Jump to content

அவன் அழைத்த இளையோரே!!! எங்கே நீங்கள்???


Recommended Posts

முகம் தெரியாத தியாகங்களின் முகவரிகளை,

முகமூடிகள் மட்டுமே தேடும் நிர்ப்பந்தம்!

காலத்தின் கண்ணாடிகளில் விம்பங்களாய் விழுந்த

கோலங்கள் .... எம் காலடிகளில் மிதிபடும் பரிதாபம்!!

மாறுவேடம் பூண்டுதான்... மாவீரரையும் பூசிப்போமா? - இல்லை

மாறிமாறி நின்றுதான்... அவர்களை நிந்திப்போமா?

காறியுமிழ்ந்த எச்சங்களில்... அந்தக் கல்லறைகளின் மிச்சங்கள்!

தேறிநிற்கும் தமிழர்க்கு... அவர்கள் தேவையில்லைப் போல??

நெஞ்சு நிமிர்த்தி நடக்கும் தமிழர்களே!?

பிச்சைக்காரர்கள்தான் நாங்கள்.... புரிகின்றதா?

பித்துப் பிடித்தா.... தம்மேனி பிய்த்தெறிந்தார்கள்??

யாருக்காக? எதற்காக? .... தெரியாதா உங்களுக்கு???

இரவல் வீரத்தில்... இழக்காரம் கதைக்கும் உங்கள் நாவில்,

அவர்கள் கழுத்து நஞ்சைவிட கொடிய விஷம்!!!

எமக்காக மாண்டவர்களை மீண்டும் மீண்டும் சாகடித்தபடி,

மார்தட்டும்... வீரப் பரம்பரை நாம் மட்டுந்தான்!!!

மனச்சாட்சி என்றொன்றின்... அவசியத் தேவை எமக்குத்தான்!

சாட்சிகளாய் நிற்கும் அவலங்கள்.... புலமேறிவந்து,

நிரந்தர வதிவிட , குடியென நிமிர்ந்து நிற்கப் பண்ணின்,

அது போதும் எங்களுக்கு...!!! மனச்சாட்சியெல்லாம் எமக்கெதற்கு???

அப்படித்தானே????????

இங்கு நாம் சுவாசிக்கும் குளிர்காற்றுக்கூட,

எங்களைச் சுட்டெரிக்கிறதாய் உணரும் உள்ளங்களில்...

எரியும் நெருப்புக்களை அணையவிடாதீர்கள்! - ஏனெனில்,

எம் மாவீரர்க்கு ஏற்றும் உண்மையான அகல்விளக்கு அதுவாய்த்தான் இருக்கும்!!!

உள்ளெரியும் நெருப்பின் சுவாலைகள்தான்... பகை விரட்டி,

கலங்கரை விளக்கின் வெளிச்சமாய் நின்றெரிந்து...

விடிகின்ற எம் தேசமதில்... நாளை நம்மைக் கரை சேர்க்கும்! - அதுவரை

அந்தக் கல்லறைகள் ... எமக்காகக் காத்திருக்கும்!!!

எங்களை நம்பித்தான் இறுதிவரை ஈடேறின தியாகங்கள்!

மற்றவர்களின் தியாகங்களில் குளிர்காய வேண்டாமே!!

எங்களுக்காய் களமாடி நெடுந்துயிலும் கல்லறை வீரரை,

பிரியாது நின்றேனும்.... உணர்வோடு நினைப்போமே!!!

மண்டபங்கள் எடுத்து... மடப்பள்ளி வைத்து,

வீண் வாதம் செய்ய வேண்டாம்- உங்கள் மனந்தன்னுள்,

மனமார நினைத்து .. .கையில் ஒரு தீவர்த்தி போதுமே!

அவன் அழைத்த இளையோரே!!! எங்கே நீங்கள்???

அவன் அழைத்த இளையோரே!!! எங்கே நீங்கள்???

**********************************************************

இன்றுவரை, தமிழீழ விடுதலைக்கென தங்களின் உயிர்களை அர்ப்பணித்த அத்தனை மாவீரர்கள் மற்றும் அனைத்து உறவுகளையும் நினைவில் நிறுத்தி..... அவர்களின் தியாகங்களை, அர்ப்பணிப்புக்களைக் கருத்தில் கொண்டு .... அவர்களின் இலட்சியங்களை ஈடேற்ற ஒற்றுமையுடன் பயணிப்போம்...... இறுதிவரை!!!

http://www.youtube.com/watch?v=UakxpJNJz38&feature=related

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்துக்கேற்ப உணர வைக்கும் பதிவு.............நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நாம் சுவாசிக்கும் குளிர்காற்றுக்கூட,

எங்களைச் சுட்டெரிக்கிறதாய் உணரும் உள்ளங்களில்...

எரியும் நெருப்புக்களை அணையவிடாதீர்கள்! - ஏனெனில்,

எம் மாவீரர்க்கு ஏற்றும்  உண்மையான அகல்விளக்கு அதுவாய்த்தான் இருக்கும்

கவிதை தந்த வரிகள் நிச்சயம் அவர்களின் மனச்சாட்சியை கேள்வி கேட்கும் நன்றி கவிதை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை அண்ணா, நீங்கள் எதை எழுதினாலும் கவிதையாக பாய்கிறது. ஒரு பச்சை அண்ணா.

பல இளையோரை நமது மூத்த தமிழீழ ஆர்வலர்கள் கையாள தெரியாமல் அவர்கள் ஓடிய காலம் உண்டு.

நானும் எங்கே என்று தேடியபோது யாழில் அது கிடைத்தது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=94544

Link to comment
Share on other sites

காலத்துக்கேற்ப உணர வைக்கும் பதிவு.............நன்றி

நன்றி நிலாமதி அக்கா! காலத்துக்கு ஏற்ப நிலைமைகளைப் புரிந்து நடக்க வேண்டிய நிலைமைகளில் நாங்கள் இப்போது இருக்கின்றோம்!

எமக்காக தமது வாழ்வினை அர்ப்பணித்தவர்களின் நினைவுகளை சுமப்பது கூட எங்களுக்கு பெரும் சுமையாகத் தெரிகின்றதே........... மனதினை உறுத்துகின்றது நிதமும்!

Link to comment
Share on other sites

கவிதை தந்த வரிகள் நிச்சயம் அவர்களின் மனச்சாட்சியை கேள்வி கேட்கும் நன்றி கவிதை

மனச்சாட்சிகளின் கதவுகளை தட்டித் திறந்தால் அது நன்றே!

நன்றி வாத்தியார்! :)

Link to comment
Share on other sites

கவிதை அண்ணா, நீங்கள் எதை எழுதினாலும் கவிதையாக பாய்கிறது. ஒரு பச்சை அண்ணா.

பல இளையோரை நமது மூத்த தமிழீழ ஆர்வலர்கள் கையாள தெரியாமல் அவர்கள் ஓடிய காலம் உண்டு.

நானும் எங்கே என்று தேடியபோது யாழில் அது கிடைத்தது.

http://www.yarl.com/...showtopic=94544

இளையோர்களின் ஆதரவினையும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளையும் ... புலம்பெயர் தேசங்களில் பெற்றுக்கொள்வதை தவறவிட்டுவிட்டோம்! இனிமேலும் அவ்வாறான தவறுகளை விடாமல்... அவர்களின் கைகளில் நெறிமுறையான செயற்பாடுகள் ஒப்படைக்கப்படவேண்டும்!

அதற்குத் தயாரான நிலையில் தாங்கள் இருக்கின்றார்கள் என.....கடந்த சில வருடங்களாக, இளையோர் தமது செயற்பாடுகளின் மூலம் நிரூபித்துள்ளார்கள்!

நன்றி சகோதரா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தின் கண்ணாடிகளில் விம்பங்களாய் விழுந்த

கோலங்கள் .... எம் காலடிகளில் மிதிபடும் பரிதாபம்!!

நெஞ்சு நிமிர்த்தி நடக்கும் தமிழர்களே!?

பிச்சைக்காரர்கள்தான் நாங்கள்.... புரிகின்றதா?

எமக்காக மாண்டவர்களை மீண்டும் மீண்டும் சாகடித்தபடி,

மார்தட்டும்... வீரப் பரம்பரை நாம் மட்டுந்தான்!!!

மண்டபங்கள் எடுத்து... மடப்பள்ளி வைத்து,

வீண் வாதம் செய்ய வேண்டாம்- உங்கள் மனந்தன்னுள்,

மனமார நினைத்து .. .கையில் ஒரு தீவர்த்தி போதுமே!

கவிதையல்ல, இது!

காலத்தின் ஒளித் தெறிப்பு!

ஆதங்கங்களை, ஏக்கங்களை அழகாக வடித்திருக்கிண்றீர்கள், கவிதை!

ஒரே ஒரு பச்சை தான் மிச்சம் இருந்தது! அதுவே உங்களுக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுவரை, தமிழீழ விடுதலைக்கென தங்களின் உயிர்களை அர்ப்பணித்த அத்தனை மாவீரர்கள் மற்றும் அனைத்து உறவுகளையும் நினைவில் நிறுத்தி..... அவர்களின் தியாகங்களை, அர்ப்பணிப்புக்களைக் கருத்தில் கொண்டு .... அவர்களின் இலட்சியங்களை ஈடேற்ற ஒற்றுமையுடன் பயணிப்போம்...... இறுதிவரை!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவன் அழைத்த இளையோர் இங்கே. இவர்கள் வெளிநாட்டில் பரிந்து வளர்ந்த வெள்ளை தமிழர்கள்.

இவர்களுக்கு நாம் உதவத்தேவையில்லை. பட்டு துணி போர்க்க தேவை இல்லை. குட் ஜாப் என்ற ஊக்க வார்த்தைகளே அவர்களுக்கு போதும்.

ஸ்ரீ லங்காவின் கிழடு கட்டை வாய் வெடியங்களை போட்டு தாக்குகிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • The Top 25 Safest Airlines For 2024   Air New Zealand Qantas Virgin Australia Etihad Airways Qatar Airways Emirates All Nippon Airways Finnair Cathay Pacific Airways Alaska Airlines SAS Korean Air Singapore Airlines EVA Air British Airways Turkish Airlines TAP Air Portugal Lufthansa/Swiss Group KLM Japan Airlines Hawaiian Airlines American Airlines Air France Air Canada Group United Airlines   Jetstar has been named the world's safest low-cost carrier. GETTY The 20 Safest Low-Cost Airlines For 2024   Jetstar easyJet Ryanair Wizz Norwegian Frontier Vueling Vietjet Southwest Volaris flydubai AirAsia Group Cebu Pacific Sun Country Spirit Westjet JetBlue Air Arabia Indigo Eurowings   இனியும்  ஏர் லங்காவில் பயணித்து  உங்கள் இனிய உயிர்களை பாதுகாப்பற்று ஆக்க  வேண்டாம். https://www.forbes.com/sites/laurabegleybloom/2024/01/03/ranked-the-25-safest-airlines-in-the-world-according-to-airlineratingscom/?sh=fe651ac4c03c ஸ்டார்ட் மியூசிக் .........😀   
    • பேச்சுக்களுக்கெதிராகப் போராடிய யாழ்ப்பாண மக்களும், அவர்களின் உணர்வுகளை புறக்கணித்த இந்தியாவும்   போராளிகளின் தலைவர்கள் நிபந்தனைகளின்றி பேச்சுவார்த்தைகளுக்குச் செல்லப்போகிறார்கள் என்கிற செய்தி பர‌வியபோது யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள் வெடித்தன. குறிப்பாக, போராளிகளை அழுத்தம் கொடுத்து, திம்புவிற்கு இழுத்துச் சென்றமைக்காக இந்தியாவின் மீது மக்களின் கோபம் திரும்பியிருந்தது. ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், வீதி நாடகங்கள் என்பன இளைஞர்களால் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டன. யாழ்ப்பாணத்தின் சுவர்களிலும், வீதிகளுக்குக் குறுக்கே தொங்கவிடப்பட்ட பதாதைகளிலும் கூறப்பட்ட செய்தி ஒன்றுதான், "எங்களுக்குத் தமிழீழமே வேண்டும்". இந்த ஒருமித்த மக்களின் மனவெழுச்சி அப்பிரதேசமெங்கிலும் பரவிக் கிடந்தது.  ஜெயவர்த்தனவின் இராணுவத்தினர் புரிந்துவரும் படுகொலைகளுக்கெதிரான கண்டனங்கள், இந்தியா தனது நலன்களைக் காத்துக்கொள்ள ஈழத்தமிழர் மீது பலவந்தமாகத் திணித்துவரும் அழுத்தங்கள் என்பனவும் இப்போராட்டங்களில் தமிழ் இளைஞர்களால் வெளிப்படுத்தப்பட்டது. பொதுக்கூட்டங்களிலும், மேடை நாடகங்களிலும் இரு முக்கிய செய்திகளை பேச்சாளர்கள் முன்வைத்தனர். முதலாவது தமிழர்கள் ஜெயவர்த்தனவை ஒருபோதும் நம்பத் தயாரில்லை என்பது. இரண்டாவது, ஜெயவர்த்தனவுடன் சமரசம் செய்ய முன்வந்திருந்த தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியினரைத் தாம் முற்றாக நிராகரிக்கிறோம் என்பது.  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும், பாடசாலை மாணவர்களும் ஆர்ப்பாட்டப் பேரணிகளை ஒழுங்குசெய்வதில் முன்னின்றார்கள். போராளிகளின் தலைவர்கள் தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாளான ஆடி 3 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகியிருந்தன. அன்றுமட்டுமே யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல பேரணிகள் ஒழுங்குசெய்யப்பட்டன. தெல்லிப்பழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அமிர்தலிங்கத்தின் உருவ பொம்மை ஒன்றினை வீதிகளில் இழுத்துவந்தனர். ஒப்பாரி வைப்பதுபோல பாசாங்கு செய்த இன்னும் சில இளைஞர்கள் அமிர்தலிங்கத்தின் உருவப்பொம்மையினைப் பார்த்து, "ஜெயவர்த்தனவுடன் சமரசம் செய்துகொண்டதன் மூலம் அரசியல்த் தற்கொலையினை நீ செய்திருக்கிறாய், முட்டாளே, அது உனக்குத் தெரியாமல் போனதெப்படி?" என்று கேட்டார்கள்.   யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் "மாயமான்" எனும் பெயரில் மேடை நாடகம் ஒன்றினை அரங்கேற்றினார்கள். இராமாயணத்தில் வரும் காட்சியொன்றில், இராமனினதும், இலட்சுமணனினதும்  கவனத்தைத் திசைதிருப்பி, சீதையைக் கவர்ந்துசெல்ல இராவணன் மாய மானின் உருவத்தில் வந்ததற்கு ஒப்ப, தமிழர்களை தமக்குக் கீழ் நிரந்தரமாகவே அடிமைப்படுத்திவிட ஜெயார் போடும் மாயமான் வேடமே இந்தப் பேச்சுவார்த்தைகள் என்று அந்தநாடகம் கூறியது. ஜெயார் மறைத்துவைத்திருக்கும் வலையில் தமிழர்களை வீழ்த்துவதற்கு இந்தியாவே அழுத்தம் கொடுக்கிறது என்கிற குற்றச்சாட்டு இந்தியாவை நோக்கி முன்வைக்கப்பட்டது. ஜெயார் விரித்து வைத்திருக்கும் வலை நோக்கி இந்தியா முன்னாலே செல்ல, ஈழத்தேசிய முன்னணியின் நான்கு போராளித் தலைவர்களும், வெளியில் இருந்த புளொட் அமைப்பும் இந்தியாவின் சொல்கேட்டு ஜெயாரின் வலையில் தம்மையறியாமலேயே வீழ்வதற்காகப் பிந்தொடர்கின்றன என்று அவர்கள் கூறினார்கள். இந்தியா போராளிகளைப் பார்த்து  நடவுங்கள் என்று சொல்ல, நடப்பதும், நில்லுங்கள் என்று சொல்ல நிற்பதும், பாயுங்கள் என்று சொல்லப் பாய்வதும் நடக்கிறது  என்று அவர்கள் இந்தியாவை விமர்சித்தார்கள். இந்தியாவின் கட்டுப்பாட்டிலிருந்து போராளிகள் வெளியே வர எத்தனித்த ஒவ்வொரு கணமும் இந்தியா அவர்களை மிரட்டி பலவந்தமாக மீண்டும் தமது நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவந்தது. இந்தச் சாராம்சத்தினை முன்வைத்து யாழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய 35 நிமிட நகைச்சுவை கலந்த மேடை நாடகம் யாழ்க்குடாநாட்டில் ஒருவாரத்தில் மட்டுமே 125 தடவைகள் மேடையேற்றப்பட்டது.  பேச்சுவார்த்தையின் முதலாவது நாளான 1985, ஆடி 8 ஆம் திகதி முழு யாழ்க்குடாநாடுமே பொது வேலை நிறுத்தத்தினால் முற்றாக ஸ்த்தம்பித்துப் போனது. பலகலைக்கழக மாணவர்களும், பாடசாலை மாணவர்களும் வகுப்புக்களைப் பகிஸ்க்கரிப்புச் செய்தனர். கடைகள் இழுத்து மூடப்பட்டதோடு, வீதிகளும் வெறிச்சோடிப்போக, மக்கள் வீடுகளுக்குள் முடங்கிப் போனார்கள். வீதிகளெங்கும் பதாதைகள் தொங்கவிடப்பட்டன. "எமக்கு ஈழமே வேண்டும்", " யுத்தநிறுத்தத்தை எதிர்க்கிறோம்", "எமக்குப் பேச்சுவார்த்தை வேண்டாம்", "இந்தியாவே, புலிகளை திம்புவிற்கு ஏன் அழைத்துச் சென்றாய், அவர்களைப் புல்லை உண்ணவைக்கவா?" என்று அவை பேசின.  யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த மக்கள் எழுச்சிப் போராட்டங்களை தமது நிலைப்பாட்டினை இந்தியாவுக்குத் தெளிவாக உணரவைக்கும் சந்தர்ப்பமாகப் பாவிக்க நினைத்தனர் போராளிகள். "பாருங்கள், நீங்கள எங்களை ஜெயவர்த்தனவுடன் பேசவைக்க பலவந்தப்படுத்தி அழைத்து வந்திருக்கிறீர்கள். ஆனால், எமது மக்களோ அதற்கு முற்றான எதிர்ப்பினைக் காட்டி வருகிறார்கள்" என்று இந்திய அதிகாரிகளிடம் அவர்கள் கூறினார்கள். ஆனால், போராளிகளின் கருத்தினைக் கேட்கும் நிலையில் இந்திய அதிகாரிகள் இருக்கவில்லை. அவர்களைப்பொறுத்தவரை, தமிழ் மக்களின் உணர்வுகளைவிட பேச்சுக்களை எப்படியாவது நடத்திவிடவேண்டும் என்பது முக்கியமானதாகத் தெரிந்தது. இந்தியாவை இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் வல்லரசாகக் காட்டுவதற்கு இப்பேச்சுவார்த்தைகளை எப்படியாவது பாவித்துவிட கங்கணம் கட்டியிருந்த இந்திய அதிகாரிகள், தமிழர்களின் உணர்வுகளை முற்றாகப் புறக்கணித்திருந்தனர்.
    • நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் காய்ச்சல் ஒரு வைரஸ் என்பதால் மக்கள் குழுவாக கூடுவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குழுவாக இருக்கும் இடங்களில் முகக்கவசங்களை அணிந்து கொள்ளுமாறு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் பிரதம வைத்திய அதிகாரி ஹேமா வீரகோன் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வைரஸ் சுவாசக் குழாயால் ஏற்படுவதனால் இருமல், சளி, காய்ச்சல் மற்றும் உடல்வலி ஆகியவை முக்கிய அறிகுறிகள் என அவர் கூறினார். சுவாச நோய்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களில் வைரஸ் நிலைமை தணிந்தாலும், சில நோயாளிகளுக்கு ஓரிரு மாதங்களுக்கு இருமல் மற்றும் சளி சுவாச நோய்கள் இருப்பதாகவும் வைத்திய அதிகாரி சுட்டிக்காட்டினார்.   இந்த வைரஸும் இன்புளுவென்சாவின் மாறுபாடு என்பதால், நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து முடிந்தவரை விலகி இருப்பதன் மூலமும், குழுவாகவும் கூடும் இடங்களில் முகக் கவசம் அணிவதும் நோய் வராமல் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் மாத்திரமன்றி நாடு முழுவதிலும் இந்த காய்ச்சல் வைரஸ் என்பதால் வேகமாகப் பரவி வரும் நிலையில், சிகிச்சையின்றி குணமாகும் என்று நினைக்காமல் சிகிச்சை பெறுமாறும் கடுமையான சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மருத்துவ ஆலோசனை சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், சமூகத்தில் பரவல் அதிகரித்து வருகிறது என்று மருத்துவர் வலியுறுத்துகிறார்.   மேலும், குறிப்பாக மற்ற நோய்களுக்கு, காய்ச்சல், சளி போன்றவை ஏற்படும் என்பதால், மருத்துவ ஆலோசனைப்படி சிகிச்சை பெற வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/new-influenza-virus-in-sri-lanka-1714703659
    • ரஷ்ய - உக்ரைன் போருக்கு சென்ற இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் ரஷ்ய -  உக்ரைன்(Russia - Ukraine) போருக்கு சென்ற பல இலங்கைப் படையினர் தற்பொழுது உயிருடன் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வெலேபொட(Gamini Waleboda ) தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்(2) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ரஷ்ய வாடகை படையில் இணைந்து கொண்ட 40 இலங்கை படையினரின் அதிக எண்ணிக்கையிலானவர்கள் உயிரிழந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.   ரஷ்ய - உக்ரைன் போர் இராணுவம் மற்றும் பொலிஸ் என்பனவற்றிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டவர்கள் இவ்வாறு ரஷ்ய உக்ரைன் போரில் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இருபது லட்சம் ரூபா மாதச் சம்பளம் வழங்குவதாக கூறி குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்திற்கு லஞ்சம் வழங்கி இவ்வாறு இலங்கைப் படையினர் ரஷ்யா, உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.   இராணுவ பின்வரிசை சேவைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட படையினர் முன்னரங்கப் போரில் ஈடுபடுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் வெக்னர் கூலிப் படைக்கு விற்பனை செய்யப்பட்ட இலங்கையின் முன்னாள் படை அதிகாரி ஒருவரின் குரல் பதிவு கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அங்கிருந்து தப்பியவர்கள் ரஷ்யாவிற்கு செல்ல வேண்டாம் என கோருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவிற்கு வேலைக்காக அனுப்பி வைப்பதாக கூறினால் அந்த மோசடியில் சிக்க வேண்டாம் என மக்களிடம் கோருவதாக காமினி வெலேபொட தெரிவித்துள்ளார்.  https://tamilwin.com/article/sl-forces-who-joined-ukrain-war-many-died-1714640425?itm_source=parsely-api
    • கொரோனா ஊசி போட்டவர்கள் எல்லாம் வாழ்க்கை முழுக்க சாவை நிமிசத்துக்கு நிமிசம் நினைச்சு வாழவேண்டியது தான். கொரோனா ஊசி போடுங்கோ என வக்காளத்து வாங்கியவர்கள் இனி என்ன பதில் சொல்லப்போகின்றார்களோ என்பது கொரோனா ஊசியை விட பயங்கரமானதாய் இருக்கும் 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.