சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
-
- 1 reply
- 1.2k views
-
-
ஒரு பேருந்து நடத்துனர்(Conductor) பயணிகளிடம் எப்பொழுதும் கடுமையாக, மோசமாக நடந்து கொண்டு அடிக்கடி எரிந்து விழுந்தே பயணச் சீட்டினை வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருநாள் மிக அழகான இளம் நங்கையொருத்தி (அமலா பாலோ...அல்லது ஹன்ஸோ... ஏதோ மாதிரின்னு... ஒங்க கற்பனைக்கு அதை விட்டுடுறன்..!) அந்த பேருந்தில் ஓடிவந்து ஏற முற்பட்டாள் ஆனால், அந்தோ பரிதாபம்...! பேருந்து நடத்துனர் ஓடிவரும் அவளை சரியாக கவனிக்காததால், பேருந்து அவளை தட்டிவிட்டு, அவளை இடித்து மோதி நின்றதில், அந்த இடத்திலேயே மாண்டு போனாள்...! கடுங்கோபமுற்ற பயணிகள், நடத்துனரை பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவலர்கள் அவரை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டி நிறுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, நட…
-
- 39 replies
- 3.1k views
-
-
அனைவருக்கும் இனிய வணக்கங்கள், இண்டைக்கு ஒரு சின்னக் கலந்துரையாடல். அது என்ன எண்டால் புலத்தில வாழும் நம்மவர்களின் ஆக்கங்கள், படைப்புக்கள் நம்மவர்களாலேயே நையாண்டி செய்யப்படுவதற்கான காரணங்கள் எவை என்பது பற்றினது. இதுபற்றி கொஞ்சக்காலமா கதைக்கவேண்டும் எண்டு நினைச்சு இருந்தன். இண்டைக்குத்தான் சந்தர்ப்பம் கிடைச்சு இருக்கிது. இப்ப பாருங்கோ வெள்ளைக்காரன் புதுமை எண்டு சொல்லிக்கொண்டு என்னத்த செய்தாலும் நம்மட ஆக்கள் வாயமூடிக்கொண்டு ஆஹா ஓஹோ எண்டு சொல்லி பாராட்டுவீனம். தமிழ்நாட்டு தமிழன் சின்னத்திரை, பெரியதிரை எண்டு சொல்லி எப்படியான கூத்துக்கள் ஆடினாலும் அதையும் நம்மட ஆக்கள் ஆஹா ஓஹோ எண்டு சொல்லிப் பாராட்டுவீனம். ஏன்.. மலேசியா, சிங்கப்பூரில இருக்கிற அங்கத்தைய தமிழ் ஆக்கள் பொழு…
-
- 46 replies
- 9.1k views
-
-
எனக்கு பிடித்த சில வரிகள். 1. சில சூழ்நிலைகள் கடந்துசெல்ல உடல் வலிமையை விட மனவலிமை அதிகம் தேவைப்படுகிறது . இந்த சோகங்கள் துக்கங்கள் எல்லாம் ஒரு நாள் மாறிவிடும்.ஆனால் உடனே மாறிவிடாது. 2.ஒரு பெண் தன்னை ஒருவரிடம் ஒப்படைக்கும் வரை தான் அவள் வாழ்க்கை அவள் கையில் . அதன் பிறகு அவள் ராணியாக வாழ்வதும் நடைப்பிணமாக வாழ்வதும் ஆணின் கையில் தான் உள்ளது . 3. குடும்ப நலன் கருதி யாரோ ஒருவர் மௌனமாகி போவதால் தான் ...பல பிரச்சினைகள் பெரிதாகாமல் இருக்கின்றன. 4 வாழவேண்டிய வயதில் வசதி இருக்காது ...வசதி வரும்போது வயது இருக்காது ...இதுதான் வாழ்க்கை 5. எல்லா உறவுகளுக்கும் மனம் ஏங்காது எல்லார் தீண்டல்க்கும் பெண்மை வளையாது. விரும்பிய ஒருவருடன் தான் உணர்வுகளும் காதலும் 6. குடு…
-
-
- 8 replies
- 865 views
- 2 followers
-
-
ஏமாற்றம் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம். அதுவும் கணவன் அல்லது மனைவி இருவருள் ஒருவர் நன்கு சந்தோஷமாக வாழும் போது, ஒருவர் மட்டும் ஏமாற்றுகிறார்கள் என்றால் அதை ஏற்றுக்கொள்வது என்பது சாதரணமான விஷயம் இல்லை. அப்போது மனதில் ஏற்படும் வலிக்கு அளவே இருக்காது. மேலும் அந்த நேரம் அவர்களின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருக்கும். எனவே அவர்கள் எதனால் அதை செய்கிறார்கள், அப்படி செய்யும்போது என்னவெல்லாம் நிகழும் என்பதைப் பற்றிய சில ஆலோசனைகளைப் பார்ப்போமா!!!. முதலில் வாழ்க்கைத்துணை உண்மையில் ஏமாற்றுகின்றனரா, இல்லை நமக்கு சித்தப்பிரம்மை பிடித்துள்ளதா என்று தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கைத்துணை எப்போதும் வீட்டிற்கு தாமதமாக வந்தாலோ அல்லது வெளியே செல்லும் போது சீக்கிரம் செல்வ…
-
- 0 replies
- 1.1k views
-
-
நான் ஒரு பெண் – ஜக்குலின் அன் கரின் நான் ஒரு பெண்ணாக இருப்பதற்காகப் பெருமைப்படுகிறவள். ஏனென்றால் நான் ஒரு பெண். பெண்ணாக இருப்பதற்காகப் பெருமைப்படுகிறவள் என்னையும் என் போன்றவர்களையும் இந்தச் சமூகம் நோக்குகின்ற முறைக்கெதிராகக் குரல் எழுப்புமாறு நான் நிப்பந்திக்கப்படுகிறேன். பெண்களை முழுமையாகவும், தனிநபராகவும், ஆண்கள் அனுபவிக்கும் முறைக்கெதிராகவும் நான் குரல் எழுப்புகிறேன். பெண்களைச் சிறுமைப்படுத்திப் பார்க்கும் முறை பெண்கள் கூட தம்மை அப்படிப் பார்க்கும் படி செய்துவிடுகின்றது. நான் ஒரு பெண். மற்றப் பெண்களையும் போலவே அறிவுள்ளவள், சிந்திக்கும் ஆற்றல் உள்ளவள், எனக்கென சொந்தமான புத்தியும் கொண்டவள், என்னுடைய சுயதேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக ஆண்களில் தங்கி நிற்பதற்க…
-
- 0 replies
- 583 views
-
-
“பெண்ணின் பலவீனமான எதிர்ப்பு சம்மதத்துக்கு அறிகுறி” “பெண்ணின் பலவீனமான எதிர்ப்பு என்பது சம்மதத்துக்கான அறிகுறி” என்று, பாலியல் வழக்கொன்றில் இந்திய நீதிபதியொருவர் குறிப்பிட்டிருப்பது இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் மஹ்மூத் ஃபரூக்கி. இவர், ‘பீப்ளி லைவ்’ என்ற பிரபல திரைப்படத்தின் இணை இயக்குனரும் ஆவார். கொலம்பியா பல்கலைக்கழக மாணவி ஒருவரை 2016ஆம் ஆண்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஃபரூக்கிக்கு ஏழு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இதை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட மேன்முறையீட்டில், ஃபரூக்கி நிரபராதி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்…
-
- 1 reply
- 1.1k views
-
-
என்ன தான் நாங்கள் வெளிநாடு வந்தாலும் கொழும்பைத் தாண்டியே வர வேண்டும்.கொழும்பைத் தாண்டி வர வேண்டும் என்றால் ஏதோ முருகண்டியில் இறங்கினமா ஏறினமா என்ற மாதிரி இல்லை.நாள் கணக்காக கிழமைக் கணக்காக மாதக்க கணக்காக ஏன் வருடக் கணக்காக கொழும்பில் தங்கியிருந்தவர்கள் ஏராளம்.நானும் இப்படி வருடக் கணக்காக(76-77) அலைந்தவர்களில் ஒருவன் . இப்படி கொழும்பில் அலைந்த காலங்களில் உறவினர்களின் வீட்டில் நின்றாலும் ஏஜென்டைப் பார்க்க அப்படி இப்படி ஒரு சாட்டு வைத்து திரிவது தான் வேலை.இப்படி திரிந்த காலங்களில் மதிய உணவுக்காக ஜவ்னா கொட்டலுக்கு சாப்பிட போவோம்.கொழும்பில் இருந்தவர்களில் இந்த ஜவ்னா கொட்டலில் சாப்பிடாதவர்களே இருக்கமாட்டார்கள்.இதிலும் ஊரில் இருக்கும் போது ஒரு தரம் சோறு போட்டு இரண்டாம் தரம் …
-
- 17 replies
- 2.4k views
-
-
கணவன் மனைவிக்கிடையே, திருமணமான புதிதில் இருக்கும் நெருக்கம், நாட்கள் செல்லச் செல்ல குறைந்துவிடும் என்பது பொதுவான கருத்து. இதற்கு காரணம், சரியான, பரஸ்பர புரிதல் இல்லாமையே. கீழே தரப்பட்டிருக்கும் கருத்துக்கள், ஆண் பெண் என்ற பாகுபாடில்லாமல் இருவரும் கடைபிடிக்க வேண்டிய பொதுவான ஆலோசனைகள். இங்கு தரப்பட்டிருக்கும் ஆலோசனைகளில் சில, குழந்தைத்தனமானதாகவும் நகைச்சுவையாகவும் தோன்றலாம்.. ஆனாலும் தம்பதிகளுக்குள் கவுரவம் பார்க்காது, கடைபிடிப்பதில் தவறில்லையே.. 1. எழும்போதே ஒருவருக்கொருவர் புன்ன கையுடன் பார்த்துக் கொள்ளுங்கள். குட்மார்னிங் சொல்லிக்கொள்வதில் தவறில்லை. 2. வாரத்திற்கொருமுறை குடும்பத்தோடு வெளியில் சென்று வரலாம். 3. மனைவிக்கு / கணவனுக்கு வேண்டியவ…
-
- 29 replies
- 8.4k views
-
-
"உலகின் முதலாவது பதியப்பட்ட நீதிமன்ற பதிவு" பண்டைய மெசொப்பொத்தேமியா சட்டவியல் பற்றி நாம் அறிவதற்கு அங்கு கண்டு எடுக்கப்பட்ட நீதிமன்ற பதிவுகள் எமக்கு துணை புரிகிறது. அங்கு, சில வழக்குகள் கெட்ட பெயரை பெற்று, அதனால் பிரசித்தம் அடைந்து இருப்பதும் வேறு சில பதிவுகள் ஒரே மாதிரியான வழக்குகளின் வெவ்வேறு பிரதிகள் போலவும் தோன்றுகின்றன. அவை எழுத்தாளர்களின் அல்லது வழக்கு பதிவு செய்வோர்கள் பயிற்சி [copying exercises for scribal trainees] போல் தெரிகிறது. ஆகவே அங்கு ஒரே மாதிரியான பல பிரதிகள் இருக்கக் கூடும் என நாம் கருதலாம். சுமேரியாவில் கண்டு எடுக்கப்பட்ட மிகவும் பிரசித்தமான வழக்கு கி மு 1900 ஆண்டு அளவில் நடை பெற்ற ஒரு கொலை வழக்கு ஆகும். …
-
- 0 replies
- 362 views
-
-
எமது வாழ்கையில் தொடர்பாடலில் எமது பெரிசுகள் தாங்கள் சொல்லவந்த செய்தியை நேரடியாகச் சொல்லாது மறைமுகமுகமாக உறைக்கத்தக்க விதத்திலும் , புத்திமதி சொல்வது போலவும் உரையாடுவார்கள் . இதைச் சொல்லடை அல்லது சொலவடை என்று சொல்லுவோம் . ஆனால் , துர்ரதிஸ்டவசமாக இந்த சொல்லடைகள் எம்மிடமிருந்து நாகரீகம் என்ற போர்வையில் மறைந்து கொண்டு போகின்றன . இவை மீண்டும் புதியவேகம் பெற்று எம்மைப் போன்ற இளயவர்களால் முன்னெடுக்கப்படவேண்டும் என்ற ஆதங்கத்திலேயே இந்தப் பதிவைத் தொடங்குகின்றேன் . இந்தப் பதிவானது உங்கள் ஒத்துளைப்பும் , ஆதரவும் இல்லாமல் வாசகர்களைச் சென்றடையாது என்பது நிதர்சனமான உண்மை . முதலில் ஆரம்பித்துவைக்க எனக்குத் தெரிந்த சொல்லடைகளைத் தருகின்றேன் , எங்கே உங்கள் கைவண்ணத்தைக் காட்டுங்கள்!!!!!!!!…
-
- 231 replies
- 43k views
-
-
திருகோணமலையில் ஒரு வயது குழந்தையை தாக்கிய தந்தையை நேற்று இரவு (02) கைது செய்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். திருகோணமலை திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர் முது ஆருந்திவிட்டு ஒரு வயது குழந்தைக்கும், மனைவிக்கும் தாக்கியதாக பொலிஸாருக்கு கிடைத்த அவசர தொலைபேசி அழைப்பை அடுத்து, சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்ற பொலிஸார் சந்தேக நபர் மது போதையுடன் ஒரு வயது குழந்தையை தாக்கியதாகவும் இவ்வாறு தினமும் மது போதையுடன் மனைவி பிள்ளைகளை சந்தேக நபர் தாக்குவதாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதையடுத்து குறித்த சந்தேக நபரை தடுத்து வைத்துள…
-
- 1 reply
- 642 views
-
-
காதலில் உள்ளது மூன்று நிலைகள்.. இதில் நீங்கள் எந்த நிலை.. [Monday, 2012-12-17 20:39:53] அனைவருக்குமே காதல் உணர்வுகள் நிச்சயம் இருக்கும். அந்த காதல் இரு உள்ளங்களுக்கிடையே பூக்கும். ஆனால் அனைவரும் காதலானது இருவருக்கிடையே ஒரு நல்ல கெமிஸ்ட்டரி இருந்தால் தான் மலரும் என்று நினைக்கிறோம். எப்போது காதலில் விழுகின்றோமோ, அப்போது ஆரம்பத்தில் அடிக்கடி குழப்பங்கள் நிகழும். இந்த குழப்பங்கள் வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஏனெனில் அந்த காதலிலேயே பல வகைகள் உள்ளன. அவற்றில் சில காமம், ஈர்ப்பு மற்றும் பிணைப்பு போன்றவை. நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ, காதலில் விழுவதற்கு இந்த மூன்று நிலைகளில் ஏதாவது ஒன்றின் மூலமாகத் தான் இருக்கும். இப்போது அந்த மூன்று வகையான காதலைப் பற்றி பார்ப்போமா.. க…
-
- 3 replies
- 1.2k views
-
-
பெண்கள் பருவமடையும் வயது குறைந்து வருவதை பெற்றோர்கள் அவதானித்து இருக்கக் கூடும். உதாரணத்திற்கு தாய் 14 வயதில் முதல் மாதவிடாயை (Menarche) அடைந்தால் மகள் இப்பொழுது 10-12 வயதிலேயே அடைந்து விடுகிறாள். கடந்த சில தசாப்தங்களாகவே இம் மாற்றம் படிப்படியாக ஏற்பட்டுக் கொண்டு வருகிறது. 1800ன் நடுப் பகுதிகளில் அமெரிக்கப் பெண் குழந்தைகளில் முதல் மாதவிடாய் 17 வயதளவில் ஏற்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் 1960 களில் 12 வயதாகக் குறைந்துவிட்டது. காரணங்கள்: இதற்குக் காரணம் என்ன? - பலரும் பலவாறு ஊகிக்கிறார்கள். அடிப்படைக் காரணம் முற்றும் புதியதான வாழ்க்கை முறைதான் என நம்பப்படுகிறது. போஸாக்கான உணவு தாராளமாகக் அளவு கிடைக்கிறது. இதனால் அவர்களது உடல் வேகமாகவும் அதிகமாகவும் வளர்ச்சியு…
-
- 1 reply
- 3.1k views
-
-
அம்மாவிற்காக ஒரு 5 நிமிடம் „heart“-Emoticon #ஒரு வயதான போது, உன்னைக் குளிப்பாட்டி, உணவூட்டி அழகுபடுத்தி மகிழ்ந்தாள். நீ பதிலுக்கு இரவு முழுதும் அழுதாய். #இரண்டு வயதாகையில் உன் விரல் பிடித்து உன்னை நடக்கப் பழக்கினாள். நீயோ அவள் அழைக்கையில் வராமல் முரண்டு பிடித்தாய். #மூன்று வயதாகையில் பாசத்தைக் குழைத்து உனக்காய் உணவு தயாரித்தாள். நீயோ அதை விசிறியடித்து உன் நன்றியைக் காட்டினாய். #நான்கு வயதானபோது வண்ணப் பென்சில்கள் வாங்கி உன்னை மகிழ்வித்தாள். நீ பதிலுக்கு அதைக்கொண்டு சுவரில் கிறுக்கினாய். #ஐந்து வயதானபோது அழகழகாய் ஆடைகள் அணிவித்து மகிழ்ந்தாள். நீயோ பதிலுக்கு சகதியில் புரண்டு அதை அழுக்காக்கி சிரித்தாய். #ஆறு வயதில் அலைந்து அலைந்து நல்ல இடமாய் பார்த்து…
-
- 0 replies
- 972 views
-
-
.அரைக்கிழவனின் வியாக்கியானம் இந்த மே முப்பதுடன் வயது முப்பத்தைந்து. ஏழுகடாமாடு வயசாகிறது.(அப்ப ஒரு கடாமாடு என்பது 5 வயசா?). படிவங்களில் வயதை டிக்கடிக்க வேண்டிய டப்பா மாறுகிறது. குறுந்தொப்பை நிரந்தரம். Midlife crisisக்கான அறிகுறிகள் லேசுபாசாய் தென்படுகிறது. இது ஒரு taking stock of life பதிவு. இந்த 35 வயதில் நான் கற்றதும்,பெற்றதும் என்ன? 35 வயதில் என்ன சாதித்தாய் என்றால் ஒன்றுமில்லை. கொஞ்சம் செட்டில் ஆகியிருக்கிறேன் (touch wood). அமெரிக்காவில் ஊர் ஊராய் ஓடி, திரவியம் தேடி, தங்கைகள் திருமணத்துக்கு தோள் நின்று, களைத்து, வடக்கே கனடாவில் ஒதுங்கி, வீடு வாங்கி, நல்லது/கெட்டதுக்கு 4 நட்புக்கள் சேர்த்து, செந்திலை புரிந்திருக்கும் கரகாட்டக்கார கவுண்டமணியாய் ஒரு …
-
- 1 reply
- 1.4k views
-
-
சே குவேரா வாழ்க்கையை வேறு எந்த இயக்குனர் படமாக்கியிருந்தாலும், கொஞ்சம் செயற்கைத்தனத்தோடு அதிமனிதராகவே அவரை சித்தரித்திருப்பார். ஏனென்றால் பொதுவில் அவருக்கு இருக்கும் பிம்பம் அத்தகையது. “சே” புரட்சியின், கட்டுடைத்தலின், எதிர்ப்பின், கலகத்தின் மாபெரும் சின்னமாகவே ஆக்கப்பட்டுவிட்டார். ஆனால் இந்தப் படத்தில் மிகமிக யதார்த்தமாக அவரை வடிவமைத்துக் காட்டியிருக்கிறார்கள் இயக்குனர் ஸோடர்பெர்க்-கும் நடிகர் பெனிசியோ டெல் டோரோ-வும். சமகாலத்தில் உலகின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் டெல் டோரோ என்பதை அவர் இந்தப் படத்தில் மீண்டும் நிரூபித்திருக்கிறார். கேண்ஸ் திரைவிழாவில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டாலும், ஆஸ்கார், கோல்டன் குளோப் போன்றவை ஏறிட்டுக்கூடப் பார்க்கவில்லை. சே குவேரா பா…
-
- 10 replies
- 1.9k views
-
-
அறிவுத் திறனும் செயல்திறனும் மேம்பட தூக்கம் அவசியம். ‘அதிகச் சுமை குறைவான தயாரிப்பு’ என்கிற பொருளில் அமைந்த புதிய புத்தகத்தைப் படித்தபோது இன்றைய அமெரிக்க உயர்நிலைப் பள்ளிக்கூட மாணவர்களின் நிலையை எண்ணி மிகவும் பரிதாபப்பட்டேன். போட்டிகள் அதிகமாகிவிட்ட இந்நாளில் நல்ல உயர்நிலைக் கல்வியும் வேலையும் பெற கடினமாக பாடங்களைப் படிக்க வேண்டிய கட்டாயத்துக்கு அவர்கள் ஆளாக்கப்பட்டுவிட்டனர். பள்ளிக்கூடத்திலும் வீட்டிலும் மாணவர்களை எப்போதும் “படி” “படி” என்றே நச்சரிக்கின்றனர். இந்த இம்சை தாங்காமல் சில மாணவர்கள் ஊக்க மருந்துகளைச் சாப்பிடுகின்றனர், சிலர் படிப்பதாக நடித்து ஏமாற்றுகின்றனர். இப்போதைய உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் தூக்கம் வராமலோ தூங்க முடியாமலோ மிகவும் அவதிப்படுகின்றனர் என்ற தகவல…
-
- 0 replies
- 1.1k views
-
-
லாக்டௌனில் மொபைலுடனேயே கணவர், வளரும் கசப்பு... நிபுணர் தீர்வு உங்களின் இத்தனை ஆண்டுகால திருமண வாழ்வில், உங்களுக்கு ஏற்பட்ட வருத்தங்களை உங்கள் கணவரிடம் சொல்லியிருக்கிறீர்களா? இல்லையென்றால், அதை இந்த லாக்டெளன் நேரத்தில் செய்யுங்கள். ``நான் 45 வயது இல்லத்தரசி. இந்த லாக்டௌன் முடிவதற்குள் எனக்கும் என் கணவருக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி வந்துவிடுமோ, அவர் மேல் இருக்கும் காதல் குறைந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. நான், என் கணவர் மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கும் எங்கள் மகன் என மூன்று நபர்களைக் கொண்டது எங்கள் குடும்பம். காலையில் எழுந்ததும் என் மகன் மொபைலை எடுத்துக்கொண்டு ஆன்லைன் க்ளாஸ் என உட்கார்ந்துவிடுவான். என் கணவரோ…
-
- 0 replies
- 471 views
-
-
உண்மையான சந்தோஷம் எதில் இருக்கிறது....
-
- 0 replies
- 763 views
-
-
நவராத்திரி புராணத் தகவல்கள்! நவராத்திரியின் முதல் நாளில் பாவை, இரண்டாம் நாள் குமாரி, மூன்றாம் நாள் தாருணி, நாலாம் நாள் சுமங்கலி, ஐந்தாம் நாள் சதகாடி, ஆறாம் நாள் ஸ்ரீவித்யா, ஏழாம் நாள் மகா துர்கை, எட்டாம் நாள் மகா லட்சுமி, ஒன்பதாம் நாள் சரஸ்வதி என ஒன்பது வடிவில் காட்சியளிக்கும் அம்பிகை, விஜய தசமியன்று சர்வ சக்தி ஐக்கிய ரூபிணியாக தரிசனமளிக்கிறாள் என்கின்றன புராணங்கள். சித்திரையில் 9 நாட்கள், புரட்டாசியில் (சில சமயம் ஐப்பசியில்) 9 நாட்கள், ஆடி மாதத்தில் 9 நாட்கள், மாசியில் 9 நாட்கள் என வருடத்திற்கு நான்கு முறை நவராத்திரியைக் கொண்டாட வேண்டும் என புராணங்கள் கூறுகின்றன. என்றாலும், சரத்ருது (குளிர்காலம்) எனும் புரட்டாசி (ஐப்பசி)யில் வரும் நவராத்திரியே மிக, மிக…
-
- 5 replies
- 2.4k views
-
-
மாலை நேரம் . வேலையால் களைத்து விழுந்து வந்த நண்பர் ஓய்வெடுக்க முடியாமல் .. மனைவி, இவர் வேலையால் வந்தவுடன் மகனை கையளித்து விட்டு, தன் வேலைக்கு பாய்ந்துவிட்டார் ... மகனை மேசையில் இருத்தி விட்டு, சற்று ஊர்ச்செய்திகளை பார்க்க கணனி முன் இருந்த நேரம் ... வீட்டு தொலைபேசி அலறியது .. எடுத்தால் ... மறுமுனையில் மனைவியின் ஒன்றுவிட்ட சகோதரி கனடாவில் இருந்து ... ஹலோ .. எப்படி இருக்கிறீர்கள் .. இருக்கிறோம் அக்கா, அவ வேலைக்கு போய் விட்டா .. இல்லை இல்லை உங்களுடன் கதைக்கலாம் .. ஓம் சொல்லுங்கோ .. அண்ணாவின் அறுபதாவது பிறந்தநாள் வருகிறது அடுத்த ஓரிரு மாதங்களில் வருகிறது, எம் குடும்பம் இப்போ பல நாடுகளில் பிரிந்து வாழ்கிறோம், இது ஒரு நல்ல சந்தர்ப்பம், ஒருதரம்…
-
- 6 replies
- 1.3k views
-
-
சர்வதேச முதியோர் தினம் இன்று கடந்த காலத்தில் கட்டழகாகத் திகழ்ந்தவர்கள், கம்பீரமாக தோற்றமளித்தவர்கள், வீரமான செயற்பாடுகளுடன் விரைவாக செயற்பட்டவர்களே இன்றைய முதியோர். இன்று கட்டழகு குலைந்து, கம்பீரம் குறைந்து, முதியோர் என்ற முத்திரை பதித்து பிறரின் உதவி வேண்டி அவர்கள் காலம் கழிக்கின்றனர். மனித வாழ்வில் மட்டுமல்ல அனைத்து உயிரினங்கள் வாழ்விலும் தவிர்க்க முடியாத இயற்கை நியதிகளில் ஒன்றுதான் முதுமை. இதனை எந்த விஞ்ஞான விந்தையாலும் தடுக்கவோ, தாமதித்து விடவோ முடியாது. இலங்கையில் 60 வயதைத் தாண்டியவர்களே முதியோர் எனக் கருதப்படுகின்றனர். 'முதியோர்' என்றால் அவர்கள் யாருமில்லை. அவர்களே நம் பெற்றோர்... நம்மை பெற்று வளர்த்து கல்வியூட…
-
- 0 replies
- 586 views
-
-
பன்மைத்துவ கற்றலும் கற்பித்தலும் – இரா.சுலக்ஷன. மனிதர் அவர்தம் உடல் இயக்கமும், வாழ்வியல் இயக்கமும் கற்றல் – கற்பித்தல் ஆகிய செயற்பாடுகளின் அடிப்படையில் இடம்பெறும் நிகழ்வு தான் என்பது, தூண்டலுக்கு ஏற்ப துலங்கல் என்ற மனிதரின் அடிப்படை உடலியக்க செயற்பாட்டின் ஊடாக வெளிப்பட்டு நிற்கும் உண்மை நிலைப்பாடாகும். இந்த அடிப்படையில் நோக்கும்போது தூண்டல் – துலங்கல் என்ற இயல்பொத்த செயற்பாட்டில் கற்றல் – கற்பித்தல் ஆகிய செயல்முறைகளின் செல்வாக்கு நிலையினை அவதானிக்கலாம். தூண்டல் காரணி ஒன்றாக அமைகின்ற போதும், துலங்கல் என்பது அவரவர் அனுபவம் சார்ந்து, இயல்பு நிலை சார்ந்து, சூழல் சார்ந்து, பிறப்புரிமை சார்ந்து மாறுபட்டு அல்லது வேறுபட்டு அமையும் என்பதும் இயல்பான நிலைப்பாடாகும். …
-
- 0 replies
- 757 views
-
-
எனது மகள் சோம. அழகு 2016ல் 'திண்ணை' இணைய வார இதழில் எழுதிய கட்டுரை . மேற்கூறிய சட்டம் தொடர்பான பகுதி எடுத்துக்காட்டப்பட்டுள்ளது : ரௌத்திரம் பழகுவேன் - சோம. அழகு உறவினர்களுடன் ஒருமுறை உணவகத்திற்குச் செல்ல நேர்ந்தது. சர்வர் நிரம்பப் பணிவுடன் வந்து எங்களுக்கு வேண்டியதைக் கேட்டுச் சென்றார். சிறிது தாமதமாவதை உணர்ந்து அந்த சர்வரை அளவுக்கு அதிகமாகக் கடிந்து கொண்டார் உறவினர்களுள் ஒருவர். அதிகார வர்க்கத்தோடு தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள முனையும் சில பல அடிவருடிகளின் பிரதிநிதியாக இவரைக் கொள்ளலாம். இந்த …
-
- 2 replies
- 639 views
- 1 follower
-