Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கவின் / வீரகேசரி இணையம் 11/11/2011 10:12:20 AM ஈராக்கில் சதாம் ஹுசைனின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதன் பின்னர் ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் நோக்கத்திற்காக அண்டை நாடுகளுக்கு கடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய கிழக்கில் கல்விக்கான சமூக மாற்றம் (Social Change for Education in the Middle East) என்ற அமைப்பினால் நடத்தப்பட்ட ஆய்வின் மூலமே திடுக்கிடும் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இவ் ஆய்வறிக்கை…

  2. அண்மையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஓர் ஆலயம் திறந்தனர். அந்தக் கோயிலின் பெயர், சதிமாதா மந்திர். எழுத்தறிவு எட்டாத ஒரு கிராமத்தில், நடுத்தர வயதுடைய ஓர் ஆடவர் இறந்தார். அவரது சடலம், மயானம் சென்றது. தீ மூட்டினர். அந்தத் தீயில், உயிரோடு அவருடைய மனைவியும் தீக்குளித்தாள். இல்லை. தள்ளப்பட்டாள். இதனை உடன்கட்டை ஏறுதல் என்றனர். ஆதிகாலம் தொட்டு வளர்ந்து வந்த இந்தக் கொடிய பழக்கத்திற்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ராஜாராம் மோகன்ராய் போன்ற சமூக ஆர்வலர்கள், அதற்காகப் போராடினர். எனவே, உடன் கட்டை ஏறும் ‘சதி’ பழக்கம், தடை செய்யப்பட்டது. கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏறுகிறாள். மனைவி இறந்தால் கணவன் தீக்குளிக்கிறானா? இல்லை. அவன் இன்னொரு திருமணம் கூடச் செய்து கொள்ளலாம். க…

    • 0 replies
    • 990 views
  3. சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது 110 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த கொரோனா தொற்றுக்கு இதுவரை 4200 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 24,000 பேருக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த கொரோனா தொற்றுக்கு முதலில் சீனாவில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பிற நாடுகளில் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது. இத்தாலி, இரான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் சீனாவிற்கு அடுத்து அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தொற்று எந்தளவு பரவி வருகிறது என்பதை வரைப்படங்கள் மூலம் இங்கே உங்களுக்கு விளக்குகிறோம். உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அண்மைய அறிக்…

    • 2 replies
    • 990 views
  4. One of the Libyan rebels credited with capturing ex-leader Muammar Gaddafi last year has been buried in his hometown of Misrata. Omran Ben Shaaban was kidnapped, shot and tortured by people who many in Misrata believe were supporters of the late dictator. The 22-year-old died in France, where he was receiving medical treatment for his injuries. His body was flown back to Libya, met by hundreds of mourners. In Misrata, protesters called for the government to avenge his death. Mr Shaaban was kidnapped by armed men in July and held for 50 days in the town of Bani Walid, a former Gaddafi stronghold that lies south-east of the capital Tripoli. He …

  5. 03 ஜூலை 2011 திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் இதுவரை ரூ. 1லட்சம் கோடி அளவிலான நகைகள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே பணக்கார கோவிலாக கருதப்படும் திருப்பதியை மிஞ்சியுள்ளது பத்மநாபசாமி கோவில். திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் 6 பாதாள ரகசிய அறைகள் உள்ளன. திருவிதாங்கூர் சமஸ்தான ராஜ குடும்பத்தினர் வசம் இந்தக் கோவிலின் நிர்வாகம் உள்ளது. இந்த நிலையில் பாதாள அறைகள் பல நூற்றாண்டுகளாக திறக்கப்படாமல் இருப்பதால் அதைத் திறந்து பார்த்து உள்ளே என்ன இருக்கிறது என்பதைக் கண்டறிய வேண்டும் என்று கோரி சுந்தரராஜன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த உச்சநீதிம…

  6. துபாய் கட்டடத்தில் தீ நான்கு இந்தியர்கள் பலி துபாய்:துபாயில் புதிதாக கட்டப்பட்டு வரும் 37 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு இந்தியர்கள் பலியாயினர்.துபாயில் 37 மாடிக் கட்டடம் ஒன்று புதிதாக கட்டப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இந்திய தொழிலாளர்கள் 350 பேர் கட்டடத்தை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கட்டடத்தின் மேலிருந்து நான்கு மற்றும் ஐந்தாவது மாடிகளில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து காரணமாக அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். தீயிலிருந்து தங்கள் உயிரைக் காத்துக் கொள்வதற்காக மாடியிலிருந்து குதித்த இரண்டு பேர் உட்பட நான்கு இந்தியர்கள் உயிரிழந்தனர். மற்றொருவர் மாடியிலிருந்து இறங்க கிரேனை பயன்படுத்தியபோது, அதிலிருந்த ஒ…

  7. அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிகை உலகில் அதிக செல்வாக்கு பெயர் பெற்ற பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பிரபலங்களில் முதல் 100 பேரை தேர்ந்தெடுத்து பட்டியலிட்டுள்ளது. அவர்கள் சார்ந்திருக்கும் துறை வாரியாக இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 4-வது ஆண்டாக இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அரசியல் மற்றும் பொது சேவை பிரிவில் செல்வாக்குமிக்கவர்களாக வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி இடம் பிடித்துள்ளார். தொழில் அதிபர்கள் மற்றும் கோடீஸ்வரர்களில் இந்திய வம்சாவழியை சேர்ந்த தொழில் அதிபர் லட்சுமிமிட்டல் இடம் பிடித்திருக்கிறார். உலக அமைதி மற்றும் நன்மைக்காக பாடுபடும் மதத்தலைவர்கள் வரிசையில் போப் ஆண்டவர் பெனடிக் இடம் பெறுகிறார்…

    • 2 replies
    • 990 views
  8. எம்.ஜி.ஆர். சிலையை சேதப்படுத்தியது ஒட்டுமொத்த தமிழர்களின் மனதை புண்படுத்துகின்ற அநாகரிக செயல்: ஜெயலலிதா கண்டனம் யாழ்ப்பாணத்தில் எம்.ஜி.ஆர். சிலையை சிறிலங்கா இராணுவத்தினர் தார்பூசி சேதப்படுத்தியமைக்கு தமிழக முன்னாள் முதல்வரும் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள வல்வெட்டித்துறையில் நிறுவப்பட்டுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலை மீது சிங்கள இராணுவ வீரர்கள் தார் பூசி சேதப்படுத்தியுள்ளதாக பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தியைப் பார்த்து தாம் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இந்த அநாகரிகச் செயல், உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த த…

    • 0 replies
    • 990 views
  9. பாரீஸ் நகர வீதிகளில் பிணங்களாக குவிப்போம்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி சவால் டமாஸ்கஸ்: பாரீஸ் நகர தெருக்களில் பிணங்களாக குவிக்கப் போகிறோம் என்று பிரான்ஸை சேர்ந்த தீவிரவாதி கூறும் வீடியோவை ஐஎஸ்ஐஎஸ் வெளியிட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் பிரான்ஸை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி ஒருவர் தனது முகத்தை துணியால் மறைத்துக் கொண்டு சிரியாவைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரை மலை உச்சியில் முழங்காலிட வைத்துள்ளார். பின்னர் அந்த தீவிரவாதி ராணுவ வீரர் பின்னால் நின்று கொண்டு அவரின் தலையில் துப்பாக்கியால் சுட்டார்.இதில் பலியான வீரரை தீவிரவாதி மலை உச்சியில் இருந்து கீழே தள்ளிவிட்டார். அதன் பிறகு தீவிரவாதி கூறுகையில், பிரான்ஸ் தலைநகர் பாரீஸின் தெருக்களில் பிணங்களா…

    • 3 replies
    • 990 views
  10. இப்போதெல்லாம் சினிமாவில் நடிக்க வரும்போதே முதல்வர் நாற்காலிக் கனவுடன்தான் வருகிறார்கள் நடிகர்கள் என முன்பு ஒருமுறை டாக்டர் ராமதாஸ் கமெண்ட் அடித்திருந்தார். நேற்றைய மாலைப் பத்திரிகைகளைப் பார்த்தவர்கள் அனைவரும் ராமதாஸின் கூற்றை ஒப்புக் கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டிருப்பார்கள். பிரபலமான அந்த மாலை நாளிதழில் பெரிய அளவுகளில் பல வண்ண விளம்பரங்கள் இடம் பெற்றிருந்தன. இவை அனைத்துமே இரு நடிகர்களுக்காக வழங்கப்பட்டிருந்தன. ஒருவர் நடிகராகவும் அரசியல்வாதியாகவும் டபுள் ரோல் செய்து கொண்டிருக்கும் விஜய்காந்த். மற்றொருவர் மாவட்டம் தோறும் இப்போதே ரசிகர் மன்ற தலைமை அலுவலகம் கட்டிக் கொண்டிருக்கிற விஜய். இந்த இரண்டு விளம்பரங்களுமே கட்சிக்காரர்கள் மற்றும் ரசிகர்களின் பெயர்களி…

  11. 01 NOV, 2023 | 04:31 PM (காலித் ரிஸ்வான்) அரபு நாட்டுத் தலைவர்கள் உச்சிமாநாட்டின் அவசர அமர்வொன்று நவம்பர் 11ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அரபு லீக்கின் இந்த 32வது அமர்வு சவூதி அரேபியாவின் தலைமையிலேயே நடைபெறவுள்ளது. காசா பகுதியில் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பற்றி கலந்துரையாடும் நோக்கோடு உச்சிமாநாட்டை நடாத்துமாறு பாலஸ்தீன் மற்றும் சவூதி அரேபியாவில் இருந்து திங்கட்கிழமை (30) தலைமைச் செயலகம் அதிகாரபூர்வ கோரிக்கையை பெற்றதாக அரபு லீக்கின் உதவிச் செயலாளர் தூதர் ஹொசாம் சகி தெரிவித்தார். கெய்ரோ நகரில் கடந்த ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி அரபு லீக் உச்சி மாநாடு நடைபெற்றதை தொடர்ந்து 20 நாட்களுக்குப் பிறகு…

  12. பிரதமர் மன்மோகன் சிங்கின் அண்ணன் ஆட்டோவில் பிரதமர் இல்லத்திற்கு வந்து இறங்கியதால் அவரை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் பிரதமரே வாசல் வரை வந்து தனது அண்ணனை உள்ளே அழைத்துச் சென்றார். பிரமதரின் அதிகாரப்பூர்வ இல்லம் டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில உள்ளது. பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் உள் பிரதமரின் வீட்டுக்கு சமீபத்தில் 3 பேர் காரில் வந்து பரபரப்பை ஏற்படுததினர். இதையடுத்து பாதுகாபபு மேலும் அதிகரிக்கப்பட்டது. இந் நிலையில் வயதான சீக்கியர் ஒருவர் ஆட்டோவில் வந்து பிரதமர் வீட்டு வாசலில் இறங்கினார். பாதுகாப்பையும் மீறி ஆட்டோ உள்ளே வந்து விட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ஆட்டோவை தடுத்து நிறுத்திய பாதுகாவலர்கள் ஆட்டோவில் இருந்து இறங்கிய பெரிய…

  13. வியாழக்கிழமை, 28, ஏப்ரல் 2011 (23:29 IST) ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் நாளை நடக்கிறது. அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் சுந்தர்ராஜ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘’திருக்கோவிலூர் அரசு மருத்துவமனை, மாவட்ட குடும்ப நல செயலகம், மணலூர்பேட்டை அரிமா சங்கம், மதி அகாடமி ஆகியவை இணைந்து நாளை (29ம் தேதி) திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வாசெக்டமி எனப்படும் ஆண்களுக்கான நவீன குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் நடத்துகிறது. திருக்கோவிலூர், முகையூர், ரிஷிவந்தியம், திருவெண்ணைநல்லூர், தியாகதுருகம், ஆகிய…

  14. ரஷ்யாவின் ஆயுத உதவியை விட குறைந்தளவில் ஆயுதங்களைப்பெறும் உக்ரைன். நட்பு நாடுகளிடம் இருந்து குறைந்தளவிலான ஆயுதங்களே உக்ரைனுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் 2024 ஆம் ஆண்டு உக்ரைனுக்கு மிக மோசமாக இருக்கும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ஆண்டு மார்ச் மாதம், ஐரோப்பிய நட்பு நாடுகளிடம் இருந்து ஒரு மாதத்திற்கு 5 இலட்சம் குண்டுகளை உக்ரைன் கோரிய நிலையில் அது கிடைக்காததால் ஒரு மாதத்திற்கு வெறும் 110,000 குண்டுகளையாவது வழங்குமாறு கோரியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் ஒரு வருடத்திற்குள் ஒரு மில்லியன் குண்டுகளை உறுதியளித்த நிலையில் ஐரோப்பிய படைகளின் கையிருப்பில் இருந்து நவம்பர் இறுதிக்குள் 300,000 குண்டுகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்…

  15. மின்சார மனிதன் !!! அதிசயம் ஆனால் உண்மை !!! History சானல் ஒளிபரப்பிய உலகின் அதிசய மனிதர்கள் பற்றிய ஒரு வீடியோ. இப்படியும் அதிசய மனிதர்கள் உலகத்துல இருக்காங்களான்னு ஆச்சர்யம் யாருக்கும் வரும். இந்தியா , கொல்லம் என்னும் பகுதியை சார்ந்த "மோகன்" என்பவர் பற்றிய வீடியோ அது.. பார்க்க பார்க்க மின்சாரம் பாய்வது போன்ற உணர்வு.. இவர "கரண்ட் மோகன்" என்று செல்லமாக கூப்பிடுறாங்க.. இவரோட உடம்புல எவ்வளவு மின்சாரம் பாய்ச்சினாலும் இவருக்கு ஒண்ணுமே ஆகிறது இல்ல.. இவரை பற்றி கேள்வி பட்டு, இதன் உண்மை நிலையை பற்றி அறிய "History சேனல் " ல இருந்து ஒரு குழு வந்து , இதை நிரூபித்து , உலகத்துக்கு இந்த அதிசய மனிதரை அறிமுக படுத்தியது.. இதுல …

    • 1 reply
    • 990 views
  16. அவுஸ்திரேலியாவில் இன்று பொதுத் தேர்தல் அவுஸ்திரேலியாவில் இன்று சனிக்கிழமை (03.05.2025) பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சியின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்த நிலையில் பிரதமரைத் தெரிவு செய்வதற்காக தேர்தல் இடம்பெறுகிறது. முன்னதாக பிரதமர் அந்தோணி அல்பனீஸ், வீட்டுவசதி பற்றாக்குறையை சமாளிக்க அடுத்த 5 ஆண்டுகளில் 12 இலட்சம் வீடுகள் கட்டப்படும் என கடந்த 2023 ஆம் ஆண்டு உறுதியளித்தார். ஆனால் அது தொடர்பான நடவடிக்கைகள் வேகமாக மேற்கொள்ளப்படவில்லை. எனவே ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சிக்கு இந்த தேர்தல் பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே திர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி கூட்டணிக்கு ஆதரவு …

  17. ஒரு வருடத்திற்கு முன் கண்டு மனம் சிதைந்த காணொளியின் தொடர்ச்சிதான் இது. நீளம் மட்டும் அதிகம், அதனால் சிதறிக்கிடக்கும் பிணங்களின் எண்ணிக்கை கூடுதல். பிணங்களை ரசித்து படம் பிடிக்கும் கேமராவுக்குள் படபடவென பொரியும் துப்பாக்கிக் குண்டுகளின் ஒவ்வொரு ஓசைக்கும் ஒரு உயிர் பறிபோயிருந்த அவலத்தை மனது சீரணிக்க மறுக்கிறது. கடந்த ஆண்டே வெளிவந்திருந்த இதன் ஒரு நிமிட காணொளிப் பகுதி குறித்து வவுனியாவில் சந்தித்த தமிழரிடம் கேட்டபோது, ”அப்படிக் கொல்லப்பட்டது புலிகள் அல்ல, கிளிநொச்சியில் பிடிபட்ட சாதாரண சனங்களைத்தான் அப்படி சுட்டுக் கொன்றனர்” என்று கூறினார். (அந்த உண்மை காணொளியை எடுத்த சிங்களப் படை வீரன் எதிர்காலத்தில், ஏதோ ஒரு கட்டத்தில் சொல்லும் போது தெரியலாம்) சாதாரண மனிதர்களையே இ…

  18. பிரான்ஸ் முதற்கட்ட பாராளுமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்.. அதிபர் மக்ரோனின் கட்சி மரண அடி வாங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டபடியுள்ளன. அதேவேளை பிரான்ஸ் தேசியவாத வலது சாரிகள் அமோக வெற்றிகளை பெற்று வருகின்றனர். ஏலவே அமெரிக்காவில் பைடனின் உளறல் தேர்தல் பேச்சு அவரின் வெற்றியை கேள்விக்குறியாக்கிவிட்டுள்ள நிலையில்.. மேற்குலக புட்டின் எதிர்பாளர்கள் நடப்பு தேர்தல்களில் மக்களால் நிராகரிக்கப்பட்டு வரும் நிலையே காணப்படுவதோடு.. தேசியவாதம் எழுச்சி பெற்று வருகிறது. https://www.bbc.co.uk/news/live/cn087x77g1dt

  19. வட்ஸ் அப் (Whats App) நிறுவனத்தை 16 பில்லியன் அமெரிக்க டொலருக்கு ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. மொபைல் ஃபோன் பயன்படுத்துவோர் பலருக்குத் தெரிந்திருக்கும் ஒரு வார்த்தை வட்ஸ் ஆப். குறுந்தகவல், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்ள பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்படும் செயலி (App) தான் இந்த வட்ஸ் அப். தினமும் கிட்டத்தட்ட 10 இலட்சம் பேர் வட்ஸ் அப் செயலியில் இணைகிறார்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஃபோனில் இணைய சேவை இருந்தால் எந்த நாட்டில் இருக்கும் நண்பரையும் இலவசமாகத் தொடர்பு கொள்ளலாம் என்ற நிலையில், வட்ஸ் அப்பின் புகழ் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. வட்ஸ் அப் வெளியான சில வருடங்களுக்கு பின்னரே ஃபேஸ்புக் நிறுவனம…

  20. பாலியல் பலாத்கார சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற போர்க்களமான காட்சிகளை அமெரிக்க ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்ட நிலையில் தற்போது அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவித்திருக்கிறது. அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் பேட்ரிக் வென்ட்ரில் கூறுகையில், டெல்லியில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரமான சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. அந்தப் பெண்ணுக்காகவும் அவர்தம் குடும்பத்தினருக்காகவும் பிரார்த்திக்கிறோம். இந்த சம்பவமானது இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் பாலின ரீதியான வன்முறைக்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது என்று கூறியுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=72682&category=IndianNews&l…

  21. வாடிகன் நகரில் மேலோங்கும் ஓரினச்சேர்க்கை புனித தலமாய் கருதப்படும் வாடிகன் நகரம் ஓரினச்சேர்க்கைகளால் நிறைந்துள்ளது என முன்னாள் சுவிஸ் காவல் உறுப்பினர் வருத்தம் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 5ம் திகதி இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,பல்லாண்டுகளுக்கு முன்னர் வாடிகனில் காவல் உறுப்பினராக இருந்தபோது பல முறை கார்டினல்களாலும், ஆயர்களாலும்,குருக்களாலும்,பிற அதிகாரிகளாலும் ஓரினச்சேர்க்கைக்கு தூண்டிவிடப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் 20 மதகுருக்கள் என்னை தூண்டிவிடும் நோக்கில் சில்மிஷ கோரிக்கைகளை விடுத்து ஓரினச்சேர்கையில் என்னுடன் ஈடுபட முயன்றுள்ளனர். இவ்வகை ஓரினச்சேர்க்கையாளர்கள் மதகுரு என்ற போர்வையில் மக்களை வழிநடத்துபவன் போல் போலி வேடமிட்டு பதவி …

  22. T.M. சௌந்தரராஜன் (87) மூளை நரம்புத் தொகுதில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ஞாபக சக்தி கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. http://www.indiaglitz.com/channels/tamil/article/54516.html

  23. Started by நவீனன்,

    தருணங்கள் 2016 2016-ன் தருணங்கள் இவை. உலகெங்கும் இந்த ஆண்டில் எவ்வளவோ நடந்திருக்கின்றன என்றாலும், வழக்கம்போல இந்தியப் பார்வையில் நம்மை அதிகம் கவனிக்கவைத்த, கலங்கவைத்த, நெகிழவைத்த மிகச் சில தருணங்களை மட்டும் இங்கே தொகுத்திருக்கிறோம். 2015 தருணங்களில், ஏகாதிபத்தியமும் பயங்கரவாதமும் நடத்தும் பயங்கர மோதல்களின் இடையில், சாமானிய மக்களின் வாழ்க்கை எப்படி சிக்கிச் சின்னாபின்னமாகின்றன என்பதைக் குறிப்பிட்டிருந்தோம். 2016-ல் கூடவே, வலதுசாரி எழுச்சியும் அவற்றுடன் சேர்ந்திருக்கிறது. சாமானிய மக்கள் இந்தப் பூவுலகை நம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும் என்றால், 2017-ல் நாம் செய்ய வேண்டிய காரியங்கள் நிறையவே இருக்கின்றன. பொறுப்புணர்…

  24. 48 வருடமாக பிரிட்டனில் வாழ்ந்த பெண்ணுக்கு வெளியேறும் அச்சுறுத்தல் bbc 48 வருடமாக பிரிட்டனில் வாழ்ந்த பெண்ணுக்கு வெளியேறும் அச்சுறுத்தல் பிரிட்டனில் 48 வருடங்களாக வாழ்ந்துவரும் ஒரு பெண்ணை நாட்டைவிட்டு வெளியேற வேண்டிவரும் என்று உள்துறை அலுவலகம் எச்சரித்துள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் 48 வருடங்களாக வாழ்ந்துவரும் பெண் ஒருவரை தொடர்பு கொண்ட பிரித்தானிய உள்துறை அலுவலகம், குறித்த பெண் தற்போது சட்டவிரோத குடியேறியாக கருதப்படுவதாகவும், ஆதலால் அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டி ஏற்படலாம் எனவும் அறிவித்துள்ளது. லன்காஷயரில் - பேர்ன்லி என்ற இடத்தை சேர்ந்த வின்னி பேர்க்கின்ஹெட், 1967 இல் மலேஷியாவிலிருந்து தனது தாயுடன், தாயின் கடவுச்சீட்டில் பதியப்பட்டு, அவருடன் வந்துள்ளார். அண்மையி…

  25. நடுக்கடலில் மாயமான மலேசிய விமானம்..! வெளியாகிய திடுக்கிடும் தகவல் எட்டு ஆண்டுகளுக்கு முன், நடுக்கடலில் மாயமான ‘மலேசியா ஏர்லைன்ஸ்’ விமானத்தை, அதன் விமானிகள் திட்டமிட்டு கடலில் மூழ்கடித்திருக்கலாம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. ஆசிய நாடான மலேஷியாவின் கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் பீஜிங் நகருக்கு, மலேஷிய விமான நிறுவனத்தின் விமானம் இயக்கப்பட்டது. இந்த விமானம், மார்ச் நடுக்கடலில் மாயமானது. இதில் பயணித்த பெரும்பாலானோர் சீனாவைச் சேர்ந்தவர்கள். மாயமான விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடந்து வந்தது. ஆனால் பெரிய அளவில் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில், கிழக்கு ஆப்ரிக்க நாடான மடகாஸ்கரில் ஒரு மீனவர் வீட்டில் இருந்து, விமானத்தின் கதவு ஒன்று சமீபத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.