Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. நீச்சல் தெரியாதவரை எனக்கு கிணறுகளை எட்டிப் பார்த்தால் தலை சுற்றும், பிறகு தப்பித் தவறு நீச்சல் கற்றுக் கொண்டபிறகு எந்த பயமும் இன்றி மேலே வரும் வழி இருக்கும் கிணறுகளில் மேலே இருந்து குதித்து குளித்து மகிழ்ந்திருக்கிறேன், கிணறுகளின் காலம் இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலானவை என்று குறிக்க நாம் திருகுறளின் தொட்டணைத் தூறும் மணற்கேணிக் குறளை எடுத்துக் கொள்ள முடியும், அணைக்கட்டு நீர்பாசனங்கள், நீர்தேக்கங்கள் இல்லாத காலத்தில் நீர் ஆதாரமாக கிணறுகளைத் தான் தோண்டி பயன்படுத்தி வந்தனர், 50 ஆண்டுகளுக்கு முன்புவரை கிணறுகளின் பயன்பாடு இன்றியமையாததாக இருந்தது. பின்னர் அடிக் குழாய்கள் (அடி பைப் / அடி பம்ப்) வந்த பிறகு கிணறு தோண்டும் வழக்கம் படிப்படியாகக் குறைந்தது, காரணம் தோண்டுவதற்கும் அதன…

  2. ஈழத்தமிழர்களின் சமூக உளவியல் மற்றும் சமூக உறவு என்பது ஸ்திரமற்ற ஒன்று என்பது மிக வெளிப்படையான ஒரு விசயம். ஈழத்தமிழர் அல்லாத பிற சமூகங்களும் இதை செவ்வனே விளங்கி கொள்ள கூடிய ஸ்திரமற்ற ஒரு நிலை நீண்ட வரலாறாக உள்ளது. கடந்த முப்பதாண்டுகளில் சில மாற்றங்கள் தென்படுகின்றன. சமூக உறவில் நெருக்கம் ஏற்படுவது காணக்கூடியவாறு உள்ளது. இவ்வாறான மாற்றம் என்பதுக்கு முற்று முழுதாக வித்திடுவது புற நிலைக்காரணிகள் தவிர அகநிலை மாற்றங்கள் என்று சொல்வதற்கில்லை. புற நிலைத் தாக்கங்கள் அதிகப்படியாக உள்ளதாலும் அதன் கால நீட்சியாலும் அக நிலையில் ஓரளவு மாற்றங்கள் இயல்பாக தோன்றக் கூடிய சாத்தியக் கூறுகள் தென்படுகின்றது. இருந்தும் அவ்வாறன எதிர்பார்ப்புகள் பலவீனமாக நகர்ந்து கொண்டுள்ளது. பொதுவ…

    • 2 replies
    • 1.4k views
  3. கூட்டத்தில் அதிகாரம் மிக்கவர் யார் என கண்டுபிடிக்கனுமா? ஒரு பிசினஸ் கூட்டம் அல்லது ஏதோ ஒரு கூட்டம் நடக்கிறது, அதில் பலர் கலந்து கொள்வார்கள், இதில் யார் அதிகாரம் மிக்கவர்கள் என கண்டுபிடிக்க வேண்டும். யார் என்ன பொசிஷன் என்று கூட்டத்தில் வெளிப்படையாக சொல்லாத நேரத்தில் யாரை தமது பேச்சால் திருப்தி செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அதிகாரி அல்லது முடிவெடுப்பவர் வருவார், கூடவே சில அல்லக்கைகள் கூட வருவார்கள், கூட வருகின்ற கைகள் பல கேள்வி கேட்பார்கள், அதிகாரி அமைதியாக இருப்பார், அல்லது அதிகாரி நூறு கேள்வி கேட்பார் அல்லக்கைகள் அமைதியாக இருப்பார்கள். ஒரு கூட்டத்தில் ஒருவர் 100 கேள்வி கேட்பார், இன்னொருவர் ஒரே ஒரு கேள்வி கேட்டிருப்பார், நூறு கேள்விக்கு பதில் அளித்து…

    • 2 replies
    • 936 views
  4. 1 சில நாட்களுக்கு முன்னர் முதுகு முழுவதும் அடித்து சிவப்பு வரி வரியாக உள்ள தழும்புகளுள்ள குழந்தையொருவரின் படத்தினை நண்பரொருவர் அனுப்பியிருந்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபலமான பாடசாலையொன்றில் முதலாம் வகுப்பில் படிக்கும் அந்த மாணவருக்கு, அவரின் கணித ஆசிரியர், அவர் ஒரு பெண், கணக்குகளை குழந்தை சரியாகச் செய்கிறாரில்லையென்று சொல்லி முதுகெல்லாம் அடித்திருக்கிறார். இதற்கு நடவடிக்கைளை எடுப்போம் என்று குழந்தையின் பெற்றோரிடம் கதைத்துப் பார்க்கச் சொன்னேன். தாங்கள் கூலி வேலை செய்வதாகவும் தங்களுடைய பிள்ளை இதற்காக எதிர்காலத்தில் பழிவாங்கப்படும் ஆகவே வேண்டாம் என்று அவர்கள் மறுத்திருக்கிறார்கள். அந்தக் குழந்தை போல் பெற்றோராலும் ஆசிரியர்களாலும் சமூகத்தாலும் வன்முறைக்கு உள்ளாகும் ஆ…

  5. Offensive ? So What ? - சோம.அழகு நீங்கள் எந்த வயதினராகவும் இருக்கலாம். ஏற்கெனவே உங்களுள் ஊறிப் போன கற்பிதங்களையும் நம்பிக்கைகளையும் தாண்டி ஏரணம் மிகுந்த நியாயமான கேள்விகளுக்கு உங்கள் மனதில் இடமளிக்கும் அளவிற்குப் பக்குவம் பெற்றவராயின் தொடரலாம். அறிவைத் தக்கனூண்டு அளவில் பயன்படுத்தினாலே உள்ளம் துக்கப்பட்டு துயரப்பட்டு காயப்பட்டு புண்பட்டு உழல்வோராயின் இப்புள்ளியிலேயே விடை பெற்றுக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உணவு, உறைவிடம் ஆகியவற்றைத் தேடிக் கொள்வதும் நமது பாதுகாப்பை உறுதிபடுத்திக் கொள்வதும் உள்ளுணர்வாக இருக்கையில் இறை என்பது இயற்கையான உள்ளுணர்வாக ஏன் இல்லை? அல்லது இறைவன் ஏன் அதை உள்ளுணர்வாக இயற்றவில்லை? இறை போதிக்கப்படாவிட்டால…

  6. கெளதமன் முராரி பிபிசி தமிழுக்காக 23 ஆகஸ்ட் 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES மனநலம். இந்த சொல் கடந்த வெகு சில தசாப்தங்களாகத் தான் கவனம் பெற்று வருகிறது. மன நலம் என்கிற ஒரு சொல்லுக்குள் பல்வேறு பிரச்னைகளையும், மன நல குறைபாடுகளையும் பட்டியலிடலாம். கடந்த சில ஆண்டுகளாகத்தான் மன அழுத்தம், மனச் சோர்வு போன்ற மனநலம் சார் சொற்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளின் போது கூட உலக புகழ்பெற்ற அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ், தன் மன நலனை கருத்தில் கொண்டு, தான் கலந்து கொள்ளவிருந்த பல போட்டிகளிலிருந்து வெளியேறினார். அது ச…

    • 2 replies
    • 691 views
  7. Started by Rasikai,

    இன்பம் எங்கே? இன்பமாக வாழவே எல்லாரும் விரும்புகின்றனர். இன்பத்தில் மட்டுமே திளைத்தவர் என்று யாரும் இருக்க முடியாது. அதே போல் துன்பத்திலேயே துவண்டு போனவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. எனவே இன்பத்தின் முடிவில் துன்பமும், துன்பத்தின் எல்லையின் இன்பமும் இருக்கும். இரவு, பகல், மேடு, பள்ளம், உயர்வு தாழ்வு, மேல், கீழ் என்று வருகின்ற இணைகள் இவை. ஒருவருக்கு இன்பம் தரும் பொருள் இன்னொருவருக்குத் துன்பம் தருகிறது. பாகற்காய் பொதுவாகக் கசக்கிறது. ஆனால் சர்க்கரை நோயாளிக்கு ''இனிக்கிறது''. ஒருவருக்கு இன்பம் தரும் பொருள் எல்லாருக்கும் இன்பம் தர வேண்டுமல்லவா? விளையாட்டுப் பொம்மை குழந்தைப் பருவத்தில் மகிழ்ச்சியளிக்கிறது. குமரப் பருவத்தில் விளையாட்டுப் பொம்மை மகிழ்ச்சியளிக்க…

    • 2 replies
    • 1.5k views
  8. பெண்களிடம் ஆண்கள் சொல்லத் தயங்கும் 9 விஷயங்கள் November 21, 2012, 4:30 am[views: 358] மனதில் வார்த்தைகள் தோன்றினாலும் பேச வாயிருந்தாலும் ஆண்கள் சில விஷயங்களை பெண்களிடம் தெரிவிக்கத் தயங்குகிறார்கள்.பெண்களிடம் ஆண்கள் பல சில விஷயங்களை சொல்லத் துடிப்பார்கள். ஆனால் சொன்னால் எங்கே பிரச்சனையாகிவிடுமோ என்ற பயத்திலேயே சொல்ல மாட்டார்கள்.அவ்வாறு ஆண்கள் பெண்களிடம் சொல்லத் தயங்கும் 9 விஷயங்களைப் பார்ப்போம். 1. கை நிறைய சம்பாதித்தாலும் அதை ஆண்கள் தங்கள் காதலியிடம் சொல்ல மாட்டார்கள். அப்படியே வற்புறுத்திக் கேட்டாலும் பேச்சை மாற்றிவிடுவார்கள். எங்கே சம்பளத்தை வைத்து தன்னை காதலி மதிப்பிட்டுவிடுவாளோ என்ற பயம் தான் அதற்கு காரணம். 2. என்ன கன்ட்ராவி புத்தகத்தை படிக்கிறா…

  9. தமிழர் பகுதியில் சீரழியும் கலாச்சாரம்..! Vhg நவம்பர் 06, 2025 அண்மைய காலங்களில் தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெறு கலாசார சீரழிவுகள் , குற்ற செயல்கள், ஈழத் தமிழினத்தை அழிவு பாதைக்கு செல்லும் அவலம் தொடர்பில் சமூக வலைத்தங்கள் பலரும் கவலை வெளியிட்டுள்ளனர். போதைபொருள் விற்பனையில் கொடிகட்டி பறக்கும் இளம் குடும்ப தலைவிகள் ஒருபுறமும் , மறுபுறம் போதையாலும் குற்றசெயல்களாகும் கெட்டு சீரழியும் இளம் சமுதாயம் ஒரு புறமுமாக ஈழத தமிழர் கலாச்சாரம் வழி மாறி போய்கொண்டிருக்கின்றது. போதைபொருள் விற்பனை - கள்ள உறவுகள் ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்த காலங்கள் மலையேறி கொண்டிருக்கின்றது. குடும்ப வன்முறைகள் கொலைகளில் வந்து முடிகின்றது. சுகபோக வாழ்க்கை மற்றும் பணத்தின் மீ…

  10. கறுப்பராய் இருப்பதால் விபச்சாரி? தேனிலவில் நேர்ந்த அவலம் திருமணத்தின்போது மோனிகாவும், அவரது கணவரும் 47 வயதான மோனிகா வலேரியா கொன்சால்வஸ் இரண்டு பல்கலைக்கழகப் பட்டங்களுக்கு சொந்தக்காரர். பிரேசிலியாவில் சட்ட ஆலோசகராக பணிபுரியும் அவர் ஒரு நீதிபதியான கார்லோஸ் என்பவரை திருமணம் செய்திருக்கிறார். ரியோ டி ஜெனிரோவை சேர்ந்த அவர், அடிக்கடி விடுமுறையின்போது, பிரேசில் அல்லது வெளிநாடுகளுக்கு செல்வதுண்டு. விலை உயர்ந்த உணவகங்கள் மற்றும் பிரத்தியோக சமூக நிகழ்வுகளுக்கு அடிக்கடி செல்லும் அவர், பிரேசிலின் சிறந்ததொரு சுற்றுப்புறத்தில் வசித்து வருகிறார். சுருக்கமாக சொன்னால், ஒரு சதவீத உயர் வகுப்புக்கு பிரேசிலிய சமூகம் அனுபவித்து வருவதற்கு இணையான வாழ்க்கையை பெ…

  11. “இப்ப மனிசியும் இல்லை. கையிலை காசும் இல்லை. உள்ளதை எல்லாம் பிடுங்கிப் போட்டு பிணமாகத்தான் அனுப்பினாங்கள்.” மனைவியை இழந்த அவர் புலம்பினார். தீடீரென மயங்கி விழுந்த அவளை கொழும்பில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் அனுமதித்திருந்தார். கடுமையான ஸ்ரோக் (பக்கவாதம்). நினைவில்லை. வாயால் பேச முடியாது. வேண்டியதைக் கேட்க முடியாது. சாப்பிட முடியாது. சலம் மலம் போவது தெரியாது. செத்த பிணம்போலக் கிடந்தாள். நெஞ்சாங் கூடு அசைவதும், இருதயம் துடிப்பதும்தான் இன்னமும் உயிருடன் இருக்கிறாள் என்பதைப் புலப்படுத்தின. நாளங்கள் வழியாக ஊசிகள், குழாய் மூலம் உணவு, மற்றொரு குழாய் மூலம் சிறுநீர் அகற்றல் என சுமார் இரண்டு மாதங்கள் கழிந்தன. ஆனால் காப்பாற்ற முடியவி…

  12. "திருமணத்திற்கு பத்துப் பொருத்தங்கள்" திருமணப் பேச்சை ஒரு வீட்டில் ஆரம்பித்து விட்டால் முதலில் பார்ப்பது ஜாதகத்தை தான். அதிலும், 10 பொருத்தத்தில் எத்தனை பொருத்தம் இருக்கிறது என்று தான் முதலில் பார்ப்பார்கள். ஜோதிடர் இருவரது ஜாதகத்தை கணித்து உத்தமம் என்று சொன்னால் தான் மேற் கொண்டு பேசுவார்கள். இல்லை யென்றால், அடுத்த ஜாதகத்திற்கு தாவி விடுவார்கள். சோதிடம் சொல்லும் பத்துப் பொருத்தம் இவை - தினப் பொருத்தம் , கணப் பொருத்தம், மகேந் திரப் பொருத்தம், ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம், யோனிப் பொருத்தம், ராசிப் பொருத்தம், ராசி அதிபதி பொருத்தம், வசிய பொருத்தம், ரஜ்ஜூப் பொருத்தம், வேதைப் பொருத்தம் ஆகும். இவற்றை எங்கோ இருந்து ஈர்ப்பு விசையால் சுற்றிக் …

  13. தம்பதியரிடையேயான உறவு தனித்துவமானது. அவர்கள் இருவரைத் தவிர வேறு வேறு எவராலும் அந்த அன்பின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாது. நேசத்தை தெரிவிக்க ‘ஐ லவ் யூ' என்று வார்த்தைகள் தான் வேண்டும் என்றில்லை. ஒவ்வொரு செயலிலும் நேசத்தை உணர்த்தலாம். உணர்வு பூர்வமான அந்த நிகழ்வுகள் வார்த்தைகளை விட வலிமையானவை. சொற்கள் இல்லாமல் காதலை தெரிவிக்கும் விதம் பற்றி நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன். பூக்கள் சொல்லும் காதல் அலுவலகம் முடிந்து வருகிறீர்களா? உங்கள் டிபன் பாக்ஸ் அல்லது பையில் மனைவிக்கு பிடித்த மல்லிகையோ, ரோஜாவோ வாங்கி வைத்திருங்களேன். அதை மனைவியின் கண்ணில் படுமாறு கவனமாய் வைத்துவிட்டு மறைந்திருந்து பாருங்கள். டிபன்பாக்ஸ் திறக்கும்போது அந்த பூக்களை விட உங்கள் மனைவிய…

  14. "உலக சமாதானம் பற்றிய ஒரு அலசல் / சிந்தனை" / பகுதி: 01 காந்தி, ஒரு வெளிநாட்டு அதிகாரத்துக்கு எதிராக சுதந்திரம் வேண்டி போரிட்டார் நெல்சன் மண்டேலா நிறவெறிக்கு எதிராகப் போரிட்டார் மார்ட்டின் லூதர் கிங் சமூக உரிமைக்காக போரிட்டார் இவர்களில் இருந்தும் பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக போராடினார் பாரதியார் சாதி, மதத்திற்கு எதிராக போரிட்ட பெரியார் தமிழர்களின் சம அரசியல் உரிமைக்காக போரிட்ட தந்தை செல்வா இவர்களில் இருந்தும், மற்றும் இதனுடன் தொர்புடைய மற்றும் பலரிடம் இருந்தும், அதேவேளை வரலாற்று செய்திகளிலும் இருந்தும் உதாரணமாக சமயத்தை எடுத்துக் கொண்டால், மேல் பழைய கற்காலப் பகுதியில் [Upper Palaeolithic Revol…

  15. பாலியல் வல்லுறவு வழக்குகளில் சிக்கி உள்ள பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் (Harvey Weinstein) மீதான 2 வழக்குகளின் விசாரணை நியூயார்க் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நேற்று துவங்கியது. 2006 ல் அவர் தம்மை பலாத்காரம் செய்ததாக திரைப்பட தயாரிப்பு உதவியாளர் மிமி ஹலேயி (Mimi Haleyi) என்பவரும், 2013 ஆம் ஆண்டு தம்மை பலாத்காரம் செய்தார் என்று பெயர் வெளியிட விரும்பாத பெண்ணும் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஹார்வி வெயின்ஸ்டீன் (Harvey Weinstein) பல்வேறு கால கட்டங்களில் தம்மை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று 80 க்கும் மேற்பட்ட பெண்கள் மீ டூ வாயிலாக புகார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நீதிமன்றத்திற்கு வந்த ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு (Harvey Weinstein) எதி…

    • 2 replies
    • 586 views
  16. பெரிய பெரிய விலங்குகளும் சின்ன சின்ன விலங்குகளும் உள்ள ரொம்ப பெரிய காடு அது. விதம் விதமான பறவைகள். பற்பல பூச்சிகள். உயர்ந்த மரங்கள். எல்லாவிதமான உயிர்களுக்கும் அந்த காடுதான் வீடு. ஆனால் ஒருநாள் அங்கே எவரோ தீ மூட்டிவிட்டனர். காடு எரிய ஆரம்பித்தது. காட்டில் வாழும் விலங்குகள் பதறின. அங்கும் இங்கும் ஓடின. மரங்களோ ஓட முடியாமல் இறுதி வரை எரிய தங்களை தயார் படுத்திக் கொண்டன. ஓடிய விலங்குகள் எல்லாம் ஒரு தடாகத்தின் அருகே சிறிய குன்றொன்றில் நின்று கொண்டு தம் நல்ல இல்லம் எரிந்து சாம்பலாவதைச் செயலிழந்து பார்த்துக் கொண்டிருந்தன. அப்போது அங்கு ஒரு விசித்திரம் நடந்தது. ஒரு சின்னஞ்சிறிய தேன் சிட்டு எரியும் காட்டுக்குள் சென்றது. பின் திரும்பியது. தடாகத்துக்குள் மூழ்கியது. பின் மீண்டும் க…

  17. நீங்கள் எதிர்பார்ப்பது போல, பிரிந்த உறவுகள் சேருகின்ற கதை அல்ல! இரு தேசங்களின் எல்லைகள் எழுதப்பட்ட போது, பிரிந்து போன இரண்டு இளமைக்கால நண்பர்களின் மீள் சந்திப்பு! படம் எடுக்கப்பட்ட விதம் எனக்குப் பிடித்திருக்கின்றது! உங்களுக்கும் பிடிக்கும் எனும் நம்பிக்கையில் இங்கு இணைக்கிறேன்! இது தான் கதையின் சுருக்கம்! டெல்லியில் வசிக்கும் முதியவர் பல்தேவ் தனது பால பிராயத்தில் பாகிஸ்தானின் லாகூர் நகரில் நண்பன் யூசுப்புடன் திரிந்த நாட்களை தனது பேத்தியிடம் பகிர்ந்து கொள்கிறார்.அவருக்கு அந்நகர் குறித்த மிக சில விசயங்களே நினைவில் நிற்கிறது.மிக பழமையான வாசல் கொண்ட ஒரு பூங்கா..நண்பன் யூசுப்பின் குடும்பத்தாரின் ஸ்வீட் ஸ்டால்..அங்கே இருவரும் ஜஜாரியா என்னும் பண்டத்தை திரு…

  18. ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கு விளையாட்டாய் உதவும் 'நிதர்சன' முயற்சி! மாணவர்களுடன் சாய் கிருஷ்ணன் வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் அடிக்கடி கேட்கும் வார்த்தை 'போய்ப் படி' என்பதுதான். படித்து முடி; பிறகு விளையாடப் போகலாம் என்பதுதான் பெற்றோர்களின் முதல் வார்த்தையாக இருக்கிறது. அதற்கு மாறாக சாய் கிருஷ்ணன் என்பவர், முதலில் விளையாடுங்கள்; பிறகு படிக்கலாம் என்று தன் பகுதி மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார். இந்த ஆச்சரிய தொடக்கத்தின் அடிப்படைக்கு என்ன காரணம்? நிதர்சனம் அறக்கட்டளையின் நிறுவனரான சாய் கிருஷ்ணனிடம் இது குறித்துப் பேசினேன். "என்னுடைய குடும்ப சூழ்நிலையால், பள்ளிப் படிப்பையே தொடர முடியவில்லை. சென்னை, பெரம்பூருக்கு அருகிலுள்ள எங்களின் …

    • 2 replies
    • 455 views
  19. நவீனக் கல்வி நம்மை தீயவர்களாக்குகிறதா? – ஆர். அபிலாஷ் May 31, 2022 - Uyirmmai Media · இலக்கியம் கட்டுரை கல்வி இல்லை, நாம் ஏற்கனவே தீயவர்கள் தாம். இதை நான் சொல்லவில்லை. மிகச்சிறந்த தத்துவவாதிகளில் ஒருவரான இமானுவெல் கேண்ட் தனது “கல்வியியல் குறித்த உரைகளில்” சொல்கிறார். என்னுடைய கருத்து ஏற்கனவே கடைந்தெடுத்த கொடியவர்களான நம்மை இந்த சமூக, பொருளாதார அமைப்பும், கூடுதலாக கல்வியமைப்பும் மேலும் கொடியவர்களாக, அறம் பிறழ்ந்தவர்களாக மாற்றுகிறது என்பதே. ஒரு உதாரணத்துக்கு, இந்த உலகின் ஆகக்கொடூரமான, மனிதகுலத்துக்கே பேரழிவைக் கொண்டு வந்துள்ள குற்றங்களை இழைத்தவர்கள் யாரென்றால் அதிகமாகப் படித்தவர்களே. கல்வி நமது தீய சுபாவத்துக்கு ஒரு கூர்மையை, முனைப்பை அளிக்கிறது, தெளிவான இ…

  20. ஆண்களுக்கு என்ன பிரச்னை? இன்று சர்வதேச ஆண்கள் தினம் . பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2010,23:13 IST கருத்துகள் (48) கருத்தை பதிவு செய்ய ஆண்கள்...20 -30-40: இருபது வயதில் - சிலிர்ப்பிக்கொண்டு நிற்கும் தலைமுடி... அதை அடிக்கடி கையால் "ஸ்டைலாக' கோதிக்கொண்டு, ரோட்டில் போகும் பெண்களை ஒரு "லுக்'... அடிக்கடி கண்ணாடி முன் நின்று, குடம், குடமாக பவுடரை கையில் கொட்டி, முகத்தில் அப்பி, அழகு பார்க்கும் பொறுமை... முப்பது வயதில் - பெயருக்கு தலையை சீவிக்கொண்டு, போனால் போகிறது என்று "தம்மாத்தூண்டு' பவுடரை முகத்தில் தடவிக்கொண்டு, அரைகுறையாய் கண்ணாடி பார்க்கும் அலுப்பு... நாற்பது வயதில் - "கீழே விழுந்து விடுவேன்' என மிரட்டும் முடியை, கஷ்டப்பட்டு இழுத்துப் பிடித்து, க…

  21. மனைவிகளின் முதல் எதிரி ! சமீபத்தில் நண்பர் ஒருவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். டீ கொடுத்த நண்பரின் மனைவி, ''அண்ணே, இந்த ஒலகத்துலேயே நான் வெறுக்கிற ஒரே விஷயம் என்ன தெரியுமாண்ணே?'' என்றார். நான் சிரித்துக்கொண்டே அவரைப் பார்க்க, பதிலுக்கு அவர் கொஞ்சம்கூட புன்னகைக்காமல் ''செல்போன்!''என்றார். ''ஏன்?'' என்றேன். ''சாயங்காலம் ஆபீஸ் விட்டு வந்ததும் அந்த செல்போனை நோண்ட ஆரம்பிச்சிடுவார். டி.வி பார்க்கிறது, சாப்பிடறது, புக் படிக்கிறதுனு என்ன வேலை செஞ்சாலும், செல்லு கையோடயே தான் இருக்கும். அப்பப்போ அதை எடுத்துப் பாத்துக்கிட்டே இருப்பார். தூக்கம் சொக்குற வரைக்கும் அதுதான் கதி. அப்படியும்கூட, சார்ஜ் போட்டு அவர் கைக்கு எட்டும் தூரமா வெச்சுக்குவார். காலையில அது முகத்துலதான் முழிப்பார்…

  22. இலங்கையில் உள்ள உங்கள் உறவினர்களிடத்தில் வெளிநாட்டு மதுபானங்களையும் சிகரெட்டுகளையும் அறிமுகப்படுத்தாதீர்கள் மாறாக முடிந்தால் வெளிநாட்டு கல்வியையும், பொருளாதாரத்தையும் அறிமுகப்படுத்துங்கள். மாதாந்தம் பணம் வழங்கி முதுகெலும்பற்ற தங்கிவாழும் தலைமுறையை உருவாக்காதீர்கள், முடிந்தால் நிலையான வருமானமீட்டலிற்கு -வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யுங்கள். இலங்கைவாழ் உங்கள் உறவுகளிற்கு ஆடம்பர வாழ்க்கைக்கு பணம் வழங்குவதைவிட இன்னமும் அடிப்படை வசதிகளிற்காய் ஏங்கும் தமிழ் உறவுகளிற்கு உதவுங்கள். பனியில் வெய்யிலில் பதினொருமாதம் வேலை செய்து ஒரு மாதம் ஒய்வெடுக்க நீங்கள் வருவதை நாமறிவோம் ஆயினும், உங்கள் ஒருமாத கால உல்லாச வாழ்க்கையையே வெளிநாட்டு வாழ்வாக எம்மவர்கள் பிழையாக புரிந்துகொள்க…

    • 2 replies
    • 523 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.