Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நயன்தாரா -பிரபுதேவா காதல் முறிந்தது : திருமணம் ரத்து?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

nayanthara%20-brabudeva.jpg

டிகை நயன்தாரா மலையாள நடிகர் மோகன்லாலை காதலித்து பின்னர் பிரிந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நடிகர் சிம்புவை காதலித்து பிரிந்தார்.

இதையடுத்து நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவை காதலித்து திருமணம் வரை வந்தது. இப்போதும் அந்த காதலும் முறிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

நயன்தாரா -பிரபுதேவா காதலுக்கு பிரபுதேவாவின் முதல் மனைவி ரமலத் எதிர்ப்பு தெரிவித்தார். தனது கணவரை நயன்தாராவிடமிருந்து மீட்டு தாருங்கள் என்று போராட்டம் எல்லாம் நடத்தி, கடைசியாக கோர்ட் படியேறினார் ரமலத்.

simbhu-nayantara-kiss.jpg

இறுதியில் ரமலத்தையே சமாதனம் செய்து விவாகரத்துக்கு சம்மதிக்க வைத்த பிரபுதோ, ரமலத்திற்கு பலகோடி மதிப்பிலான சொத்துக்களையும் எழுதி கொடுத்தார்.

இதனையடுத்து நயன்-பிரபுதேவா காத‌லுக்கான சிக்கல் தீர்ந்தது. இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து, திருமண ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

இதனிடையே தன்மீது கொண்ட காதலுக்காக முதல் மனைவி ரமலத்தையே விவாகரத்து செய்துவிட்டு வந்த பிரபுதேவாவுக்காக இந்து மதத்துக்கு மாறினார் நயன்தாரா. மும்பையில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் வேளையில், இவர்கள் காதலில் திடீர் விரிசல் ‌ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் திருமணத்தை ரத்து செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

brabudeva.jpg

இந்த அதிரடி மாற்றம் குறித்து சொல்லப்படும் காரணம் : முதல் மனைவியை பிரிந்தாலும் தனது குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளாராம் பிரபுதேவா.

சென்னை வரும் போதெல்லாம் குழந்தைகளை சந்திக்கிறாராம். ஆனால் இதுநயன்தாராவுக்கு பிடிக்கவில்லை. குழந்தைகளை சந்திக்க நயன்தாரா தடை போட்டதாக தெரிகிறது. இருந்தும் நயன்தாராவுக்கு தெரியாமல் குழந்தைகளை சந்தித்து வருகிறார் பிரபுதேவா.

Nayanthara-9.jpg

சமீபத்தில் கேரளா சென்ற பிரபுதேவா, நயன்தாராவிடம் வெளியூர் சூட்டிங்குக்கு போவதாக பொய் சொல்லிவிட்டு சென்னைவந்தாராம். இங்கு குழந்தைகளுடன் தங்கி இருந்துள்ளார். இந்த விஷயம் நயன்தாரா காதுக்கு எட்ட ஆத்திரமானார்.

பிரபுதேவாவுக்காக சினிமா, குடும்பம் என எல்லாத்தையும் விட்டு வந்த எனக்கு, அவர் துரோகம் செய்துவிட்டார் என்று ஆத்திரப்பட்டுள்ளார். மேலும் குழந்தைகளை விட்டு தன்னால் பிரிய முடியாது என்று பிரபுதேவாவும் உறுதியாக கூறிவிட்டாராம்.

இதையடுத்து பிரபுதேவா - நயன்தாரா காதல் முறிந்து, திருமணம் நின்றுபோனதாக பேசப்படுகிறது.

http://www.nakkheera...ws.aspx?N=63281

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறன் பிரபுதேவா ஒரு ரகசியத் திட்டத்துடன் செயல்படுறார் என்று..! :unsure:

முதலில் ஒரு முஸ்லிம்.. :unsure: இப்போது ஒரு கிறிஸ்துவர்..! :(

இருவரையும் இந்துவா மாத்திப் போட்டாரே..!! :lol:

இதை போன்ற இன்னுமொரு முக்கிய செய்தி ஒன்று தவறவிடப்பட்டுவிட்டது. சித்தார்த்தும் ஸ்ருதியும் பிரிந்த செய்தி ஏன் இன்னும் போடவில்லை

இதை போன்ற இன்னுமொரு முக்கிய செய்தி ஒன்று தவறவிடப்பட்டுவிட்டது. சித்தார்த்தும் ஸ்ருதியும் பிரிந்த செய்தி ஏன் இன்னும் போடவில்லை

மித்திரனில் உள்ளது :D :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை வாசிக்கும் போது எதோ நயன்தாரதான் பிழையான ஆள் போல் சொல்லப்படுகிறது. பெண்மணிகள் கவனத்தில் எடுக்கவும்.

இனிமேல் நயன்தார காதலிக்கும் போது ஒரு ஈழத்தமிழரை காதலிக்குமாறு பணிவன்புடன் கேட்டுகொள்ளுகிறேன். அதுவும் டொரோண்டோ பக்கம் என்றால் விசேடம்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரபுதேவாவின், 12 வயது மகன் புற்றுநோயால் இறந்து ஒரு வருடத்துக்குள் முதல் மனைவி எவ்வளவோ தடுத்தும், விவாகரத்தைப் பெற்று, நயன் தாராவை காதலித்து திருமணம் செய்தார்...

இரண்டாவது திருமணத்துக்கு போட்ட மாலை காயமுன்னர், விவாக ரத்தா?

இனி பிரபுதேவாவை நம்பி யார் கழுத்தை நீட்டுவார்கள். தனிய இருந்து விட்டுப் போகவேண்டியது தான்....

  • கருத்துக்கள உறவுகள்

நயன்தாரா பின்னால் போனவன் வாழ்க்கை 'பயன்தாரா'!

இப்படி, தற்ஸ் தமிழில் ஒருவர் பின்னூட்டம் எழுதியுள்ளார்.biggrin.gif

நான் நினைக்கிறன் பிரபுதேவா ஒரு ரகசியத் திட்டத்துடன் செயல்படுறார் என்று..! :unsure:

முதலில் ஒரு முஸ்லிம்.. :unsure: இப்போது ஒரு கிறிஸ்துவர்..! :(

இருவரையும் இந்துவா மாத்திப் போட்டாரே..!! :lol:

இதே போக்கில போனாரென்றால், பிரபுதேவா சமயத் தொண்டாற்றியவர் பட்டியலில் இடம்பெற்று விடுவார். :lol:

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

நயன்தாரா பின்னால் போனவன் வாழ்க்கை 'பயன்தாரா'!

இப்படி, தற்ஸ் தமிழில் ஒருவர் பின்னூட்டம் எழுதியுள்ளார்.biggrin.gif

யோவ் தமிழ்.. இப்பிடி நான் முந்தி திண்ணைக்குறள் எழுதினான் இங்க யாழில.. :o அதிலையும் காப்பியா? :o இனிமேல் திண்ணைக்கு காப்பிரைட் எடுக்க வேணும்..! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் தமிழ்.. இப்பிடி நான் முந்தி திண்ணைக்குறள் எழுதினான் இங்க யாழில.. :o அதிலையும் காப்பியா? :o இனிமேல் திண்ணைக்கு காப்பிரைட் எடுக்க வேணும்..! :icon_mrgreen:

:lol: :lol:

ஹிஹிஹி.. அப்ப சிம்புட காட்டில மீண்டும் மழையா? :lol::rolleyes:

ஹிஹிஹி.. அப்ப சிம்புட காட்டில மீண்டும் மழையா? :lol::rolleyes:

எனக்கெண்டால் நயன்தாராவின் காட்டில் தான் நிறைய மழை என்று தோன்றுகின்றது

:rolleyes: :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தண்ணீர் வழிந்து ஆறாக ஓடுகின்றதாம்.தற்சமயம் இன்னோருவரை அணைபோட தேடுகின்றாராம்:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

thee-49.jpg

ஒண்டுக்கும் கவலைப்படாதை தாரா! வெளிநாட்டிலை இருக்கிற தமிழன்களுக்கு ஒருலச்சம் இரண்டுலச்சம் மைல் ஓடின கார்கள் தான் நல்லவிருப்பம்.....இண்டைக்கில்லாட்டிலும்...நாளைக்காவது கைகுடுப்பாங்கள்......நல்லவடிவாய் வைச்சிருப்பாங்கள்...... படத்திலை கால்புடிச்சுவிடுறவரைவிட.....ரொம்ப..ரொம்ப நல்லவங்கள் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் தமிழ்.. இப்பிடி நான் முந்தி திண்ணைக்குறள் எழுதினான் இங்க யாழில.. அதிலையும் காப்பியா? இனிமேல் திண்ணைக்கு காப்பிரைட் எடுக்க வேணும்..!

இசை, ஒரு சில வருடங்களுக்கு முன்பு...

யாழில் எழுதப் படும் அரசியல் கருத்துக்கள்... அட்சரம் பிசகாமல், தற்ஸ் தமிழில் ஒருவர் தொடர்ச்சியாக பதிந்து வந்தவர். இப்போது அவரைக் காணவில்லை. சிலவேளை அவர் தானோ... இவர் வேறு பெயரில் வந்துள்ளாரோ... தெரியவில்லை.laugh.gif

யோவ் தமிழ்.. இப்பிடி நான் முந்தி திண்ணைக்குறள் எழுதினான் இங்க யாழில.. :o அதிலையும் காப்பியா? :o இனிமேல் திண்ணைக்கு காப்பிரைட் எடுக்க வேணும்..! :icon_mrgreen:

எலே மியூசிக்கு.......

திண்ணைல போயி யாராச்சும் குறள் எழுதுவாங்களா? <_<

பைத-வே.. திண்ணைல இருந்து ஏதாச்சும் எழுதினா,, யாராச்சும் ,, அய்யோ பாவம்னு காப்பி மட்டும்தான் தருவாங்க!

காப்பிரைட் இல்ல!

இது எப்டி இருக்கு? <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.