தைகள் ....கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் இருக்கும் . அவ்வூர் திருவிழாக்காலம் வந்தது. எல்லோரும் மகிழ்ச்சியாய் இருந்தனர். வைதேகி குழந்தைகளை கோவிலுக்கு அழைத்து சென்றாள். அவளது மாமியார் ( தந்தையின் சகோதரி ) அழைக்கவே திருப்பி பார்த்தாள் . குழந்தைகளை கொஞ்சி மகிழ ஆசைப் பட்டாள் மாமியார். . வாகீசன் ஒரு மரத்தினடியில் சோகமாய் உட்காந்து இருந்தான்.வைதேகி அவனிடம் போய் நலம் விசாரித்தாள்...குழந்தைகள் பாட்டியுடன் விளையாடிக்கொண்டு இருந்தார்கள். வைதேகி வற்புறுத்தி கேட்டாள். அவனது வாழ்வை மறு சீரமைக்கும் படி .. என் தியாகம் தான் பெற்றவருக்கு மகிழ்ச்சி ...உங்கள் திருமணம் தான் எனக்கு ஆறுதல் உங்களை காணும்போது குற்ற உணர்வால் குறுகி போகிறேன். என்னை மன்னித்து வேறு மணம் செய்து கொள்ளுங்கள். நான் வாழ்வது என் கணவருக்காகவும் குழந்தை களுக்காகவும் , என்று பேசி முடித்தாள். வாகீசன் மெளனமாக் இருந்தான். .

சில ( வயதால்) பெரியவர்களின் வரட்டு கெளரவம் இளம் மனசுகளை வேதனை பட வைக்கிறது . சிலருடைய தியாகம், தோல்வி பெரியவர்களுக்கு மனத் திருப்தி தருகிறது. .வாழும் காலம் கொஞ்சம். விரும்பிய வாழ்க்கையை ,அமைத்து, மன மகிழ்வோடு வாழ்த்தி வாழ வைக்க ஏன் மறுக்கிறது, இந்த மனித மனங்கள்.

நன்றாக இருக்கின்றது நிலாமதியக்கா . இன்னும் கதைகளை உங்கள் பாணியில் எதிர்பார்கின்றேன் :) :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சகோதரி :D

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் நிலாமதி அக்கா!

நாங்கள் இந்த உலகத்தில், Vistors' Visa வுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதைப் பலர் மறந்து விடுகின்றார்கள்! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாயிருக்கு...தொடர்ந்து எழுதுங்கோ நிலா அக்கா...

  • கருத்துக்கள உறவுகள்

மனித மனம் ..பொல்லாதது.....தொடரட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நிலாக்கா பகிர்வுக்கு, பெரியவளா இருந்து சிறியவளா பற்றி யோசிக்கிறீங்க, ஒரு பச்சை தொடருங்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் ...........புரட்சி..... புத்தன் .........புங்கையூரன் ..சுபேஸ்............உடையார்

.உங்கள் ஊக்கத்துக்கு நன்றி

தொடருங்கள் உங்கள் எழுத்துக்களை நிலாமதியக்கா.

ஆனால் வைதேகியின் தந்தை, சகோதரி மகனை திருமணம் செய்யவிடாதது அரசாங்க உத்தியோகத்துக்காக என்றாலும், நெருங்கிய உறவில் திருமணம் செய்வது மரத்துவ ரீதியில் நல்லதல்லவே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.