Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வீட்டுக்கு மேல் போர் விமானங்கள் பறக்க குழந்தைகளை இழுத்துக்கொண்டு நீங்கள் ஓடி ஒளியும்போது... கண்ணெதிரில் உங்கள் வீட்டுப் பெண்கள் கற்பழிக்கப்படும்போது... உங்கள் சகோதரன் சுட்டுக் கொல்லப்படும்போது... பட்டினியால் உங்கள் பெற்றோர் இறக்கும்போது... அப்போதுதான் போர் என்பது புரியும் எனில், அதுவரைக்கும் தமிழர்களே கிரிக்கெட் பாருங்கள். அடுத்த தேர்தல் வந்துவிட்டது வரிசையில் நின்று வாக்களியுங்கள். ---------------------------------------------- பயணத்தில் உங்கள் இருக்கையில் இன்னொருவர் அமர்ந்துகொண்டு எழ மறுத்தால் என்ன செய்வீர்கள்? சாலையில் உங்கள் வாகனத்தை இன்னொரு வாகனம் இடித்துவிட்டால் என்ன செய்வீர்கள்? உங்கள் குழந்தையைப் பள்ளி ஆசிரியர் காயம…

  2. இருளாய்க் கிடந்த எம்வானில் இளம் பௌர்ணமியாய் நீ வந்தாய் முகில்மூடிக் கிடந்த எம்வானில் முழுச் சூரியனாய் நீ வந்தாய் இலையுதிர்ந்து கிடந்த எம்தோப்பில் இனிய வசந்தமாய் நீ வந்தாய் பாழாய்க் கிடந்த எம்தோப்பில் பருவ மழையாக நீ வந்தாய் தவமாய்க் கிடந்த எம்வாழ்வில் தெய்வ வரமாக நீ வந்தாய் வழிதேடிக் கிடந்த எம்வாழ்வில் ஒளி விளக்காக நீ வந்தாய் http://gkanthan.wordpress.com/index/other/villakku/

  3. கருணாநிதிக்கு நோபல் பரிசு... ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> தமிழக முதல்வர் கருணாநிதியின் எழுத்துக்களை ஆங்கிலப்படுத்தி, அவற்றை நோபல் கமிட்டியின் பரிந்துரைக்காக அனுப்ப 12-பேர் அடங்கிய ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவுக்கு பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜி.திருவாசகம் தலைவராம். இதற்கு ரூ. 10 லட்சம் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.

  4. நலமறிய ஆவலுடன்....., "அன்புள்ள அக்கா, நலம் நலமறிய ஆவல்" அம்மாவுடன் கதைத்தேன் அக்காவுடன் சண்டை பிடித்தேன் பேச்சுவார்தைகள் நடக்கிறது புலிகளின் நிலவரம் போர்ப்பிள்ளைகளின் துணிகரம் என இணையஞ்சல் ஊடாய் நேசமொடு - என் நெஞ்சில் இடம் கொண்டான். "ஊருக்கு வா அக்கா உனைக்காண வேண்டும் போருக்குள் நின்று வன்னி பாருக்கு அறிமுகமாய் ஆனகதை சொல்ல ஊருக்கு வா அக்கா" அடிக்கடி அஞ்சல் எழுதிய புலி. பூவுக்கும் அவனுக்கும் பொருத்தம் நிறைய. அத்தனை மென்மையவன். போராளிப் பிள்ளையவன் போர்க்களம் புடமிட்ட புலியவன். புலம்பெயரா உறுதியுடன் பலம்பெற்ற தம்பியவன் ஞாபகத்தில் நிற்கின்றான் - என் நினைவகத்தில் பத்திரமாய். அம்மாவின் கதை அண்ணாவின்…

  5. Started by pakee,

    மாலையில் மரணம் என்று தெரிந்தும் கூட காலையில் கண்ணீர் வடிப்பதில்லை பூக்கள்...

    • 7 replies
    • 1.3k views
  6. தலைவனுன்னா… மக்கள் விட்டு எட்ட நின்று.. குளிரூட்டி வாகனத்தில் தான் மகிழ்ந்திருந்து.. வெயில் காய்ந்த புழுதி குளித்த வியர்வை வழிந்தோடும் மக்கள் முன்.. கசங்காத வெள்ளை வேட்டி மேடை தரிசனம் தந்து.. வலு விழந்த வாழ்விழந்த சொந்தங்கள் முன்.. நாலு வார்த்தை நயவஞ்சகமாய் உதிர்த்து… எதிரி தாழ் பணிந்து சூழ்ச்சி மகுடம் சூடி… கேட்ட கேள்வி நேரிடைப் பதில் இன்றி மேவிப் பேசி.. வாய்கிழிய தத்துவம் பேசி… புத்திசீவித்தனம் என்று தலைக்கன ரவுடீசம் செய்து நடப்பவனல்ல..! தானைக்கும் தலைவன்… தமிழர் தரணிக்கும் பரணிக்கும் சொந்தக்காரன் தமிழர் தளபதி… தகுதி விகுதி என்றின்றி… தமிழ் தாயை தரையில் வந்து அவள் நிகராய் நின்று கையெடுத்து வணங்கி.. அவள் புரியும் மொழி கொண்டு …

  7. இணையத் தளத்தில் அறிமுக மானாய் நண்பன் என்றழைத்து நட்பை மட்டுமே பரிமாறினாய்... நாம் நம்மை பார்க்க வில்லை யென்றாலும் பாசமாய் அழைத்தாய் சட்டைப் பையின் கனத்தைப் பார்த்து பழகும் இவ்வுலகில் என் மனதின் கனத்தையும் பகிர்ந்துக் கொண்டாய்... என் துயரில் ஆறுதல் சொல்லும் ஓர் தோழியாய் என் தவறில் என்னை கண்டித்திடும் எந்தையாய் இருந்தாய்... தன் தேவைகளுக்கே இறைவனை நாடுவோர் மத்தியில் எனக்காய் ‍ என் தேவைக்காய் உபவாஷீத்து வேண்டுதல் செய்தாயே... நீ என்னுடன் பழகியது சில நாளென்றாலும் நீ என்றும் நான் மறவா எந்தன் பிரியமானத் தோழி தானடி… நான் என் வாழ்வின் சாதனையில் உயரத்தில் இருந்தாலும் நான் ஏறிய‌ படிக்கட்டுகளாய் என்றும…

    • 3 replies
    • 1.3k views
  8. சின்ன பிள்ளைகளை சிறிலங்கா படை பிடிக்கலாமோ....??? ஏழிரண்டு வயசினிலே ஏ.கே.யை தூக்குகிறாய் யார் பெற்ற பிள்ளையோ காப்பரணில் நிக்கிறய்.... ஏறெடுத்து பார்கலயே ஏனோ உலகம் உனை காணலயோ...??? பிள்ளை பிடிகாறனிடம் பிள்ளை நீ சிக்கினாயோ...??? பாசமான உறவிழந்து பாதகர் படையினிலே பாவி நீ நிக்கிராயோ...??? சின்ன வயசுனக்கு என்ன ஏதறிவாய்...??? ஏனோ எல்லையிலே காவலுக்கு உனைவிட்டார்...?? காவு உனை கொடுக்க காவலுக்கு விட்டனரோ....??? மா பாவிகளை எண்ணையிலே மனசு கொதிக்குதய்யா... எம் வேங்கை எதிர்பதற்கு ஏய் பிள்ளாய் உனை எதற்கு....?? காவலுக்காய் உனை வந்து கட்டி வைத்தனரோ...??? அவர் தம்பி நீயென்று அறியாமால் விட்டனரோ....??? அறிந்தால் உனைய…

  9. நான் இராட்சதன்.... பூப்பொன்ற மனங்களை புரியாததாலா நான் இராடசதன்... புரிந்த மனங்களை வெளி மொழியாததாலா நான் இராட்சதன்.. கறந்த பாலாய் கண்ணுற்ற உன் காதலை காப்பாற்ற முடிந்தும் கல்லாக இருந்ததாலா நான் இராட்சதன்.. கல்லறை புகும் முட்டாள் காதலென காதலை இகழ்ந்து மென்மை அறியாததாலா நான் இராட்சதன்.. நண்பா.. உன் காதலை ..உலகுக்கு உணர்த்த உயிர்விட்ட நீயும் உன் காதலியும் இழந்தபோது உலகம் சொல்கிறது.. முட்டாள் காதலர்கள் என்று.. இல்லை இப்போது இராட்சதன் நான் சொல்கிறேன்.. காதல் அற்புதமானது.. காக்கப்படவேண்டியது சேர்த்துவைக்கப்படவேண்டியது.. இரக்கப்படவேண்டியது.. உதவவேண்டியது.. உணரவேண்டியது..ஆனால் உயிர்விட வேண்டியது அல்ல …

  10. [size=5]தமிழன் என்று சொல்லித் தலை நிமிர்ந்தென்ன தரணி முழுவதும் பரந்திருந்தென்ன தனக்கென நாடு தரணியில் தமிழனுக்கு இல்லையே பரணி பாடிப் பகை முடித்தென்ன போர்க்களம் கண்டு பகை முடித்தென்ன பொட்டல் வெளிகூட எமக்கென இல்லையே அடிமை விலங்கை அறுத்திட எண்ணி அத்தனை வீரரும் ஆகுதியாயினர் சுற்றம் துறந்து சுகங்கள் துறந்து சூளுரைதே சூழ்பகை வெல்ல தேசம் காக்க தம்மை ஈந்தனர் எத்தனை எத்தனை ஆயிரம் வேங்கைகள் நித்தமும் தம்மை நெக்குருக்கியே நேசத்துடன் தம் தேசம் காத்திட நெருப்பாற்றில் நீச்சல் போட்டனர் தற்க்கொடையாளராய் தம்மை ஈந்து தரணியில் தமக்கெனத் தடம் பதித்திட கடற் புலிகளாய் கரும்புலிகளாய் காரிருளிலும் காவியம் படைத்தனர்[/size] [size=5]எத்தனை ஆண்…

  11. Started by selvam,

    2007 ம் ஆண்டை மனமுவர்ந்து வரவேற்போம். மலரும் ஆண்டதனில் தமிழினத்தின் விடுதலையை ஒற்றுமையாய் வென்றெடுப்போம். யாழ்கள உறுப்பினர் அனைவருக்கும் எனது மனமகிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

  12. சூர சம்கார சுதந்திரச்சிற்பிகள் அதிகாலை அரும்பாகி அந்தியிலே சருகாகும் ஆழகான மலரும் அல்ல மலர் சூடி மணமேடை மணக்கோலம் தான்காணும் மங்கலம் இவர்க்கில்லை காண் உயிரோடு உயிர்ப்பூவை உணர்வோடு ஒருங்காக்கி விதையாக விழுகின்றார் பார் இவர் உயிர்மீது தமிழீழம் உருவாகி வரும்வேளை எதிர்பார்க்கும் இளவேனில்கள் கருவோடு திருவாக உருவாகி வரவில்லை இரவோடு உருவானார்கள் இவர் தெருவுக்குள் விளையாடி பருவத்துக் கனவெல்லாம் உருவற்று உருக்கிட்டார்கள் மருவுற்ற மனங்களில் செருவுற்ற சேதிகள் விரவிட்ட வி~வித்துக்கள் எங்கும் பரவிட்ட பாதிப்பில் பாசறை புகுந்திட்ட உதயத்து விடிவெள்ளிகள் தேனான நிலவுகள் தினம் தோய்ந்து எழும்ப இவர் தேகத்தில் துடிப்புமுண்டு வானத்து ந…

  13. Started by yakavi,

    என் அன்பே! !! முழு நிலவான உன்னை பற்றி ஒரு கவிதை எழுத முயற்சிக்கிறேன். என் மேசை எங்கும் வார்த்தைகள் நட்சத்திரங்களாய் கொட்டி க்கிடக்கின்றன. என் அன்பே! என் வெளிச்சம். உன் காதல் எனக்கு காவல். உன் பேச்சு. .... எனக்கு இன்பம் உன் குரல். .. என் தேடல். உன் நலம் என் நிம்மதி. உன் நிம்மதி என்சந்தோசம். உன் உயிர் அது என் உயிர். என் அன்பே. ........

    • 1 reply
    • 1.3k views
  14. தாயே நீ உறங்கு...... பார்வதி அம்மாவின் அஞ்சலிக் கவிதை..... தாயே கண்ணுறங்கு..... தமிழர் மானம் காத்த சிசுவைத் தந்தவளே நீயுறங்கு....... உன் ஓரணுவில் தமிழை நிமிர வைத்தவளே நீயுறங்கு..... நீ இறந்தாலும் எம் மனதில் ஒலிக்குதம்மா தாலாட்டு....... நீ இறக்கவில்லை எம் மனதில் பிறக்கின்றாய் இப்போது....... பிற நானூற்றுக கதையெல்லாம் நம் பிடரியில் உறைக்கவில்லை...... நீ பெற்ற வரலாற்றுக் காவியம் தான் தமிழர் மனங்களையே வென்றது....... நீயோர் வீரத்தாய்..... வீரனைப் பெற்றெடுத்தாய்........ வாழ்வைத் துறந்தாலும் உன் வல்வை மண்ணில் விதையாய் விழுந்துவிட்டாய்....... நீ எரிந்து மறைந்தாலும் உன் நினைவு எம்மனதில் என்றும் கொழுந்த…

  15. அழுகை நிறுத்தியெழு.... ஈழத் தமிழா ஈழத் தமிழா- நீ இன்னும் அழுவதா...? இந்த இன்னல் தாங்கி தாங்கி இதயமமுடைவதா....?? அன்னை மண்ணை இழந்து நீயும் அகதியாவதா..?- அந்த அன்னியத்து சிங்களங்கள் ஆட்டம் இடுவதா...? இத்தனை நாள் நீயிருந்தா அடிமை உடையடா- அந்த சிங்களத்து கொட்டமதை நீயும் அடையடா... அழுதழுது நீயலைந்த வாழ்வை அழியடா- அந்த அன்னியத்து சிங்களத்தை ஓட கலையடா... பொங்கி நீயம் புலியணியில் புலியாய் இணையடா- அந்த போர்களமே ஏறி நீயும் பகையை விரட்டடா... அழுதழுது நீயலைந்த வாழ்வை தொலையடா அன்னை தமிழ் வீரமதை உலகில் காட்டடா....!

    • 6 replies
    • 1.3k views
  16. பல்லவி தமிழன் தமிழன் ஒருவன் தங்கத் தமிழன் ஒருவன்-எங்கள் தலைவன் தலைவன் மறவன் தமிழர் படைத்த பிரமன்- அண்ணன் பிரபா பிரபா பிரபாகரன் பிரபா பிரபா பிரபாகரன் சரணம் 1 தமிழ்த்தாய் கண்ட கனவுஇவன்-அந்தக் கனவோடு முளைத்த நனவுஇவன் அன்னை தமிழால் சிகரமிவன்-எங்கள் அன்பை மதிக்கின்ற தலைவன்இவன் பகலில் அண்ணன் சூரியனே இரவில் அண்ணன் சந்திரனே சரணம் 2 பார்வையிலே தமிழ்ப்பூமியிருக்கும் பண்டார வன்னியனின் ஆசியிருக்கும் பாயும் விழிகளிலே தீயிருக்கும் படை விரட்டும் திறன் நெஞ்சிலிருக்கும் பகலில் அண்ணன் சூரியனே இரவில் அண்ணன் சந்திரனே சரணம் 3 நாட்டை நம்மை நேசிப்பவன் தமிழ்விடுதலையை என்றும் யாசிப்பவன் போரிலே செந்தமிழைப் பேசுபவன்- அ…

    • 3 replies
    • 1.3k views
  17. தொலைந்த மனிதனை தேடிக்கொள்... உன்னுடைய பாதைகளை நீயே அமைத்துக்கொள் அடுத்தவன் பாதைகளில் ஆசைப்படாதே.. உன்னுடைய சிலுவைகளை நீயே சுமந்துகொள் அடுத்தவன் தோளுக்கு அதிகாரமிடாதே.. உன்னுடைய செடிகளை நீயே வளர்த்துக்கொள் அடுத்தவன் தோட்டத்தில் பூக்களைப்பறிக்காதே.. உன்னுடைய குறைகளை நீயே சொறிந்துகொள் அடுத்தவன் குறைகளை சொறிய நினைக்காதே.. உன்னுடையா மதத்தில் உண்மகளை தேடிச்செல் அடுத்தவன் மதத்தில் ஓட்டைகளைத்தேடாதே.. உன்னையே நீ தேடி உண்மைகளைக்கண்டு உன்னுள் தொலைந்த மனிதனை மீட்டுக்கொள்

  18. கண்ணே!... வருகின்றேன். உறங்காத கண்மணிக்கு உயிர் நண்பன் வரையும் மடல் கூதலுக்குள் ஒடுங்கும் குருவிக் கூட்டம்போல - அன்று சுய தேவைகளுக்குள் ஒடுங்கிப்போனது என் சுதந்திரவேட்கை காதலுக்குச் சாவு மணி அடித்துவிட்ட பெண்ணே! சாதலுக்கு அழைப்புமணி கட்டிவிட்டாய் கண்ணே! உறவுகள் தேடும் உணர்வுகளை ஒதுக்கிவிட்டு உரிமைப்போருக்கு உன்னையே கொடுத்தவளே! உறவுகளை வாழ வைக்க உயிர்காத்து வந்தவன்நான். என்னுள்ளம் இங்கு இன்று உறங்கவில்லைக் கண்மணியே! களங்களில் சதிராடிக் காலிழந்து விட்டாயாம், இருப்பினும் கரும்புலிக் களத்திற்குக் காலாகி நிற்கிறாயாம்! செவிப்புலன் மோதும் சேதிகள் கேட்டுத் தவிப்புகள் என்னிடம் தளம் சமைத்துக் கொண்டன. உள்ளத்தில் எழுந்த அலையில் …

  19. கஸல் கவிதைகள் 1) கடவுளே என்னை மன்னித்துவிடு நான் காதலை கும்பிடுகிறேன் 2) நீ அழகுக்கு நேர்ந்துவிடப்பட்டவள் 3) உனக்கான அரிதாரத்தை மான்களே கொண்டுவருகின்றன 4) உண்மையாகச் சொல் நீ தேவதைகளின் அசலா! நகலா! 5) உன்னை சுவைபட சொல்ல வேண்டும் என்றால் நான் சோகப்பட வேண்டும் 6) இரவு நதியில் உன் ஆனந்த வெள்ளம் கரைபுரண்டோடுகின்றது 7) நீ தாவணி அணிந்தபோதுதான் என்னில் பிரபலமானாய் 😎 உன் ரகசியத்தை அறிந்ததால் நான் அம்பலமானேன் 9) என் இதயத்தில் நீ தங்காவிட்டாலும் பரவாயில்லை வந்தாவது போ 10) விளக்குகள் அணைக்கப்பட்டால் நீ எரிகிறாய் 11) அவளைப் பிரிந்துவிட்டாயா பரவாயில்லை தேடாதே நீ கவிஞன் ஆகும் வாய்ப்பை இழந்துவிடுவ…

  20. காதல் இல்லாமல் வாழ முடியவில்லை காதலோடு வாழவும் தெரியவில்லை விரைவில் மரணத்தை கொடு இறைவா, அவளை அதிகம் கேள்வி கேட்கின்றேன் அவள் மீது அப்படி ஒரு பிரியம் - ஆனால் எனது போக்கு அவளுக்கு கசப்பாய் இருக்கின்றது, அது தெரிந்தும் என்னை மாற்றிக்க முடியவில்லை மாறாவிட்டால் அவள் எப்படி இன்பமாய் இருப்பாள் அவள் சந்தோசம் தான் எனக்கு வேண்டும், எனக்கு அவளை விட யாரும் இல்லை அவள் இருந்தும் அநாதை போல் உணர்கின்றேன் நான் மண்ணோடு மண்ணாக வேண்டும், அப்போது தான் அவள் பூமியில் பெண்ணாவாள் இப்போது என் உயிராக அவள் இருப்பதால் அந்த பெண் உணர்வுகள் அடங்கிவிட்டன, முடக்கப்பட்ட அவள் உணர்வுகள் விரைவில் தெளிவு பெற வேண்டுகிறேன் ஆனால் அதை தாங்கும் சக்தி எனக்கில்லை, அந்த பெண் பெண்ணாக வேண்டும் அ…

  21. முன்னபோனா முட்டுது பின்னவந்தா உதைக்குது மிஸ்டுகால் பார்த்து ரிங்குனா அப்பா இருக்கார் அப்புறம் பண்ணு சாயங்காலம் பாக்கலாமா சாரி அம்மாவோடு கோயிலுக்கு போறேன் நேத்து ஏன் பார்க்க வரலை நேரமில்லையா? நெனைவு இல்லையா? சிகரெட்டு புடிப்பியா தண்ணி அடிப்பியா செருப்பால அடிப்பேன் தறுதலை ப்ளூகலர் ட்ரெஸ் நல்லாருக்கா? ஏய் அந்த ப்ளாக் சுரிதாரை சைட் அடிக்காதே! புது ரிசப்ஷனிஸ்ட் என்னைவிட அழகா? கண்ணை நோண்டிடுவேன் முண்டக்கண்ணா சம்பளம் வந்திடுச்சா மாயாஜால் போலாமா எம்ஜிஎம் போலாமா எனக்கு சத்யம் கூட ஓக்கேதான் மாப்பிள்ளை பார்த்திருக்காங்க செம ஸ்மார்ட் டேக் ஹோம் 80கே எனக்கு டபுள் ஓகே ம்ம்ம்ம்.... …

  22. மாறாத வடுக்களை எம் இதயங்களில் எழுதிவிட்ட எதிரியே.. இந்தப் பிஞ்சுகள் செய்த குற்றம் என்ன..??! ஏன் இந்தத் தண்டனை…??! உலகம் இயக்கும் இயந்திரப் பறவைகள் கொண்ட உன் பலத்தால்.. அதன் திமிரால் மக்களை… தண்டிக்க அவசரப்பட்ட நீ… இழந்து போன இந்த மொட்டுக்களின் வாழ்வை மீளளிக்க முடியுமா..??! போர் செய்து என்ன வென்றாய்..?! தமிழர் நிலங்களைப் பறித்தாய். மனித மனங்களை சரித்தாய்.. மனிதம் அழித்தாய்..! ஏன்… நீ.. மனிதன் அல்ல சிங்களப் பேரினப் பிசாசு என்று மொழிந்தாய். மனிதனாய் உன்னோடு வார்த்தைகளால் பேசிப் பயனில்லை.. இந்த மொட்டுக்கள் விர…

  23. காலத்தின் சாட்சியாய் துடிக்கிற கவிதைமனத்துள் செட்டை அடிக்கும் நினைவின் பிரளயம் மாக்ஸ்சின் தத்துவம் கண்முன் விரிவதை கட்டவிழ்த்து சுடுவதெல்லாம் ஒளிப்பதுபோல் எதிர்பார்ப்பற்ற இரங்களில் பேர்ரொன்றிடம் வரம்பெற்ற கைகளை அரிக்கின்றது உயிர்கொண்டு அணைபோட்ட நேரத்தில் அவர்கள் கருக்கிவிட்ட விருப்பங்களின் விதைள் விருட்சமானதில் நிழல் குளித்த தருணங்கள் ஆகாய வெளியைப்போல் இன்னும் நீள ஆணிவேர் போல் நினைவு காவும் உள்ளம் கண்ணீர் பனிக்கும் தருணங்கள் படிமமாய் பரம்பரைக்கு கைமாற தீயாகங்கள் உயிர்பெறும் இலட்சியக் காவிகளாய் நிழள் குளித்தவன் பொய்யில் மறைத்த வாழ்க்கை கோறையாய் உறுமாற ஒரு விளக்கு எரியும் விடுதலையின் ஒளியாய் இரவை …

  24. அழியதா சுவடு.....( லெப்கேணல் நீலன் ) புலன்களை நீ திரட்டி எடுத்த புலனாய்வால்; புறமுதுகிட்டோடிய படைகள் ஏராளம்... ''சாவுக்கே சவாலிட்டு சாவுக்குல் சாவாய் வாழ்ந்தவன் நீ...'' வேகமாய் நீயெடுத்த வேவினால் போனது எத்தனை உயிர் சாவு... விலை உயர்ந்த வீர தளபதி உன்னை விலை போனதொன்று வீழ்த்தியதோ....??? சதிகள் புரிய முனைந்தவனின் சதிகள் தறிக்க நினைத்தாயே... தமிழர் சேனை காக்க முனைந்தாயே... இரக்கம் கெட்ட இரணியன் உன்னை இழிவாய் கொன்றானே.. நினைக்கையிலே ஜயோகோ நெஞ்சு வலிக்குதய்யா... சாதனைகள் படைத்திட்ட சரித்திர புதல்வனே நீ இன்னும் சாகமால் எமக்குள்.... - வன்னி மைந்…

  25. விரிந்த எனது தேசத்தின், பரந்து படர்ந்த வெளியெங்கும், அறைந்து நிற்கிறது வெறுமை! நான்கு வருடங்கள் நகர்ந்து போனதை, நம்பக்கூட முடியவில்லை! உங்கள் நினைவுகள் சுமந்த, உயிர்க்கூடுகள் மீது. கோரை படர்ந்திருக்க, எருக்கிலை சிந்தும் கள்ளிப்பால், உங்களுக்கு நிவேதனமாகின்றது! அரவங கேட்டுச் சத்தமிடும், ஆட்காட்டிக் குருவிகள், உங்களுக்காகக் கீதமிசைக்கின்றன ! எங்களுக்கெல்லாம் இப்போது, இரண்டு விலாசங்கள்! பிறந்த இடமொன்று, மறையும் இடம் இன்னொன்று! கிழக்கே உதித்து, மேற்கில் மறைகின்ற, சூரியன்களாக, எங்களை நாங்களே, உருவகித்துக் கொள்கிறோம்! அரேபியப் பாலைவனங்களிலும், உருகும் பனிப் டலங்களிலும், எங்களால் வாழமுடிகின்றது! நகருகின்ற ஒவ்வொரு வினாடியும், எங்கள் தேசம்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.