Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதுக்கடி...

Featured Replies

காதுக்கடி...

உலக முன்னாள் அதிபார குத்துச்சண்டை சம்பியனான எவென்டர் ஹொலிபீல்ட், இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.

1997ஆம் ஜூன் மாதம் 28ஆம் திகதி நடைபெற்ற அதிபார குத்துச்சண்டைப் போட்டியில் உலகப்புகழ்பெற்ற அதிபார குத்துச்சண்டை வீரர் மைக் டைசனினால் ஹொலிபீல்டின் காது கடித்து துப்பப்பட்டது. இந்நிலையில் இலங்கைக்கு வந்துள்ள ஹொலிபீல்ட்டின் கடிபட்ட காதினை ஜனாதிபதி உன்னிப்பாக கவனிப்பதை படத்தில் காணலாம்.

001(40).jpg

http://www.tamilmirror.lk/component/content/article/87-front-main-news/35152-2012-01-30-09-48-44.html

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D :D

நிலமதி அக்கா எதுக்கு இப்ப இப்பிடி சிரிக்கிறிங்க?

அது வேறொண்டும் இல்லை தனது காதையும் யாராவது கடித்தால் இப்பிடியா இருக்கும் என்று பார்த்திருப்பார் மகிந்த ராசா ..

  • கருத்துக்கள உறவுகள்

001(40).jpg

வலு, உன்னிப்பாகத்தான்... அவதானிக்கிறார். :rolleyes::D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி உந்த கறுவல் ஆருக்கு பந்தா காட்ட அங்கை போனவன்?

அது சரி உந்த கறுவல் ஆருக்கு பந்தா காட்ட அங்கை போனவன்?

நல்வரவு சாமி அண்ணை

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி உந்த கறுவல் ஆருக்கு பந்தா காட்ட அங்கை போனவன்?

Dr.மகிந்தவிடம், அறுந்த காதுக்கு வைத்தியம் பார்க்க போனவனாம். :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ;ஒட்டுக்குழு' வைத்திருந்தால், சண்டையும் பிடிச்சிருக்கத் தேவையில்லை! காதையும் இழந்திருக்கத் தேவையில்லை!

போட்டியின்றியே வெற்றி பெற்றிருக்கலாம் என்று தான் 'மகிந்த' நினைத்திருப்பார்!

  • தொடங்கியவர்

காதென்ன காது - இரு காலுமே இல்லாத பரிதாபம் இங்கு

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-02-01 10:56:49| யாழ்ப்பாணம்]

அதிபார குத்துச்சண்டை வீரர் எவென்டர் யஹாலி பீல்ட் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். இலங்கைக்கு வருகை தந்த அவரை, ஜனாதி பதி மகிந்த ராஜபக்ஷ­ சந்தித்தார். 1997ஆம் ஆண்டு நடந்த குத்துச்சண்டை ஒன்றின் போது யஹாலி பீல்டுடன் சண்டையிட்ட மைக் டைசன், அவரின் காதைக் கடித்து துண்டாடி இருந்தார். சம்பவம் நடந்து 15 வருடங்களுக்குப் பின்னர், கடிபட்ட காதை எங்கள் நாட்டு ஜனாதிபதி தொட்டுப் பார்த்தார். துயரம் பகிர்ந்து கொண்டதாகத் தகவல்; தெரியவில்லை. குத்துச் சண்டைக்குப் போய் காது அறுபட்டவரின் விடயத்தில் காட்டப்பட்ட கரிசனையைக் கேட்டபோது, எங்கள் மண்ணில் நடந்த யுத்தத்தில் தமிழ் மக்கள் பட்ட அவலங்கள், அங்கவீ னங்களை நினைத்துப் பார்த்தேன்.

கடவுளே! இரண்டு காலும் இல்லாதவர்கள் எத்தனை பேர்? கை இழந்தவர்கள், கண் இழந்தவர்கள், எழுந்து நடக்க முடியாதவர்கள் இப்படி பெரும் துயரத்தை அனுபவித்துக் கொண்டு குடிசைக்குள் குந்தியிருந்து சதா அழுகின்றவர்களை ஆட்சி பீடத்தினர் யாருமே பார்த்ததாக -அனுதாபம் தெரிவித்ததாக இல்லை. நடந்தது நடந்தாயிற்று. யுத்தத்தில் அகப்பட்டு உயிரை இழந்த குடும்பங்களை, அங்கவீனமான வர்களை சந்தித்து ஒரு சில ஆறுதல் வார்த்தை கூறி ஆற்றுப்படுத்த ஆட்சி பீடத்தினருக்கு அறவே விருப்பமில்லை. ஆறுதல் கூறுவதை விட, போரின்போது அப்படி எதுவும் நடக்கவில்லை என்று கூறுவதிலேயே அரசு அதிதீவிரமாக உள்ளது. உலக வரலாற்றை எடுத்துக் கொண்டால் நடந்த யுத்தங்கள், அழிவுகள், இழப்புக்காக மன்னிப்புக் கேட்கின்ற மரபு இருந்து வருவதை அறிய முடியும்.

செய்த தவறுக்காக காலங்கடந்தேனும் மன்னிப்புக் கோரிய சம்பவங்கள் நிறையவே உண்டு. ஆனால், இலங்கையில் அப்படியயதுவுமே இல்லை. வன்னி யுத்தத்தில் தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் உயிரிழந்துள்ளார்கள் என்ற தகவலைக் கூறினால், சிங்களவர்களும், முஸ்லிம்களும் இறந்துள்ளார்கள் என்று பதிலளிக்கும் பன்னாடைப் பண்பாடே இந்த நாட்டின் ஆட்சியாளர்களிடம் இருக்கிறது. வன்னி யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக் கான அப்பாவித் தமிழர்கள் இறந்துள்ளனர் என்றால் அதனை நியாயப்படுத்துவதுபோல சிங்கள மக்களும் இறந்தார்கள் என்று கூறும் அநாகரிகம் இலங்கையில் மட்டுமே இருக்க முடியும்.

ஒரு இனத்திற்கு ஏற்பட்ட இழப்பை நியாயப்படுத்த இன்னொரு இனம் இழக்காத இழப்பை இழந்ததாக கூறுவது மிகப்பெரும் துரோகத்தனம். போரில் சிங்கள, முஸ்லிம் மக்கள் இறந்தார்கள் என்பதற்காக தமிழ் மக்கள் இறக்கலாம் என்றோ அல்லது தமிழ் மக்கள் இறந்தமைக்காக சிங் கள்,முஸ்லிம் மக்கள் மரணிக்கலாம் என்றோ கூறுவது ஒருபோதும் நியாயத்துவமானதல்ல. ஆட்சியாளர்கள்,எப்போதும் மக்களின் காவலர் களாக-துணையாளர்களாக இருக்க வேண்டும். ஆனால் இங்கோ வேண்டாத அனுதாபங்களை தெரிவித்து உலகில் நல்ல பெயர் வேண்ட நினைக்கும் ஆட்சியாளர்கள், தங்கள் நாட்டில் இருக்கக்கூடிய பேரழிவைச் சந்தித்த மக்களை ஒரு பொருட்டாக நினைக்காமை பொல்லாப்பின் வெளிப்பாடென்றே உணர்தல் வேண்டும்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=26952

  • கருத்துக்கள உறவுகள்

அவர் காதுக்கடியை கவனிக்கிறன் சாட்டில தன்னட்ட கோல்ட் கடிகாரம் இருக்கென்று காட்டிறார். அதை நீங்க.. இப்படி விளம்பரப்படுத்துறீங்க.

புலம்பெயர் ஊடகங்கள் போல.. யாழில பல பேருக்கு.. மகிந்த தான் ஜனாதிபதி..! என்னைப் பொறுத்த வரை மகிந்த சராசரி.. சிங்கள மங்கி..! அதுக்கேன் இவ்வளவு விளம்பரம்..! எங்கட தேசிய தலைவரை சிங்களவன்.. இப்படி மதிச்சு.. கதைக்கிறானா..???! :rolleyes::(:icon_idea:

Edited by nedukkalapoovan

001(40).jpg

கருத்துப்படம்: அடடே எண்ணைசட்டி தலையா...

என்னையவிட நீ ரொம்ப அழகா இருக்கே! :)

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி உந்த கறுவல் ஆருக்கு பந்தா காட்ட அங்கை போனவன்?

அந்தக் கறுவல் கிடக்கிறான்! (நான் நல்ல வெள்ளை). உங்களைப் பார்த்தது மிகவும் சந்தோசம் கு.சா. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.