கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
648 topics in this forum
-
. மாமா யாழ்ப்பாணம் வரும் பொழுதெல்லாம் சோமரின்ட சோமசெட் காரை வாடகைக்கு அமர்த்தி கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு போய்விடுவேன்.கடிதத்தில் எந்த புகையிரதத்தில் எத்தனை மணிக்கு வருவார் என்று விபரமாய் எழுதுவார் .ஆங்கிலத்தில்தான் கடிதம் எழுதுவார் .எனக்கு நேரமும் நாளும் தெரிந்தால் காணும் மிகுதி எல்லாத்தையும் அம்மா வாசிப்பார்am,pmஎன்று போடுவார் அது அந்த காலத்தில் விளங்குவது கொஞ்சம் கஸ்டமாயிருக்கும் அம்மாவும் ஓவ்வொரு முறையும் விளங்கப்படுத்துவா ஆனால் அடுத்த முறை மறந்துவிடுவேன், ஒருமாதிரி அம்மாவிடம் திட்டை வாங்கி அறிந்து கொள்வேன்' வருவதற்கு முதல் நாள் தந்தியும் அடிப்பார்.அவர் வருகிறார் என்றால் எங்களுக்கு எல்லாம் பெரிய சந்தோசம் .எனக்கு மட்டுமல்ல சோமர் மற்றும் சலவை தொழி…
-
- 9 replies
- 2.6k views
-
-
அப்பா தின குட்டிக் கதை முன்னைய காலங்களில் சில கிராமதுக்கு கிராமம் வழக்கங்கள் நடை முறைகள் வேறுபட்டிருக்கும். இருக்கும் இப்படியான ஒரு கிராமத்தில் குடும்பத்திலுள்ள ஆண் பிள்ளைகள் பதினாறு வயதை அடைந்ததும் ஒரு இரவு காட்டில் தங்க வேண்டும். அங்கு பல வகை கொடிய மிருகங்கள் இருக்கும் . அவர்களது பதினைந்தாவது வயதில் வில் பயிற்சி ஈட்டி எறிதல் விலங்குகளை தாக்கி தப்பித்தல் முதலிய தற்காப்பு கலைகள் யாவும் சொல்லி கொடுக்கப்படும் . இப்படியாக ஒரு குடியானவன் மகனுக்கு பதினாறாவது பிறந்த நாள் வந்தது மறு நாள் அவன் காட்டுக்கு செல்ல வேண்டும். முதல் நாள் குடியானவன் சகல புத்திமதி கள் யுக்திகளை மீண்டும் மீண்டும் ஞாபக படுத்தினான் மறு நாள் மாலையானதும் தந…
-
- 9 replies
- 2.7k views
-
-
வேலையின் களைப்பு வீடு செல்லும் வேகத்தில் ரயில் தரிப்பிடம் நோக்கி வேகமா வந்து கொட்டாவி விட்டபடி கடிகாரம் பார்த்தேன் இன்னும் இரண்டு நிமிடம் வந்திடும் ரயில் சுற்றும் முற்றும் யாராவது தெரிந்த முகம் நிக்கும் என்னும் நினைவில் கண்களை எல்லா திசையிலும் சுழற்றி பார்த்த படி மனதில் நாட்டு நிலவரம் செய்திகளும் வந்து வந்து போனது அப்பொழுது பெரும் இரைச்சலுடன் தரிப்பிடம் வந்து நின்றது ரயில் . ஏறி நடுப்பக்கம் ஒரு சீட்டில் இருந்து விட்டால் எழும்ப வேண்டிய தேவை இருக்காது என்று எண்ணி முண்டி அடித்து இடம் பிடித்து அமர்த்தேன் பக்கத்தில் ஒரு ஆபிரிக்க நாட்டு இளையன் அவனின் காதுகளில் மாட்டி இருந்த மார்க்கான கேட்போனில் இருந்து வந்த பாடல் இரைச்சல் என் காதுகளுக்கு வண்டுகளின் சத்தமா கேட்டது ...அப்படிய…
-
- 9 replies
- 2.2k views
-
-
திருவள்ளுவர் மிகவும் அழகாக சொன்ன குரளை நான் எனது கிறுக்கல் மூலம் சொல்ல முயற்சிக்கிரேன் ..தப்பாக இருந்தால் தம்ஸ் டவுன் (அதுதான் கட்டை விரலை கீழே காட்டுங்கோ) பண்ணுங்கோ .. வள்ளுவர் இந்த குரளை எப்படி எழுதியிருப்பார்?...எப்படி ஐடியா வந்திருக்கும்? என்ற சந்தேகம் எனக்கு வர எனது கற்பனை ....வாழ்க்கையின் தத்துவத்தை அனுபவ ரீதியாக இரு வரிகளில் எழு சொற்களில் சிறப்பாக சொல்லி சென்றுள்ளார்... ஐயன் திரு... இற்றைக்கு ஏரத்தாள இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் காதலர் தினத்திற்காக வாசுகி மல்லிகை பூ ,மற்றும் ஏனைய வாசனை திரவியங்கள் யாவும் பூசி கொண்டு வள்ளுவரை எதிர் பார்த்து காத்திருந்தாள்.அன்று காலை திரு வெளியே செல்லும் பொழுது "நாதா இன்று மாலை சீக்கிரம் வீடு வந்து சேருங்கள் வ…
-
-
- 9 replies
- 883 views
-
-
ஊரெழு யாழ் நகரிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள செழிப்புமிக்க கிராமம் .இக்கிராமத்தை பலாலி வீதி ஊடறுத்து கிழக்கு,மேற்கு என பிரிக்கிறது.இக்கிராமத்தில் 27/11/1963 அன்று திரு,திருமதி இராசையா தம்பதியினருக்கு இளைய மகனாக பாத்தீபன் பிறந்தான். அவனது தந்தை ஒரு பாடசாலை ஆசிரியர்.அவனது தாயார் அவன் குழந்தையாய் இருக்கும் போதே இறந்து போனார்.இவனது தந்தை தாயாகவும் தந்தையாகவும் இவனையும் இவனது மூன்று மூத்த சகோதரர்களையும் வளர்த்தார். இவன் சிறுவயதிலிருந்தே இரக்ககுணம் நிறைந்தவனாகவும் எல்லோருடனும் பாசமாய் பழகுபவனுமாய் இருந்தான். கல்வியில் சிறந்து விளங்கியதால் யாழ் இந்துக்கல்லூரியில் கற்கும் வரம் பெற்றான்.யாழ் இந்துக்கல்லூரி பல கல்விமான்களையும் விடுதலைப்போராளிகளையும் தந்த …
-
- 9 replies
- 1.7k views
-
-
வெரி வெரி குட்டி கிறுக்கல் பிறந்து கிட்டதட்ட 18 மாதங்களுக்கு மேலாகி விட்டது .ஒன்றரை வருடம் என்று சொல்லலாம் .பிறந்தது சிவப்பு புரட்சி வெடித்த மண்ணில் என்ற காரணத்தால் சிவப்பு சித்தாத்தங்களை ஆறு மாதங்களில் நன்றாகவே மூளைச்சலவை செய்து கொண்டான் .தனது சித்தாந்தை உலகம் பூராவும் பரப்ப வேண்டும் குறுகிய காலத்தில் என்ற நல்லெண்ணத்தில் புரட்சிப்படையை உருவாக்கி பிறந்தமண்ணை தவிர்த்து வெளிநாடுகளுக்கு பறந்தான். எல்லோருக்கும் தனது சித்தாந்தங்களை இன,மொழி,மதம் கடந்து சமதர்மத்துடன் பரப்பி சோசலிச பார்வையுடன் சிவப்பு வெள்ளத்தில் மூழ்கடித்தான்.வென்றது அவனது புரட்சி .. China variant UK variant South Africa variant Indian variant போன்ற பல பல தேசிய நாடுகளை உருவாக்கி ம…
-
- 9 replies
- 2.1k views
-
-
சில காலமாய் இந்தப் பதிவு ஒரு கேள்வியாக உள்ளிற்குள் துருத்திக்கொண்டிருந்தது. ஆனால் எழுதிப்போடும் அழவிற்கு அது துருத்தவில்லை அதனால் எழுதவில்லை. நேற்று poetன் தலைப்பொன்றைப் படித்தபோது அதில் அத்தலைப்புச் சார்ந்து பொயட் முன் வைத்திருந்த ஒரு கெஞ்சுதலும் அதற்கான நிழலியின் எதிர்வினையும் படித்தபோது, உள்ளிற்குள் முன்னிற்கு வந்து குந்தியிருந்த கேள்வி, கண்ணடித்தது. அதனால் இந்தப் பதிவு. 'கைதட்டலிற்கு ஆசைப்படாத கலைஞன் இல்லை' என்ற வாக்கு ஓரளவிற்கு நமக்குப் பரிட்சயமாகிவிட்டதால் அது ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளவும் பட்டுவிட்டது. பரிட்சயமான அபத்தங்கள் கூட அபத்தங்களாகத் தொடர்வதில்லை. ஆனால், கைதட்டல் குறியாக எழுகின்ற படைப்பில் ஓட்டைகளை எப்போதும் கண்டடைய முடியும். காரணம், அவை வலிந்த உருவாக்கங்க…
-
- 9 replies
- 1.6k views
-
-
பச்சைப்பாவாடை கவி அருணாசலம் அப்போ எனக்கு பதினைந்து வயது. வல்லிபுரக்கோவில் கடல் தீர்த்தத்திற்குப் போயிருந்தேன். வழமைபோல் என்னுடன் தொற்றிக் கொள்ளும் கலையரசனும் மகேந்திரனும் வந்திருந்தார்கள்.நாங்கள் மூவரும் சேர்ந்து கொண்டால் சேட்டைகளுக்கு அளவேயில்லை. வல்லிபுர ஆழ்வார் ஊர்வலமாய்ப் போய் கடலில் தீர்த்தம் ஆடி கோயிலுக்குத் திரும்பி வந்துவிட்டார். கோயில் கிழக்கு வாசலில் அவருக்குப் பெரிய பூசை நடந்து கொண்டிருந்தது. எங்கள் கண்கள் கலர்கள் தேடி சுழன்று கொண்டிருந்தன. முட்டி மோதும் சனங்களுக்குள் பட்டுப் பாவாடைகள் சரசரக்க பெற்றோர்களுடன் ஒட்டி நின்ற பாவையர்களில் பச்சையில் ஒருத்தி பளபளத்தாள். எங்களுக்குள் சுரண்டிக் கொண்டோம். மூவரது பார்வையும் ஒருங்கிணைந்து தாக்கியதால…
-
- 9 replies
- 4k views
-
-
டிசம்பர் மாதம் என்று சொல்ல முடியாதவாறு வானமும் நிலமும் வெயில் குடித்துக் கிடந்தது. இன்னும் பத்து நாட்களில் அடுத்த ஆண்டு வந்துவிடும். சில்லென்ற காற்று வீசுவது யன்னலூடாக வெளியே அசையும் மரங்கள் உணர்த்தின. குளிர் காலத்தில் வெயில் வந்தாலே லண்டனில் ஒரு ஊசிக் காற்றும் அதனோடு சேர்ந்து வீசும். அபிக்கு வெளியே செல்லவே மனமின்றி இருந்தது அந்தக் காற்றைப் பார்க்க.ஆனாலும் என்ன செய்வது வேலைக்குச் செல்லத்தானே வேண்டும். அண்ணனின் உழைப்பில் சாப்பிட முடியுமா ??? என மனம் கேட்டுக்கொண்டது. அபியின் அண்ணன் வசந்தன் லண்டனில் ஆறு ஆண்டுகளாக வசிக்கிறான்.PR கிடைத்துவிட்டதுதான். ஆனாலும் தங்கைக்கும் மகேந்திரனுக்கும் ஏயென்சியில் கட்டின காசுக்கடன் இன்னும் முடிந்தபாடு இல்லை. அதனால் இரவு பகல் என்று வேலை. இ…
-
- 9 replies
- 2.1k views
-
-
தொண்ணூறுகளின் மத்தியில் பேராதனை படிப்பு முடிந்து போனது. வேலை தேட வசதியாக கொழும்புக்கு நகர வேண்டியிருந்தது. வெள்ளவத்தையிலோ பம்பலப்பிட்டியிலோ தங்குவதற்கு வெளிநாட்டு காசோ அல்லது கொழுத்த சம்பளம் தருகிற தொழிலோ வாய்க்கவில்லை. கொஞ்சம் தள்ளி கல்கிசையில் மலிவாக அறையொன்று வாடகைக்கு கிடைத்தது. பெரிய வசதிகள் இல்லையென்றாலும் விரும்பிய நேரத்தில் 100 அல்லது 101 பஸ்சில் தொற்றி புறக்கோட்டை வரை பயனிக்கலாம் என்பதால் அதுவே சிலகாலம் இருப்பிடமானது. ஓடியன் தியேட்டருக்கு எதிராக காலி வீதியில் இருந்த அறையின் கீழ்தளத்தில் வீட்டு உரிமையாளரும் அதற்கு கீழே பழக்கடை ஒன்றும் இருந்தது. மாத்தறையை சேர்ந்த சிங்கள இளைஞர் ஒருவர் பழக்கடையை நடத்தினார். அதற்கு பக்கத்தில் இரண்டு தமிழ்க்கடைகள் இருந்தது. ஒன்…
-
- 9 replies
- 4.1k views
- 1 follower
-
-
வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர் புலிகளின் போரியல் வரலாற்றில் ஒரு மைற்கல் மட்டுமல்ல அது ஒரு திருப்புமுனை. 1997 ம் ஆண்டே, கிளிநொச்சி ஆனையிறவுப்பகுதிக்கான வேவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. கிளிநொச்சி ஆனையிறவு வேவு நடவடிக்கை கடினமானதாகவே இருந்தது. ஏற்கனவே ஒரு படைப்பிரிவு வேவு நடவடிக்கையை ஆரம்பித்தபோதும் எதிர்பார்த்த பெறுபேற்றை அடைய முடியவில்லை. இதனால் செம்பியன் வேவு அணி, சாள்ஸ் அன்ரனி வேவு அணிகள் வேவு நடவடிக்கையைப் பொறுப்பெடுத்தன. பாரிய நிலப்பகுதியை உள்ளடக்கி, பல கட்டமைப்புக்களுடன் கூடிய காப்பரண்களைக் கொண்டு அமைந்த இப்படைத்தளங்களின் தாக்குதல் திட்டத்தை வகுப்பதற்கு உட்பகுதி வேவுத்தகவல்களே மிக அவசியம் ஆனவையாக இருந்தன. உட்பகுதி வேவுத்தகவல்கள் இன்றி திட்டத்தை த…
-
- 9 replies
- 4.6k views
-
-
யார் சொல்லுவார்? சமீபத்தில்(25.03.2018) யாழின் கருத்துக்களத்தில் நவீனன் தரவிட்டிருந்த இணைப்பின் தலையங்கம் ஒன்று, பழைய நினைவொன்றை என்னுள் மீட்டிப்பார்க்க வைத்தது. “பாரிசில் ஈழத்து மாணவி ஒருவர் கடத்தல்” என்பதே அந்தத் தலையங்கம். 83, 84 ஆண்டு காலங்களே அதிகமான தமிழர்கள் யேர்மனிக்கு புலம் பெயர்ந்த காலங்களாக இருந்ததன. ஈழத் தமிழர்களுக்கு வடக்குத்தான் அதிகம் பிடிக்குமோ என்னவோ, பல ஈழத்தமிழர்கள் யேர்மனியின் வட திசை சார்ந்த மாநிலமான Nordrhein-Westfalen இலேயே அப்பொழுது தங்கிக் கொண்டார்கள். புலம் பெயர்ந்து வந்த போதும் தாங்கள் சார்ந்த போராட்டக்குழுக்களை யேர்மனியில் காலூன்ற வைப்பதற்கு அவற்றின் அபிமானிகள் அன்று பெரும் முயற்சி எடுத்துக்கொண்டார்கள். இதில் தெற்கு யேர்மனியில்…
-
- 9 replies
- 2.9k views
-
-
ஆதித்தாயின் மொழி --------------------------------- 'ஆதித்தாய்' என்றொரு சிறுகதையை ஈழத்து எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள் சில வருடங்களின் முன்னர் எழுதியிருக்கின்றார். எனக்கு மிகவும் பிடித்த ஈழத்து எழுத்தாளர் முத்துலிங்கம் அவர்கள். செங்கை ஆழியானையும் மிகவும் பிடிக்கும். இன்னும் சிலரையும் பிடிக்கும். முத்துலிங்கம் ஒரு எழுத்தாளர் என்பதை விட, அவரை ஒரு கதை சொல்லி என்றே சொல்லவேண்டும். அவருடைய பல கதைகளை வாசிக்கும் போது, இந்தக் கதை எங்கள் வீட்டில், அக்கம்பக்கத்தில், ஊரில், உலகத்தில் நடந்த, எங்களுக்கு முன்னரேயே தெரிந்த நிகழ்வுகளாகவே தெரியும். ஆனாலும் அவர் அதை சொல்லும் விதமும், அதை முடித்து வைக்கும் விதமும் ஒவ்வொரு தடவையும் அலுக்காத ஒன்று. விளையாடி விட்…
-
-
- 9 replies
- 800 views
- 1 follower
-
-
மனசெல்லாம் மழையே......... பஞ்சுப் பொதியாய் வானப்பரப்பெங்கும் வியாபித்து பரவிக் கிடக்கும் மேகத்திரையைக் கிழித்தபடி விமானம் பியர்சன் விமானநிலையத்திலிருந்து மேலெழந்து வேகமெடுத்து ஓடத்தொடங்கிய நாழிகையில் விமானத்தின் ஐன்னலோர இருக்கையில் விமானப்பட்டியை விலக்கியபடி அமர்ந்து கண்களை மூடியபடிசாய்ந்த மதியின் எண்ணங்கள் பின்னோக்கி வேகமெடுத்து ஓடத்தொடங்கின. ஒன்றல்ல இரண்டல்ல முப்பத்தி ஐந்து வருடங்களின் பின் சந்திக்கப்போகும் தன் சிந்தையில் நிறைந்த சிநேகிதனை வட்டமிட்டது மனம். இமைச்சாளரங்கள் மூடிக்கொள்ள இதயம் மாத்திரம் இயங்கத் தொடங்கியது. கலாச்சார ஈரம் குலையாத அந்தக் குட்டிக் கிராமத்தில் பண்பான தந்தைக்கும் அன்பான அன்னைக்கும் மூத்த மகளாகப் பிறந்தவள் மதி .'அக்கா அக்கா' என்று அவளைச் ச…
-
- 9 replies
- 2.1k views
-
-
சாப்பிட உட்கார்ந்தவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் . அன்று அவனுக்கு மிகவும் பிடித்தமான உணவைத்தான் அவள் சமைத்திருந்தாள். அவள் தான் சமைத்த உணவின் சுவையை அவன் முகபாவத்திலேயே பார்த்துத் தெரிந்துகொள்வாள். ஆனால் இன்றைக்கு அவன் முகம் எதையுமே பிரதிபலிக்கவில்லை. மிச்சம் மீதி வைக்காமல் சாப்பிட்டவன்..."போயிட்டுவாறன்" என்று சொல்லிவிட்டு உணவைப்பற்றி எதுவுமே சொல்லாமல் உடனேயே வெளியே கிளம்பிவிட்டான். 'ஏதாவது சொல்லுவான்' என எதிர்பார்த்து ஆவலோடு காத்திருந்தவளின் முகம் சட்டென்று வாடிப்போனது. அவன் கிளம்பியதிலிருந்து இவளுக்கு எந்தவேலையும் ஓடவில்லை. 'தன் சமையல் சரியில்லையோ?' என நினைத்தவள், அந்தக் கவலையில் தானும் சாப்பிட மறந்துபோனாள். மாலை அவன் மீண்டும் வீட்டுக்கு வந்ததும்... சோர்வாக உட்க…
-
- 9 replies
- 1.7k views
-
-
**நாம் வாழ்க்கையில் உயர்வதை கண்டு மகிழ்ச்சியடையும் நண்பர்கள் கிடைப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்** அது 2005ம் ஆண்டின் நடுப்பகுதி என நினைவு..வன்னி ரெக்கின் 3து batchல படிப்பதற்கு இடம் கிடைத்திருந்தது நாட்டின் வடகிழக்கு பகுதியின் பல்வேறு இடங்களைச்சேர்ந்தவர்கள் வந்திருந்தார்கள்.ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லாத 4 பேரை ஒரே ரூமில் போட்டார்கள் வாழ்க்கையின் முதல் முதல் ஹொஸ்டல் வாசம். முதலில் பெரிதாக ஒருவரிற்கொருவர் எந்த ஈர்ப்பும் இல்லை ரூம் மேட் என்ற அளவில் மட்டுமாகவே தொடர்ந்தது .எனக்கு நண்பர் கூட்டம் அவ்வளவாக சேர்வது குறைவு . அவனோ நண்பர் கூட்டத்துடனே திரிவான்.. அத்துடன் அவனின் பாடப்பிரிவு நெட்வோர்கிங் ,நானோ எலக்ட்ரோனிக்ஸ் ஹொஸ்டல் வாழ்க்கையில் சண்டை…
-
- 9 replies
- 3.4k views
-
-
Monday, December 28, 2020 றைன் நதியோடு நானொருநாள் --------------------------------------------------- (4/2019 எழுதப்பட்ட கதை. 2020 நவம்பர் தேசத்தின் குரல் இணையஇதழில் வெளியானது) நேரத்தைப் பார்க்கிறேன். காலை 6.56. இன்னும் 2 மணித்தியாலங்கள் இருக்கிறது என் பயணத்தின் இலக்கையடைவதற்கு. இரண்டு மாதங்களுக்குப் பிறகு இன்று மகளிடம் போகிறேன். ஒரு குழந்தையென்ற எனது கனவுகள் விலக்கி அவள் 4வது செமஸ்ரர் தொடக்கத்தில் நிற்கிறாள். இன்னும் இரண்டு செமஸ்ரர் முடிந்தால் அவளது கற்றலின் இளமானிப் பட்டப்படிப்பை நிறைவு செய்வாள். காலமே என் குழந்தையைக் காத்திடு. அவள் கனவுகள் மெய்ப்பட உன் கைகளால் ஆசீர்வதித்து ஒளியிடு. நீயே நிதர்சனம் நித்தியம். உன…
-
- 8 replies
- 3.3k views
-
-
தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பிரிந்திருக்கும் காதலர்களுக்கு பேருதவியாக இருக்கின்ற இந்தக் காலத்தில், அஞ்சலியையும் இவனையும் பற்றி சொல்லியா தெரியவேண்டும். நேரம் கிடைக்கும் பொழுதுகளிலெல்லாம் பேசிக்கொள்வார்கள். 'ஸ்கைப்' என்கின்ற ஒன்று அவர்கள் இருவரும் முகம்பார்த்துப் பேசுவதற்கு பெரும் வசதியேற்படுத்திக் கொடுத்திருந்தது. அவனுக்கு வேலைப்பழு அதிகமாக இருந்தாலும் அஞ்சலியுடன் கதைப்பதற்காக நேரம் ஒதுக்கத் தவறுவதில்லை. இருந்தாலும் சில சமயங்களில் வேலைப்பழு காரணமாக சரியான நேரத்தில் ஃபோன் எடுப்பதற்கு அவ்வப்போது மறந்துவிடுவான். அப்பொழுதெல்லாம் அஞ்சலி கொஞ்சம் கோபப்பட்டாலும் இவனது கெஞ்சும் வார்த்தைகளினால் பின்னர் சமாதானமாகிவிடுவாள். அவனுக்கும் அவளுக்குமிடையில் சண்டை வருவதென்றால், …
-
- 8 replies
- 3.2k views
-
-
நாள் ஒன்று வரும் மாவீரர் தின நினைவாக எழுதப்பட்ட நாடகம். எழுத்து ஆக்கம்: இளங்கோ, பின்னணி இசை கோர்ப்பு : சசி வர்ணம் நடித்த மற்றும் குரல் வடிவம் தந்த அனைத்து கலைஞ்சருக்கும் நன்றிகள். (எல்லோருடைய பெயர்களும் என் கை வசம் இல்லை - அடுத்த பதிவில் இணைக்கின்றேன் மன்னிக்கவும்) கதைக் களம் ஆனது புலம் பெயர் நாடு, தாயகம் இரண்டையும் உள்ளடக்கி இருக்கும். புலம் பெயர் நாட்டில் ஆரம்பித்து தாயகம் நோக்கி நகரும். இறுதியில் புலம் பெயர் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி நிறைவுறும் தமிழரின் போராட்டம் குறித்த நம் இளையவர்களின் புரிந்துணர்வு, விட்டு செல்லப்பட்ட பொறுப்புகள் சம காலத்தில் தாய் மண்ணில் நடக்கின்ற அவலங்கள், முன்னால் போராளிகளின் நிலைமை, தமிழராய் நாம் அனைவரும் ஒற்றுமையாய் அணி திரள வ…
-
- 8 replies
- 1.9k views
-
-
வினோத்தின் நேர்கொண்ட பார்வையை தவிர்க்கவே அடிக்கடி உடையை சரி செய்வது போல கீழே குனிந்து கொண்டேன். இதை வினோத் அறிந்திருக்க எள்ளளவும் வாய்ப்பில்லை. மனம் ஏனோ ஒரு நிலையில் இல்லாது தவித்தது. அந்த இத்தாலிய உணவகத்தின் யன்னைலினூடே வெளியே பார்க்கிறேன். சவர்க்கார கரைசலை வாயிலே வைத்து ஊதும் வெள்ளை இன சிறுவன். அவன் ஊதும் குமிழி போலவே, என் எண்ணங்களும் வளர்வதும் வெடித்து சிதறுவதுமாக இருந்தன. கடவுள் நிறைய நேரங்களில் எங்கள் எண்ணங்களை எம் கண்முன்னே காட்சி ஆக்குவதில் வல்லவர் என்று யாரோ சொன்னது எனக்குள்ளே வந்து போனது. ஐரோப்பாவில் இருந்து உறவினரின் திருமணத்தில் கலந்து கொள்ளவந்திருந்த வினோத்தை சந்திப்பதற்கான ஒழுங்கை மதி ஏற்படுத்திவிட்டு, பழைய நண்பர்களை சந்திக்க என்னை அழைத்தபோது, எனக்குள்ளே ந…
-
- 8 replies
- 1.5k views
-
-
அதிகாலை ஒரு மணி இருக்கும். வெடிச்சத்தம் காதைப் பிளக்க.. நித்திரை இடையில் கலைகிறது. "சண்டை தொடங்கிட்டுது எல்லாரும் எழும்புங்கோ" அம்மா அவசரப்படுத்திக் கொண்டிருக்க, பலாலிப்பக்கம் இருந்து 'ஆட்லறிகளும்' கூவுகின்றன. "மண்டை தீவுப்பக்கம் தான் அடி விழுகுது" அப்பா தன் பங்குக்கு சொல்லும் பொழுதே வெடிச்சத்தம் உக்கிரமடைகிறது. பயம் கெளவிக் கொள்ள வீட்டை விட்டு வெளிய வந்து மாமரத்துக்கு அருகில் நின்றபடி அவதானிக்கிறோம். "சந்திரிக்கா போட்ட யுத்த நிறுத்தம் இந்தளவும் தானா?" அம்மா ஏக்கத்தோடு என்னைப் பார்த்துக் கேக்க, "அவள் கதிரை பிடிச்சிட்டாள் எல்லோ எனி என்னவும் செய்வாள்" அப்பா பதிலுரைக்கிறார். நித்திரை குழம்பிய பக்கத்து வீட்டு 'அங்கிளும்'. வெளியே வந்து, வீதியில் நின்றபடி " என்ன அடி தொடங்கிட்டு…
-
- 8 replies
- 1.7k views
-
-
வேலுப்பிள்ளைமார் ------------------------------- காலையிலேயே வந்து விடுங்கள் என்று அவன் சொல்லியிருந்தான். இரண்டு தடவைகள் தொலைபேசியில் கூப்பிட்டு ஞாபகப்படுத்தினான். காலை 10 மணிக்கு முன்னரே அங்கே நிற்க வேண்டும், அப்புறம் அங்கிருந்து திரும்பி வர பின்னேரம் ஆகி விடும், அன்றைய பொழுது முழுவதும் இப்படியே போய்விடப் போகின்றது என்று தெரிந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமை இப்படியாகிப் போவதில் இஷ்டமில்லை தான், ஆனாலும் அவனை மறுக்க முடியவில்லை. நீங்கள் இருவரும் வந்து பாப்பாவை ஆசீர்வாதம் செய்ய வேண்டும் என்று சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தான். இவர்கள் நேர ஒழுங்கில் மிக மோசமானவர்கள். உலகில் இந்தளவிற்கு நேரத்தை துஷ்பிரயோகம் செய்யும் வேறு எவரையும் என் அனுபவத்தில் நான் கண்டத…
-
-
- 8 replies
- 778 views
-
-
கறுப்பி ஒரு பேப்பருக்காக கோமகன் அமாவாசையின் கரிய நிறம் அந்தக் கிராமத்தில் அட்டைக் கரியாக மண்டியிருந்தது . அவ்வப்பொழுது வவ்வால்களின் பட பட சிறகடிப்பும் , கூவைகளின் புறுபுறுப்பும் , சில்வண்டுகளின் சில்லெடுப்பும் , ஒரு சில கட்டாக்காலி நாய்களின் ஊளையும் அந்தக் கிராமத்தின் அமைதிக்கு உலை வைத்துக்கொண்டிருந்தன . கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த கந்தப்புவின் மனதுக்கு இந்த முன்னெடுப்புகள் எதோ ஒன்று நிகழப் போவதை உணர்த்தியது . கந்தப்பு மெதுவாகக் கயிற்றுக் கட்டிலில் இருந்து எழுந்து சென்று தனது கொட்டிலின் மூலையில் இருந்த சாமி படத்தின் முன்னால் இருந்த திருநீற்றுக் குடுவையினுள் கையை விட்டு நெற்றி நிறைய திருநீற்றை அள்ளிப் பூசி வாயிலும் சிறிது போட்டுக்கொண்டு மீண்டும் கயிற்றுக…
-
- 8 replies
- 1.3k views
-
-
என் இல்லம் சொல்லும் சேதி இது... என் முற்றத்தில் மூழியாய் எறிக்கிறது முழுநிலவு. சற்றைக்கொருதரம் தன்னை ஸ்பரிசிக்கும் திரைச்சீலைகளின் உரசல்களை இழந்த சாளரத்து ஓரங்கள். தலைவாசல் கதவிழந்து தனிமையில் தவிக்கும் நிலைப்படிகள். மௌனித்துக் கிடக்கும் சமையலறை மேடை. பொலிவிழந்து புகைக்க மறந்த சோகத்தில் புகைபோக்கி. ஏஞ்சல்கள் ஆடும் ஊஞ்சலை எண்ணி ஏங்கும் வேப்பமரம். சிறு சோறு சமைக்கும் சில்வண்டுகளைத் தேடும் சிறு தாழ்வாரம். சுற்றிப் பறந்த ( த) தும்பிகளைத் தேடும் கம்பி வேலிகள். தேவதைகளைத் தேடி தேகம் இளைத்த நிலைக் கண்ணாடி;. ஓளித்து விளையாடிய தோழர்களின் தோள்சாயத் துடிக்கும் குட்டை மதில். ஓண்டிகாகி உறவிழந்து நிற்கும் ஒற்றைப்பனை. உல்லாசமிழந்து உருக்குலைந்த மண்டபம். ஒப்பனை இழந்த…
-
- 8 replies
- 1.6k views
-
-
மலையின் மஞ்சள் கலந்த மண்ணிறம் மாயத்தோற்றந் தந்தது. மலையினைக் கையால் உடைத்து வாயில் போட்டு மென்று தின்ன முடியும் என்று தோன்றியது. மலை வெண்ணையென்றும் நான் கண்ணனென்றும் கூட ஒரு தடம் மனதுள் விரிந்தது. கண்ணன் என்ற எண்ணம் சிந்தையில் வந்ததும் கோபிகை தோன்றி விடுகிறாள். குதிரை வால் குடுமியில் ஏதோ ஒரு மாந்திரீகத் தன்மையிருக்கிறது என்பது எனது அபிப்பிராயம். கறுத்த முடிப் பெண் குதிரைவால் குடுமி போட்டு என் முன் நடப்பின் என் மனம் ஒரு முகப்பட்டு அவள் முகம் பார்க்கத் துடிப்பது எனக்குப் பரிட்சயம். உடற் பயிற்ச்சி நிலையத்துள் குதிரைவால் குடுமியுடன் ஒரு இளையவள் குதிரையாய் வந்தாள். காதிற்குள் “எம்.குமரன் சன் ஒவ் மகாலட்சுமி படத்தின் ஐயோ ஐயையோ” பாடல் நிஜமாகவே ஒலித்தபடி நான் ஓடிக்கொண்…
-
- 8 replies
- 2.3k views
-