Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்துச் சிறுமியின் சோக கீதம்! அழுதது கண்கள்!! ஆறெனப் பாய்ந்தது கண்ணீர்!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மறந்து போகுமோ.... மண்ணின்வாசனை ......................

இன்று அதிகாலையிலேயே என்னை அழவைத்த சரிகா...... தமிழீழத்துபாணி குரல்................ வாழ்த்துக்கள் சரிகா....

எப்பவுமே இப்படியான இளம் பிஞ்சுகளின் ஒரு அசாத்தியாமான திறமைக்கு வெகுவான கவயீர்ப்புண்டு இன்னும் பல சரிகாக்கள் உருவாக வேண்டும்.

மிக்க மகிழ்ச்சி எனக்கு சரிகாவின் தலைமுறைவரை எம் வரலாறுகள் கொண்டு செல்லப்பட்டமைக்கு அந்த பெற்றோருக்கு என் இதயம்கனிந்த வாழ்த்துக்கள்!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழச்சிறுமியின் தமிழீழபற்று!

வல்வெட்டித்துறை கெருடாவில் பகுதியை சேர்ந்த நவநாதனின் மகளான செல்வி. சரிகா நவநாதன் தமிழ்நாட்டு தொலைக்காட்சியில் நடைபெற்ற சிறந்தபாடகர்போட்டியில் தமிழீழத்தின்மீதான தனது பற்றுதலையும்,தனது பெற்றோரும் தானும் தொலைத்துவிட்ட தமது தமிழீழதேசத்தின் வனப்புகளை அழகாகவும் உணர்ச்சியுடனும் எடுத்துகூறி பார்வையாளர்களையும் தொலைக்காட்சி நேயர்களையும் தமிழீழத்தின்மீது கவனம்வர செய்துள்ளார்.

புலம்பெயர்தேசமான கனடாவில் பிறந்திருந்தாலும் ஒருமுறைகூட தாயகத்துக்கு சென்றிருக்காது விட்டாலும் சரிகாவின் ஆழ்மனதில் தாயகம்மீதான பற்றுதலை வளர்த்த பெற்றோர் தலைவணங்கி பாராட்டதக்கவர்கள்.

லட்சம்மக்கள் பங்குகொள்ளும் பேரணிகள் உருவாக்கும் எழுச்சியைவிட அதிகமான எழுச்சியையும் உணர்வுரீதியான தமிழீழஆதரவையும் இந்த சிறுமி தனது குரலால் உருவாக்கியுள்ளார்.

தொடர்ந்தும் தமிழர்கள் எழுவார்கள்.தமது குரலை விடுதலைக்காக ஒலிப்பார்கள்.ஒடுக்குதலுக்கு உள்ளாகி அழிக்கப்பட்டுவரும் தமது உறவுகளுக்காக போராடுவார்கள் என்பதை மீண்டும் மீண்டும் உணர்த்திய ஒரு குரல் சரிகாவினுடையது.

http://www.pathivu.com/news/20003/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

C.M.R இல் சுகல்யாவின் குரலில் அடிக்கடி ஒலிக்கும் இந்த இனிமையான பாட்டு.

இதையும் அரசியலாக்கி விற்க பலர் தயார் நிலையில் போலுள்ளது.

அர்யூன் இந்தப்பாடல்களின் வரிகளை எழுதியவர் தமிழ்நதி. ஒவ்வொரு ஈழத்தமிழர்களின் ஏக்கமும் இப்பாடலில் புதைந்து கிடக்கிறது. அதெப்படி இதை எழுதியவர் யாரென்றே தெரியாமல் கிணத்துத் தவளையைப் போல இருக்கிறீர்கள்? :D

எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவது என்பது அரசியல் வியாபாராமா? அது சரி நான் அறிந்தவரைக்கும் உங்கள் பின்னணி மிகுந்த சுயநலத்திற்குரியது.

உணர்வுள்ள மனிதனின் வெளிப்பாடு உங்கள் பார்வையில் விற்பனை அரசியலாகி விட்டதா? இந்தக்கருத்துக்களத்தில் நீங்கள் எறியும் கருத்துக்கள் பூவராங் ஆயுதம் போன்றது எறிவது இலகு ஏந்துவது கடினம். :lol:

அர்யூன் இந்தப்பாடல்களின் வரிகளை எழுதியவர் தமிழ்நதி. ஒவ்வொரு ஈழத்தமிழர்களின் ஏக்கமும் இப்பாடலில் புதைந்து கிடக்கிறது. அதெப்படி இதை எழுதியவர் யாரென்றே தெரியாமல் கிணத்துத் தவளையைப் போல இருக்கிறீர்கள்? :D

எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவது என்பது அரசியல் வியாபாராமா? அது சரி நான் அறிந்தவரைக்கும் உங்கள் பின்னணி மிகுந்த சுயநலத்திற்குரியது.

உணர்வுள்ள மனிதனின் வெளிப்பாடு உங்கள் பார்வையில் விற்பனை அரசியலாகி விட்டதா? இந்தக்கருத்துக்களத்தில் நீங்கள் எறியும் கருத்துக்கள் பூவராங் ஆயுதம் போன்றது எறிவது இலகு ஏந்துவது கடினம். :lol:

கனகச்சிதமான பதில்!

  • கருத்துக்கள உறவுகள்

சரிகாவிற்கும்

அவர் குடும்பத்தினருக்கும் பாராட்டுக்கள்.

எனக்கு ஒரே ஒரு கவலைதானம்மா சரிகா

போராட்டத்தை உன்னிடமும் விட்டுவிட்டோம் என்று.

நாங்கள் முடித்திருக்கணும். முடித்திருக்கணும்

முடியல. முடியலயம்மா.

கைகளைக்கட்டி முதுகில் குத்தி சதி செய்து வென்றனர்.

மன்னிச்சுக்கோ. என்னை எங்கள மன்னிச்சுக்கோ தாயே.

ஒரு வேண்டுகோள்

அடுத்த சந்ததி புலத்திலே மயங்கிடும்

தாயகத்தை மறந்திடும் ....என்று இந்த குழந்தையின் கண்களைப்பார்த்து சொல்லுங்கள்.....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் தமிழனாக இருக்கும் வரை

தமிழனின் விடுதலை மூச்சு ஓயாது.

அதற்கு சரிகாவும் அவரின் பெற்றோரும் சான்று.

சரிகாவிற்கும் அவரின் பெற்றோருக்கும் நன்றிகளும்

வாழ்த்துகளும் உரித்தாகட்டும்

அர்யூன் இந்தப்பாடல்களின் வரிகளை எழுதியவர் தமிழ்நதி. ஒவ்வொரு ஈழத்தமிழர்களின் ஏக்கமும் இப்பாடலில் புதைந்து கிடக்கிறது. அதெப்படி இதை எழுதியவர் யாரென்றே தெரியாமல் கிணத்துத் தவளையைப் போல இருக்கிறீர்கள்? :D

எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவது என்பது அரசியல் வியாபாராமா? அது சரி நான் அறிந்தவரைக்கும் உங்கள் பின்னணி மிகுந்த சுயநலத்திற்குரியது.

உணர்வுள்ள மனிதனின் வெளிப்பாடு உங்கள் பார்வையில் விற்பனை அரசியலாகி விட்டதா? இந்தக்கருத்துக்களத்தில் நீங்கள் எறியும் கருத்துக்கள் பூவராங் ஆயுதம் போன்றது எறிவது இலகு ஏந்துவது கடினம். :lol:

என்ன நடந்தது அக்காவிற்கு. வார்த்தைகளை அள்ளி வீசி இருக்கின்றீர்கள். பாடல் எழுதியவரை பற்றியே நான் கதைக்கவில்லையே.சுகல்யா ரகுநாதனின் குரலில் தான் நான் இந்த பாட்டை C.M.R இல்

கேட்டிருக்கின்றேன்.

எல்லோரும் சாரிகாவிற்கு வாழ்த்து தெரிவிற்க ஒருவர் மட்டும் வந்து வாழ்த்துடன் பின் இணைப்பாக சிலரில் வசையும் பாடியிருந்தார் .அதை எழுதியவருக்காகத்தான் நானும் சில வரிகள் எழுதினேன்.

நீங்கள் அதற்குள் வந்து கிணற்று தவளை ,பின்னணி ,சுயநலம் என்றெல்லாம் கொட்டியிருக்கின்றிர்கள்.எனக்கு உண்மையில் ஏன் என்று விளங்கவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஈழத்தில் யாழ். கடலோரக் கிராமத்திலிருந்து துரத்தப்பட்டு அகதிகளாக வாழும் சிறுமியின் வேதனையும், விம்மலும், ஏக்கமும் விஜய் தொலைக்காட்சியின் யூனியர் சுப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் பாடலாக ஒலித்தது. இதயத்தை உருக்கி…. கண்ணீரை வரவழைக்கும் இந்த பாடலை ஒவ்வொரு தமிழ் இதயங்களும் கேட்க வேண்டும்.

மயிலிட்டி என்ற கடலோரக் கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் சரிகா என்ற அந்த சிறுமியின் பாடல்வரிகள் கேட்பவர்கள் அனைவரையும் கண்கலக்க வைத்தது.

மறந்து போகுமோ மண்ணின் வாசனை….

தொலைந்து போகுமோ தூர தேசத்தில்…….

வேப்பமரத்து குயிலே என் வீடு இன்னும் இருக்கிறதா..

ஏக்கமுடன் நீ பாடும் ஒற்றைக்குரல் ஒலிக்கிறதா…

வேப்பர நிழல் ஓரம் மெல்ல விழி மூடுகையில்…

கேட்குதடி உன் பாடல் தேம்புதடி என் இதயம்

வந்த இடம் ஒட்டவில்லை…. வாழ்நிலமோ எட்டவில்லை

சொந்தங்களும் பக்கமில்லை சொல்லி அழ நேரமில்லை

இந்த நிலை மாறி எங்கள் சொந்த மண்ணை சேர்வதெப்போ

அன்னை நிலம் முத்தமிட்டு அழுது துயர் தீர்வதெப்போ

நன்றி தினக்கதிர்

மயிலிட்டியல்ல, அருகில் இருக்கும் கட்டுவன். கட்டுவன் கடற்கரை கிராமம் அல்ல.

வாழ்த்துக்கள் சரிகா!

சரிகாவின் அம்மா எங்கட கந்தப்புவின் சினெகிதி

சிறுமியின் தாயார் படித்த பாடசாலையில் தான் நானும் படித்தேன். இராணுவம் வரும் போது, குண்டு மழை பொழியும் போது அப்பாடசாலையில் இருந்து தப்பி ஓடியவர்களில் நானும் ஒருவன்.

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் வரிகள்....

மறந்து போகுமோ... மண்ணின் வாசனை..!

மறந்து போகுமோ... மண்ணின் வாசனை..!!

தொலைந்து போகுமோ... தூர தேசத்தில்..!!

மறந்து போகுமோ... மண்ணின் வாசனை..!!

தொலைந்து போகுமோ... தூர.. தூர... தூர... தூர..

... ... தூர...தேசத்தில்..!!!

வேப்பமரத்து குயிலே என் வீடு இன்னும் இருக்கிறதா..!

வேப்பமரத்து குயிலே என் வீடு இன்னும் இருக்கிறதா..!!

ஏக்கமுடன் நீ பாடும் ஒற்றைக்குரல் ஒலிக்கிறதா.!!!

வேப்பர நிழல் ஓரம் மெல்ல விழி மூடுகையில்...!

கேட்குதடி உன் பாடல் தேம்புதடி என் இதயம்.!!

தேம்புதடி என் இதயம்...!!

மறந்து போகுமோ... மண்ணின் வாசனை..!!

வந்த இடம் ஒட்டவில்லை.. வாழ்நிலமோ எட்டவில்லை.!

சொந்தங்களும் பக்கமில்லை.. சொல்லி அழ நேரமில்லை.!!

இந்த நிலை மாறி எங்கள் சொந்த மண்ணை சேர்வதெப்போ..!

அன்னை நிலம் முத்தமிட்டு அழுது துயர் தீர்வதெப்போ..!!

அழுது துயர் தீர்வதப்போ..!!

மறந்து போகுமோ... மண்ணின் வாசனை..!!

தொலைந்து போகுமோ... தூர.. தூர... தூர... தூர..

தூர...தேசத்தில்..!!!

தூர...தேசத்தில்..!!!

தூர...தேசத்தில்..!

  • கருத்துக்கள உறவுகள்

சரிகாவுக்கும், பெற்றோருக்கும் , விஜய் தொலைக்காட்சிக்கும் நன்றிகள் பல.எமக்கு கிடைக்கும் ஒவ்வொரு சிறு சந்தர்ப்பங்களையும் பயன்படுத்த தவறக்கூடாது என்பதற்கு சரிகாவின் பெற்றோர் ஒரு சிறந்த உதாரணம்.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

சரிகாவுக்கும், பெற்றோருக்கும் ,சன் தொலைக்காட்சிக்கும் விஜய் தொலைக்காட்சிக்கும் நன்றிகள் பல.எமக்கு கிடைக்கும் ஒவ்வொரு சிறு சந்தர்ப்பங்களையும் பயன்படுத்த தவறக்கூடாது என்பதற்கு சரிகாவின் பெற்றோர் ஒரு சிறந்த உதாரணம்.

விஜய் தொலைக்காட்சியில் தானே சிறுமியின் கீதம் வந்தது. அதற்கு ஏன் சன் தொலைக்காட்சிக்கு நன்றிகள் சொல்லுகிறீர்கள் நுணாவிலான்.

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் தொலைக்காட்சியில் தானே சிறுமியின் கீதம் வந்தது. அதற்கு ஏன் சன் தொலைக்காட்சிக்கு நன்றிகள் சொல்லுகிறீர்கள் நுணாவிலான்.

மன்னிக்கவும்.சன் தொலைக்காட்சி என்பது தவறு.தவறுக்கு வருந்துகிறேன். தவறை சுட்டிக்காட்டியமைக்கு கந்தப்புவுக்கு நன்றி.

அர்யூன் இந்தப்பாடல்களின் வரிகளை எழுதியவர் தமிழ்நதி. ஒவ்வொரு ஈழத்தமிழர்களின் ஏக்கமும் இப்பாடலில் புதைந்து கிடக்கிறது. அதெப்படி இதை எழுதியவர் யாரென்றே தெரியாமல் கிணத்துத் தவளையைப் போல இருக்கிறீர்கள்? :D

எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவது என்பது அரசியல் வியாபாராமா? அது சரி நான் அறிந்தவரைக்கும் உங்கள் பின்னணி மிகுந்த சுயநலத்திற்குரியது.

உணர்வுள்ள மனிதனின் வெளிப்பாடு உங்கள் பார்வையில் விற்பனை அரசியலாகி விட்டதா? இந்தக்கருத்துக்களத்தில் நீங்கள் எறியும் கருத்துக்கள் பூவராங் ஆயுதம் போன்றது எறிவது இலகு ஏந்துவது கடினம். :lol:

நீங்கள் எழுதிய பாடல்களில் கூட வல்வை ஸாகிறா என்று கூறுவதில்லை.பாடியவர் பெயரை மட்டும் தான் கூறுவார்கள்.விரும்பினால் நீங்கள் பாடுங்கள்.........

C.M.R இல் சுகல்யாவின் குரலில் அடிக்கடி ஒலிக்கும் இந்த இனிமையான பாட்டு.

இதையும் அரசியலாக்கி விற்க பலர் தயார் நிலையில் போலுள்ளது.

ஒரு அழிக்கப்படும் இனம் தன்னை காப்பாற்ற செய்யும் எந்தவிதமான பரப்புரையும் விழுப்புணர்வும் நிச்சயம் அரசியலே.

எல்லாத்தமிழரும் செய்யவேண்டும், நீங்களும் செய்யலாம் :D

  • கருத்துக்கள உறவுகள்

சரிகாவுக்கும் பெற்றோருக்கும் பாராட்டுக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.