Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத்தியில் எதிராட்சி-மாநிலத்தில் கூட்டாட்சி – மாவையும் டக்ளஸ்சும் திறந்து வைத்த திருநெல்வேலி சந்தை!(படங்கள்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

DSC_1818-100x100.jpg

யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தைக்கான புதிய கட்டிடத் தொகுதியை வடக்கின் முதலமைச்சர் பதவிக்கு தமிழரசுக்கட்சியின் சார்பில் போட்டியிட இருக்கும் மாவை சேனாதிராஜாவும் அரசாங்கத்தின் சார்பில் போட்டியிட இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவும் குதுகலமாகத் திறந்து வைத்தனர்.

திருநெல்வேலி சந்தைப் பகுதியில் 80 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத் தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. குறித்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்களான மாவை சேனாதிராஜா, அப்பாத்துரை விநாயகமூர்த்தி மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்த கொண்டு திறந்து வைத்தனர்.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட மாவை சேனாதிராஜாவும் டக்ளஸ் தேவானந்தாவும் மிக நெருக்கமாக சிரித்து கதைத்துக் கொண்டிருந்ததைக் கண்ட பொதுமக்களிற்கு பெரிதும் ஆச்சரியத்தைக் கொடுத்ததாக அதில் கலந்து கொண்ட கூட்டமைப்பின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

DSC_1818.jpgDSC_1806.jpgDSC_1808.jpgDSC_1820.jpg

DSC_1832.jpg

http://www.saritham.com/?p=49968

  • கருத்துக்கள உறவுகள்

அடேங்கப்பா!!!!!!!!!என்ன ஒற்றுமை!!!!!!!!!என்ன ஒற்றுமை!!!!!!!!!!

எங்கள் பகைவர்கள் எங்கோ சென்று மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே என்று பாடணும் போல இருக்கு!!!ஆனா மனசுதான் வரமாட்டேங்குது.

  • கருத்துக்கள உறவுகள்

அடேங்கப்பா!!!!!!!!!என்ன ஒற்றுமை!!!!!!!!!என்ன ஒற்றுமை!!!!!!!!!!

எங்கள் பகைவர்கள் எங்கோ சென்று மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே என்று பாடணும் போல இருக்கு!!!ஆனா மனசுதான் வரமாட்டேங்குது.

ஜனநாயக அரசியலில் இதெல்லாம் சகயமப்பா என்ற மனசு வரவேணும் அப்பதான் இரத்த கொதிப்பு வராமல் வாழலாம்

Edited by putthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறரைத் துரோகிகள் என்று கோஷம் போட்டு எம்மக்களை பலிகொடுத்தது போதும். கயவர்களைத் திருத்துவோம் அல்லது மக்கள் ஆதரவால் வெல்லுவோம். ஒரே நாடாளுமன்றில் உறுப்பினர்களாக இருப்பவர்கள்மக்களின் அவசிய தேவைகளுக்காக எங்கும் சந்திக்கலாம்ஆனால் கொள்கைகளை சந்தையில் விற்றுவிடாமல் இருந்தால்சரி!

  • கருத்துக்கள உறவுகள்

மலிஞ்சா எல்லாம் சந்தைக்கு வரும்யா!!!!!!!!!!!!!!!!!

கோரிக்கைகள் மெல்ல மெல்ல அழியுமே தவிர கிடைக்க போவது ஒன்றும் இல்லை. சிங்கலம் இதைதான் விரும்புகிறது

கண் கொள்ளா காட்சி. இதுதான் இன்று தமிழனுக்கு தேவை .யதார்த்த அரசியல் .

இங்கிருந்து ஊளையிட்டு எதுவும் நடக்கபோவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கண் கொள்ளா காட்சி. இதுதான் இன்று தமிழனுக்கு தேவை .யதார்த்த அரசியல் .

இங்கிருந்து ஊளையிட்டு எதுவும் நடக்கபோவதில்லை.

இருக்காதா பின்ன?

எதிரி + எதிரி = நண்பன் :(

  • கருத்துக்கள உறவுகள்

சேர்ந்திருந்து கழுத்தறுப்பது அல்லது

சேர்த்து வைத்துக் கழுத்தறுப்பது

இது தான் இன்றைய யதார்த்த அரசியல்

அதைத் தான் டக்ளஸ் செய்கின்றார்.

அதற்கு நானும் ஆமாப் போடத் தயார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் ஒன்று எல்லாத்தையும் மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள், அவர்கள் தீர்ப்பு சொல்வார்கள், இனிவரும் காலத்தில் ஏழு வாக்கு பெற்று அமைச்சராவது நடவாத காரியம் என்பது மட்டும் உண்மை.

இது இந்தியக் காட்டுமிராண்டி ராஜதந்திரிகளின் ஆலோசனையின் படி ஒருசில கூட்டமைப்பினர் விரும்பியோ விரும்பாமலோ செய்யும் நாடகம்.

சிங்கள இந்தியப் பயங்கரவாதிகளின் கைக்கூலியாக இருந்துகொண்டு கடத்தல் கப்பம் கொலை கொள்ளைகளில் கொடிகட்டிப் பறக்காமல் டக்லஸ் இருந்திருந்தால் இந்தப் புகைப்படம் (நிகழ்வு) மகிழ்வை ஏற்படுத்தியிருக்கும்.

மாவையையும், சிவாஜிலிங்கத்தையும் படுகொலை செய்ய முயன்று தோற்றவன் தான் இந்த டக்லஸ். மகேஸ்வரி, மகேஸ்வரன் உட்பட பல கொலைகளை சிங்கள - இந்திய பயங்கரவாதிகளுடன் இணைந்து செய்தவன் தான் இந்த டக்லஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

கண் கொள்ளா காட்சி. இதுதான் இன்று தமிழனுக்கு தேவை .யதார்த்த அரசியல் .

இங்கிருந்து ஊளையிட்டு எதுவும் நடக்கபோவதில்லை.

இந்த ஒப்பாரியை கேட்க யாருமில்லையா? ஐயகோ!!!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஒப்பாரியை கேட்க யாருமில்லையா? ஐயகோ!!!

மகிந்தா,அப்துல்கலாம்,சோனியா,கிருஸ்ணா,கருனாநிதி..இன்னும் பலர் இருக்கினம்

சந்தையில் ஒன்று கூடிய நீங்கள் உரிமைக்காக ஒன்று கூடலாகாதோ!

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-02-09 10:51:10| யாழ்ப்பாணம்]

திருநெல்வேவியில் புதிதாக அமைக்கப்பட்ட மேல்மாடி சந்தைக் கட்டித் தொகுதி நேற்று முன்தினம் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, அ.விநாயகமூர்த்தி ஆகியோர் கூட்டாக கலந்து கொண்டு மாடிக்கட்டிடத்தை திறந்து வைத்தனர். திருநெல்வேலி சந்தைக் கட்டிடத்தொகுதியை திறந்து வைப்பதற்கு இது தான் பொருத்தமான முறையென்று யார் நினைத்தாரோ தெரியவில்லை. ஆனால் அவருக்கு வசிட்டரின் வாயால் பிரம்மரிஷிப் பட்டம் கொடுக்கமுடியும்.

அவர்தான் யாதார்த்தம் உணர்ந்தவர். இந்த முடிபை எடுக்க தவறியிருந்தால் மானிப்பாய் மருதடியானுக்கும் திருநெல்வேலி வாலை அம்மனுக்கும் நடந்த கதிதான் திருநெல்வேலி சந்தையின் மாடிக்கட்டித்திற்கும் நடந்திருக்கும். திருநெல்வேலி சந்தை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பரிபாலனத்தில் உள்ள நல்லூர் பிரதேச சபைக்குட்டபட்டது. எனினும் சந்தை திறப்பு விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான மாவை சேனாதிராஜாவும், விநாயகமூர்த்தியும் ஒன்றாக கூடி நின்று கட்டித் திறப்பு விழாவை நடத்தி முடித்தனர்.

இவர்கள் ஒன்றாக கூடி திறப்பு விழாவை நடத்துதல் என்பதறகுள் விட்டுக்கொடுப்புக்கள் தாரளமாக இருந்துள்ளன என்பது தெட்டத்தெளிவு.ஆக கடந்த தைப்பூசத்திருநாளில் திருநெல்வேலி சந்தையின் மாடிக்கட்டித்தொகுதி திறந்து வைக்கப்பட்டது என்ற நல்ல செய்திக்கூடாக இன்னுமொர் செய்தி சொல்லப்படுகின்றது. அதாவது தமிழ் அரசியல் தலைவர்கள் ஒன்றுபட்டால் நல்ல பணிகள் நடந்தேறும் என்பதே அது. அமைச்சர் டக்ளஸ் தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக் கட்சியை சம்பந்தர் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விமர்சிப்பதோ அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை ஈழமக்கள் ஜனநாயக கட்சி விமர்சிப்பதோ அர்த்தமற்றது.

குறை கூறும் படலத்தால் தமிழ்மக்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி குறை கூறுதல் என்ற ஒரு வகை கலாசாரம் எங்கள் இனத்தை பற்றிப்பிடித்து விடும். இத்தகையதோர் சூழல் ஏற்பட்டுவிட்டால் எதிலும் எதற்கும் குறை கூறுவதே தொழிலாகிப் போகும். எனவே அரசியலில் இருக்கிறர்கள் முதலில் தாம் சார்ந்த இனத்துக்கு வழழிகாட்டிகளாகவும் முன்மாதிரிகளாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ் மக்களின் வாழ்வுக்கும் உரிமைக்குமாக ஒன்று பட வேண்டும். இந்த ஒற்றுமை என்பது இரகசியமாகக் கூடப் பேணப்படலாம். அமைச்சர் டக்ளஸை குறை கூறுவதன் மூலமே வாக்குகளை பெற முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நினைப்பதோ தமிழ் தேசியக் கூட்டமைப்பை குற்றம் சாட்டுவதன் மூலமே வாக்ககளை பெற முடியுமென அமைச்சர் டக்ளஸ் நினைப்பதோ பொருத்துடையதல்ல.

இத்தகைய நினைப்பு யாரிடமிருந்தாலும் அவர்களுக்கான எதிர்கால அரசியலின் ஆயுள் அவ்வளவு பலமானதாக இருக்காது. எனவே தமிழ் மக்களின் இன்றைய அவலம் நிறைந்த சூழ்நிலையில் நீங்கள் ஒன்றிணைந்து தமிழ் இனத்தின் உரிமையை வென்றெடுக்க வியூகம் அமையுங்கள். அதுவே நீங்கள் தமிழ் மக்களுக்குச் செய்யும் புனிதமான பணியாக இருக்ககலாம்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=27072

  • கருத்துக்கள உறவுகள்

கண் கொள்ளா காட்சி. இதுதான் இன்று தமிழனுக்கு தேவை .யதார்த்த அரசியல் .

இங்கிருந்து ஊளையிட்டு எதுவும் நடக்கபோவதில்லை.

நீங்கள் எங்கே இருந்து ஊளை இடுறீங்கள் என்று முகவரி போட்டால்தானே.

அங்கே எது

இங்கே எது என்று புரிந்துகொள்ளலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.