Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரச்னைகள் தீரும் வரை இலங்கை செல்ல மன்மோகன் சிங் மறுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Man.mahi_CI.jpg

பாகிஸ்தான் பிரதமர் கிலானி, இலங்கை அதிபர் ராஜபக்ஷே ஆகியோரை, நேற்று பிரதமர் மன்மோகன் சிங், மாலத்தீவில் தனித்தனியாகச் சந்தித்து, இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

தெற்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான, "சார்க்' அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள, மாலத்தீவு வந்துள்ள பிரதமர் மன்மோகன்சிங், அடு அடோல் என்ற கூட்டு தீவு பகுதியில் உள்ள, "ஷாங்கிரிலா ரிசார்ட்' என்ற சொகுசு விடுதியில் தங்கியுள்ளார். சார்க் நாடுகளின் மற்ற தலைவர்களும், இதே இடத்தில் தங்கியுள்ளனர். மாலத்தீவு தலைநகர் மாலேயில் இருந்து, 700 கி.மீ., தெற்கே, இந்த குட்டித்தீவு அமைந்துள்ளது.

பின்வாங்க மாட்டோம்!: இங்கு, நேற்று காலை 9.30 மணிக்கு, முதலில் பாக்., பிரதமர் கிலானியுடன் நடந்த பேச்சுவார்த்தையில், இந்தியாவுக்கு, "அதிக சலுகை அளிக்கப்படும் நாடு' என்ற வர்த்தக அந்தஸ்தை வழங்கும் முடிவில் இருந்து பாகிஸ்தான் பின்வாங்காது என, மன்மோகன் சிங்கிடம் கிலானி உறுதியளித்தார். இதன் மூலம், பாகிஸ்தானில், இந்தியப் பொருட்களுக்கு, மற்ற நாட்டுப் பொருட்களை விட குறைவான இறக்குமதி வரியே விதிக்கப்படும். இந்த அந்தஸ்தை பாகிஸ்தானுக்கு, இந்தியா ஏற்கனவே அளித்துள்ளது. ஒரு நாடு, மற்ற பல நாடுகளுக்கு, இந்த அந்தஸ்தை வழங்கமுடியும். இத்தகைய அந்தஸ்து பெற்ற அனைத்து நாடுகளின் பொருட்களுக்கும், ஒரே இறக்குமதி வரி தான் விதிக்கப்படும். மேலும், இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே, இரு நாட்டினரும் எளிதாகச் சென்று வரும் வகையில், விசா நடைமுறைகளை எளிமை படுத்த வேண்டும் என, இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்த பேச்சுவார்த்தையை விரைவுபடுத்தி, விரைவில் தீர்வு எட்டப்பட வேண்டும் என, இரு பிரதமர்களும் ஒப்புக்கொண்டனர்.

திருப்தி: பேச்சுவார்த்தைக்குப் பின், ""இரு நாட்டு உறவுகளை மேம்படுத்த நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் ஏற்பட்டு உள்ள முன்னேற்றம், இரு தரப்பினருக்கும் திருப்தியாக உள்ளது. எனவே, ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவது, எதிர்த்து குற்றம் சாட்டுவது போன்றவை மறக்கப்பட வேண்டும்'' என, மன்மோகன் சிங் கூறினார். பின், கிலானி நிருபர்களிடம் கூறுகையில், ""எங்கள் சந்திப்பு சுமுகமான முறையில் நடந்தது. சரியான திசையை நோக்கி, நாங்கள் சென்று கொண்டு இருக்கிறோம். காஷ்மீர், குஜராத்தில் உள்ள சர்கிரீக், வர்த்தகத் தொடர்புகள் குறித்தும் பேசினோம்'' என்றார்.

"வரமாட்டேன்': இந்த சந்திப்பு முடிந்ததும், இலங்கை அதிபர் ராஜபக்ஷே, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: இந்த சந்திப்பின் போது, இலங்கைத் தமிழர்கள் மறு குடியமர்த்தும் பிரச்னை, தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து, பிரதமர் விளக்கம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இலங்கைக்கு வருமாறு, மன்மோகன் சிங்கை ராஜபக்ஷே அழைத்தார். எனினும், இலங்கைத் தமிழர்கள் மறு குடியமர்வு விவகாரம், அதிகாரப் பகிர்வு விவகாரத்தில் தீர்வு, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது போன்ற பிரச்னைகளில், நல்ல தீர்வு ஏற்படும் வரை, இலங்கைக்கு வர இயலாது என, பிரதமர் கூறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

http://www.globaltam...IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு வர இயலாது என, பிரதமர் கூறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

நீ போகா விட்டால் அவனுக்கு என்ன?நீ வரக்கூடாது என்பதற்காகவே அவன் தொடர்ந்து எங்களுக்கு தீங்கு செய்வான்....

  • கருத்துக்கள உறவுகள்

இடைக்கிடை இந்த விளையாட்டை இவர் விடுவதுண்டு!

பிரச்னை முடியுதோ, இல்லையோ இவர் கதிரையில் இருக்க மாட்டார் என்பது மட்டும் உறுதி!

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர்கள் மறு குடியமர்வு விவகாரம், அதிகாரப் பகிர்வு விவகாரத்தில் தீர்வு, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது போன்ற பிரச்னைகளில், நல்ல தீர்வு ஏற்படும் வரை, இலங்கைக்கு வர இயலாது என, பிரதமர் கூறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அதட்டிக் கேட்க வக்கில்லை, ரோசம் மட்டும்.... சிங்குக்கு, பிச்சுக் கொண்டு வந்திட்டுது.

Edited by தமிழ் சிறி

நல்ல தீர்வு ஏற்படும் வரை, இலங்கைக்கு வர இயலாது என, பிரதமர் கூறிவிட்டதாகவும் கூறப்படுகிறது

பிரைச்சினையே நீங்கள்தானே எல்லாத்தையும் செய்துபோட்டு ஒண்ணுமே தெரியாதமாதிரி இருக்கின்றீர்கள் மிஸ்ரர் சிங் போய் உங்க சொநியாமாதாயிடம் கேளுங்கள் அவர் விவரமாக மாமியாரின் காலத்தில் இருந்து இன்றுவரை சொல்லுவார் அதைவிட்டு விட்டு குழந்தைபிள்ளையாட்டம் பேசக்கூடாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த சிங்கை பஞ்சாபிகளே மதிப்பதில்லை. பார்சி காங்கிரசின் கைப்பாவை.

இது வராமல் இருப்பதால் இந்திய குடிமக்கள் தம் வரிப்பணத்தில் மிச்சம் பிடிக்கலாம்.

இலட்சக் கணக்கான தமிழ் மக்களைக் கொன்றவர்கள், ராஜீவ்காந்திக்கு அடிபோட்டவர்கள். தன்னைக் கொன்றாலும் கொன்றுவிடுவர்கள் என்ற பயமே தவிர. வேறொன்றும் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலட்சக் கணக்கான தமிழ் மக்களைக் கொன்றவர்கள், ராஜீவ்காந்திக்கு அடிபோட்டவர்கள். தன்னைக் கொன்றாலும் கொன்றுவிடுவர்கள் என்ற பயமே தவிர. வேறொன்றும் இல்லை.

உண்மை.

தலை ஒரு அடி தான் கொடுத்தவர். ஆனால் இருபது வருடமாக அவர்களுக்கு சுணைக்கிறது.

பிரச்னைகள் தீரும் வரை இலங்கை செல்ல மன்மோகன் சிங் மறுப்பு

அடுத்த தேர்தல் முடியும்வரை நான் உங்கு வரமாட்டேன். தேர்தல் முடிந்ததும் எனது first visit என் அன்புக்குரிய உன்னிடமே

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சிங் ஒரு போர் குற்றவாளி,இந்தியாவே சமாதானம் முறிவடைய காரணமாக இருந்தது என நோர்வே சொல்கிறது இறுதிவரை புலிகள் சரணடைவதைக்கூட விரும்பவில்லை,சரணடைந்த அரசியல் துறை புலிகள் கொல்லப்பட்டதற்கும் இந்தியாவின் கை இருந்திருக்குமோ? எல்லாம் அந்த நம்பியாருக்கெ வெளிச்சம்.

இந்த போர் குற்றவாளி இலங்கை மட்டுமல்ல எந்த நாட்டிற்கும் செல்லாதவாறு செய்ய வேண்டிய பொறுப்பு உலகத்தமிழர் கையிலேயே உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரச்னைகள் தீரும் வரை இலங்கை செல்ல மன்மோகன் சிங் மறுப்பு

அப்ப நீ கடைசியாய் அங்கை போகேக்கை கொஞ்ச ஆமியளையும் கொண்டுபோய் இறக்கினது என்னத்துக்கு?

பிழையான தலைப்பு.

பிரச்னைகள் தீரும் வரை இலங்கை செல்ல மன்மோகன் சிங் மறுப்பு

மே 2009 இரசாயனக்குண்டுகளை அனுப்பி வைத்து பிரசனைகளை தீர்த்து தள்ளியிருந்தார் தனே. பிறகு இப்ப என்ன....?

சரியான தலைப்பு

இரசாயனப்புகை அடங்கி த் தீரும் வரை இலங்கை செல்ல மன்மோகன் சிங் மறுப்பு

இந்த சிங் ஒரு போர் குற்றவாளி,இந்தியாவே சமாதானம் முறிவடைய காரணமாக இருந்தது என நோர்வே சொல்கிறது இறுதிவரை புலிகள் சரணடைவதைக்கூட விரும்பவில்லை,சரணடைந்த அரசியல் துறை புலிகள் கொல்லப்பட்டதற்கும் இந்தியாவின் கை இருந்திருக்குமோ? எல்லாம் அந்த நம்பியாருக்கெ வெளிச்சம்.

இந்த போர் குற்றவாளி இலங்கை மட்டுமல்ல எந்த நாட்டிற்கும் செல்லாதவாறு செய்ய வேண்டிய பொறுப்பு உலகத்தமிழர் கையிலேயே உள்ளது.

நன்றி வசி.

இதற்கான எமது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

இலட்சக் கணக்கான தமிழ் மக்களைக் கொன்றவர்கள், ராஜீவ்காந்திக்கு அடிபோட்டவர்கள். தன்னைக் கொன்றாலும் கொன்றுவிடுவர்கள் என்ற பயமே தவிர. வேறொன்றும் இல்லை.

சிங்களவன், தனக்கும் கூப்பிட்டு... வைச்சு அடிப்பான் எண்டு, சிங்குக்கு வடிவாய்த் தெரியும்.

அடுத்த தேர்தலில், ராகுல் காந்தி பிரதமராய் வந்து, ஸ்ரீலங்காவுக்கு போய் பிடரியில் அடி வாங்கட்டும் எண்டு, நைசாய்.... காய் வெட்டிப் போட்டார்.

Edited by தமிழ் சிறி

ஆ..........! வடை போச்சே..........

Edited by Sooravali

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.