Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூநகரியில் ஆள ஊடுருவும் சீனா - அதிர்ச்சியில் இந்தியா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பூநகரியில் ஆள ஊடுருவும் சீனா - அதிர்ச்சியில் இந்தியா!

india-china-map_eu03022012.png

video_photo_0_eu.gif

போரின் பின்னரான இலங்கையில் இந்தியா மற்றும் சீனா போட்டி போட்டு கொண்டு இலங்கையின் வளங்களை தன்னப்படுத்த கடும் பிரயத்தனம் எடுத்து வருகின்றது. அந்த வகையில் சீனாவின் உதவியுடன் வன்னி பூநகரிப்பகுதியில் சர்வதேச விமான நிலையமொன்றை அமைக்க...,

இலங்கை அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் முதல் கட்டமாக அப்பகுதியிலிருந்து மண் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதற்கென பெருமளவு நிலப்பரப்பினை கையகப்படுத்தவுள்ளதுடன் அதற்கான அளவீட்டுபபணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே புலிகள் வசமிருந்த இரணைமடு விமான ஓடு தளம் இலங்கை விமானப்படை ஓடு தளமாகியிருப்பதுடன் வன்னிக்கான கட்டளை மையமும் அங்கேயே செயற்பட்டு வருகின்றது.

அத்துடன் முல்லைத்தீவிலும் பொதுமக்களது பெருமளவிலான நிலப்பரப்பினை ஆக்கிரமித்துள்ள விமானப்படையினர் அங்கும் விமான நிலையமொன்றினை அமைப்பது தொடர்பாக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே வன்னி பூநகரிப்பகுதியில் சர்வதேச விமான நிலையமொன்று அமைவது பெரும்பாலும் சாத்தியமாகி வருகின்ற நிலையில் அங்குள்ள காணிகளை நட்சத்திர விடுதிகள் அமைப்பதற்காக கையகப்படுத்தும் முயற்சியினால் அரச உயர் மட்டம் முழுவீச்சில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதில் பஸில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபகஷ போன்றோர் ஆயிரம் முதல் ஜநூறு வரையிலான ஏக்கர் காணிகளை கைப்பற்றி கொண்டுள்ளதாக அறிய முடிகின்றது.

ஏ-32 வீதியை இலக்கு வைத்து யாழ்ப்பாணத்திற்காக அமைக்கப்படும் இவ்விமான நிலையம் புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ் மக்களை இலக்கு வைத்து சீன உதவியுடன் அமையவுள்ளதாக தெரியவருகின்றது.

ஏற்கனவே பலாலி விமான நிலையத்தை இந்தியா கையகப்படுத்திக் கொண்டுள்ள நிலையில் சீனா பூநகரியை இலக்கு வைக்க தொடங்கியுள்ளது.

http://eutamilar.eu/tamil/index.php/2071-2012-02-03-08-19-01

  • கருத்துக்கள உறவுகள்

பலாலி விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையம் ஆக்கப்போவதாக கூறி பத்து வருசம் ஆனபின்பும், ஒரு செங்கல்லை தூக்கி வைக்க முடியாத இந்தியாவுக்கு என்ன அதிர்ச்சி வேண்டிக்கிடக்குது.

எல்லாத்துக்கும் அதிர்ச்சிப்பட்டு நடமாடாமல்.... வாற அதிர்ச்சியிலை ஹாட் அட்டாக் வரவேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் முதல் கட்டமாக அப்பகுதியிலிருந்து மண் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மண்ணை எதுக்கு அனுப்புகினம்? மண்ணை ஆராய்ந்து அதன் தரவை அல்லவா அனுப்ப வேணும்? அல்லது மண்ணை ஆராயும் பொறியியலாளர் யாரும் அங்கே இல்லையா? :D

பூநகரி வாழ் மக்கள் இரு கைகளாலும் சீனாவை வரவேற்கட்டும்.

மண்ணை ஆராய்ச்சி செய்வது அதில் என்ன கனிமப்பொருட்கள் இருக்கின்றன என ஆராய்ச்சிசெய்வதற்கே !

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.virakesar...asp?key_c=36444 சீனாவின் பட்டுப்பாதை ஆராய்ச்சியும் இலங்கையும்

"ஏற்கனவே இலங்கையில் தனது தலையீட்டை பொருளாதார அபிவிருத்தி என்ற பெயரில் ஸ்திரப்படுத்தியிருக்கும் சீனா, கப்பல் ஆராய்ச்சி என்ற பெயரில் தனது பிராந்திய பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு அதற்கு தக்கபடி திட்டங்களை வகுக்கப்போகின்றதோ என்ற அச்சமும் இந்தியாவுக்கு தோன்றாமலில்லை.

பிராந்திய வல்லாதிக்கம் என்ற விடயத்தில் இந்தியாவும் சீனாவும் தென்னாசியாவிலுள்ள பல சிறிய நாடுகளை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக தம்வசப்படுத்தி வருகின்றன.

துறைமுக அபிவிருத்தி மற்றும் ஏனைய கட்டுமானத்திட்டங்களுக்கு இலங்கைக்கு சீனாவே பல வழிகளில் உதவி வருகின்றது. இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறான ஆய்வுகளை மேற்கொள்ள சீனா அனுமதி கேட்கும் போது இலங்கைக்கு மறுக்கத்தான் முடியுமா? இது தொடர்பாக பரிசீலனை இடம்பெற்று வருவதாக இலங்கை தொல்லியல் திணைக்களம் கருத்துத்தெரிவித்துள்ளது.

இவ்விடயத்தில் நழுவல் போக்கை இலங்கை கடைபிடிக்க முடியாது. அதே நேரம் தனது பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வழிகளை சீனா மேற்கொண்டு வருகின்றது என இந்தியா பகிரங்கமாகவே கருத்துத் தெரிவித்து வருகின்றது.

இன்னமும் சில நாட்களில் இராமாயண காலத்து பாலம் குறித்து ஆராய இந்தியா இலங்கையிடம் அனுமதி கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று தான் கூற வேண்டியுள்ளது. இந்த இரண்டு நாடுகளிடம் அகப்பட்டுக்கொண்டு முழி பிதுங்கி நிற்கும் நிலை இலங்கைக்கு வரப்போகின்றது என்பதே உண்மை."

Edited by Queen

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திராவிட இந்தியா தோற்க வேண்டும் என்று ஈரானிய பார்சி கூட்டம் அறுநூறு வருடங்களாக சதி செய்து வருகிறது.

அதிர்ச்சி எல்லாம் இல்லை.  

  • கருத்துக்கள உறவுகள்

இன்னமும் சில நாட்களில் இராமாயண காலத்து பாலம் குறித்து ஆராய இந்தியா இலங்கையிடம் அனுமதி கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று தான் கூற வேண்டியுள்ளது. இந்த இரண்டு நாடுகளிடம் அகப்பட்டுக்கொண்டு முழி பிதுங்கி நிற்கும் நிலை இலங்கைக்கு வரப்போகின்றது என்பதே உண்மை."

311050_274138522628749_253248398051095_762688_1546300951_n.jpg

யார் எப்படி போனால் எனக்கென்ன.. ராமர் பாலத்தின் வழியாக டோங்கிலி தமிழ்நாட்டுக்கு வருவாரா..? அவரிடம் சைடில் கமாய்(லஞ்சம்) கொடுத்து நோக்கு வர்மம் கற்று கொள்ள போகிறேன்... :) :)

பூநகரி வாழ் மக்கள் இரு கைகளாலும் சீனாவை வரவேற்கட்டும்.

மண்ணை ஆராய்ச்சி செய்வது அதில் என்ன கனிமப்பொருட்கள் இருக்கின்றன என ஆராய்ச்சிசெய்வதற்கே !

இப்போது தெரியும் சீனாகாரனை நிறுத்த அவ்வளவு எளிதாக இருக்க போவதில்லை என்பது. அவனுடன் சேர்ந்து கொள்ளவேண்டியதுதான். வரவேற்றால் மனதுக்கு இலகுவாக இருக்கும். எதிர்ப்பு தெரிவித்தால் மனதுக்கு வேதனையாக இருக்கும்.

நமது வரிப்பணத்தில் மலையாளிகள் திளைப்பதை விட இது எவ்வளவோ மேல் போல் தென்படுகிறது.

சீனா போட்டி போட்டு கொண்டு இலங்கையின் வளங்களை தன்னப்படுத்த கடும் பிரயத்தனம் எடுத்து வருகின்றது. அப்படியொன்றும் கடும் பிராயத்தனத்தை சீனா மேற்கொள்ளவில்லை. மிகவும் இலகுவாகவே கையகப்படுத்துகிறது சீனா. ஹார்ட் அட்டக் வரவேண்டும் இந்தியாவிற்கு. அகூதாவின் கருத்துத்தான் எனது கருத்தும். பூநகரி மக்கள் சீனரை வரவேற்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.