சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2254 topics in this forum
-
`பெண் மனது ஆழமானது’ என்று ஆணுக்கு சொல்லியிருக்கிற இந்த சமூகம், ஆண் மனது எப்படிப்பட்டது என்று பெண்ணுக்குச் சொன்னதாகவே தெரியவில்லை. தான் நேசிக்கிற ஒரு காரணத்துக்காகவே, `அவர் ரொம்ப நல்லவர்’ என்று சர்ட்டிஃபிகேட் கொடுப்பதற்கும், பொள்ளாச்சி சம்பவம் போல ஆபத்தில் மாட்டிக் கொள்வதற்கும், ஆண்களைப்பற்றிய சரியான புரிந்துணர்வு பெண்களுக்கு இல்லாததுதான் காரணம். அந்த வகையில் ஆண்களைப் பற்றி பெண்களுக்கு முழுமையாகப் புரிய வைத்துவிட வேண்டும் என்பதற்காக அவள் விகடனில் `ஆண்களைப் புரிந்துகொள்வோம்' என்கிற தொடரை எழுத ஆரம்பித்திருக்கிறோம். இந்தத் தொடர் ஆண்களின் தவறுகளை மட்டுமல்ல; அவர்கள் உலகத்து அவஸ்தைகளையும் பேசும். சென்ற இரு இதழ்களில், பிளேபாய் மற்றும் சாக்லெட் பாய் இயல்புகளையும், பெண்…
-
- 1 reply
- 576 views
-
-
என்னால முடியும்னா பெண்ணால முடியும் தானே? இரும்பு மனுஷி... ஜானகி ரவிச்சந்திரனை இப்படி அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும். ராணிப்பேட்டையில் இயங்கும் பிரமாண்ட வால்வ் தொழிற்சாலையான ‘குளோப் காஸ்ட்’டின் முதுகெலும்பே இவர்தான். சரியான நேரத்தில் இவர் எடுத்த சரியான முடிவு, இன்று 450 குடும்பங்களின் வயிற்றில் பால் வார்த்திருக்கிறது. சுமார் 450 பேர் வேலை பார்த்துக் கொண்டிருந்த மிகப்பெரிய தொழிற்சாலை. அந்த 450 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரம் நபர்களுக்கும், அந்தத் தொழிற்சாலையே ஆதாரம். திடீரென ஒரு நாள் அந்தத் தொழிற்சாலை இழுத்து மூடப்படுகிறது. அத்தனை குடும்பங்களும் அடுத்த வேளை சாப்பாட்டுக்கும், இதர தேவைகளுக்கும் வழி தெரியாமல் நிற்கிற அந்தக் காட்சி, கற்பனை செய்யவே நமக்கெல்லாம் பதைபதைக்க…
-
- 1 reply
- 726 views
-
-
பொறியியல் படிக்கிறாள். பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிகிறாள். உலகப்பொருளாதாரத்தின் வீழ்ச்சியும் எழுச்சியும் நேரடியாகப் பாதிக்கும் அளவிற்கு இந்திய நகர்ப்புறத்துப் பெண்ணான அவளது வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது. ஆனாலும், விளம்பரங்களில் எளிதில் கரைபோக்கும் சோப்பை தேடும் பெண்ணாகவே இன்றும் அவள் தெரிகிறாள். மசாலா முதல், எண்ணெய் வரையிலான சமையலறைத் தேவைகளைத் தேர்வு செய்யும் பொறுப்புள்ள குடும்பத் தலைவி அவள் என்பதை நிலைநிறுத்த விளம்பரங்கள் தவறுவதே இல்லை. பெண் எவ்வளவு பெரியவளாக இருந்தாலும், சமைப்பது, துணி துவைப்பது, பாத்திரம் துலக்குவது போன்ற வீட்டு வேலைகள் அவளுக்கு மட்டுமே உரித்தானவை என்பதை, வெகுஜனப்புத்தியில் அவ்வப்போது பதியவைக்கவும் அவை தவறுவதில்லை. ஒரு சில…
-
- 1 reply
- 924 views
-
-
பாராதியார் மார்க்சியத்துக்கு ஆதரவாளரா?? சில அடிப்படைக் கேள்விகள் 01.11.06 சிறப்பு கட்டுரைகள் இருபதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய உலகில் செல்வாக்குப் பெற்ற ஆளுமைகளில் பாரதியாரின் இடம் தனித்துவமானது. எல்லாவிதமான விமர்சனங்களையும் எதிர்கொள்ளும் வகையில் பாரதியின் எழுத்துகள், இன்று முன்னிலைப்படுத்தப்படுகின்ற
-
- 1 reply
- 2.1k views
-
-
தெரிந்து, புரிந்து...நடப்போம். 👇👌👍✌️ 1,தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் போனில் அழைக்காதீர்கள்.அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம்,அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம். 2,திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம், மனப்பூர்வமாக கேட்டுக்கொடுங்கள்.இது திரும்ப வருமா வராதா என.இது உங்கள் கேரக்டரை அவர் உணரச் செய்யும். இதே போல் இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம்,லஞ்ச் பாக்ஸ்,குடை போன்றவைக்கும். 3,ஹோட்டலில் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், மெனுகார்டில் காஸ்ட்லியாக உள்ள எதையும் ஆர்டர் செய்யாதீர்கள்.அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி ஆர்டர் சொல்லுங்கள் என வேண்டலாம். 4,தர்மசங்கடமான இது போன்ற கேள்விகளை தவிர்க்கலாம். "இன்னும் கல்யாணம்…
-
- 1 reply
- 741 views
-
-
பிரான்ஸ் அதிபரை போல வயதில் மூத்தவரை திருமணம் செய்த தமிழக ஆண்கள் பிரான்ஸ் அதிபர் தேர்தலில், இமானுவெல் மக்ரோங்(39) வெற்றி பெற்றதும், அவரை விட பிரபலமானார் அவரது மனைவி பிரிகெட்டி(64). மக்ரோங்கை விட பிரிகெட்டி 25 வயது பெரியவர் என்ற செய்தி பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவெல் மக்ரோங்(39)அவரது மனைவி பிரிகெட்டி(64) இருவருக்கும் இடையில் உள்ள வயது வித்தியாசம் பல ஊடகங்களில் தலைப்பு செய்தியானது. ஆணுக்கு வயது அதிகமாகவும், பெண்ணுக்கு குறைவாகவும் இருக்கும் நிலையில்தான் பெரும்பாலான திருமணங்கள் நடக்கின்றன. மக்ரோங்-பிரிகெட்டி …
-
- 1 reply
- 1.4k views
-
-
பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 21 "மற்றவைகளும் முடிவுரையும்" (மூட நம்பிக்கையின் வெவ்வேறு அம்சத்தை [கூறுபாடுகளை] காட்டக்கூடியதாக நான் படித்த, கேட்ட இரு கதைகளை, இந்த நீண்ட கட்டுரையின் முடிவுரையாக சுருக்கமாக தருகிறேன். உங்களின் இந்த கட்டுரை பற்றிய கருத்து, ஆக்கபூர்வமான திறனாய்வு [விமர்சனம்], எண்ணம், மதிப்பீடு வரவேற்க தக்கது.) ஒருவருக்கு அடிக்கடி வருத்தம் வந்து கொண்டே இருந்தது. அதனால் அவர் அடிக்கடி வைத்தியசாலைக்கு செல்ல வேண்டி இருந்தது. அவரும், அவரது மனவியும் இப்படி நெடுகவும் உடல்நிலை குன்றிப் போவதற்கு என்ன காரணம் என யோசித்தார்கள். இறுதியாக ஒரு 'மை' போட்டுப் பார்ப்பவரிடம் போவோம் என முடிவு எடுத்தார்கள். இவரின் குடும்பத்துக்கு என சிறு வைரவர் கோவில் உள்ளது. அந்த ம…
-
-
- 1 reply
- 369 views
-
-
- சைபர்சிம்மன் வலைப்பதிவு மூலம் பிரபலமானவர்கள் எத்தனையோ பேர் இருக்கின்றனர். இந்த பட்டியலில் 9 வயது பள்ளி மாணவி ஒருவரும் சேர்ந்திருக்கிறார். ஸ்காட்லாந்தை சேர்ந்த மார்த்தா பைனே என்னும் அந்த 9 வயது மாணவியின் வலைப்பதிவு பற்றி தான் இணைய உலகில் பேச்சாக இருக்கிறது. பள்ளியின் மதிய உணவை புகைப்படத்தோடு பகிர்ந்து கொள்ளும் மார்த்தாவின் வலைப்பதிவு மிக குறைந்த காலத்திலேயே உலகம் முழுவதும் பிரபலமாகியது. அதற்கு பள்ளி நிர்வாகம் முற்றுப்புள்ளி வைக்க முற்பட்ட போது, அதற்கு எதிராக நட்சத்திரங்கள், இணைய பிரமுகர்கள் மற்றும் இணையவாசிகளை போர்கொடி தூக்க, பள்ளியின் அந்த முடிவையே மாற்ற வைத்தது. மார்த்தா வலைப்பதிவை தொடர அனுமதிக்க வேண்டும…
-
- 1 reply
- 1.3k views
-
-
-
- 1 reply
- 1k views
-
-
" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " | " இன்று அமர்க்களமான நாள்!" என்று சொல்லிக் கொண்டு வாழ்வின் காலைப் பொழுதைத் துவங்குங்கள். எம். எஸ். உதயமூர்த்தி எழுதி வடித்த தன்னம்பிக்கை ஊட்டும், சுயசிந்தனையை தூண்டும் கட்டுரைகள் பல. சமூகத்தில் அவரின் கட்டுரைகளை வாசித்து சுயசிந்தனையோடு... முன்னேறி வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் பலர். அத்தகைய வெற்றிகளுக்கும், இளைய தலைமுறையின் வழிகாட்டுதலுக்கு தீ பந்தமாகவும் விளங்கும் டாக்டர். எம். எஸ். உதயமூர்த்தி அவர்களின் எண்ண கடலிலிருந்து ஒரு கட்டுரைத் துளி உங்கள் பார்வைக்கு... " உன்னால் முடியும் " ஒரு காலத்தில் ரோம் சாம்ராஜ்யம் புகழ்பெற்ற நாடாக, ஆட்சியாக இருந்தது. ஆனால், அதன் புகழ் நிலைபெற்று…
-
- 1 reply
- 3.6k views
-
-
வெப்கேமிரா வசதியுடன் இணையத் தொடர்பு உள்ள கணிப்பொறி உங்களிடம் இருக்கின்றதா?எச்சரிக்கையாக இருங்கள் உலகின் எந்த மூலையிலிருந்தோ நீங்கள் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். தன்னுடைய அறையில் தான் உடைமாற்றிய காட்சி எந்த ஆபாச இணையதளத்திலோ விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதைக் கேட்ட அவள் அதிர்ந்துதான் போனாள். யாரும் அத்து மீறி அந்த அறைக்குள் நுழையவில்லை? எவருக்கும் மின்னஞ்சல் வழியாகவும், எந்த புகைப்படமோ வீடியோக் காட்சிகளோ அனுப்பவில்லை? பின் தன்னுடைய படுக்கை அறைக்காட்சியை படம்பிடித்தது யார்? அது எப்படி சாத்தியமாயிற்று? புனேயில் உள்ள Asian School Of Cyber Law வில் புகார் அளித்தாள். அவர்கள் சொன்ன காரணம் அவளை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஆம் அவளது அறையில் …
-
- 1 reply
- 906 views
-
-
'அம்பானியின் வறுமை' என்னும் தலைப்பில் 'அருஞ்சொல்' இதழில் அதன் ஆசிரியர் சமஸ் இன்று எழுதியிருக்கும் கட்டுரை இது. அம்பானிக்கு மட்டும் இல்லை, எங்களுக்கும் கூட இது பொருத்தமே. ****************** அம்பானியின் வறுமை சமஸ் 20 Mar 2024 ஊரிலிருந்து சென்னைக்கு வந்த பிறகு நீங்கள் இழந்ததாக நினைப்பது எதுவும் உண்டா? இப்படி யாராவது கேட்கும்போதெல்லாம் ஒரு விஷயம் தோன்றி மறையும். ஊர்ப் பக்கக் கல்யாணச் சாப்பாடு! எது நாம் வாழும் ஊரோ அதுவே நம் சொந்த ஊர் என்று எண்ணுபவன் நான். தீபாவளி, பொங்கல் என்றால் ஊருக்குச் செல்வது, ஊரில் திருவிழா என்றால் மூட்டை கட்டிக்கொண்டு கிளம்புவது, வீட்டில் ஏதும் விசேஷ நிகழ்வு என்றால் அதைப் பிறந்த ஊரில் திட்டமிடுவது… இதையெல்லாம் முற்றிலுமாக வெறுப்…
-
- 1 reply
- 774 views
- 1 follower
-
-
ப்ரெஸ்ட் அயர்னிங் (மார்பக மெலித்தல்): ஓர் பகீர் ரிப்போர்ட்! உலகில் இன்று பல்வேறு வளர்ந்த, வளரும் நாடுகள் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளில் இருந்து அவர்களை காப்பாற்றி முன்னேற்றே பாதையில் செலுத்துகின்றன. ஆனால் ஆப்ரிக்கா போன்ற வளர்ச்சி அடையாத நாடுகளில் இருக்கும் நிலைமையே வேறு. அதில், நம் மூச்சை ஒரு நிமிடம் நிறுத்தி விடும் வகையில் தீவிரம் கொண்டது இந்த மார்பக மெலித்தல் (ப்ரெஸ்ட் அயர்னிங்). இது மத்திய மற்றும் மேற்கு ஆப்ரிக்காவில் பின்பற்றப்பட்டு வருகிறது. கேமரூன், நைஜீரியா, கினியா ரிபப்ளிக் முதலான நாடுகளும் இதில் அடங்குமாம். சிறுவயது பெண்களின் மார்பகங்களில், சூடான இரும்பு அல்லது கற்களை வைத்து, அவர்களின் மார்பக திசுக்களை அழுத்தி விடுகின்றனர். இதனால், அவள் 2 நாட்களில் …
-
- 1 reply
- 641 views
-
-
எனக்கு மிகவும் பிடித்த ஓவியாவின் கருத்துக்கள்.... http://www.youtube.com/watch?v=yPUGt9KPOjU&feature=related http://www.youtube.com/watch?v=nQ2m6vqUFEw&feature=related
-
- 1 reply
- 743 views
-
-
வேலையில் சிரமம், வீடு வந்தால் மனைவியிடம் எரிந்து விழுவது… அம்மா அப்பாவிடம் கோபம் கொள்வது…படிப்பில் பிரச்சினை; அதனால் மற்ற நேரங்களில் சோகம்…உடல் நலம் சரியில்லை; அதனால் படிப்பில் கவனம் இல்லை…காதல் தோல்வி; அதனால் வேலையில் நாட்டம் இல்லை…இப்படிக் கஷ்டப்படுபவர்களுக்கு நான் வெகுநாளாக வெற்றிகரமாக பழகும் ஒரு தத்துவத்தை பகிர்ந்து கொள்கிறேன். இதை நான் அஞ்சறைப் பெட்டி மனம் என்று அழைக்கிறேன். சமயலறையில் அஞ்சறைப் பெட்டி கண்டதுண்டா. மிளகு, சீரகம், உளுத்தம் பருப்பு, ஏலம் என்று ஐந்து அறைகள் இருக்கும். ஆனாலும் ஒன்றுக்கொன்று கலக்காமல் மணமும் மாறாமல் இருக்கும். நம் மனதும் அப்படி இருந்தால்… நம் மனதைப் பல அறைகளாக முதலில் பிரிப்போம். 1. கல்வி 2. வேலை 3. திருமண வாழ்க்கை 4. நட்பு 5. பொழ…
-
- 1 reply
- 735 views
-
-
படித்ததில் கவனத்தை ஈர்த்தது உங்கள் பார்வைக்காக.... 26.12.2010 அன்று கீழைக்காற்று புத்தக வெளியீட்டு விழாவில் பதிவர் சந்தனமுல்லை ஆற்றிய உரையை இங்கு வெளியிடுகிறோம். வினவு _____________________________________________________________________ இங்கு கூடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் சித்திரக்கூடம் என்ற வலைப்பதிவில் எழுதி வருகிறேன். பெரும்பாலும் எனது மகளைப் பற்றி, என்னை பாதித்த/ நான் பார்க்கின்ற விஷயங்களை அங்கு பகிர்ந்துக்கொள்கிறேன். இது போல பல தளங்கள் இருக்கின்றன. அரசியல், சமூக விமரிசனங்கள், நகைச்சுவை, சமையல் குறிப்புகள், குழந்தை வளர்ப்பு, சினிமா விமரிசனங்கள், தனி மனித வலைப்பதிவுகள் என்று ஏராளம் இருக்கின்றன. தமிழ்மணம் என்ற திரட்டியின் …
-
- 1 reply
- 1.3k views
-
-
நீங்கள் உங்கள் நிறுவனத்துக்கு நாணயமாக நடந்து கொள்வீர்களா? இப்படி ஒரு கேள்விக்கு நிச்சயம், ஓரளவு, மாட்டேன் என்று மூன்றுவிதப் பதில்களைக் கொடுத்தால், எல்லோருமே ‘நிச்சயமாக’ என்ற பதிலைத்தான் தேர்ந்தெடுப்பார்கள் (நடைமுறையில் ‘ஓரளவு’ என்று நடந்துகொள்ளக் கூடியவர்கள் உட்பட). எனவே இதுபோன்ற (போலியான பதில் வர வாய்ப்புள்ள) கேள்விகளைக் கேட்டு நபர்களைத் தேர்வு செய்வதை நிறுவனங்கள் விரும்பாது. ஆனால் கேள்வியைக் கொஞ்சம் சுற்றி வளைத்துக் கேட்டால் மாட்டிக் கொள்ள வாய்ப்பு உண்டு. சுற்றி வளைக்கும் கேள்வி “உங்களுக்கு வேறொரு நிறுவனத்திலிருந்து வேலையில் சேர அழைப்பு வருகிறது. நீங்கள் எங்கள் நிறுவனத்தை விட்டுச் சென்று விடுவீர்களா?’’. இந்தக் கேள்விக்கு உங்கள் பதில் என்னவாக இருக்க…
-
- 1 reply
- 741 views
-
-
அழகான கைகள் யாருடைய கைகள்? சில வருடங்களுக்கு முன்பு, வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரி ஒருவரின் வீட்டுக்குச் சென்று இருந்தேன். அவரது வரவேற்பறையில் இரண்டு கைகளின் புகைப்படம். யாரோ ஒரு புனிதரின் கைகளாக இருக்கக்கூடும் என்று நினைத்து, அதைப்பற்றிக் கேட்கவே இல்லை. அவரோடு காரில் பயணம் செய்யும்போது, அதேபோன்ற கைகளின் புகைப்படத்தை மறுபடியும் பார்த்தேன். ஆவலில் அது யாருடைய கைகள் என்று கேட்டேன். அவர் புகைப்படத்தைக் கையில் எடுத்துப் பார்க்கும்படியாகச் சொன்னார். புகைப்படத்தை அருகில் தொட்டுப் பார்த்தபோது, அது வயதான ஒரு பெண்ணின் கைகள் என்பதைக் கண்டுகொண்டேன். முதுமையின் ரேகை படிந்த நீண்ட விரல்கள். நகங்கள் சுத்தமாக வெட்டப்பட்டு இருக்கின்றன. நரம்புகள் புடைத்துத் தெரிகின்றன. யாராக இ…
-
- 1 reply
- 2.4k views
-
-
வேலை நேரத்தில் ஆபாசப்படம் பார்ப்பது உங்கள் தொழில்வாழ்க்கைக்கு எமனாகலாம். ஆனால் இது தெரிந்தும், நீங்கள் நினைப்பதைவிட அதிகமானோர் இந்த ஆபத்தில் இறங்குகின்றனர். வேலைநேரத்தில் சிறிதே இடைவெளி எடுத்துக்கொண்டு, இன்ஸ்டாகிராமில் ஸ்க்ரோல் செய்வதையும், ஷாப்பிங் செய்வதையும் ஏன் புதிய டேட்டிங் செயலியை பயன்படுத்துவதைக் கூட பலரும் ஒப்புக்கொள்வார்கள். ஆனால் ஆபாசப்படங்களை பார்ப்பது? இது நிச்சயமாக அனுமதிக்கப்படாததுதான். ஆனால், இன்றைய சூழலில் மிகவும் எளிமையாக ஆன்லைனில் அணுக முடிவதால், இது மிகவும் பரவலாகிவிட்டது என்று உளவியலாளர்கள் மற்றும் இணைய பாதுகாப்பு நிபுணர்கள் நம்புகிறார்கள். 60%க்கும் அதிகமான பேர் வேலை நாளின் போது ஆபாசபடங்களின் நுகர்வு பெருகுவது க…
-
- 1 reply
- 748 views
-
-
கூத்'தாடி' ரஜினியும் முழுத்தாடி துரோணாச்சாரியும்: ஆன்மீகஅரசியல் கோடைமழையில் தொப்பலாக நனைந்த நண்பர் ஓட்டமாக ஓடிக் குளித்துவிட்டு 'அப்பாடா' என்று அமர்ந்தார். 'ஏனப்பா! மழைலதான் நல்லா நனைஞ்சுட்டியே! தலைய தொவட்டினா போதாதா!" என்றேன் நான். 'அட நீ வேற கடுப்பக் கேளப்பாதே! நனைஞ்ச பனியன்லேர்ந்து டிடெர்ஜென்ட் சோப்புப் பவுடர் நொரவந்து ஒடம்பெல்லாம் ஒரே ஊறல்! ஒனக்கென்ன தெரியும்!' என்றார் கடுப்புடன். 'ஏம்பா! வாஷிங் மிசின்லதானே தொவைக்கிறே!', என்று கேட்டுவைத்தேன். 'பிரச்னையே வாஷிங் மிஷின்தாம்பா! ஏதோ 'Fuzzy Artificial Intelligence'னு பீத்தறேளே! அது பண்ற வேலதான் இம்புட்டும்! அந்த Intelligent கருமாந்தரம் கொறச்சலாத்தான் தண்ணி எடுக்குது. சோப்பு சரிய…
-
- 1 reply
- 1.3k views
-
-
கந்தர்வக்கோட்டை அருகே காட்டுநாவல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு. இவர் சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் கண்ணகி என்ற பெண்ணுக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊருக்கு வந்த பிரபுக்கும், கண்ணகிக்கும் பெற்றோர்கள் உறவினர்கள் முன்னிலையில் காட்டுநாவலில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. கண்ணகியை கரம்பிடித்த பிரபு, திருமண வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, முதலில் வீட்டுக்குச் செல்லாமல், தான் படித்த காட்டுநாவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மனைவியை கையோடு அழைத்துச் சென்றார். திருமணக் கோலத்தில், புதுமணத் தம்பதி பள்ளிக்கூடத்துக்கு வருவதை ஆசிரியர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். ஆசிரியர்களிடம் தன்னை அறிமுகப்படுத…
-
- 1 reply
- 1k views
-
-
கிழக்கில் சாதிக்கும் சோலை உற்பத்தி நிறுவனம் போரின் பேரழிவுகளை தமிழர் தாயகப் பகுதிகளில் ஒன்றான கிழக்கும் பெருமளவுக்கு எதிர்கொண்டது. இறுதிப் போரின் பின்னர் வன்னிப் பெருநிலப்பரப்பில் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் எவ்வாறு அதிகளவில் உருவானதோ, அதே போல் நேரடியாக போரின் தாக்கத்தால் கிழக்கிலும் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் அதிகளவில் உருவாகின. இந்த நிலையில் ஏராளமான குடும்பங்களின் வாழ்வாதாரங்கள் பெரும் சிக்கலை எதிர்கொள்ளும் நிலையில் அதனை ஓரளவுக்கு தீர்த்து வைக்கும் நோக்கில் உருவானதே மட்டு வடக்கு விவசாய உற்பத்தியாளர் சம்மேளனம் ஆகும். எல்லோரும் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம் …
-
- 1 reply
- 554 views
- 1 follower
-
-
காதலில் வீழ்வது என்பது ஒருவித ரசாயன விவகாரம். அது நம் மனித ஜீவராசியின் இனவிருத்தியை உத்தரவாதப்படுத்தும் வகையில் உடலில் தொடர்ச்சியான பலவித ரசாயன மாற்றங்களை உண்டுபண்ணுகிறது என்கின்றனர் அறிவியலாளர்கள். வியாதியை ஒத்ததுதான் காதல் ( காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந்நோய் , ஞாபகம் வருகிறதா? ) . எனவே, ஒரு நோய் ஏற்பட்டால் என்ன விதமான அறிகுறிகள் உடலில் தோன்றுமோ அதே போல, தெளிவாகத் தெரியும் உடல் ரீதியான அறிகுறிகள் காதல் நோயாலும் ஏற்படும் என்கின்றனர் விஞ்ஞானிகள். இந்த அறிகுறிகள் என்ன ? -- வியர்க்கும் கைகள், பசியின்மை ( " பாலுங்கசந்ததடி சகியோ படுக்கை நொந்ததடி" ) , முகம் உணர்ச்சிப்பெருக்கில் உப்புவது , இதயத்துடிப்பு அதிகமாதல் போன்றவை இவை . காதலுக்கு பல கட்டங்கள் உ…
-
- 1 reply
- 615 views
-
-
சித்திரம் வரைவதற்கான சில இலகுவான முறைகளை முகநூலில் பார்த்தேன் அவற்றில் சில மேலும் படங்களுக்கு https://www.facebook.com/mycreations123/photos/pcb.439406876243027/439406072909774/?type=3&theater https://www.facebook.com/mycreations123/photos/pcb.439406876243027/439406072909774/?type=3&theater https://www.facebook.com/mycreations123/photos/pcb.448964508620597/448964391953942/?type=3&theater https://www.facebook.com/mycreations123/?fref=photo
-
- 1 reply
- 2.7k views
-
-
ஓரு மனிதனுடைய இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது. ரத்தம் ஒரு நாளில் 16,80,00,000 மைல் தூரம் உடலில் பயணிக்கிறது. ஒருவன் 438 கன அடிக்காற்றை மூச்சாக உள்ளே இழுத்துக் கொள்கிறான். 750 தசைகளை அசைக்கிறான். 70,00,000 மூளை செல்களைப் பயன்படுத்துகிறான். இந்தச் செயல்களால் மனிதன் களைத்துப் போவதில்லை. ஏனென்றால் இவை எல்லாம் தன்னிச்சையாக நடக்கின்றன. இதில் நம் முயற்சி என்று எதுவும் இல்லை. நாமாக முயற்சி எடுத்துச் செய்யும் சில்லறை வேலைகளால்தான் நாம் களைத்துப் போகிறோம். ஏன்? இயற்கை, தான் செய்யும் வேலைகளுக்கு கணக்கு வைத்துக் கொள்வதில்லை. நாம் துரும்பை நகர்த்தினால்கூட கணக்கு வைத்துக் கொள்கிறோம். இயற்கை, தன் செயல்களைச் சுமையாக நினைப்பதில்லை. மனிதன் தன் பெரும்பாலான செயல்களை சுமையாகவ…
-
- 1 reply
- 620 views
-