Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படைச்சிப்பாய்க்கும், பெண் போராளிக்கும் திருமணம்! - நல்லிணக்கமாம்

Featured Replies

'ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் படைச்சிப்பாய்க்கும், பெண் போராளிக்கும் திருமணம்! - நல்லிணக்கத்தை ஏற்படுத்த இந்த ஏற்பாடாம்!!'

சிறிலங்கா ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் 25வது கஜபா படைப்பிரிவில் பணியாற்றி வரும் படைச்சிப்பாய் ஒருவருக்கும், விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளி ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

கல்கமுவவைச் சேர்ந்த சிறிலங்கா படைச்சிப்பாயான 20 வயதுடைய ஈ.எம்.டி.சந்துருவன் மற்றும் விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளியான 18 வயதுடைய சந்திரசேகரன் சர்மிளா ஆகிய இருவருக்குமே இவ்வாறு கிளிநொச்சியில் நேற்று முன்தினம் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது சிறிலங்கா படைத்தரப்பினதிடம் சரணடைந்த சர்மிளா புனர்வாழ்வு பெற்ற பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

அத்துடன், இவரைத் திருமணம் செய்த சந்துருவன் கிளிநொச்சியில் நிலைகொண்டுள்ள 25வது கஜபா படைப்பிரிவில் பணியாற்றி வருகின்றார்.

இந்நிலையில், இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு நடவடிக்கையாகவே இந்தத் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக சிறிலங்கா ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் இன்று பிற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் சர்மிளாவின் தந்தை சந்திரசேகரன் கல்கமுவவில் சந்துருவனின் வீட்டுக்கு சென்ற அனுபவத்தை பகிர்ந்து கொள்ள சிறிலங்கா அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=2527bcb8-ef05-470a-b071-9d20c5f0617b

  • கருத்துக்கள உறவுகள்

இனங்களிடையேயான ஒற்றுமை வளரும்

... இங்கு புலமெங்கும் கலப்பின மக்கள் இருக்கிறார்கள். உண்மையில் அவர்கள்தான் இங்கு மிக நிறவெறித்தன்மை கூடியவர்ர்களாகவோ, வன்முறைகளில் அதிகம் ஈடுபடுபவர்களாகவோ இருக்கிறார்கள்.

காரணம் ... இரு இன மக்கள்ளினாலும் அவர்கள் ஒதுக்குப்ப்படும் சூழ்நிலை ... விளைவு வன்முறையாக வெளிப்படுகிறது.

70களில் திருமலையில் ஆரம்பித்த இனங்கலவரங்களில் தமிழர்களை தாக்கியவர்களில் முன்னனியில் நின்றவர்கள், கலப்பினத்தவர்கள் என்று கேள்விப்பட்ட நினைவு!

என் நண்பர் ஒருவரும் கொழும்பில் உயர்பதவியில் ... அங்கே காதலித்து கலப்பு திருமணம்! இன்று வேலையும் வேண்டாம் வெட்டியும் வேண்டாம் என்று மனைவி, பிள்ளைகளுடன் ஜேர்மனியில் தஞ்சம்... காலம் சொல்லும் இப்படியான கலப்பு திருமணம் மூலம் ஏற்பட போகும் இனவொற்றுமையை?????

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள நாட்டின் சுதந்திர தினம் வரும் 4ம் திகதி வரவுள்ளது. இதனால் புலம் பெயர்ந்த நாடுகளில் சிங்கள தேசம் நடாத்த இருக்கும் சுதந்திர தின நிகழ்வுக்கு தமிழர் அமைப்புக்களை பங்கு கொள்ளுமாறு அந்த நாட்டில் இருக்கும் சிறிலங்கா தூதரகம் அழைப்பு விடுத்து வருகிறது. குறிப்பாக தமிழர் பாடசாலைகளின் அதிபர் , மாணவர்கள், சைவக்கோவில்களில் குருமார்கள், தமிழ்க் கத்தோலிக்க குருமார்களை கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்து வருகிறார்கள்.

அதாவது தமிழர்களும் சிங்களவர்களும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஒரு சில புலிக்கூட்டங்கள் தான் சிறிலங்காவில் ஒற்றுமையில்லை என்று பொய்யான பிரச்சாரங்களை செய்கிறார்கள் என்று சிங்கள தேசம் வெளி நாடுகளுக்கு காட்டுவதற்காக.

  • தொடங்கியவர்

இதில் ஜனாதிபதி செயலகம் முன்னின்று செயல்படுவதனால் அந்த திருமணத்தில் இருக்கும் புனிதத்தை, அழித்துவிடுகிறது.

கொழும்பில் எனது இரண்டு முதலாளிகள் சிங்களப்பெண்களை திருமணம் முடித்திருந்தார்கள். இருவருமே 99% வீதமும் சிங்களவரகளாகிருந்தனர். ஒருவர் அவர்களின் வீட்டு வெசாக் கிரிபத்தை விட்டு விட்டு எனது நண்பர்கள் கொண்டுவரும் தைப்பொங்கலுக்கு காவல் இருப்பார். கேள்விபட்ட எத்தனையோவில் ஒரு குடும்பம் தமிழராக வாழவில்லை. மகிந்தாவின் தங்கையும் நடேசனும் கூட.

இந்த காதல் திருமணங்கள் எதுவுமே இன ஐக்கியத்தை இதுவரையில் கொண்டுவந்ததில்லை. ஆணைக் கண்டால் பெண்ணோ, பெண்ணை கண்டால் ஆணோ காதலிப்பது மகிந்தா ராசாபகசாவின் ராச்சியத்தில் மட்டும் தான் இதுவரையில் நிகழ்ந்ததொன்றல்ல. ஆனால் மகிந்தா ஒரு ஆளுக்கு மட்டும் தான் எப்படி ஒரு ஆண் ஒரு பெண்ணை காதலித்தால் அதை வைத்து கடை நடத்தலாம் என்பது தெரியும்.

கருணாவுக்கு சிங்கள சிறுக்கிகளை வைத்துத் தீனி போடிப்பதும், நெடும் தீவில் டக்கிளசுக்கு சிங்கபூர் ஸ்டையிலில் கோட்டல் கட்டுவதும் இன ஒற்றுமைக்காகவல்ல. அப்பாடியாயின் எந்த ஒற்றுமைக்காக ரம்புக்கவின் மகள் சந்துலா சவேந்திர சில்வாவுடன் தொழில் செய்ய அனுப்பப் பட்டர்.

ShvedraSilva.jpg

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் நாட்டில இருக்கிற எங்கட ஆக்களும் சிங்களத்திகளை திருமணம் செய்வதில் நல்ல அக்கறையோட தான் இருக்கினம். விட்டா அதில வெட்டி பெருமை வேற பேசினம்..!

இந்தியப் படைகள் காலத்திலும் எங்கட பெண்கள் இந்திய ஜவான்களை திருமணம் செய்திருக்கினம்... எங்கட பெண்கள் சிலர் அதில எல்லாம் குறை வைக்கிறதே இல்ல..! ஏன் இப்போ.. புலம்பெயர் நாடுகளில்.. வட இந்தியப் பெண்கள் மீது ஒரு வித வெறியோட திரியினம்.. எங்கட புலம்பெயர் தேசியவாதிகளின் வாரிசுகள்...!

ஓரிருவரின் சொந்த முடிவுகளால் ஒரு இனம் உரிமை பெற முடியும் என்றால்.. மகிந்த ராஜபக்ச குடும்பத்தில் நடராஜன் என்பவர் செய்த திருமணத்தின் மூலம்.. தமிழ் மக்கள் உரிமை எல்லோ பெற்றிருக்க வேண்டும்..!

என்ன.. அந்தப் பெண் போராளியின் எதிர்காலத்தை சிந்திக்கின்ற போது தான்.. பாவமா இருக்கிறது. மகிந்தவின் அரசியல் இலாபத்திற்காக பலிக்கடாவாக்கப்பட்டுள்ளார் அந்தப் பெண் போராளி..! இது அடிப்படை மனித உரிமை மீறலும் கூட..! :(:icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இப்போ.. புலம்பெயர் நாடுகளில்.. வட இந்தியப் பெண்கள் மீது ஒரு வித வெறியோட திரியினம்.. எங்கட புலம்பெயர் தேசியவாதிகளின் வாரிசுகள்...!

பார்க்கத்தான் வட இந்தியப் பெண்கள் அழகாக இருக்கிறார்கள். அவர்களைத் திருமணம் செய்து குடும்பம் நடத்தும் போது தான் எங்கட பெண்களின் அழகு தெரியும். வட இந்தியப் பெண்களை திருமணம் செய்து விட்டு நெடுகவும் ஆங்கிலத்தில் தான் கதைக்க வேண்டும். தாய் மொழியில கதைக்கும் போது இருக்கிற திருப்தி வேறு மொழியில் கதைக்கும் போது இருக்காது.

கொழும்பில் எனது இரண்டு முதலாளிகள் சிங்களப்பெண்களை திருமணம் முடித்திருந்தார்கள். இருவருமே 99% வீதமும் சிங்களவரகளாகிருந்தனர். ஒருவர் அவர்களின் வீட்டு வெசாக் கிரிபத்தை விட்டு விட்டு எனது நண்பர்கள் கொண்டுவரும் தைப்பொங்கலுக்கு காவல் இருப்பார். கேள்விபட்ட எத்தனையோவில் ஒரு குடும்பம் தமிழராக வாழவில்லை. மகிந்தாவின் தங்கையும் நடேசனும் கூட.

இப்படி பலர் கலப்பு திருமணம் செய்து இன ஜக்கியத்தை கட்டி எழுப்ப முடியவில்லை அதே போல தான் ஒரு சில தமிழர்கள் சாதி மாறி திருமணம் செய்து விட்டு சாதியை ஒழிப்போம் என்றால் அதுவும் ஒழியாது..

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்கத்தான் வட இந்தியப் பெண்கள் அழகாக இருக்கிறார்கள். அவர்களைத் திருமணம் செய்து குடும்பம் நடத்தும் போது தான் எங்கட பெண்களின் அழகு தெரியும். வட இந்தியப் பெண்களை திருமணம் செய்து விட்டு நெடுகவும் ஆங்கிலத்தில் தான் கதைக்க வேண்டும். தாய் மொழியில கதைக்கும் போது இருக்கிற திருப்தி வேறு மொழியில் கதைக்கும் போது இருக்காது.

கந்தர், சொந்த அனுபவமோ ????? சும்மா...பவுடிக்கி :D

  • கருத்துக்கள உறவுகள்

கந்தர், சொந்த அனுபவமோ ????? சும்மா...பவுடிக்கி :D

___

அப்புவை அப்படி சொல்லக்கூடாது பாருங்கோ.....

உண்மையில் அந்த பெண் போராளியா என்பது தெரியாது காரணம் அவருக்கு இப்ப தான் வயது 18 .

அப்ப 2009 இல் 14 ,15 வயதாக தான் இருக்கும். இராணுவத்தை சேர்ந்த நபருக்கும் இப்பதான் 20 வயசு.

2009 இல் இவருக்கு 17 .ஆகவே இவர்கள் கலப்பு திருமணம் என்பதை விட தம்மையும் உலகையும்

ஏமாற்ற்றும் திருமணமே இது. ஓணானின் ஊரில் கழுதை பாடித்தான் தீரும்.

இதனால் இந்தியாவிற்கும் ஈழதமிழருக்கும் நல்ல புரிந்துணர்வு வந்ததோ அதே போல்

இலங்கைக்கும் ஈழத்தவற்கும் நல்ல புரிந்துணர்வு கிடைக்கும் என்று நம்பலாம்.

ஒரு சிலரை வைத்து சமூகத்தை எடை போடா முடியாது. அந்த தமிழ் சகொதரயின் நிலைமை அப்பிடியாக இருக்கலாம்.

இங்கே புளிப்பில் பலர் சிங்களத்திய திருமணம் செய்கிறார்கள். கருணா மாமா கூட சிங்கள மாமிய தான் வைசிருக்குறார்.

வாழ்க இன ஒற்றுமை

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சிங்களப்பொண்ணுங்கள லவ்ஸ் பண்ணினா என்ன தப்பு? அவங்க கொன்ஞி கொன்ஞி தமிழ் பேசேக்க எவ்வளவு அழகா இருக்கும்..............அவங்கள்ள ஒரு விதமான சூப்பர் அழகு இருக்கு தெரியுமா.அதுவும் கருமையான அழகான நீண்ட கூந்தல்.......வாவ்..........

அத வடிவா பின்னிக்கட்டி அழகா தலையை இழுத்த அந்த வயிட் ஸ்கூல் யூனிபோhம்ல எவ்வளவு அழகா இருப்பாங்க.......சுண்டல் வெள்ளவத்தையில இருந்து ரட்மலான ஹிண்டுக்கு போகேக்க பஸ்ல எவ்வளவு அழகான சிங்கள பொண்ணுங்கள்ளாம் வருவாங்க...........அதவும் அந்த கல்கிஸ பொலீஸ் ஸ்டேஷனுக்கு முன்னாள இருக்கிற கேள்ஸ் college பொண்ணுங்க இன்னும் சூப்பர்.....

எங்கட ஆட்களுக்கு சிங்களத்தியை வைத்திருக்கத்தான் விருப்பம் .

எங்கட ஆட்களுக்கு சிங்களத்தியை வைத்திருக்கத்தான் விருப்பம் .

``

“உங்கட” ப்ளொட் ஆட்களுக்கா அர்ஜுன் அண்ணா?

அது நீங்க சொல்லியா தெரியணும்...

ஊருக்கே தெரியுமே! :)

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சிங்களப்பொண்ணுங்கள லவ்ஸ் பண்ணினா என்ன தப்பு? அவங்க கொன்ஞி கொன்ஞி தமிழ் பேசேக்க எவ்வளவு அழகா இருக்கும்..............அவங்கள்ள ஒரு விதமான சூப்பர் அழகு இருக்கு தெரியுமா.அதுவும் கருமையான அழகான நீண்ட கூந்தல்.......வாவ்..........

அத வடிவா பின்னிக்கட்டி அழகா தலையை இழுத்த அந்த வயிட் ஸ்கூல் யூனிபோhம்ல எவ்வளவு அழகா இருப்பாங்க.......சுண்டல் வெள்ளவத்தையில இருந்து ரட்மலான ஹிண்டுக்கு போகேக்க பஸ்ல எவ்வளவு அழகான சிங்கள பொண்ணுங்கள்ளாம் வருவாங்க...........அதவும் அந்த கல்கிஸ பொலீஸ் ஸ்டேஷனுக்கு முன்னாள இருக்கிற கேள்ஸ் college பொண்ணுங்க இன்னும் சூப்பர்.....

சிங்களப் பெண் என்பதற்காக அன்றி.. உளமாரமான மனித அன்பின் அடிப்படையில்.. நீங்கள் இணைவதில் தப்பில்லை..!

ஆனால் எம்மில் பலர் சிங்களத்தி என்பதற்காக காதலிக்கினம். அதுபோல.. இந்தச் சிப்பாய் சிங்களப் படையினன் என்ற காரணத்தை முன் வைத்து உண்மையில் அவர்களுக்கிடையே நட்பு.. காதல் இருந்தாலும்.. அதை இன அடையாளப்படுத்திய மகிந்த அரசின் செயற்பாடு.. ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல..! அது அடிப்படை மனித உணர்வுகளை இன அடையாளத்தின் மூலம்.. கூறு போடும் செயலாகவே தெரிகிறது. எனி அந்தச் சிங்கள சிப்பாய்க்கு தான் வென்ற இனத்தின் இராணுவ வீரன் என்ற மமதையும்.. அந்தப் பெண்ணிற்கு.. தான் தோற்ற இனத்தின் போராளி என்ற உணர்வுமே மேலோஞ்சி இருக்கும்.

இதை எந்த மனிதாபிமான கண்ணோட்டத்தில் பார்க்கப் போகிறது.. உலகம்..??! மகிந்தவின் கூத்துக்கள் மனித நாகரிக எல்லையையே தாண்டிச் சென்று கொண்டிருப்பதையே நாங்கள் கண்டிக்கிறோம்..!

அப்பாவிச் சிங்களப் பெண்கள் அழகில்லை என்றே.. கெட்டவர்கள் என்றோ அல்ல இதன் அர்த்தம். இந்தப் போராளிக்கு திருமணம் செய்து வைக்கும் இதே மகிந்த அரசு தான்.. எமது அரசியல்துறை பொறுப்பாளரின் (பா.நடேசன் அண்ணாவின்) துணைவியாராக இருந்த காரணத்திற்காக ஒரு சிங்களப் பெண்ணை சுட்டுக்கொன்றது என்பதையும் நாம்.. மறக்கக் கூடாது..! அதே அரசியற்துறைப் பொருப்பாளர்.. சிங்கள கடற்படை கப்பல் ஒன்றின் தலைமைச் சிப்பாயின் மனைவியின் வேண்டுகோளை செவிமடுத்து.. அவரினை விடுதலை செய்ததையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

நம்மட தமிழ் ஆட்கள் சீதனத்தைக் கூட்டிக் கொண்டு போனால் ஏழைத் தமிழ் பெண்கள் என்ன செய்வது???

நம்மட தமிழ் ஆட்கள் சீதனத்தைக் கூட்டிக் கொண்டு போனால் ஏழைத் தமிழ் பெண்கள் என்ன செய்வது???

animated-applause.gif

நம்மட தமிழ் ஆட்கள் சீதனத்தைக் கூட்டிக் கொண்டு போனால் ஏழைத் தமிழ் பெண்கள் என்ன செய்வது???

தெரியல்லையே :unsure:

நம்மட தமிழ் ஆட்கள் சீதனத்தைக் கூட்டிக் கொண்டு போனால் ஏழைத் தமிழ் பெண்கள் என்ன செய்வது???

உங்க பொயிண்ட் எங்கோவோ போகுது. ஆனால்

இது நகை நகையாய், காசு காசாய் அடிசுக்கொண்டு போய் வைச்சிருக்கிற சிப்பாயிக்கும், போராளிப்பெண்ணிற்க்கும் இடையில் திருமணம். இங்கே கேட்டு வாங்கிற ஆள் இல்லைப் படை சிப்பாய். சாதாரண நிலைமையில் கைவிட்டு காசு கொடுத்து திருமணம் செய்ய சம்மதிக்க கூடிய ஆள் இல்லை இயக்கத்துப் பெண்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

கந்தர், சொந்த அனுபவமோ ????? சும்மா...பவுடிக்கி :D

என்னுடன் வேலை பார்க்கும் வட இந்தியர்களுடன் கதைக்கும் போது பெற்ற அனுபவங்கள். வட இந்தியப் பெண்களைத் திருமணம் செய்தால் வீட்டில் கிந்திப்படம் அடிக்கடி ஓடிக்கொண்டிருக்கும். (எனக்கு பிடிக்காத மொழிகள் இரண்டு சிங்களமும் கிந்தியும்.) வட இந்தியப் பெண்கள் இந்திய ஐன நாயக நாடு ,காந்தித்தாத்தா சுந்திரம் பெற்றுத்தந்தார் என்று சொல்வார்கள். அப்ப தெரியும் ஏண்டா கல்யாணம் பண்ணினோம் என்று.

நம்மட தமிழ் ஆட்கள் சீதனத்தைக் கூட்டிக் கொண்டு போனால் ஏழைத் தமிழ் பெண்கள் என்ன செய்வது???

http://www.yarl.com/forum3/index.php?showtopic=97321 இந்த இளைஞனைப் போல திருமணமாகாத புலம் பெயர்ந்த தமிழர்கள் ஈழத்தில் குறிப்பாக வன்னியில் இருக்கும் பெண்களை திருமணம் செய்ய முன்வரவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.