கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
648 topics in this forum
-
காமாட்சி அம்மா, பேரன் விளையாடி கொண்டு இருப்ப தை பார்த்து கொண்டு அருகில் இருந்த படிக்கட்டில் இருந்தார். பக்கத்து வீட்டு பொபி .. பேரன் சங்கர் ...முன் வீட்டு மைக் ...இவர்கள் விளையாட ஆரம்பித்தால் பொழுதுபோவதே தெரியாமல் விளையாடுவார்கள் .கால நிலை நன்றாக் இருந்தால் மட்டு இது நடக்கும் இடையிடையே பேரன் சங்கர் ... அம்மம்மா ஜூஸ் என்றும் சிப்ஸ் என்றும் உள்ளே வந்துபோவான். குளிர் காலங்களில் கம்புட்டர் கேம் என்று ... கூப்பிடுவதும் கேட்காமல் வி ளை யாடுவார்கள். அன்று வழக்கம்போலவே விளையாடி விட்டு . குளிக்க செல்லும்போது அம்மாம்மா எனக்கு முட்டையும் பானும் தாங்கோ என்றான். ஓம் ராசா என்றவள் ..இவள் வேணி யையும் இன்னும் காணவில்லை மணி ஏழாகி விட்டது பேரனுக்கு பசி போலும் என்ற…
-
- 4 replies
- 1k views
-
-
சில காலமாய் இந்தப் பதிவு ஒரு கேள்வியாக உள்ளிற்குள் துருத்திக்கொண்டிருந்தது. ஆனால் எழுதிப்போடும் அழவிற்கு அது துருத்தவில்லை அதனால் எழுதவில்லை. நேற்று poetன் தலைப்பொன்றைப் படித்தபோது அதில் அத்தலைப்புச் சார்ந்து பொயட் முன் வைத்திருந்த ஒரு கெஞ்சுதலும் அதற்கான நிழலியின் எதிர்வினையும் படித்தபோது, உள்ளிற்குள் முன்னிற்கு வந்து குந்தியிருந்த கேள்வி, கண்ணடித்தது. அதனால் இந்தப் பதிவு. 'கைதட்டலிற்கு ஆசைப்படாத கலைஞன் இல்லை' என்ற வாக்கு ஓரளவிற்கு நமக்குப் பரிட்சயமாகிவிட்டதால் அது ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளவும் பட்டுவிட்டது. பரிட்சயமான அபத்தங்கள் கூட அபத்தங்களாகத் தொடர்வதில்லை. ஆனால், கைதட்டல் குறியாக எழுகின்ற படைப்பில் ஓட்டைகளை எப்போதும் கண்டடைய முடியும். காரணம், அவை வலிந்த உருவாக்கங்க…
-
- 9 replies
- 1.6k views
-
-
1996 இடம் பெயர்வு தொடர்ச்சியா இரண்டு தரம் யாழில் இருந்து வந்து சில மாதம் ஆகவில்லை மீண்டும் கிளிநொச்சியில் இருந்து ஸ்கந்தபுரம் ஊடா மல்லாவி என்று வாழ்க்கை பயணம் போகுது அப்ப எல்லாம் அந்த வயதில் எமக்கு அவைகள் ஒரு விளையாட்டு போல புதுசா ஒரு இடத்துக்கு போறம் என்கிற நினைப்பு தவிர அதன் வலிகளை அப்பொழுது புரிய எமக்கான வயதும் அனுபவனும் போதாது தான் ...வளர்த்த நாயை கிளி வரை கொண்டுவந்து சேர்த்த எனக்கு மீண்டும் வேறிடம் கொண்டு சொல்ல முடியவில்லை மனுஷர் போக வழியை கானம் இவன் வேற நாயை கொண்டு திரியுறான் என்று அப்பா பேசிய போது அப்பொழுது வந்த கோபம் இப்ப நினைத்தால் மனம் வலிக்குது பாவம் அப்பா அன்று நான் கோவப்பட்டு இருக்க கூடாது என்று ..எம்மை காப்பதில் தான் அவரின் முழு கவனமும் இருக்கு என்று அப்பொழு…
-
- 11 replies
- 1.6k views
-
-
தாயகத்தின் மீது பெரிதாக பற்றில்லை சாதாரண தமிழருக்கள்ள விருப்பம் மட்டுமே. ஊருக்கு போகணும் வன்னியில் தங்கணும் என்றதமே எச்சரித்தேன். ஏன் இந்த விபரீத விளையாட்டு அங்கு நடப்பவைகளை கேள்விப்படவில்லையா? என்னவும் நடக்கலாம் எதையும் செய்யக்கூடிய நிலை. அப்படியெல்லாம் கிடையாது இது உங்களைப்போன்றவர்கள் பரப்பும் கதை. நான் போய் ஒரு மாதம் நின்று வந்து சொல்கின்றேனே..... நேற்று வந்து சேர்ந்தார் எப்படி இருக்கு வன்னி? இது நான். நீங்கள் சொன்னதைவிட பயங்கரம் மாலை 5 மணிக்கே கதவைப்பூட்டிவிட்டு படுத்து விடுகிறார்கள் நன்றாக விடிந்து குரல்கள் கேட்கும்வரை வெளியில் வருவதில்லை....... அவசர தேவைகளுக்குமா??? ஒரு சட்டியை வீட்டுக்குள் வைத்துக்கொள்கிறார்கள் அவசரமா…
-
- 2 replies
- 937 views
-
-
தொடர்மாடிக் கட்டிடத்தின் அறையொன்று அதிர்ந்துகொண்டிருந்தது. வயலின் கருவியின் தந்திகளிற்குள்ளால் மனித மனமொன்று பேசிவிட முனைந்து கொண்டிருந்தது. பேச்சு, யாரையும் நோக்கியதாய்த் தோன்றவில்லை. பேசவேண்டியது தவிர்க்கமுடியாததாய்த் தந்தி அதிர்ந்துகொண்டிருந்தது. நேற்றைய இரவில் ஓரு உணவகத்தில் மாயை கச்சிதமாகக் கட்டமைக்கப்பட்டிருந்தது. 'நம்புங்கள்' என்ற கோரிக்கைக்கு அவசியமற்று நம்பிக்கை பிரவாகித்துக்கொண்டிருந்தது. எதிர்ப்பின்றிப் பிரவாகிப்பதாய்த்தோன்றும் ஆற்றில் துருத்திக்கொண்டு வெளித்தெரியும் மரக்கட்டைபோல, இந்த வயலின்காரன் அங்கு துருத்திக்கொண்டமர்ந்திருந்தான். பேச்சால் நிறைந்திருந்த மண்டபத்தில் இவன்மட்டும் வார்த்தைப்பிரவாகம் வெளிவராது, ஆட்டுக்குட்டியினை விழுங்கிக்கொண்டிருக்கும் பாம்பை…
-
- 2 replies
- 1.2k views
-
-
அந்த நாள் ஏன் விடிந்தது என்று இருந்தது ராணியம்மாவுக்கு... அதிகாலையிலேயே யுத்த தாங்கிகளின் ஓசையும் அந்த இடமெல்லாம் சுடுகாடாக்கும் வண்ணம் விழுந்த எறிகணைகளும் தான் ராணியம்மாவை துயில் எழுப்பின. ஐயோ ..ஆமி சுட்டு கொண்டு வாறான்..பதுங்கு குழிகளுக்குள் கைக்குண்டுகள் வீசி கொண்டு வாறான் என்ற செய்தி காற்றுடன் மக்களோடு கலந்தது.. மக்கள் செய்வது அறியாமல் திகைத்து நின்றார்கள்... ஆமி வரும் வரை ..பதுங்கு குழிக்குள் இருப்பம் என்ற கனவும் மண்ணாகி போனது அவர்களுக்கு... உண்டியல் சந்தியை அண்மித்த வடக்கு பக்கத்தில் இன்னும் புலிகள் தீரமுடன் போரிடும் சத்தம் கேட்டு கொண்டிருந்தது... கடற்கரை பக்கமாக வடக்கு ஆமியும் தெற்கு ஆமியும் இணைந்து மேற்கு பக்கமாக முன்னேறி வருவதையும் தடுத்தி நிறுத்தி புலிகள்…
-
- 6 replies
- 1.7k views
-
-
விலாசம் மறந்த வீரனின் சுவடுகள் தளபதி ஜெயம் (பாலகுரு சுவேந்திரன்) (பாலகுரு சுவேந்திரன் - பிறப்பு - 1965ம் ஆண்டு) வெற்றிகளுக்கு விழுதான வேர்களை உலகம் என்றைக்கும் உணர்ந்து கொள்வதில்லை. வீரத்தின் வேர்களுக்கான விலாசங்களும் அப்படியே வெளியில் அவை ஒருபோதும் வெளிச்சமிடப்படுவதில்லை. இத்தகைய வேராக வெளியில் வராத விலாசமாக எங்களோடு எங்கள் மக்களோடு வாழ்ந்து வரலாறாகிப் போனவர்களில் தளபதி ஜெயமண்ணாவும் ஒருவராக வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட ஒரு அற்புத மனிதன். கதாநாயகத் தகுதியையோ கவர்ச்சியான மேடைப்பேச்சு வல்லுனர்களையோ புலிகளின் பாசறைகள் வளர்த்ததில்லை. தலைவனின் வேதம் போல ‚'சொல்லுக்கு முன் செயல்' இதுவே விடுதலைப்புலகள் வரலாற்றின் வெற்றி. திறமைகள் மட்டுமே அந்தந்த தகுதிகளைப் பெற்றுக் கொ…
-
- 3 replies
- 1.8k views
-
-
வேலை முடிந்து வழமையாக வீடு செல்லும் பாதையால் பராக்கு பாாத்த படி சென்று கொன்டிருந்த வாசனை வணக்கம் என்ற ஒரு பெண் குரல் இடை மறித்தது.நிமிர்ந்து பார்த்தவன் தானும் ஒரு வணக்கத்தை உதிர்த்து விட்டு நடையை தொடர்ந்தவனை உங்களோடை கொஞ்சம் கதைக்க வேணும் என்ற வாாத்தை தடுத்தது. நின்றவன் ஒரு கணம் தாறுமாறாய் குழம்பி தெளிந்தான் .அது வேறுயாரும் இல்லை அவனது நன்பன் கரனின் மனைவி தான்.குழப்பத்துக்கு காரணம் வழமையாக வணக்கத்துடன் போறவா இன்று கதைக்க வேணும் என்று சொன்னது தான்.தான் அவாகளிடம் கடணாக வாங்கிய பணம் ஞாபகம் வர தெளிந்தான். ஓம் சொல்லுங்கோ அக்கா என்றவன் தவனைசொல்வதற்க்குஅவசரமாக வசதியான திகதியை தேடிக்கொன்டிருந்தான்.வாசன் நீங்கள் அந்தக்காசை கரனிடம் கொடுக்க வேண்டாம் என்னிடம் தாங்கோ அதைய…
-
- 22 replies
- 3.4k views
-
-
அம்மா ...!!! பெண்களை கொண்டாட ஆயிரம் காரணம் தேவையில்லை இந்த ஒரு வார்த்தை போதும் " அம்மா " இது அண்மையில் நான் படித்ததில் பிடித்த வசனம். எனக்கும் நான் பிறக்கும் போது கிடைத்த வரங்களில் இந்த உருவத்துடன் என் அம்மாவும் ஒன்று. இன்று நான் அம்மாவை பற்றி ஒரு கட்டுரையை எழுதுகிறேன் என்றால், அதற்கு பின்னும் அந்த மனுசி தான் இருக்கிறா. நான் நடை பழகி, ஆரம்ப கல்வி கற்கும் நாட்களில், ஒருமுறை எனது சைக்கிளின் திறப்பை தொலைத்துவிட்டு, வீட்டுக்கு வர பயத்தில் அம்மாவின் நண்பி ஒருவரின் வீட்டிலேயே அழுது கொண்டிருந்த வேளை, வந்து கட்டி அணைத்து, இதுக்கெல்லாம் பயபிடுவதா என்று கூட்டி சென்றா ..அன்று அவ தந்த அந்த தன்னம்பிக்கை , என்னை பின்னர் ஒரு நாளில் பயம் என்றால் என்ன என்று கேட்கும் அளவுக்கு, …
-
- 11 replies
- 7.8k views
-
-
"மச்சான் சிவாசிகணேசன் நடித்த சவாலே சமாளி.... திறமான படமாம், நாளைக்கு ராணித் தியேட்டரிலை முதல் காட்சி 10மணிக்கு, கட்டாயம் போய்ப் பார்க்கவேண்டும்." பாலா சொன்னான். ஆனால் பசை வேண்டுமே ? மூன்று ரூபாதான் இருக்கு. ஆறு பேரும் போவதென்றால் !நுளைவுச்சீட்டு... இன்னமும் 90சதம் வேணும். தேங்காய்க்கடையில் 180 தேங்காய் உரித்தால் 90 சதம் கிடைக்கும். ஆளுக்கொரு அலவாங்கு நாட்டி தேங்காய்கள் உரிக்கப்பட்டன. எண்ணியபோது முந்நூறை நெருங்கி வந்துவிட்டது. தேங்காய்களுக்கு முற்கூட்டியே பணம்கொடுத்து சொல்லிவைத்தவன் நாளை விடிய வரப்போகிறான். வழக்கமாக உரிப்பவனைக் காணவில்லையே...? என்ற கவலையில் இருந்த முதலாளிக்குப் பரம சந்தோசம்!!. இரண்டுரூபா நோட்டு ஒன்றை எடுத்து எங்களை ஆசிர்வதிப்பதுபோல நீட்டினார். 10 மணிக…
-
- 10 replies
- 2.3k views
-
-
பெரியத்தார் வைத்தியசாலையில் அனுமதீக்கப்பட்டிருப்பதாக அறிந்து அவரைப்பார்க்க சென்றிருந்தேன். அவருடைய அறை இரு கட்டில்களைக்கொண்டது அறைக்குள் போனதுமே இருவர் தமிழில் வணக்கம் சொன்னார்கள் அத்தாருடன் பேசிக்கொண்டிருந்தபோது பக்கத்திலிருந்தவரும் சேர்ந்து கொண்டார் இவர் வயோதிபர் இல்லத்திலிருந்து இங்கு வந்துள்ளார் என அத்தார் அறிமுகப்படுத்தியதால் கொஞ்சம் அவரைக்கவனிக்கத்தொடங்கினேன் எனக்கு இது புது அனுபவம். நீங்கள் இன்னாரின் மகனல்லவா என என்னைக்கேட்டு எனது தகப்பனாரது பெயரைச்சொல்லி என்னை அதிசயிக்க வைத்தார் அவரை எப்படித்தெரியும் என்பதற்கு அவரைத்தெரியாமல் இருக்கமுடியுமா என்றார். இத்தனைக்கும் அவர் யாழ்ப்பாணத்தில் வேறு ஒரு ஊரைச்சேர்ந்தவர். பிரான்சிலுள்ள ஒரு பெர…
-
- 0 replies
- 1k views
-
-
எனக்கு மனதில் பயத்துடன் கூடிய ஒரு பெருமிதமும் தோன்றியது. செய்வது திருட்டு. இதற்குள் என்ன பெருமிதம் என்று மனதில் எண்ணம் எழ மனதுக்குள்ளேயே சிரித்தும் கொண்டேன். என்றாலும் இது ஒரு அசட்டுத் துணிவு என்பதும் தெரிந்தே தான் இருந்தது. அம்மாவுக்குத் தெரிந்தால் என்ன நினைப்பா என்று ஒரு பயம் ஏற்பட்டாலும் இப்படி திருட்டுத்தனமாய் பள்ளிக்கூடத்தைக் கட் பண்ணிவிட்டு படம் பார்க்க வருவது ஒரு திரில்லான அனுபவமாகத்தான் இருக்கு என எண்ணிக் கொண்டது மனது. இருந்தாலும் அடிமனதில் யாராவது ஊரவர்கள் பார்த்துவிடுவார்களோ என்னும் அச்சம் ஓடிக்கொண்டே இருந்தது. தனிய நான் வரவில்லைத்தான். இன்னும் மூன்றுபேர் மாலி, நந்தினி, ஹேமா, ரதி இத்தனை பேருடன் தான் வந்திருக்கிறேன். பாடசாலைக்குப் பக்கத்தில் இருக்கும் மாலியின்…
-
- 34 replies
- 5.5k views
-
-
பேரூந்தில் அவனுக்கு நேர் எதிரே அடுத்த வரிசையில் அமர்ந்திருந்த அந்த வெள்ளையின மூதாட்டி பார்வையில் ஓர் அருவருப்பு தெரிந்தது.அந்த பார்வயை தவிர்க்க அவன் இடது புறமாக திரும்பி யன்னல் ஊடாக வெளியே பார்வையை ஒட விடுகிறான். மழை வெளியே பெய்து கொண்டிருந்து வானம் இருட்டிக்கிடந்தது யன்னல் கண்ணாடியில் இன்னமும் அந்த வெள்ளையின மூதாட்டி இவனை பார்த்து கொண்டிருப்பது தெரிந்தது. அந்த விம்பத்தின் விழிகளைப்பார்க்க சக்தியற்றவனாக் பார்வையை தாழ்த்திக்கொள்கிறான். தனது கைத்தொலைபேசியை எடுத்து நோட்டம் விட்டான் அதில் கடைசியாக வந்த அழைப்பு கரன் என்றிருந்தது,அழைப்பு பத்து நிமிடங்களுக்கு முன்னர்தான் வந்திருந்தது.உரையாடலை நினைவுக்கு கொண்டுவர முயன்றான். பொதுவாக பதினேழு மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக உ…
-
- 11 replies
- 1.9k views
-
-
எனது வீட்டு வரவேற்பறை பத்து வருடப் பழசு. ஆட்களைத்தான் மாற்ற முடியாது. சரி அறைகளின் வண்ணங்களையாவது மாற்றினால் மனதுக்கு இதமாக இருக்கும் எண்டு கணவரைக் கேட்டால், கணவர் அதுக்கென்ன மாத்துவம். எல்லாரும் சேர்ந்து பழைய பேப்பரை உரியுங்கோ. நான் பெயின்ற் அடிக்கிறன் என்றார். எனக்குத் தெரியும் உது நடக்காத வேலை எண்டு. ஏனென்டா போன வருசமும் இப்பிடித்தான் கொரிடோருக்குச் சொல்லி கடைசியா நான் தான் பெயின்ட் அடிச்சு முடிச்சது. அதனால நீங்களோ நாங்களோ ஒண்டும் செய்ய வேண்டாம். ஆட்களைப் பிடிச்சுச் செய்வம் எண்டு சொல்ல, வீணா ஏன் அவங்களுக்குக் காசு எண்டு இரண்டு மூண்டு நாள் இழுபறியில் பக்கத்து வீட்டில இருக்கிற போலந்துக் காரனைக் கேட்பதென முடிவெடுத்தேன். போன மாதம் அவன் முன் வீட்டு மதில் கட்டினதைப்…
-
- 28 replies
- 2.8k views
-
-
உலகம் சுற்றும்.. குருவிகளுக்கு ஒரு திமிர் இருந்தது.. தமிழில "டிஸ்ரிங்சன் - (Distinction) எடுத்தது என்று. அந்தத் திமிரோட.. புலம்பெயர்நாடுகளில் ஆண்டு தோறும் நடக்கும் தமிழ் மொழி பொதுப்பரீட்சைக்கான ஆயத்தம் நடந்து கொண்டிருக்கிறது... அதில்.. ஆண்டு 7 பயிற்சி வினாக் கொத்து ஒன்று குருவிகளின் கண்ணில் பட அதைக் குருவிகள் கொத்தி பார்க்கத்துடிச்சுதுங்க.. சும்மா இல்ல..show off க்குத்தான்.. தமிழில.. படம் காட்ட. முதல் கேள்வியே.. ஈழத்தில் வன்னிப் பகுதி எத்தனை "பற்று"களாகப் பிரிக்கப்பட்டிருந்தது..??! போச்சே வடை போச்சே. டிஸ்ரிங்சன் கிழிஞ்சு போச்சு. சிங்களவன் டிசைன் பண்ணின தமிழைப் படிச்சிட்டு.. தமிழிலை டிஸ்ரிங்சனை எடுத்திட்டு... சோ காட்ட வெளிக்கிட்டா..தமிழன் டிசைன் பண்ணின பேப்பரில கவுண்…
-
- 5 replies
- 1.4k views
-
-
காணாமற்போனவர்கள் இனி வர வேண்டாம் நீலக்கோடுகள் அடர்த்தியாய் வரையப்பட்ட சாரமும் வெள்ளைச் சேட்டும் அணிந்திருந்தான். சன நெரிசலை விலக்கி வந்து கொண்டிருந்தவன் தனது நடையின் வேகத்தைக் கூட்டி ஓடிவரத் தொடங்கினான். கையில் ஒரு பை அதனுள் எதையோ வைத்துக் காவிக்கொண்டு ஓடிவந்தான். அவளைப் பெயர் சொல்லி அழைத்தான். கையில் இருந்த பையிலிருந்து ஒரு அழகான பெட்டியை அவளிடம் நீட்டினான். இது உன்னுடைய மகனுக்காக நான் எடுத்து வைச்சிருந்தனான். இத அவனிட்டைக் குடு மாமா தந்தனெண்டு....! அவன் கொடுத்த பெட்டி தவறி கீழே விழுந்தது. அதனுள் சில்லறைக்காசுகள். நிலத்தில் சிதறிய காசுகளைப் பொறுக்கிப் பெட்டியில் பத்திரப்படுத்திக் கொண்டு நிமிர்ந்தாள். பச்சையுடையுடுத்த சட்டித் தொப்பியணிந்தவர்கள் அவனைச் சூழ்ந்தா…
-
- 3 replies
- 1.1k views
-
-
"உண்மையாகவா! அவள் உன்னைக் காதலிக்கிறாளாடா..?" கேட்ட நண்பர்களின் முகத்தில் அவநம்பிக்கை, ஆச்சரியம், அதிசயம், அதற்கும் மேலாக அது பெரும் வியப்பாக இருந்தது. "சும்மா கதைவிடாதை." "சத்தியமா மச்சான், வேண்டுமென்றால் இன்றைக்கே புறூவ்பண்ணிக் காட்டவா." அவன் காதல் மன்னனின் அழகு கொண்டவன். எங்கள் நண்பன்தான். ஆனாலும்! உயிரோடு ஒட்டிய நண்பனல்ல!!. காரணம்! அவன் நடத்தையில் பெண்கள் சம்பந்தப்பட்ட சந்தேகம்.... ஆனாலும் அவன் இருக்குமிடம் கலகலப்பும் சிரிப்புமாகத் திகழ்வதாலும், கூடப்படிப்பதாலும், நண்பனாகியிருந்தான். இவனையா அந்தப் பேரழகி காதலிக்கிறாள்!!. பெரும் பணமும், படிப்பும் நிறைந்த குடும்பத்தில் பிறந்த அவள் எங்கே?. இவன் எங்கே? இவனைப்பற்றிய உண்மை அறியாமலா அவள் இவனைக் காதலிக்கிறாள்..!!. காதலுக்…
-
- 4 replies
- 1.5k views
-
-
தலைக்கு கறுப்பு சாயம் பூசி ஒவ்வொரு நாளும் முகச்சவரம் செய்து 80 வயதிலும் 60 வயது தோற்றத்தில் இருப்பார் கந்தசாமி சிவசாமிப்பிள்ளை.அவுஸ்ரேலியாவில் அவரின் பெயர் கந்ஸ் ஆனால் ஊர்காரர் ஆசையாக கந்தர் என்று அழைப்பார்கள்.சுரேஸ் அவரை கந்ஸ் அண்ணே என்று செல்லமாக அழைப்பான்.ஊரில் அங்கிள் என்றுதான் கூப்பிட்டவன் அப்படி கூப்பிட ஒரு காரணமிருந்தது.காரணத்தை கதை வாசிச்ச பின்பு அறிவீர்கள்.சுரேஸும் கந்தரும் ஒரே ஊர்,ஒரே சாதி அத்துடன் தூரத்து உறவு வேறு ,இருவரின் பாசப்பிணைப்பை பற்றி சொல்வதற்கு வேறு விடயங்கள தேவையில்லை. இப்ப மகளுடன் இருக்கின்றார் ..இரண்டும் பெட்டைகள் மூன்றாவது பெடியனாக பெறவேண்டும் என்று கோவில் குளமெல்லாம் ஏறிய புண்ணியம் 7வருடத்தின் பின்பு கடவுள் அவருக்கு ஒரு ஆண்குழந்தையை கொடுத்திட்டா…
-
- 16 replies
- 2k views
-
-
ஆடி மாத பின்னிரவு ,அந்த நாள் ஏறித்த கோரவெய்யிலை சற்று தணித்து அதிகாலையை வரவேற்க பச்சை வயல்களை தழுவிய படி மெல்லிய இளங்காற்று தஞ்சாவூரை வருடுகின்றது . உரத்தநாட்டு கிராமம் - தஞ்சாவூர் புதுக்கோட்டை நெடுஞ்சாலையின் ஓரம் ஒரு கீற்றுக்கொட்டகையில் பெற்றோமக்ஸ் விளக்கு ஒளியின் உதவியுடன் சிற்பிகள் சிலர் உளியால் கருங்கற்களை செதுக்கிக்கொண்டு இருக்கின்றார்கள். பல்லவர் காலத்தில் இருந்து இன்று வரை இந்த உளிஓசை இங்கு கேட்டுக்குகொண்டுதான் இருக்கு . கொட்டகையை சுற்றி எங்கும் பெரிய பெரிய கருங்கற்கள் தீட்டபடாமல் நீண்டுகிடக்கின்றன. அங்கிருக்கும் ஒரு பெரிய கருகங்கல்லில் தலைக்கு கையை கொடுத்தபடி சாய்ந்திருகின்றான் சாரங்கன், அவனருகில் இருந்து இடது கைவிரலை ஆட்டிய படி எதையோ அழுத்திசொல்லும்…
-
- 0 replies
- 1k views
-
-
( இப்பதிவு வாலிபவயதுக் குறும்பு பாகம் 6 ன் தொடர்ச்சியாகும். http://www.yarl.com/forum3/index.php?showtopic=138217 ) அவன் அம்மாவும், மஞ்சுவின் அம்மாவும் அடைப்பில்லாத அந்த வேலிநடுவில் இருந்த வேப்பமரத்தடி வேரில் அமர்ந்து ஊர்க்கதை, உறவுக்கதை பேசிக்கொண்டிருக்கும் போது, அவனும் மஞ்சுவும் மணலில் வரம்புகட்டிக் கீச்சு மாச்சுத் தம்பளம் விளையாடிய காலத்திலிருந்து, இனிப்புக்கும், பலகாரத்திற்கும் அடிபடுவதும், கோள்சொல்லி அவள் அவனை அடிவாங்க வைத்து ரசிப்பதும், பாசத்தோடு காக்காக் கடி கடித்து அவள் அவனுக்கு மிட்டாய் ஊட்டிவிடுவதும், பூப்பறித்து அவன் அவள் தலையில்சூட்டி அழகுபார்ப்பதும்,, அந்த இரு தாய்மார்களையும், பூரிப்படைய வைக்கத்தான் செய்தது. அவர்கள் உள்ளங்களில் இனிமையான கற்பனைகள் வளர்ந்…
-
- 10 replies
- 1.8k views
-
-
இப்பதிவை தொடரவேண்டி இருப்பதால் வரும் பதிவு வாலிபவயதுக் குறும்புக்கு சற்றும் பொருத்தமற்றுத் தோன்றுகிறது ஆகவே தொடரப்போகும் பதிவை "மஞ்சு என் உயிர் நீதானடி" என்ற தலைப்பில் பதியவுள்ளேன். சிரமத்திற்கு மன்னிக்கவும். "உன்னுடைய அப்பாவின் ஆட்கள்தானே நீதவான்! அவரிடமும் ஒரு நற்சான்றுப் பத்திரம் வாங்கினால் உன்னைத் தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்த்துவிடுவதற்கு உதவியாக இருக்கும்." மாமாவின் ஆலோசனை அவனை நீதவான் வீட்டுக்கு அனுப்பி வைத்தது. சொந்தம்தான் , ஆனாலும்! அவன் முன்விறாந்தை தாண்டி உள்ளேபோய்ப் பழகமுடியாத ஒரு தராதரப் பந்தம். அங்கிருந்த வாங்கில் போய் இருந்தான். சிறு மங்கை ஒருத்தி வந்து விசாரித்தாள். அவள் போனதும், அவர் வந்தார். வந்த விபரம் சொன்னான். ஓ அப்படியா! நீர் இன்னாருடைய மகனா! ச…
-
- 8 replies
- 1.5k views
-
-
வாடா மல்லிகை கார்த்திகை திங்கள் 2013 ஒரு நாள் மதிய வேளையில் அலுத்துக் களைத்து வீடு திரும்பும் பொழுது எனது மனம் வழமைக்கு மாறாக ஊரைச் சுற்றியே ஊசலாடிக் கொண்டிருந்தது. அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை .கடந்த மூன்று வருடங்களாக அரிதார முகங்களையும் , அவற்றால் வரும் ஓட்டில்லாத சிரிப்புகளையும் பார்த்துச் சலித்த எனக்கு ஒரு மாற்றம் வேண்டும் என்ற ஓர் எண்ணம் சடுதியாக என் மனதில் சடுகுடு விளையாடியதில் வியப்பு ஏதும் இல்லை . மனதில் எழுந்த எண்ணத்தை செயலாக்கும் முடிவில் வீடு வந்த நான் ,என் எண்ணத்தை பள்ளியறையில் மஞ்சத்தில் ஆற அமர இருக்கும்பொழுது எனது மனைவியிடம் பகிர்ந்தேன் . அவளும் எனது மன ஓட்டத்தில் இருந்தாளோ என்னவோ எனது எண்ணத்துக்கு பச்சைக்கொடி காட்டினாள் . இருவரும் ஒன்றிணைந்து …
-
- 42 replies
- 4.9k views
-
-
இன்று எனக்கு நன்கு அறிமுமான ஒரு நண்பரை சந்திப்பதாய் ஒப்பந்தம் இருந்ததை கைத்தொலைபேசி சிணுங்கியபடியே அறிவித்தது. மனதில் அதைக் குறித்துக்கொண்டேன். அவருக்கு பின் மதியவேளை அவரை சந்திப்பதாகவும், நாம் ஒஸ்லோவின் மேற்குப் பகுதியில் உள்ள புறநகர் ஒன்றில் உள்ள ஒரு கோப்பிக் கடையில் சந்திப்போம் என்றும் குறும்செய்தி அனுப்பினேன். ”சரி” என்று பதில் குறுஞ்செய்தி வந்தது. கோப்பிக்கடைக்கு வெளியே நண்பர் உட்கார்ந்திருந்தார். அவரருகே உட்கார்ந்துகொண்டேன். பரிமாறும் அற்புத அழகியொருத்தி என்ன வேண்டும் என்றாள். ஒரு தேத்தண்ணி என்றேன். என்ன தேத்தண்ணி என்றுவிட்டு மாம்பழம், தோடம்பழம், இன்னும் பல பெயா்களைக் கூறி இதில் எது வேண்டும் என்றபடியே புருவத்தை உயர்த்தினாள், மாம்பழம் எனக்குப் பிடிக்கும் என்பதால் ம…
-
- 5 replies
- 1.6k views
-
-
நாள் ஒன்று வரும் மாவீரர் தின நினைவாக எழுதப்பட்ட நாடகம். எழுத்து ஆக்கம்: இளங்கோ, பின்னணி இசை கோர்ப்பு : சசி வர்ணம் நடித்த மற்றும் குரல் வடிவம் தந்த அனைத்து கலைஞ்சருக்கும் நன்றிகள். (எல்லோருடைய பெயர்களும் என் கை வசம் இல்லை - அடுத்த பதிவில் இணைக்கின்றேன் மன்னிக்கவும்) கதைக் களம் ஆனது புலம் பெயர் நாடு, தாயகம் இரண்டையும் உள்ளடக்கி இருக்கும். புலம் பெயர் நாட்டில் ஆரம்பித்து தாயகம் நோக்கி நகரும். இறுதியில் புலம் பெயர் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி நிறைவுறும் தமிழரின் போராட்டம் குறித்த நம் இளையவர்களின் புரிந்துணர்வு, விட்டு செல்லப்பட்ட பொறுப்புகள் சம காலத்தில் தாய் மண்ணில் நடக்கின்ற அவலங்கள், முன்னால் போராளிகளின் நிலைமை, தமிழராய் நாம் அனைவரும் ஒற்றுமையாய் அணி திரள வ…
-
- 8 replies
- 1.9k views
-
-
தகிக்கும் தீயடி நீ (கொஞ்சம் பெரிய சிறுகதை) ----------------- அவளை நீங்கள் ஒரு புத்தகக் கண்காட்சிலோ அல்லது ஒரு ரயில் பயணத்திலோ கண்டிருந்தால் அந்த நிமிடமே "என்னைக் கல்யாணம் செய்வாயா" என்று கேட்டு இருந்து இருப்பீர்கள். அல்லது கோவில் ஒன்றின் கர்ப்பக் கிரகத்தில் கண்டிருந்தால் அன்றே மொட்டை அடித்து இடுப்பில் ஒரு துண்டு மட்டும் கட்டி அனுதினமும் ஆராதிக்கும் ஒரு பக்தனாகவே மாறியிருப்பீர்கள் அல்லது ஒரு சிறு சந்தியில் கடந்து போகும் இன்னொரு வாகனத்தில் அவளைக் கண்டு இருந்திருந்தாள் அவள் வீடு எங்கு என்று தேடியே பித்துப் பிடித்து அலைந்து இருப்பீர்கள். ஆனால் நான் அவளைக் கண்டது இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் அல்ல. மிகவும் குறுகிய சந்தொன்றின் இடது பக்கம் இருந்த ஒரு சிறு அடு…
-
- 27 replies
- 2.6k views
-