நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
பெண்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானோருக்கு ஆண்களைப் போல இல்லை என்றாலும் ஓரளவு மீசை அல்லது தாடி அல்லது கன்னங்களில் அதிக உரோமம் என்று உடலில் அசாதாரண முடி வளர்ச்சிகள் காணப்படுவதை பலரும் அவதானித்திருப்பீர்கள். இன்றைய உலகில் இப்படியான பல பெண்கள் தமதுடலில் அதீத முடி வளர்ச்சியைக் கண்டதும் ஆண்களைப் போல "சேவ்" செய்துவிட்டு அல்லது இரசாயனங்களைத் தடவி மயிர்களைப் பிடுங்கிவிட்டு சாதாரண பெண்கள் போல காட்சியளிப்பதையும் காணலாம். ஆனால் பெண்களின் இந்த முடி வளர்ச்சிகள் ஒன்றும் சாதாரணமானவை அல்ல. அவர்களில் ஏற்படும் ஓமோன் அல்லது உடல்நலக் குறைவின்/ குறைபாட்டினால் ஏற்படும் அறிகுறிகள் என்கின்றனர் ஆய்வாளர்கள். இது பெண்களில் மன அமைதி இழக்கச் செய்யும் (குறிப்பாக இளம் பெண்களில்) நிலை…
-
- 6 replies
- 2.9k views
-
-
இன்று விகடனில் வாசித்த ஒரு தொடரில் வந்த குறிப்பு ஒன்று: சுகர், பி.பி., போன்றவற்றை தவிர்க்க, தமிழர்கள் 'கை’க்கொள்ளும் ஒரே உத்தி... நடைப்பயிற்சி! ஆனால், நாம் மேற்கொள்ளும் நடைப்பயிற்சி முறையானதா? இதுகுறித்த சில சரி, தப்பு விவரங்கள் இங்கே... நடைப்பயிற்சிக்கு மாற்றாக மருந்து கிடையாது. இந்தப் பயிற்சி இல்லாமல் எடை குறைக்கவோ, சர்க்கரை நோயை வெல்வதோ சாத்தியமே இல்லை. எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். காலையில்தான் நடக்க வேண்டும் என்பது இல்லை. இரவில் நடக்கையில் 5-10 சதவிகிதம் பயன் குறையலாமே தவிர, தப்பு கிடையாது. ஓடுவதற்கும் நடப்பதற்கும் கலோரி எரிப்பில் அதிக வித்தியாசங்கள் இல்லை. 30 நிமிடங்களில் 3 கி.மீ கடக்கும் வேகத்தில் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் நடக்கலாம். ஆனா…
-
- 5 replies
- 2.8k views
-
-
இயற்கையின் படைப்பில் கிடைக்கும் எண்ணற்ற பழவகைகளை உட்கொள்வதால் கிடைக்கும் பயன்களைக்குறித்து இப்பகுதியில் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இங்கு பேரீச்சை மற்றும் சப்போட்டாப் பழங்களின் சிறப்புக்களை நாம் காணப்போகிறோம். பேரீச்சையின் பெரும் பயன்கள்: 'மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது' என்பார்களே! அது பேரீச்சைக்கு மிகவும் பொருத்தமான பழமொழி. வேறெந்தப்பழங்களையும் விட மிக மிக இனிப்பானது இது. பாலைவனத்திற்குக் கிடைத்த பேறு இப்பழம். இயற்கையின் அன்பும் அக்கறையும்தான் என்ன? வறண்ட பாலையிலும் இனிமை ததும்பும் பழம், 'ஏழ்மையிலும் காணக்கிடைக்கும் கொடைத்தன்மை போல்'. பனையின் இனத்தைச் சேர்ந்தது பேரீச்சை. யூப்ரடிஸ் நதிக்கரைகளை ஆதியாகக் கொண்டது இதன் வரலாறு. வறண்ட தட்பவெப்பமுடைய எல்லாப் …
-
- 0 replies
- 2.8k views
-
-
பித்தப்பை கற்களுக்கு தீர்வு என்ன!!!! முதலில் பித்தப்பை என்றால் என்ன என்பது பற்றி அறிவோம். அதாவது கல்லீரலில் உற்பத்தியாகும் பித்த நீரை எடுத்துச் செல்லும் பித்த நாளத்தில் ஒட்டியிருக்கும் சிறிய பைதான் பித்தப் பை எனப்படுகிறது. இது கல்லீரலின் அடியில் அமைந்துள்ளது. இந்த பித்தப் பை நமது உணவு ஜீரணமாவதற்கு பெரிதும் உதவுகிறது. அதாவது ஒரு வேளை சாப்பிட்டு அடுத்த வேளை உணவு உண்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த பித்தப் பை ஜீரணத்திற்குத் தேவையான ஜீரண நீரை சேமித்து வைக்கும். நாம் உணவு உண்டதும் இந்த பித்தப் பை சுருங்குகிறது. இதனால் பையில் இருக்கும் ஜீரண நீர் குடலுக்குச் சென்று உணவு செரிமானத்திற்கு உதவுகிறது. அவ்வாறு பித்தப் பை சுருங்கி விரிவடையாமல் நின்று போவதால்இ பித்தப…
-
- 5 replies
- 2.8k views
-
-
ஜெசிகா பிரவுண் பிபிசி ஊட்டச்சத்து மிக்க உணவுகள் பட்டியலில் நிச்சயம் முட்டைகளும் இடம் பெற்றிருக்கும். அவை உடனடியாகக் கிடைக்கக் கூடியவை, எளிதில் சமைக்கலாம், கட்டுபடியாகும் விலை. புரதம் நிறைந்தது. ``ஓர் உயிரி வளரத் தேவையான சரியான அனைத்து உட்பொருட்களையும் கொண்டதாக முட்டை கருதப்பட…
-
- 23 replies
- 2.8k views
-
-
பைன் பருப்புகள் / கொட்டைகள் சாப்பிட்டால் ஆண்களுக்கு Vigra பாவிக்க தேவையில்லை என்று வேலை தள உடல் நல கூட்டத்தில் சொன்னார்கள். யாரவது பயன்படுத்தி உள்ளீர்களா? இது உண்மையா? பைன் பருப்புக்கு தமிழ் சொல் என்ன? http://www.nutrition-and-you.com/pine-nuts.html http://www.healthdiaries.com/eatthis/6-health-benefits-of-pine-nuts.html http://www.siberiantigernaturals.com/extravirginpinenutoil.htm
-
- 1 reply
- 2.8k views
-
-
பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு என்று அழைக்கின்றனர். நூற்றாண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய மரங்...களுள் பூவரசும் ஒன்று. காயகல்ப மரமான பூவரசு பூமிக்கு அரசன் என்று அழைக்கப்படும் பெருமையுடையது. இதய வடிவ இலைகளைக் கொண்ட இந்த மரம் இந்தியா முழுவதும் காணப்படும். குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகமாகக் காணப்படுகிறது. இதில் கொட்டைப் பூவரசு சாதாரணப் பூவரசு என இருவகைப் படும். விதைகள் இல்லாமல் சப்பையான காய்கள் இருப்பது சாதாரணப் பூவரசு. கொட்டைப் பூவரசு காய்களை உடைத்தால் உள்ளே நிறைய விதைகள் இருக்கும். இதன் இலை, பூ, பழுப்பு, காய், வேர் மற்றும் பட்டை முதலியன மருத்துவப் பயன் கொண்டவை. பூவரசம் மரத்தில் இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வ…
-
- 2 replies
- 2.8k views
-
-
சோயா உணவுகளை அதிக அளவில் உட்கொள்வது ஆண்களில் விந்து உற்பத்தியை பாதிக்கலாம் என அண்மைய ஆராய்சிகள் தெரிவிக்கிறன. சோயா உணவை உட்கொள்ளும் ஆண்களில் காணப்படும் விந்து கலங்களின் எண்ணிக்கை சோயா உணவை உட்கொள்ளாத ஆண்களிலும் குறைவாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது. 15 வகையான சோயா உணவுகளை கொடுத்து செய்யப்பட்ட ஆராய்ச்சியில் சோயா உணவை உட்கொண்ட ஆண்கள் 41 மில்லியன் விந்து கலங்கள் / மில்லி லீற்றர் விந்து பாயத்தில் (திரவத்தில் )காணப்படுவதாகவும் , இது பொதுவாக ஆண்களில் காணப்படும் சராசரி விந்து எண்ணிக்கையான 66 மில்லியன் விந்து கலங்கள்/ மில்லிலீற்றர் விந்து பாயத்திலும் கணிசமான அளவு குறைவாகும். சோயா உணவுகளில் உள்ள ஐசோ பிளேவோன்கள் (isoflavone)இதில் முக்கிய பங்கு வகிப்பதாக சொல்லப்படுகிறது. சோயா உண…
-
- 10 replies
- 2.8k views
-
-
பழங்களின் மருத்துவ குணங்கள் 1.செவ்வாழைப்பழம் கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும் 2.பச்சை வாழைப்பழம் குளிர்ச்சியை கொடுக்கும் 3.ரஸ்தாளி வாழைப்பழம் கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது. 4.பேயன் வாழைப்பழம் வெப்பத்தைக் குறைக்கும் 5.கற்பூர வாழைப்பழம் கண்ணிற்குக் குளிர்ச்சி 6.நேந்திர வாழைப்பழம் இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும் 7.ஆப்பிள் பழம் வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது 8.நாவல் பழம் நீரழிவை நீக்கும், வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை நீக்கும், விந்துவை கட்டும் 9.திரட்சை 1 வயது குழந்தைகளின் மலக்கட்டு, சளி, காய்ச்சல் குணமாக திராட்சை…
-
- 3 replies
- 2.8k views
-
-
இளம் பெண்கள் பலர் கண்ணாபின்னாவென்று சாப்பிட்டு உடல் பருமனால் அலங்கோலமாய்க் காட்சியளிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் உடல் எடைக் குறைப்புக்காக நவீன சிகிச்சை, மெஷ’னில் உடற்பயிற்சி என்று ஆயிரக்கணக்கில் செலவு செய்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் இனி செலவே செய்யாமல் கொடியிடை பெறலாம். அதற்கான சிறு சிறு பயிற்சிகள் இதோ... கச்சிதமான உடலுடன் இருக்க விரும்பும் பெண்களுக்கு உடலில் அதற்கு தகுந்த மாதிரி தசை இருப்பது அவசியம். சிறிய தசைகள் மீது போதிய கவனம் செலுத்தினால் உடல் நல்ல வடிவத்தைப் பெறும். இந்த தசைகளைச் சுற்றி குறைந்த அளவு கொழுப்பே இருப்பதால் மேக்ரோ ஏரியாக்கள் எனப்படும் தொடை மற்றும் பிட்டங்கள் மீதே நாம் அதிக கவனம் செலுத்துகிறோம். ஆனால் மைக்ரோ ஏரியாக்களில் (சிறிய தசைக…
-
- 8 replies
- 2.8k views
-
-
மனிதனோ, விலங்கோ காம உணர்வு இன்றி இருக்க முடியாது. காம உணர்வு அளவோடு இருந்தால் எந்த பாதிப்பும் இல்லை. இது உடலுக்கும் மனதிற்கும் நல்லது. காம உணர்வுகள் அளவிற்கு அதிகமாக இருந்து அதை அடக்க முடியாமல் போகும் பட்சத்தில் பாலியல் பலாத்காரங்கள், கொலைகள், கொள்ளைகள் போன்றவைகள் நடக்கின்றன. செக்ஸ் உணர்வுகளை அதிகமாக கட்டுப்படுத்தினால் அது வெடித்து வெளிக்கிளம்புமாம். எனவே செக்ஸ் உணர்வுகளை அடக்கினால் மனநோய், தலைவலி உள்ளிட்ட உடலியல் ரீதியான, மனரீதியான பிரச்சினைகள் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள். மனிதனோ, விலங்கோ காம உணர்வு இன்றி இருக்க முடியாது. காம உணர்வு அளவோடு இருந்தால் எந்த பாதிப்பும் இல்லை. இது உடலுக்கும் மனதிற்கும் நல்லது. காம உணர்வுகள் அளவிற்கு அதிகமாக இருந்து அதை அடக…
-
- 6 replies
- 2.8k views
-
-
பக்கவாதம்.. மூளைக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் குருதிக்குழாய்களில் வெடிப்பு அல்லது அடைப்பு ஏற்படுவதன் மூலம் ஏற்படுகிறது. பொதுவாக வயதானவர்களின் தோன்றும் இந்த நிலை இன்றைய கால வாழ்வியல் நடத்தை மாற்றங்களின் அடிப்படை உட்பட்ட பல காரணங்களால் இள வயதினரிடையேயும் நடுத்தர வயதினரிடையேயும் ஏற்பட்டு வருகிறது. முள்ளந்தண்டுப் பகுதியில் உள்ள மூளையின் நீட்டமான முண்ணானில் ஏற்படும் பாதக விளைவுகளாலும் இது ஏற்படக் கூடும். இந்த நிலைக்கு உயர் குருதி அழுத்தம்.. குருதியில் கொலஸ்ரோல் அளவு அதிகரித்துக் காணப்படுவது.. அதிக உடற்பருமன்.. மதுபானம்.. புகைத்தல்.. போன்ற அநாவசிய செயற்பாடுகள்.. குறைந்த உடற்பயிற்சி அதிதீவிர உடற்பயிற்சி போன்றவைகளோடு பிறப்புரிமை சார்ந்த சில நிலைகளும் காரணமாகின்றன. அத்…
-
- 21 replies
- 2.8k views
-
-
நம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை விதித்திருக்கிறார்கள். எந்த உணவோட எதை சேர்த்தால் நன்மைகள் அல்லது கேடு விளைவிக்கும் என்று அனுபவப் பூர்வமாக ஆராய்ந்து அதனை நடைமுறைப்படுத்தி வாழ்கிறார்கள். இரு வேறு உணவுப் பொருட்கள் ஒரே குணத்தைப் பெற்றிருந்தால் சில சமயங்களில் அவை குறிப்பிட்ட தோஷத்தை உடலில் உண்டு பண்ணும். அத்தகைய இரு பொருட்களை சேர்த்து உண்ணக் கூடாது. எடுத்துக்காட்டாக மீன் மற்றும் முள்ளங்கியை சொல்லலாம். அதுபோல், ஒன்றிற்கும் மேற்பட்ட எதிரெதிர் குணங்களை இரு உணவுப் பொருட்கள் பெற்றிருந்தால் அவ்ற்றையும் நாம் உண்ணக் கூடது. உதாரணத்திற்கு தேன் மற்றும் நெய். அ…
-
- 8 replies
- 2.8k views
-
-
எனக்கு நெஞ்சிக்குள் சரியான சளியாக இருக்குது...வெளியால தடிமனாய் வருதுமில்லை.நெஞ்சை அரிச்சுக் கொண்டு இருக்குது...இரவு நித்திரை கொள்ளும் போது மூசிறன்...இதற்கு எதாவது தமிழ் வைத்தியம் இருக்கா?...தெரிந்தால் சொல்லவும்...நன்றி
-
- 28 replies
- 2.8k views
-
-
இனிப்பைக் குறைத்தாலே உடல் பருமன் குறையும்! சனி, 9 பிப்ரவரி 2008( 13:47 IST ) நமது உடலிற்குத் தேவையான சத்துக்களை குறைந்த அளவிற்கே அளிக்கும் உணவு வகைகளையும், பானங்களையும் சாப்பிடுவதன் மூலம் உடல் பருமனைக் குறைக்க முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பெல்ஸ்லி, ஆதம் ட்ரூவோன்ஸ்கி ஆகியோர் தலைமையிலான ஆய்வுக் குழுவினர் குறைந்த கலோரி அளவு கொண்ட இனிப்புச் சத்துகள், சக்தியின் அடர்த்தி தன்மை, திருப்தித் தன்மை ஆகியவைத் தொடர்பாக நடத்திய ஆய்வில் நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் இனிப்பு அளவைக் குறைத்துக் கொண்டாலே உடல் பருமனைக் கட்டுப்படுத்துவது எளிது என்பதைக் கண்டறிந்…
-
- 0 replies
- 2.8k views
-
-
மைக்குரேவேவ் அவன்கள் குறுகிய காலத்தில் மிகப்பிரல்யம் ஆனதும் மட்டுமன்றி மனிதர்களை சோம்பேறியும் ஆக்கியது. இப்ப என்னடான்னா அந்த மைக்குரேவேவ் அவன்களின் பெருக்கம் தான் உடற்பருமன் ஆண்களிலும் பெண்களிலும் சிறுவர்கள் மத்தியிலும் அளவுக்கு அதிகமாக இருக்க காரணமாகியுள்ளது என்று பிரித்தானிய ஆய்வென்று கண்டறிந்துள்ளது..! உடற்பருமன் அதிகரித்தால் தெரியும் தானே தோன்றாத நோயெல்லாம் தோன்றிக் கொள்ளும்..! Microwaves may be to blame for kick-starting the obesity epidemic, a UK scientist suggests. http://news.bbc.co.uk/1/hi/health/6725775.stm
-
- 16 replies
- 2.8k views
-
-
பித்தப்பை கற்களை நாமாகவே அகற்றலாம்..! புற்றுநோய்க்கு அடிகோலும் பித்தப்பை கற்களை, நாமே இயற்கை வழியில் அகற்றலாம். மேலும் இந்த வழிமுறை, வலுவிழந்த நமது கல்லீரலை, புத்துணர்வு பெறவும் உதவுகிறது. ஐந்து நாட்களுக்கு, தொடர்ந்து 4 கிளாஸ் ஆப்பிள் ஜூசையோ அல்லது தினமும் 4 அல்லது 5 ஆப்பிள்களை உண்டுவரவும். பித்தப்பையில் உள்ள கற்களை மிருதுவாக்க, ஆப்பிள் ஜூஸ் உதவும். ஆறாம் நாளில், மாலை 6 மணி மற்றும் இரவு 8 மணிக்கு சுடுநீரில் எப்சம் உப்பை (மெக்னீசியம் சல்பேட்) கலந்து குடிக்கவும். எப்சம் உப்பு, பித்தப்பை குழாய் திறப்பை எளிதாக்கும். இரவு 10 மணிக்கு, அரை கோப்பை ஆலிவ் எண்ணெய் அல்லது எள்ளு எண்ணெயை, அதே சம அளவுள்ள எலுமிச்சை சாறுடன் நன்கு கலக்கி குடிக்கவும். இது பித்தப்பை குழாய் வழியே, கற்க…
-
- 0 replies
- 2.7k views
-
-
தூது வளை தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தில் காய கற்ப மருந்துகள் சிறப்பானதாகும். காயகற்பம் = காயம்+கற்பம் . காயம் என்றால் உடல். கற்பம் என்றால் உடலைநோயணுகாதபடி வலுவடையச் செய்யும் மருந்து. நரை, திரை, மூப்பு, பிணிநீக்கி, வயதுக்கு தகுந்தவாறு ஏற்படும் நோய்களிலிருந்து விடுபடவைத்துநீண்டநாள் வாழச் செய்வது கற்பமாகும். இந்த கற்பமானது உடம்பை கல்போல் ஆக்கும். கல்லினால் செதுக்கப்பட்ட சிலைஎப்படி பன்னெடுங் காலமாக அப்படியே உள்ளதோ அதுபோல் நரை, திரை, மூப்புபிணிகளை நீக்கினால் உடலும் கல்போல் ஆகும். சித்தர்கள் உடலை கற்பமாக்க கற்ப மூலிகைகளை கண்டறிந்து கூறியுள்ளனர்.மூலிகையில் உள்ள தாதுப் பொருட்களை தனியாகவோ அல்லது பல மூலிகைகள் கலந்தோஅல்லது உலோக உபரச உப்ப…
-
- 1 reply
- 2.7k views
-
-
பீட்ரூட்டை சமைத்தோ அன்றி பச்சையாகவோ உண்டுவந்தால் மலச்சிக்கல், கல்லீரல் கோளாறு, பித்தக்கோளாறு எல்லாம் சரியாகும். ஏனைய கீரைவகைகளைப்போல, பீட்ரூட் கீரையையும் உண்ணலாம். அல்சர் என்று சொல்லப்பம் வயிற்றுப்புண், மஞ்சள்காமாலை இதையெல்லாவற்றையும் இந்தக் கீரை குணமாக்கவல்லது. மாதக்கணக்குல மலச்சிக்கல், மூலக்கோளாறுனு அவதிப்படுகநிவழகள, பீட்ரூட் சாறறுடன தண்நீர் சேர்த்து, இரவுவேளை தூங்கத்திற்க்கு முன்னர் பருகிவிட்டு சென்றால் பலன் பல கிடைக்கும். தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் அருந்தி வந்தால் புற்றுநோய் பரவுவதைத் தடுக்கும். ஆரம்பக்கால புற்றுநோயைக் குணமாக்கும் சக்தியும் இதுக்கு இருக்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். http://www.seithy.co...&language=tamil
-
- 5 replies
- 2.7k views
-
-
உலகை உலுக்கும் ஏ (எச்1 என்1) வைரஸ் என்று அழைக்கப்படும் ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் தாக்குதலை தடுக்க கிளாக்சோ ஸ்மித்க்ளைன் மருந்து உற்பத்தி நிறுவனம் 'பேன்டம்ரிக்ஸ்' (Pandemrix) என்ற தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து தயாரித்து வருகிறது. இதில் சேர்க்கப்பட்டுள்ள துணை மருந்து பொருள் குறித்து தற்போது உலகெங்கிலும் மருத்துவ நிபுணர்களிடையே சர்ச்சை கிளம்பியுள்ளது. பொதுவாகவே தடுப்பூசி மருந்துகளில் மனித உடலில் அதன் வினைத்திறனை அதிகரிக்கும் வண்ணமும், உடல் அதனை ஏற்றுக் கொண்டு வினையாற்றவும் துணை மருந்துப் பொருள் சேர்ப்பது வழக்கம்தான். ஆனால் தற்போது இந்த ஸ்வைன் ஃப்ளூ தடுப்பூசி மருந்தில் சேர்க்கப்பட்டுள்ள 'ஸ்க்வாலீன்' (Squalene) என்ற துணைப்பொருளே இந்தச் சர்ச்சைக்குக் காரணம். ஜெர்மனி அரசுக் கட…
-
- 17 replies
- 2.7k views
-
-
இவற்றைத்தானே உட்கொள்கிறீர்கள்...? திடீர் பரிசோதனையில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்கள்! வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் பணிப்புரைக்கமைவாக பொதுமக்களின் முறைப்பாட்டினை அடுத்து யாழ்.கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட 13 உணவகங்கள் மற்றும் 4 மருந்தகங்கள் மீது நேற்று (24) திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த திடீர் பரிசோதனை நடவடிக்கை வல்லை, புறாப்பொறுக்கி, குஞ்சர்கடை, நாவலர்மடம், நெல்லியடி போன்ற பகுதிகளில் இடம்பெற்றதுடன் இந்த கண்காணிப்பு விஜயமானது ஒரு உணவு மருந்துப் பரிசோதகர் மற்றும் மூன்று பொது சுகாதார பரிசோதகர்கள் பங்குபற்றுதலுடன் இட…
-
- 17 replies
- 2.7k views
-
-
முடி உதிர்வதால் தலையில் வழுக்கை தோன்றுவது என்பது ஆண்களில் நீண்ட காலப் பிரச்சனையாக இருக்கிறது. குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்ட கிட்டத்தட்ட 40% ஆண்களில் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு செயற்கையான காரணங்களும் உண்டு மரபணு சார்ந்த காரணங்களும் உண்டு. செயற்கைக் காரணங்களில் கதிரியக்க சிகிச்சை அளித்தல் (radiotherapy) அல்லது எரிதலுக்கு இலக்காதல் என்பனவும் முடி உதிர்வைத் தூண்டுகின்றன. இவ்வாறு தோன்றும் வழுக்கைக்கு தீர்வாக இன்று நடைமுறையில் இருக்கும் சிகிச்சை முறை என்பது, வழுக்கை உள்ள இடத்தில் பிறிதொரு இடத்தில் இருந்து சத்திர சிகிச்சை முறைகளின் கீழ் பத்திரமாக அகற்றிய மயிர்களை நாட்டுதல் என்ற அளவில் தான் இருக்கிறது. ஆனால் சமீபத்தில் பிரித்தானிய ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இரு…
-
- 14 replies
- 2.7k views
-
-
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் கத்தரிக்காய இதில் பல வண்ணங்கள் உண்டு என்றாலும் அனைத்திலும் உள்ள சத்து ஒன்றேதான். பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது. முற்றின கத்தரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கைக் கொண்டு வரும். இதில் தசைக்கும், இரத்தத்திற்கும் உரம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம், கபம் போகும். அதனால் தான் பத்தியத்துக்கும் இக்காயைப் பயன்படுத்தச் சொல்கிறார்கள். அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் இதை உண்டு நல்ல பயன் பெறலாம். அவரைக்காய இதிலும் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரைப் பிஞ்சை நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உண்ணலாம். இதை சமைத்து உண்டால் உடலை உரமாக்கும் காம உணர்ச்சியைப் பெ…
-
- 2 replies
- 2.7k views
-
-
சுக்குக்கு மிஞ்சிய வைத்தியம் இல்லை என்று சொல்வார்கள் ! இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் பயன்களைப் பற்றி கீழே காண்போம். சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம் எனும் கூட்டு மருந்தாகும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை தரக்கூடுயதாக இருக்கிறது இஞ்சி மஞ்சள் போலவே இருக்கும் ஒரு விவசாய பயிராகும். வேரில் மஞ்சள் போலவே இருக்கும். இது பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது. ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது; கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது. …
-
- 10 replies
- 2.7k views
-
-
ரத்தத்தை சுத்தமாக வைக்கும் உன்னத உணவு பொருட்கள் உடல் ஆரோக்கியமானது ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதில் தான் உள்ளன. ஏனெனில் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கு ரத்தமா னது மிகவும் இன்றியமையா தது. எனவே அத்தகைய ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால், உடலில் நச்சுக்களின் அளவு அதிகரித்து, உடலின் உறுப்புக்கள் மெதுவாக பாதிக்கப்படும். இவ்வாறு அதிகப்படியான நச்சுக்கள் ரத்தத்தில் இருந்தால் தான், அலர்ஜி, நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு, தொடர்ச்சியான தலை வலி, சோர்வு போன்றவை ஏற்படும். அதுமட்டுமின்றி, அசுத்த ரத்தமானது உடலில் இருந் தால், உடலில் மட்டுமின்றி, சருமத்திலும் பல பிரச்சனைகள் ஏற்படும். அதில் பிம்பிள், முகப்பரு, கருமைப்படிதல், பொலிவிழந்த சருமம் மற்று…
-
- 0 replies
- 2.7k views
-