சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
1007 topics in this forum
-
சர்வதேச பெண்கள் தினம் – March 08, 2021 ================================ உலகெங்கும் பெண்களுக்கான சர்வதேச தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உண்மையில் இந்தத் தினம் ஒரு கொண்டாட்டத்துக்கு உரிய தினமாகக் கொள்வதற்கான நாள் இன்னமும் வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக பல நாடுகளிலும் பல்வேறு பெண்கள் அமைப்புகள் தொடர்ச்சியான போராட்டத்தின் பின்னரே இன்று அவர்கள் அனுபவிக்கும் சில உரிமைகளை இன்று அனுபவிக்கிறார்கள். ஆனால் பலநாடுகளில் வாழும் பெண்கள் இன்றும் பல்வேறு அடக்குமுறைகளுக்கும் உள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் கசப்பான உண்மை. சம உரிமை என்பது வெறும் ஏட்டில் உள்ள விடயமாகவே இருக்கிறது. பெண்கள் தமது உரிமைகளையும் சுதந்திரத்தையும் அனுபவிப்பதற…
-
- 0 replies
- 893 views
-
-
சமூகத்தில் வெளியே தெரியாத பெண் அடிமைத்தனம். இதை ஆணாதிக்க மனப்பான்மை உடையவர்களால் புரிந்து கொள்ள முடியாது. இது மிகச் சிறந்த கணவனாலும் நிகழ்த்தப்படும் மிகப்பெரிய வன்முறை! பார்த்ததில் மனதை வருடிய காணொளி. நானும் தவறு செய்கின்றேன் என உணர்த்திய காணொளி.
-
-
- 8 replies
- 660 views
-
-
-
சாண் ஏற பப்பா சறுக்கும் நேற்றைக்கு விட்டதை எப்பிடியாவது இண்டைக்குப் பிடிக்கோணும் எண்ட எண்ணம் இரவு நித்திரையைக் குழப்பிச்சுது. நித்திரையால காலமை எழும்பி வீட்டில ஒருத்தரும் பாக்காத நேரம் அலுமாரிப் பெட்டீக்க பயந்து பயந்து வைச்ச கைக்கு அம்பிட்டதோட போனன் , “ எப்பிடியும் விட்டதை இண்டைக்கு பிடிக்கிறதெண்டு “ . காலமை முழுக்க கவனம் சிதறினபடி இருக்க மத்தியானம் சாப்பாட்டு மணி அடிச்ச உடனயே ஓடிப்போய் ரகசியமா விக்கிறவனைக் கண்டு பிடிச்சு கையில இருக்கிற காசை குடுத்தா மூண்டு தந்தான். புளியமரத்தடீல போய் நிண்ட ஆக்களோட சேர மூண்டு இருந்தால் சேக்கேலாது , குறைஞ்சது நாலாவது வேணும் எண்டு சொல்லி திருப்பி அனுப்பினாங்கள். என்னை மாதிரி மூண்டோட நிண்ட ஒருத்தனைக் கண்டு பிடிச்சுக் “…
-
- 3 replies
- 840 views
- 1 follower
-
-
சாதி கெட்ட 'சாதி' - சுப.சோமசுந்தரம் தலைப்பில் முதலில் வரும் சாதி, ஒழுக்கம் எனப் பொருள்படும் தமிழ்ச் சொல்; பின்னர் வரும் 'சாதி', ஜாதி எனும் பிரிவினையின் தமிழ் வடிவம். ஒரு கணித ஆசிரியர் என்ற முறையில், மும்பையில் கணித மாணாக்கர்க்காக அகில இந்திய அளவில் நடைபெற்ற ஒரு தொடர் நிகழ்வில் பங்கேற்ற பின் ஞாயிறன்று (16 ஜூன் 2024) ஊர் திரும்பியதும் நேற்று (17 ஜூன்) ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தோழர் பேரா.வ.பொன்னுராஜ் அவர்களுடன் கலந்து கொள்ளும் நல்வாய்ப்பு அமைந்தது. அந்தப் பக்கம் செல்லும்போது கணித உலகின் நட்பு வட்டம் "Back in the saddle" என்று நினைக்க வைப்பதும், இந்தப் பக்கம் வரும்போது தோழர்கள் அதே உணர்வைத் தருவதும் (இல்லாத) இ…
-
-
- 3 replies
- 672 views
- 2 followers
-
-
யேர்மனியில் முன்னாள் நாசிகள் வதை முகாமில் ஆன்மாக்களைத் தூய்மைப்படுத்தும் புனித வேலையில் இறங்கி இருக்கிறார் ஒரு இந்துமதக் குரு. அதற்காக அவர் தேர்ந்தெடுத்திருந்த இடம், 500 பேர்கள் வசிக்கும் Springen என்னும் கிராமம். மொரீஸியஸ் நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட மஹாடேயோசிங் கோமல்ராம் (45) (Mahadeosingh Komalram)தான் அந்தக் குரு. ‘ஓம் சாந்தி’ பணிகளுக்காக தன் பெயரை சுவாமி விஸ்வானந்தா என மாற்றிக் கொண்டிருக்கிறார். 1998இல் ஐரோப்பா எங்கும் வலம் வந்த சுவாமி 2005இல் யேர்மனிதான் தனக்கு உகந்த இடம் எனத் தீர்மானித்து அங்கேயே தனது ஆச்சிரமத்தை அமைத்துக் கொண்டு ‘பக்தி மார்க்கம்’ என்ற பெயரில் தனது சேவைகளைச் செய்து கொண்டிருக்கிறார். போதைப் பொருள் பாவனை, பாலியல் தொல்லைகள், சுவிஸ் நாட்டு…
-
- 1 reply
- 640 views
-
-
சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது. அடைப்புகள் ஏற்பட்டன. இரண்டாயிரத்தில் பைபாஸ் செய்துக்கொண்டேன். அப்போதும் சிகரெட் பிடிப்பவனாக இருந்திருந்தால் மரணம் அன்றே குறிக்கப்பட்டிருக்கும். சிகரெட் நிறுத்தி ஆரோக்கியத்தை அதிகப்படுத்தியதால் அந்த ஆபரேஷனை சமாளிக்க முடிந்தது. பிறகு பத்து வருடங்கள் எந்தவித இம்சையும் இல்லாமல் அழகாக வாழ்க்கை ஓடியது. 2011 இல் நீரிழிவு காரணமாக ரத்தக்கொதிப்பின் காரணமாக மறுபடியும் அடைப்பு ஏற்பட, இரண்டாம் முறை பைபாஸ் செய்து கொண்டேன். சுவாச பயிற்சி செய்திருந்ததால், மூச்சு பற்றிய ஞானம் இருந்ததால், தினந்தோறும் காலையும் மாலையும் வேகமாக நடந்ததால், மெல்லிய உடற்பயிற்சிகள் செய்ததால் இரெண்டாவது பைபாஸையும் தாண்டிவர முடிந்தது. ஆனால் இரண்டாய…
-
-
- 29 replies
- 1.7k views
- 1 follower
-
-
சிங்கள அரசு, பணம் செலுத்திய ஆயுதங்களை "சிங்களத்துக்கு தண்ணி காட்டி" முல்லைத்தீவுக் கடலில் வைத்து இறக்கிய புலிகள்.! ★1997-05-13 அன்று புத்த பிக்குகளால் பிரித்தோதி, நல்ல சுபமுகுர்தம் பார்த்து, முப்படைகளின் திட்டமிடல், மற்றும் வல்லரசுகளின் ஆலோசனைகளுடனும் ஆரம்பிக்க பட்டது ஜெயசிக்குறு (OPERATION JAYASIKURU) இராணுவ நடவடிக்கை. ஆரம்பம் என்னவோ பெரும் விளம்பரத்துடன் நல்லா தான் இருந்தது. ஆனால் சண்டையின் போக்கு தான் எதிரிக்கு சாதகமாக இருக்கவில்லை. புலிகளின் தொடர் முறியடிப்பு தாக்குதலால் எதிரி திணறடிக்க பட்டான். உலகின் நீண்ட இராணுவ நடவடிக்கையாக (108நாட்கள் ஜெர்மன் படைகளால் ரசியாவுக்கு எதிராக 2ம் உலகப்போரின் போது மேற்கொள்ளப் பட்ட இராணுவநடவடிக்கை) பதிவு செய்யப்பட்ட "பப்ப ரோசா"…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிங்களக் கொடியுடன் விஜய் சேதுபதி | உங்க சேட்டை இனிமே பலிக்காது
-
- 0 replies
- 1.3k views
-
-
பழைய சம்பவங்கள் சிலவற்றை நினைவூட்டிய உரை.
-
- 0 replies
- 267 views
- 1 follower
-
-
சிங்களம் மாறுமா? “அரசன் அன்று அறுப்பான், தெய்வம் நின்று அறுக்கும்” என்பது தமிழர் வாழ்வியலில் அடிக்கடி பேசப்படும் பழமொழிகளில் ஒன்று. இலங்கை தேசத்தின் இன்றைய நிகழ்வுகளால், இன்று இந்தப் பழமொழி மீண்டும் ஒரு வலம் வந்து கொண்டிருக்கிறது. எங்கள் தமிழ் இனத்தை, எங்கள் குலத்தின் வீரமறவர்களை, அன்று இனவழிப்புச் செய்த அன்றைய இலங்கை அரசனையும், அவர்தம் குடும்பத்தையும், இன்று அந்த அரசனது சிங்கள இனமே, தூஷிப்பதையும் துரத்துவதையும் பார்த்து பார்த்து தமிழர்கள் அகம் மகிழ்வதை யாராலும் மறுக்க முடியாது. இனவிடுதலை என்ற உன்னத நோக்கத்தோடு போராடி, விடுதலை தாகம் அடங்காமலே உயிர் நீத்தவர்களின் சாந்தியடையாத ஆத்மாக்கள் தான், இன்று உயிர் கொண்டெழுந்து…
-
- 0 replies
- 545 views
-
-
சிங்களவர்களை... திருமணம் செய்ய, முண்டியடிக்கும் யாழ் பெண்கள்... குறிப்பாக பல்கலைக்கழக மாணவிகள் சக சிங்கள மாணவர்களை திருமணம் செய்வதை காதலிப்பதை இப்போது ஒரு பேசனாக கொண்டுள்ளார்கள்... சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு விவாகப் பதிவாளரோடு பேசும்போது அவர் சொன்ன விடயம்... யாழ்ப்பாணத்தில் இப்போது பொலிஸ், ஆர்மி, CID யினரை திருமணம் செய்யும் படித்த பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு தனியார் அரச துறையில் பணியாற்றும் சிங்களவர்களை மணமுடிக்கும் போக்கும் அதிகரித்திருப்பதாக கூறினார். தன்னிடம் விவாக பதிவுக்கு வரும் கணிசமான ஆசிரியைகள்... சிங்கள பொலிஸ், மற்றும் CID யினை விரும்பி மணமுடிக்கும் போக்கு இருக்கிறது என்று கூறினார். முன்பு சிங்கள ஆண்களை மண…
-
- 45 replies
- 4.4k views
-
-
சிங்களவர்கள் யாராக இருந்தாலும் தமிழ் மக்களுக்கு தீர்வைத் தரமாட்டார்கள்! – யோகரட்ணம் யோகி. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒரு விடயத்தை திரும்ப, திரும்பக் கூறி வருகிறார். அது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் போதும் தெரிவிக்கப்பட்டதுதான். இந்திய-இலங்கை ஒப்பந்தங்களை நாங்கள் ஏற்காதபோதும் ஏதோ ஒரு வகையில் அதனைச் செயற்படுத்தி தமிழ் மக்களினது விருப்பங்களைத் தீர்க்குமாக இருந்தால் நாங்கள் ஒத்துழைக்கிறோம் என்று தலைவர் பிரபாகரன் கூறிய போதும் ஒன்றைச் சுட்டிக்காட்டினார். சிங்கள இனவாத பூதமானது இதனையெல்லாம் விழுங்கிவிடும் என்றார். ஆனால் அப்போது அதனைக் கேட்கவில்லை. பலர் அதனைச் சாட்டாக வைத்துக்கொண்டு ஆயுதங்களை ஒப்படைத்து விட்டதாகவும் மக்களாட்சி முறைக்…
-
- 21 replies
- 1.9k views
-
-
https://m.facebook.com/story.php?story_fbid=4787670431319151&id=100002287252856
-
- 1 reply
- 1.2k views
-
-
Babugi Muthulingam யாழ்.மாநகர சபையில் பணியாற்றிய கடைசி சிங்களவர் சிறிமான்ன. யாழ் நூலக எரிப்பின் ஒரு சாட்சியமாக விளங்குகிறார். இதுவரை வெளியாகாத சில தகவல்களையும் அவர் நமக்கு ஒப்புவிக்கிறார். 1981 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தேர்தலின் போது யாழ்ப்பாணத்தில் ஒரு அரச ஊழியராக இருந்த டீ.டபிள்யு சிறிமான்ன தேர்தல் நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட ஊழியர் சிறிமான்ன. “1981 ஆம் ஆண்டு ஜூன்.நான்காம் திகதி நடந்த அந்த தேர்தலில் பணியாற்ற வேண்டியிருந்தது. குருநாகல் மாவட்ட ஆணையாளரின் பரிந்துரையின்படி தேர்தல் பணிகளில் நான் ஈடுபடுத்துவதற்க…
-
- 2 replies
- 790 views
-
-
சிறீ லங்காவின், மாண்புமிகு புதிய சனாதிபதி அவர்கள் சில காலங்களுக்கு முன்னர் பேசிய வீடியோ ஒன்றை நேற்றுப் பார்த்தேன். யாழ் பொதுநூலகம் எரிக்கப்பட்டதையும் அதை எரிக்க காரணகர்த்தாவாக இருந்த ஜே ஆர் அவர்களையும் வன்மையாக கண்டித்து அவர் பேசியிருந்தார். அதைக் கேட்டு எமது பயப் புள்ளைகள் எல்லாம் பயங்கரமாக உணர்ச்சிவசப்பட்டு ஏராளமாக ஷெயார் செய்திருந்தார்கள். யாழ் நூலகத்தை ஜே ஆர் எரித்தற்கான அவர் சொல்லும் காரணம்... மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் வெல்வதற்காகத்தான் ஜே ஆர் யாழ் நூலகத்தை எரித்தாராம். இதுதான் சிங்கள முற்போக்குவாதிகள், இடதுசாரிகள், புத்திஜீவிகளின் புத்திசீவித்தனம்! பிற இனங்கள் மீதான சிங்களப் பேரினவாதத்…
-
-
- 3 replies
- 771 views
- 1 follower
-
-
மகள் சோம. அழகு 'திண்ணை' இணையத்தில் எழுதிய, 'மகிழ்' என்று தலைப்பிட்ட சிறுகதையை இங்கே மீள்பதிவு செய்கிறேன். அரசியல் சமூகம் மகிழ் ! -------சோம. அழகு உவன் பணிக்குச் சென்ற பின் சுடச்சுட போர்ன்விட்டாவுடன்(உவள் ஒரு ‘tea’totaller! ஏன்? தேநீர் என்று எழுதினால்தான் எழுத்துக்குரிய இலக்கணமும் உணர்வும் பெறுமா? தேநீரின் ஒவ்வொரு மிடறுக்கும் ச…
-
- 0 replies
- 1k views
- 1 follower
-
-
1876- 1878 ஆண்டுகளில் மதுரை மிக மோசமான பஞ்சத்தை சந்தித்தது, எங்கள் பாட்டி வீடு 19 கீழ் அனுமந்தராயன் கோவில் தெருவில் 137 ஆம் வயதில் இன்னும் உள்ளது, இந்த தெருவில் மாற்றம் காணாத பழைய வீடென இது மட்டுமே எஞ்சியுள்ளது, இந்த வீட்டிற்கு ஒரு துயரமான சாபம் உண்டு ,அது ஒரு சிறுமியின் சாபம்., நவராத்திரி சமயத்தில் பட்டுப்பாவாடை அணிந்து அக்கம் பக்கம் சுற்றி விளையாடிய சிறுமி அன்று நெல் களஞ்சியத்தின் கதவு திறந்து வைத்திருப்பதைக் கண்டதும் அதன் உள்ளே உள்ள உயரமான பானைகளில் ஒன்றில் சென்று ஒளிந்து கொள்கிறாள்,பின்னர் உறங்கியும் போகிறாள். மகாபஞ்சத்தின் எதிரொலியால் மக்கள் அந்தந்த பருவங்களில் என்ன உணவு தானியங்கள் கிடைக்கிறதோ? அதை வாங்கி சேர்த்து வைக்கத் துவங்கியிருந்த கால…
-
- 1 reply
- 1.3k views
-
-
சில வாரங்களில் 3 ஆவது உலக போர் : இந்திய ஜோதிடரால் பரபரப்பு! உலகில் இன்னும் சில வாரங்களில் 3 ஆவது உலக போர் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்தியாவை சேர்ந்த பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்திருப்பது சமூக வலைத்தளங்களில் தகவலாகப் பரவிவருகின்றது. அரியானாவை சேர்ந்த பிரபல ஜோதிடரான குசால் குமார் என்பவரே இது தொடர்பாக தனது வலைதளப்பக்கத்தில் கூறியுள்ளார். தற்போது ரஷ்யா – நோட்டா உறுப்பு நாடுகளின் ஆதரவு பெற்ற உக்ரைன் இடையிலான போர் மற்றும் வட மேற்கில் இஸ்ரேல், பாலஸ்தீனம், ஈரான், சிரியா ஆகிய நாடுகளில் நிலவும் அமைதியின்மை போன்றவற்றால் மூன்றாம் உலகப்போர் குறித்த பேசப்படும் நிலையில் இவரின் கணிப்பு மக்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. அதன்படி 2024 ஆம் ஆண…
-
-
- 6 replies
- 980 views
- 1 follower
-
-
சிலோன் விஜயேந்திரன் திருவல்லிகேணியில் கெல்லட் ஸ்கூல் எதிரில் என் அறைக் கதவு தட்டிவிட்டு அமைதியாக நின்றிருந்த அந்த மனிதரை பார்த்ததும் துக்கி்வாரிப் போட்டது எனக்கு. தோள்பட்டையில் புரளும் ப்ரவுன் கலர் முடி, ஆஜானுபாகு தோற்றம், முரட்டு ஷூக்கள் என்று திகில் கிளப்பினார். அவர் நடிகர் சிலோன் விஜயேந்திரன். ’வணக்கம் தோழரே .உள்ள வரலாமா’ கனிவான அவரது குரல் அவரை பற்றிய என் எண்ணத்தை மாற வைத்தது. ‘வாங்க தோழர்’ ’நீங்க மு.மேத்தாகிட்ட இருகறதா நண்பர்கள் சொன்னாங்க அதான் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்.’ என்று எனக்கு அறிமுகமானார். பேச்சில் ஈழத்தின் வாசம் அதிகமிருந்த்து. அப்போதிருந்து நல்ல நண்பரானார். …
-
- 4 replies
- 1.5k views
-
-
திருச்சிற்றம்பலம்…. இலக்கியாவும், பீரோ ஆண்டியும், பலூன் அக்காவும் டிரெண்ட் ஆகும் தமிழ் சமூகவலை உலகில், அவ்வப்போது அரிதாக முருகனும் டிரெண்ட்டாவது உண்டு. ஆனால்…. நாமே ஓ எல் பரீட்சைக்காக படித்த, மறந்த, 9ம் நூற்றாண்டின் சிவவாக்கியர் டிரெண்ட் ஆவது…. புதுசு கண்ணா…புதுசு… அதுவும் மனிசன் என்னமா எழுதி இருக்கார்ன்னு பார்க்க, பார்க்க….. படிக்க, படிக்க… அட…..அட… இவர் பெரியாருக்கு முதலே பெரியாரிசம் பேசி இருக்கிறாறே, அதுவும் 9ம் நூற்றாண்டில் என்ற வியப்பு எழுவது மட்டும் அல்ல…. ஆசார மறுப்பையும், பக்தியையும், நிலையாமையையும் குழைத்து அப்படியே அதை சிவ நம்பிக்கையில் முக்கி சிவவாக்கியர் நமக்கு அளிக்கும் விருந்து….. தேன்…தேன்… தித்திக்கும் தேன். நீங்களும் பருகுங்காள்….மக்காள். முழுத் தொகுப்பு …
-
-
- 3 replies
- 345 views
-
-
இரவிக்குமார்22h · ***#வச்சாம்பாரு_ஆப்பு.பெரிய ஆப்பு*** பெரிய சாதனை! சீன மக்கள் வங்கி திடீரென அறிவித்தது: டிஜிட்டல் யுவான் (ரென்மின்பி, சீன நாணயம்) நாடுகளுக்கிடையிலான பணப் பரிவர்த்தனை தீர்வு முறை, ASEAN-இன் 10 நாடுகள் மற்றும் மத்திய கிழக்கின் 6 நாடுகளுடன் முழுமையாக இணைக்கப்படும். இதன் மூலம், உலக வர்த்தகத்தின் 38% அமெரிக்க டாலரை மையமாகக் கொண்ட SWIFT முறையைத் தவிர்த்து, "டிஜிட்டல் யுவான் யுகத்தில்" நேரடியாக நுழையும். The Economist இதை "பிரெட்டன் வுட்ஸ் முறை 2.0-இன் முன்னோடிப் போர்" என்று அழைத்துள்ளது. இந்த நிதிச் செயல்பாடு, பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் மூலம் உலகப் பொருளாதாரத்தின் அடித்தளத்தை மாற்றிக் கொண்டிருக்கிறது. ### SWIFT-ஐ விட 7 வினாடிகளில் தீர்வு! SWIFT முற…
-
- 0 replies
- 378 views
-
-
-
- 0 replies
- 285 views
- 1 follower
-
-
பணத்துக்கு ஆசைப்பட்டு எதை பதுக்கி வைப்பதன்று தெரியாமல் சீமெந்தை பதுக்கிவைத்து, இரண்டு மாதங்களுக்கு பின்னர் போய் பார்த்தால் கல்லாகி விட்டது. ஒண்டுமே செய்ய இயலாது தூக்கி எறிஞ்சாச்சு, சீமெந்துக்களை பதுக்கியவர்களின் பரிதாப நிலை இதுவே, இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்ட பொருட்களை மக்கள் சில காலம் தவிர்த்தால் விலை தானாக குறையும். Shalini Charles
-
- 1 reply
- 613 views
-
-
சுந்தர் பிச்சை சொல்லும் ‘கரப்பான்பூச்சி’ கோட்பாடு .! ஒரு உணவகத்தில் கரப்பான் பூச்சி ஒன்று எங்கிருந்தோ பறந்து வந்து ஒரு பெண் மீது அமர்ந்து கொண்டது. உடனே அந்தப் பெண் பயத்தில் கூச்சலிட ஆரம்பித்தார். அதுவரை அமைதியாக இருந்த அவருடன் வந்தவர்களுக்கும் இப்பொழுது அந்த பதற்றம் தொற்றிக் கொண்டது. மிகவும் கஷ்டப்பட்டு அவர் அந்த கரப்பானை தன் மீதிருந்து விலக்கி விட்டார். ஆனால் அந்த கரப்பான் இப்பொழுது வேறொரு பெண் மீது சென்று அமர்ந்து கொண்டது. இப்பொழுது இந்தப் பெண் அதே போல் கூச்சலிட ஆரம்பித்தார். அமைதியாக இருந்த மொத்த உணவகமும் இப்பொழுது அமைதியிழந்து காணப்பட்டது. இதை பார்த்துக் கொண்டிருந்த பணியாளர் சூழ்நிலையை சரி செய்ய விரைந்தார். இந்த முறை கரப்பான்பூச்சி, பறந்து சென…
-
- 1 reply
- 1.4k views
-