நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
பீன்ஸ் வகை ஆகட்டும் அல்லது பயறு வகையாகட்டும், முளைக்கட்டிய வடிவில் இந்த உணவுகளை உண்ணும் போது உங்கள் நாள் சிறப்பாக இருக்கும். தானியங்களையும், பயறுகளையும் தண்ணீரில் ஊற வைத்து உண்ணுவதே முளைக்கட்டிய உணவாகும். எண்ணெயில்லாமல் சமைப்பது, ஏன் அவித்து உண்ணுவதை காட்டிலும் இது நமக்கு நல்ல பயனை அளிக்கிறது. முளைக்கட்டிய பயிர்கள் தயாரிக்க அதிக செலவு ஆவதில்லை. அதேப்போல் அவைகளில் புரதம், வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் டையட்டரி நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ளதால் மிகவும் ஆரோக்கியமான உணவாகவும் விளங்குகிறது. முளைக்கட்டிய பயிர்கள் நம் உடலுக்கு நன்மையை அளிக்க சில காரணங்கள் உள்ளது. அவைகளைப் பற்றி படித்து அதன் நன்மைகளை அடைந்திடுங்கள். அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்…
-
- 1 reply
- 656 views
-
-
what is human Endogenus cholesterol? கொலஸ்ட்ரால் என்றால் என்ன? கொலஸ்ட்ரால் என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள். அது இயற்கையாக நமது உடலில் உருவாக்கப்படுகிறது. Lipid + steroid = Cholestrol 80 % கொலஸ்ட்ராலை நம்முடைய கல்லீரல் (Endogenus cholesterol) உற்பத்திசெய்கிறது. மீதமுள்ளவை நாம் உண்ணும் உணவின் மூலம் (Exogenus cholesterol) கிடைக்கிறது. அசைவ உணவுகளில் மட்டுமே கொலஸ்ட்ரால் பெறப்படுகிறது. சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் இல்லை. சாப்பிட்ட உணவு ஜீரணமாகி சத்துக்கள் ரத்தத்தில் கலக்கின்றன. அப்போது கொலஸ்ட்ரால் குடலினால் உறிஞ்சப் பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. கல்லீரல்தான் தேவைப்படும் போது கொலஸ்ட்ராலை வெளிவிடவும், அல்லது உற்பத்தி செய்யும் உறுப்பாகவும் செயல்படுகிறது. ச…
-
- 1 reply
- 503 views
-
-
மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு _ இவற்றைக் கலந்து குங்குமம் தயார் செய்யப்படுகிறது. இவை மூன்றுமே கிருமிநாசினிப் பொருட்கள் ஆகும். மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்த நெற்றிக்கண் அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் அமைதி கிடைக்கும். ஹிப்னாட்டிஸம் உட்பட எந்தச் சக்தியையும் முறியடிக்கும் சக்தி குங்குமத்துக்கு உண்டு. உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகள் எடுத்துச் செல்லும் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்துவது நெற்றிப் பகுதியே ஆகும். இந்தப் பகுதியில் குங்குமத்தை வைப்பதால் உஷ்ணம் குறையும். குங்குமத்தின்மீது சூரிய ஒளி படுவதால், அதிலுள்ள மூலிகை சக்திகளுடன் வைட்டமின் டி சக்திமிக்க அல்ட்ரோஸம் உடலுக்குள் சென்று நன்மை உண்டாகிறது. இந்தச் சக்தி பெண்கள…
-
- 1 reply
- 3.6k views
-
-
இது எனது குடும்பத்தவர்கள் அனுபவத்தில் கண்டது என்றபடியால் எழுதுகின்றேன்.எனது மூத்த அக்கா கடந்த பத்து வருடத்தில் நாலாவது தடவையாக இப்போது வைத்தியத்திற்காக கேரளா போகின்றார்.அவர் முதன் முறை போய்வந்து நாற்பது வயதிற்கு மேல் கட்டாயம் ஐந்து வருடத்திற்கு ஒருமுறையாவது இந்த வைத்தியத்தை எடுக்கச்சொல்லி எங்கள் எல்லோரையும் கட்டாய படுத்தினார்கள்.பெற்றோர் உட்பட மற்ற இரு அக்காமாரும் கணவர் உட்பட ஒருமுறை போய் வந்துவிட்டார்கள் .பெற்றோரில் பெரிய மாற்றம் இல்லை .அவர்களுக்கு அப்போது எழுபதை தாண்டியிருந்தது ,இருந்தும் அப்பா முப்பது பவுண்ட்ஸ் குறைந்து வந்தார் .மற்ற இருவருக்கும் மிக திருப்தி அதிலும் ஒரு அக்கா மாறாத ஸ்ரைராஸ் என்ற சொறி வருத்ததால் மிகவும் கஸ்டப்பட்டுகொண்டிருந்தவர் (அவரின் மகன் டாக்டர்) இ…
-
- 1 reply
- 4.8k views
-
-
இதயத்தை பாதுகாக்க யோசனைகள் அப்பலோ மருத்துவமனை "Billion Hearts Beating" என்றொரு நல்ல பணியை துவக்கியுள்ளனர். இது பற்றி மேலும் அறிய http://www.billionheartsbeating.com/ என்ற இணைய தளத்தை பாருங்கள். குறிப்பாக இந்த பக்கத்தில் "இதயத்தை பாதுகாக்க யோசனைகள்" என்ற தலைப்பில் இவர்கள் தந்துள்ள குறிப்புகள் பயன் தரக்கூடியவை . கிட்டத்தட்ட 92 யோசனைகள் அவர்கள் தந்துள்ளனர். அவற்றில் முக்கியமான குறிப்புகளின் தமிழாக்கத்தை இரண்டு பகுதிகளாக இங்கு பகிர்கிறேன். நான் அதிகம் ரசித்தவை சற்று "Bold" -செய்து தந்துள்ளேன் முதல் பகுதி இதோ: இதயத்தை பாதுகாக்க யோசனைகள் *********** 1. மிதமான அளவு எப்போதும் உண்ணுங்கள். சற்று பசி இருக்கும் போதே உண்ணுவதை நிறுத்தி விட்டால் நலம். 2. உண்ணாமல் டயட்…
-
- 1 reply
- 986 views
-
-
ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர். இந்த நிலைமையை நீக்க, மருத்துவரிடம் சென்று இதற்கு ஏதாவது மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிடலாம் என்று, மருத்துவமனையில் வரிசையில் காத்திருந்து அவரை பார்த்தா…
-
- 1 reply
- 2.7k views
-
-
அருந் தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில், குறிப்பிடப் பட்டுள்ள சித்த மருத்துவம். #மூளைக்கு வல்லாரை முடிவளர நீலிநெல்லி ஈளைக்கு முசுமுசுக்கை எலும்பிற்கு இளம்பிரண்டை #பல்லுக்கு வேலாலன் பசிக்குசீ ரகமிஞ்சி கல்லீரலுக்கு கரிசாலை காமாலைக்கு கீழாநெல்லி #கண்ணுக்கு நந்தியாவட்டை காதுக்கு சுக்குமருள் தொண்டைக்கு அக்கரகாரம் தோலுக்கு அருகுவேம்பு #நரம்பிற்கு அமுக்குரான் நாசிக்கு நொச்சிதும்பை உரத்திற்கு முருங்கைப்பூ ஊதலுக்கு நீர்முள்ளி #முகத்திற்கு சந்தனநெய் மூட்டுக்கு முடக்கறுத்தான் அகத்திற்கு மருதம்பட்டை அம்மைக்கு வேம்புமஞ்சள் #உடலுக்கு எள்ளெண்ணை உணர்ச்சிக்கு நிலப்பனை குடலுக்கு ஆமணக்கு கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே #கர…
-
- 1 reply
- 1.3k views
-
-
ரெட் ஒயினில் இருக்கக்கூடிய ரெஸ்வரேட்ரால் நரம்பு மண்டலத்தில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். பரபரப்பான வாழ்க்கை சூழலில் கடும் மன உளைச்சலுக்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாகியிருப்போம். நம் மன அழுத்தத்தை போக்க ரெட் ஒயின் சிறந்த நிவாரணி என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ரெட் ஒயினில் இருக்கக்கூடிய ரெஸ்வரேட்ரால் என்னும் பொருள்தான் நமக்கு ஏற்படும் பதட்டம் மற்றும் மன உளைச்சலால் உண்டாகும் சோர்வு ஆகியவற்றை போக்குகிறது. ரெட் ஒயினில் இருக்கக்கூடிய ரெஸ்வரேட்ரால் நரம்பு மண்டலத்தில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் திராட்சையின் தோல் மற்றும் விதையிலும் இந்த பொருள் காணப்படுகிறது. இதனை கொண்டுதான் ஒயின் தயாரிக்கப்படுகிறது. இது உடலில் நிறைய ஆரோக்கிய நன்மைகளையு…
-
- 1 reply
- 849 views
-
-
ஆஸ்மா நோய்க்கான ஊக்கிகள் ஊக்கிகள் என்பது உங்கள் பிள்ளையின் ஆஸ்துமா நோயை மோசமாக்கும் காரணிகளாகும். உங்கள் பிள்ளையின் ஆஸ்துமா நோய்க்கு ஒரு தொகுப்பு ஊக்கிகள் இருக்கலாம். அவை மற்றப் பிள்ளைகளிலிருந்து வித்தியாசப்பட்ட ஊக்கிகளாக இருக்கலாம். உங்கள் பிள்ளையின் ஆஸ்துமா நோய்க்கான ஊக்கிகள் என்ன என்பதைக் கண்டறிந்து அவற்றை நீக்க அல்லது குறைக்க முயற்சிப்பது முக்கியமானது. பொதுவான ஊக்கிகள் பின்வருவனவற்றை உட்படுத்தும்: தடிமல் மற்றும் காய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் சிகரெட் புகை மற்றும் வளிமண்டல மாசு, குளிர் காற்று, மற்றும் இரசாயனப் புகை போன்ற வேறு எரிச்சலுண்டாக்கக்கூடிய பொருட்கள் செல்லப்பிராணிகளின் முடி, இறகு, செதில், தூசியிலுள்ள நுண்ணுயிர்கள், மகரந்…
-
- 1 reply
- 3.6k views
-
-
உடலில் செரிமானம் சீராக நடைபெறுவதில் குடல்கள் முக்கிய பங்கினை வகிக்கிறது. உங்கள் குடல் ஆரோக்கியமாக இருந்தால் தான், செரிமானம் மீண்டலம் ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம். மேலும் உடலிலேலே குடலில் அதிக கழிவுகள் சேர்வதற்கு வாய்ப்புள்ளது. ஏனெனில் இதன் வழியாகத் தான் உடலின் அனைத்து கழிவுகளும் வெளியேற்றப்படுகிறது. கழிவுகள் வெளியேற்றப்பட்டால் தான் உடலால் உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்ச முடியும். எனவே அத்தகைய குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள முயல வேண்டும். குடலை ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்வது எப்படி என்று கேட்கிறீர்களா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள மேற்கொள்ள வேண்டியவைகள் கொடுக்கப்பட்டுள்ளன. டிப்ஸ் #1 …
-
- 1 reply
- 543 views
-
-
Instant Way To Lose Stomach Bulge A bulky tummy looks weird and that is highly true, anyone having bulge around stomach always want to get it out of body as early as possible. So if you too are finding ways to wash out this unwanted fat from your stomach area then here is the answer of you misery. Guys and Girls, if you have some money and you can spend some money for shaping up you stomach then here is the answer which will give you result in no time. Undoubtedly you need to spend some money over it but that’s too true you don’t need to wait for result and there is no long time exercise, wait and so on. Tuck Surgery, is the way by having this surgery you can hav…
-
- 1 reply
- 575 views
-
-
கழுத்து வலிஇ பெரும்பாலோருக்கு வரும். அதிலும்இ கம்ப்யூட்டரே கதி என்று இருக்கும் இளைய வயதினருக்கு அடிக்கடி வரும். அதற்கு ஏற்ப பழக்கத்தை மாற்றினால்இ கழுத்து வலி போய்விடும். ஆனால்இ சில வகை கழுத்து வலிகள் இருக்கின்றன. கீழ் கண்ட காரணங்களில் கழுத்து வலி வந்தால் உஷாராகி விடவேண்டும். ழூ அதிக காய்ச்சல் ஏற்படும் போது… ழூ காரணமே இல்லாமல் எடை குறைவது. ழூ தலை சுற்றல்இ மயக்கம் வரும் போது. ழூ கை நடுக்கம் போன்ற நரம்பு கோளாறுகள். ழூ கழுத்து வலி அதிகமாக இருக்கும் போது. ழூ கழுத்து இறுக்கமாக இருக்கும் போது. இப்படிப்பட்ட காரணங்களினால்இ கழுத்து வலி வந்தால் இ தைலம் தடவிக்கொண்டிருக்கக் கூடாது; டாக்டரிடம் போய் விட வேண்டும். அல்சீமர்ஸ் நோய் பரம்பரையாக நீடிக்குமா? முதும…
-
- 1 reply
- 7k views
-
-
http://www.youtube.com/watch?v=4rGSlSwjssM இவர் பல கிலோ நிறையுள்ள கற்களை... தலையில் வைத்து ஒரு நாளைக்கு எத்தனை தரம், சுமக்கின்றாரோ... தெரியவில்லை. ஆனால்... அத்தனை, பாரமும்... எமது, முள்ளந்தண்டை பாதிக்கும் என நினைக்கின்றேன். குறிப்பிட்ட சில வருடங்களில், இவரால்... முற்றாக வேலை செய்ய முடியாமல் போகலாம். பாரம் சுமக்கின்ற, தள்ளு வண்டிலைக் கூட... இவரது முதலாளியால்.. வாங்கிக் கொடுக்க முடியாதுள்ளதா? அதில் இன்னும் அதிகமான கற்களை ஏற்ற முடிவதுடன், அவரது உடல் நலமும் பாதிக்காமல் இருக்கும்.
-
- 1 reply
- 516 views
-
-
"மாரடைப்பு" வருவதற்கான, இயல்பில்லாத சில அறிகுறிகள்!!! பல பேருக்கு மாரடைப்பு/நெஞ்சு வலி ஏற்படுவதற்கு முன்பு நெஞ்சின் நடுப்பகுதியில் அல்லது மார்பெலும்பின் பின்புறத்தில் மிகுந்த வலியை உண்டாக்கும். பொதுவாகவே நெஞ்சு வலிக்கான அறிகுறிகளை விநோதமாக அனுப்பும் நம் உடல். அதனால் அது நெஞ்சு வலி தானா என்று சம்பந்தப்பட்டவரால் கண்டுப்பிடிப்பது கடினமானதாகிவிடும். டோபிவாலா நேஷனல் மருத்துவ கல்லூரி மற்றும் BYL நாயர் சாரிட்டபில் மருத்துவமனையின் கார்டியாலஜி துறை தலைவர் டாக்டர் அஜய் சௌரசியா கூறுகையில், "பொதுவாக நெஞ்சுவலி தொடர்பான வழியை ரெஸ்டோஸ்டேர்னல் என்று அழைப்போம். அதாவது மார்பெலும்புக்கு பின்னால் ஏற்படும் வலி. மேலும் அசிடிட்டியால் இதய எரிச்சலும் ஏற்படும்." நெஞ்சு வலிக்கான இயல்பில்ல…
-
- 1 reply
- 4.9k views
-
-
தூது வளை தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தில் காய கற்ப மருந்துகள் சிறப்பானதாகும். காயகற்பம் = காயம்+கற்பம் . காயம் என்றால் உடல். கற்பம் என்றால் உடலைநோயணுகாதபடி வலுவடையச் செய்யும் மருந்து. நரை, திரை, மூப்பு, பிணிநீக்கி, வயதுக்கு தகுந்தவாறு ஏற்படும் நோய்களிலிருந்து விடுபடவைத்துநீண்டநாள் வாழச் செய்வது கற்பமாகும். இந்த கற்பமானது உடம்பை கல்போல் ஆக்கும். கல்லினால் செதுக்கப்பட்ட சிலைஎப்படி பன்னெடுங் காலமாக அப்படியே உள்ளதோ அதுபோல் நரை, திரை, மூப்புபிணிகளை நீக்கினால் உடலும் கல்போல் ஆகும். சித்தர்கள் உடலை கற்பமாக்க கற்ப மூலிகைகளை கண்டறிந்து கூறியுள்ளனர்.மூலிகையில் உள்ள தாதுப் பொருட்களை தனியாகவோ அல்லது பல மூலிகைகள் கலந்தோஅல்லது உலோக உபரச உப்ப…
-
- 1 reply
- 2.7k views
-
-
தாக்கிவரும் புதிய ஆபத்து பட மூலாதாரம்,GETTY IMAGES 13 நவம்பர் 2023 பிரிட்டனில் வசிக்கும் 12 வயதான சாரா கிரிஃபின், கடந்த செப்டம்பரில் ஆஸ்துமா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் நான்கு நாட்கள் கோமாவில் இருந்த சாராவின் நிலை தற்போது சீராக உள்ளது. ஆனால் அவரது வேப்பிங் (நிகோட்டின் மற்றும் சுவையூட்டிகளை, அதற்கென வடிவமைக்கப்பட்டிருக்கும் கருவிகள் மூலம் உறிஞ்சுவது)பழக்கம் அவரது நுரையீரல்களை கடுமையாக பாதித்துள்ளது. சாராவின் தாய் மேரி, பிபிசி செய்தியாளர்கள் டொமினிக் ஹூகஸ் மற்றும் லூசி வாட்கின்சனிடம், "டாக்டர்கள் அவளது நுரையீரல்களில் ஒன்று கிட்டத்தட்ட முற்றிலும் அழிந்துவிட்டதாகக் கூறினார்கள். அவளது சுவாச அம…
-
- 1 reply
- 669 views
-
-
எச்சரிக்கை... நீங்கள் பார்வையை இழந்துகொண்டிருக்கிறீர்கள்....! #WhereIsMyGreenWorld லண்டன் மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனைக்கு வந்த 20 மற்றும் 40 வயதுடைய இரு பெண்கள், கடந்த சில நாட்களாக தங்களது கண்பார்வை மங்கி வருவதாக மருத்துவரிடம் கவலையுடன் தெரிவித்தனர். இருவரிடமும் நீண்ட நேரம் விசாரித்தார் மருத்துவர். விசாரணையில் 20வயது இளம்பெண், தினமும் இரவில் தூங்கும் முன் படுத்தபடியே ஸ்மார்ட்போனில் தகவல்களை பார்ப்பது, நட்புகளுடன் அரட்டை என்று செலவிடுபவர் என்றும், 40வயது பெண்மணி தினம் அதிகாலையிலேயே, அதாவது சூரிய உதயத்துக்கு முன்பே விழித்து படுக்கையில் இருந்த நிலையிலேயே ஸ்மார்ட்போனில் செய்தி மற்றும் தகவல்களை பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளவர் என்பது தெரியவந்தது. அவர்க…
-
- 1 reply
- 750 views
-
-
உன்னயே ............ நீ அறிந்தால் ................ வழக்கம் போல சுந்தரம் ..........கடுப்பா கினான்.கோமதி எங்கே .....இன்னும் இல்லியா ? வேகத்துடன் ......மோட்டார் சைக்கிலை உதைத்தான் . அவனது மதிய சாப்பாட்டை எடுக்காமலே . ஏன்.?..கோமதி சற்று தாமதமாக எழும்பியது உண்மை தான். அதை சுந்தரம் பொறுத்து இருக்கலாம். தான் விரும்புவது போலவே எல்லோரும் இருக்க வேண்டும். சற்றுபிசகினால் கொதி நிலை வந்து விடும் டென்ஷன் .......டென்ஷன்..... இது எங்கே கொண்டு போய் விடும். சென்ற மாதம் தான் லேசான ஹார்ட் அட்டாக் என்று ....வைத்திய சாலையில் இரு ந்து வீடு வந்தான் ............பின் ஒருவாரம் அமேரிக்காவில் இருந்த நண்பர் வீடுக்கு போய் ஓய்வு எடுத்தபின் வந்தார் . சூழ்நிலை ...அமைதி ....அவரை சற…
-
- 1 reply
- 1.1k views
-
-
டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்புக் குடிநீரை எப்படி, எவ்வளவு பயன்படுத்த வேண்டும்?- விளக்குகிறார் சித்த மருத்துவர் கு.சிவராமன் ஜி.லட்சுமணன் தமிழகத்தில் டெங்குவின் தாக்கமும், அதுபற்றிய பீதியும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. காய்ச்சல் வந்தாலே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்று அரசு ஒருபுறம் பிரசாரம் செய்ய, சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேத மருத்துவங்களில் டெங்குவுக்கு மருந்துகள் உள்ளன என்று இன்னொரு பக்கம் செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. மேலும், டெங்கு வராமல் தடுக்க நிலவேம்புக் குடிநீர் மிகச்சிறந்த தீர்வு என்று அரசும், இந்திய மருத்துவமுறை மருத்துவர்களும் சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில், நிலவேம்புக் குடிநீரால் எந்தப் பயனும் இல்லை என்ற செய்தியும் சமூ…
-
- 1 reply
- 276 views
-
-
ஆண்டிபயாடிக்ஸ் மருந்துகள் பயனற்றுப் போகும் நிலையை சமாளிக்க பெரும்பாலான நாடுகள் தயார் நிலையில் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இது மலேரியா, காச நோய் போன்ற தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் என்று அந்த நிறுவனம் வர்ணித்திருக்கிறது. இது குறித்து 133 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 34 நாடுகள் மட்டுமே இந்த மருந்துகள் சக்தியிழந்து போவதைத் தடுக்கும் முயற்சியை செய்யும் நிலையில் உள்ளன என்று காட்டுவதாக தெரியவந்திருக்கிறது. ஆண்டிபயாடிக் மருந்துகளால் நோய்களை குணப்படுத்த முடியாமல் போகும் நிலையை எதிர்த்து நடவடிக்கைகள் எடுக்க உலகளாவிய வகையில் எடுக்கப்படவுள்ள ஒரு திட்டம் அடுத்த மாதம் ஜெனிவாவில் உலக சுகாதார நிறு…
-
- 1 reply
- 795 views
-
-
பெரும்பாலான வீடுகளில், இன்று கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாகவே உள்ளனர். இதனால், அன்றாடம் வீட்டிற்கு தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் ஆகியவற்றை தினசரி கடைக்கு சென்று வாங்க முடியாத நிலை நிலவுகிறது. அவ்வாறானவர்களுக்கு வரப்பிரசாதமாக கைகொடுக்கும் ஒரு சாதனம், குளிர்சாதனப்பெட்டியான 'பிரிட்ஜ்' என்பதை யாராலும் மறுக்க முடியாது. வாரத்திற்கு ஒரு முறை கடைக்கு சென்று உணவுப்பொருட்களை வாங்கி, அவற்றை பிரிட்ஜில் சேமித்து வைத்து விடுகின்றனர். எனினும், பிரிஜில் எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள், பிரஷ்ஷாக இருக்கும் என்பது, நம்மில் பலருக்கு தெரியாது. பிரிட்ஜில் 4 டிகிரி பாரன்ஹீட்டுக்கு இடைப்பட்ட அளவில், வெப்பநிலை இருக்குமாறு, பராமரிக்க வேண்டியது அவச…
-
- 1 reply
- 624 views
-
-
உணவு சுவையூட்டி குறித்து WHO எச்சரிக்கை! அஸ்பார்டேம் என்பது உணவு மற்றும் பானங்களில் பயன்படுத்தப்படும் ஒரு செயற்கை இனிப்பு சுவை ஆகும். குறைந்த சர்க்கரை இனிப்பு பானங்கள் மற்றும் குறைந்த சர்க்கரை உணவுகள் தயாரிப்பில் இந்த இனிப்பு அதிகம் பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், அஸ்பார்டேம் என்ற செயற்கை இனிப்பு மூலம் மனித உடலில் கடுமையான புற்றுநோயை உண்டாக்கும் செல்கள் வளரக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. உலகின் முன்னணி நிறுவனமொன்று செயற்கை சுவையூட்டும் முகவர் தொடர்பில் இவ்வாறு வெளிப்படுத்துவது இதுவே முதல் முறை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2023/1339399
-
- 1 reply
- 705 views
- 1 follower
-
-
நமிபீயாவைச் சேர்ந்த மெர்டக் ஷார்ப் அன்ட் டூஹோம் எனும் மருந்து தயாரிப்பு நிறுவனம் எய்ட்ஸை குணப்படுத்தும் அட்ரிப்லா, ஐசென்ட்ரசஸ் எனும் புதிய மாத்திரையினை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. நமீபியாவின் நம்பா நகரில் உலக அளவில் மருந்து தயாரிப்பு பொருட்களை சப்ளை செய்யும் மெர்டக் ஷார்ப் அன்ட் டூஹோம் நிறுவனம் எச்.ஐ.வி. பாதிப்பட்டவர்களின் தொடக்க நிலையில் உள்ள எச்.ஐ.வி.-1 எனும் கிருமியினை குணப்படுத்தக்கூடிய மாத்திரையினை கண்டுபிடித்துள்ளது. இது குறித்த அறிக்கையினை நமீபிய அரசின் சுகாரதாரத்துறையினரிடம் அளித்து ஒப்புதல் பெறவுள்ளதாக கூறியுள்ளது. விரைவில் மருந்து கடைகளில் விற்பனைக்கு வரவுள்ளதாகவும் தகவலகள் தெரிவிக்கின்றன. http://www.z9tech.com/
-
- 1 reply
- 748 views
-
-
தாகத்தை தணிக்க மட்டுமல்ல தர்பூசணி... ஆண்களுக்கு அவசியமானது கோடையில் தாகத்தை தணிக்க பலரும் தர்பூசணியின் தயவை நாடுவது வழக்கம். சாலையோர கடைகளிலும், கோடைகால சிறப்பு ஸ்டால்களிலும் காணக்கிடைக்கும் தர்பூசணி பழத்திற்கு தாகம் தணிக்கும் சக்தியோடு ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு என்பதை அமெரிக்காவில் உள்ள இந்திய மருத்துவர் ஒருவரின் தலைமையிலான மருத்துவக் குழு மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது. ஆண்மையை அதிகரிப்பதில் வயாகரா மாத்திரையின் சக்தியை விட அதிகமான சக்தி தர்பூசணி பழத்துக்கு உள்ளதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கோடைகாலமும் தர்பூசணியும் இயற்கையானது அந்தந்த சீசனிற்கு ஏற்ப பழங்களையும், காய்கறிகளையும் விளைவிக்கிறது. கோடையில் உஷ்ணத்தை சமாளிக்க இயற்…
-
- 1 reply
- 772 views
-
-
மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு: உயிரணுக்கள் ஆக்சிஜனை உணர்வது எப்படி என்ற கண்டுபிடிப்பு வென்றது 29 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஉயிர் வளி: ஒவ்வொரு கணமும் உடலின் ஒவ்வொரு செல்லையும் உயிர்ப்புடன் வைப்பது ஆக்சிஜன். உடலின் உயிரணுக்கள் எப்படி ஆக்சிஜனை உணர்கின்றன, எப்…
-
- 1 reply
- 350 views
- 1 follower
-