Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கனடாவின் தேசத்து மைந்தர்கள் நாம்!!! www.cbc.ca/1.3836796

    • 2 replies
    • 776 views
  2. அவுஸ்திரேலியா, சிட்னி மாநகரின் வைகாசிக் குன்றில் (Mays Hill) அமைந்து உள்ள சிட்னி முருகன் ஆலயத்தில் முருகப் பெருமான் அவதரித்த நாளான வைகாசி விசாகம், நேற்று புதன்கிழமை (11) சிறப்பாக நடைபெற்றது. காலை முதல் மாலை வரை இடம்பெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து, மயில் வாகனத்தில் முருகப்பெருமான் இரவு எழுந்தருளி உள்வீதி மற்றும் வெளிவீதி வலம் வந்தார். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். tamilmirror

  3. இலங்கை தமிழரின் வளர்ச்சிக்கு நோர்வே பிரதமர் வாழ்த்து வீரகேசரி நாளேடு நோர்வே நாட்டின் பொருளாதாரத்திலும் கலாசாரத்திலும் நோர்வே வாழ் இலங்கை தமிழ் மக்கள் ஒன்றாக இணைந்து செயற்படுகின்றனர். இலங்கை தமிழர்களின் வளர்ச்சியை நான் பாராட்டுகின்றேன் என்று நோர்வேயின் பிரதமர் ஜேன் ஸ்தோல் தன்பேக் தெரிவித்துள்ளார். நோர்வே நாட்டில் வாழ்ந்து வரும் 30 ஆயிரம் ஈழத் தமிழர்களுக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களையும் புதுவருட வாழ்த்துக்களையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். 2007 ஆம் ஆண்டுக்கான இறுதி செய்தியாளர் மாநாடு உலகப் புகழ் பெற்ற பேறா கணினி மென்பொருள் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இங்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார…

    • 2 replies
    • 2.2k views
  4. ஜேர்மனி Dortmund பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவரின் ஸ்ரீசக்தி ஜுவலறி நகைக்கடையில் துப்பாக்கி முனையில் துணிகரக் கொள்ளை நேற்று பகல் 1:00 மணியளவில் நடைபெற்றுள்ளது. நகைக்கடைக்கு வந்த இருவர் கடையின் கதவைப் பூட்டாதபடி குடையினைக் கொழுவிவிட்டு கடைக்குள் இருந்த கடை உரிமையாளரின் நண்பனுக்கு இருவருள் ஒருவர் ஒருவகையான மருந்தை ஸ்பிறே அடித்துவிட்டு துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். பிறகு மற்றையவர் நகைகள் இருந்த கண்ணாடி பெட்டகத்தை உடைத்து பல பெறுமதிமிக்க நகைகளைக் எடுத்துச் சென்றுள்ளனர். கடை உரிமையாளர் ஜேர்மனி பொலிஸில் முறைப்பாடு செய்தபோதும், களவாடப்பட்ட நகைகளை மீட்க முடியவில்லை என கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். http://youtu.be/tqbwvkB8…

    • 2 replies
    • 1.2k views
  5. பிரித்தானியாவில் இருந்து ஐ.நா முன்றல் வரை நடைபயணம் திகதி: 19.07.2010 // தமிழீழம் பிரித்தானியாவில் இருந்து ஜெனீவாவில் உள்ள ஐ.நா முன்றல்வரை நடைபயணம் ஒன்றை மேற்கொள்ள இருக்கிறார் சிவந்தன். பிரித்தானியாவில் இருந்து கால்நடைப் பயணமாக சுவிஸ், ஜெனீவாவரை செல்ல சிவந்தன் என்ற இளைஞர் முன்வந்துள்ளார். 23ம் திகதி லண்டனில் நடைபெறும் இரவு நேரப் போராட்ட முடிவில் இந்தக் கால் நடைப் பயணம் ஆரம்பிக்க இருப்பதாக அறியப்படுகிறது. சுமார் 12 நாட்கள் தொடர்பயணம் மேற்கொள்ள இருக்கும் இவர் 6ம் திகதி ஜெனீவாசென்று அங்கு ஐ.நா முன்றலில் நடைபெறவுள்ள பாரிய ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பங்கேற்று, ஐ.நா பிரதிநிதிகளிடம் கோரிக்கை மனுவைக் கையளிக்க உள்ளார். போராளிகளின் விடுதலை குறித்து ஐ.நா துரித நடவடிக்கைகளை …

  6. வணக்கம், அன்பிற்கினிய புலம்பெயர் வாழ் உறவுகளே! கடந்த ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 14 ம் நாள் சிங்களப்படையினரின் கோரத்தாண்டவத்தில் செஞ்சோலை வளாகத்தில் படுகொலையுண்ட 52 பள்ளிச்சிறுமிகளது உறவினர்கள், அல்லது அவர்களது தனிப்பட்ட விபரங்கள், குறிப்பாக அவர்களது இலட்சியம், உயர்கல்வி, பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள் எம்மோடு தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். எதிர்வரும் ஆகஸ்ட் 14 ம் திகதி அவர்களது நினைவு நாள் என்பதால் முடிந்தளவு விரைவாக தொடர்புகளை ஏற்படுத்துமாறு வேண்டுகின்றோம். தொடர்புகளுக்கு: மின்னஞ்சல்: info@uravukal.com தொலைபேசி: (647) 881-2254

  7. யாழ் பல்கலைக் கழக பழைய மாணவர் சங்கம் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ் பலகலைக் கழக முன்னைநாள் பேராசிரியர், கலாநிதி K. தெய்வேந்திரராஜா தலைமையில் யாழ் பல்கலைக் கழக பழைய மாணவர் சங்கம் (Jaffna University Alumni Association - Canada) ஒன்றை கனடாவில் உருவாக்குவதற்கான கூட்டம் ஜூலை 25ம் திகதி Scarborough Civic Centre இல் நடைபெற்றது. பல பழைய மாணவர்கள் நிகழ்விற்கு வருகை தந்திருந்தனர். பேராசிரியர் தெய்வேந்திரராஜா சங்கம் ஆரம்பிப்பதற்கான நோக்கம் பற்றி விளக்கமளித்தபின் சங்கத்தின் யாப்பினையும் சமர்ப்பித்தார். ஒரு சில மாற்றங்களுடன் யாப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது. பின்னர் சங்கத்திற்கான நிறைவேற்றுக் குழு தெரிவு இடம்பெற்றது.

  8. அருமையாக பல்க் ஈமெயில் அனுப்ப சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.. பொருளாதார நிபுணர் அகூதா அவர்கள் கடிதம் தயாரிக்க வேண்டியதுதான் பக்கி... 96.1@overvaalstereo.co.za abc@abc.org.za abongile@townshiptimes.co.za admin@rosestad.net admin@safrea.co.za ads.bosvelder@nmgroup.co.za ads@kormorant.co.za agalloway@volksblad.com alan.dunn@inl.co.za albertmakgoka@limpopomagazine.co.za albertmakgoka@yahoo.com albertonrecord@caxton.co.za alfie.j@algoafm.co.za algoasun@avusa.co.za alida.dasnois@inl.co.za allen.dunn@inl.co.za Amaritz@volksblad.com amit@printunlimited.co.za amoos@volksblad.com andre.olivier@opkoerante.co.za angela.quintal@inl.co.za a…

  9. உலகத்தமிழர் பேரவையின் ஊடக அறிக்கை - 28 April 2012 உடனடிப் பிரசுரத்துக்காக ஊடக அறிக்கை ஏப்பிரல் 28, 2012 உலகத் தமிழர் பேரவையானது இலங்கை வாழ் இசுலாமியருடன் கைகோர்த்து நிற்கின்றது மத்திய சிறீலங்காவில் தம்புளையிலுள்ள இசுலாமியரின் பள்ளிவாசலை அகற்றுவதற்குச் சிறீலங்கா அரசு இட்ட கட்டளை தொடர்பான கபடத்தனத்தை உலகத் தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கின்றது. ஏப்பிரல் 20, 2012 அன்று புத்த பிக்குகளின் தலைமையில், சிறுபான்மையினரே ஆயினும் ஆயிரக்கணக்கிலான தீ விரவாதப் புத்த மதத்தினர,; சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளதெனவும் அதனை அழிக்கவேண்டுமெனவும் கோரி அங்குள்ள பள்ளிவாசலைத் தாக்கியமை பற்றி உலகத் தமிழர் பேரவை பெரும் கவலை கொண்டுள்ளது. சட்ட நடவடிக்கை…

    • 2 replies
    • 708 views
  10. மலிபன் விசுகோத்தில் மெலாமைன் நஞ்சு - கனேடிய உணவு பரிசோதனை நிறுவனம், மலிமன் லெமன் பfவ் விசுகோத்துக்களில் அங்கீகரிக்கப்பட்ட அளவிலும் அதிகமாக மெலாமைன் காணப்பட்டதால் மலிபன் லெமன் பfவ் சந்தையில் இருந்து மீளப்பேறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த லெமன் பfவ் விசுக்கோத்துக்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் தயாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து கருத்து வெளியிட்ட மலிபன் நிறுவனத்தினர், தமது உற்பத்திகளில் மெலாமைன் இருக்கவில்லை என தாங்கள் ஐக்கிய இராச்சியத்திலும், சிங்கபூரிலும் உள்ள நிறுவனங்கள் மூலம் செய்த ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மெலாமைன் உணவு பொருட்களின் தடையின் பின் கனடாவில் மலிபன் லெமன் பfவ் உட்பட மேலும் சினா,…

  11. பிரான்ஸ் வாழ்தமிழர்களே அணிதிரளுங்கள் அவசரவேண்டுகோள் தற்போது 'ரிபப்ளிக்கில்"( République ) métro 3,5,8,9 ,11 அனைவரையும் நாளை கலந்துகொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள். இறுதி சந்தர்ப்பம் வரலாறு உங்களை மன்னிக்காது. ஈழத்தின் துயர்துடைக்க அனைவரும் வாரீர்!!!!! நீங்கள் மட்டும் வராமல் தங்களது உறவுகளையும் அழைத்து வாருங்கள் இது உங்களின் கடமையும் கூட!!!!!

    • 2 replies
    • 1.1k views
  12. [size=4]பிரித்தானியப் பிரஜைகளாக விரும்பும் வெளிநாட்டினருக்காக நடத்தப்படும் லைஃப் இன் யூகே ( LIVE IN UK) என்ற தேர்வில் மாற்றங்களைக் கொண்டுவர பிரிட்டன் திட்டமிடுகிறது.[/size] [size=4]பிரிட்டனில் வாழ்வதற்குரிய நடைமுறை விஷயங்களில் செலுத்தப்பட்ட கவனத்தைக் குறைத்துக்கொண்டு பிரிட்டனின் சரித்திரம் மற்றும் சாதனைகள் தொடர்பில் அதிக தகவலறிவு தேவை என்பது போன்ற மாற்றங்களை இப்பரீட்சையில் கொண்டுவர திட்டமிடப்படுகிறது. பிரபல ஆங்கில நாடகாசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர், நெப்போலியனை போரில் வென்ற டியூக் ஆஃப் வெலிங்டன், கவிஞர் பைரன் போன்றோர் பற்றி பிரித்தானியப் பிரஜையாக விரும்பும் வெளிநாட்டினர் தெரிந்துவைத்திருக்க வேண்டும். டிரஃபால்கர் உட்பட பிரிட்டனின் சரித்திரத்தில் இடம்பெற்ற முக்க…

    • 2 replies
    • 1k views
  13. வாழ்நாள் சாதனையாளர் விருதினைப் பெற்ற ஈழத்து மெல்லிசை மன்னர் M.P.பரமேஷ் Dec 17, 2020 அன்றும் இன்றும் என்றும் இசையை தனது வாழ்க்கையாக்கியவர். என்றும் நான் என் இசைப் பயணத்தை நிறுத்தவில்லை நிறுத்தப் போவதுமில்லை என்று இன்றும் உற்சாகத்துடன் தினமும் பாடல்கள் எழுதி இசையமைத்து பாடி வருகிறார் ஈழத்து மெல்லிசை மன்னர் M.P.பரமேஷ். தனது காதலிக்கு எழுதிய ‘உனக்கு தெரியுமா நான் உன்னை நினைப்பது’ என்ற கவிதையை, இசையமைத்து, காதலிக்காக பாடி, அதை இலங்கையின் முதலாவது தமிழிசைத் தட்டில் பதிவு செய்து வெளியிட்டவர் இவர். அவரின் காதலி “சங்கீத பூஷனம்“ சிவமாலினிதான் இவர் சாதனை புரிய காரணமானவர் என்றே சொல்லலாம். இருவருக்கும் திருமணம் ஆனதும் மாலினி அவர் கணவருடன் சகல மேடைகளிலும் பாடி வந்தார். அவர் ஒரு ‘ச…

  14. கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ஊருக்கு ஒரு அவசர பயணம். உறவினர் ஒருவர், பக்கத்தில், ஒரு குடும்பம் 4 கோடி கொடுத்து, geniune விசாவில் லண்டன் போய் விட்டார்கள் என்றார். தூக்கி வாரிப்போட்டது. என்னது, 4 கோடி, ஒரு லட்ச்சம் பவுண்கள். £100,000! உண்மையாகவா என்றேன். ஓமோம், உண்மைதான், அவர்கள் காதும், காதும் வைத்தது போல, கிளம்பிப் போக, அவர்கள் யார் மூலம் போனார்கள் என்று, வேறு பலர் துப்பறிய முனைகிறார்கள் என்றார். genuine என்றதும், அது நிச்சயமாக work விசா என்று புரிந்தது. உறவினருக்கு விபரம் இருக்கவில்லை. எம்பசி காரரோடே ஏதாவது சுத்துமாத்தோ தெரியவில்லை என்றார். அவர் என்ன வேலை செய்தவர் என்றேன், சிலவேளை IT அல்லது வைத்திய துறையாக இருக்குமோ என்ற யோசனையில்? இல்லை அவர் உங்கே …

  15. கடந்த ஆண்டு குடும்பத்தோடு மொரோக்கோ ( Morocco ) போய்வந்தது. ஆனால் அதை பயனாக கட்டுரையாக எழுதும் மனநிலை இல்லை ஆதலால் அங்கு நடந்த ஒருசில விடயங்களை மட்டும் எழுதுகிறேன். அங்கு மூன்று நகரங்களுக்குச் சென்றிருந்தோம். முதலில் சென்றது ( Rabat ) ராபற் என்னும் நகருக்கு. அங்கு நாம் தங்கி இருந் இடம் மெதீனா (medina ) என்று அழைக்கப்பட்டது. சுற்றிவர பிரமாண்டமான கோட்டைச் சுவர்கள் போன்ற மதில்களின் உள்ளே வீடுகள் தொடராக அமைக்கப்பட்டிருந்தன. முற்காலத்தில் படையெடுப்புக்களுக்குப் பயந்து,தம் பெண்கள் பிள்ளைகளைக் காப்பதற்காக இப்படியான அமைப்புக்களையே மொறோக்கோ இன மக்கள் கட்டியிருந்தார்கள். வீடுகள் நாற்சார் வீடுகள் போல் தொடராகக் கட்டப்பட்டிருந்ததால் அவற்றுக்கான வெளிச்சம் மற்றும் காற்று வருவதற்கு …

  16. இருண்ட பனிக்கால விடியலின் சூரியோதயம். சோகமாகவும் விசித்திரமாகவும் இருக்கிறது. அரை விழித்த பறவைகளின் ஆரவாரம், இன்னும் இரை தேடியபடி. இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் பாடசாலைகள் கூட வீட்டில் இருந்த படியே நடைபெறுவதால், கடந்த பத்து மாதங்களாகப் பிள்ளைகளுக்கு வீடு கிட்டத்தட்ட ஒரு சிறைச்சாலை போல மாறியிருந்தது. வீட்டுச் சிறையில் இருந்து அவர்களுக்கு ஒரு சிறிய விடுதலை கிடைப்பதையிட்டுப் பிள்ளைகள் இருவரும் காலையிலிருந்தே பெரும் ஆரவாரமாக இருந்தார்கள். எங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் கொடுக்கக்கூடிய மிக மதிப்புமிக்க விஷயம் பணம் அல்ல, அவர்களுடனான எங்களின் நேரம். என்பதைப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறது அண்மைய நாட்கள். நேரத்தைப் பார்க்கிறேன் எங்கள் வீட்டுச் சுவர்க்கடிகாரம்…

    • 2 replies
    • 969 views
  17. என்னுடன் ஒன்றாக வேலை செய்த தமிழர் ஒருவர் தொடர்பான கதை இது. 2009 மாரச் ஏப்ரல் காலப் பகுதியில் என்னுடன் வேலை செய்த தமிழர் ஒருவரிடம் போராட்டங்களில் கலந்து கொள்ளும்படி பலமுறை கேட்டிருப்பேன். ஆனால் ஏதாவதொரு சாக்குப் போக்கைக் கூறி அவர் கலந்து கொள்வதைத் தவிர்த்து வந்தார். நானும் இவரிடம் இதைப் பற்றிப் பேசுவதில் எ;நதப் பயனுமில்லை என உணர்ந்து கேட்பதை நிறுத்தி இருந்தேன். அவரை கடந்த சனிக்கிழமை கடையொன்றில் வைத்துச் சந்தித்திருந்தேன். அப்போது திங்கட்கிழமை கனடாவில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து அவராகவே பேசினார். பேசியதுமில்லாமல் நீங்கள் போகும் போது நானும் வரவா என்று கேட்டார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதுவரை இல்லாத ‘உணர்வு இப்போதாவது வந்திருக்கிறதே என்று ஒரு மகிழ்ச…

  18. இந்திய இரானுவம் இலங்கையில் சண்டை பிடிப்பதை இலங்கை இராணுவத்தளபதி மற்றும் அமைச்சரும் ஒத்துக்கொண்ட செய்தி ஆங்கிலத்தில் கிடைத்தால் தயவுசெய்து தரவும்.

    • 2 replies
    • 1.6k views
  19. நியூயோர்க் ஐ.நாடுகள் சபையின் அமெரிக்க பிரதிநிதியின் அலுவலகம் முன்பாக 140E45 ST பங்குனி மாதம் 16ம் திகதி திங்கள் மாலை 12-3மணிவரை அணு அணுவாக செத்துக் கொண்டிருக்கும் எமது உறவுகளுக்காக குரல் கொடுப்போம். தொடர்ந்தும் இவ்வாறான கவனயீர்ப்புகள் நடத்தவிருப்பதால் 16ம் திகதி விபரங்கள் வெளியிடப்படும்

  20. தமிழ் மக்களினது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி லண்டனில் போராட்டம்! February 4, 2025 இலங்கையின் சுதந்திரமான இன்று தமிழ் மக்களினது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி லண்டனில் பாரிய பேரணியொன்று இடம்பெறவுள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் ஈழத்தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. ஈழத்தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது. வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையில் தமிழ் மக்களினது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி இலங்கையின் சுதந்திரநாளான இன்று லண்டனில் ஆர்ப்பாட்டபேரணியொன்று இடம்பெறவுள்ளது. உலகின் பல நாடுகளையும் சேர்ந்த ஆயிரதக்கணக்கான தமிழ் செயற்பாட்டாளர்கள் லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு வெளியே அணிதிரளவுள்ளனர். அவர்கள் இந்த பேரணியில் கலந்துகொள்ளும் தமிழர்களிற்கு தங…

  21. லண்டன் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் மாவீரர் நினைவு! இலங்கையில் இடம்பெற்ற 30 வருட கால யுத்தத்தில், மண்ணுக்காக தமது உயிரை நீத்த மாவீரர்களை நினைவுகூறும் முகமாக ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27 ஆம் திகதி நினைவுநாள் அனுஷ்ட்டிப்பது வழமை. அந்த வகையில் இந்த நாளை நினைவுபடுத்தும் முகமாக லண்டன் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில், கார்த்திகைப்பூ இலட்சினையோடு மாவீரர்களை நாங்கள் நினைவு கூறுகிறோம் என்ற வாசகம் காட்சிப்படுத்தப்பட்டு மாவீரர்கள் நினைவு கூறப்பட்டுள்ளார்கள். https://newuthayan.com/லண்டன்-நாடாளுமன்ற-கட்டடத/

  22. கனடிய மாணவர் மற்றும் பல் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து கனடாவின் ரொறன்ரோ நகரில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்துக்கு முன்பாக நடத்திய பேரணியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து வாசிக்க

  23. உலக (அகதிகளாக்கப்படுவோர் தினம் ஐ நா மொழியில்), உலக அகதிகள் தினம் என்று ஆயிரம் தினங்கள் கொண்டாடும் ஐ நா பாண் கி மூண் எம்மக்களுக்காக நாம் என்ன செய்ய போகிறோம் ஜுன் 20 2009 500000 மேற்பட்டோரை அகதிகளாக்கி.................... 50000 மேற்பட்டோரைகொன்று 50000 மேற்பட்டோரைமுடமாக்கி 13300 மேற்பட்டோரைபேரைக் கடத்தி இன்னும் எத்தனையோ இரகசிய வேலைதிட்டங்கள் நடக்கிறது http://www.timeanddate.com/holidays/un/world-refugee-World Refugee Day Quick Facts The United Nations' World Refugee Day honors refugees' courage, strength and determination. Name World Refugee Day World Refugee Day 2009 Saturday, June 20, 2009

  24. அவுஸ்­தி­ரே­லி­யாவில் உள்ள சிட்னி நகரில் நடை­பெற்ற கலை நிகழ்­வொன்­றின்­போது அமெ­ரிக்­காவை தள மாகக் கொண்ட பிர­பல இசைக் கலை­ஞர்கள் இருவர் மேடையில் தோன்றி தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் கொடியை அப்­ப­டியும் இப்­ப­டி­யு­மாக அசைத்துக்காட்டியும், போரா­ளி­களை ஆத­ரித்துப் பேசியும் பெரும் சர்ச்­சையை உரு­வாக்­கி­யுள்­ள­தாக கொழும்பை தள மாகக் கொண்ட ஆங்­கில இணை­யத்­த­ள­மொன்று தெரி வித்­துள்­ளது. போர்க்­கு­ணம்­மிக்க சமூக நீதி மற்றும் அனைத்தும் ஆபி­ரிக்­கத்­துவம் ஆகிய இரண்­டையும் கருத்­தூன்றி வெளிப்­ப­டுத்தும் சமூ­கம்சார் இசைக் காவி­யங்­க­ளுடன் எதி­ரெ­திரே பாடும் தங்கள் பாடல் நடைக்கு பெயர்­பெற்­றுள்ள "டெட்­பிரெஸ்" எனும் பிர­பல அமெ­ரிக்க பின்­புல இசைக்­கு­ழுவின் கலை­ஞர்­களே இவ்­வாறு சர்ச…

  25. லண்டன் வீதியோரக் கடைகள் உட்பட முஸ்லீம்கள் நடத்தும் வர்த்தக ஸ்தாபனங்கள் எங்கனும்.. இஸ்ரேல் படைகள் காசாவை விட்டு விலகிய பின்னரும் கூட.. பலஸ்தீனப் மனிதப் பேரவலத்தை படங்கள் சகிதம் சுட்டிக்காட்டும் போஸ்ரர்கள் ஒட்டப்பட்டு.. அதனூடு நிதிப்பங்களிப்புக் கோரப்பட்டுள்ளது. ஆனால் நம்மவர்கள் நடத்தும் கடைகளில்.. வர்த்தக நிறுவனங்களில்.. சோதிடம்.. சினிமா.. பங்கிறைச்சி.. மான்.. மரை.. முயல் இறைச்சி.. மற்றும் போன் காட் விளம்பரங்களே முக்கிய இடம் பிடித்துள்ளன. எமது அவலம்.. 2006 இல் இருந்து ஆரம்பமாகிய போதும்.. அதை வெளிப்படுத்த.. நாம் இணையத்தில்... சில கூட்டங்களில்.. போஸ்ரர் பிடிப்பது போதுமானதல்ல.. என்பதைப் பல தடவைகள் சுட்டிக்காட்டியும்.. எவரும்.. கேட்பாரில்லை. அதையே மீள மீளச் செய்கிறார…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.