Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் மிக உயரமான சிவனின் சிலை

Featured Replies

இலங்கையில் மிக உயரமான சிவனின் சிலை

5.jpg

6.jpg

1.jpg

இலங்கையில் திருஞான சம்பந்தரின் பாடல் பெற்ற திருத்தலம் என்ற பெருமையும் தட்சிண கைலாயம் என்ற நாமத்துடன் விளங்கும் திருகோணமலை திருக்கோணேஸ்வரத்தின் பெருமையை இன்னும் ஒரு படி ஓங்கச்செய்யும் வகையில் அண்மையில் 33 அடி உயரமான சிவபெருமானின் தியான நிலை சிலை திறப்பு வைபவம் இடம்பெற்றது. இம்மாதம் 15 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இச்சிலை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இலங்கையைப்பொறுத்தவரை மிக உயரமான சிவனின் சிலை இதுவாகும். பக்தர்கள் மனதை ஒரு முகப்படுத்தும் ஒரு சக்தி மிக்க ஞான நிலையை சிவனின் முகம் 7.jpgகொண்டிருக்கின்றது என்பது சிலையை வடித்த சிற்பியின் கைவண்ணமா அல்லது கோணேச்சர பெருமானின் சக்தியா என்பது தெரியவில்லை. சிலையை உற்றுப்பார்த்தால் இது விளங்கும். இந்த சிலையை உருவாக்கியவர் தமிழகம் காரைக்காலைச்சேர்ந்த சிற்பாசிரியர் கலியபெருமான் விஜயன் என்பவராவார். சிவனின் சிலை மட்டுமல்லாது இராவணன் வெட்டு எனும் கோயிலின் வாயிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள இடத்தில் தியான மண்டபமும் அன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. இதில் கடலில் கண்டெடுக்கப்பட்ட ஒரு லிங்கம் ஏனைய விக்ரகங்களுடன் கிடைத்த லஷ்மி சமேத நாராயண விக்ரமும் வைக்கப்பட்டுள்ளன. சிலை திறக்கப்பட்ட அன்று பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருகோணமலை நகரத்திலிருந்து பார்த்தாலும் சிவனின் அந்த கம்பீரமும் சாந்தமும் கலந்த முகம் தெரிகிறது. பக்தர்களுக்காக அங்கு எடுக்கப்பட்ட படங்களைத்தருகிறோம்.

http://sivathandavam.blogspot.com/2011/12/blog-post.html

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்வது தவறானால் பொறுத்துக் கொள்ளும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்!

இந்தச் சிலையின் முகத்தில், தியானம் தரும் அமைதியை, என்னால் காணமுடியவில்லை!

ஏனோ தெரியாது! இந்தச் சிலை எனக்குப் புத்தரையே நினைவு படுத்துகின்றது!

இணைப்புக்கு நன்றிகள், நீலப்பறவை!!!

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்வது தவறானால் பொறுத்துக் கொள்ளும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்!

இந்தச் சிலையின் முகத்தில், தியானம் தரும் அமைதியை, என்னால் காணமுடியவில்லை!

ஏனோ தெரியாது! இந்தச் சிலை எனக்குப் புத்தரையே நினைவு படுத்துகின்றது!

இணைப்புக்கு நன்றிகள், நீலப்பறவை!!!

சத்தியமாக எனது மனதிலும்.... இந்தச்சிலையைப் பார்தவுடன் புத்தரின் ஞாபகமே... வந்தது, புங்கையூரான்.

பிறகு... புத்தர் திருநீறு பூசுவதில்லை என்பதால்.... சிவன் என்று நம்பிவிட்டேன்.

ஆரோ... இப்ப தான், சிலை செய்ய... பழகுறாங்கள் போலை கிடக்குது.

பாவம்.. அதுக்கு, எங்கடை சிவபெருமான் தான்.. அம்பிட்டுப் போனார். :lol::icon_idea::D

  • கருத்துக்கள உறவுகள்

சிலையின் முகத்தில் சாந்தம், கருணை இல்லையே...? ஒருவேளை சிங்களன் கண்/கை பட்டதால் மிருகவிழியாயிற்றோ?

புங்கையூரான் எழுதியிருப்பதுதான் என் எண்ணமும். விபூதியை நீக்கி தலைமுடியைக் கழைந்து பாருங்கள். எதிர்காலம் புத்தனாக்கும் சதித்திட்டத்துடன் அமைக்கப்பட்டிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான் எழுதியிருப்பதுதான் என் எண்ணமும். விபூதியை நீக்கி தலைமுடியைக் கழைந்து பாருங்கள். எதிர்காலம் புத்தனாக்கும் சதித்திட்டத்துடன் அமைக்கப்பட்டிருக்கலாம்.

உண்மைதான் செம்பகன்,

கதிர்காமத்திலுள்ள முருகன் எப்படி சிங்களவனாக மாறி, வள்ளி சிங்களத்தி ஆனாவோ....

அது மாதிரி திருக்கேதீஸ்வரத்துக்கும் நடக்கப் போகுது.

ஏற்கனவே... திருஞான சம்பந்தரால் பாடப் பெற்ற திருத்தலமாம் திருக்கோணேஸ்வரக் கோவிலை, மறைக்கும் படியாக பெரிய புத்தர் சிலையை கட்டிவிட்டான் சிங்களவன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெருமானார் கோபமாக தெரிகிறார். நல்லது. அவருக்கும் ஸ்ரீ லங்கா காரரை பார்க்க கோபம் வரும் தானே.

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் மிகவும் உயரமான சிவனின் சிலை!

நேபாளம் நகரில் உள்ளது!

12042010643.jpg

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் இத்தனை சிவா பக்தர்கள் இருந்தும் வெறும் 33 அடி சிலையே கடவுளுக்கு வைத்துள்ளோம் என்று என்னும் போது மிகவும் வெட்கமாக உள்ளது.

புலத்தில் உள்ள ஓவரு இந்துவும் வெறும் 500 அமெரிக்க டாலர் கொடுத்தால் உலகத்திலேயே பெரிய சிலையை வைக்கும் நிலையில் தமிழனை சிவன் வைத்தும் வெறும் 33 அடி சிலை என்பது கடவுளின் பாவத்தை தேடி கொடுக்கும் செயலாகவே நான் பார்க்கிறேன்.

போரால் கணவனை இழந்த எத்தனையோ பெண்கள் தாலிக்கொடியை போடா முடியாத நிலையில் இந்த சிவனின் உண்டியலில் போட்டு நாமும் இங்கிருந்து காசு அனுப்பி மிக பிரமாண்டமான சிலையை திறக்க வேண்டும் என்பதே எனது ஆசை.

சிலையின் முகத்தில் சாந்தம், கருணை இல்லையே...? ஒருவேளை சிங்களன் கண்/கை பட்டதால் மிருகவிழியாயிற்றோ?

இந்த சிலையை உருவாக்கியவர் தமிழகம் காரைக்காலைச்சேர்ந்த சிற்பாசிரியர் கலியபெருமான் விஜயன்!

தவம் கலைந்த சிவனின் கோபம் தான் முகத்தில் தெரிவது! இந்த கோபத்திற்கு பல காரணங்கள்! அனால் இங்கு வந்த கருத்துகள் அறிவிலி தனமாக இருப்பதுதான் கவலையாக உள்ளது. ஆத்திரம் கொண்டவன் கண்கள் இருண்ட கண்கள் மட்டுமல்ல புத்தியும் பேதலித்துவிடும்!

போரால் கணவனை இழந்த எத்தனையோ பெண்கள் தாலிக்கொடியை போடா முடியாத  நிலையில் இந்த சிவனின் உண்டியலில் போட்டு நாமும் இங்கிருந்து காசு அனுப்பி மிக பிரமாண்டமான சிலையை திறக்க வேண்டும் என்பதே எனது ஆசை.

இதை வாசித்து விட்டு அழுவதா சிரிப்பதா எண்டு தெரியவில்லை,,,,WTF!
  • கருத்துக்கள உறவுகள்

இந்த சிலையை உருவாக்கியவர் தமிழகம் காரைக்காலைச்சேர்ந்த சிற்பாசிரியர் கலியபெருமான் விஜயன்!

தவம் கலைந்த சிவனின் கோபம் தான் முகத்தில் தெரிவது! இந்த கோபத்திற்கு பல காரணங்கள்! அனால் இங்கு வந்த கருத்துகள் அறிவிலி தனமாக இருப்பதுதான் கவலையாக உள்ளது. ஆத்திரம் கொண்டவன் கண்கள் இருண்ட கண்கள் மட்டுமல்ல புத்தியும் பேதலித்துவிடும்!

சிவன் கோபமடையும் போது,அவனைச் சிவன் என்று அழைப்பதில்லை! அவன் உருத்திரனாகின்றான்!

சிவன் கோபமடையக் காரணம், இந்தியாவா அல்லது கருணாநிதியா?

நல்லூரில் சங்கிலியன் சிலைக்கு நடந்த 'சித்திரவதை' இங்கேயும் நடந்திருப்பதை ஏன் உங்களால் பார்க்க முடியவில்லை?

புத்தர் 'நாகதீப' வந்தபோது, உடுப்பில்லாமல் கடலில் குளித்ததைப் பலர் அவதானித்திருக்கின்றார்கள்!

ஏன் அங்குள்ள புத்தர் சிலையை நிர்வாணமாக, வைக்கக் கூடாது?

என்னைக் கேட்டால், இந்தச் 'சிற்பி' தான் சங்கிலியன் சிலையையும் வடித்திருப்பார் என்று கூற முடியும்!

வெறும் மரமண்டையான எனக்கே தெரிகின்றன, பல ஒற்றுமைகள்!

நோக்க குழையும் விருந்து என்று வள்ளுவ பெருந்தகை கூறியிருந்தாலும், புது வீட்டுக்கு வந்த விருந்து, சிவன் கண் சினந்தது ராஜவன்னியன் சந்தேகபடுமாப்போல் சிங்களவன் கண்பட்டதாலன்றி சிற்பாசிரியர் "விஜயன்" கைபட்டதால் போலுள்ளது.

அதுசரி இந்த பேராசியர் விஜயன் இந்து பத்திரிகையில் தொழில் செய்வதில்லையா? இன்னொரு லங்காரத்தினா பார்த்து போட்டு கொடுத்து விடலாமே.

எப்பவாயினும் தமிழர் சுதந்திரமாக சிவனுக்கு நல்லதொரு சிலை வைப்பதென்றால் இந்த சிலையை யார் தான் கை கூசாமல் உடைக்க போகிறார்கள். அணைக்கிற கைதான் அடிக்கும் என்று அதற்கும் கீபீர்தான் சிவனிடம் வரவேண்டி வரும்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.