Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்தா- பீரிசு- சமரசிங்கா-தாமரா சுவரசியமான சில குத்துவெட்டுக்கள்.

Featured Replies

ஜெனீவா அமர்வை இடியப்ப சிக்கலாக்கிய மகிந்த – கொந்தளிக்கும் பீரிஸ்!

எவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டாலும், இலங்கைக்கெதிராக அமெரிக்கா ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பித்துள்ள பிரேணையை தோற்கடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கு முக்கிய காரணம் ஜனாதிபதி மகிந்தவின் திட்டமிடாத செயற்பாடுகளே என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு இலங்கைத் தூரக அலுவலகமொன்றில் அதிகாரிகளைச் சந்தித்த போதே வெளிவிவகார அமைச்சர் இதனை மிகவும் வெறுப்புடன் தெரிவித்துள்ளார்.

தான் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த போதிலும், ஜெனீவாவிற்கான இலங்கைக் குழுவின் தலைவராக அமைச்சர் மகிந்த சமரசிங்கவை நியமித்து தன்னை ஜனாதிபதி அவமதித்துள்ளதாகவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

சில வருடங்களுக்கு முன்னர் கொழும்பு ஒபரோய் விடுதியில் ”வெய்டராக” பணியாற்றிய மகிந்த சமரசிங்கவை, அக்காலத்தில் அநேகமானோர் ”பிஸ்சு மைக்கல்” என்ற அடையாளப்படுத்துவதாகவும் ஜீ.எல். கூறியுள்ளார்.

அப்போது ”சார்” என்று தன்னை அழைத்த ஒருவரை, தனக்கு தலைவராக நியமித்தது ஜனாதிபதி தன்னை அவமதிப்பதற்காக திட்டமிட்டு மேற்கொண்ட செயல் எனவும் ஜீ.எல். குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்ட கைத்தொழில்துறையில் வர்த்தமானி அறிவித்தலையோ, மனித உரிமைகள் தொடர்பான எந்தவொரு பொறுப்பையோ அமைச்சர் மகிந்த சமரசிங்கவிற்கு வழங்காததால் ஜெனீவா மாநாட்டில் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மகிந்த சமரசிங்கவை பெரிதாக பொருட்படுத்தவில்லை எனவும் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், ஜெனீவாவிற்கான இலங்கைத் தூதுவர் தமரா குணநாயகத்தின் தான்தோன்றித் தனமான செயற்பாடுகள், இலங்கை மீதான அழுத்தங்கள் அதிகரித்தன. தமரா குணநாயகம் மனநிலை சரியில்லாதவர் என்பதால் மருத்துவ அறிக்கைக்கு அமைய அவர் இதற்கு முன்னர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நபர் எனவும் ஜீ.எல்.பீரிஸ் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜெனீவா பேரவையின் ஏராளமான பொறுப்புக்கள் இவ்வாறு மனநிலை சரியில்லாத ஒருவரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமரா குணநாயகம் குறித்து தான் பலதடவை ஜனாதிபதியிடம் எடுத்துக்கூறிய போதிலும், அவர் இதனைப் பொருட்படுத்தவில்லை எனவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மகிந்த ராஜபக்‌ஷ எதிர்க்கட்சியில் இருந்தபோது, ஜெனீவா சென்ற சந்தர்ப்பத்தில் தமரா குணநாயகத்தின் வீட்டில் தங்கியிருந்தமையே இதனைப் பொருட்படுத்தாமைக்குக் காரணம் எனவும் ஜீ.எல்.குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனைச் சந்தித்திருந்தால் இவ்வாறான பிரேரணைத் தாக்கல் செய்யப்படுவதைத் தடுத்திருக்கலாம். இதுகுறித்து கலந்துரையாட வொஷிங்டன் வருமாறு ஹிலாரி கிளின்டன் அழைப்பு விடுத்திருந்தார். எனினும், செல்ல வேண்டாம் என ஜனாதிபதி உத்தரவிட்டார். இவையே தற்போது இந்தப் பிரச்சினை பூதாகரமாகியுள்ளதாக ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த பட்சம், ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேணை தொடர்பாக மகிந்த ராஜபக்‌ஷ, அமெரிக்க ஜனாதிபதி அல்லது அமெரிக்க இராஜாங்கச் செயலாளருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு இவ்விடயத்தை சமரசம் செய்திருக்கலாம்.

எனினும், மகிந்த இதனையும் செய்யவில்லை. அத்துடன், தனக்கும் அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவேண்டாம் என உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதியின் இவ்வாறான பிடிவாத செயற்பாடுகளினால் சர்வதேச அழுத்தங்களைக் குறைக்கவோ, பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணவோ முடியாது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

http://www.worldtamils.com/?p=15356

Edited by மல்லையூரான்

மகிந்த திட்டியதால் பீரிஸிற்கு வயிற்றோட்டம்- 600பிறாங் செலுத்திய ஸ்ரீலங்கா தூதரகம்!

Published on March 7, 2012-5:53 am ·

gl_sad_mood.jpgஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தங்கியிருந்த ஹொட்டலில் பிரமுகர்கள் சந்திக்கும் ஹொலில் வயிற்றோட்டம் ஏற்பட்டதால் அதனை சுத்தம் செய்வதற்கு சிறிலங்கா தூதரகம் அந்த ஹொட்டலுக்கு 600சுவிஸ் பிறாங்குகளை செலுத்தியுள்ளது. இத்தகவலை லங்காநியூஸ்வெப் என்ற இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

ஜெனவாவில் தங்கியிருந்த சிறிலங்கா குழு தினசரி ஹொட்டலில் மதுவிருந்தில் மூழ்கியிருந்ததாகவும், சம்பவம் நடைபெற்ற தினம் பீரிஸ், மகிந்த சமரசிங்க ஆகியோர் மதுபோதையில் சண்டை பிடித்த பின் சிறிலங்கா அதிபர் மகிந்த ராசபக்சவுக்கு தொலைபேசி மூலம் பீரிஸ் முறைப்பாடு செய்திருக்கிறார். மகிந்த ராசபக்சவோ பீரிஸை கடுமையாக திட்டியிருக்கிறார்.

இதனால் இருந்த ஹோபா கதிரையிலேயே பீரிஸிற்கு வயிற்றோட்டம் ஏற்பட்டதாகவும் இதன்போது அருகில் இருந்த டக்ளஸ் தேவானந்தா பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் ஜீ.எல்.பீரிஸை விடுதிக்கு அழைத்துச் சென்றதாக ஜெனீவாவிற்கான இலங்கைக் குழுவிற்கு தலைமை வகிக்கும் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஜெனீவா சென்ற இலங்கைக் குழு இரண்டாக பிளவுபட்டு ஏற்பட்ட உள்மோதல் குறித்து அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகையொன்றின் ஆசிரியர், மகிந்த சமரசிங்கவிடம் கேட்டபோதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

தன்னைக் குறித்து புரளி சொல்ல ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் சென்ற ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியிடம் நன்றாக வாங்கிக் கட்டினார். இதனால் அமைச்சருக்கு இருந்த இடத்தில் ”ஆயி” போய்விட்டார். இதனால் அவர் அமர்ந்திருந்த கதிரையும் நாசமானது. இதனைச் சுத்தம் செய்வதற்கு இலங்கைத் தூதரகம் மேலதிகமாக 600 பிறாங்கை விடுதிக்கு செலுத்த நேரிட்டுள்ளது என அமைச்சர் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஜெனீவா சென்றத்திலிருந்து ஜனாதிபதி அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜீ.எல்.பீரிஸைத் திட்டித் தீர்த்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

பீரிஸிற்கு மதுபோதையில் வயிற்றோட்டம் ஏற்பட்டதா? மகிந்த திட்டியதால் ஏற்பட்டதா? என்பது தெரியவில்லை என்றும் ஆனால் சிறிலங்கா தூதரகம்தான் 600பிறாங் செலவழிக்க வேண்டியதாக போய்விட்டதாகவும், சிறிலங்கா தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

http://www.thinakkathir.com/?p=31982

  • கருத்துக்கள உறவுகள்
:( :( :( :( :(:icon_mrgreen::wub:

மகிந்தா- பீரிசு- சமரசிங்கா-தாமரா சுவரசியமான சில குத்துவெட்டுக்கள்

உண்மையா இல்லை பொய்யா? :rolleyes:தமிழரை ஏமாற்ற சிங்களம் ஆடும் நாடகமா? :o

இல்லை கூட்டமைப்பு - நாடுகடந்த அரசு - உலகத்தமிழர் பேரவை சுவரசியமான சில குத்துவெட்டுக்கள்
என்று ( சிலரின் விருப்பத்திற்கு அமைய ) வந்திருக்க வேண்டுமா? :D

Edited by akootha

தமாரா குனனானாயகத்துகு அதுவா பிரச்சனை .....?

பாவம்தான் இந்த சின்ன வயசில எத்தினை சோதினைகள்?

  • தொடங்கியவர்

தமிழ் ஊடகங்களின் செய்திகளை நாம் வரிக்கு வரி நம்ப முடியாது. போராடடத்தில் தோற்றாலும் இவற்றை பார்க்க சந்தோசமாக இருக்கு. ஆகவே பிரேரணை முடிவு தெரியும் வரையாவது சந்தோசப்படுவோமே. அதன் பின் எல்லாம் பிரேரணை முடிவை பொறுத்தது.

ஜெனீவா பேரவையின் ஏராளமான பொறுப்புக்கள் இவ்வாறு மனநிலை சரியில்லாத ஒருவரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கேட்க எவ்வளவு சந்தோசமான செய்தி.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரணமாக தமிழ் ஊடகங்களில் வரும் செய்திகள் ஈயடிச்சான் கொப்பியாக இருக்கும். இச்செய்தி மட்டும் 3 ஊடகங்களில் மூன்று விதமாக உள்ளது.எங்கோ உதைக்கிறது.தவறான செய்தி அல்லது புனையப்பட்டசெய்தியாக மட்டுமே இருக்க முடியும்.

அமெரிக்காவின் உத்தேச தீர்மானத்திற்கு முன்னராக சிங்களம் பல ஆர்ப்பாட்டங்களை ஐ.நா., அமெரிக்காவிற்கு எதிராக நிகழ்த்தியது. இஸ்லாமியர்களும் எதிர்ப்பை காட்டினர். வடக்கு கிழக்கிலும் மக்கள் சம்பளத்துடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வைக்கப்பட்டனர்.

ஆனால் அந்த அமெரிக்க தீர்மானத்திற்கு பின்னர் அமைதி காக்கப்படுகின்றது.

சிங்களம் இராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றதா?

இல்லை தீர்மானம் நிறைவேற்றப்படாது என்ற நம்பிக்கையில் உள்ளதா?

இல்லை நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை அமுல்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதா?

அமெரிக்காவின் உத்தேச தீர்மானத்திற்கு முன்னராக சிங்களம் பல ஆர்ப்பாட்டங்களை ஐ.நா., அமெரிக்காவிற்கு எதிராக நிகழ்த்தியது. இஸ்லாமியர்களும் எதிர்ப்பை காட்டினர். வடக்கு கிழக்கிலும் மக்கள் சம்பளத்துடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வைக்கப்பட்டனர்.

ஆனால் அந்த அமெரிக்க தீர்மானத்திற்கு பின்னர் அமைதி காக்கப்படுகின்றது.

சிங்களம் இராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றதா?

இல்லை தீர்மானம் நிறைவேற்றப்படாது என்ற நம்பிக்கையில் உள்ளதா?

இல்லை நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை அமுல்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதா?

அல்வா குடுக்க தயாராகின்றார்கள்.

http://www.thesundayleader.lk/2012/03/11/draft-reconciliation-policy-to-be-released/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்காவின் உத்தேச தீர்மானத்திற்கு முன்னராக சிங்களம் பல ஆர்ப்பாட்டங்களை ஐ.நா., அமெரிக்காவிற்கு எதிராக நிகழ்த்தியது. இஸ்லாமியர்களும் எதிர்ப்பை காட்டினர். வடக்கு கிழக்கிலும் மக்கள் சம்பளத்துடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வைக்கப்பட்டனர்.

ஆனால் அந்த அமெரிக்க தீர்மானத்திற்கு பின்னர் அமைதி காக்கப்படுகின்றது.

சிங்களம் இராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றதா?

இல்லை தீர்மானம் நிறைவேற்றப்படாது என்ற நம்பிக்கையில் உள்ளதா?

இல்லை நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை அமுல்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதா?

இந்த அமைதிக்கு ஆயிரம் அர்தங்கள் இருக்கும்

, இலங்கையும் இந்தியாவும் உள்ளுக்குள்ளால அமெரிக்காவுடன் பேசிக்கொண்டு இருக்கும், அதை எல்லாம் தாண்டி இந்த தீர்மாணம் நிறைவேற்றபடவேண்டும்.

இப்படி தலை கழண்ட கேசுகளும் ,வயித்தால போகும் ஆட்களும் தொடர்ந்தும் எங்களை இராணுவ ரீதியிலும்,இராஜ தந்திர ரீதியிலும் வெல்லுகின்றார்கள் என்றால் ?

எங்கடைகள் எப்படியானதுகளாக இருக்க வேண்டும்.

அல்வா குடுக்க தயாராகின்றார்கள்.

http://www.thesunday...to-be-released/

இந்த அல்வாக்களைப்ப்றி சர்வதேசம், குறிப்பாக மேற்குலகம் நன்கே தெரிந்து வைத்துள்ளது. பார்க்கலாம் என்ன நடக்கும் என்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.