Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடர் கவிதை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதுவும் மறக்காது எழுதுகின்ற என்நினைவு

பனித்திருக்கும் பவளமென புல்லினமும் நெல்லினமும்

படருகின்ற பகலவனின் புதுக்காலைக் கதிர்பட்டு

தனித்திருந்த பறவையினம் இனித்தூங்க மனமின்றி

திரைதிரையாய் இனம்கூடி தொலைகூட்டும் திசைஎட்டு

இனித்திருக்கும் இளவேனில் இளங்காலை எழில் இன்றும்

மனத்திரையில் மலர்வதுபோல் மயங்குகின்ற ஓர்உணர்வு

  • Replies 54
  • Views 8.1k
  • Created
  • Last Reply

மனத்திரையில் மலர்வதுபோல் மயங்குகின்ற ஓர்உணர்வு

தினந்தினமும் எழுகையிலே தாய்நாடு ஈர்க்கையிலே

இடைநழுவும் களிசாணும் கிட்டிபுள்ளு தடிகளுமாய்

குடைந்தசிறு குழிகளுமாய் புழுதியளைந்த பொழுதுகளும் போயினவே

எட்டுமாங்கொட்டையும் கிளித்தட்டும் ஓடிப்போய் கனமான சுமைசேர்க்க

எல்லாம் கனவாகி ஏதோஒரு காலமாகி மயங்குகின்ற ஓர்உணர்வு! :)

மனத்திரையில் மலர்வதுபோல் மயங்குகின்ற ஓர்உணர்வு

தினந்தினமும் எழுகையிலே தாய்நாடு ஈர்க்கையிலே

இடைநழுவும் களிசாணும் கிட்டிபுள்ளு தடிகளுமாய்

குடைந்தசிறு குழிகளுமாய் புழுதியளைந்த பொழுதுகளும் போயினவே

எட்டுமாங்கொட்டையும் கிளித்தட்டும் ஓடிப்போய் கனமான சுமைசேர்க்க

எல்லாம் கனவாகி ஏதோஒரு காலமாகி மயங்குகின்ற ஓர்உணர்வு! :)

எல்லாம் கனவாகி

ஏதோ ஒரு காலமாகி

போனது போனதுதான்

மயங்காதே என்கிறேன்

மனசிடம் - கேட்கிறதா?

அந்த ஓலை பாயில்

உறங்கிய நாட்களையுன்

பஞ்சு மெத்தை தூக்கம்

வென்றதா என கேட்டு

மீண்டும்... நெஞ்சில் அறைகிறதே! :arrow:

பஞ்சு மெத்தையில் தழுவாதாம் தூக்கம்

மாமரவடி மரக்கட்டிலுக்கு நன்றி

காப்புறிதி கட்டியே கடனாளியானேன்

நன்றி என் அன்புச் சைக்கிளே

ஒரு நாளைக்கு மூன்று திரைப்படம்

புனிதாக்கா உங்கட பசுக்கன்று எப்பிடியிருக்கு

நீலம் சில்க்ல மலிவு விற்பனையாம்

லோன்ரில சீருடை எடுக்கவேணும் வாடி நீயும்.

{நீலம் சில்க்-கனடாவில இருக்கிற ஒரு புடைவைக் கடை}

பஞ்சு மெத்தையில் தழுவாதாம் தூக்கம்

மாமரடி மரக்கட்டிலுக்கு நன்றி

காப்புறிதி கட்டியே கடனாளியானேன்

நன்றி என் அன்புச் சைக்கிளே

ஒரு நாளைக்கு மூன்று திரைப்படம்

புனிதாக்கா உங்கட பசுக்கன்று எப்பிடியிருக்கு

நீலம் சில்க்ல மலிவு விற்பனையாம்

சட்டை தைக்கக் குடுக்கப்போறன் வாடி நீயும்

{நீலம் சில்க்-கனடாவில இருக்கிற ஒரு புடைவைக் கடை}

எனக்கு தெரிந்த விளக்கம் :P

பஞ்சு மெத்தையில் தழுவாதாம் தூக்கம்

ஊரோடு நின்று உக்கிய

மாமரத்தடி கட்டிலே எப்போ வருவாய்?

வாகனக் காப்புறுதி கட்டியே கடனாளியானேன்

கிடங்கு முடங்கெல்லாம் என்னை குலுக்கிச் சிரித்த

என் ஓட்டைச் சைக்கிளே நீ எங்கே?!

ஒருநாளைக்கு மூன்றுபடத்தில் மூச்சு வாங்கல்

பசுவை கன்றை நாயை பூனையை

விசாரிக்கும் உலாத்தலில் ஊரில் தேகாரோக்கியம்

நீலம் சில்க் மலிவு விற்பனையாம்

அலுமாரியில் குட்டிக்கடை ஆரம்பம்

'லோன்ரில சீருடை எடுக்கவேணும் வாடி நீயும்..'

சிக்கனத்தில் சிறந்த வாழ்வு.

சிக்கனத்தில் சிறந்த வாழ்வு

சிங்களத்தால் சிதைந்த வாழ்வு

இலங்கைத் தீவினிலே

சிங்கள வைப்பகத்தில்

அதிகம் சேமித்தவர்

தமிழர்தானாமே

இன்றும் புலத்தில்

அதிக சேமிப்புடன்

தாயக நினைவுகளை

விட்டெறியா பசுமையுடன்

பச்சை வயல் வெளியில்

பட்டம் விட்ட காலங்கள்

பட்டம் காசுக்காய்

விளம்பரங்களாய் பத்திரிகையில்

பள்ளி படிக்கையிலே

வெள்ளைச் சட்டையுடன்

கையில் புத்தகமும்

நையாண்டிப் பேச்சுகளும்

வெள்ளைக்காரனிற்கு தலையாட்ட

நையாண்டி சிரிப்புடனே

அடுத்தவரை அழைத்துவந்து

இவனிற்கு ஏவல்

'இவனிற்கு ஏவல்'

ஏவலிட்டது சிங்கள அரசு

துவட்டப்பட்டனர் தமிழர்

சிங்களக் குண்டர்களால்..!

இழந்து விட்டோம் உயிர்கள் பல

இடம்பெயர்ந்தோம் அகதிகளாய்

புலம்பெயர்ந்தோம் வெளிநாடு

கடன்பட்டோம் இந்நாட்டில்

புலம்பெயர்ந்து தான் விட்டோம்-ஆனாலும்

தாயக நினைவுகள் மட்டும்

புலம் பெயர மறுக்கின்றது...!

புலம்பெயர்ந்து தான் விட்டோம்-ஆனாலும்

தாயக நினைவுகள் மட்டும்

புலம் பெயர மறுக்கின்றது...!

புலம்பெயர மறுக்கின்றது

புலம்பெயர்ந்த வாழ்வினிலும்

சாதிகளே பெரிதென எண்ணும்

எண்ணம் மட்டும்

போக மறுக்கிறது

சாதிகள் இல்லையடி

குலத் தாழ்ச்சி

உயர்ச்சி சொல்லல்

பாவம் என்றுரைத்த

பாவலனின் கனவுதனை

எள்ளி நகையாடி

தொடர்கின்றனர் சாதிதனை

தொழிலிற்கோர் சாதியென

சாதித்து நின்றபின்னர்

வாழ்விற்காய் செய்கின்றார்

அத்தொழிலே தம் தொழிலாய்

சாதிமட்டும் அழியவில்லை

சாதிமட்டும் அழியவில்லை

'சாதி, சாதி' என்று ஆக்கங்கள் சொன்னாலும்

புகலிடத்தில் சாதித்த சாதனைகள் என்ன என்ன?!

தாயகத்தில் சாதித்த சரித்திரங்கள் கணக்கற்று

வீரம் தியாகமென வீரியமாய் நிமிர்ந்துநிற்க

புகலிடத்தில் சாதனைகள் தமிழினத்தை நிமிர்த்திடுமா?!

நிமிருமா நாய்வால்

பேத வர்க்கமற்ற காதல்

சமூகப் புரட்சி

கதைக் கருவாக இன்னும்

கதை கருக்கள் இன்னும்....

கழிப்பறையிலேயே தூங்குகின்றன ...

ஏதாவது சட்டம் யாரும் போட்டால் என்ன? ..

இனியாவது திருந்து தமிழா..

எத்தனை மாற்றம் கொண்டாலும் ...

ஏன் இன்னும் பழமை வாதம்

எம் முதுகிலிருந்து ..

இறங்கி போவதாய் இல்லை???

இறங்கிப் போகமறுப்பதனை இறக்கி வைப்பதற்கு

இறைவன் கொடுத்த இனிய கொடை

இந்து சமுத்திரத்தில் புதிய நாடமைத்து

பழமைவாதமெனும் மடந்தைதனை மாற்றி வைத்திடவே

பரிதி போன்றவொரு தலைவன் கிடைத்திட்டான்

அடுப்பங் கரையிலே அடக்கிக் கிடந்தவளை

அந்நியப் படையை அடித்தழிக்கும் மகளாக்கி

தேசத்தை காத்திடும் தேசியப் பணிதனிலே

பங்கினை வளங்கிட வாரி அழைத்திட்டார்

தாயகப் பணிதனிலே பங்கினை வளங்கி நிற்கும்

மாதர் சொல்வார்தம் செயலான கதைக்கருவை

வளையலவள் என்று

கதையும் சொல்லி

வட்ட நிலா என்று

கவியும் எழுதி

அழகுப் பொருளாய்

பெண்ணை அசிங்கப்படுத்தினரங்கே!

தொலைந்தது அக்காலம்!

தீ பந்தம் ஏந்திய

தேவதைகள் - ஒளியில்

தேசம் மெல்ல விடிகிறது! :arrow:

மொட்டைக் கறுப்பனுக்காய்

தட்டையாய் நிலம் பரவி

ஆழ நாற்று நட்டு

மூமாதம் காந்திருந்து

அறுக்கும் நாம் தமிழர்.

தேசப் பயிருக்காய்

நாற்று நட்டோம்

களை பறித்தோம்

காவல் போட்டோம்.

காத்திருப்போம்.

அதை அறுக்க உளம் வருமோ...???

அறுப்பவர் தலைகள் அறுபடும்

அறுப்பவர் உயிர்கள் விடை பெறும்.

மறுப்பவர் கைகள் உடைபடும்

காப்பவர் கைகள் உரம்பெறும்.

ஏய்ப்பவர் செயல்கள் பொடிபடும்

மேய்ப்பவன் செயல்கள் பலம் பெறும்.

புலிகளின் கனவுகள் நிஜம் பெறும்

தமிழ் இனம் விரைவில் தமிழீழம் பெறும்.

பெறுகின்ற தமிழீழம் உயர்வடைய

உயர்ந்துள்ள எம்மவரும் கரம்கொடுப்பார்

கொடுத்திடும் கரங்களை அணைத்து

அணையாத தமிழீழம் அடைந்திடுவோம்

அடைய முடியாது என்றிருந்த தமிழீழம்

தமிழீழ மக்களின் கரம்வரும்

கரம்தனை தரவிரும்பும் இளையவர்கள்

இளமையான தம் அறிவுதனை வழங்கிடுவர்

அடையமுடியாது

என்று சிலர் சொன்ன தமிழீழம்

அருகில் -மிக அருகில் வந்ததுவே!

குருதி கொண்டொரு

வேள்வி நடத்தினோம்

கொள்கைவீரர் ஈந்த

ஆவியில் வாழ்வு கொண்டோம்..........

நெஞ்சுக் கூட்டுக்குள்

பயந்து - பயந்து....

நித்தம் செத்தழியும்

வாழ்வு தொலைத்து....

ஆலமரமாய் எழுந்து நிற்கிறோம்!

ஆணிவேராம்

அண்ணன் புகழ் என்றும் பாடுவோம்! :arrow:

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

ஆணிவேராம் அண்ணன் புகழ் என்றும் பாடுவோம்.

தம்பியாகி அண்ணண் ஆகி இன்று மாமாவாகி நிற்கும் எம் தலைவர் புகழ் பாட

விண்ணும் மகிழ்ந்து மழைத்தூறலால் புகழ

மண்ணும் மகிழ்ந்து அறுவடைகளை தந்திட

பஞ்சம் இன்றி பசி இன்றி

தணைத்தலைவர் காலத்தில் வாழ்கின்ற மகத்தான அனுபவத்தை எண்ணி

கூடி பாடி மகிழ்ந்து விடுவோம்.

விடுவோம் பானங்கள்

மலரே மதுவே மதுரசமேஎன

கோடைகாலத்துக் கொழுகொழும்பை காண்பதற்று

விடுவோம் கோடிக் கதைகள் விடுவோம்

காதல் என்ற கவலையை விடுவோம்

சாதல் என்ற சுமைகளை விடுவோம்

காலம் என்ற ஆழ்கடல் நீரில்

களிப்பு என்ற படகுகள் விடுவோம்!! 8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேண்டா கதைகள் விடுவோம்

வேண்டும் விதைகள் இடுவோம்

காதலை நெஞ்சில் விதைப்போம்

கனவினை மண்ணில் புதைப்போம்

சாதலையும் மகிழ்வாய் ஏற்ப்போம்

காலம் என்ற பெயரில்...காலம்

கடத்துவதை தவிர்ப்போம்... :D

தவிர்ப்போம் என்று மேடையில் குளறி

கவிழ்ப்போம் எனவே வாழ்க்கையை கிளறி

முகிழ்ப்போம் என்ற சிந்தனை கருகி

அழிழ்ப்போம் எனவே பலரும் அருகி.

உணர்வின் பகுதிக் காதலைப் பெருக்கி

வில்லைக்கண்ணால் உருவை பெருக்கி

மனதை அழித்து வாழ்வைத் தொலைத்து

பிறவிப்பயனை கொல்லும் மனிதா! சிந்தி!! :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலம் கடத்துவதை தவிர்ப்போம்

கடந்துவந்த பாதைகளை மறவோம்.

களிப்பு என்ற படகுகள் விடுவோம்

கடந்தகால நினைவுகளைத் தொடுவோம்.

காலைக் கதிரவன் வரவும்

கலைந்திடும் இரவுப் பனியும்

புள்ளினம் எழுப்பும் ஒலியும்

புூக்களின் நிசப்த விரிவும்

வண்டினம் எழுப்பும் இசையும்

வீசிடும் வாடைக் காற்றும்

கண்டுநாம் களித்த காலை

என்றுதான் மீண்டும் வருமோ?

வருமோ....வருமோ....

அவள்- கடிதமென்று

போஸ்மனை....

-எதிர் பார்த்து

நானிருந்த ...காலங்கள் !

மணி -அடிக்கும்

போதெல்லாம்

அவள் போனென்று...

-எதிர் பார்த்து

நானெடுத்த...நேரங்கள் !

கண்- மூடும்

போதெல்லாம்

எதிரில் அவளிருந்து

என் - மனதில்...

போட்டுவைத்த....கோலங்கள் !

heartthingy8cu.gif

:arrow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வருமே வருமே

வசந்த காலங்கள் வருமே!

வண்ண நிலாக்காலங்களும் வருமே!

போஸ்மனும் வருவார்..

கடிதமும் வரும்..-ஆனால்

காதல் கடிதத்தில் வருமோ!

போன் அடிக்கும்

கையேடுக்கும்..-வாய்

மெளனமாய் பதிலளிக்கும்

அதனால் என்றாலும்

காதல் வருமோ!

தூக்கம் வருமோ!

கனவு வருமே

காதல் நினைவு எழுமே

காலை வருமே

விடியே வேலையும் வருமே

பேசமல் தூங்கிடு

வேலையாவது மிஞ்சட்டும்

வேண்டாத நினைவை

தலாட்டி தூங்க வை..

வந்து சேரும் நீ வருமோ!?

என்றவை... :)

வருமோ என்றவை

என்று வரும்...?

போனெடுக்கும்

நேரமெல்லாம்...

யுனிற் ஓடும்-ஆனாலும்

அவள் குரல் இனிக்கும்!

எங்கள் இதழ் சிரிக்கும்...

அந்தநேரம் பிடிக்கும்!

போஸ்மன் வரும்

போதெல்லாம்...

பில்லு வரும்-ஆனாலும்

அவள் ஓலை வரும்....

நாளைப் போல

எந்த நாள் வரும்...?

இன்றுவரும்-நாளைவரும்..

காலை வரும்..பின்

வேலை வரும்....

கையில் காசு...எப்பவரும்....?

இது போல- நாளை

-என்றும் வரும்!! :)

1370943rv5rw.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.