Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூடுபனி

Featured Replies

நெடுநாளா பார்கவேண்டும், ஆனால் நல்ல கொப்பி கிடைத்தால் மட்டுமே பார்ப்பது என்றிருந்து, இன்று தான் மூடுபனி படம் பார்க்க முடிந்தது—லீவில் நிற்பதால் பகலில் பார்க்க முடிந்தது. நாங்க பாராட்டித்தான் பாலுமகேகந்திராவின் திறமை வெளிப்படவேண்டிய நிலை இல்லை, இருந்தும் மனதில் பட்ட சிலதைப் பகிர இந்தச் சிறிய பதிவு.

மற்றவர்களிற்கு என்னமாதிரியோ தெரியாது, ஆனால் எனக்கு பிரியா படப்பாடல்கள் குறிப்பா அக்கரச்சீமை அழகினிலே மற்றும் டார்லிஙடார்லிங் பாடல்களைக் கேட்கும் போது ஏதோ ஒரு நேரக்குடவைக்குள் நுழைந்ததைப் போல, அதுவும் கருமேகம் நிறைந்து பகலில் நன்றாக இருட்டி, சாதுவாகத் தூறல் தொடங்கி ஆனால் இன்னும் மழை பொழியத் தொடங்கு முன்னான ஒரு மழைநாளில் ஊரில் பூத்துக்குலுங்கும் சீமைக்கிளுவை மரத்தின் கீழ் நின்ற ஒரு உணர்வு ஞாபகத்தில் வரும். மூடுபனி படம் முழுதும் அப்பிடி ஒரு உணர்வு எனக்குள்.

படத்தின் கதை இன்றைய தேதிக்குக் கேட்டுப் புளிச்சுப்போன கதை தான் என்ற போதும், கதை சொன்ன விதம், காட்சிகள், நடிகர்களின் திறமை பழைய கதையோடான பழைய படத்தைப் புதுசாப் பாக்கச் செய்தது. என் இனிய பொன்னிலாவே பாடலிற்கான சந்தர்ப்பத்தைப் பத்தியே தனியா ஒரு பதிவு போடலாம்--எத்தினை தரம் பாத்தாலும் கேட்டாலும் அலுக்கவே மறுக்கிற ஒரு பாட்டு, அந்தப் பாடலைச் சார்ந்து Nஷhபாவினதும் பிரதாப்பினதும் நடிப்பு, நான் நினைக்கிறேன் பாலுமகேந்திரா கூட நினைத்திராத அளவிற்கு இவர்கள் இருவரும் அக்காட்சியினைப் புதிய ஆழங்களிற்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். இன்று வரை இளையராஜா இசை அமைத்தார் என நினைத்திருந்தேன், இன்றுதான் கங்கைஅமரன் என்றும் தெரிந்தது. இளையராயா உண்மையிலேய கங்கை அமரனை தமிழ் இசை உலகிடம் இருந்து சற்று அடாத்தா அப்புறப்படுத்திவைத்;திருந்தாரோ என்று எண்ணத்தோன்றுகிறது.

கனடாவில், கோடையில், சில வீ;ட்டுத்தோட்டங்களைப் பார்க்கையில், ஊரில் நிக்கிறோமா என்று தோன்றும். ஊரை அப்பிடியே தோட்டத்தில் பிடித்து வைத்திருப்பார்கள். அதுபோல, பாலு மகேந்திரா மூடுபனி படத்தின் எல்லா இளம் நடிகைகளையும்--குறிப்பா Nஷhபா—யாழ்ப்பாணத்தில் அன்றிருந்த அக்காமாரைப் போலவே உலாவ விட்டிருக்கிறார். படத்தைப் பாத்து எங்கட அக்காமார் இப்பிடி இருந்திச்சினமா அல்லது பாலுமகேந்திரா ஊரைத் தன் நடிகைகளில் பிடித்து வைத்திருந்தாரா என்று தெரியவில்லை—அந்தக்காலத்து அக்காமார் யாராவது யாழ்களத்தில் இருந்தால் தெளிவு படுத்தினால் நல்லாயிருக்கும். ஆனால், படத்தைப் பார்க்கும் போது அன்றைய யாழ்நகரின் காட்சிகள்--சின்னஞ்சிறு சிறுவனாக (முதலாம் வகுப்பாய் இருந்திருக்கலாம்) பார்த்துப் பதிந்து போன காட்சிகள் மீள ஓடி ஒரு நெருடலை உண்டுபண்ணின. படத்தில் காட்சிகளின் பின்னணிகளில் வானொலிகளில் ஓடிக்கொண்டிருந்த பாடல்களும் கூட ஊரில் கேட்ட பாடல்களாகவே அதிகம் இருந்தன. பார்க்கிறவனைப் பொறுத்தது தான் காட்சி என்ற வகையில், பாலுமகேந்திரா இந்தியாவில் தனது கமராவுக்குள்ளால் எப்பிடியோ கொஞ்சம் யாழ்ப்பாணம் கொஞ்சம் கொழும்பென்று பதிவு செய்திருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றியது.

மொத்தத்தில் படம் பாத்து முடிக்கையிலும் உணர்வுகள் மிஞ்சி நிற்கும் ஒரு படமா எனக்குப் பட்டுது. முடிந்துபோன காலத்தை நினைத்த ஒரு ஏக்கமும் நெருடியது.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஏதோ புதுப் படம் விமர்சனம் என்று பார்த்தால் பழைய மூடுபனி விமர்சனம்...நான் இந்தப் படம் பார்க்கவில்லை பார்த்தவர்கள் முக்கியமாக அக்காமார் வந்து கருத்து எழுதுங்கள்...பாலு மகேந்திரா ஈழத்தவர் என்ட‌ படியால் ஊர் நினைப்போடு எடுத்திருப்பாரோ தெரியாது...உங்கள் விமர்சனத்தை பார்த்ததும் பட‌ம் பார்க்க வேண்டும் போல இருக்குது பார்த்தவுட‌ன் என் கருத்தை எழுதுகிறேன்

மூடு பனியை துலக்கியெடுத்துத்தான் மூன்றாம் பிறையாக மின்ன வைத்தவர் பாலுமகேந்திரா என்றுதான் அந்த காலத்தில் நான் வைத்திருந்த கணக்கு. கனகாலம். படங்களை மறந்தாயிற்று. மூன்றம் பிறையில் முதலில் சிறிதேவியும் முடிவில் கமலகாசனும் மூடுபனிக்குள் மாட்டி கொள்கிறார்கள். பாலுமகேந்திராவின் ஒரு பரிசில் பெற்ற படம். சிலுக்குவின் இடங்களைத்தவிர மற்றயவை அப்பழுக்கில்லாத ஆங்கிலபடங்களின் தரம்.

Edited by மல்லையூரான்

நான் இந்தப் படத்தினை கேள்விப்பட்டு ஒரு 16 அல்லது 17 வயதில் பார்த்தேன். பிரதாப் போத்தனின் பாத்திரப் படைப்பும் நடிப்பும் ஒரு மென்குணம் கொண்ட சைக்கோவினை அருமையாக வெளிக்காட்டும். தாயின் எலும்புக்கூட்டை வைத்து இருக்கும் காட்சி இதை எழுதும் போது வந்து போகின்றது

பல வருடங்களுக்கு முன் பார்த்தமையால் கதை சரிவர நினைவில் இல்லை. ஆனால் படத்தின் இறுதியில் கதைப்படியோ அல்லது பின் இணைப்பாகவோ தற்கொலை செய்து கொண்ட ஷோபா அவர்களின் உண்மையான மரண ஊர்வலத்தை, சடங்கை காட்டி இருந்தனர்

பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவு அதுவும் ஊட்டியில் என்றால் சொல்ல தேவையில்லை .

மூடுபனி கிச்கொக்கின் சைக்கோவை தழுவி எடுத்தது இருந்தும் தமிழில் அதை அழகாக எடுத்திருந்தார் ,சில வருடங்களுக்கு முன் வந்த ஜெயராம் ,சரிதா நடித்த ஒரு படம் "மிசறி" என்ற ஒரு அற்புதமான படத்தை தழுவி நாத்திவிட்டார் .

வீடு ,முன்றாம் பிறை ,ஓளங்கள்,கோகிலா பாலு மகேந்திராவின் அற்புத படைப்புக்கள்

திரில்லர் கதையென்றாலும், வசனங்களை குறைத்து, சொற்ப படச் சுருள்களில் வந்த நல்லதொரு சினிமா. சிறிய வயதில் மாரிக்கால இருளில் அவித்த சோளங்குலை சாப்பிட்டுக் கொண்டு படம் பார்த்த ஞாபகம். முழுக் காட்சிகளும் ஞாபகம் இல்லை. அமைதியாக எழுத்து ஒடி முடிய, பானுச்சந்தரும் ஷோபாவும் மோட்டார் சைக்கிளில் பயணிக்க விறுவிறுப்பாக கமரா நகரும் 'பருவ காலங்களின் கனவு' பாடல் அதிரடியாகத் தொடங்கும். 'என் இனிய பொன்னிலாவே' எத்தனை தரம் பார்த்தாலும் அலுக்காத பாடல். சினிமா பார்ப்பது போலில்லாமல், ஒரு சம்பவம் நடக்கையில் நமது காமிராக் கண்களை அதனைச் சுற்றி சுழற்றி பார்ப்பது போல இருக்கும். அந்தளவிற்கு இயற்கையான நடிப்பும் ஒளிப்பதிவும்.

இசை இளையராஜா தான் என நினைக்கிறேன். பாடல்கள் எழுதியது கங்கை அமரனாக இருக்கலாம். வித்தியாசமாக வந்த இந்தத் திரைப் படத்தின் போஸ்டரில் பிரதாப் போத்தனின் முகத்துடன், இளையராஜா, தேவி பிலிம்ஸ் பெயர்களும் வந்தன.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பார்க்கக் கிடைக்கவில்லை.. இந்தப் பதிவைப் பார்த்தபின்னர் தேடிப் பார்க்கவேண்டும் போலுள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் கங்கைஅமரன் என்றும் தெரிந்தது. இளையராயா உண்மையிலேய கங்கை அமரனை தமிழ் இசை உலகிடம் இருந்து சற்று அடாத்தா அப்புறப்படுத்திவைத்;திருந்தாரோ என்று எண்ணத்தோன்றுகிறது.

இன்னுமொருவன்..

படத்தின் இசை இளையராஜாதான்..! :huh: பாடலின் பின்னணி இசைக்கோர்ப்பைக் கூர்ந்து கவனித்தாலே தெரியும்..! :rolleyes:

இன்றும் இந்தப் பாடலில் எந்த எந்த Chords உபயோகிக்கப் பட்டிருக்கிறது என்பதில் இணையத்தளங்களில் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கிறது..! :wub: அப்படி ஒரு சிக்கல் வந்தாலே கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம், அது இளையராஜா பாடல்தான் என்று..! :icon_idea:

இன்று வரை இளையராஜா இசை அமைத்தார் என நினைத்திருந்தேன், இன்றுதான் கங்கைஅமரன் என்றும் தெரிந்தது. இளையராயா உண்மையிலேய கங்கை அமரனை தமிழ் இசை உலகிடம் இருந்து சற்று அடாத்தா அப்புறப்படுத்திவைத்;திருந்தாரோ என்று எண்ணத்தோன்றுகிறது.

வாவ்.......

என்னமா பின்னிபெடலெடுக்குறீங்க இன்னுமொருவன்!

ஆக்சுவலி,, அந்த படத்துக்கு இசை கங்கை அமரன்கூட இல்ல...

திருமுருக கிருபானந்தவாரியார்! அவரின் நூறாவது படம்!! :)

இங்கே கவனியுங்க...............

00.01:09........... நிமிஷத்துல!

மூடுபனி..................

http://www.padangal....f78d8064b.html#

  • தொடங்கியவர்

எழுத்தோட்டத்தை ஏதோ குத்துமதிப்பாகப் பார்த்துவிட்டு இசையமைப்புத் தொடர்பில் முட்டாள்த்தனமான கருத்தினைப் பதிந்திருப்பதை உணருகின்றேன். தப்பிலி உங்கள் சுட்டிக்காட்டலிற்கு நன்றி.

எனது முட்டாள்த்தனமான கருத்தினைக்கூடப் பக்குவமாகப் பொறுமையாக விளக்கிச் சுட்டிக்காட்டியுள்ள இசைக்கலைஞனிற்கு மனதார நன்றிகள்.

Edited by Innumoruvan

எழுத்தோட்டத்தை ஏதோ குத்துமதிப்பாகப் பார்த்துவிட்டு இசையமைப்புத் தொடர்பில் முட்டாள்த்தனமான கருத்தினைப் பதிந்திருப்பதை உணருகின்றேன். தப்பிலி உங்கள் சுட்டிக்காட்டலிற்கு நன்றி.

எனது முட்டாள்த்தனமான கருத்தினைக்கூடப் பக்குவமாகப் பொறுமையாக விளக்கிச் சுட்டிக்காட்டியுள்ள இசைக்கலைஞனிற்கு மனதார நன்றிகள்.

அதென்ன எனக்கு மட்டும் ஒரு தேங்க்ஸ் இல்ல? இன்னுமொருவன்?

கிருபாரியவாருன்னு கிண்டல் பண்ணிட்டேன்னா?

என்ன பண்ண இப்டி பேசிபழகியே லூசு ஆயிட்டேன்!

கோவம் எல்லாம் வேணாம்... சகோதரம்!

நீங்க அழகா ஒரு மேட்டரை பத்தி எழுதும்போது...

ஆஹா எனக்கு இப்டி எழுத வரல்லையேன்னு,,, பொறாமைபடுறவங்கள்ல...

நானு முதலிடம்! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.